Saturday, June 30, 2012

முருக வேட்டை_17


மூவிரு முகங்கள் போற்றி முகம்பொழி கருணைபோற்றி
ஏவரும் துதிக்க நின்ற ஈராறு தோள்கள் போற்றி
காஞ்சி மாவடி வைகும் செவ்வேள் மலரடி போற்றி யன்னான்
சேவலும் மயிலும் போற்றி திருக்கைவேல் போற்றி போற்ற!
 

மிழ்நாட்டில் பொதுக்கூட்டங்களுக்கு இப்போது எந்த மரியாதையும் இல்லை. பெரும் தலைவர்கள் வந்தாலன்றி, மக்கள் பொதுக்கூட்டங்களை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. 

சரவணன் மீட்டிங் நடக்கும் இடத்துக்குச் சென்றபோது, கூட்டத்தில் ஐம்பது பேர்கூட இல்லை. ஆனாலும் ஒரு தோழர் உணர்ச்சிகரமாகப் பேசிக்கொண்டிருந்தார். பின்னர் வரிசையாக சிறு பேச்சாளர்கள் பேசி முடித்த பின், நிகழ்ச்சிக்கு தலைமையுரை ஆற்ற வந்திருந்த தலைவர் பேச ஆரம்பித்தார்.

வணக்கத்துடன் ஆரம்பித்த உரை, ‘அவர்களே’ போட்டு மெயின் டாபிக்குக்கு வந்தபோது, அரை மணிநேரம் ஆகியிருந்தது. 

“நாமளும் இந்த மக்கள் திருந்தணும்னு பல வருஷமா பேசிக்கிட்டே இருக்கிறோம். ஆனால் இவங்க திருந்தற மாதிரித் தெரியலியே? திடீர்னு ஒரு சாமியார் கிளம்பி வர்றான். நான் தான் கடவுள்ங்கிறான். அடுத்து கொஞ்சநாள்ல அவன் ஜெயிலுக்குப் போயிடறான். அதைப் பார்த்தாவது திருந்தறாங்களா? இல்லை. உடனே அடுத்த சாமியாரைப் பார்த்து ஓடுறாங்க. நாம பலவருஷமா பல தடவை சொல்லிட்டோம். சாமி-ங்கிறதெல்லாம் கட்டுக்கதைன்னு. உன் துட்டை ஏமாத்திப் புடுங்க கண்டுபிடிச்ச சதி தான் மதம்னு சொல்றோம். எவனும் கேட்க மாட்டேங்கிறான்.

இந்த புராணஙக்ள்னு குப்பைகள் சில உண்டாக்கியிருக்காஙக் பாருங்க..படிச்சா கடவுள் நம்பிக்கை உள்ளவனுக்கும் நம்பிக்கை போயிடும். எல்லாமே ஆபாசக் குப்பைங்க. சரி, இத்தனை கடவுள்களை உண்டாக்குனாங்களே, அதையாவது சொந்தமா உண்டாக்குனாங்களான்னு அதுவும் இல்லை. எல்லாமே கிரேக்க, ரோமக் கடவுள்களோட காப்பி. 

நம்மாளுக அப்பவே காப்பி அடிக்கிறதுல பெரியாளா இருந்துருக்கான். இதை நான் சொல்லலைங்க. அய்யாவே ஆதாரப்பூர்வமா பல விஷயங்களைச் சொல்லிட்டுப் போயிருக்காங்க. சிவனும் இந்திரனும் யாரு? ஜூபிடர்ங்கிற கிரேக்கத் தெய்வத்தோட காப்பி. அந்த பிரம்மா யாருன்னு பார்த்தா, சாட்டர்னஸ்ங்கிற தெய்வத்தோட காப்பி. இவங்கள்லாம் முருகன்னு சொல்றாங்களே, அது யாரு தெரியுமா? மார்ஸுங்கிற ரோமானியக் கடவுளோட காப்பி. சரஸ்வதி மினர்வாங்கிற தெய்வத்தோட காப்பி. அய்யா தெளிவா எல்லாத்தையும் சொல்லியிருக்காங்க.

எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம் இருந்துச்சு. ’என்னடா இது..சின்ன ஒரு கூட்டம் வந்து இவ்ளோ மக்களை முட்டாளாக்கிடுச்சே.எப்படி, அவங்க என்ன அவ்ளோ புத்திசாலிகளா’ன்னு. ஆனால் உண்மை என்னன்னா அவங்களே கிரேக்க, ரோமானியக் கடவுள்களை காப்பி அடிச்சு, அதே கதையை நம்மகிட்டச் சொல்லித் தான் அடிமையாக்கியிருக்காங்க.”

தலைவர் பேசிக்கொண்டே போனார். ஆனால் சரவணன் காதில் அதன்பிறகு பேசிய எதுவுமே விழவில்லை.

மார்ஸ்...MARS 1024!

‘ங்கிறது ரோமானியக் கடவுளோட காப்பியா?..காலையில்கூட கவிதா ஏதோ சொன்னாளே..அதிபதி முருகன் என்று..’சரவணன் உடனே வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

இவர்கள் சொல்வது உண்மை தானா? நமது கடவுள்கள் எல்லாம் கிரேக்க, ரோமானியை இறக்குமதிகள் தானா? முருகரும் அப்படியா? அது தெரிந்து தான் பாண்டியன் MARS என்று எழுதி வைத்தானா? கேள்விகள் மண்டையைக் குடைய, வீட்டின் காலிங் பெல்லை அழுத்தினான்.

கதவைத் திறந்த கவிதா ‘என்னங்க வந்துட்டீங்க? இன்னும் மீட்டிங்ல யாரோ பேசறது கேட்குதே?” என்றாள்.

”ஆமா..அதிருக்கட்டும், நான் கேட்கிறதுகு பதில் சொல்லு. முருகர் ரோமனியக் கடவுள் மார்ஸோட காப்பியா?” 

அதைக் கேட்ட கவிதா சிரித்தாள். “காப்பியா? என்னங்க பேசறீங்க?”

“சரி..முருகரும் மார்ஸும் ஒன்னா?”

“செவ்வாய்க்கிழமைக்கு மார்ஸோட பேரை வச்சிருக்காங்கன்னு படிச்சிருக்கேன். ஆனா ரெண்டும் ஒன்னுன்னு யாரும் சொன்னதில்லையே..ஏன் கேட்கறீங்க?”

“இன்னிக்கு மீட்டிங்ல ஒருத்தர் சொன்னாரு..”

“அதை சீரியஸா எடுத்துக்கிட்டா கேட்கிறீங்க?”

“ஆமா..பாண்டியன் அதை தெரிஞ்சுக்கிட்டுத் தான் மார்ஸ்-ன்னு எழுதியிருப்பானோ?”

“எந்த முருக பக்தனும் இந்தக் கதையை நம்ப மாட்டான்..முதல்ல இந்த மார்ஸை விடுங்க..நான் சொல்றதைக் கேளுங்க. சிவநேசன் மாமாகிட்ட இருந்து மெயில் வந்திருக்கு. நம்மளை கென்யாக்கு வரச்சொல்லியிருக்காரு. ஒரு வாரம் ஜாலியா கென்யா டூர் போவோம்”

“கென்யாவா? அங்கே என்ன இருக்கு?”

“அங்க தானே என் மாமா இருக்கார்...வேற என்ன இருக்கோ, தெரியாது. ஆள் இருக்கிற இடத்துக்குத் தானே போக முடியும்?”

“எதுக்கு திடீர்னு கூப்பிடறார்?”

“நான் தான் மெயில் அனுப்பிக் கேட்டேன். சும்மா..ஒரு சேஞ்சுக்காக.”

“ஃபாரின் போகணும்னா ஆபீஸ்ல பெர்மிசன் வேற வாங்கணுமே?”

“அகிலாக்காகிட்ட நான் வாங்கிக்கிறேன். மார்ஸைத் தூக்கி பரண்ல போடுங்க. கென்யா பத்தி மட்டுமே யோசிப்போம்’.

(தொடரும்)
மேலும் வாசிக்க... "முருக வேட்டை_17"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

8 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Friday, June 29, 2012

முருக வேட்டை_16


முருக வேட்டை_இரண்டாம் பாகம்

உருவாய் அருவாய் உளவாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் ஒளியாய்
கருவய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய்! அருள்வாய் குகனே! 


- கந்தர் அனுபூதி


பூஜை ரூமிலிருந்து கவிதா வெளியே வந்தாள். சரவணன் லேப்டாபுடன் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தாள்.

நான்கு நாட்களாக வெளியே எங்கும் செல்லாமல் வீட்டிலேயே சரவணன் முடங்கிக் கிடப்பது கஷ்டமாக இருந்தது. இதற்காகவே அவனை எங்காவது வெளியே கூட்டிப் போக வேண்டும் என்று முடிவு செய்திருந்தாள். எனவே கென்யாவில் இருக்கும் தன் தாய்மாமாவிற்கு மெயிலும் அனுப்பியிருந்தாள்.

”என்னங்க..என்ன செய்றீங்க?’

நாலுநாள் தாடியுடன் அமர்ந்திருந்த சரவணன் திரும்பிப் பார்த்தான். “சும்மா..கூகுள்ல MARS-ன்னு போட்டு தேடிக்கிட்டு இருக்கேன்.”

“ப்ச்..கொஞ்சநாளைக்கு அதை மறந்துட்டு ரிலாக்ஸா இருக்கலாம்ல?”

“நீ இருப்பியா?”

கவிதா சிரித்தாள்.

“சரி. கூகுள் என்ன சொல்லுது?”

“புதுசா ஒன்னும் சொல்லலை..சூரிய மண்டலத்தில் சூரியனிடமிருந்து நான்காவது இருக்கும் கிரகம். ரோமன் கடவுள் ‘மார்ஸ்’ பெயர் தான் இந்த கிரகத்துக்கு சூட்டப்பட்டிருக்கு. அதோட சர்ஃபேஸைச் சுத்தி அயன் ஆக்சைடு ஃபார்ம் ஆகியிருக்கிறதால, பார்க்கிறதுக்கு ரத்தக்கலர்ல சிவப்பா இருக்கும். அதனால ரத்த கிரகம்-ன்னும் இதைச் சொல்றாங்க. பூமியோட அளவுல பாதி தான் செவ்வாய் இருக்கும். செவ்வாய்க்கு இரண்டு நிலாக்கள் உண்டு.”

“முருகர்க்கு இரண்டு பொண்டாட்டி இருக்கிற மாதிரியா?”என்று சிரித்தாள் கவிதா.

“இப்போ ஏன் முருகரை இழுக்கறே?”

“இல்லீங்க..ஒவ்வொரு கிரகத்துக்கும் ஒரு அதிபதி உண்டுன்னு முன்னோர்கள் சொல்லியிருக்காங்க. அந்தவகையில செவ்வாய்க்கு அதிபதி முருகர்”

“அதிபதி-ன்னா?”

“ஓனர்”

“ஓஹோ..அப்போ மனுசன் செவ்வாய்ல குடியேறனும்னா முருகருக்குத் தான் வாடகை கொடுக்கணுமோ? ஏன் இப்படி அதிபதி, ஓனர்னு உளறிக்கிட்டு இருக்கிறே? எவனோ உங்களையெல்லாம் முட்டாளாக்கி, சம்பாதிக்க சொன்ன பொய்களை நம்பி இன்னும் எத்தனை நாளைக்கு வாழப் போறீங்களோ?”

கவிதாவின் முகம் வடிப்போயிற்று. இதற்காகத் தான் சரவணனிடம் அவள் ஆன்மீகம் பற்றிப் பேசுவதேயில்லை. என்ன பேசினாலும் ‘நீங்கள் எல்லோரும் முட்டாள்கள். நான் எல்லாம் அறிந்த புத்திசாலி’ என்ற தொனியிலேயே பதில் வரும். கவிதாவிற்கு சட்டென்று இன்று நடக்க இருக்கும் மீட்டிங் ஞாபகம் வந்தது.

“ஏங்க, இன்னிக்குத் தானே உங்க கட்சிக்காரங்க மீட்டிங்?”

“ஆமா..ஆனால் அது கட்சி இல்லை, இயக்கம். ரெண்டாவது அது ‘என்’ கட்சி இல்லை. நான் அதில் மெம்பர் இல்லை. அவங்க சொல்றது நியாயம் தானேன்னு ஃபாலோ பண்றவன். அவ்ளோ தான்."

“சரி..சரி..மீட்டிங்க்கு நீங்க போகலியா?”

“போகணும்”

சரவணன் மீட்டிங்கிற்குப் போனால், இந்த ‘மார்ஸ்-1024’ தொல்லையில் இருந்து விடுபட்டு, கொஞ்ச நேரம் நிம்மதியாக இருப்பானே என்று தோன்றியது. சஸ்பெண்ட் ஆனபின் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடப்பதைப் பார்க்கவே கஷ்டமாக இருந்தது.

“போய்ட்டு வாங்க”

“ஹே..நீயே ஒரு முருகர் பைத்தியம். ஆனாலும் அந்த நாத்திக பர்ட்டி வந்தாலும், சகஜமாப் பேசுறே..நான் மீட்டிங் போனாலும் ஒன்னும் சொல்றதில்லை, ஏன்?”

“அவங்க மேல நான் கோபப்பட என்ன இருக்கு? இந்து மதத்தில் விமர்சனத்துக்கு இடம் உண்டு. உங்களுக்குத் தெரியாததில்லை. இந்து மதத்துக்குன்னு, அதை நிர்வகிக்கன்னு தனி தலைமைப்பீடம் கிடையாது. இது ஒட்டு மொத்த மக்களால், அவங்களோட நம்பிக்கைகளால் நடத்தப்படும் ஒரு வாழ்க்கை முறை. இதுல மாற்றம் எப்படி வரும்? மக்களோட சிந்தனைகள்ல மாற்றம் வந்தாத் தான் மத ஆச்சாரங்கள் மாறும். அந்த மாற்றத்துக்கான குரல், மதத்துக்கு உள்ளே இருக்கிறவங்ககிட்ட இருந்து வரணும். அப்படி வராத பட்சத்தில் வெளில இருக்கிறவங்க அதுக்காக குரல் கொடுக்கிறது தப்புன்னு நான் நினைக்கலை. அவங்க அதைச் சொல்றமுறை ஹார்ஷா இருந்தாலும், இந்த ஒட்டு மொத்த மக்களோட சிந்தனைகளை கலைச்சுக்கிட்டே இருக்கிறது நல்லது தான். புத்தர் சொல்லலியா? காலப்போக்கில் அவர் சொன்னதில் பலவும் இந்து மத ஆச்சாரங்களுள் ஒன்னா ஆகலியா என்ன?”

”அப்போ அவங்க பேசறது சரி தான்னு ஒத்துக்கறீங்களா?”

”அவங்க சொல்றது சரியாயிருந்தா, காலப்போக்கில் இந்து மதம் அதை ஏத்துக்கும். தப்பா இருந்தா, வெட்டிக் கூச்சலா அதை ஒதுக்கித் தள்ளும். எவ்வளவோ எதிர்ப்புகளை இந்து மதம் தாண்டி வந்திருக்கு. இவங்க விமர்சனத்தால மட்டுமே ஒன்னும் ஆகிடப் போறதில்லை. இப்படி கூட்டம் இருக்கக்கூடாதுன்னு நான் நினைக்கலை. இந்தக் கூட்டத்துல ஒரு ஆளா நான் இருந்திடக்கூடாதுன்னு தான் நான் நினைக்கிறேன்”

”ஏன்..அந்தக் கூட்டத்துல ஒரு ஆளா இருக்கிறதுல என்ன தப்பு?”

“தப்புன்னு ஒன்னுமில்லை..எதிர்மறைச் சிந்தனை மட்டுமே வாழ்க்கை முறையா ஆகிடும் அபாயம் அங்கே உண்டு. அதுல போன பலரும் அப்படித் தான் ஆகியிருக்காங்க...சரி, நேரம் ஆகுது..விட்டா, நான் பேசிக்கிட்டே இருப்பேன். நீங்க போய்ட்டு வாங்க”

சரவணன் அந்த மீட்டிங்கிற்கு கிளம்பினான்.

(தொடரும்)

மேலும் வாசிக்க... "முருக வேட்டை_16"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

10 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Tuesday, June 26, 2012

நித்தியானந்தாவிற்கு நன்றி!


இந்து மதத்தில் துறவிகளுக்கு எப்போதுமே சிறப்பு மரியாதை உண்டு. திருவோடு, காவி உடையுடன் ஒருவர் வீட்டின் முன் வந்து நின்றுவிட்டால், அவருக்கு உணவளிப்பது நம் கடமைகளுள் ஒன்றாகவே இருந்து வந்துள்ளது. இப்போதும் எங்கள் பகுதியில் சிலர் அவ்வாறு வரும்போது ‘அவர் உண்மையோ போலியோ...அது அவன்பாடு..உணவளிப்பது/காசு கொடுப்பது நம் கடமை’ என்று அந்த காவி உடைக்குரிய மரியாதையைச் செய்துவிடுவது வழக்கம்.

மனித மனங்கள் அனைத்துமே ஒரே அலைவரிசையில் சிந்திப்பவை அல்ல. சிலருக்கு பக்தி மார்க்கம் மட்டுமே போதுமானதாக இருப்பதும் இல்லை. எனவே ஞான மார்க்கத்தில் சுகபோகங்களைத் துறந்து இறை சிந்தனை ஒன்றே தொழிலாக உள்ள அடியோரைப் பேணுவது இல்லற வாழ்வில் உள்ள இந்துக்களின் கடமையாகச் சொல்லப்பட்டது. ‘அன்பர்பணி செய்ய எனை ஆட்கொண்டுவிட்டால், இன்பநிலை தானே வந்தெய்தும் பாராபரமே’ என்று தாயுமானவர் பாடியதும் அதைத் தான்.

எல்லாமே நவீனமயமாகிவிட்ட இந்த காலகட்டத்தில், முற்றும் துறக்க வேண்டிய துறவிகளில் சிலரும் நவீனமாகி ‘கார்ப்போரேட் சாமியார்’களாக வலம் வர ஆரம்பித்தனர். முன்பிருந்த சமூகக் கட்டமைப்பில் உண்மையான துறவிகளை இனம் காணுவதும், பேணுவதும் எளிதாக இருந்தது. ஆனால் தற்போது இரண்டுமே சராசரி இந்துக்களுக்கு கடினமானதாக ஆகிவிட்டிருக்கிறது. எனவே எளிதான வழியாக கார்ப்போரேட் சாமியார்களை நம் மக்கள் நாட ஆரம்பித்தனர். தங்கள் சொந்தப்பிரச்சினைகளைத் தீர்க்கும் ஆற்றல் உள்ளவரே ஞானி என்ற தவறான புரிதலே, எல்லா தவறுகளுக்கும் அடிப்படை ஆனது.

இந்து மதத்தில் உள்ள நல்ல மற்றும் கெட்ட விஷயம், சுதந்திரப் பெருவெளியாக இருப்பதும் இதற்கென்று தனிப்பட்ட தலைமைப்பீடம் இல்லாததும் தான். அதனால் விளைகின்ற நன்மைகள் பலவாயினும், சில தீமைகளும் விளையாமல் இல்லை. அத்தகைய தீமைகளுள் ஒன்று தான் நித்தியானந்தா என்ற பீடை.

ரஞ்சிதாவுடனான நித்தியின் லீலைகள் வெளிப்பட்ட உடனே அவரை நம்பியிருந்த சராசரி இந்துக்கள் அதிர்ச்சியடைந்து விலகிவிட்டனர் என்பதே உண்மை. தற்போது ஆயிரம் கோடிக்கு மேற்பட்ட சொத்துக்களும், அதை நிர்வகிக்கும் (அனுபவிக்கும்) சிஷ்யகோடிகளுமே துணை என்ற நிலையில், நித்தி பாதுகாப்பு வேண்டி செய்த பெரும் தவறு மதுரை ஆதீனத்தை கைப்பற்றியது.

திருஞான சம்பந்தர் போன்ற மகான்களால் நடத்தப்பட்ட ஆதீனத்தை கைப்பற்றியதோடு, ஆகம விதிகளை காற்றில் பறக்கவிட்டபடி மனம்போன போக்கில் ஆட ஆரம்பித்தார் நித்தி. ஆதீனமாக பொறுப்பேற்பவர்கள் செய்ய வேண்டிய முதல் வேலையான ‘தலையை மழித்தல்’-ஐக் கூட செய்ய நித்தி தயாராக இல்லை என்பதிலேயே அவரது நோக்கம் ஆதீனத்தை கேடயமாக பயன்படுத்துவது தான் என்று தெளிவாகத் தெரிந்து போயிற்று. தற்போது ஆர்த்தி ராவின் கடுமையான பாலியல் குற்றச்சாட்டைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில் பிடதி ஆசிரமமே அரசின் பிடியில் சென்றுள்ளது. 

கார்ப்போராட் சாமியார்களின் பின்னால் கண்மூடித்தனாமான நம்பிக்கையுடன் சென்ற மக்கள், தங்கள் நிலைப்பாட்டினை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் இது. முற்றும் துறந்த துறவிக்கு ஏன் ஆயிரம் கோடிக்கு மேற்பட்ட சொத்துகள் என்ற எளிய வினாவில் நம் மறுபரிசீலனையை ஆரம்பிக்க வேண்டியுள்ளது. அதற்கு வழிவகை செய்த நித்தியானந்தாவிற்கு நாம் எல்லோரும் கடமைப்பட்டவர்களே!

எந்தவொரு விஷயமானாலும் ஒரு நிலைப்பாட்டிலிருந்து நேர் எதிரான நிலைப்பாட்டுக்கு நகர்வதே சராசரி மனிதர்களின் வழக்கம். அதன்படி, இனி சாமியார்களையே தூக்கி எறிந்திடலாமா என்ற சிந்தனையும் சிலரால் முன்வைக்கப்படுகிறது. இந்து மதம் என்ற பண்பாட்டுத் தொகுப்பை புரிந்துகொண்டவர்களும், முன்பிருந்த துறவிகள் இந்து மதத்திற்கு ஆற்றிய பங்களிப்பையும் கவனத்தில் கொண்டால், அது முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டிய தரப்பல்ல என்று நமக்குப் புரியும்.


இந்தப் பிரச்சினையில் இன்னொரு சிக்கலும் உண்டு. நித்தியானந்தாவிடன் யோகா பயின்று பல வியாதிகளை தீர்த்துக்கொண்ட மக்களும் இங்கே உண்டு. அதுவே நித்திக்கு பெயரினைப் பெற்றுத் தந்தது. அங்கே நம் மக்கள் செய்த தவறு நித்தியை ஒரு நல்ல யோகா மாஸ்டராக மட்டுமே எடுத்துக்கொள்ளாமல், ஆன்மீகக் குருவாகவும் நினைக்கத் தொடங்கியது தான். 

எனவே ஆன்மீகத்தை ஒரு பிஸினஸாக நடத்துபவர், யோகா போன்ற பிற விஷயங்களில் தேர்ந்தவராக இருந்தாலும்,அவர்களை ஆன்மீகக் குருவாக ஏற்றுக்கொள்வதை நிறுத்துவோம்.
நவீனமயமாகிவிட்ட சூழலிலும், தனக்கென்று சொத்துக்கள் சேர்க்காமல், ஆன்மவிடுதலை ஒன்றையே நோக்கமாகக் கொண்ட துறவிகளை இனம் காண முடிந்தால், அவர் முன் அடிபணிவோம். இல்லையேல் கார்ப்போரேட் புரோக்கர்களை புறம்தள்ளி, இறையே சரணம் என்று நம் ஆன்மீகத் தேடலைத் தொடர்வோம்.

மதுரை ஆதீனத்தையே ஸ்வாஹா செய்யத் துணிந்த நித்தியானந்தாவிற்கென்று, புதிதாக நாம் சொல்ல வேண்டியது ஏதுமில்லை. 

சிவன் சொத்து குல நாசம்.


மேலும் வாசிக்க... "நித்தியானந்தாவிற்கு நன்றி!"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

20 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Monday, June 25, 2012

தம்பி, பொண்ணு பார்க்கவா போறீங்க?


சமீபகாலமாக பொருளாதாரக் காரணங்களாலும், தாம்பத்தியப் பிரச்சினையினாலும் விவாகரத்துகள் அதிகரித்து வருவதாக ஒரு செய்தித் தொகுப்பை பிரபல தொலைக்காட்சி ஒளிபரப்பியதைப் பார்த்தேன். ஏதாவது உருப்படியாக தகவல்கள் சொல்வார்கள் என்று பார்த்தால், ஏமாற்றமே மிஞ்சியது. கருத்துச் சொன்ன சமூக ஆர்வலர்களும் மொன்னையாகப் பேசினார்களேயொழிய, பிரச்சினையின் மையத்தைத் தொட்டதாகத் தெரியவில்லை. ஒரே ஒருவர் மட்டும் ஈகோ என்ற ஒற்றை வார்த்தையுடன் அதைக் கடந்து சென்றார். இந்தியாவில் 15-25% திருமணங்கள் விவாகரத்தில் முடிவதாகச் சொல்லப்பட்டது. சமீபகாலமாக அதிகரிக்கும் விவாகரத்திற்குக் காரணங்கள் என்ன?

வரதட்சணைக் கொடுமை என்பது தொடர்ந்து ஒரு முக்கியக் காரணியாக இருந்து வருகிறது, பல நேரங்களில் தவறாக குற்றம் சாட்டப்பட்டாலும்!(பார்க்க: பிரசாந்த் கல்யாணமும் சில பிற்போக்குச் சிந்தனைகளும்...). அதையடுத்து வேறு என்ன பிரச்சினை என்றால், கணவன் மனைவிக்கு இடையே வரும் ஈகோ பிரச்சினை. அதை அலசுவதற்கு என் தம்பி ஒருவரின் வாழ்க்கையையே எடுத்துக்கொள்வோம்.

தம்பி நல்ல பையன். ஐ.டி.துறையில் நல்ல வேலை. பேங்க் அக்கவுண்ட் நிறைய சம்பளம்.பிரச்சினை இல்லாத குடும்பம் என்பதால் பெண் கொடுக்க பலரும் போட்டி போட்டனர். தம்பியும் ஏறக்குறைய இதே பண்புகளைக் கொண்ட பெண்ணாகத் தேர்வு செய்தார். தம்பியின் குணநலன்கள் எனக்குத் தெரியும் என்பதால், அப்போதே எனக்கு டவுட்டாகிக் கேட்டேன் ‘தம்பி,இது உனக்குச் சரிப்பட்டு வருமா?’என்று. அதற்குத் தம்பியும் நீண்ட விளக்கம் கொடுத்தார். “அண்ணே, இந்தக் காலத்துல ஒரு ஆள் வேலை செஞ்சு குடும்பத்தை ஓட்ட முடியாது. நான் ஃபிஃப்ட்டி தவுசண்ட் வாங்குறேன். அந்தப் பொண்ணு இப்பவே தேர்ட்டி தவுசண்ட் வாங்குது. இந்தியாலயே எயிட்டித் தவுசண்ட்ஸ்..இதை விட வேற என்ன வேணும்?” என்றார். இதைவிடவும் வேறு சில விஷயங்கள் வேண்டுமே என்று தோன்றினாலும், தம்பியின் உற்சாகத்தைக் கெடுக்க விரும்பவில்லை. தம்பியும் நான் சொன்னால் கேட்கக்கூடியவரும் இல்லை.

அதன்பின் திருமணமாகி, இரண்டாண்டுகள் கழித்து இப்போது விவாகரத்தும் ஆகிவிட்டது. சென்ற இந்தியப் பயணத்தில் தம்பியைப் பார்த்தபோது ‘என்னா பொம்பளைண்ணே அது...என்னை பாத்திரம் கழுவச் சொல்றா..வீட்டுவேலை செய்யிங்கிறா..லீவுநாள்னா பத்துமணி வரைக்கும் தூங்குறா..வீட்டுல விளக்குப் பொருத்தறதே கிடையாது. எப்பவும் செல்ஃபோனை நோண்டிக்கிட்டு....எங்க ஊருக்கு வர்றதேயில்லை..அய்யய்யோ..ஒரு ஸ்டேஜுக்கு மேல சமாளிக்க முடியலை..’ என்று ஒரே புலம்பல். 

தற்கால இளைஞர்களிடம் உள்ள சிக்கலே இது தான். என்ன தான் படித்து, நல்ல வேளையில் இருந்தாலும் பல ஆண்கள் மனதளவில் சென்ற தலைமுறைச் சிந்தனையிலேயே தேங்கிவிட்டவர்கள். மிகப் பெரும்பாலான ஆண்கள், தன் அம்மா போன்றே குணநலன்கள் உள்ள பெண்ணைத் தேடுபவர்கள் தான். ‘தன்னை நன்றாகக் கவனித்துக்கொள்ள வேண்டும். பின் தூங்கி முன் எழ வேண்டும். சமையல் வேலை, வீட்டு வேலைகள் அனைத்தையும் அவரே பார்த்துக்கொள்ள வேண்டும்’ எனும் இந்த எதிர்பார்ப்புகள் அனைத்தும் காட்டுவது அவர்களது ‘சென்ற தலைமுறை அம்மா’ போன்ற பெண்ணையே வாழ்க்கைத் துணையாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆழ்மன ஆசையைவே!

ஆனால் நம் அம்மாக்களுக்கு ‘புராஜக்ட் டென்சன்’ கிடையாது. காலையில் எழுந்ததும் போக்குவரத்து நெரிசலில் பஸ்/ஸ்கூட்டி பயணம் செய்யும் அவஸ்தை கிடையாது. கொஞ்சம் சிரித்துப் பேசினாலே எழும் ‘புரபோசல்கள்’ கிடையாது. பல்வேறு கலாச்சாரங்கள் ஒரே இடத்தில் குவிவதால் அடையும் மன மாறுதல்களும் கிடையாது. அவர்களது வாழ்க்கை முறை எளிமையானது. 

முந்தைய தலைமுறை வரை சம்பாதிப்பது புருஷ லட்சணமாக மட்டுமே பார்க்கப்பட்டது. அது கணவர்களின் கடமையாகவே இருந்தது. தற்போது கணவனின் கடமையை சரிபாதியாக மனைவிக்குப் பிரித்துக் கொடுக்கும் தற்கால தம்பிகள், மனைவியின் கடமையையும் சரிபாதியாக பிரிக்க வேண்டும் என்ற வாதத்தை முழுமனதாக ஏற்பதில்லை. பெரும்பாலான குடும்பங்களில் அதுவே பிரச்சினைக்கு மூல காரணமாக ஆகிறது.

ஐந்து வருடங்களுக்கு முன் எங்கள் மெயில் குரூப்பில் நண்பர் ஒருவர் ‘நல்ல பொண்ணு இருந்தா சொல்லுங்கப்பா’ என்று மெயில் போட்டார். மற்றொரு நண்பர் ‘*** கம்பெனியில் ஒரு பெண் இருக்கு’ என்று பதில் போட்டார். அதற்கு நம்மாளு போட்ட பதில்: ‘அய்யய்யோ..அந்தத் துறையா? ஆளை விடுங்கடா சாமீ!”. அப்படிப் பதில் போட்ட நண்பரின் சொம்பு எங்களால் நெளிக்கப்பட்டது, எப்படி சிலரின் தவறை பொதுமைப்படுத்தலாம் என்று! அப்போது நடந்த விவாதங்களின் முடிவில் அந்த ஆணாதிக்கவாதி(!) ‘சரிப்பா..அந்தப் பெண்களை கட்டிக்கும் தகுதி எனக்குக் கிடையாது..என்னை விட்டுடுங்க’ என்று சரணடைந்தார்.

பெரும்பாலான ஆண்கள் என்ன தான் பெரிய படிப்பு, எம்.என்.சி.கம்பெனியில் வேலை என்று பெற்றிருந்தாலும், உண்மையில் உள்ளுக்குள் 30 ஆண்டுகள் பின் தங்கியே இருக்கிறார்கள் என்பதே உண்மை.

 ஜாதிகளின் அவசியம் இனிமேல் உண்டா என்ற சிந்தனை, டாக்டர்-இஞ்சினியர் என நவீன ஜாதிகள் உருவாகியிருப்பதை உணர்வதில் தான் முடியும். ஒவ்வொரு துறையுமே தனக்கென்று தனிப்பட்ட கலாச்சாரத்தைக் கொண்டிருக்கின்றன. இன்னும் நுணுக்கமாக ஆராயுமிடத்தில், ஒவ்வொரு பதவியுமே (ஜூனியர் இஞ்சினியர்-இஞ்சினியர்-புராஜக்ட் லீடு-மேனேஜர்) தனிப்பட்ட குணநலன்களைக் கொண்டிருக்கின்றன. சில கலாச்சாரங்கள்/குணநலன்கள் எவ்வித கவனிப்பையும் ஏற்படுத்தாதவை.சில தனிப்பட்ட வாழ்வையும் பாதிக்கக்கூடியவையாக உள்ளன. ’தாய்மை என்பது பெண்களை அடிமையாக வைத்திருக்க ஆண்களால் உருவாக்கப்பட்ட கற்பனைப் பண்பு’ என்பது போன்ற நவீன கருத்துக்கள் ஒரு சாராரால் முன்வைக்கப்படும் நிலையில், ஆண்கள் பெண்ணைத் தேர்ந்தெடுப்பதில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.

பாலியல் வறட்சி நிரம்பிய நம் நாட்டில், திருமணம் என்பது அடிப்படையில் ஒரு இளைஞனுக்கு கிளுகிளுப்பான சமாச்சாரமாக மட்டுமே இருப்பது நம் துரதிர்ஷ்டம் தான். அதற்கு அடுத்தபடியாக திருமணம் என்பது வாழ்க்கையை வளப்படுத்த வரும் வாய்ப்பாக (வரதட்சணை, பெண்ணின் சம்பளம்..) பார்க்கப் படுகிறது. இதற்கும் அப்பால் ’தன் தேவை என்ன? வாழ்க்கைத் துணையிடம் நாம் எதிர்பார்ப்பது என்ன? அதற்காக நாம் இழக்கப்போவது எதை? நமக்கு எது முக்கியம்?’ என ஒரு ஆணும், ஆணைப் பெற்றோரும் சிந்திக்க வேண்டியது அவசியம். உங்களுக்குத் தேவை இன்னொரு தாய் தான் என்றால், அதற்கேற்றாற் போன்று பெண்ணைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு, நிம்மதியாக வாழ்ந்துவிட்டுச் செல்வது நல்லது.

’கூழுக்கும் ஆசை..மீசைக்கும் ஆசை’ என்பது நடைமுறையில் ஒத்துவராத ஒரு விஷயம். எனவே பொண்ணு பார்க்கக் கிளம்பும் தம்பிமார்கள் வாழ்க்கைத் துணையிடமிருந்து ‘என்னவெல்லாம் வாங்கலாம்?’ என்று மட்டுமே யோசிக்காமல், ’ அதற்கு பிரதிபலனாக என்னவெல்லாம் கொடுக்க வேண்டி வரும்?’ என்றும் யோசிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். இல்லாவிடில் உங்கள் வாழ்க்கையை மட்டுமல்லாது மற்றொரு பெண்ணின் வாழ்க்கையையும் சீரழித்த பாவத்திற்கே நீங்கள் ஆளாக நேரிடும்.

எனவே பரந்த மனதுடன் வாழ்க்கையை அணுகுங்கள். All the best!


மேலும் வாசிக்க... "தம்பி, பொண்ணு பார்க்கவா போறீங்க?"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

27 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Friday, June 22, 2012

சகுனி - திரை விமர்சனம்


ட்ரீம் வாரியர்ஸ் & ஞானசேகரன் தயாரிப்பில் கார்த்தி-சந்தானம் காம்பினேசனில் இன்று வெளியாகியிருக்கும் படம் சகுனி. நீண்ட இடைவேளைக்குப் பிறகு வரும் அரசியல் படம் என்பதாலும் கமல்-ரஜினி-ஸ்ரீதேவி காம்பினேசன் என ட்ரெய்லரே கலக்கியதாலும் கார்த்தி மாஸ் ஹீரோவாக ஆகிக் கொண்டிருக்கும் வேளையில் வெளியாகும் படம் என்பதாலும் அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய படம் இது. எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்றால்...

காரைக்குடி கார்த்தியின் ஒரே சொத்தான செட்டிநாட்டு பெரிய பங்களாவை ரயில்வே புராஜக்ட்டுக்காக அரசு எடுத்துக்கொள்ளப்போவதாக அறிவிப்பு வருகிறது. தன் பங்களாவைக் காப்பாற்றிக்கொள்ள, ரயிவே அமைச்சர்-முதல்வர் என அரசியல்வாதிகளைப் பார்த்து முறையிட சென்னை வருகிறார் முதல்வர். அப்பாவி பொதுஜனமாக முறையிட்டால், எந்த மரியாதையும் கிடைக்காது என்பதைப் புரிந்து கொண்டு, கார்த்தி எடுக்கும் அவதாரமே ‘சகுனி’.

கார்த்தியின் மிகப்பெரிய ப்ளஸ் பாயிண்ட் ஸ்டோரி செலக்சன் தான். எப்போதும் காமெடி கலந்த கதாபாத்திரத்தையே தேர்வு செய்வது மற்றொரு ப்ளஸ் பாயிண்ட். இதிலும் சமீபகாலமாக யாருமே தொடாத அரசியல் கதையை தேர்வு செய்திருக்கிறார். முதல் பாதி முழுக்க ஜாலியான இளைஞனாக, சந்தானத்தை கடுப்பேற்றுபவராக, ப்ரணீதாவை காதலிப்பவராக, அரசியல்வாதிகளின் ஆலோசகராக கலக்குகிறார் கார்த்தி. 
சந்தானம் வழக்கம்போல் ஒன் லைனரில் கலக்குகிறார். ரஜினி (அப்பாத்துரை)_ஆக சந்தானமும் ’கமல’(க்கண்ணன்)-ஆக கார்த்தியும் அறிமுகமாகி பேசிக்கொள்ளும் காட்சிகள் செம ரகளை. 

ட்ரெய்லரின் ரஜினி-கமல்-ஸ்ரீதேவி என பெரிய பில்டப் கொடுத்துவிட்டதால், அதை வைத்து இன்னும் நல்ல காமெடியைக் கொடுத்திருக்கலாம். அதில் ஏமாற்றமே! ஆனாலும் சந்தானம் வரும் காட்சிகளில் கலகலப்புகுப் பஞ்சமில்லை. ஒரு நடிகர் ஒரு ஹிட் கொடுத்துவிட்டால், அதை கம்பேர் செய்வது நம் வழக்கம் என்பதால்,........ஓகேஓகே அளவிற்கு இல்லை!

ப்ரணீதா.... பெரிதாக நடிக்க சான்ஸ் இல்லாவிட்டாலும் டூயட்களில் கல்ர்ஃபுல்லாக ஆடுகிறார், ஹீரோவைக் காதலிக்கிறார். இடைவேளைக்கு அப்புறம் காணாமல் போகிறார். படம் முடியும்போது கட்டிப் பிடிக்கிறார்(ஆடியன்ஸை இல்லீங்க..ஹீரோவைத் தான்!). தமிழில் இருக்கும் ஹீரோயின்கள் எல்லாம் (ஹி..ஹி..ஹன்சி தவிர) பழசாகி விட்ட நிலையில் ப்ரணீதாவுக்கு வளமான எதிர்காலம் உண்டு. அழகான கண்களுடன் ப்ரணீதா பளபளப்பாக வலம்வருகிறார். 
வில்லன் முதல்வராக பிரகாஷ்ராஜ். நீண்ட நாளைக்கு அப்புறம் படம் முழுக்க வரும் கதாபாத்திரம். வழக்கம்போல் கேஷுவலாக கலக்கிச் செல்கிறார் மனிதர். கவுன்சிலர்-மேயராக ராதிகா, சாமியாராக நாசர், எதிர்க்கட்சித் தலைவராக கோட்டா ஸ்ரீனிவாசராவ் என பொருத்தமான பாத்திரத் தேர்வுகள். படத்தின் பலமாக வசனங்களைச் சொல்லலாம். முடிந்தவரை திரைக்கதையை காமெடியாக அமைத்ததும் படத்தை ரசிக்க வைக்கிறது. 

கந்துவட்டி ராதிகாவை மேயராக ஆக்கும் கார்த்தியின் சகுனி வேலைகள் அட்டகாசம். ஆனால் அதே போன்றே கோட்டா ஸ்ரீனிவாசராவை கார்த்தி முதல்வர் ஆக்குவது ஒரு ரிப்பீட்னெஸைத் தருகிறது. பார்த்த காட்சிகளையே வேறு வடிவில் பார்க்கிறோம் என்ற சலிப்பு வரவே செய்கிறது. அதனாலேயே கடைசிக் காட்சிகளில் திரைக்கதையில் ஒரு தொய்வு விழுந்து விடுகிறது. 

முதல்பாதியில் அனுஷ்கா வரும் காட்சிகள் எவ்வித காமெடியைவும் உண்டாக்கவில்லை. அதைவிட ப்ரணீதா சம்பந்தப்பட்ட காதல் காட்சிகளை அதிகமாக்கியிருக்கலாம். ’சந்தானத்திடம் கதை சொல்லும்’ திரைக்கதை உத்தி அருமை. அது இல்லையென்றால் முதல்பாதி மொக்கையாகவே ஆகியிருக்கும்.

வீடு மேல் கார்த்தி கொண்டிருக்கும் செண்டிமெண்ட்டைப் பற்றி விரிவான காட்சிகள் இல்லை. அரசியல் ஆலோசகராக ஆகும் கார்த்திக்கு அதற்குரிய பின்புலம் ஏதாவது இருப்பதுபோல் காட்டியிருக்கலாம். அதனாலேயே படத்தை முழுக்க ரசிக்க முடியவில்லை.

ஜி.வி.பிரகாஷின் இசையில் பாடல்கள் அருமை. முத்தையாவின் ஒளிப்பதிவும் ஸ்ரீஇதர் பிரசாத்தின் எடிட்டிங்கும் படத்துக்கு பக்க பலம். அனல் அரசுவின் சண்டைக்காட்சிகளில் அதிகம் எதிர்பார்த்தேன். தேவையில்லாத சண்டைக்காட்சிகள் என்பதால் படத்தோடும் ஒட்டவில்லை.

இருப்பினும் வித்தியாசமான கதைக்களனுடன், அரசியல் கதையை காமெடி கலந்து சொல்லியிருப்பதால் ஒரு முறை பார்க்கலாம்.

சகுனி - ஓகே.

மேலும் வாசிக்க... "சகுனி - திரை விமர்சனம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

22 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Tuesday, June 19, 2012

ஆபீசருடன் ஒரு சந்திப்பு...


இந்த இந்தியப் பயணத்தில் என்னை அசர வைத்த மனிதர் ஆபீசர் என்று நம்மால் அன்போடு அழைக்கப்படும் உணவுலகம் சங்கரலிங்கம் அவர்கள் தான். என்னைப் பார்க்க வேண்டும் என்ற விபரீத ஆசையை அவர் சொன்னபோது, நான் ’வேலைப்பளு காரணமாக என்னால் திருநெல்வேலி வரமுடியாது. எனவே அடுத்த முறை பார்ப்போம்’ என்று சொன்னேன். 

அதற்கு அவர் ‘அதனால் என்ன..கோவில்பட்டியில் எங்கேன்னு சொல்லுங்க. நானே வர்றேன்’ என்றார். எவ்வளவு பெரிய மனிதர்..தானே வருவதாகச் சொல்கிறாரே என்று மெல்ட் ஆகிவிட்டேன். ஆனாலும் கோவில்பட்டியில் சந்திக்க முடியாதபடி, தொடர்ந்து வேலை. கடைசியாக கிளம்புவதற்கு முதல்நாள் சங்கரலிங்கம் சாரை சங்கரன்கோவிலில் சந்திப்பது என்று முடிவு செய்தேன். அவரும் அங்கு வருவதாக ஒத்துக்கொண்டார். 

ஆனால், அதுவே எனக்கு ஆப்பாகும் என்று நான் நினைக்கவேயில்லை.

(தொடரும்)


ச்சே..தொடர்கதையா எழுதி, ஏதாவது (கேவலமான) சஸ்பென்ஸ் வந்தாலே கை தன்னால தொடரும் போடுது..சரி, அதை விடுங்க. என்ன ஆப்புன்னு சொல்றேன்..

தங்கமணிகிட்ட சங்கரன்கோவிலில் ஆபீசரைப் பார்க்கப் போறேன்னு சொன்னேன். அவங்க சந்தோசமா “அந்த ஜவுளிக்கடைப் பக்கத்துல என் ஃப்ரெண்ட் வீடு இருக்கு.நானும் அவளைப் பார்க்கணும். என்னை அங்கே விட்டுட்டுப் போங்க”ன்னாங்க. அந்த ஜவுளிக்கடைல தான் ரெண்டு வாரம் முன்ன இருபதாயிரம் ரூபாய்க்கு வேட்டு வச்சாங்க.அங்கிருந்த சேல்ஸ் கேர்ள்ஸ் என்னைப் பரிதாபமாப் பார்த்து “சார், உங்களுக்கு எதுவும் எடுக்கலியா? கூல் ட்ரிங்ஸ் வேணா சாப்பிடுறீங்களா?” என்று கேட்டு என்னை கேவலப்படுத்தியது ஞாபகம் வந்தது. ‘மறுபடியும் அந்தப் பக்கமா’ என்று பயந்தேன். நான் பயந்தது சரியாப் போச்சு.

சங்கரன்கோவில் போய் ஃப்ரெண்ட் வீட்ல தங்கமணியை இறக்கி விட்டப்போ “என்னாங்க...எனக்கு இன்னும் ஒரே ஒரு ட்ரெஸ் எடுக்க வேண்டியிருக்கு. நான் இவளைப் பார்த்துட்டு அங்கே இருப்பேன்..வந்திடுங்க” என்று அடுத்த அணுகுண்டைப் போட்டார். ஆபீசரால நமக்குச் செலவு தானா என்று நொந்துகொண்டேன். சரி என்று சொல்லிவிட்டு, ஆபீசரைச் சந்திக்க பஸ் ஸ்டாண்ட் விரைந்தேன்.

ஆபீசர் பஸ் ஸ்டாண்ட்டிலிருந்து ஸ்லோ மோசனில் வெளியே வந்தார். ஃபோட்டோவில் பார்த்ததை விடவும் ஹேண்ட்சமாக இருந்தார். காலேஜ் படிக்கும்போது எப்படியும் பத்துப் பதினைந்து தேற்றியிருப்பார் என்று தோன்றியது. புகைச்சலை மறைத்தபடியே “ஹலோ சார் “என்று கை கொடுத்தேன். முகமெல்லாம் மலர ”நல்லாயிருக்கீங்களா?” என்று கேட்டார்.

பிறகு அருகில் இருந்த ஹோட்டலில் போய் உட்கார்ந்தோம். காஃபி ஆர்டர் செய்துவிட்டு ரொம்ப நேரம் பதிவுலகம் பற்றியும் அதை மேலும் எப்படி முன்னேற்றுவது என்றும் விவாதித்தோம். ”20 நாளா நான் ஒன்னுமே எழுதலை “ என்றார் ஆபீசர். ”நானும் கம்மியா தான் எழுதறேன்” என்றேன். ‘இப்படியே தொடர்ந்தால், பதிவுலகம் உருப்பட்டுவிடும்” என்று முடிவு செய்தோம்.

அடுத்து காஃபி சாப்பிட்ட பில் வந்தது. காஃபி மட்டும் தான் என்பதால், நானே காசு கொடுத்து விடலாம் என்று முடிவு செய்தேன். ஆனாலும் ஆபீசர் விடவில்லை..அவரே பில் பே பண்ணினார்..என்ன இருந்தாலும் பெரிய மனுசன், பெரிய மனுசன் தான்யா! 

அடுத்து ஆபீசர் செண்ட் பாட்டில் ஒன்றை எனக்குப் பரிசாக அளித்தார். எதை வைத்து என்னை நாத்தம் பிடிச்ச மனுசன்னு முடிவு செய்தார்ன்னு தெரியலை. இருந்தாலும் ஓசிக்கு வருவதை வேண்டாம்னு சொல்லக்கூடாது என்பதால், வாங்கிக் கொண்டேன்.

நேரம் ஆகிவிட்டதால் கிளம்புகிறேன் என்றார் ஆபீசர்.’ஃபேமிலியோ சென்னையில..ஆனாலும் வீட்டுக்குபோக ஏன் அவசரப்படுறார்..சம்திங் ராங்’-ன்னு தோணினாலும் அவர் மேல் உள்ள மரியாதையால் கேட்கவில்லை. 

’என் ஃபேமிலி இங்கே தான் இருக்காங்க..வாங்க, பார்த்துட்டே போகலாம்’ன்னு சொல்லி அவரை அழைச்சுக்கிட்டு ஜவுளிக்கடைக்குப் போனேன் அங்கே லேடீஸ் செக்சனுக்குச் சென்றால், தங்கமணியைக் காணவில்லை. ஏற்கனவே இங்கே வந்து நொந்து நூலானவன் என்பதால், அங்கிருந்த சேல்ஸ் கேர்ள்ஸ்க்கு என்னை ஞாபகம் இருந்தது. 

‘என் வீட்ல வந்தாங்களா?” என்று ஒரு பெண்ணிடம் கேட்டேன்.

அவர் ‘இல்லையே சார்..நீங்க வேணா வெயிட் பண்ணுங்க சார்..வரட்டும்’ என்றார்.

இடையில் புகுந்த இன்னொரு பெண் “ஏ, உனக்கு இவங்களைத் தெரியுமா?’ என்றார்.

“ஹே, சாரை எனக்கு நல்லாத் தெரியும்டி.” என்று அவர் பதில் சொல்லும்போது தான் ஆபீசர் இருப்பதே ஞாபகம் வந்தது. திரும்பிப் பார்த்தால் பேயறைந்தது போல் நின்றுகொண்டிருந்தார் ஆபீசர். ‘இவன் இங்க வந்தே ஒரு மாசம் தானே ஆகுது..அதுக்குள்ளயே இப்படியா..’ன்னு அவரு யோசிப்பது புரிந்தது.

“இல்லை சார்..நான் ஏற்கனவே இங்க பர்ச்சேஸ்..” என்று நான் ஆரம்பிக்கவும் ‘போதும்..மூடு’ என்பது போல் கையைக் காட்டினார். ‘ஆஹா..பதிவரைக் கூட வச்சுக்கிட்டு வேண்டாத வேலை பார்த்துட்டமே’ன்னு நினைச்சுக்கிட்டேன். அவருக்கு என்ன ஞாபகம் வந்துச்சோ ‘சரிங்க..நான் வீட்டுக்குப் போகணும்..கிளம்புறேன்’ன்னு ஆரம்பிச்சார். ‘சரிதான்..மனுசன் பேச்சுலர் லைஃபை எஞ்சாய் பண்றார் போல’ என்று நினைத்துக்கொண்டேன்.

நாங்கள் கீழே இறங்கி வரவும் என் மகனும் தங்கமணியும் வரவும் சரியாக இருந்தது. ‘சார் தான் எங்க ஆபீசர்’ என்று அறிமுகப்படுத்தி வைத்தேன். ஒரு பதிவரின் மனைவி என்பதால் என் தங்கமணிக்கு பதிவர்கள் மேல் பெரும் மரியாதை(!) உண்டு. ஆனாலும் அன்று ஆபீசருக்கு பணிவுடன் வணக்கம் வைத்தார். 

திடீரென ஆபீசர் கேமிராவை வெளியே எடுத்தார். ‘பயப்படாதீங்க..பதிவுல போட மாட்டேன்’ என்று உறுதி கொடுத்தார். ‘போட்டுட்டாலும்..ஹூம்’ என்று தங்கமணி ஒரு நக்கல் சிரிப்பு சிரித்தார். பதிவில் போடுவதற்கு ஏற்றவாறு ஸ்பெஷல் ஃபோட்டோக்களும் எடுத்துக்கொண்டோம். 

பிறகு தங்கமணியை ஜவுளிக்கடைக்குள் அனுப்பிவிட்டு, மீண்டும் பஸ் ஸ்டாண்ட் நோக்கி பேசிக்கொண்டே நடந்தோம். ’ஆக்சுவலி பதிவர்கள் அனைவரும் நல்லவர்கள் தான்..பதிவர்கள் பற்றி வரும் எந்தவொரு வதந்தியையும் நீங்க நம்பக்கூடாது’ என்று அட்வைஸ் பண்ணினார். 

பஸ் ஸ்டாண்ட்டை நெருங்கவும் ‘சரிங்க..நான் கிளம்புறேன்’ என்று அவசர அவசரமாக ’பேச்சுலர்’ ஆபீசர் விடை பெற்றார்.

அடுத்த இரண்டு மணி நேரம் கழித்து, டெபிட் கார்டை பழுக்க வைத்துவிட்டு ஜவுளிக்கடையில் இருந்து தங்கமணியுடன் வெளியில் வந்தேன்! ‘சாப்பிட்டுட்டே போகலாம்’ என்று தங்கமணி சொன்னதால், பஸ் ஸ்டாண்ட் அருகே பைக்கை நிறுத்தி விட்டு சுற்றும் முற்றும் பார்த்தேன். ஆபீசர் எங்குமே தென்படவில்லை. ‘

அப்பாடி’ என்று நிம்மதிப் பெருமூச்சுடன் கொத்துப்புரோட்டா கடைக்குள் நுழைந்தோம்.


மேலும் வாசிக்க... "ஆபீசருடன் ஒரு சந்திப்பு..."
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

43 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Saturday, June 16, 2012

பூக்களைத் தான் பறிக்காதீங்க..(18 ப்ளஸ்)


தனாலோ தெரியாது, சின்ன வயசுல  எனக்கு சிக்கன் குழம்பு ஒத்துக்கொள்வதேயில்லை. சாப்பிட்ட அடுத்த நாள் வயித்தைக் கலக்கிடும். அதுக்காக மனுசன் சிக்கன் சாப்பிடாமலா இருக்க முடியும்? அதனால சனிக்கிழமை மட்டுமே கறி எடுக்கணும் என்று வீட்டில் அன்புக்கட்டளை போட்டிருந்தேன். அப்போத் தானே ஞாயிற்றுக்கிழமை க்ளியர் பண்ணிட்டு, திங்க்கக்கிழமை ஸ்கூலுக்குப் போக முடியும்?

அப்படியான ஒரு ஞாயிற்றுக்கிழமையில் அவசரமாக கண்மாய்க்கு ஓடிக்கொண்டிருந்தேன். கண்மாய்க்கரையில் நான் போய்க்கொண்டிருக்கும்போது ‘ஏலே. செங்கோவி’ன்னு ஒரு சத்தம். யாருன்னு பார்த்தால், நம்ம மச்சான் ஒருத்தர். பக்கத்துல இருந்த பொட்டல் காட்டில் இருந்து கூப்பிட்டார். சாயந்திரமானா ஸ்கூல்/காலேஜ்-ல இருந்து வந்ததும் அந்த காட்டுக்குத் தான் படிக்கப்போவோம். பக்கத்துலேயே ஒரு தென்னந்தோப்பும் உண்டு. வெயில் அடிச்சா தோப்பு, இல்லேன்னா பொட்டல் வெளின்னு படிக்க ரம்மியமான இடம். அவரும் அப்போ கையில ஒரு புக்கோட நின்னாரு. பக்கத்துல ஒரு நாய் வேற காவலுக்கு நிற்குற மாதிரி நின்னுச்சு.

ரம்மியத்தை ரசிக்கிற நிலைமைல நாம இல்லையே..அதனால ‘போய்யா’ன்னுட்டு கண்மாய்க்குள்ளே இறங்கிட்டேன்.

எங்கூர்ல படிச்சவங்க கம்மி. அந்த மச்சான், அந்த கம்மிகள்ல ஒருத்தர். அப்போ காலேஜ்ல படிச்சுக்க்கிட்டிருந்தார். ரொம்ப நல்ல மனுசன். ஏதாவது சீன் புக் கிடைச்சா மனப்பாடம் ஆகுறவரைக்கும் படிச்சுட்டு, ’இனிமே இதனால ஒரு எஃபக்ட்டும் இல்லே’-ங்கிற ஸ்டேஜ் வந்ததும் என்கிட்டக் கொடுத்துடுவாரு. அப்பேர்ப்பட்ட நல்ல மனுசன்கூட நின்னு பேச முடியலியேன்னு கொஞ்சம் வருத்தம் தான்.இருந்தாலும் என்ன செய்ய..

அரை மணி நேரம் கழிச்சு நான் திரும்பி வரும்போதும் ‘செங்கோவி...வா..வா’ன்னு கூப்பிட்டாரு. கைல இருக்கிற புக்கை வேற காட்டுனாரு. ’ஆஹா..புதுசா ஏதோ வந்திருக்கு போல..’ன்னு ஆவலாய்ட்டேன். ஆக்சுவலா முதமுதல்ல அவர் புக் கொடுத்தப்போ நான் வாங்க மாட்டேன்னுட்டேன். ஏன்னா அவருக்கு ரெண்டு தங்கச்சிங்க உண்டு. ரெண்டுல ஒன்னையாவது டாவடிக்கலாமான்னு ஒரு யோசனை நமக்கிருந்துச்சு. ‘இப்போ புக்கை வாங்கிப் படிச்சுட்டு, நாளைக்கு பொண்ணு கேட்டுப் போனா ‘ஏ..இவன் அயோக்க்யப்பயலாச்சே..இவனுக்கு என் தங்கச்சியைக் கொடுக்க மாட்டேன்’ன்னு சொல்லிட்டாருன்னா என்னா பண்றது-ங்கிற தொலைநோக்குப் பார்வையோட, நான் மறுத்தேன்.
சீன் புக் வாங்குறது ஒருவகையான கஷ்டம்னா, படிச்சு முடிச்சப்புறம் அதை யார்கிட்டயும் மாட்டிக்காம டிஸ்போஸ் பண்றது வேறுவகையான கஷ்டம். பொட்டல் காட்டுல எரிச்சு, பக்கத்துல வைக்கப்படப்பு ஏதாவது தீப்பிடிச்சுட்டா வம்பு..கிழிச்சுப் போட மனசு வராது.வந்து கிழிச்சாலும் ஒரு சின்னத் துணுக்குகூட ‘பருத்த..’ என்று காட்டிக்கொடுத்துவிடும் அபாயமும் உண்டு. நான் ஒரு கல்லுளி மங்கன் என்பதால், யாரிடமும் சொல்ல மாட்டேன் என்ற நம்பிக்கையில் மச்சான் என்னைப் பிடித்துக்கொண்டார். நானும் ’கல்வியா? காதலா?’ என்று தீர யோசித்து கல்வியே முக்கியம் என்ற முடிவுடன், அவரிடமிருந்து வாழ்க்கைக்கலவி புத்தகங்களை வாங்கி படிக்க ஆரம்பிச்சேன்.

அதனால இப்பவும் ஆசையோட மச்சான்கிட்டப் போனா, பக்கத்துல இருந்த நாய் (நாயை நாயின்னு சொல்லலாமா? இதுக்கு வேற மிருக வதைன்னு பஞ்சாயத்தை கூட்டிடாதீங்கப்பா..) என் மேல பாய்ஞ்சு வந்திடுச்சு. நான் பதறிப்போய் நின்னா, என் காலடில கம்முன்னு உட்கார்ந்துக்கிச்சு. ‘யோவ், என்னய்யா இது?’ன்னேன். அதுக்கு அவரு ‘ அதான் மாப்ளை எனக்கும் புரியலை..நான் படிப்போம்னு வந்தேன். இது வந்து பக்கத்துல உட்கார்துக்கிச்சு. ஒரு அடி எடுத்து வச்சாலும் கடிக்க வருது. ஒன்றரை மணி நேரமா இப்படியே நின்னுக்கிட்டிருக்கேன், தெரியுமா? அதனால தான் உன்னைக் கூப்பிட்டேன்’ன்னார்.

அடப்பாவி மனுசா..புக்கை வேற காட்டினியேன்னு நினைச்சுக்கிட்டிருக்கும்போது, ‘மாப்ளே, நீ இப்படியே இரு. நான் போயி யாரையாவது கூட்டிட்டு வர்றேன்’ன்னு கிளம்புனார். அவர் ஒரு அடி எடுத்து வைக்கவும் என் காலடில இருந்த நாய் அவரைப் பார்த்து பாய்ஞ்சது. இப்போ அவர் காலடில உட்கார்ந்துக்கிச்சு. என்னடா இது சோதனை-ன்னு அய்யனார் சிலை மாதிரி அங்கேயே நிக்கிறோம். இப்படியே அரை மணி நேரம் போச்சு. யாரும் வர்ற மாதிரியும் தெரியலை.
அப்போத் தான் எனக்கு ஒரு ஐடியா தோணுச்சு. நான் ஒரு அடி எடுத்து வச்சேன். நாய் என்கிட்ட ஓடி வந்து உட்கார்ந்துக்கிச்சு. ‘மச்சான், இப்போ நீயும் ஒரு அடி எடுத்து வையி..நாய் உன்கிட்ட வரும். இப்படியே அடிமேல் அடி வச்சு கண்மாய்க்கரைப் பக்கம் போயிடுவோம்’ன்னேன். அவரும் ஒரு அடி எடுத்து வைக்க, நாய் ஓட, அப்புறம் நான் ஒரு அடி எடுத்து வைக்கன்னு ஆளுக்கு நாலு அடி நடந்திருப்போம். அதுக்கே அரைமணி நேரமுன்னு ஒரு மணி நேரம் ஆகிப்போச்சு.

இப்போ சிக்கன் தன்னோட ‘மறு சுழற்சி’யை என் வயித்துகுள்ள ஆரம்பிச்சிருந்துச்சு. ’அய்யய்யோ..மச்சான், வயித்தைக் கலக்குது’ன்னேன். ‘எனக்கும்தான் மாப்ளே’ன்னாரு. ‘யோவ், உனக்கு கலக்கிறது வேற..எனக்குக் கலக்குறது வேற’ன்னேன். ‘அது எப்படி மாப்ளே?’ன்னாரு. உஸ்ஸ்..மறுபடியும் ஒரு சுழற்சி..பேசாம இருந்தா கொஞ்சம் மட்டுப்படும்போல தோணுச்சு. நான் ஒன்னும் சொல்லாம நின்னேன். கொஞ்ச நேரத்துல அந்த நாய் முகத்துல ஒரு ஒளிவட்டம் தெரிஞ்ச்சு. என்னடான்னு திரும்பிப் பார்த்தா, கூட்டமா நாய்ங்க வருது. நமக்கோ வயித்துக்குள்ள ட்ரெயினே ஓடுது. செத்தோம்டான்னு நினைக்கும்போது தான், அந்த அதிசயம் நடந்துச்சு.

அந்த நாய்ங்க எங்களை கிராஸ் பண்ணி, எங்கேயோ ஓட ஆரம்பிச்சதுங்க. அந்தக்கூட்டத்துல கொழுக்மொழுக்னு குஷ்பூ மாதிரி ஒரு பொட்டை நாயும் இருந்துச்சு. அதைப் பார்த்து நம்ம நாய் புக் படிக்காமலேயே மையல் கொண்டுச்சு. அந்த குஷ்பூவைப் பார்த்து எடுத்தாரு பாருங்க ஓட்டம்..அவரு குஷ்பூ பின்னாடி ஓட, மச்சான் வீட்டைப் பார்த்து ஓட, நான் கண்மாயைப் பார்த்து ஓட-ன்னு செம ரகளையா இருந்துச்சு அந்த சீனு!

அப்புறம் ரெண்டு மாசம் கழிச்சு, தம்பி ஒருத்தன்கிட்ட இதைச் சொன்னப்போ, அவன் ஹாஹான்னு சிரிச்சுக்கிட்டே நாய் ஏன் அப்படிப் பண்ணுச்சுன்னு சொன்னான். ஒருநாளு இவன் தன் கோஷ்டியோட அங்க படிக்கப் போயிருக்கான். அங்க அந்த நாயி ‘அந்த கொழுக் மொழுக்’கூட எதிரும்புதிருமா சந்தோசமா இருந்திருக்கு. இவனுக வழக்கம்போல கல்லையெடுத்து விரட்டியிருக்காங்க. நாயும் கத்திக்கிட்டே ஓடியிருக்குங்க. நாய்க்கு ஞாபக சக்தி உண்டா?-ன்னு எனக்கு ஆச்சரியமா இருந்துச்சு.

அதுக்கு அப்புறம் அந்த இளஞ்சோடிகளைக் காப்பத்தும் பூந்தோட்டக் காவல்காரனா ஆனேன். பாவம்..அதுகளே ஒருத்தர் முகத்தை இனொருத்தர் பார்க்க முடியாதபடி ஆண்டவன் ஒரு சாபத்தைக் கொடுத்திருக்கான்..இதுல இவங்க வேற இம்சை பண்ணா, அதுங்க என்ன செய்யும்? அதனால யாராவது அந்த ஜோடிங்க ஜல்சா பண்றதை உத்துப்பார்த்தாலே ‘ஏலே, என்னலே இங்க வேடிக்கை..ஓடுங்களே..இந்த பொசிசனைக் கத்துக்கிட்டு என்னலே பண்ணப்போறீங்க..அது வேஸ்ட்டுலே’-ன்னு சொல்லி விரட்டி விட்டுட்டுவேன்..இப்போ ஒலகம்பூரா வாழுற தமிழ் ஜாம்பவான்களை நான் கேட்டுக்கிறது என்னன்னா..

பூக்களைத் தான் பறிக்காதீங்க..

நாய்களைத் தான் பிரிக்காதீங்க!


மேலும் வாசிக்க... "பூக்களைத் தான் பறிக்காதீங்க..(18 ப்ளஸ்)"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

10 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Friday, June 15, 2012

முருக வேட்டை_15

சரவணன் சோர்வுடன் தன் வீட்டு காலிங் பெல்லை அழுத்தினான்.

கதவைத் திறந்த கவிதா அமைதியாக “வாங்க “என்றாள்.

சரவணன் சோஃபாவில் போய் விழுந்தான். கண்களை மூடினான்.

கவிதா எதிரே இருந்த சோஃபாவில் உட்கார்ந்தாள். ஐந்து நிமிடங்கள் அமைதியாக அவனைப் பார்த்தபடியே உட்கார்ந்திருந்தாள்.

பின் மெதுவாக “அகிலாக்கா ஃபோன் பண்ணாங்க..எல்லாத்தையும் சொன்னாங்க.” என்றாள்.

சரவணன் கண் விழித்துப் பார்த்தான்.

“பேசலாமா? என்ன ஆச்சு?” என்றாள்.

“ம்..பேசுவோம்.....சாரி, கவிதா..எப்பவும் கேஸோட எல்லா டீடெய்லையும் உன்கிட்டச் சொல்வேன். ஆனால் இந்த முறை நீ கன்சீவ் ஆகியிருக்கியேன்னு சிலதை மறைச்சுட்டேன்..” என்றபடி சரவணன் நடந்ததைச் சொன்னான்.

“யாருமே நான் சொல்றதை இப்போ நம்ப மாட்டேங்கிறாங்க அச்சு” என்றான்.

“யார் நம்பாட்டாலும் நான் நம்புவேன்.”என்றாள் கவிதா.

“பாண்டியன் ஏன் தன்னை கொலையாளின்னு சொல்லிக்கிறான்? அது உண்மையா அல்லது என்னை சுத்தல்ல விடறதுக்காக சொன்ன பொய்யான்னு புரியலை அச்சு. என்னை கேஸை ஒழுங்கா டீல் பண்ணாம இருக்கச் சொன்ன பொய்யின்னு வச்சுக்கிட்டா, உண்மையான கொலையாளி யாரு? இல்லே, பாண்டியன் தான் கொலையாளின்னா எதுக்காக வலிய தன் குற்றத்தை ஒத்துக்கணும்? எல்லாத்துக்கும் மேல MARS-1024-ங்கிறது என்னன்னும் தெரிய மாட்டேங்குது..”

“M - முத்துராமனா?”

“உஸ்ஸ்..அப்படி நினைச்சு கேஸை டீல் பண்ணித்தான் இந்த நிலைமைல இருக்கேன்..இப்போ என்னை இந்த கேஸ்ல இருந்து தூக்கிட்டாங்க, தெரியுமா?”

“தெரியும்..அதுக்காக விட்றுவோமா?” என்றாள் கவிதா.

அப்போது கவிதாவின் ஃபோன் ஒலித்தது.

“அழகன் என்றால் முருகன் என்று..” 

கவிதா யாரென்று பார்த்தாள்.பாண்டியன்.

சரவணன் இயர் ஃபோனை எடுக்க ஓடினான்.

“ஹலோ” என்றாள் கவிதா.

“சரவணன் இல்லியா?” என்றான் பாண்டியன். குரலில் ஒருவித இறுக்கம் தெரிந்தது.

“இருக்காங்கண்ணே..பொறுங்க” என்று கவிதா சொல்லும்போதே இயர்ஃபோனை மாட்டி, ஒன்றை கவிதாவுக்குக் கொடுத்தான் சரவணன்.

ஃபோன் அருகில் உட்கார்ந்தபடி “ஹலோ” என்றான்.

”என்ன சரவணன்..ஹா..ஹா..நான் சொன்னது சரியாகிடுச்சு பார்த்தியா? நான் அப்பவே சொன்னேன்..நீ ஒரு முட்டாள்னு...உன்னை பெரிய இவன்னு ரெகமண்ட் பண்ணி, புரமோசன் வாங்கிக் கொடுத்தவளே ஒத்துக்கிட்டா தான் செஞ்சது தப்புன்னு..இப்பவும் சொல்றேன்..அந்தக் கொலையை நாந்தான் செஞ்சேன்...இப்போ நான் செஞ்ச கொலையை நானே துப்புத் துலக்கணுமாம்..சொல்றா அகிலா..உன்னை ரெகமண்ட் பண்ணவளாச்சே.அவளுக்கு மட்டும் மூளை இருக்கவா போகுது? மறுபடியும் சவால் விடறேன்..முடிஞ்சா பிடிச்சுக் காட்டு. எனக்குத் தெரியும்..எப்படியும் நீ சும்மா இருக்க மாட்டேன்னு..உன்னோட புத்திசாலித்தனத்தை நிரூபிக்க மறுபடியும் ஒரு சான்ஸ் தர்றேன்..இன்னிக்கு உன் பொண்டாட்டிக்கு ஆபத்துங்கவும் எப்படி ஓடி வந்தே? எவ்வளவு பரபரப்பா உன் மூளை வேலை செஞ்சுச்சு? அதே வேகத்தோட இந்த கேஸை டீல் பண்ணு..உனக்காக நான் கார்த்துக்கிட்டிருப்பேன்..பை”

கவிதா நடுங்கிப் போய் உட்கார்ந்திருந்தாள்.

“அச்சு..இதே தான்..இப்படியே தான் ஆரம்பத்துல இருந்து சொல்றான். சும்மா தான் சொல்றானான்னு..”

“அவர் சொல்றது உண்மை” என்றாள் கவிதா.

“எப்படிச் சொல்றே?”

“அந்த குரல்ல ஒரு உறுதி தெரியுது..ஏதோ ஒன்னை நீங்க மிஸ் பண்றீங்க..தெளிவா ஏதோ ஒரு தடயம், அவர் விட்டு வச்சிருக்கார்..அதனால தான் திரும்பத் திரும்ப உங்களை கூப்பிடறார். உங்க பேரைக் கெடுக்கறதுக்காகத் தான் பொய் சொல்றாருன்னா. இப்போ இப்படிப் பேச வேண்டிய அவசியம் இல்லியே?”

சரவணன் யோசித்தபடியே ‘ஆம்’ என்று தலையாட்டினான்.

“என்ன தடயமாக இருக்கும்?”

“இருக்கிற ஒரே தடயம் MARS-1024 தானே?” என்றாள் கவிதா.

”ஆமா..ஆனால் அது சரியான தடயம் தானா?..அதை நம்பி பின்னால போய்த் தான் சஸ்பெண்ட் ஆகி நிற்கிறேன்..”

சஸ்பெண்ட் என்ற வார்த்தையைச் சொல்லும்போதே,  சரவணனுக்கு கண் கலங்கியது.

“இன்னிக்கு எவ்வளவு அவமானப்பட்டேன், தெரியுமா? அத்தனை பேர் முன்னாடியும்...ச்சே.......நான் தோத்துட்டேன், அச்சு..பாண்டியன்கிட்ட நான் தோத்துட்டேன்”


“இல்லீங்க..நீங்க தோற்க மாட்டீங்க..நான் இருக்கிறவரைக்கும் யார்கிட்டயும் நீங்க தோற்க மாட்டீங்க” என்றாள் கவிதா உறுதியுடன்.

---------- முதல் பாகம் முற்றும் --------------------


மேலும் வாசிக்க... "முருக வேட்டை_15"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

9 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

முருக வேட்டை_14


“ஹே..என்ன இது?”

“இதாங்க பாண்டியன் கொடுத்த கிஃப்ட்”

சரவணன் பாய்ந்து போய், அந்த கிஃப்ட் பார்சலைப் பிடுங்கினான்.



”என்ன அவசரம்?” என்றாள் கவிதா.

சரவணன் அதைக் கவனிக்காமல், வேக வேகமாக பார்சலுக்கு உள்ளே பார்த்தான்.

உள்ளே சின்ன வால்கிளாக் இருந்தது.

10:22 என்று பீப்..பீப் என்ற மெல்லிய ஒலியுடன் டைம் காட்டியது.

சரவணன் வேகமாக திருப்பிப் பார்த்தான். பின்பக்கம் சின்ன கறுப்புக்கலர் பிளாஸ்டிக் பாக்ஸ் போன்ற ஒன்று ஒட்டிக்கொண்டிருந்தது. பின்பக்க பிளாஸ்டிக் மூடியைப் பிரித்தான்.

உள்ளே சிவப்பு, பச்சை வயர்களுடன் டைம் பாம் மின்னியது. சரவணன் முன்பு பெற்ற பயிற்சியை நினைத்துக்கொண்டபடி, சிவப்பு வயரை அறுத்தான்.

கடிகாரம் பீப் என்ற ஒலியுடன் நின்றது.

கவிதா” என்னங்க இது? என்ன நடக்குது?” என்றாள்.

“ஒன்னுமில்லைம்மா..சும்மா..பாண்டியன் ஒரு போட்டி வச்சான்..ஒரு விளையாட்டு..நீ வீட்டுக்குப் போ..நான் அப்புறம் சொல்றேன்” என்று அவளை அனுப்பி விட்டு, அந்த கிஃப்ட் பார்சலுடன் ஆஃபீஸ் நோக்கி விரைந்தான்.

ஆஃபீசில் நுழைந்ததும் பாண்டியனின் இடத்தை நோக்கி ஓடினான் சரவணன்.

தன் சீட்டில் அமர்ந்திருந்த பாண்டியன் வேகமாக வரும் சரவணனைப் பார்த்து, எழுந்து நின்றான்.

சரவணன் வரும்போதே அந்த கிஃப்ட் பார்சலை பாண்டியனின் முகத்தில் எறிந்தான். பாண்டியன் நிலைதடுமாறும்போது, ஓடி வந்து பாண்டியன் மீது பாய்ந்தான்.

இருவரும் கட்டி உருள, ஆபீஸே ரணகளமானது. ரங்கசாமியும் பிறரும் ஓடி வந்து இருவரையும் பிரித்துவிட்டனர்.

அகிலா தன் ரூமில் இருந்து ஓடி வந்தாள்.

“என்னாச்சு? என்னாச்சு?” என்றாள்.

சரவணன் மூச்சிறைத்தபடி, “மேம், இவன் என் வைய்ஃபை டைம் பாம் வச்சு கொல்லப் பாத்திருக்கிறான் மேம்..இவனை முதல்ல அரெஸ்ட் பண்ணுங்க” என்ரான்.

அகிலா “டைம் பாமா?” என்றபடி பாண்டியனைப் பார்த்தாள்.

அவன் அமைதியாகச் சிரித்தபடி “அப்படியெல்லாம் ஒன்னுமில்லை மேம், “என்றான்.

“ஒன்னுமில்லையா...மேம், இதோ பாருங்க” என்றபடி சரவணன் அந்த கிஃப்ட் பார்சலைக் கொடுத்தான்.

”அவர் ஏதோ உளறுதார் மேம்..அவன் ஒய்ஃபுக்கு இன்னிக்கு பர்த் டே இல்லியா? அதனால சின்னதா ஒரு வால் கிளாக் கிஃப்ட்டா வாங்கினேன்..அப்படியே கொடுத்தா சப்பையா இருக்குமேன்னு சும்மா டம்மி டைம் பாம் மாதிரி நாலஞ்சு ஒயரைச் சுத்திக் கொடுத்தேன்..அதை பிரிச்சுப் பார்த்தாலே, அது டம்மின்னு தெரியும்..ஒரு கிரைம் பிராஞ்ச் இன்ஸ்பெக்டர் வைய்ஃபுக்கு கொஞ்சம் டெக்னிகலா கிஃப்ட் கொடுப்போம்னு நினைச்சேன்..இது தப்பா? அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்ங்கிற மாதிரி, அவருக்கு நான் எது பண்ணாலும் தப்பாத் தெரியுது. கவிதா என் தங்கச்சி மாதிரி..அவங்களுக்கு ஏன் நான் டைம் பாம் கொடுக்கப் போறேன்?”

அகிலா கீழே கிடந்த அந்த கிஃப்ட்டை எடுத்துப் பிரித்துப் பார்த்தாள். அருகில் இருந்தோரும் வாங்கிப் பார்த்தனர். அழகாக பேக் செய்யப்பட்ட, சின்ன வால் கிளாக்..அதன் பின்னால் டம்மியாக டைம் பாம் போன்ற வேலைப்பாடுடன் கூடிய பிளாஸ்டிக் பாக்ஸ்.

“நைஸ் கிஃப்ட்” என்றார் கூட்டத்தில் இருந்த ஒருவர்.

அகிலா சரவணன் மேல் கோபமானாள்.

“சரவணன்..திஸ் இஸ் டூ மச்..ஒன்னுமில்லாத விஷயத்துக்கு ஆஃபீஸ்ல இவ்ளோ ரகளை பண்ணியிருக்கீங்க”

“பரவாயில்லை மேம்” என்றான் பாண்டியன் அப்பாவியாக!

“பாண்டியன். நீங்க வேணா உங்க ஃப்ரெண்டாச்சேன்னு சும்மா விடலாம். ஆனா, ஒரு ஹையர் அஃபிசியலா இதை நான் பொறுத்துக்க முடியாது. ஆஃபீஸ்ல இண்டீசண்டா நடந்துக்கிட்டதுக்காக சரவணனை ஒரு மாசம் சஸ்பெண்ட் பண்றேன். நீங்க கம்ப்ளெய்ண்ட் கொடுத்தா, சரவணன் மேல கேஸ் ஃபைல் பண்ணச் சொல்றேன்”

“அய்யோ..அதெல்லாம் வேண்டாம் மேம்..இவருக்காக இல்லேன்னாலும் கவிதாவுக்காகவாவது நாம விட்டுடுவோம்”

அகிலா சரவணன் பக்கம் திரும்பினாள். “ஓகே, சரவணன்..நீங்க கிளம்பலாம்..இனிமே நீங்க முத்துராமன் சார் கொலைக்கேஸை டீல் பண்ண வேண்டாம். அந்த கேஸ்ல இருந்து பெர்மனெண்ட்டா உங்களை தூக்கறேன். பாண்டியன் பார்த்துப்பார், அந்தக் கேஸை!”

சரவணன் பாண்டியனைப் பார்த்தான்.

பாண்டியன் நக்கலாகச் சிரித்தான்.

சரவணன் அவமானத்துடன் தலை குனிந்தபடி கீழே இறங்கினான்.


(வேட்டை...தொடரும்)

மேலும் வாசிக்க... "முருக வேட்டை_14"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

4 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Thursday, June 14, 2012

குரங்கு கையில் சிக்கிய பூமாலை - ஊரக வேலைவாய்ப்புத் திட்டம்

பொதுவாகவே நமது பிரதமர் மன்மோகன்சிங்கின் மத்திய அரசு, அடிப்படை மக்களின் பிரச்சினைகளைப் பற்றிக் கவலைப்பாடாத, ஷேர் மார்க்கெட் இண்டெக்ஸ் மட்டுமே நாட்டின் வளர்ச்சிக்கான அடையாளம் என்று செயல்படும் அரசு. ஆனால் பல மாநிலங்களின் விவசாயிகளின் தற்கொலைகள் நிகழ்ந்ததைத் தொடர்ந்து, நூறு நாட்கள்-ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் என்ற நல்ல திட்டத்தை அதிசயமாக அறிமுகப்படுத்தியது மன்மோகன் அரசு.

விவசாயக் கூலிகளுக்கு வருடத்தில் எல்லா நாட்களுமே வேலை இருப்பதில்லை. இடையில் வேலையில்லாமல் இருக்கும் நேரத்தில் அவர்களுக்கு மத்திய அரசே வேலை கொடுக்கும் திட்டம் இது. கிராமப்புற நீர்நிலைகளை தூர்வாருதல், கரைகளை மேம்படுத்தல் போன்ற பணிகளை பொதுவாக தனியாருக்கு காண்ட்ராக் விடுவது வழக்கம். அவர்கள் லஞ்சம்/ஊழல் போக, மீதிப் பணத்தில் ஏதோ கொஞ்சம் வேலையை முடிப்பார்கள். எனவே அதற்குப் பதிலாக அந்தப் பகுதி மக்களிடமே அந்த வேலையைக் கொடுத்துவிட்டால், தன் சொந்த ஊரின் நலனுக்காக அக்கறையுடன் வேலை செய்வர். ’வேலையற்ற விவசாயிகளுக்கு வேலை கொடுத்த மாதிரியும் ஆச்சு, காண்ட்ராக்ட்டில் நடக்கும் தில்லுமுல்லுகளை ஒழித்த மாதிரியும் ஆச்சு’ என்ற நல்ல சிந்தனையுடன் கொண்டுவரப்பட்டது இந்தத் திட்டம். ஆனால் உண்மையில் நடப்பது என்ன?


ஒரு நாளைக்கு 8 மணி நேரம் வேலை செய்தால், 100 ரூபாய் கூலி தர வேண்டும். நேர்மையின் சிகரமான நம் அதிகாரிகளும் பஞ்சாயத்து தலைவர்/உறுப்பினர்களும், மக்களுக்கு அருமையான ஆஃபர் வழங்கினார்கள். ‘நீங்கள் வேலையே செய்ய வேண்டாம். 70 ரூபாய் வாங்கிக் கொள்ளுங்கள்.மீதியை நாங்கள் பங்கிட்டுக்கொள்கிறோம்’ என்பதே அந்த ஆஃபர். அதைக்கேட்டு நம் மக்கள் கொதித்தெழுந்தார்கள். ‘வேலையே செய்ய வேண்டாம் என்பது சரி.ஆனால் 30ரூபாயை எடுத்துக்கொள்வது எந்த வகையில் நியாயம்?’ என்று கேட்டு எங்கள் பகுதி தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அதன்பின் அதிகாரிகள் இறங்கி வந்தார்கள். 80 ரூபாயில் பேரம் படிந்தது.

இப்போது தினமும் காலையில் 150க்கும் மேற்பட்ட மக்கள் சரியான நேரத்தில் ஆஜராகிறார்கள். அவர்கள் வேலை செய்ய வேண்டிய பகுதி நிலத்தில் கோடு போட்டு பிரித்துக் கொடுக்கப்படுகிறது.  அதை கொஞ்ச நேரம் சும்மா கொத்த வேண்டும்..இரண்டு சட்டி மண்ணை அள்ளி பக்கத்தில் எங்கேயோ போட வேண்டும். (அதை ரோடு ஓரம் போட்டு, மழை நேரத்தில் மினி பஸ் சேற்றில் சிக்கிய கூத்தும் நடந்தது). அவ்வளவு தான் வேலை. பிறகு அருகில் இருக்கும் மரத்தடியில் உட்கார்ந்து கொள்ளலாம். வீட்டிற்கும் போய்க்கொள்ளலாம். இன்ஸ்பெக்சனுக்கு மேல்அதிகாரிகள் வரும்போது மட்டும் அனைவரும் சின்சியராக நடிக்க வேண்டும். இதுவே திட்டம் செயல்படுத்தப்படும் முறை.

’தன் சொந்த மண்ணாயிற்றே..அதனை மேம்படுத்துவது நம் பணியாயிற்றே’ என்ற அக்கறையோ புரிதலோ இந்த மக்களுக்கு இல்லாமல் போனது ஆச்சரியமாக உள்ளது. மக்களே ஊழல்வாதிகள் ஆகிப்போன கொடுமை தான் தாங்க முடியாததாக உள்ளது. ‘கவர்மெண்ட் காசு தானே..காவ்ர்மெண்ட் வேலை தானே’ என்ற அலட்சிய மனோபாவம் அடித்தட்டு மக்கள் வரை பரவியுள்ளது. இவர்களைப் பார்க்கும் இவர்களது குழந்தைகளின் மனதிலும் ‘நாளைக்கு படித்துவிட்டு, அரசு வேலைகளுக்குப் போனாலோ, படிக்காமல் அரசியல்வாதியாகப் போனாலோ இப்படித் தான் நடந்து கொள்ளவேண்டும்’ என்றல்லவா பதிந்து விடும்? ‘அன்னிக்கு திடீர்னு செக் பண்ண ஆபீசருங்க வந்துட்டாங்க மாமா..அம்மா வீட்டுல இருந்து திடுதிடுன்னு ஓடுனா..ஹா..ஹா’ என்று ஒரு பிள்ளை சொல்வதைக் கேட்டபோது கஷ்டமாக இருந்தது. லட்சக்கணக்கான கோடிகளில் நடக்கும் ஊழல்களைவிட, இந்த 30 ரூபாய் ஊழல் விளைவிக்கும் சமூகக்கேடு அதிகம்.

சொந்த மக்களின் முன், சொந்தக் குழந்தைகளின் முன் திருடர்களாக வாழ்வதும், அதைப் பற்றிய பிரக்ஞை கிஞ்சித்தும் நம் மக்களுக்கு இல்லாமல் போனதும் தான் கொடுமை. சமூகரீதில் இத்தகைய பாதிப்பு என்றால், தொழில்ரீதியில் இந்தத் திட்டம் கொடுக்கும் பாதிப்பு மிகமிக அதிகம். வருடத்திற்கு 100 நாள் மட்டுமே என்று இருந்த இந்தத் திட்டம், திடீரென வருடம் முழுமைக்கும் விரிவுபடுத்தப் பட்டது. 


என் மாமா ஒருவர் விவசாயி. நெல் பயிரிட்டு விட்டார். நெல் விளைந்ததும் அறுக்க வேண்டும். வேலைக்கு ஆட்களைக் கூப்பிட்டால், யாரும் வரத் தயாரில்லை. (விவசாய வேலைகள் இல்லாத நேரம் மட்டுமே இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்பது விதி...ஆனால் நம் விதி?) ‘சும்மா உட்கார்றதுக்கே 80 ரூபாய் தர்றாங்க..நாங்க எதுக்கு வேலைக்கு வரணும்?’ என்று மக்களே கேட்டபோது மாமா நொந்து போனார். பிறகு பஞ்சாயத்து தலைவரைப் பார்த்து கெஞ்சி ‘அய்யா..ஏதாவது வேணும்னா வாங்கிக்கோங்க..ரெண்டு நாளைக்கு உங்க திட்டத்தை நிறுத்தி வைங்க’ என்று சொன்னபிறகு, அந்த அருமையான திட்டம் இரண்டு நாட்கள் நிறுத்தி வைக்கப்பட்டது. தமிழகத்தில் நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் அனைவருக்கும் பெரும் சிக்கலை உண்டாக்கியுள்ளது இந்தத் திட்டம். விவசாயிகள் நலனுக்கு என்று கொண்டு வரப்பட்ட திட்டம், விவசாயத்திற்கே ஆபத்தாக ஆனதை என்னவென்பது? எங்கள் பகுதியில் உள்ள தீப்பெட்டி/பட்டாசுத் தொழில்களும் இதனால் நசித்துப்போகும் நிலைமை.


பொதுவாக நாட்டில் நடக்கும் ஊழலை வெளிக்கொண்டுவரும் சில கட்சிகளும் அமைப்புகளும் மீடியாக்களும் இதைப் பற்றிப் பேசுவதேயில்லை. சென்ற மாதம் பாராளுமன்றத்தில் மத்திய அமைச்சர் ‘தமிழகத்தில் இந்தத் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. சென்ற ஆண்டு 2500 கோடி ரூபாய் ஒதுக்கினோம். இந்த ஆண்டு 5000 கோடி ரூபாய் ஒதுக்கவுள்ளோம்’ என்று சொல்லியுள்ளார். ’விவசாயம்னு ஒன்னு இருந்தாத் தானே விவசாயக்கூலிகள் பிரச்சினை வரும்? எப்படியாவது விவசாயத்தை ஒழிச்சிடுவோம்’ என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகிறார்களோ என்று தோன்றுகிறது.

பொதுநல அமைப்புகள் யாராவது இதை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்கி, விவசாயிகளைக் காப்பது அவசியம். இல்லையென்றால் தக்காளி கிலோ 200 ரூபாய்க்கு வாங்க வேண்டிய நிலை வருவது நிச்சயம்.

மேலும் வாசிக்க... "குரங்கு கையில் சிக்கிய பூமாலை - ஊரக வேலைவாய்ப்புத் திட்டம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

15 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Tuesday, June 12, 2012

முருக வேட்டை_13


அப்போது சரவணனின் மொபைல் அடித்தது. எடுத்துப் பார்த்தான். கவிதாவின் நம்பர். 

“ஹலோ” 

“குட் மார்னிங் சரவணன்..” என்றது பாண்டியனின் குரல்.

"பா...பாண்டியன்..நீ என்ன பண்றே, அங்கே?”

“சாரி மேன்..நான் கொடுத்த டயத்தையெல்லாம் வேஸ்ட் ஆக்கிட்டே..!” 

சரவணன் அதிர்ச்சியில் இருந்து மீளாமல் “என்ன சொல்றே?’ என்றான்.

“ஹா..ஹா..உன் பொண்டாட்டிக்கு பர்த் டே கிஃப்ட்டுன்னு ஒரு டைம்-பாம் கொடுத்திருக்கேன்.அது சரியா 10:24க்கு வெடிக்கும். முடிஞ்சா காப்பாத்திக்க..பை!” என்று சொன்னதுடன் எதிர்முனை கட் ஆனது.

சரவணன் மணியைப் பார்த்தான். பத்து மணி..இன்னும் 24 நிமிடங்கள்..கிண்டி டூ எம் எம் டிஏ காலனி..ட்ராஃபிக் இல்லையென்றால் போய் விடலாம். எழுந்து லிஃப்ட்டை நோக்கி ஓடினான் சரவணன்.

MARS....

M - முத்துராமன் என்றால் A எப்படி கவிதா வரும்?

அச்சு!

மை காட்..நான் கவிதாவை அச்சு என்று அழைப்பேன் என்று ஆபீசில் அகிலாவிற்கும் பாண்டியனுக்கும் மட்டுமே தெரியும். ச்சே...இதை எப்படிக் கவனிக்காமல் போனோம்? இன்று அச்சுக்குப் பிறந்த நாள் வேறு..அதையும் மறந்து தொலைத்தோம்..

பைக்கை உதைத்து ஸ்டார்ட் செய்தான் சரவணன். பைக் காசி தியேட்டர் தாண்டிப் பறந்தது. அசோக் பில்லர் சிக்னலில் டிராஃபிக் ஜாம் ஆகியிருந்தது.

‘என்ன செய்வது..கவிதா கர்ப்பிணி வேறு..திடீரென்று எதுவும் சொல்லவும் முடியாது’ யோசித்தபடியே மொபைலை எடுத்து கவிதாவுக்கு ஃபோன் செய்தான்.

“அச்சு..?” என்றான்.

“சொல்லுங்க..இப்போத் தான் பாண்டியன் வந்திட்டுப் போறார்..ரொம்ப நாளைக்கு அப்புறம் நம்ம வீட்டுக்கு அண்ணன் வந்திட்டார்” என்றபடி சிரித்தாள் கவிதா.

“எ..எதுக்கு வந்தான்?”

“எதுக்கா? என் பர்த் டே உங்களைத் தவிர எல்லாருக்கும் ஞாபகம் இருக்கு..வந்து ஒரு கிஃப்ட் கொடுத்துட்டுப் போறார்”

“என்ன கிஃப்ட்?”

“இன்னும் பிரிக்கலை” என்றாள்.

“கொஞ்ச நேரம் முன்ன உன் மொபைல்ல இருந்து பேசினான்”

“ஆமா, வந்ததை உங்ககிட்ட சொல்லணும்னார்..அவர் மொபைல்ல பேலன்ஸ் இல்லையாம்..அதான் என் மொபைல்ல இருந்து பேசினார்.”

“அப்போ அவன் பேசும்போது கூட இருந்தியா?”

“இல்லையே..கிச்சன்ல காஃபி போட்டுக்கிட்டிருந்தேன்..ஏன்?”

“இல்லை..சும்மா கேட்டேன்.அச்சு, நான் சொல்றதைக் கேளு..நான் இப்போ அசோக் பில்லர்கிட்ட நிக்குறேன்..இன்னும் அஞ்சே நிமிசத்துல அங்கே வந்திடுவேன்..நாம அர்ஜெண்டா ஒரு இடத்துக்குப் போறோம். அதனால உடனே நீ கீழே இறங்கி வந்திடு..ரமணாஸ் கார்னருக்கு வந்திரு”

“நான் எங்கேயும் வர மாட்டேன்..காலையில ஞாபகம் இல்லியாம்..இப்போ வெளில கூட்டிட்டுப் போறாராம்..ஒழுங்கா திரும்பி ஆபீசுக்குப் போங்க”

”ஏ லூசு..நான் ஒன்னும் உன் பர்த் டேக்கு வெளில கூப்பிடலை”

“அப்புறம் எதுக்காம்?’

சரவணன் முழித்தான். 

‘என்ன சொல்லி இவளை கீழே இறக்குவது?’ 

சட்டென்று அகிலாவின் அப்பா விஸ்வநாதன் ஞாபகம் வந்தார்.

“அகிலா மேம் அப்பா இருக்கிறாரில்லை..அவர் உன்னைப் பார்க்க வர்றேன்னார்..உனக்கு சஸ்பென்சா இருக்கட்டும்னு சொல்ல வேண்டாம்னார்..அகிலா மேம்க்குகூடத் தெரியாது..அவரால ஸ்டெப்ஸ் ஏற முடியாது இல்லியா?..அதனால அவர் கார்ல ரமணாஸ்கிட்ட வெயிட் பண்ணச் சொல்லியிருக்கேன்..நான் வரவும் மூணு பேரும் வெளில போறோம்..ஓகே?”

“ஓ...அப்போச் சரி”

“உடனே கீழ வா..வீட்டுக்கிட்ட நிக்க வேண்டாம்..நேரா ரமணாஸ் வந்திரு”

“சரி..சரி”

நிமதிப் பெருமூச்சுடன் கால்-ஐ கட் செய்தான் சரவணன். 

‘செந்தில் பாண்டியன்...என் கண்ணுல விரலை விட்டு ஆட்டறே, இல்லே? வர்றேன்..திரும்பி வந்து உன்னை கவனிச்சுக்கிறேன்’ 

டிராஃபிக் ஒரு வழியாய் கிளியர் ஆனது. சரவணன் பைக்கை விரட்டினான்.

வல்லவன் ஹோட்டல் வழியே எம்.எம்.டி.ஏ.காலனிக்குள் நுழைந்தான். ரமணாஸ் ஹோட்டலை நெருங்கும்போது கவிதா காத்திருப்பது தெரிந்தது. மணியைப் பார்த்தான். 

10:20

’நல்லவேளை கவிதா வெளியே வந்துவிட்டாள்’ என்று சந்தோசப்பட்டபடியே, பைக்கை ஹோட்டல் அருகே நிறுத்தினான்.

நிறுத்திவிட்டு கவிதாவைப் பார்த்தவன் அதிர்ந்தான் சரவணன்.

கையில் ஒரு கிஃப்ட் பார்சலுடன் நின்றுகொண்டிருந்தாள் கவிதா.

“ஹே..என்ன இது?”

“இதாங்க பாண்டியன் கொடுத்த கிஃப்ட்”

(வேட்டை...தொடரும்)

மேலும் வாசிக்க... "முருக வேட்டை_13"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

10 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Monday, June 11, 2012

தமிழ்வாசியுடன் ஒரு சந்திப்பு..

எனக்கு தமிழ்வாசியை மிகவும் பிடிக்கும். ‘இலக்கியம் கிலக்கியமெல்லாம் நமக்குத் தெரியாதுங்க..ஏதோ மனசுல பட்டதை எழுதறேன்’ என்று வெளிப்படையாகப் பேசுபவர். இந்த விடுமுறையில் வெகுசில நண்பர்களை சந்தித்துவிட வேண்டும் என்று நினைத்துக்கொண்டே வந்தேன். ஆனாலும் நேரமின்மையால் முடியவில்லை. ஆனாலும் தமிழ்வாசியிடம் முன்பே மதுரை வருவதாக வாக்கு கொடுத்துவிட்டதால் எப்படியும் ஒருநாள் அவரைச் சந்திப்பது என்று முடிவு செய்தேன்.

கோவில்பட்டியில் ஒருநாள் நில விஷயமாக காலை முதல் வேகாத வெயிலில் அலைந்து கொண்டிருந்தேன். மூன்று மணிக்கு மேல் வருவதாகச் சொன்ன ஒரு பார்ட்டி, திடீரென்று இன்று வர முடியாது என்று சொல்லிவிட, இதைவிட்டால் வேறு சந்தர்ப்பம் வராது என உடனே மதுரைக்குப் பஸ் ஏறினேன். காலை முதல் அலைந்ததில் பார்ப்பதற்கு பரதேசி மாதிரி ஆகியிருந்தேன். ஆனாலும் ‘நாம் என்ன தமிழ்வாசியை பொண்ணா பார்க்கப் போறோம்?’ என்று மனதைத் தேற்றிக்கொண்டேன். (இல்லேன்னாலும்..)

பஸ் மதுரையை நெருங்கும்போது தான் ஒரு முக்கியமான விஷயம் ஞாபகம் வந்தது.  “செங்கோவி, நான் நேத்துப் போட்ட பதிவு படிச்சீங்களா? எப்படி இருந்துச்சு? மூணாவது பாரால நாலாவது வரில அந்தப் பதிவருக்கு ஒரு உள்குத்து வச்சிருந்தேனே, கவனிச்சீங்களா? என்னது கவனிக்கலையா? என்னங்க இது, யாருமே கவனிக்க மாட்டேங்கிறீங்க..அப்புறம் அந்த பெண் பதிவர் பத்தி.................................”-இப்படி தமிழ்வாசியிடம் சேட்டில் மாட்டினாலே நோண்டி நோண்டி கேள்வி கேட்பாரே...’நாம வேற ஒரு வாரமாப் பதிவே படிக்கலியே..என்னெல்லாம் கேட்கப் போறாரோ?..இப்படி திடீர்னு பேக்கு மாதிரிக் கிளம்பிட்டமே’ன்னு யோசிச்சுக்கிட்டே பெரியார் பஸ் ஸ்டாண்ட் போய் இறங்குனேன். (ஃபாரின் பதிவர்னா இடையில் திருமங்கலத்தில் இறங்கி பிஸ்ஸி விட்டு கூல் ட்ரிங்ஸ் சாப்பிட்டதையும் டீடெய்லா எழுதணும்னு சொல்றாங்களே, அப்படியாங்க?)

பெரியார் அருகே காத்திருந்த போது தமிழ்வாசி வந்து சேர்ந்தார். பார்ப்பதற்கு அமுல்பேபி போன்று இருந்தார். சிவப்பாக, ஹேண்ட்சமாக இருக்கும் நபர்களையெல்லாம் உத்து உத்துப் பார்த்தார். இனியும் பொறுக்கக்கூடாது என்று அவரைப் பார்த்து கையசைத்தேன். “செங்கோவி” என்றேன்.

ஒரே நேரத்தில் இடியும் மின்னலும் தங்கமணியும் தாக்கினால் எப்படி இருக்குமோ, அப்படி ஒரு அதிர்ச்சிக்கு ஆளானார் தமிழ்வாசி. “என்னங்க இது..பார்க்கறதுக்கு எப்படியோ இருப்பீங்கன்னு பார்த்தா இப்படி சின்னப்பையனா, யங்கா, யூத்தா இருக்கிறீங்க?” என்ற கேள்வியை மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்திக் கேட்டார்.

“உங்க சைஸுக்கு ஷகீலாவே சின்னப் பொண்ணாத் தான் தெரியும்” என்று சொல்லிக்கொண்டே அருகில் இருந்த கரும்புச் சாறு கடைக்கு அழைத்துச் சென்றேன். கரும்புச் சாறு குடிக்கவும் அவர் முகம் இன்னும் அஷ்டகோணலானது.

சப்புக்கொட்டிக் குடித்தபடியே “என்னாச்சு?” என்றேன்

“நல்லாவே இல்லை” என்றார். ’அடப்பாவி மனுசா..ஒருத்தன் ரசிச்சுக் குடிக்கிறானே..அதுக்காகவாவது சும்மா இருக்கக்கூடாதா’ன்னு நினைச்சுக்கிட்டு “ஓ..ஆமா..கொஞ்சம் டேஸ்ட் கம்மி தான்” என்றேன்.

“புதூர்ல தாங்க நல்லா இருக்கும்.” என்று தன் ஜீகேயைக் காட்டினார்.

“ஓஹோ” என்று சொல்லிவிட்டு மீதி இருப்பதைக் குடிக்க விடுவாரா..மாட்டாரா என்று யோசித்தேன்.

“இன்னும் கொஞ்ச தூரம் போனா ரெண்டு ஆண்ட்டிங்க கரும்புச்சாறு விக்காங்க..நல்லாவே இருக்காது” என்றார்.

நான் புரியாமல் “ஆண்டிங்களா? ஜீஸா?” என்றேன்.

“ரெண்டும் தான்” என்றார் சோகத்துடன்....ப்ச்..ப்ச்..ஒரு மனுசனுக்குத் தான் எத்தனை கஷ்டம்.

பிறகு நண்பர் என்னை ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு பைக்கை எடுக்கச் சென்றார். என்ன இடம் என்று திரும்பிப் பார்த்தால்....தங்க ரீகல் தியேட்டர்.

தந்தன..தந்தன..-ன்னு பழைய ஞாபகங்கள் பீறிக்கிட்டு கிளம்புச்சு. சினிமா அறிவை வளர்க்கும்பொருட்டு எத்தனையோ உலகப் படங்களைப் பார்த்த இடமல்லவா அது!

மடோனாவின் பாடி ஆஃப் தெ எவிடன்ஸ் பார்த்ததெல்லாம் நினைவில் வந்தபோது “என்னாங்க..தனியா சிரிச்சுக்கிட்டு நிக்கிறீங்க?” என்றார் தமிழ்வாசி.

”ஹி..ஹி..தங்க ரீகல்” என்றேன்.

“பழைய ஞாபகமா? இப்போ நல்ல படங்கள் மட்டும் தாங்க ஓடுது” என்றார்.

‘அடப்பாவிகளா..தங்க ரீகலை இப்படிப் பித்தளை ரீகல் ஆக்கிட்டாங்களே’ன்னு ஃபீல் பண்ணிக்கிட்டே மதுரையில் கொஞ்ச நேரம் சுற்றினோம். மிக்சரும் அல்வாவும் பார்சல் வாங்கிக் கொடுத்தார் தமிழ்வாசி. கொடுத்துவிட்டு “இது உங்க பையனுக்கு..போற வழியிலேயே எல்லாத்தையும் சாப்ட்றாதீங்க” என்று அட்வைஸ் சொன்னார். 

அதன்பின் மீனாட்சி பவனில் டின்னர் முடித்துவிட்டு (உபயம்:தமிழ்வாசி), கிளம்பினேன். ‘நான் போய்க்கிறேன்’ என்று சொல்லியும் கேட்காமல் ஹெவி டிராஃபிக்கில் அவரே மாட்டுத்தாவணி வரை பைக்கில் கொண்டு வந்து விட்டார்.

பிரியும்போது நெஞ்சு அடைத்து, கண்ணீர் வரவில்லை. ’எப்படியும் வீடு போய்ச் சேரமுன்ன நாலு ஃபோன் பண்ணப்போறாரு..அப்புறம் என்ன..’ என்று நினைத்தபடியே விடைபெற்றேன்.


பஸ் ஏறியபிறகே தமிழ்வாசியிடம் கேட்க நினைத்த முக்கியமான அந்தக் கேள்வியை கேட்க மறந்தது ஞாபகம் வந்தது. கொஞ்சநாள் முன்பு, ஜவ்வுமிட்டாய் பற்றி அவர் ஒரு பதிவு எழுதியிருந்தார். கமெண்ட்டில் ‘ஜவ்வுமிட்டாயை எவ்வளவு தூரத்திற்கு பிய்யாமல் இழுக்கலாம்?’ என்று கேள்வி கேட்டிருந்தேன். அதற்கு மனுசன் பதில் சொல்லவில்லை. எனவே நேரிலாவது இதற்கு பதில் வாங்கி விடவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். இப்போது மறந்துவிட்டேன்..ச்சே..
எனவே தமிழ்வாசி அவர்கள் இங்கே கமெண்ட்டில் அதற்குப் பதில் சொல்லவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

மேலதிக விவரங்களுக்கு : கண்டேன் செங்கோவியை! (தமிழ்வாசியின் பதிவை அவசியம் படித்துப் பயன்பெறுங்கள்)

மேலும் வாசிக்க... "தமிழ்வாசியுடன் ஒரு சந்திப்பு.."
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

41 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

முருக வேட்டை_12


காலையில் காலிங் பெல் சத்தம் கேட்டு, கவிதா கதவைத் திறந்தாள். கருப்புச் சட்டையுடன் நான்கு பேர் நின்றுகொண்டிருந்தார்கள். கடவுளே இல்லையென்பதில் தீவிரமாக இருப்பவர்கள்.

கவிதாவைப் பார்த்ததும் சிரித்தபடியே “வணக்கம்” என்றார்கள்.

கவிதா “வாங்க ஐயப்ப சாமீகளா...என்ன மீட்டிங்கா? ஊர்வலமா?’ என்றாள்.

“மீட்டிங் தான்க்கா..சார் இல்லியா?” என்றான் ஒருவன்.

“குளிச்சுக்கிட்டிருக்காங்க..டொனேசன் தானே?’ என்றாள்.

“ஆமா” என்றான் அசட்டுச் சிரிப்புடன்.

“உள்ளே வந்து உட்காருங்க” என்று சொல்லிவிட்டு கவிதா உள்ளே போய் பணம் எடுத்து வந்தாள். 

“நன்றி” என்றபடியே வாங்கிக்கொண்டார்கள்.

“வர்ற ஞாயிற்றுக்கிழமை மீட்டிங். எங்க கட்சித்தலைவரே வர்றார்..நீங்க வர மாட்டீங்க..சாரையாவது வரச்சொல்லுங்க” என்று சொன்னபடி கிளம்பினார்கள்.

“நான் சொல்லாமலே அவர் வந்திடுவார்..கவலைப்படாதீங்க” என்றபடியே அவர்களை வழியனுப்பி வைத்தாள் கவிதா.

சரவணன் சிறிது நேரம் கழித்து வந்து “யாரு?” என்றான்.

“உங்க கூட்டாளிங்க..பகுத்தறிவாதிங்க..வர்ற சண்டே ஏதோ மீட்டிங்காம்..டொனேசன் வாங்கிட்டுப் போறாங்க.” என்றாள்.

”ஆங்..அன்னிக்கே வழில பார்த்துச் சொன்னாங்க..சரி, லேட் ஆகிடுச்சு..நான் கிளம்பறேன்” என்ரான்.

கவிதா “எங்கே?’ என்றாள்.

சரவணன் ஆச்சரியத்துடன் “இதென்ன கேள்வி? ஆபீசுக்குத் தான்” என்றான்.

அவள் சிரித்தபடி “ஓ..ஓகே..ஓகே” என்றாள்.



மறுநாள் ஆபீஸ் வந்ததும், அகிலா முதல் வேலையாக கவிதாவிற்குப் போன் செய்தாள்.

“ஹலோ”

“கவிதா..மெனி மெனி ஹேப்பி ரிட்டர்ன்ஸ் ஆஃப் தெ டே..ஹேப்பி பர்த்டே “

“தேங்க்ஸ்க்கா”
”அப்புறம், மூணு மாசம் முடிஞ்சிடுச்சு இல்லியா?”

”ஆமாக்கா..முதல் மூணு மாசம் ரொம்ப கேஃபுல்லா இருக்கணும்னு சொன்னீங்களே..”

“ஹா.ஹா..ஆமா, இனிமே ஒரே எஞ்சாய்மெண்ட் தானா?”

கவிதா சிரித்தாள். “அய்யோ..அக்கா நான் அதைச் சொல்லலைக்கா..என்ன இப்படில்லாம் பேசறீங்க?” 
“பேசுனா என்ன தப்பு? யாராவது பேசித் தானே ஆகணும்? நிதானமா, பார்த்து நடந்துக்கணும் சரியா?”

“அய்யோ, அந்தப் பேச்சை விடுங்கக்கா” என்றாள் கவிதா வெட்கத்துடன்.

“சீரியசாத் தான்டி சொல்றேன்...இப்போ சந்தோசமா இருக்கிறது நல்லது..அது சுகப்பிரசவத்துக்கும் ஹெல்ப் பண்ணும், புரியுதா?’ என்றாள் அகிலா.

கவிதா சிரிப்புடன் “ம்” என்றாள்.

“அப்புறம் டாக்டர் மூணு மாசத்துக்கு ஃபோலிக் ஆசிட் எடுத்துக்கச் சொன்னாருல்ல? இனிமே அது தேவையான்னு டாக்டர்கிட்ட கேட்டுக்கோ..அது குழந்தையோட நரம்பு வளர்ச்சிக்கு நல்லது..ஹே, குழந்தைங்கவும் தான் ஞாப்கம் வருது. கருவுக்கு கை, கால், முகம் எல்லாம் வளர்ந்து பார்க்கறதுக்கு இப்போத் தான் குழந்தை மாதிரி இருக்கும், தெரியுமா? “

“ஓ..அப்படியா?”

“ஆமா..இப்போ வாமிட்டும் குறைஞ்சிடுச்சுல்ல?”

“எங்கே குறைஞ்சிருக்கு...!”

“குறையும்..குறையும்..இனிமே நீ கொஞ்சம் கொஞ்சமா வாக்கிங் போகலாம்..எதுக்கும் டாக்டர்கிட்ட கேட்டுக்கோ..ரொம்ப நேரம் நிற்கவும் வேண்டாம், நடக்கவும் வேண்டாம். ரொம்ப நேரம் நின்ன, நடந்தா கருப்பைக்குப் போற ரத்த ஓட்டம் குறையும்..பார்த்துக்கோ”

“சரிக்கா”

“சரி, உன் பர்த் டே-க்கு என்ன ப்ளான்?”

“ப்ளான்லாம் ஒன்னுமில்லைக்கா”

“சரவணன் எங்கேயும் கூட்டிட்டுப் போகலையா?”

“அவருக்கு ஞாபகம் இருந்தாத் தானே கூட்டிட்டுப் போறதுக்கு?”

“என்னது உன் பர்த் டே ஞாபகம் இல்லியா?”

“ஆமா..அவர் காலைலயே ஆபீசுக்கு கிளம்பிப் போய்ட்டாரு..வந்திருப்பாரே, பார்க்கலியா?”

“கவனிக்கலை..சரி, நான் அனுப்பி வைக்கிறேன்”

“இருக்கட்டும்க்கா..பார்த்துக்கலாம்”

“நீ சும்மா இரு..” என்று சொல்லிவிட்டு ஃபோனைக் கட் செய்தவள் இண்டர்காமில் சரவணனைக் கூப்பிட்டாள்.

"குட் மார்னிங் சரவணன்”

“மார்னிங் மேம்”

”சரவணன், இன்னிக்கு ஒரு ஸ்பெஷல் நாள்..என்னன்னு சொல்லுங்க பார்ப்போம்”

சரவணன் தன் டேபிளில் இருந்த காலண்டரைப் பார்த்தான்..அக்டோபர் 24..இன்னிக்கு என்ன..ஓ, மை காட்!

“மேம், கவி பர்த் டே”

“மறந்தாச்சா?”

“ஆமா..ஏதோ ஞாபகத்துல...”

“நேத்துப் பேசுனதை எல்லாம் மனசுல வச்சுக்காதீங்க..உங்ககிட்ட ஃப்ரான்க்கா பேசலாங்கிறதால தான் அப்படிப் பேசுனேன்..முதல்ல கிளம்புங்க”

“ஓகே, மேம்”

”ச்சே..எப்படி மறந்தோம்..’ என்று யோசித்தபடியே மறுபடியும் காலண்டரைப் பார்த்தவன் அதிர்ந்தான்.

10-24-2010------ செவ்வாய்க்கிழமை.

10-24-செவ்வாய்..மார்ஸ்!

MARS-1024 ஞாபகத்தில் வந்தது. 

அப்போது சரவணனின் மொபைல் அடித்தது. எடுத்துப் பார்த்தான். கவிதாவின் நம்பர். 

“ஹலோ” 

“குட் மார்னிங் சரவணன்..” என்றது பாண்டியனின் குரல்.

(வேட்டை.....தொடரும்)

மேலும் வாசிக்க... "முருக வேட்டை_12"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

7 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.