Saturday, October 28, 2017

ஹரஹர மகாதேவகி - விமர்சனம் (18 +)


எச்சரிக்கை : 18+ படத்திற்கு மட்டுமல்ல, விமர்சனத்திற்கும்!

 ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு சுஹானுபவத்துக்கு ரெடி ஆவோம்னு நானும் என் தம்பியும் இந்த படம் பார்க்க உட்கார்ந்தோம். அப்பவே தம்பிகிட்டே சொன்னேன், ‘அடேய் அம்ப,.நம்ம சென்சார்லாம் கெட்டவா..அதனால நோக்கு இந்த படம் பிடிக்காது’ன்னு.

படம் ஓப்பன் பண்ண உடனே, ஹீரோயினை ஓப்பன் பண்ணுவான்னு பார்த்தால், ஹீரோவை ஓப்பன் பண்ணிட்டா! அதிலேயே துடிப்போட இருந்த தம்பி, துவண்டு போய்ட்டன்! இழுத்த இழுப்புக்கெல்லாம் வர்ற நல்ல தம்பி, இப்படி இடிஞ்சு போய்ட்டானேன்னு நேக்கு ஃபீல் ஆகிட்டது.

இருந்தாலும், டைரக்டர் தம்பி ஏதோ சொல்ல வாராளேன்னு பொறுத்துண்டு பார்த்தேன். லோகத்துல சிலபேருக்கு ஸ்டார்ட்டிங் ட்ரபுள் உண்டுன்னு என் சிஷ்யா உங்களுக்கு நல்லாத் தெரியும். இந்த டைரக்டர் தம்பிக்கும் அப்படி ஒரு பிரச்சினை இருக்கும் போல! காமெடி படம்னு சொல்லிண்டு ரொம்ப நேரம் மொக்கை போட்டுண்டு இருந்தா. சரி, முன்னாடி சொதப்பினாலும், பின்னாடி பெருசா பண்ணுவான்னு பொறுத்துண்டேன்.

ஒரு அரைமணிநேரம் தட்டுத்தடுமாறுன டைரக்டர் தம்பி, அப்புறமா ஓரளவு வீறுகொண்டு எழுந்துட்டா.

படத்துல கவர்ன்மெண்ட்டு, ‘பேக் இருக்கிறவா..இல்லாதவா’ன்னு பாகுபாடு பார்க்காமல் எல்லா லேடீஸ்க்கும் இலவச அழகு சாதன பேக் கொடுக்கிறா. அதுல ஒரு பேக்ல வில்லன் அபிஷ்டு‘பாம்’ வைக்க ப்ளான் செஞ்சுடறான்.
ஹீரோ, ஹீரோயினோட ஹார்ட்டையும் ப்ரேக் பண்ணிட்டதால, அவா லவ்வும் ப்ரேக் அப் ஆயிடுது. அதனால ‘தூக்கிப்போட்ட காண்டத்தை தவிர, எனக்குச் சொந்தமான மீதி சாமானை தூக்கிண்டு வாடா’ன்னு ஹீரோயின் சொல்லிடறா. ஹீரோ அதே இலவச பேக்ல அதை அள்ளிப் போட்டுண்டு போறான்.

கள்ளநோட்டு மாத்துற ஒரு அம்பி, ஒரு கோடி ரூபாய் நோட்ட, அதே மாதிரி பேக்ல வச்சுண்டு சுத்திண்டு வர்றான்.

ஒரு ஆண்ட்டியை விட்டுட்டு, அவா குழந்தையை தூக்குன ஒரு பாவி, ஒரு கோடி ரூபா கேட்டு மிரட்டுண்டு இருக்கான். அந்த பணமும் அதே மாதிரி பேக்ல போறது. இந்த நாலு பேக்கும் மாறிப் போயிடறது.

வெஜ்ஜா செய்ய வேண்டிய கதையை, வச்சு செஞ்சிருக்கா. ஒரு சாதாரண காமெடிப் படத்துல கொஞ்சம் ‘பாம்பு..கடவுளே..வாட்சப் ஜோக்’ன்னு நிரப்பி, இதான் ரொமாண்டிக் காமெடின்னு சொல்றா. என் தம்பி மாதிரி ரொம்ப எதிர்பார்க்காமல் உட்கார்ந்தேள்னா, ஒரு நல்ல பஜனை செஞ்ச திருப்தி கிடைக்கும்.

படத்துல பஜனைப் பாட்டு எல்லாம் நல்லா போட்டிருக்கா. ஆயா சோத்துல, ஹரஹரன்னு பாட்டு எல்லாம் தேவாமிர்தம்!

டைரக்டர் தம்பிக்கு ஸ்வாமிஜியோட அட்வைஸ் என்னன்னா........................

எனக்குத் தெரிஞ்ச ஸ்வாமி, அதிகாலைல பத்துக்குப் பத்து ரூம்ல மாமியோட பஜனைக்கு ரெடி ஆனார். மாமியும் பழம், தட்டு, பூவோட பூஜைக்கு ரெடி ஆனா. ஸ்வாமி, பழத்தை உருட்டுறார், தட்டை உருட்டுறார். ஆனாலும் அவரால மணியை மட்டும் அடிக்கவே முடியல; வயசாயிடுச்சு, இல்லியா! மாமியும் ஸ்வாமிக்கு கை கொடுத்துப் பார்க்கிறா. வாய்ப்பாட்டு பாடியும் பிரயோஜனம் இல்லேன்னா பார்த்துக்கோங்க. பொறுத்துப் பொறுத்துப் பார்த்து, பொங்கி எழுந்த மாமி சொன்னா : ’உம்ம மணியை விட்டுட்டு, என் மண்டையை சொறிஞ்சுவிடும்; இதுக்கு அதுவே நல்லா இருக்கும்’னு!

டைரக்டர் தம்பியும் டபுள் மீனிங்கை ஊறுகாய் போல தடவினதுக்குப் பதிலா, சுத்தமான வெஜ் காமெடி படத்தையே கொடுத்திருந்தால், அதுவே நல்லா இருந்திருக்கும்.

ஹரஹர மகாதேவகி!
மேலும் வாசிக்க... "ஹரஹர மகாதேவகி - விமர்சனம் (18 +)"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

1 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Monday, October 23, 2017

அர்ஜூன் ரெட்டியும்....கொஞ்சம் ’சேது’ பாலாவும்!

சினிமாவில் எப்போதும் ஜெயிக்கிற சில கதைகள் உண்டு; டபுள் ஆக்ட்டிங், பழி வாங்குதல் போல, தேவதாஸ் கதைக்கு அழிவே கிடையாது. ஒரு உன்னதமான காதல், அதன் தோல்வியால் விரக்தியில் வாடும் ஹீரோ, இறுதியில் இணையும் அல்லது சாகும் ஜோடி என்பதை வைத்து பலவிதங்களில் தேவதாஸ் கதை நமக்கு சொல்லப்பட்டிருக்கிறது.

தேவதாஸ், வசந்த மாளிகை, வாழ்வே மாயம் எல்லாம் இன்றும் பேசப்படும் கதைகள். சேதுவின் கதையும் அடிப்படையில் தேவதாஸ் கதை தான். தமிழ் சினிமாவையே உலுக்கிய சேது வெளியாகி பதினெட்டு வருடங்களுக்குப் பிறகு, தெலுங்கில் அர்ஜுன் ரெட்டியாக தேவதாஸ் கதை மீண்டும் ஜெயித்திருக்கிறது.


பாசம், காதல், கோபம் என எல்லா உணர்ச்சிகளையும் அதிரடியாக வெளிப்படுத்தும் ’சேது’ கேட்டகிரி ஆள், அர்ஜுன் ரெட்டி. ஆர்த்தோ சர்ஜியனாகவும் குடிகாரனாகவும் பெண்களுடன் சல்லாபிப்பவனாகவும் அறிமுகமாகிறார் ஹீரோ. ‘என்னடா, இப்படிப்பட்ட ஆளாக இருக்கிறானே’ என்று நாம் அதிர்ச்சியாகும்போது, ஃப்ளாஷ்பேக்கில் ஒரு அழகான காதல் கதை மலர்கிறது. இத்தகைய படங்களின் கமர்சியலுக்கு வெற்றிக்கு அடிப்படையே, இந்த காதல் அழுத்தமாகச் சொல்லப்படுவது தான். இதில் சொதப்பினால், பின்னால் வரும் எமோசனல் சீன்ஸ் எதுவுமே எடுபடாது.

அதை அர்ஜூன் ரெட்டியில் சரியாகச் செய்திருக்கிறார்கள். ஆனாலும் இது ‘அன்பே...ப்ராணநாதா’வகை புனிதக் காதல் அல்ல என்பது தான் விஷேசம். ஐயாயிரத்திற்கு மேற்பட்ட முத்தங்களுடனும் 549 கலவிகளுடன் இந்த காதல் சொல்லப்படுகிறது. ‘எனக்கு அவளைப் பார்த்தால் தப்பாவே தோணினது இல்லை மச்சி’ என்பது போன்ற டுபாக்கூர் போலித்தனங்களை விட்டுவிட்டு, இறங்கி அடித்திருக்கிறார்கள்.

இந்த காதல் பிரிவில் முடிவதும், தேவதாஸாக அர்ஜூன் ரெட்டி வாழ்வதையும் டீடெய்லாக பதிவு செய்கிறது படம். ஒரு முழு வாழ்க்கையைப் பார்த்த ஃபீலிங்கை கொண்டுவந்துவிடுகிறார்கள்.

கழிவிரக்கம் என்பது இருப்பதிலேயே மோசமான விஷயம். தனக்கு மட்டும் தான் கெட்டது நடப்பதாகவும், தான் மட்டுமே கைவிடப்பட்டதாகவும் நினைத்து நினைத்து, தன்னையே உருக்கி மாய்த்துவிடும் விஷயம், கழிவிரக்கம். மற்ற தோல்விகளைவிட, காதல் தோல்வி தான் எளிதாக கழிவிரக்கத்திற்கு இட்டுச் செல்லும். ‘இது மற்றவர்களுக்கும் நடந்த ஒரு விஷயம் தான். இதை கடந்து செல்வோம்’ என்று இல்லாமல், அந்த புள்ளியிலேயே வாழ்க்கையை உறைய வைத்துவிடும் கழிவிரக்கம்.

கழிவிரக்கம் சுகமானது என்பதாலேயே எளிதில் அதிலிருந்து வெளியேறவும் முடியாது. குடும்பம், நண்பர்களின் விஷேச கவனம் கிடைப்பதும் தொடர்ந்து இந்த சகதியிலேயே உருள முக்கியக் காரணம். இதை நாம் எல்லோருமே உள்ளுக்குள் விரும்புவதாலேயே, ‘யாருக்காக....வாழ்வே மாயம்’ போன்ற சோகப் பாடல்களும் படங்களும் ஹிட் அடிக்கின்றன. அர்ஜூன் ரெட்டியும் விதிவிலக்கல்ல.

ஆனால் கழிவிரக்கம் முழுக்க சுயநலமான விஷயம். தன்னைத் தவிர வேறு எதைப் பற்றியும் மனதை யோசிக்கவிடாத அயோக்கியத்தனம். உலகத்தில் தான் மட்டுமே கஷ்டப்படுவதாக நினைத்து, சுற்றியிருக்கும் உலகைப் பார்க்க மறுக்கும் மூடத்தனம்.

அர்ஜூன் ரெட்டி எங்கே காவியம் ஆகிறதென்றால், கிளைமாக்ஸில் ஹீரோயின் வந்து நிற்கும்போது! ஹீரோவின் கஷ்டங்களே பெரிய விஷயம் என்று நாம் உச்சு கொட்டிக்கொண்டிருக்கும்போது, அதைவிட மோசமான காலகட்டத்தை அவள் தாண்டி வந்து அவனை பளார் என்று அடிக்கும் இடத்தில், படம் வேறு லெவலுக்குப் போய்விடுகிறது.

சில போராளிகள், கிளைமாக்ஸ் ஒரு பழமைவாதம் என்று பொங்கியிருந்தார்கள். ஆனால் இயக்குநர் சொல்ல விரும்பியது, நான் மேலே விளக்கியிருப்பதைத் தான். படத்தின் மையமே, அந்த ஆணின் கன்னத்தில் விழும் அடி தான். நீண்ட நேரம், ஹீரோயின் என்னென்ன கஷ்டங்களை எல்லாம் சந்தித்திருக்கக்கூடும் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்...

நீண்ட நாட்களுக்குப் பிறகு, ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி.

தமிழில் படம் ரீமேக் ஆகிறது. விக்ரம் மகன் துருவ் நடிக்க, பாலா இயக்குகிறார்!

பாலா, ஒரு வீணாக்கப்பட்ட பொக்கிஷம். என்னைப் பொறுத்தவரை, அவர் எடுத்த ஒரே ஒரு நல்ல ‘சினிமா’ சேது தான். சசிக்குமாருக்கு சுப்ரமணியபுரம் போல், பாலாவிற்கு சேது. நந்தாவில் அகதிகள் பிரச்சினையை பாலா தொட, ‘பாலா என்றால் விளிம்புநிலை மனிதர்களைத் தான் படமெடுப்பார்’ என்று அறிவுஜீவிகள் ஏற்றிவிட, பாலாவும் வெறியேறி நம்மை கடித்துக் குதறியது வரலாறு. இதைச் சொல்வதற்காக பல நண்பர்களின் எதிர்ப்பை பலமுறை சந்தித்திருக்கிறேன். ஆனாலும் நமக்குத் தேவை ‘சேது’ பாலா தானே ஒழிய தாரை தப்பட்டை பாலா அல்ல.

அர்ஜூன் ரெட்டியை ரீமேக் செய்ய, ’சேது’பாலாவை விட வேறு நல்ல இயக்குநர் கிடையாது. அர்ஜூன் ரெட்டியின் பல காட்சிகளில் சேது ஞாபகம் வந்தது உண்மை.

பாலா மீண்டும் தன்னைக் கண்டடையவும், நமக்கு ‘சேது’ பாலா திரும்பக் கிடைக்கவும் இதுவொரு நல்ல வாய்ப்பு. ‘சேது’ பாலாவின் ரசிகனாக, அதை எதிர்நோக்கி இருக்கிறேன்!
மேலும் வாசிக்க... "அர்ஜூன் ரெட்டியும்....கொஞ்சம் ’சேது’ பாலாவும்!"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

1 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Friday, October 20, 2017

மெர்சல் - ஆக்கினார்களா?



’உங்கள் அபிமான நட்சத்திரங்கள் நடிக்கும்’ என்று முன்பெல்லாம் டைட்டில் போடுவார்கள். நிறைய நட்சத்திரங்கள் நடிக்கும்போது, இப்படிப் போடுவது வழக்கம். அட்லி படங்களைப் பொறுத்தவரை ‘உங்கள் அபிமான திரைப்படங்கள் பங்குபெறும்’ என்று தாராளமாக டைட்டில் போடலாம். 

சிவாஜியில் ஆரம்பித்து, தலைவாவிற்குப் போய், மூன்றுமுகத்தை மிக்ஸ் செய்து, கத்தியைத் தொட்டு, பழைய எம்ஜிஆர் படங்களையெல்லாம் ஞாபகப்படுத்தி, ரமணா, டங்கல், பாகுபலியைக் கூட விடாமல் டச் செய்து, அபூர்வ சகோதரர்களின் கதையைச் சொல்லியிருக்கிறார் அட்லி. கொஞ்சம்கூட புதிதாக எதையும் செய்துவிடக்கூடாது என கங்கணம் கட்டிக்கொண்டு வேலை பார்த்திருக்கிறார்கள். 

முதலில் ஒரு சமூக அக்கறையுள்ள மெசேஜை கொடுத்ததற்காக விஜய் & அட்லியை பாராட்டியே ஆகவேண்டும். விஜய் மாதிரி பெரிய ஹீரோக்கள் சில விஷயங்களைப் பேசும்போது, அதனுடைய ரீச் அதிகம். டிமானிடைசேசன், ஜிஎஸ்டி, மனிதம் இழந்துவிட்ட மருத்துவத்துறை என்று பொளந்துகட்டுகிறார்கள். 

கேட்டுச் சலித்த ஒரு பழிவாங்கும் கதை. அப்பாவை வில்லன்கள் கொன்றுவிட, பிள்ளைகள் வளர்ந்து ஃபாரின் போயாவது பழிவாங்கி முடிக்கிறார்கள். 

மூன்று வேடங்களில் ஹீரோ என்றால், மூன்று ஹீரோயின்கள் இருந்தே ஆக வேண்டுமா? அப்படியே இருந்தாலும், மூன்று பேருக்கும் லவ் சீன்ஸும் டூயட்டும் வைத்தே தீர வேண்டுமா? காஜல் அகர்வால் வர்றதே நாலு சீன்..எப்படியும் மூணு-நாலு கோடி சம்பளம் கொடுத்திருப்பார்கள். ராம.நாரயாணன் ஆவி இந்நேரம் தற்கொலை செய்துகொண்டிருக்கும்.

இன்னொரு பக்கம், பரிதாபமாக ஏ.ஆர்.ரகுமான். படம் ஒரு ரேஞ்சில் போய்க்கொண்டிருக்க, பாட்டு & பிண்ணனி இசையில் டப்பாவை உருட்டலாமா, வேண்டாமா என குழப்பத்திலேயே மியூசிக் என எதையோ செய்துவைத்திருக்கிறார். நமக்கு எதுக்கு பாய் விஜய் படமெல்லாம்? ஆளப் போறான் பாட்டே விஷுவல்ஸால் தான் தப்பிக்கிறது. மற்ற பாட்டெல்லாம் கொடூரம்.

மூன்று பேர் சேர்ந்து திரைக்கதை எழுதியிருக்கிறார்கள். அதற்காக இம்புட்டு நீளமா? ஏத்துன டிக்கெட் விலைக்கும் சேர்த்து, எக்ஸ்ட்ராவா படம் காட்டுற உங்க நல்ல மனசுக்கு தேங்க்ஸ்..ஆனாலும் வேணாம், முடியல. 

நமக்கு வருத்தமே, துப்பாக்கி மாதிரி சூப்பர் ஹிட் ஆகியிருக்க வேண்டிய படம் இது. வெற்றி-மாறன் - வெற்றிமாறன் என மூன்று ரசிக்க வைக்கிற கேரக்டர்ஸ், தளபதி எபிசோடு, காளி வெங்கட் ஃப்ளாஷ்பேக், ரசிகர்களை விலடிக்க வைக்கும் பல காட்சிகள்/வசனங்கள் என பல நல்ல விஷயங்களை வைத்துவிட்டு, வழவழா, கொழகொழாவென்று இழுத்து இழுத்து கதை சொல்கிறார்கள். கொடுமையாக, கிளைமாக்ஸுக்குப் பிறகும் படம் ஓடுகிறது. கொஞ்சம் கத்தரி போட்டிருந்தால், கில்லி-போக்கிரி வரிசையில் மெர்சலும் சேர்ந்திருக்கும்.

அதற்காக, பைரவா கேட்டகிரியும் இல்லை; அதற்கும் மேலே தான்.

‘நான் பெரிய ஸ்டார்..நான் சும்மா வந்து குறுக்க மறுக்க நடந்தாலே போதும்’ என்று நினைக்காமல், மூன்று வேடங்களுக்காக விஜய் கொட்டியிருக்கும் உழைப்பை பாராட்டியே ஆகவேண்டும். குறும்பான வெற்றியும், சற்று இறுக்கமான மாறனுமாக அவர் காட்டியிருக்கும் நுணுக்கமான நடிப்பு, முந்தைய படங்களில் இல்லாதது. ஃப்ளாஷ்பேக்கில் மாறன் வரும்போது, தியேட்டர் தெறிக்கிறது. நித்யா மேனன் சாகும் காட்சியில், விஜய்யின் நடிப்பு அட்டகாசம். ஏ சூப்பர்ப்பா, நீ இப்படில்லாம் நடிச்சு பார்த்ததில்லைப்பா! 

விஜய்யின் வசனங்களிலும் அனல் பறக்கிறது. ஒரு நல்ல மெசேஜை விஜய் மாதிரி பெரிய ஹீரோக்கள் பேசும்போது கிடைக்கும் ரீச் அதிகம். விவசாயம், கல்வி, மருத்துவம் என தொடர்ந்து தன் படங்களில் சமூகப் பிரச்சினைகளை விஜய் கதைப்பொருளாக எடுத்துக்கொள்வதை பாராட்டியே ஆகவேண்டும்.

மூன்று ஹீரோயின்களில் நித்யா மேனனுக்கு நடிக்க வாய்ப்புள்ள கேரக்டர். அவ்வளவு பெரிய ஸ்க்ரீனில் அவ்வளவு பெரிய நித்தியைப் பார்க்க கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது. ஜோதிகா நடித்திருக்க வேண்டிய கேரக்டர். கடைசி நேரத்தில் அவர் காலைவாரிவிட, நித்தியை வைத்து ஒப்பேற்றியிருக்கிறார்கள். சமந்தாவின் ‘ரோஸ் மில்க் வாங்கித் தர்றேண்டா’ சீன்களும், அந்த டயலாக் டெலிவரியும் செம ரகளை. மற்ற சீன்களில் காஜல் மாதிரியே இவரும் வேஸ்ட்!

’சுடலை’ சூர்யாவிற்கு இதெல்லாம் சப்பை கேரக்டர். ‘இன்னும் முப்பது வருசத்தில் நார்மல் டெலிவரின்னா ஆச்சரியப்படுவாங்க’ என்று சொல்லும் இடத்தில் மட்டும் ஸ்கோர் செய்கிறார்.

கோவை சரளா, சத்யராஜ், வடிவேலு எல்லாம் இருக்கிறார்கள். இப்போதே ஏறக்குறைய மூணு மணிநேரம். இவர்களையும் ஒழுங்காக பயன்படுத்தியிருந்தால், விடிந்திரிக்கும். ஆனாலும், டிமானிடைசேசன் பற்றி வடிவேலு பேசும் டயலாக்கிற்கு தியேட்டரே அதிர்ந்தது. ‘வீ ஆர் ஃப்ரம் இண்டியா...ஒன்லி டிஜிட்டல் மணி..நோ கேஷ்..ஆல் பீப்பிள் ஸ்டேண்டிங் க்யூ..உங்கிட்ட சொல்றதுக்கு என்ன, எல்லாம் நக்கிட்டுத் திரியறோம்’ என சைகையுடன் வடிவேலு பேசும்போது கிடைக்கும் கைதட்டல்கள், மக்கள் எவ்வளவு கடுப்பில் இருக்கிறார்கள் என்று காட்டுகின்றன.

மொத்தத்தில், இழுவையான சில சீன்களையும் தேவையற்ற சில சீன்களையும் பொறுத்துக்கொண்டால்...................

குடும்பத்துடன் பார்த்துக் கொண்டாடக்கூடிய படம் தான், மெர்சல்.
மேலும் வாசிக்க... "மெர்சல் - ஆக்கினார்களா?"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Tuesday, October 10, 2017

NETWORK (1976) - சினிமா அறிமுகம்






நீ இயற்கையின் ஆதார சக்திகளுடன் விளையாடிவிட்டாய் மிஸ்டர்.பேல்..ஒரு பிஸினஸ் டீலை நிறுத்திவிட்டதாக நீ நினைக்கிறாய். அப்படி இல்லை..அரபிகள் பில்லியன் கணக்கான டாலர்களை இங்கிருந்து வெளியே எடுத்துச் சென்றிருக்கிறார்கள். இப்போது அதை அவர்கள் திரும்ப இங்கே கொண்டுவர வேண்டும்.

 இது அலையின் ஏற்றமும் இறக்கமும் போல…இயற்கைச் சமநிலை. நாடுகள், நாட்டு மக்கள் எனும் பார்வையில் சிந்திக்கும்  கிழவன் நீ.

நாடு என்று எதுவும் இல்லை. ரஷியன் என்று யாரும் இல்லை. அரபிகள் என்று யாரும் இல்லை. மூன்றாம் உலக நாடுகள் என்று எதுவும் இல்லை. மேற்குலகு என்று எதுவும் இல்லை.

இங்கே இருப்பது எல்லாம் டாலரின் புனிதமான சிஸ்டம்களின் சிஸ்டம்ஸ் மட்டுமே..ஒரு பரந்து விரிந்த, பெரிய, ஒன்றோடொன்று நெய்யப்பட்ட, ஒன்றையொன்று கலந்துகொள்ளும், பலவகைப்பட்ட, சர்வதேச டாலரின் காலனிகள் மட்டுமே!

பெட்ரோ டாலர்ஸ், எலக்ட்ரோ டாலர்ஸ், மல்டி-டாலர்ஸ்..ரீச்மார்க்ஸ், ரப்ள்ஸ், ரின், பவுண்ட் & ஷெக்ள்ஸ்.

சர்வதேச பணம் தான் இந்த பூமிக்கிரகத்தின் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் தீர்மானிப்பது. அது தான் அனைத்தின் இயற்கையான ஒழுங்கு.

இன்று, அது தான் பொருட்களின் அணு அமைப்பு. நீ அந்த இயற்கையின் ஆதார சக்திகளுடன் விளையாடிவிட்டாய். நீ அதை சரிசெய்தே ஆகவேண்டும். புரிகிறதா, மிஸ்டர்.பேல்?

நீ உனது சின்ன 21 இன்ச் டிவி ஸ்க்ரீனின் எழுந்து நின்றுகொண்டு, அமெரிக்காவைப் பற்றியும் ஜனநாயகத்தைப் பற்றியும் அலறுகிறாய். இங்கே அமெரிக்கா என்று ஏதுமில்லை. இங்கே ஜனநாயகம் என்று ஏதுமில்லை.
     
இங்கே இருப்பது எல்லாம் ஐபிஎம், ஐடிடி, டவ், யூனியன் கார்பைடு போன்ற கார்ப்போரேசன்ஸ் தான். இவை தான் இன்றைய உலகின் நாடுகள்.

 

ரஷ்யாக்காரன் கார்ல் மார்க்ஸ் பற்றியா இன்று அவர்கள் கவுன்சிலில் பேசிக்கொண்டிருக்கிறான் என்று நினைக்கிறாய்?

நம்மைப் போலவே, லினியர் புரோக்ராமிங் சார்ட்களையும், புள்ளிவிவர தியரிகளையும் எடுத்துக்கொண்டு, முதலீடுகள் & பணப் பரிமாற்றங்களைப் பற்றி கணக்கு போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

நாம் கொள்கைகளையும் நாடுகளையும் சார்ந்த உலகில் வாழவில்லை, இனி வாழப்போவதுமில்லை.

இந்த உலகம், யாராலும் தடுக்க முடியாத பிஸினஸ் சட்டங்களால் முடிவுசெய்யப்படுகிற கார்போரேசன்களின் பல்கலைக்கழகம்.

பிஸினஸ் தான் உலகம், மிஸ்டர்.பேல்!

--
1976ல் வெளியான Network படத்தில் வரும் புகழ்பெற்ற வசனம் இது. சட்டயர் காமெடி மூவியாக உருவாகி, இன்று எதிர்காலத்தை முன்பே கணித்துச் சொன்ன காவியமாக போற்றப்படுவது நெட்வொர்க் .

12 ஆங்க்ரி மென் – க்குப் பிறகு இயக்குநர் சிட்னி லுமெட்டின் படங்களின் எனக்கு மிகவும் பிடித்த படம்.

ஒரு டிவி அலுவலம் தான் கதைக்களம். டி.ஆர்.பிக்காக எந்த அளவிற்கு டிவி உலகம் இறங்கும் என்ற கணிப்பில் உருவான படம். ஒரு காமெடிக்காக எழுதப்பட்ட காட்சிகள் எல்லாம் இன்று உண்மையிலேயே நடந்தேறி, சீரியஸ் படமாக இன்று நெட்வொர்க் ஆராதிக்கப்படுவது வேதனையான வேடிக்கை.


Network, சினிமா வரலாற்றில் வந்த பத்து சிறந்த திரைக்கதைகளில் ஒன்று, 100 சிறந்த சினிமாக்களில் ஒன்று!

உயிரைக் கொடுத்து நடிப்பது என்பதற்கு நடிகர் பீட்டர் ஃபின்ச் (மிஸ்டர்.பேல்), இந்த படத்தில் நடித்தது தான் சரியான உதாரணமாக இருக்க முடியும். இந்த படத்தில் நடித்ததாலேயே சீக்கிரம் மண்டையைப் போட்டார் மனுசன்!

ஹீரோயின் Faye Dunaway வெளுத்து வாங்கியிருப்பார்.
Gone with wind படத்திற்குப் பிறகு, மிகவும் சிக்கலான ஹீரோயின் பாத்திரம் இது. இந்த இரண்டு நடிகர்களுமே ஆஸ்காரை தட்டிச் சென்றது ஆச்சரியம் இல்லை.

டிவி உலகம் / டிஆர்பி கதைக்களத்தில் சமீபத்தில் தமிழில் வந்த மொக்கைப்படங்களால் புண்பட்டவர்கள், இந்த படத்தைப் பார்க்கலாம்!
மேலும் வாசிக்க... "NETWORK (1976) - சினிமா அறிமுகம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.