Sunday, August 25, 2013

மன்மோகன் சிங்கை குறை சொல்லும் அப்பாடக்கர்களே..

ஏதோ கொஞ்சம் ரூபா மதிப்பு குறைந்துவிட்டது. உடனே 2 X 2 என்றால் என்னவென்று கால்குலேட்டர் இல்லாமல் கணக்கப்போடத் தெரியாத சவலைகள், பொருளாதார மேதை திரு.மன்மோகன் சிங் அவர்களை எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ, அவ்வளவு கேவலப்படுத்துகிறார்கள். கடந்த பத்தாண்டுகளாக திரு.மன்மோகன் சிங் அவர்கள் செய்த சாதனைகளையும், ஒரு இந்தியனாக அவர் பிறந்ததற்காக, நாம் பெருமைப்படுவதன் அவசியத்தையும் விளக்குவதே இந்தப் பதிவு.
 பத்தாண்டுகளுக்கு முன்பு உலகைப் பிடிக்க ஆரம்பித்த பொருளாதாரத் தேக்க பூதம், 2007ல் முழுவீச்சில் எல்லா நாடுகளையும் சிக்கலில் தள்ளியது. பெரியண்ணன் அமெரிக்காவே ஆடிப்போய் விட்டது. அங்கேயே வேலையில்லாத் திண்டாட்டம், புதிய தொழில்கள் தொடங்கமுடியா நிலை, நிறுவனங்கள் கையில் போதிய நிதி/ஆர்டர் இல்லாமை என அமெரிக்கா டவுசர் கழண்ட காலம் அது. அப்போது டாலரின் மதிப்பு 40 ரூபாய்களில் இருந்தது.

அமெரிக்காவை அமெரிக்கர்களே காப்பாற்ற முடியாத நேரத்தில், மன்மோகன் அவர்கள் அவதார்-ஆக உருவெடுத்தார்,

அப்போது அமெரிக்காவிடம் ஒரு போர்க்கப்பல் இருந்தது. அந்த கப்பல், 30 வருடங்கள் முழுமையாக உபயோகப்படுத்தப்பட்ட, அடுத்து உடைத்து வீசப்படவேண்டிய கப்பல். அப்போது நம் அவதார் கண் திறந்தார். அந்தக் கப்பலை இந்தியக் கப்பல்படைக்காக 400 கோடி ரூபாய் கொடுத்து வாங்கிக்கொள்வதாக அறிவித்தார். அதே 400 கோடி ரூபாய் நிதி திரட்டவே நெய்வேலி என்.எல்.சி.-யை தனியார் மயமாக்குவதாக, தற்போது அவதார் சொல்வதில் இருந்து, 400 கோடி என்பது லேசுப்பட்ட சமாச்சாரம் அல்ல என்று நாம் அறிந்து கொள்ளலாம்!

அமெரிக்கா என்பது மக்கள் அல்ல. அங்குள்ள நிறுவனங்கள் தான். அது ஒரு முழு முதலாளித்துவ தேசம். ஆனாலும் அதிசயமாக மக்கள் ஒரு விஷயத்திற்காக ஒன்றுகூடிப் போராடி, வெற்றிகண்டர்கள். அது, அங்கே இனிமேல் அணு உலை கட்டக்கூடாது என்பது தான். அணு உலை அமைக்கும் நிறுவனங்கள் எல்லாம் நொடித்துப்போயின.

நிறுவனங்கள் நொடித்தால், வேலை இழப்பு, வேலையில்லாத் திண்டாட்டம். என்ன செய்வது என்று அவர்கள் திகைத்தபோது, அவதார் மீண்டும் கருணை காட்டினார். இந்தியாவில் பலத்த எதிர்ப்பையும் மீறி அணுசக்தி ஒப்பந்தம் மூலம் 20 உலைகளுக்கு மேல் அமைக்கப் போவதாக அறிவித்தார். 'ஆஹா..ஆஹா..2000 வருடங்கள் கழித்து வருவதாகச் சொல்லிச் சென்ற இயேசுபிரான் இவர் தானோ?' என்று அமெரிக்கர்களே குழம்பும் வண்ணம், அடுத்தடுத்து தனது பொருளாத அறிவின் மூலம் பல திட்டங்களை செயல்படுத்தினார். அதுவும், இந்தியாவில் இருந்தபடியே. அடடா..அடடா!

ஏதோ நம்மால முடிஞ்சது..!
 இப்போதுகூட வால்மார்ட் போன்ற ஏழை பொட்டிக்கடை முதலாளிகளுக்கு இந்தியாவின் வாசலைத் திறந்துவிட்டிருக்கிறார். அவர்கள் கடை வைத்தாலும் மக்கள் வாங்க வேண்டுமே? 'இவர்கள் ரேசனிலேயே வாழ்வதற்கு அரிசி, பருப்பும், சாவதற்கு மண்ணெண்ணெயும் வாங்கிக்கொண்டிருக்கிறார்களே' என்று சிந்தித்த நம் பொருளாதரச் சிற்பி, மெதுவாக ரேசன் கடைகளை அழிக்கும் வேலைகளை ஆரம்பித்திருக்கிறார். அதன்படி, இனிமேல் உங்கள் அக்கவுண்ன்டிலேயே காசு போட்டு விடுவோம். நீங்கள் அதை எடுத்துக்கொண்டு, இப்போதைக்கு அண்ணாச்சி கடையிலும், பின்னாளில் வால்மார்ட்டிலும் பொருள் வாங்கிக்கொள்ளலாம். இந்திய அரசின் நிர்வாகச் சுமையைக் குறைத்த மாதிரியும் ஆச்சு, அமெரிக்க பொட்டிக்கடை அண்ணாச்சிகளுக்கு கஸ்டமர் பிடித்துக்கொடுத்த மாதிரியும் ஆயிற்று.

எவ்வளவு தீர்க்க தரிசனம் உள்ள, பொருளாதார சிந்தனைச் சிற்பி அவர். இவ்வாறாக, பல்வேறு திட்டங்கள் தீட்டி, திவாலாகப் போன அமெரிக்காவையே காப்பாற்றிய மன்மோகனையா குறை சொல்கிறீர்கள்? ஒரு இந்தியனால் அமெரிக்கா மேலெழுகிறது என்பது உலக அரங்கில் நமக்கெல்லாம் பெருமை என்று புரியவில்லையா அறிவிலிகளே?

டாலரில் நாம் வாங்கிய கடன்களைத் திருப்பிச் செலுத்தும் நேரம் இது என்று சொல்கிறார்கள்.  கூடவே வட்டியும் உண்டு. அதனாலேயே ரூபாய்,அளவுக்கதிகமாக மதிப்பு வீழ்த்தப்படுவதாக பொருளாத உலகில் ஒரு கிசுகிசு உலவுகிறது. அதாவது 40 ரூபாய் கடன் வாங்கிவிட்டு, தற்போதிய மதிப்பில் 65 ரூபாய் திருப்பிச் செலுத்தப் போகிறோம். அமெரிக்காவிற்கு எவ்வளவு பெரிய நன்மையை நாம் செய்கிறோம்! அப்பேர்ப்பட்ட வல்லரசையே தூக்கி நிறுத்தும் நிஜ வல்லரசு நம் பொருளாதார மேதை மன்மோகன் என்பதை நினைவில் வையுங்கள்.

எங்கள் மண்ணுமோகனிடம் நேர்மை இல்லாமல் இருக்கலாம், சூடுசுரணை இல்லாமல் இருக்கலாம்..ஏன், தேச பக்திகூட இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவரிடம் பொருளாதர அறிவு இல்லை என்று சொல்லாதீர்கள். தான் நினைத்ததை முடித்த, அமெரிக்க ரட்சகர் அவர்.

வாழ்க மண்ணு! வளர்க அமெரிக்க சிட்டிசன் ஆகிவிட்ட அவர் பொண்ணு!



மேலும் வாசிக்க... "மன்மோகன் சிங்கை குறை சொல்லும் அப்பாடக்கர்களே.."
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

30 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Monday, August 19, 2013

சித்திரம் பேசுதடி - திரை விமர்சனம் (பாகம்-2)

கதை நாயகனும் குறிக்கோளும்:

சிறுகதை, நாவல், நாடகம், சினிமா என எந்தவொரு வடிவத்திற்குமே அடிப்படையாக இருக்கவேண்டியது "இது யாரைப் பற்றிய கதை?" எனும் கேள்விக்கான பதில் தான். சித்திரம் பேசுதடியைப் பொறுத்தவரை இது திரு என்பவனின் கதை. திரு தான் இந்தக் கதையின் மையம். அவன் வாழ்க்கையில் தான் அண்ணாச்சி நுழைகின்றார். அவன் வாழ்க்கை மாறுகின்றது. தொடர்ந்து சாரு வருகின்றாள். அவன் வாழ்க்கை, வேறு திசையில் திரும்புகின்றது. தொடர்ந்து சாருவின் அப்பாவினால், அவன் வாழ்க்கை தலைகீழாகப் புரட்டப்படுகிறது. இறுதியில் அவனது எல்லாப் பிரச்சினைகளும் தீர்கிறது.

ஒரு நல்ல திரைக்கதையில் கதையின் நாயகனுக்கு தெளிவான குறிக்கோள் இருக்க வேண்டும். அது ஆடியன்ஸ் உணர்ச்சிகளுடன் விளையாடும் அடிப்படைப் பிரச்சினையாக இருக்க வேண்டும். பெரும்பாலான தமிழ்ப்படங்களைப் போலவே இங்கே காதல் தான் முக்கியப் பிரச்சினையாகிறது. அந்த காதல் மூலமாக,  தன் வாழ்க்கையை மேம்படுத்துவதே திருவின் குறிக்கோள்.

புரிந்து கொள்வதில் எவ்வித சிக்கல்களும் இல்லாத, மிகவும் சிம்பிளான குறிக்கோள் அது. படம் பார்க்கும் மக்கள் அனைவரின் குறிக்கோளாக இருப்பது, வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்வது தான். படிப்பு, வேலை,கல்வி, அறிவு, பணம் என நாம் செய்யும் செயல்களின் நோக்கம் அனைத்துமே நம்மை மேம்படுத்திக்கொள்வது தான். இந்தக் கதையின் நாயகனின் குறிக்கோளும் அதுவாகவே இருப்பதால், படம் பார்ப்போர் எளிதில் அவனுடன் ஐக்கியம் ஆகின்றார்கள். அங்கிருந்து ஆரம்பிக்கின்றது படத்தின் வெற்றி.


இங்கே வெற்றி என்று நான் சொல்வது வியாபார வெற்றியை அல்ல. ஒரு படம், கமர்சியல் படமேயானாலும், ரசிகனுக்கு நல்ல படம் பார்த்த திருப்தியைக் கொடுக்க வேண்டும். அதுவே உண்மையான வெற்றி. 'வியாபாரம் / பணத்தை மட்டுமே அளவீடாகக் கொண்டு ஒரு படத்தை வெற்றி-தோல்வி என்று சொல்லக்கூடாது. நாங்க என்ன பாலியல் தொழிலா செய்கிறோம்?' என்று பாலுமகேந்திரா சமீபத்தில் ஒரு பேட்டியில் கேட்டார். நியாயமான கேள்வி தானே அது?

அந்த நோக்கத்திற்கான பயணத்தில் திரு சந்திக்கும் பிரச்சினைகளும், அதற்கான தீர்வுமே இந்தப் படத்தின் திரைக்கதை.

ஒரு படம் வெற்றிப்படமாக அமையவேண்டும் என்றால், கதாநாயகனே எல்லா செயல்களையும் செய்பவனாக இருக்கவேண்டும். வேறொருவருக்கு எதிர்வினை ஆற்றுபவனாக, பிறரின் கைப்பாவையாக இருக்கக்கூடாது. அது படம் பார்க்கும் ரசிகனை திருப்திப்படுத்தாது.


அதற்கு சமீபத்திய உதாரணமாக ஏழாம் அறிவு படத்தினைக் குறிப்பிடலாம். ஏழாம் அறிவு படத்தின் கதை இது தான் : ஒரு கல்லூரி மாணவி, தன் ஆராய்ச்சிகளின் முடிவில் போதி தர்மனின் வாரிசின் மூலமாக, போதி தர்மனை (அல்லது அவரது இயல்புகளை) மீண்டும் உயிர்ப்பிக்க முடியும் என்று கண்டுபிடிக்கிறாள். இதையறிந்த சீன எதிரிகள் இந்த திட்டத்தை நசுக்க முயல்கிறார்கள். இதில் அவள் வென்றாளா? போதிதர்ம ஆவி(!!)ம் வாரிசின் உடலில் உயிர்த்தெழுந்ததா?

இந்தக் கதை முழுக்க முழுக்க கதாநாயகியின் கதை. கதாநாயகன், நாயகியின் கைப்பாவை மட்டுமே. எவ்விதக்குறிக்கோளும் கிடையாது. குப்பையில் போடப்பட்ட 'காதழும்', 'அடிக்கணும்..திருப்பி அடிக்கணும்' எனும் கடைசிக்கட்ட ஞானோதயமும் மட்டுமே கதாநாயகனின் தீரச்செயல்கள். ஆனால் படத்தின் முக்கியக்குறிக்கோள், நாயகியின் கையில் சிக்கிவிட்டதால், படம் பார்த்தோர் முழு திருப்தி பெற முடியவில்லை.

அந்தவகையில் சித்திரம் பேசுதடி நாயகனின் குறிக்கோளும் செயல்பாடுகளும் தெளிவானவை. நாயகியைக் காதலிப்பதை அவனே முடிவு செய்கிறான். பெரும் பழியை ஏற்பதையும் அவனே முடிவு செய்கிறான். நாயகியை விட்டு விலகவும், அண்ணாச்சியைவே எதிர்க்கவும் அவனே முடிவு செய்கிறான்.
மிஷ்கினின் நாயகன், சினிமாப் பார்வையாளனைத் திருப்திப்படுத்தும் அடிப்படைப் பண்புகளுடம் படைக்கப்பட்டிருப்பதே திரைக்கதையின் முதல் வெற்றி.

(அலசல்-தொடரும்)


மேலும் வாசிக்க... "சித்திரம் பேசுதடி - திரை விமர்சனம் (பாகம்-2)"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

13 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Tuesday, August 13, 2013

சார்...வயிறு வலிக்கு சார்!

ன்னைக்கு காலையில பையனை எழுப்பி ஸ்கூலுக்கு கிளம்புன்னு சொன்னேன். அவன் எழுந்திரிச்சுட்டு, ஒரு நிமிசம் யோசிச்சான். பிறகு சொன்னான், "அப்பா, வயிறு வலிக்குப்பா..நான் ஸ்கூலுக்குப் போவலை".

அதைக் கேட்டவுடனே நமக்கு சந்தோசம் தாங்கலை. அடடா, நம்ம பையன் அப்படியே நம்மளை மாதிரி வர்றானேன்னு சந்தோசமாகி(இதுக்கு சந்தோசப்படணுமா, இல்லே வருத்தப்படணுமா...?), அப்படியே மலரும் நினைவுகள்ல மூழ்கிட்டேன்.

ஜூனியருடன் நான்...!
எனக்கு காலையில எழுந்திரிச்சு ஸ்கூலுக்குப் போறதில பெரிய பிரச்சினை இல்லை. ஆனா சாயந்திரம் வரைக்கும் ஒரே ரூம்ல, அதுவும் ஒன்லி பசங்களோட இருக்கிறது தான் கஷ்டமா இருக்கும்.

 அதனால வயித்து வலி ட்ராமாவை ஆரம்பிப்பேன். டீச்சரும் 'போய் ஹெச்.எம்மைப் பாரு'ன்னு அவர்கிட்ட அனுப்பிடுவாங்க. அதென்ன மாயமோ தெரியலை, நான் என்னிக்கு அவரைப் பார்க்கப் போனாலும் நம்மளை மாதிரியே ரெண்டு மூணுபேரு அவர் வாசல்ல 'வயித்து வலியோட' நிப்பாங்க.
ஒவ்வொருத்தரா உள்ள போயி "சார்...வயிறு வலிக்கு சார்'னு சொல்வோம். சிறந்த பெர்பாஃர்மன்ஸ் பண்ணவங்களுக்கு வீட்டுக்குப் போக பெர்மிசன் கிடைக்கும். இப்படியே எட்டாப்பு வரைக்கும் மாசம் ரெண்டு மூணு தடவை பெர்மிசன் வாங்கி வீட்டுக்கு ஓடி வந்திடுவேன்.

எட்டாப்பு படிக்கும்போது தான் எப்படியோ அந்த ஹெச்.எம். முழுச்சுக்கிட்டாரு. இந்தப் பய அடிக்கடி பெர்மிசன்ல போற மாதிரித் தெரியுதேன்னு மைல்டா ஒரு டவுட்டு அப்போ அவருக்கு வந்திருச்சு போல...

இது தெரியாம அன்னிக்கு ஒருநாள் அவர்கிட்டப் போயி நின்னுட்டு"சார்...வயிறு வலிக்க்கு சார்"ன்னேன். மனுசன் கம்பை எடுத்துக்கிட்டே "வ...யி..று?....வலிக்கா?"-ன்னு கேட்டுட்டு, என் பட்டக்ஸ்லயே ஒரு போடு! "இனிமே வந்தேன்னா பார்த்துக்கோ..போடா" அப்படீன்னு சொல்லி அனுப்பிட்டாரு.

பொய்யான வயித்து வலியோட போயி, நிஜமான *** வலியை வாங்கிட்டமேன்னு பீல் பண்ணிட்டே கிளாஸ்க்கு வந்தேன். டீச்சர் "என்ன சொனாரு?"ன்னு கேட்டாங்க. எனக்குள்ள இருந்த எடிட்டர் முழிச்சுக்கிட்டு, "போடா-ன்னு சொன்னாரு டீச்சர்"-ன்னேன். டீச்சரும் "சரி, அப்போ கிளம்பிக்கோ"-ன்னு அனுப்பி வச்சிட்டாங்க. ஆஹா..இதுகூட நல்லாயிருக்கேன்னு குஷி!

அப்புறம் ஒன்பதாம் வகுப்பு படிக்க கவ்ர்ன்மெண்ட் ஸ்கூல்ல சேர்ந்தேன். அப்போ முத்துராமலிங்கம் சார் தான் ஹெட் மாஸ்டர். அவரு ஒரு தமிழறிஞர். பட்டிமன்றம் எல்லாம் பேசுவாரு. நல்ல பேச்சுத்திறமை உள்ளவர். இதெல்லாம் அப்போ எனக்குத் தெரியாது. பழைய ஹெச்.எம்.ஞாபகத்திலேயே அவர்கிட்டப் போய் என் வேலையை ஆரம்பிச்சேன்.

அன்னைக்கு அவரு ஒரு கிளாஸ்க்கு மரத்தடில வச்சு பாடம் எடுத்துக்கிட்டிருந்தாரு. (எங்க கிளாஸும் மரத்தடி தான்!). அங்க போயி “சார்..வயிறு வலிக்கு சார்”-ன்னேன். வந்தது வினை.

அவர் கூலா திரும்பிப்பார்த்தாரு. “அப்படியா..சரி தம்பி..என் ஆபீஸ் பியூன்கிட்ட மாத்திரை இருக்கு. வாங்கி சாப்பிட்டுட்டு, டென்த்-சி காலியாத்தான் இருக்கு. அங்க போயி தூங்கு. நான் சாயந்திரம் ஆறு மணிக்கு எழுப்பிவிடுதேன்”ன்னாரு. நமக்கு பகீர்னு ஆகிடுச்சு. ஸ்கூலே நாலரைக்கு முடிஞ்சிடுமே..இந்த மனுசன் ஆறு மணிவரைக்கும் ஆப்பு வைக்கப் பார்க்கிறாரே-ன்னு டரியலாகி”சார்..வீட்டுக்குப் போகணும் சார்”-ன்னேன்.

அவர் ரொம்ப கூலா திரும்பி, “தம்பி..இப்போ எது பிரச்சினை? வயித்து வலியா? வீட்டுக்குப் போறதா?”ன்னாரு.

”சார்..வயிறு வலிக்கு சார். வீட்டுக்குப் போகணும் சார்”-ன்னேன்.
“தம்பி, வயிறு வலியோட அவ்ளோ தூரம் எப்படிப் போவே..நீ மாத்திரை சாப்பிட்டுத் தூங்கு. வயித்து வலி சரியானப்புறம் ஆறுமணிக்கு மேல போகலாம். சரியா?”-ன்னாரு.

எவ்வளவு நாசூக்கா ஆப்பு வக்கிறாரு..இப்படி வந்து எசகுபிசகா மாட்டிக்கிட்டமேன்னு யோசிச்சுக்கிட்டே நின்னேன். அவரு ஒன்னுமே நடக்காத மாதிரி கிளாஸ் நடத்த ஆரம்பிச்சுட்டாரு. இப்போ எப்படி ரிவர்ஸ் கியர் போடறதுன்னு முழிச்சுக்கிட்டே நின்னேன்.

அப்புறம்”சார்..”-ன்னேன். அடுத்து என்ன சொல்றதுன்னு தெரியலை.அந்த மௌனத்துக்கு அர்த்தம்’ஐயா..சாமீ.. என்னை மன்னிச்சு விட்றுங்க’-ன்னு அவரு புரிஞ்சுக்கிட்டாரு. “என்னப்பா..கிளாஸ்க்குப் போறயா?”ன்னாரு. என்ன இருந்தாலும் பெரிய மனுசன், பெரிய மனுசன் தான்னு நினைச்சுக்கிட்டு “சரி சார்”ன்னேன்.

சரி, பொழச்சுப் போன்னு விட்டுட்டாரு. பின்னங்கால் பொடதில அடிக்க, எங்க கிளாஸ்க்கு ஓடுனவன் தான். அப்புறம் இந்த வயித்து வலி நாடகத்தை அடியோட மறந்துட்டேன்.


இப்போ என் பையன் அதே பிட்டைப் போடவும் பழைய நினைப்பு பீறிக்கிட்டு வந்திடுச்சு. சபாஷ்டா மகனேன்னு பாராட்டிட்டு தங்கமணிகிட்ட “எம்மா, இவனுக்கு வயிறு வலிக்குதாம். இன்னைக்கு வேணா வீட்ல இருக்கட்டுமே?”-ன்னு சிபாரிசு பண்ணேன்.

கிச்சன்ல இருந்து பதில் வந்துச்சு. “மேலே விளக்கெண்ணெய் இருக்கு. எடுத்து ரெண்டு பேரு தொப்புள்ளயும் போட்டு ஊறவச்சு குளிங்க. எல்லா வயித்து வலியும் போயிடும்”

என்னடா மவனே இது..இதுக்கு என் ஹெட் மாஸ்டர்களே பரவாயில்லையே-ன்னு நினைச்சுக்கிட்டேன்.

அதுசரி, வயித்து வலி என் பையனுக்குத் தானே?...என் தொப்புள்ள ஏன் போடணும்?..அந்த விளக்கெண்ணெய் வாங்கி ஒரு வருசம் ஆகியும் காலியாகலை. அவன் தொப்புள்ள ஊத்துனா காலியாகாது..அதுக்கு நம்ம தொப்புள்தான் சரின்னு முடிவு பண்ணிட்டாங்களோ?


மேலும் வாசிக்க... "சார்...வயிறு வலிக்கு சார்!"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

24 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Sunday, August 11, 2013

தலைவா: பேராசைக்கும் சர்வாதிகாரத்திற்கும் நடுவே...!

தலைவர்ங்கிறது நாமா தேடிப்போற விஷயம் இல்லை, நம்மைத் தேடி வர்ற விஷய்ம். மக்கள் உங்களைக் கூப்பிடறாங்க, வாங்க - தலைவா பட டயலாக்.

து ஒரு கனாக்காலம். ஒரு நடிகர் விரும்பினால், தன்னை பெரிய தலைவா-வாக தன் படங்களின் மூலமாகவே கட்டமைத்துக்கொள்ள முடியும். கூடவே நிஜமான ஆளுமையும் இருந்தால், எம்.ஜி.ஆர் போல் மாபெரும் தலைவா-வாக ஆகவும் முடியும். இல்லையென்றால் சூப்பர் ஸ்டார் போல் கெத்துவிடாமல் பம்மிக்கொள்ளவும் முடியும், பெரிதாக இமேஜ் டேமேஜ் ஆகாமல் காத்துக்கொள்ளவும் முடியும். 

ஆனால் இப்போது அப்படியா? யாராவது தலைவன் என்று தன்னை மட்டுமல்ல தனக்குப் பிடித்த நபரைக் குறிப்பிட்டால்கூட, பிரச்சினை விஸ்வரூபம் எடுக்கும் நிலை. ‘அச்சங்கள் உன்னைக் கண்டு அச்சப்பட’ வைக்கும் வல்லமை இருக்கிறதா என்று நிழல் தலைவாக்கள் நிரூபிக்க வேண்டிய கட்டாயம் உடனே இங்கே உருவாக்கப்படுகிறது. விஸ்வரூபம் பிரச்சினையில் கமலுக்கு எழுந்த தார்மீக ஆதரவு, விஜய்க்கு எழவில்லை என்பது வருத்தத்திற்குரிய விஷயமே. ஆனால் அதற்குக் காரணம், விஜய்யின் வரலாறு அப்படி!

விஜய்க்கு அரசியல் ஆசை இருக்கிறதோ இல்லையோ, ஆனால் விஜய்யின் அப்பாவிற்கு அரசியல் வெறியே உண்டு என்பது அனைவரும் அறிந்தது தான். எனவே எம்.ஜி.ஆர் எப்படி தொடர்ச்சியாக தன் படங்களின் மூலமாக, தலைவா பிம்பத்தை உருவாக்கினாரோ, அதே போன்று இப்போதும் செய்து ஜெயிக்க முடியும் என்று அவர் நம்புகிறார்.

எனவே எப்போதெல்லாம் விஜய் ஹிட்ஸ் கொடுத்து, மக்கள் மத்தியில் ஒரு நல்ல பொழுதுபோக்கு நடிகராக செல்வாக்கு பெறுகிறாரோ, அப்போதெல்லாம் விஜய்யை தலைவராக கட்டமைக்கும் வேலைகளை எஸ்.ஏ.சி செய்வது வழக்கம். உதாரணமாக

பூவே உனக்காக - "மாண்புமிகு" மாணவன்
காதலுக்கு மரியாதை, நினைத்தேன் வந்தாய் , துள்ளாத மனமும் துள்ளும் - நெஞ்சினிலே, மின்சாரக்கண்ணா

குஷி, பிரியமானவளே, ஃப்ரெண்ட்ஸ் - தமிழன், புதிய கீதை

திருப்பாச்சி, போக்கிரி - வில்லு, வேட்டைக்காரன், சுறா

சிவப்பு நிறத்தில் உள்ளவை ரத்த சரித்திரங்கள் என்பது நீங்கள் அறிந்ததே. 

எம்.ஜி.ஆரை தலைவராகக் கட்டமைக்க உதவிய நாடோடி மன்னன், எங்க வீட்டுப்பிள்ளை போன்ற படங்களை இப்போதும் ரசித்துப்பார்க்க முடிகிறது. எங்க வீட்டுப் பிள்ளை படத்தை சிவாஜி ரசிகனாகிய நானே 10 தடவைக்கும் மேல் பார்த்திருக்கிறேன். ஆனால் விஜய்யை தலைவராக ஆக்க முயலும் ‘வில்லு-சுறா’ வகையறாக்களை விஜய் ரசிகர்களே கூட மீண்டும் பார்ப்பார்களா என்பது சந்தேகம் தான்.

எனவே எம்.ஜி.ஆர். காலம் முடிந்துவிட்டது என்று இப்பொழுதாவது விஜய்யும் அவர் தந்தையும் உணர்ந்துகொள்ள வேண்டியது அவசியம். தலைவா  படத்திற்குத் தடை என்றதும் கொடநாட்டிற்கே காவடி எடுத்து ஓடுவதும், அங்கே காத்துக்கிடப்பதும் தலைமைப்பண்புள்ள ஒருவர் செய்யும் வேலை தானா என்ற விஜய்யே யோசிக்கட்டும். விஸ்வரூபம் பிரச்சினையில் நீதிமன்றம்+மீடியா துணையுடன் கமல் எபபடி தலைமைப் பண்புடன் பிரச்சினையை 100கோடி வசூலா மாற்றினார் என்று விஜய் புரிந்து கொள்வது நல்லது.

பஞ்ச் டயலாக் பேசிக் கொல்லாத, அரசியல் ஆசைக்கு அடித்தளம் போடாத விஜய் படங்களை எல்லாருமே விரும்பிப் பார்க்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை. எனவே முதல்வர் எனும் பேராசையை விட்டுவிட்டு, விஜய் இனிமேலாவது நல்ல கமர்சியல் படங்களைக் கொடுக்க முன்வரட்டும். இல்லை, நான் முதல்வர் ஆகியே தீருவேன் என்றால், இது நல்ல வாய்ப்பு. மக்கள் மன்றத்தில் வாய் திறந்து, இந்தப் பிரச்சினையை துணிச்சலாக எதிர்கொள்ளட்டும். 

நிஜத்தில் எந்தவொரு அரசியல் பிரச்சினை பற்றியும் உறுதியான நிலைப்பாடு இல்லாமல், அரசியல்வாதிகளை நேரடியாக எதிர்கொள்ளும் துணிச்சலும் இல்லாமல், நான் தான் வருங்கால முதல்வர் என்று யார் சொன்னாலும் அது கேலிக்குரிய விஷயமே. இது தகவல் தொழில்நுட்பக் காலம். எல்லோரின் முகமூடியும் முகநூலில் நொடியில் கிழித்துத் தொங்கவிடப்படும் காலம். இனிமேல் சினிமாக்களின் மூலம் மட்டுமே இமேஜ் பில்டப் பண்ணலாம் என்பது கனவே. எனவே விஜய், தன் அரசியல் ஆசைக்காக தயாரிப்பாளர் தலையில் மிளகாய் அரைப்பது வீண்வேலை. அதை அவர் நிறுத்துவது அவசியம்.



இது ஒரு ஜனநாயகநாடு. இதில் விஜய் மட்டுமல்ல யாருக்குமே முதல்வராவது எனும் பேராசை வருவது சட்டப்படி தவறொன்றும் இல்லை. ஊர்க்குருவி பருந்தாக நினைக்கும் உரிமையை நம் ஜனநாயகம் தரவே செய்கிறது. ஆனால் அதற்காக, ஒரு படத்தையே தடை செய்வது சரி தானா என்பதும் நாம் யோசிக்க வேண்டிய விஷயம்.

போலீஸே தியேட்டர்களுக்கு போன் செய்து எங்களால் பாதுகாப்பு தரமுடியாது என்று சொல்வது எவ்வளவு அசிங்கமான விஷயம்? இது ஆட்சியாளர்களுக்கு பெருமை தரும் விஷயம் தானா? தலைவா விஷயத்தில் நடப்பது சர்வாதிகாரம் தவிர வேறொன்றும் இல்லை. விஸ்வரூபத்திற்குக் குரல் கொடுத்த அனைவருக்குமே தலைவாவிற்குக் குரல் கொடுக்கும் ஜனநாயகக் கடமை இருக்கிறது. விஜய்யின் நோக்கம், நமக்கு உவப்பானதாக இல்லையென்றாலும், அப்படி ஆசைப்பட அவருக்கு உள்ள உரிமையை நாம் மறுக்கலாகாது. 

விஜய்-தயாரிப்பாளர்-வேந்தர் மூவீஸ் என மூவருமே இந்த விஷயத்தில் உறுதியான நிலைப்படின்றி, பம்மிக்கிடந்தாலும், இந்த விஷயத்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டைக் கண்டிப்பதோடு, தலைவா படம் ரிலீசாக நம் தார்மீக ஆதரவைக் கொடுப்போம்.

டிஸ்கி: படம் பற்றிய நம் வெளிப்படையான கருத்திற்கு : தலைவா - திரை விமர்சனம்

 
மேலும் வாசிக்க... "தலைவா: பேராசைக்கும் சர்வாதிகாரத்திற்கும் நடுவே...!"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

22 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Friday, August 9, 2013

தலைவா : திரை விமர்சனம்

அதாகப்பட்டது... :
'வரும்..ஆனா வராது’ என்ற ரேஞ்சில் தமிழ்நாட்டில் வெளியாகாமல் இழுத்துக்கொண்டிருக்கும் படம், வெளிநாடுகளில் இன்று ரிலீஸ் ஆகிவிட்டது.
படம் எப்படி என்று பார்ப்போம், வாருங்கள்.
ஒரு ஊர்ல.....................:

பம்பாய் தாராவியைக் காத்து வந்த வேதா பாய்(வேலு நாயக்கர் வம்சம்?) மண்டையைப் போட, தமிழர்களைக் காக்கும் தலையாய கடமையை சத்தியராஜ் எடுத்துக்கொள்கிறார். அவர் மகன் விஜய் ஆஸ்திரேலியாவில் பத்திரமாக வளர்கிறார். ஒரு சந்தர்ப்பத்தில் விஜய் இந்தியா வர, சத்தியராஜ் கொல்லப்படுகிறார். தமிழர்களைக் காக்கும் கடமையை விஜய் ஏற்றுக்கொண்டாரா? கடமையில் ஜெயித்தாரா? ’தலைவா’ ஆனாரா என்பதே கதை.

உரிச்சா....:

படத்தின் முதல் பாதி முழுக்க ஆஸ்திரேலியாவில் ஜாலியாக நகர்கிறது. விஜய் நண்பர்களுடன் ‘தமிழ் பசங்க’ எனும் டான்ஸ் க்ரூப் வைத்திருப்பதும், கூடவே சந்தானம் இருப்பதும், அமலா பாலூ-வை சந்தானமும் லவ் பண்ணுவதுமாக ஓரளவு ஸ்மூத்தாகவே படம் போகிறது. அதிலும் கௌரவ வேடத்தில் வரும் சாம் ஆண்டர்சனின் போர்சன் கலக்கல். இந்தியாவில் சத்யராஜை வில்லன்கள் கொல்ல, அமலா பாலூ பற்றிய அதிரடி ட்விஸ்ட்டுடன் இண்டர்வெல்!

பிரச்சினை இரண்டாம்பாதியில் தான். சத்யராஜைக் கொன்ன, மக்களையும் இம்சை பண்ணும் வில்லனை உடனே போட்டுவிட்டால், படத்தை எப்படி வளர்ப்பது? எனவே தேவர் மகன் ஸ்டைலில் தலைவா பொறுப்பை விஜய் ஏற்றுக்கொள்கிறார். அப்புறம்...

அப்புறமென்ன, முஸ்லிம்களின் பிரச்சினையை தீர்க்கிறார். கிறிஸ்துவர்களின் பிரச்சினையைத் தீர்க்கிறார். ரவுடிகளை ஒழிக்கிறார். சட்டத்தால் தண்டிக்கப்பட முடியாத குற்றவாளிகளை தீர்த்துக்கட்டுகிறார். குழந்தைகளை காக்கிறார். பாட்டிக்கு உதவுகிறார். மொத்தத்தில் வேலு நாயக்கராக ஆவதை விட, எம்.ஜி.ஆராக ஆகிவிடத் துடிக்கிறார். நமக்குத் தான் கிர்ரென்று ஆகி விடுகிறது.

ஒரு யோக்கியன் என்னென்ன நல்ல காரியம் எல்லாம் செய்ய முடியுமோ, அத்தனையும் செஞ்சு காட்டியே தீருவது என கங்கணம் கட்டிக்கொண்டு கிளைமாக்ஸ் வரை சீன்களை அமைத்திருக்கிறார்கள். 

படம் முழுக்க தமிழ்நாட்டுக்கு வெளியே தான் நடக்கிறது. தமிழக அரசியல்/அரசியல்வாதிகள் பற்றி எவ்வித விமர்சனமும் படத்தில் இல்லை. அப்படி எதையும் எதிர்பார்த்து, ஏமாற வேண்டாம்!

விஜய் :

ஏனுங்கண்ணா..நல்லாத்தானே போய்க்கிட்டிருந்துச்சு. பில்டப் இல்லாம, பஞ்சர் டயலாக் இல்லாம நல்ல படங்களா பண்ணிக்கிட்டிருந்த மனுசன் மறுபடியும் ’அப்படி ’ ஆகிட்டாரே!!

முதல் பாதியில் டான்ஸில் கலக்குகிறார். அமலா பாலூவுடன் தனியே ஆடும் காட்சி அருமை. ஃபைட்டிலும் நல்ல சுறுசுறுப்பு. சத்யராஜ் இறக்கும் காட்சியில் கொடுத்த எக்ஸ்பிரசன்கூட நல்லாயிருந்தது. ஆனால்.............

வேணாங்கண்ணா...சூப்பர் ஸ்டாரே இப்போல்லாம் ‘வருவேன்..வந்துடுவேன்’ன்னு பூச்சாண்டி டயலாக் பேசறதில்லை. பாட்ஷா வந்து 18 வருசத்துக்கு மேல ஆகிடுச்சு. இன்னும் அதே டெம்ப்ளேட்ல, ரசிகர்களை உசுப்பேத்தி உசுப்பேத்தியே, பொதுமக்களான எங்க உடம்பை புண்ணாக்குறது சரியாங்கண்ணா?

மூணு படம் தொடர்ச்சியா ஓடிட்டாலே, முருங்கை மரம் ஏறிடுறீங்களே பாஸ்?..இந்த மாதிரி அரசியல்-பில்டப் ஆசைகளை எல்லாம் விட்டுட்டு, காவலன், நண்பன், துப்பாக்கி மாதிரி நல்ல கமர்சியல் படங்களைக் கொடுங்க பாஸு! முதல்ல உங்க அப்பாவை நீங்க டைவர்ஸ் பண்ணுங்க...அப்போத்தான் உருப்படுவீங்க!

அமலா பாலூ :
என்னடா இவன், அமலா பால்-ஐ அமலா பாலூன்னு எழுதறானேன்னு யோசிக்கிறீங்களா? என்னய்ய பண்றது? ‘விஜய் அமலா பாலை விரும்புகிறார்’னு எழுதுனா, குசும்பு பிடிச்சு ஆளுங்க  ஆபாசமா கமென்ட் போடுவாங்க. நமக்கு ஆபாசம்னாலே ஆகாது இல்லியா?

படத்தில் கதாநாயகியாக பெரிதாக வேலை இல்லை. ஆனாலும் கதையோட கூடிய ஒரு கேரக்டர் என்ற மட்டில் ஆறுதல். மற்றபடி ‘பெரிதாக சொல்லிக்கொள்ள ஏதுமில்லை’!

சந்தானம் :

வழக்கம்போல் நம்மை ரிலாக்ஸ் பண்ணுவது சந்தானத்தின் ஒன் லைனர்ஸ் தான்..’நான் சமைக்கிறேன்னாலே, எல்லார் நாக்குலயும் எச்சி ஊறும்’..........’எதுக்கு? காறித்துப்பவா?’ என சரளமாக அடித்து விளையாடுகிறார்.

ஹீரோயிண் இவரை லவ் பண்ணுவதாக நினைத்துக்கொண்டு, இவர் ஃபீல் பண்ணுவது வழக்கமான விஷயம் தான் என்றாலும், ரசிக்க முடிகிறது.

நெகடிவ் பாயிண்ட்ஸ் :

- படத்தின் நீளம்........மூணு மணி நேரம்!

- டைரக்டரின் பொறுப்பில்லாத்தனம். இரண்டாம்பாதி திரைக்கதையில் என்னென்னவோ நடக்கிறது. கிரைம் ப்ராஞ்ச் போலீஸுக்கு யூனிஃபார்ம் கிடையாது என்று தான் அறிந்திருக்கிறேன். இதில் விஜயடிஸ்கோ சாந்தி யூனிஃபார்ம் மாட்டிக்கொண்டு டமக்டுமுக் என்று நடக்கிறார். (அவர் யாரென்பது சஸ்பென்ஸ்!)

- மும்பையில் எல்லாருமே சரளமாக தமிழ் பேசுவது.

- ரசிகர்களின் ரசனை பலமடங்கு மாறிவிட்ட நிலையில், இன்னும் எம்.ஜி.ஆர் ஸ்டைலில் காட்சிகள் வைத்திருப்பது

- வழக்கமாக எந்த கேரக்டர் கொடுத்தாலும் பின்னி எடுக்கும் சத்தியராஜ், இதில் சவசவவென்று வந்து போகிறார். விஜய்யை சந்தித்து, ‘விளக்கும்’ காட்சியில் யார் வீட்டு இழவோ எனும் வசன உச்சரிப்பு.

- அறிஞர் அண்ணாவின் பெயரை மறைமுகமாக சத்திய ராஜூக்கு வைத்தது. மக்கள் அவரை அண்ணா..அதாவது அண்ணன் என்று அழைப்பதால், அவர் அண்ணாவாம். விஜய் அண்ணாவின் வாரிசாம். ஆப்பசைத்த குரங்கு கதை தெரியுமா?

-இரண்டாம் பாதியில் திடீரென ஒரு சேட்டு ஃபிகரை கொண்டுவந்து, படுத்தியது. (படுத்தது இல்லை பாஸ்..கரெக்டாப் படிங்க!)

பாஸிடிவ் பாயிண்ட்ஸ்:


- நீரவ் ஷாவின் நீட்டான ஒளிப்பதிவு

- சந்தானம் & சாம் ஆண்டர்சன் காமெடிகள்.

- வாங்கண்ணா பாடல்

- விஜய்யின் கூல் பெர்பார்மன்ஸ்


- ’மம்மி’ படத்திற்குத் தரும் இலவச பில்டப்!

பார்க்கலாமா? :

தயாரிப்பாளர்......?

விஜய் ரசிகர்கள் மட்டும்...............பார்க்கலாம்!

மேலும் வாசிக்க... "தலைவா : திரை விமர்சனம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

41 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Monday, August 5, 2013

முதல் கன்னி அனுபவம் (தொடர் பதிவு)

நம்ம தமிழ்வாசி பிரகாஷ் முதல் கன்னி அனுபவம்னு ஒரு தொடர் பதிவு போட்டிருந்தாரு. நானும் வழக்கம்போல தலைப்பைப் பார்த்தேன், நேரா ஸ்க்ர்ரோல் பண்ணி கீழே பார்த்தேன். அஞ்சு பேரை தொடரக் கூப்பிட்டிருந்தாரு. ‘என்னடா இது..இவ்ளோ முக்கியமான விஷயத்தை எழுத நம்மளைக் கூப்பிடாம விட்டுட்டாரே’ன்னு கடுப்பாகி கமெண்ட்லயே ‘ஏன்யா என்னை அழைக்கலை?’ன்னு கேட்டேன்.

அவரும் பரிதாபப்பட்டு நம்மளையும் சேர்த்துட்டு, மெயில் அனுப்புனாரு.மெயில் சப்ஜெக்ட்டைப் பார்த்தா ‘முதல் கணிணி அனுபவம்’னு போட்டிருந்துச்சு. என்னடா இதுன்னு அவர் ப்ளாக்ல போய்ப் பார்த்தா, அட..நாந்தான் அவசரத்துல தப்பாப் படிச்சிருக்கேன். அது கன்னி அனுபவம் இல்லை, கணிணி அனுபவம். ஓகோ..அதனால தான் இவன் அதுக்கு சரிப்பட்டு வர மாட்டான்னு நம்மளைக் கூப்பிடலைன்னு புரிஞ்சுச்சு. அதுக்காக நாம எடுத்த காரியத்தை பாதில விட முடியுமா? அதனால...........


இப்போல்லாம் மொபைல்லயே அவனவன் பிட்டுப்படம் ஃப்ரீயா பார்த்துட்டுத் திரியறான். ஆனா எங்க(!) காலத்துல அப்படி இல்லை. ஒரு ஸ்டில்லுக்கே நாயா அலையணும். அப்படியே ஒரு நஞ்சு போன புக் கிடைச்சு, பார்த்தாலும் அது ஆணா, பொண்ணான்னு டவுட் வர்ற ரேஞ்சுல மூஞ்சி இருக்கும். அப்போல்லாம்(யோவ், அப்போ..அப்போன்னா எப்பய்யான்னு கேட்கிறீங்களா? நான் ஸ்கூல்ல படிக்கும்போதுங்க. எத்தனாவது வகுப்பு படிக்கும்போதுன்னு சொன்னா இமேஜ் டேமேஜ் ஆகிரும். அதனால அது மட்டும் ரகசியம்!)..சரி, அப்போல்லாம் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உள்ள ஆறு வித்தியாசங்கள் என்னன்னு கண்டுபிடிக்கிற அறிவுத்தாகத்தோட அலைஞ்சோம். 

அப்போல்லாம் (மறுபடியுமா..?) வீடியோ கேசட் தான். சிடி வராத காலம். பசங்கள்லாம் ஆளுக்கு கொஞ்சம் காசு போட்டு 100 ரூபாய்க்கு டிவியும் ஸ்பெஷல் கேசட்டும் வாங்கிட்டு வருவாங்க. ஏதாவது தோட்டத்து மோட்டார் ரூம் கதவை உடைச்சோ/சாவியை திருடியோ ஷோ நடக்கும். அங்க தான் என் செட் பசங்கள்லாம் முக்தி அடைஞ்சாங்க.

ஆனா என்னை மட்டும் சேர்த்துக்கவே இல்லை. ஏன்னா நான் நல்லா படிக்கிற பையனாம், கெட்டுப் போயிடுவேனாம். ;நல்லாப் படிக்கிறது ஒரு குத்தமாய்யான்னு நினைச்சுக்கிட்டு படிப்பை நிறுத்திட்ட சீனியர் அண்ணன்ககிட்ட சிபாரிசுக்குப் போனா, படிக்கும்போது இதெல்லாம் பார்க்கலாமான்னு கேட்பாங்க. ’இதுக்கெல்லாம் ஸ்கூல்ல போயி டிசி வாங்கிட்டு வர முடியுமா? ஒரே ஒரு தடவை பார்த்துக்கிடுதேம்யா’-ன்னு கெஞ்சினாலும் ..ம்ஹூம்..ஒன்னும் கதை ஆகலை.

அப்படி நான் காய்ஞ்சு கருவாடா திரிஞ்ச நேரத்துல,  மெட்ராஸ்ல (அப்போல்லாம்..!) இருந்து ஒரு பொண்ணு காலேஜ் லீவுக்கு, எங்க ஊருல இருந்த சொந்தக்காரங்க வீட்டுக்கு வந்துச்சு.........அங்காடித்தெரு படத்துல வந்த அஸ்வினி-குஸ்வினி மாதிரியே இருக்கும்...ம்.......இப்பத்தான் இடைவேளை!


என் பதிவை ரெகுலராப் படிக்கிறவங்களுக்கு ஒரு விஷயம் தெரிஞ்சிருக்கும். புதுசா படிக்கிறவங்களுக்காக அந்த முக்கியமான விஷயத்தை சபையில மறுபடி பதிவு செய்யறேன். அதாகப்பட்டது, அப்போல்லாம்(!) சிக்கன் சாப்பிட்டா, அடுத்த நாளே வயித்தைக் கலக்கி டர்ர் ஆகிடும். கடுப்பாதீங்க யுவர் ஆனர், அஸ்வினி மேட்டர்க்கு வர்றேன்.

அப்படி ஒரு நன்னாள்ல வயித்தைக் கலக்கி, கம்மாய்க்கு ஓடுனேன்.ஆக்சுவலா நடந்தேன்.ஏன்னா, கம்மாய்க்குப் போற வழில ரெண்டு குடிதண்ணி பம்பு உண்டு. அங்க எப்பவும் ஏதாவது ஒரு அத்தை பொண்ணு நின்னுக்கிட்டிருக்கும். அப்போ வேகமா ஓடுனா கேவலமில்லையா..அதனால கலவரத்தை வெளில காட்டிக்காம கெத்தா நடப்பேன். ஆனா அதுலயும் ஒரு சொகம் உண்டுய்யா..அப்படி நடக்கும்போது வயித்துக்குள்ளே...அஸ்வினி..அஸ்வினி..ஓகே, மேட்டருக்கு வருவோம்.

அது குற்றால சீசன் நேரம். எப்பவும் மேகமூட்டமா, சிலுசிலுன்னு, சில நேரம் சாரலோட கிளைமேட் ஜில்லுன்னு இருக்கும். அந்த ஜில் காத்தை அனுபவிச்சுக்கிட்டே கம்மாய்க்குள்ள இறங்கினேன்....பதிவுக்குத் தேவைப்படறதால் எங்க கம்மாயைப் பத்தி கொஞ்சம் சுருக்கமா விவரிக்கிறேன். வாசக/அஸ்வினி அன்பர்கள் பொறுத்தருளவும்.

எங்க ஊரு கம்மா நல்லா பெருசா இருக்கும்(ம்க்கும்!). ஆனா பெரும்பாலும் அங்க தண்ணியே இருக்காது. கம்மாய்க்குள்ள இறங்கி, முக்கா கிலோமீட்டர் நடந்தா, முன்னாடி தோண்டி விடப்பட்ட, ஒரு கல் குவாரி வரும். அது ரெண்டு ஆள் உயர குளம் மாதிரி இருக்கும். அங்க எப்பவும் தண்ணி இருக்கும். அதனால அதைச் சுத்தி வேலி மரம். பொதுவா நாங்க அந்த வேலியைச் சுத்தித் தான் உட்காருவோம். (ச்சே..ஒரு அஸ்வினிக்காக என்ன கர்மத்தையெல்லாம் படிக்க வேண்டியிருக்கு!). அப்படி நானும் உட்கார்ந்த உடனே கலகலன்னு...ச்சே, அதில்லைய்யா..கலகலன்னு பொம்பளைங்க சிரிப்புச் சத்தம்.

எங்கடான்னு பதறிப்போய்ப் பார்த்தா, கல்குவாரிக்குள்ள இருந்து!(உய்..உய்..அஸ்வினி வந்தாச்சுடோய்!). உள்ளே பார்த்தா........ஆத்தீ!...அந்த மெட்ராஸ் பிள்ளை, அந்தப் பிள்ளையோட அம்மா..கூடவே போனஸா இன்னொரு பிள்ளை(அது யாருன்னு தெரியலை) குளிச்சுக்கிட்டு இருக்காங்க. சினிமால பார்த்திருப்பீங்களே,அத் மாதிரி நெஞ்சு(க்கு மேல) வரைக்கும் பாவாடையை ஏத்திக்கட்டி!..’அடடா..இப்படி வந்து தெரியாம வந்து உட்கார்ந்துட்டமே..இது தப்பாச்சே..எழுந்திருப்போம்’னு நினைச்சேன்..சரி,சரி,..நீங்க நம்ப மாட்டீங்க, உண்மையைச் சொல்லிடுதேன். எழுந்திருப்போம்னு நான் நினைச்சாக்கூட முடியாத அளவுக்கு, இங்க பிச்சுக்கிட்டுப் போய்க்கிட்டிருந்துச்சு.
அட சண்டாளிகளா..இது எப்பேர்ப்பட்ட குளம் தெரியுமா? இங்க டெய்லி எத்தனை பேரு காலைல வந்து உரம்/யூரியா சப்ளை பண்ற இடம் இது..இதுல போய்க் குளிக்குறீங்களே..ஒருவேளை சென்னை கூவத்துல குளிச்சு வளர்ந்தீங்களா?-ன்னு நான் மனசுக்குள்ள புலம்பிக்கிட்டே எழுந்திரிக்க முடியாம போய்க்கிட்டிருந்தப்போ, அந்த அஸ்வினி ஈரப் பாவாடையோட தண்ணியை விட்டு வெளில வந்துச்சு.

வெளில வந்த அஸ்ஸு, டக்குன்னு கட்டியிருந்த ஒத்தைப் பாவாடையைவும் அவுத்துடுச்சு. பப்பரப்பான்னு நிக்குது. குற்றால காத்துல உடம்பெல்லாம் புல்லரிக்குது.(எனக்கில்லைய்யா..அந்தப் புள்ளைக்கு!). ’அப்படியே’ ஸ்லோமோசன்ல நடந்து, ’அப்படியே’ துண்டௌ எடுத்து, ’அப்படியே’ துவட்டிட்டு, ’அப்படியே’ துண்டை கீழ போட்டுட்டு, ’அப்படியே’ காத்து வாங்கிட்டு நின்னுச்சு.

ஒரு ஃபோட்டோவுக்கே நாயாப் பேயா அலைஞ்ச எனக்கு, இப்படி ஒரு பொண்ணை, இப்படிப் பார்த்தா என்னாகியிருக்கும்னு யோசிச்சுப் பாருங்க. கரெக்ட், யூரின் டேங்க்ல இருந்து எல்லா டேங்கும் வெடிச்சுச் சிதறிடுச்சு.

அப்புறம் தான் எனக்கு உஷார் வந்து, என்னோட நிலைமை உறைச்சது. ‘அடடா..தண்ணி போச்சே!’. எப்படியாப்பட்ட குளத்தை இப்படி சோப்பெல்லம் போட்டு நாறடிச்சுட்டாங்களே..இப்போ நம்ம என்ன செய்ய? இப்படியே நடந்து வீட்டுக்குப் போறதா..அதுவும் வாத்து மாதிரி காலை அகட்டி அகட்டி...வழில அத்தை பொண்ணுங்க வேற இருந்துட்டா..ப்ச், தண்ணி போச்சே!

எங்க ஊருக்கு அடுத்த ஊருல இதே மாதிரி குளம் ஒன்னு உண்டு. மெதுவா நகர்ந்து நகர்ந்து, அங்க போயி...யோவ், அஸ்வினி என்னாச்சுய்யான்னு கேட்கறீங்களா? அது அப்பவே ட்ரெஸ் மாட்ட ஆரம்பிச்சிருச்சு.அதுக்கு அப்புறமும் ஒரு நல்ல பையன் அங்க நிப்பானா?

ஆனா இந்த விஷயத்தை நான் என் நண்பர்கள் யார்கிட்டயும் சொல்லலை. ஏன்னா, என்ன இருந்தாலும் இது பெண்ணோட மானப்பிரச்சினை..சரி,சரி, உண்மையைச் சொல்லிடுதேன்.

இந்தப் புள்ளை இன்னைக்குக் குளிக்குன்னா நாளைக்கும் இங்க குளிக்கலாம். இந்த வருசம் லீவுக்கு வந்திருக்குன்னா, அடுத்த வருசமும் லீவுக்கு வரலாம். எதுக்கு வீணா நல்லா ஓடற படத்து ரீலை, நாமளே அக்கணும்? அதான் இப்போ வரைக்கும் ஒருத்தருக்கும் சொல்லலை.

ஆனா அடுத்த நாளும் அஸ்ஸு வரலை. அடுத்த வருசமும் அஸ்ஸு வரலை.ச்சொ..ச்சொ..ச்சொ!

முக்குளிச்சு நான் எடுத்த முத்து சிப்பி நீதானே
முத்தெடுத்து நெஞ்சுக்குள்ளே பத்திரமா வச்சேனே
வச்சது இப்ப காணாம நானே தேடுறேன்
ராத்திரியில் தூங்காம ராகம் பாடுறேன்!

ஓகேய்யா...தொடர்பதிவுன்னா அடுத்து அஞ்சு பேரை கோர்த்து விடணுமாமே..யாருக்குய்யா இதைத் தொடர தில்லு இருக்கு? கமான் டெல் மீ!

மேலும் வாசிக்க... "முதல் கன்னி அனுபவம் (தொடர் பதிவு)"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

22 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.