Showing posts with label நகைச்சுவை. Show all posts
Showing posts with label நகைச்சுவை. Show all posts

Sunday, June 17, 2018

காலா : ஒரு வித்தியாசமான டான்


பாஸ், இந்த படத்துல நீங்க ஒரு டானா வர்றீங்க.
போன படத்துலயும் அப்படித்தானப்பா வந்தேன்?
ஆமாம்..ஆனால் இதுல வித்தியாசமான டானா வர்றீங்க.
எப்டி..எப்டி?
வில்லன் உங்களையும் உங்க லவ்வரையும் கலவரம் செஞ்சு பிரிச்சிடுறான்.
இப்போ நான் வில்லனை பிரிபிரின்னு பிரிக்கணும்..அதானே?
இல்லை பாஸ்..நீங்க வேற பொண்ணைப் பார்த்து கல்யாணம் பண்ணி, குழந்தை குட்டின்னு செட்டில் ஆகிடுறீங்க.
ஏன்?
ஏன்னா நீங்க ஒரு வித்தியாசமான டான்.
அப்புறம்?
வில்லன் உங்க அப்பாவை கொன்னுடறான்
ஹா..இப்போ நான் பொங்கி எழுந்து சும்மா..
பாஸ்...பாஸ்..அதெல்லாம் இல்லை. நீங்க உங்க ஏரியா பொடிசுகளோட கிரிக்கெட் விளையாடி க்ளீன் போல்டு ஆகிறீங்க.
ஏன்பா அப்படி?
ஏன்னா நீங்க ஒரு வித்தியாசமான டான் பாஸ்.
இப்பவே கிர்ருங்குதே தம்பி..
இதுக்கே அசந்துட்டா எப்படி சார்..இன்னும் ஸ்பெஷல் ஐட்டம் எல்லாம் வச்சிருக்கேன். வில்லன் இப்போ உங்க ஏரியா நிலத்தையெல்லாம் அபகரிக்க வர்றான்.
நான் ஒரு வீச்சரிவாளோட போய் அவனை..
நோ..நோ..வில்லனை நீங்க இப்போ ஒன்னும் செய்யக்கூடாது பாஸ்.
ஏன்?
ஏன்னா நீங்க ஒரு வித்தியாசமான டான்.
ஹய்யோ..சரி சொல்லு.
அப்புறம், வில்லன் உங்க மூத்த மகனைக் கொன்னுடறான்.
இது சூப்பர் தம்பி...என் பிள்ளை மேலயா கைவச்சேன்னு துப்பாக்கியோட போய்...
பாஸ்...அதெல்லாம் இல்லை பாஸ்.
அதுவும் இல்லையா? ஏன்ன்ன்?
ஏன்னா நீங்க ஒரு......நீங்க ஒரு வித்தியாசமான டான். மறந்துட்டீங்களா பாஸ்?
ஏம்பா, வித்தியாசம் தான் இருக்கு. டானைக் காணோம்?
பொறுங்க பாஸ்..வில்லன் உங்க பொண்டாட்டியைவும் கொன்னுடறான்.
அவளையுமா? இப்பவும் நான் சும்மா இருக்கணும்...அதானே?
இல்லை பாஸ்...ஸ்லோமோசன்ல வில்லன் வீட்டுக்குப் போறீங்க.
ஹாஹா...தியேட்டர்ல சும்மா விசில் பறக்குது..
ஆமாம் பாஸ்...போய் வில்லனைப் பிடிச்சு ‘கறுப்பு உழைக்கும் வர்க்கத்தின் கலர்’ன்னு சொல்லிட்டு வந்துடறீங்க.
ஏன்..ஏன்...ஏன்?
ஏன்னா நீங்க ஒரு வித்தியாசமான டான். அப்புறம், வில்லன் அடியாட்களை அனுப்பி, உங்க வீட்டைக் கொளுத்தி, ஏரியாவைக் கொளுத்தி உங்க உயிர் நண்பனையும், இளைய மகனையும் மண்டையைப் பொளந்துடறான்.
இப்போ என்ன, நான் உண்ணாவிரதம் இருக்கணுமா?
இல்லை பாஸ்...அந்த சிரமம்கூட உங்களுக்கு வேண்டாம்னு, வில்லன் ஆளுங்க உங்களையும் கொன்னுடறாங்க.
என்னையுமா?
ஆமா பாஸ்.
தம்பி, என்னையுமா தம்பி?
ஆமா பாஸ்
நாந்தான் ஒன்னுமே செய்யலையேப்பா?
ஆமா பாஸ்...ஆனாலும் நீங்க ஒரு வித்தியாசமான டான் இல்லையா? அதனால கொன்னுடறாங்க.
ஆஹாங்...அப்புறம்?
வில்லன் மறுபடியும் நிலத்தை அபகரிக்க வர்றான்..மக்கள் பொங்கி எழுந்து, வில்லன் மூஞ்சில கோலமாவைப் பூசி, அவனைக் கொன்னுடறாங்க பாஸ்.
மக்கள் என்ன தம்பி செய்யறாங்க?
வில்லனைக் கொன்னுடறாங்க சார்.
டேய்...இதைத் தானடா நான் முதல்லயே செய்யறேன்னு சொன்னேன். நான் ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் இதே மக்களே முதல் சீன்லயே இதை செஞ்சிருப்பாங்களேடா...அப்படிப் பண்ணியிருந்தால், என் பொண்டாட்டி, பிள்ளைகள், ஆடியன்ஸ்ன்னு எல்லாருமே தப்பிச்சிருக்கலாமே? ஏண்டா இப்படிப் பண்ணே?
அதான் சொன்னேனே பாஸ்...நீங்க ஒரு வித்தியாசமான டான்னு..அதனால தான்!!
மேலும் வாசிக்க... "காலா : ஒரு வித்தியாசமான டான்"

Saturday, October 28, 2017

ஹரஹர மகாதேவகி - விமர்சனம் (18 +)


எச்சரிக்கை : 18+ படத்திற்கு மட்டுமல்ல, விமர்சனத்திற்கும்!

 ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு சுஹானுபவத்துக்கு ரெடி ஆவோம்னு நானும் என் தம்பியும் இந்த படம் பார்க்க உட்கார்ந்தோம். அப்பவே தம்பிகிட்டே சொன்னேன், ‘அடேய் அம்ப,.நம்ம சென்சார்லாம் கெட்டவா..அதனால நோக்கு இந்த படம் பிடிக்காது’ன்னு.

படம் ஓப்பன் பண்ண உடனே, ஹீரோயினை ஓப்பன் பண்ணுவான்னு பார்த்தால், ஹீரோவை ஓப்பன் பண்ணிட்டா! அதிலேயே துடிப்போட இருந்த தம்பி, துவண்டு போய்ட்டன்! இழுத்த இழுப்புக்கெல்லாம் வர்ற நல்ல தம்பி, இப்படி இடிஞ்சு போய்ட்டானேன்னு நேக்கு ஃபீல் ஆகிட்டது.

இருந்தாலும், டைரக்டர் தம்பி ஏதோ சொல்ல வாராளேன்னு பொறுத்துண்டு பார்த்தேன். லோகத்துல சிலபேருக்கு ஸ்டார்ட்டிங் ட்ரபுள் உண்டுன்னு என் சிஷ்யா உங்களுக்கு நல்லாத் தெரியும். இந்த டைரக்டர் தம்பிக்கும் அப்படி ஒரு பிரச்சினை இருக்கும் போல! காமெடி படம்னு சொல்லிண்டு ரொம்ப நேரம் மொக்கை போட்டுண்டு இருந்தா. சரி, முன்னாடி சொதப்பினாலும், பின்னாடி பெருசா பண்ணுவான்னு பொறுத்துண்டேன்.

ஒரு அரைமணிநேரம் தட்டுத்தடுமாறுன டைரக்டர் தம்பி, அப்புறமா ஓரளவு வீறுகொண்டு எழுந்துட்டா.

படத்துல கவர்ன்மெண்ட்டு, ‘பேக் இருக்கிறவா..இல்லாதவா’ன்னு பாகுபாடு பார்க்காமல் எல்லா லேடீஸ்க்கும் இலவச அழகு சாதன பேக் கொடுக்கிறா. அதுல ஒரு பேக்ல வில்லன் அபிஷ்டு‘பாம்’ வைக்க ப்ளான் செஞ்சுடறான்.
ஹீரோ, ஹீரோயினோட ஹார்ட்டையும் ப்ரேக் பண்ணிட்டதால, அவா லவ்வும் ப்ரேக் அப் ஆயிடுது. அதனால ‘தூக்கிப்போட்ட காண்டத்தை தவிர, எனக்குச் சொந்தமான மீதி சாமானை தூக்கிண்டு வாடா’ன்னு ஹீரோயின் சொல்லிடறா. ஹீரோ அதே இலவச பேக்ல அதை அள்ளிப் போட்டுண்டு போறான்.

கள்ளநோட்டு மாத்துற ஒரு அம்பி, ஒரு கோடி ரூபாய் நோட்ட, அதே மாதிரி பேக்ல வச்சுண்டு சுத்திண்டு வர்றான்.

ஒரு ஆண்ட்டியை விட்டுட்டு, அவா குழந்தையை தூக்குன ஒரு பாவி, ஒரு கோடி ரூபா கேட்டு மிரட்டுண்டு இருக்கான். அந்த பணமும் அதே மாதிரி பேக்ல போறது. இந்த நாலு பேக்கும் மாறிப் போயிடறது.

வெஜ்ஜா செய்ய வேண்டிய கதையை, வச்சு செஞ்சிருக்கா. ஒரு சாதாரண காமெடிப் படத்துல கொஞ்சம் ‘பாம்பு..கடவுளே..வாட்சப் ஜோக்’ன்னு நிரப்பி, இதான் ரொமாண்டிக் காமெடின்னு சொல்றா. என் தம்பி மாதிரி ரொம்ப எதிர்பார்க்காமல் உட்கார்ந்தேள்னா, ஒரு நல்ல பஜனை செஞ்ச திருப்தி கிடைக்கும்.

படத்துல பஜனைப் பாட்டு எல்லாம் நல்லா போட்டிருக்கா. ஆயா சோத்துல, ஹரஹரன்னு பாட்டு எல்லாம் தேவாமிர்தம்!

டைரக்டர் தம்பிக்கு ஸ்வாமிஜியோட அட்வைஸ் என்னன்னா........................

எனக்குத் தெரிஞ்ச ஸ்வாமி, அதிகாலைல பத்துக்குப் பத்து ரூம்ல மாமியோட பஜனைக்கு ரெடி ஆனார். மாமியும் பழம், தட்டு, பூவோட பூஜைக்கு ரெடி ஆனா. ஸ்வாமி, பழத்தை உருட்டுறார், தட்டை உருட்டுறார். ஆனாலும் அவரால மணியை மட்டும் அடிக்கவே முடியல; வயசாயிடுச்சு, இல்லியா! மாமியும் ஸ்வாமிக்கு கை கொடுத்துப் பார்க்கிறா. வாய்ப்பாட்டு பாடியும் பிரயோஜனம் இல்லேன்னா பார்த்துக்கோங்க. பொறுத்துப் பொறுத்துப் பார்த்து, பொங்கி எழுந்த மாமி சொன்னா : ’உம்ம மணியை விட்டுட்டு, என் மண்டையை சொறிஞ்சுவிடும்; இதுக்கு அதுவே நல்லா இருக்கும்’னு!

டைரக்டர் தம்பியும் டபுள் மீனிங்கை ஊறுகாய் போல தடவினதுக்குப் பதிலா, சுத்தமான வெஜ் காமெடி படத்தையே கொடுத்திருந்தால், அதுவே நல்லா இருந்திருக்கும்.

ஹரஹர மகாதேவகி!
மேலும் வாசிக்க... "ஹரஹர மகாதேவகி - விமர்சனம் (18 +)"

Monday, June 19, 2017

டுபாக்கூர்களிடம் ஜோசியம் பார்க்கப் போகலாமா?


பெரும்பாலான ஜோதிடர்கள் அரைகுறைகள், டுபாக்கூர்கள். அதுபற்றிய பதிவு இது.

நான் எப்போது இந்தியா போனாலும் செய்வது, ஒரு ஜோதிடரைப் பார்த்துவிடுவது. அதை விட சிறந்த பொழுதுபோக்கு இல்லையென்றே சொல்வேன். நானே ஒரு அரைகுறை ஜோசியன் என்பதால் ஆரம்பித்த விளையாட்டு இது.

ஒருவன் ஜோசியம் பார்க்க வருகிறான் என்றால் அவனுக்கு ஏதோவொரு பிரச்சினை என்பது ஜோதிடர்களின் திடமான நம்பிக்கை. படிப்பு, வேலை, கல்யாணம், பணம், உடல்நலம் என ஏதோவொன்றில் சிக்கல் என்று அவர்களாகவே நினைத்துக்கொள்கிறார்கள். நான் அப்படி நாறிக்கிடந்த காலங்களில் ஜோதிடம் பக்கம் திரும்பியதில்லை. இப்போது ஒரு ஹாபியாக ஜோதிடரை பார்ப்பது என் வழக்கம். சிலநேரங்களில் வீட்டு அம்மணியும் வேடிக்கை பார்க்க வருவதுண்டு.

இப்படி ஒரு கிறுக்கன் சும்மா வருவான் என்று அவர்கள் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள் போலும். ஜாதகத்தை பவ்யமாக கையில் கொடுத்துவிட்டு எதிரே அமர்வேன். ஜோதிடர் கொஞ்ச நேரம் ஜாதகத்தையும் என்னையும் எடை போடுவார். பொதுப்பலன்களுடன் ஜோதிடர் ஆரம்பிப்பார்.

‘இந்த ஜாதகர் கடின உழைப்பாளி’ என்று அவர் ஆரம்பிக்கவும் தங்கமணி என்னைப் பார்ப்பார். ‘இந்த விஷயம் உங்க மேனேஜருக்குத் தெரியுமா?’ என்பது பார்வையின் பொருள்! இந்த பார்வைப் பரிமாற்றம் ஜோதிடரை பீதியாக்கும். அடுத்த அஸ்திரத்தை எடுத்துவிடுவார். ‘ஏழில் சந்திரன்..அழகான, லட்சணமான மனைவி அமைவாள்’ என்பார். நான் ‘ஆஹான்’ என்றபடியே வீட்டுக்காரம்மாவை திரும்பிப்பார்ப்பேன். அவரோ ‘சரி, சரி...தானிக்குத் தீனி சரியாப் போச்சு’ என வேறுபக்கம் திரும்பி சுவரை வெறிப்பார். இதிலேயே ஜோதிடர் வெறுத்துவிடுவார்.

அடுத்து கொஞ்ச நேரம் மயான அமைதி நிலவும். கட்டத்தை ஸ்டடி பண்ணுகிறாராம். சரி செய்யட்டும் என காத்திருப்போம். ஜோதிடர் கணக்குகளில் ஆழ்ந்திருப்பார். ‘இவனைப் பார்த்தால் படிக்கிற குழந்தையாத் தெரியலை. கழுத்தில் செயினையும் தொப்பையையும் பார்க்கும்போது வசதியாத்தான் தெரியுது. கல்யாணமும் ஆகித் தொலைஞ்சிருக்கு. குழந்தைங்க...ஆங்’ என்று நிமிர்வார். ‘ஆண் குழந்தை இருக்க வேண்டுமே?’ என்று பாசிடிவ்வாக ஆரம்பிப்பார். ‘ஆமாம்...இரண்டு பசங்க’ என்பேன். ‘அப்போ அதுவும் பிரச்சினை இல்லையா?..அட நாதாரிகளா’ என ஜோதிடர் மனதில் திட்டுவது நன்றாகவே கேட்கும்.

’பத்தாம் அதிபதி ஏழில்...தொழில்காரகனைப் பார்க்கிறான். சுக்கிரனோடு...’எனும் ரேஞ்சில் ஏதோ தொழில் கட்டம் பற்றி சொல்லிவிட்டு முகத்தைப் பார்ப்பார். உஷாராகி ரியாக்சன்களையெல்லாம் ரிமூவ் செய்து, க்ளீன் சிலேட்டாக முகத்தைக் காட்டுவேன். வீட்டுக்காரம்மாவோ எப்போதும் பூர்ண சந்திரன். ‘இப்படி உட்கார்ந்தா எப்படிடா...இப்போ இவனுக்கு தொழில்ல பிரச்சினைன்னு சொல்றதா, இல்லேன்னு சொல்றதா?’ என ஜோதிடரே கடுப்பில் கன்ஃபியூஸ் ஆவார்.

‘சரி கழுதை அதை விடுவோம்...இப்போ இவனுக்கு 37 வயசுன்னா அப்பா-அம்மா ஓல்டு பீப்பிள்..பிடிச்சுட்டேன்...அவங்கள்ல யாருக்கோ உடம்பு சரியில்லை’ என தெளிவாகி ஜோதிடர் அடுத்த பாயிண்டைப் போடுவார். ‘அப்பா - அம்மா ரெண்டு கட்டமுமே கொஞ்சம் பிரச்சினை காட்டுதே’. நான் ‘ஆமாம்’ என்று சொன்னதும் அவர் முகத்தைப் பார்க்க வேண்டுமே...மூன்று மணி நேரம் உச்சாவை அடக்கியவன் ட்ரான்ஸ்ஃபார்மரைக் கண்டதுபோல் இருக்கும்!

அப்படியெல்லாம் நிம்மதியாக இருக்க விடுவோமா? ‘அவங்கள்லாம் போய்ச் சேர்ந்து பல வருசம் ஆச்சு’ என்று அடுத்த குண்டைப் போடுவேன். ‘ஆங்..அதான் கட்டம் சொல்லுது’ என்றபடியே என்னை உற்றுப்பார்ப்பார். ‘மீ பாவம்..உனக்கு என்ன தான் வேணும்’ என்று கண்கள் கெஞ்சும். கடைசியில் அவரே சரண்டர் ஆகி ‘சரி..இப்போ உங்களுக்கு என்ன பார்க்கணும்?’ என டைரக்ட் டீலிங்கிற்கு வருவார்.

‘இப்போ நேரம் எப்படி இருக்கு? அது எல்லாக் கட்டத்துக்கும் என்ன சொல்லுதுன்னு சொல்லுங்க’ என்பேன். ‘எல்லாக் கட்டத்துக்குமா?...மறுபடி முதல்ல இருந்தா?’ என ஜோதிடர் வெறுத்துப்போவார். பெரும்பாலும் வீட்டுக்காரம்மா தான் மனமிரங்கி ‘நாங்க சொந்த ஊர்ல எப்போ செட்டில் ஆவோம்?’ என்று கேட்பார். ஏதோ ‘2+2 எவ்ளோ சொல்லுங்க’ என்று கேட்டதுபோல் ஜோதிடர் உற்சாகமாகிவிடுவார். அஜக்குபுஜக்கு என்று வேகமாக கணக்குப் போட்டு ‘இன்னும் இரண்டே வருசம் தான்..வந்திடலாம்’ என்று தீர்ப்பளிப்பார். ‘இதைத் தான்யா ஆறு வருசமா சொல்றீங்க’ என நினைத்தபடி நன்றி கூறி விடைபெறுவோம். அப்போது அவர் ‘போய்ட்டு வாங்க’ என்று சொல்வது முப்பத்து முக்கோடி தேவர்கள் பூமாரி பொழிந்து ஆசீர்வதித்தது போல் இருக்கும்!

ஆனால் இந்தமுறை நாங்கள் பார்த்த ஜோதிடர் கொஞ்சம் சூடான பார்ட்டி. கொஞ்ச நேரத்திலேயே டென்சன் ஆனவர் ‘இது உன் ஜாதகமே இல்லை..நீ சொல்றதும் கட்டமும் மேட்ச்சே ஆகலை..ஓடிப்போயிரு’ என்று விரட்டிவிட்டு விட்டார். ‘இதைக் காட்டித்தான்யா இந்தம்மாவை நான் கல்யாணம் பண்ணியிருக்கேன்’ என்று நான் சொல்லியும் அவர் கேட்கவில்லை. ‘அதெல்லாம் தெரியாது. கரெக்டான ஜாதகத்தோடு வாங்க’ என்று கழுத்தைப் பிடித்து தள்ளாத குறையாக அனுப்பி வைத்துவிட்டார்...ஆனால் நாம் அப்படில்லாம் விட்ற முடியுமா? அடுத்த லீவில் மறுபடி போகணும்!
மேலும் வாசிக்க... "டுபாக்கூர்களிடம் ஜோசியம் பார்க்கப் போகலாமா?"

Tuesday, April 19, 2016

தெறி: அட்லிக்கு கதை சொன்ன கேப்டன் விஜயகாந்த்

தமிழ் சினிமாவில் கதைத் திருட்டு என்பது காலங்காலமாக நடப்பது தான். இன்னொருவர் எழுதிய கதையை, தன் கதை என்று டைட்டில் போட்டுக்கொள்வதும் வழக்கம் தான். ஆனால் தெறி பார்த்த பலரும் நடந்திருக்கும் அநியாயத்தை உடனே புரிந்துகொண்டார்கள். ஆம், நண்பர்களே..தெறி திரைக்கதை, நிச்சயமாக ராஜா ராணி திரைக்கதை எழுதிய நபரால் எழுதப்பட்டதல்ல, அது நம் கேப்டன் விஜயகாந்த் எழுதிய திரைக்கதை! 

மேலும் நமது புலனாய்வுப் புளுகார் மேற்கொண்ட விசாரணையில், தெறி திரைக்கதை விவாதத்தில் நடந்த விபரங்கள் நமக்குத் தெரிய வந்திருக்கின்றன. அத்தனையும் அதிர்ச்சி ரகம். கேப்டனின் சத்ரியன் படத்தை சுடுவது சம்பந்தமாகப் பேச, அட்லீ கேப்டனைச் சந்தித்திருக்கிறார். அப்போது கேப்டன் பேசியதே சுவையாக இருந்ததால், அதையே படமாக எடுத்திருக்கிறார். கேப்டன் சேனல் மாறி, சேனல் பேசுவது போன்றே, தெறியும் தறிகெட்டு அலைபாய்வதை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். கேப்டன் அட்லி குழுவினரிடம் சொன்னது, உங்கள் பார்வைக்காக:

வணக்கம் மக்கழே..உங்களை எல்லாம் காக்க வச்சுட்டேன். மன்னிக்கணும். இந்த விஜயகாந்த், எந்த டைரக்டரையும் காக்க வச்சவன் இல்லை. இண்டஸ்ட்ரில கேட்டால் சொல்வாங்க. தாணு பெரிய புரடியூசர். எனக்கு பல காலமாத் தெரியும். அவர் சொல்லி அனுப்பியிருக்காருன்னா, மணிரத்னம் திடீர்னு சத்ரியன் பண்ணலாம்னு சொன்னாரு. நல்ல கதை..அவர் பெரிய டைரக்டரு. என்னடா இப்படிச் சொல்றானேன்னு நினைக்கக்கூடாது. நான் இப்போல்லாம் சினிமால நடிக்கலைன்னாலும், நல்லா நீங்க பண்ணுவீங்கன்னு நம்பிக்கை இருக்கு.

விஜய் நம்ம தம்பி. நன்றி மறக்கறவர் இல்லை புலி படம் கொஞ்சமாவது வசூல் பண்ணுச்சுன்னா, நான் எப்பவும் அடிக்கு அடி, உதைக்கு உதை தான். போலீஸ் கேரக்டர் வேற..குழந்தைகள்லாம் விஜய் படத்தை ரசிக்காங்கன்னா, அஜித் வேற நல்ல அப்பாவா நடிச்சாரு. என் புள்ளைங்களுக்கு எப்பவும் நான் ஒரு கண்டிப்பான அப்பாவா..அப்படி இருந்திருக்கேன். இப்போ காலம் மாறிக்கிட்டே இருக்கு..இதையெல்லாம் ஏன் சொல்றேன்னா.விஜய், தன் குழந்தைக்கு நல்ல அப்பாவா, ஒரு நண்பனா இருக்கணும்.

சத்ரியன்!.....ஒரு போலீஸ்காரன்..விஜயகுமார் வேற நடிச்சிருந்தாரு. அதனால விஜய்யை விஜயகுமாரா நடிக்க வைக்கலாம். தப்பா நினைச்சுக்கக்கூடாது மக்கழே..அவர் பேரை விஜயகுமார்ன்னு வச்சிக்கலாம். விஜயகுமார், ரஜினி எல்லாரும் எனக்கு நண்பர்கள் தான். ரஜினி பாட்ஷா நடிச்சப்போ, அது நல்ல படம். அவர் போலீஸ் ஸ்டேசன்ல நடந்தப்போ, இதையெல்லாம் ஏன் சொல்றேன்னா, விஜய் தம்பிக்கு அது மாதிரி சீன் வைக்கலாம். மீடியா நண்பர்கள்லாம் இருக்காங்க. ஏற்கனவே சத்ரியனை காப்பி அடிக்கிறீங்கன்னு எழுதறாங்க. எழுதட்டும்..இதை எழுதறீங்களே, ஜெயலலிதா பற்றி எழுத துப்பு இருக்கான்னு கேட்டால், விஜயகாந்த் அரசியல் பேசறான்னு சொல்லிடுவீங்க. வேணாம் மக்கழே..

மக்கள் ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கிறாங்க..சத்ரியன் நல்ல படம். பானுப்ரியா..அவங்களைப் பற்றி உங்களுக்கே தெரியும். நான் சொன்னால், என்னடா இப்படி பேசறான்னு சொல்வீங்க..அவர் நல்ல நடிகை. இதுல மைக்கேல் ஜாக்சனை நடிக்க....என்ன தம்பீ? ஆங், எமி ஜாக்சனை நடிக்க வைக்கிறதாச் சொன்னீங்க..நமக்கு இப்போ உள்ள நடிகைகள்லாம் தெரியறதில்லே தம்பி..பானுபிரியா சத்ரியன்ல பொம்பளைப்புள்ளையா நடிச்சது..நீங்க இந்த மைக்கேல் ஜாக்சனை..ஆங், அதான்..அந்த ஜாக்சனை ஆம்பிளைப்புள்ளையா நடிக்க வைங்க. கமல் சிவப்பு ரோஜாக்கள்ல போட்ட கெட்டப் மாதிரி..ஏன்னா, இனியும் மக்களை இவங்க ஏமாத்த முடியாது..மாற்றம்..இந்த விஜயகாந்த்தால் மட்டும் தான் வரும்.

நான் கோபம் வந்தால் அடிச்சிடுவேன். தப்பு பண்ணால், விஜய் நல்ல தம்பி. அவர் அமைதியானவரு..எல்லாம் நம்ம பசங்க தான். எஸ்.ஏ.சி. என் உயிர் நண்பர். இதையெல்லாம் ஏன் சொல்றேன்னா, ஒரு பாசக்கார அப்பா எப்படி சண்டை போடுவான்? நல்லா யோசிக்கணும் மக்கழே..அதுக்குத்தான் பாட்ஷா சொன்னேன்..எல்லாம் சொல்வாங்க, விஜயகாந்த் பேசறதே புரியலைன்னு..புரியறவங்களுக்கு...................புரிஞ்சாப் போதும்.

போலீஸ்காரன், பாசக்கார அப்பா..சண்டை போடறான். ஏன்? தப்பு பண்ணால், யாரா இருந்தாலும் எனக்கு கோபம் வரும். என் கட்சித் தொண்டர்கள் யாரு? என் புள்ளைங்க. அவங்க மேல கைவச்சால்...!(நாக்கை துருத்தினாராம். அட்லீ அதையும் நோட் பண்ணிக்கொண்டாராம்!)

திமுக, அதிமுக ஆட்சில நாடே குட்டிச்சுவராப் போயிருக்கு. ரோட்டில் சின்னக்குழந்தைங்க கூட பிச்சை எடுக்குதுங்க. இதுவா வளர்ச்சி? நான் அமைதியா இருக்கேன்னா, அது என் கட்சித் தொண்டர்களுக்காக..இல்லேன்னா..செய்யட்டுமே..விஜய் தம்பி செய்யட்டுமே..அதையெல்லாம் தட்டிக்கேட்கட்டும். அநியாயத்தை தட்டிக்கேட்க, என்னைக்குமே இந்த விஜயகாந்த் தயங்க மாட்டான். அது சமைஞ்ச புள்ளைக்கும் தெரியும். எது? விஜய் தம்பி நல்லவர்ன்னு..என்ன?..ஓ.அது சமந்தா புள்ளையா?..நான் இப்போல்லாம் சினிமால இல்லீங்க. என் பையன் ஒரு படம் பண்ணான்..(ஏதோ சொல்ல வந்தார், கண்ணீரை துடைத்துக்கொண்டாராம்!)..தப்பை தட்டிக்கேட்டால், சமைஞ்ச புள்ள வரும். அம்மான்னு யார் யாரையோ சொல்றாங்க..யாருடா அம்மா? நல்லா சொல்வேன்..வேணாம்..அம்மான்னா..இப்போ பார்த்தீங்கன்னா, போலீஸாவே இருந்தாலும் அம்மாக்கு புள்ளை தான். அப்படி ஒரு அன்பு..பாசம்..அது அம்மா..யாரை தம்பி அம்மாவா நடிக்க வைக்கப்போறீங்க..சும்மா சொல்லுங்க..அடிக்க மாட்டேன்..ஆங், அவங்களா..நாம ஒன்னும் சொல்லக்கூடாது. அதெல்லாம் தாணு இருக்காரு...நீங்க இருக்கீங்க..எல்லாரும் நல்லா இருக்கணும்..அது தான் இந்த விஜயகாந்த் ஆசை. ஏன்னா, நாம ஒன்னு சொல்லி,  .........!


கலைஞருக்கு ஜெயலலிதா எதிரி. ஜெயலலிதாவுக்கு கலைஞர் எதிரி. இரண்டு பேருக்கும் நான் எதிரி..அப்போ விஜய்க்கு யார் எதிரின்னு கேட்டால், என்னடா விஜயகாந்த் இப்படில்லாம் கேட்கறான்னு நினைக்கக்கூடாது..யாருங்க, டைரக்டர் மகேந்திரனா? அவரு பெரியவரு..நாங்கல்லாம் அப்பவே..இந்த ஆட்சில பொண்ணுகளுக்குக்கூட பாதுகாப்பில்லை தம்பி. ஒரு ஐடி கம்பெனில வேலை பார்த்த பொண்ணையே ரேப் பண்ணிட்டாங்க. இந்த விஜயகாந்த் ஆட்சில இருந்தால், தப்பு பண்ணவங்களை சும்மா விடுவானா? அடிக்கணும்..விஜய் தம்பி அடிக்கணும்..யாரா வேணா இருக்கட்டும்..மந்திரி மகன்னா, பெரிய கொம்பா? என்னிக்குமே நான் நல்லவங்க பக்கம் தான் நிப்பேன். இப்போ மகேந்திரன் சார் வில்லன் பக்கம் நிக்கிறாரு..இதெல்லாம் சொன்னால், வம்பு தான் வரும். அவர்கூட விஜய் மோதணும். அப்படி மோதும்போது...

ரேவதி எல்லாம் நல்ல நடிகை. ஏன்? தப்பு பண்ணால் அடிக்கணும்..மருமகள்ன்னா யாரு? மரு ‘மகள்’ தான் மருமகள். அப்போ அம்மா, மரு’அம்மா’..தம்பி, உங்களுக்கு செண்டிமெண்ட் நல்லா வருது. நல்லா தூக்கி அடிக்கணும், பாத்துக்கோங்க. அப்படி இருக்கும்போது, ரேவதியைக் கொன்னுட்டாங்க. அதுக்கு என் ஆழ்ந்த நன்றிகள்..அப்போ விஜய் தம்பி அமைதியா இருக்காரு. கேரளால..அது நல்ல ஊரு..நம்ம ஊரு நாசமானதுக்குக்காரணம், நான் சொல்ல மாட்டேன். இங்க அரசியல் பேச மாட்டேன். ஒரு சிஎம் எப்படி இருக்கணும்? கேரளாவுல, விஜய் தம்பி இருக்காரு..மைக்கேல் ஜாக்சன்கூட..

இந்த விஜயகாந்த் வழில யாராவது வந்தால்..வில்லன் வர்றான். மறுபடி..பிள்ளைக்கு ஆபத்து. சில பேருக்கு பிள்ளையால ஆபத்து. நான் சம்முகப்பாண்டியனைச் சொல்லலை. யாரைச் சொல்றேன்னு சொன்னால் தப்பாயிடும்..வேண்டாம்..இந்த விஜயகாந்த்கிட்டே வேண்டாம்..உங்க எண்ணம்...பிள்ளைக்கு ஆபத்து வந்தால், விஜயகாந்த் பொறுப்பானா? நீங்க தான் என் பிள்ளைங்க..ரமணாலயே ஊழலை ஒழிச்சவன் நான்..ரமணா நல்ல படம்..விஜய் தம்பியை ரமணா மாதிரியே எல்லாரும் ‘சாமி’ன்னு டிவில சொல்றாங்க. ஏன்? முருகதாஸ் கதை சொன்னப்பவே, ஒத்துக்கிட்டேன். ஏன்னா, என்னிக்கும் நியாயத்தின் பக்கம் நிப்பான் உங்க விஜயகாந்த்.

இந்த விஜயகாந்த்தால் நஷ்டப்பட்டேன்னு யாரும் சொல்ல முடியாது. சம்பளம் வாங்காமக்கூட நடிச்சிருக்கேன். இதையெல்லாம் ஏன் சொல்றேன்னா, இப்போ பேய்ப்படம் தான் ஓடுதாம். யோசிக்கணும் மக்கழே..பேய்ப்படம்..இப்போ விஜய் படம்...இங்கே பேய் யாரு? விஜய். மீடியாக்காரங்கல்லாம் நாம ஒன்னு சொன்னால், அவங்க ஒன்னு எழுதறாங்க..அதனால, வில்லனை அழிக்கணும். விஜய் பேயா வர்றாரு. செண்டிமெண்ட்..பேய் செண்டிமெண்ட், அது தான் விஜயகாந்த்!

வில்லன் பிள்ளையைக் கொல்வேங்கிறான். அப்போ விஜய் தம்பி நேராப் போய் வில்லனைக் கொன்னுடலாமே? ஏன் பண்ணலை? இத்தனை வருசமா ஆட்சில இருந்த இவங்க என்ன பண்ணிட்டாங்க? மக்களை ஏமாத்தக்கூடாது. காசு கொடுத்து படம் பார்க்க வர்றாங்கன்னா, ஓட்டுக்கு காசு வாங்கறது வேற..விஜய் தம்பிக்குன்னு ஒரு பேர் இருக்கு..அவர் படத்தை உடனே முடிக்கலாமா? இதைச் சொன்னால், சிலபேருக்கு புடிக்காது. ஆனால், என்னிக்கும் விஜயகாந்த் உள்ளதைத்தான் பேசுவான். அதான் மக்கழே..விஜய் அப்பால்லாம்...சட்டம் ஒரு விளையாட்டு, சட்டம் ஒரு இருட்டறைன்னு...மூணு, நாலு வில்லங்க..வரிசையா சோலியை முடிப்பேன். ஏன்? தப்புப் பண்ணாங்க....!! விஜய் தம்பிக்கும் மூணு வில்லங்க..என்னடா திடீர்னு பேய், மூணு வில்லன்னு சொல்றானேன்னு நினைக்கக்கூடாது. விஜயகாந்த் சொன்னால், அதில் அர்த்தம் இருக்கும்.

என்னை கருப்பு எம்.ஜி.ஆர்ன்னு சொல்றாங்களேன்னு சிலர் கேட்கறாங்க. அது, மக்கழ் சொல்றது..எம்.ஜி.ஆர் யார்? ‘எந்தக் குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே’ன்னு சொன்னாருல்ல..அவர் தான்..அது மாதிரி மெசேஜ் சொல்லணும் படத்துல..தாய்க்குலத்தை என்னிக்கும் மதிக்கிறவன் இந்த விஜயகாந்த். அதனால, ஒரு பிள்ளை நல்லவன் ஆகுறதோ, கெட்டவன் ஆகுறதோ, அப்பா வளர்க்கிறதுலே..அப்போ ஒரு பிள்ளை தப்புப் பண்ணினால், அப்பாவுக்கும் தண்டனை கொடுக்கணும்..கலைஞர் ஐயா மேல என்னிக்கும் எனக்கு மரியாதை உண்டு. என் கல்யாணமே அவர் தலைமையில தான் நடந்தது. இதையெல்லாம் ஏன் சொல்றேன்னா, இது மாதிரி நல்ல மெசேஜ் சொல்லணும்.

இது மாற்றத்துக்கான நேரம். எல்லாரும் படம் முடிஞ்சு தியேட்டர் வாசலை தாண்டும்போது, ஒரு டூயட் வைங்க தம்பி. மைக்கேல் ஜாக்சன் பாவம் இல்லையா? அந்தப் புள்ளயும் ஆடட்டும். விஜயகாந்த் நம்பி வந்த யாரையும் ஏமாற்ற மாட்டான். நீங்க தாராளமா சத்ரியனை சுடுங்க தம்பி. உங்க கண்ணும் சிவப்பா இருக்கே? பத்து மணிக்கெல்லாம் கடையைப் பூட்டிடுவாங்க. சீக்கிரம், கிளம்புங்க. பார்த்து போய்ட்டு வாங்க!

---------------

இப்படி குவாண்டின் டொரண்டினோ பாணியில் கேப்டன் சொன்ன நான் லீனியர் திரைக்கதையை அட்லீ அப்படியே எடுத்து ஜெயித்திருக்கிறார். தேர்தல் முடிந்தவுடன், கேப்டனுடன் அடுத்த பட ஆலோசனையை அட்லீ ஆரம்பிப்பார் என்று புளுகார் சொல்லி நம்மை கிறுகிறுக்க வைத்தார்!


மேலும் வாசிக்க... "தெறி: அட்லிக்கு கதை சொன்ன கேப்டன் விஜயகாந்த்"

Monday, November 23, 2015

டபுள் மீனிங் டயலாக்ஸ் : ஒரு பார்வை


கோவில்பட்டி பகுதிகளில் 'புலவர் ஆட்டம்' எனும் நரிக்குறவர் ஆட்டம் பிரசித்திபெற்றது. கோவில் திருவிழாக்களில் 'புலவர்' என்று அழைக்கப்பட்ட, அந்தக் கலைஞர் இருந்தவரை தவறாமல் இடம்பெறும்.

கதையில், அவர் வம்ச வம்சமாக சாமியாடும் நபராக வருவார். அவருக்கு எதிராக, புதிதாகச் சாமியாட இன்னொரு போலிச்சாமி களமிறங்குவார். இருவருக்குமான போட்டி தான் கதை.

ஒரிஜினல் சாமியான புலவர் காலில் ஒரு பெண் விழுவார்.

பெண்: சாமி, எனக்கு குழந்தை வரம் வேண்டும்.
புலவர்: அப்படியா? சரி, எந்திரி பார்ப்போம்.

போலிச்சாமி: ஆமா எந்திரி தாயி...சாமி நல்லாப் பார்க்கட்டும். தா*ளி, நல்ல சாமீல்ல இது!

புலவர்: ஏம்மா, உனக்கு கல்யாணம் ஆகிடுச்சா?
பெண்: கல்யாணம் ஆகாமலா பிள்ளைவரம் கேட்பாக?
புலவர்: புருசன் இருக்கானா?
பெண்: இருக்காக, துபாய்ல.

போலிச்சாமி: அப்புறம் **க்குள்ளயா குழந்தை பிறக்கும்?

புலவர்: சரி, நீ வெள்ளிக்கிழமை, வெள்ளிக்கிழமை நைட்டு என் வீட்டுக்கு வா..நான் போடறேன்.

பெண்: சாமீ??
புலவர்: திருநீறு போடறேன்மா.

போலிச்சாமி: ஏ, அது கிழட்டுச்சாமி. சக்தியெல்லாம் மங்கிப்போச்சு. அவங்கிட்டே போகாத. நீ என்கிட்ட வா. நான் இளஞ்சாமி.
புலவர்: அவனை நம்பாதே. போலிப்பய.

பெண்: சாமி, உங்களுக்குள்ள சண்டை வேண்டாம். நீங்க வெள்ளிக்கிழமை போடுங்க. அவர் செவ்வாய்க்கிழமை போடட்டும்.

போலிச்சாமி: எப்படிச் சொன்னா பாருய்யா, தீர்ப்பு. இவள்ல உத்தமி!

------------------- ஒரு பக்கம் ஊர் பெரியவர்கள், இன்னொரு பக்கம் பெண்கள், இன்னொரு பக்கம் விடலைகள் சூழ்ந்திருக்க, புலவர் ஆட்டம் நேரம் ஆக, ஆக இன்னும் களைகட்டும். சிரித்துச் சிரித்து வயிறு வலித்துவிடும். 

நமது கரகாட்டம் உள்ளிட்ட பெரும்பாலான கலைகளில் இரட்டை அர்த்த வசனங்களும் பாடல்களும் சகஜம். காரணம், செக்ஸ் என்பது வாழ்க்கையின் ஒரு பகுதி என இயல்பாக ஏற்றுக்கொண்ட மரபு அது. இத்தகைய நகைச்சுவைகள் மூலம், செக்ஸ் என்பது ஒரு கொண்டாட்டமாக வயது வந்தோருக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

செக்ஸை நகைச்சுவயாக அணுகுவது தவறு என்று சொல்லிவிட்டு, வாட்ஸப்பில் செக்ஸைத் தேடுகிறது இந்தத் தலைமுறை. அங்கே கிடைப்பது, வக்கிரம் தான். புலவர் ஆட்டம் பார்த்துவிட்டு, அடுத்த நாள் அன்ணன்மாரிடம் 'ஏன்ணே, புருசன் துபாய்ல இருந்தால் குழந்தை பிறக்காதா?' என்று கேட்டது ஞாபகம் வருகிறது!

'நஞ்சவெளியாக நான் இருக்கேன், நாத்து நட நீ வாறியா?' என்று பாடும் நமது பாரம்பரியக் கலைகளில் மட்டுமல்லாது கிராம வாழ்க்கையிலும் இரட்டை அர்த்த வசனங்கள் சகஜமாகவே இருந்துவந்தன/வருகின்றன.

ஒரு பெண், முந்தைய நாள் தன் வீட்டிற்குள் பாம்பு வந்துவிட்டதாக கூறினார். அதற்கு தாத்தா ஒருவர் 'அங்க, சுத்திச் சுத்தி பொந்தால்ல இருக்கு. பொந்துன்னு இருந்தால் பாம்பு வரத்தான செய்யும்!' என்றார். 'யோவ்' என்று பெண் அதட்ட, 'நான் உன் வீட்டைச் சொன்னேன்மா. வீட்டைப் பூசு!' என்று தாத்தா ஜகா வாங்கினார்.

ஒருமுறை கடைக்காரரிடம் ஒரு பெண் வாழைப்பழம் கேட்டு வந்தார். பழத்தார் ஏறக்குறைய காலியாகி, கொஞ்சம் அழுகிய பழங்கள் தான் இருந்தன. கடைக்காரர் ' நசிஞ்ச பழம் தான் இருக்குத்தா. இது வேலைக்கு ஆகாது, வேண்டாம்' என்று சிங்கிள் மீனிங்கில் தான் பதில் சொன்னார். 

அடுத்த செகண்ட், அந்த பெண் சொன்ன பதில் : அப்படியா மாமா? பாவம், அக்கா!

சொல்லிவிட்டு,அவர் போய் ஒரு நிமிடம் கழித்துத்தான் அவருக்கே அர்த்தம் புரிந்தது.

'சரிய்யா, இப்போ என்ன ஆச்சு? ஏன் இப்படி பிட்டா ஓட்டிக்கிட்டு இருக்கிறே?'ன்னு கேட்கிறீங்களா? சொல்றேன். 'யாமிருக்க பயமே' படத்தில் ஓவியா 'பூரிச்சண்டை' போட்டதைக் கண்டித்து சிலர் பொங்கியிருந்தார்கள். அப்போதே எழுத நினைத்தேன். ஐ ஆம் பிஸி. இப்போது நயந்தாரா 'உங்களைப் போடணும் சார்' என்று சொன்னதும், பலருக்கும் ஹார்ட் அட்டாக். தலைவியைவே தப்புத்தப்பா பேச வச்சிட்டாங்களே என்று! அதற்கான ஆறுதல் பதிவு தான் இது!!

செக்ஸ் சம்பந்தப்பட்ட எதையும் வெளிப்படையாகப் பேசக்கூடாது, அதே நேரத்தில் பாலியல் கல்வி வேண்டும் என்று இரண்டு மாறுபட்ட முற்போக்குக் கருத்துகள் ஒரே நபர்களால் இப்போதெல்லாம் சொல்லப்படுகின்றன. இதற்கு இரண்டு  காரணங்கள் தான்.

1. காமத்தை பாவமென்று கருதும் விக்டோரிய ஒழுக்கவிதிகளின் ஆதிக்கம். அது தான் நாகரீகம் என்று நம்பும் மனப்பான்மை.

2. பெண்ணியவாதம். பெரும்பாலான பெண்ணியவாதிகளைப் பொறுத்தவரை, காமம் என்பது ஆண் பெண்மீது செலுத்தும் ஆதிக்கம் மட்டுமே, அது அன்புக்கான வழியே அல்ல! எனவே காமத்தையும் காமம் சம்பந்தப்பட்ட எல்லாவற்றையும் டெரராகவே அணுகுவது.

முந்தைய தலைமுறையிடம் இந்தப் பிரச்சினை இல்லை. வாழ்க்கையை எளிமையாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்த தலைமுறை அது. 

உண்மையில் இரட்டை அர்த்த வசனங்களைப் பேசுவது என்பது ஒருவகைக் கலை. கொஞ்சம் ஆபத்தான கலை என்றும் சொல்லலாம்.

மதில் மேல் பூனையாக வார்த்தைகளை கவனமாக உபயோகிக்க வேண்டும். அதிலும் சினிமா போன்ற வெகுஜன ஊடகத்தில் மிகவும் ஜாக்கிரதையாகப் பயன்படுத்த வேண்டும். கீழ்க்கண்ட விஷயங்களை, டபுள் மீனிங் டயலாக் பேசும்/எழுதும்போது கவனத்தில் கொள்ள வேண்டும்.

1. ஈவ் டீஸிங் செய்ய, அதை உபயோகிக்கக்கூடாது. ஒரு பெண்ணை உடல்ரீதியாக இழிவுபடுத்தவோ அல்லது படுக்கைக்கு அழைக்கும் கருவியாகவோ பயன்படுத்தக்கூடாது.

2. யாராவது பொங்கி எழுந்தால், நான் நல்ல மீனிங்கில் தான் சொன்னேன் என்று நீங்கள் சாதிக்கும் அளவிற்கு வார்த்தைகளில் கவனம் வேண்டும்.

3. பெரியவர்களுக்கு, அந்த இரண்டாவது மீனிங் தெளிவாகப் புரிய வேண்டும். டீன் ஏஜ் வயதினருக்கு 'அதைத் தான் சொல்றாங்களோ?'எனும் குறுகுறுப்பைக் கொடுக்க வேண்டும். சிறுவர்களுக்கு கண்டிப்பாகப் புரியக்கூடாது.

4. எனவே, கண்டிப்பாக அது விஷுவலாக காட்டப்படக்கூடாது. காட்சி, நாகரீகமானதாக இருக்க வேண்டும்.

5. வலிந்து திணிக்கப்பட்டதாக இருக்கக்கூடாது. அந்த சூழ்நிலைக்கு, அந்த முதல் மீனிங் தேவைப்பட வேண்டும்.

6. முடிந்தவரை டபுள் மீனிங் பேசுபவர் அப்பாவியாக இருப்பது நல்லது.

முந்தானை முடிச்சு படத்தின் பாக்கியராஜ், ஊர்வசியை மனைவியாக ஏற்றுக்கொள்ளாமல் ஒதுக்கி வைத்திருப்பார். பிறகு கொஞ்சம், கொஞ்சமாக அவர் மனது மாறும். முதலில் ஊர்வசியின் சமையலை மட்டும் ஒத்துக்கொள்வார். அதையே ஊர்வசி தனக்கு சாதமாக ஆக்கிவ்டக்கூடாதே? எனவே..

பாக்கியராஜ்: சாப்பிட ஒத்துக்கிட்டதால, இறங்கி வந்துட்டேன்னு நினைச்சுடாதே!

ஊர்வசி: நீ ஏறவும் வேண்டாம், இறங்கவும் வேண்டாம். வந்து சாப்பிடு!

அவ்ளோ தான் பாஸ், டபுள் மீனிங்!
 
மேலும் வாசிக்க... "டபுள் மீனிங் டயலாக்ஸ் : ஒரு பார்வை"