Wednesday, April 27, 2011

49ஓ போட்டவர்கள் நக்ஸலைட்களா - கியூ பிராஞ்ச் போலீசின் அராஜக விசாரணை

இன்று வந்துள்ள செய்தி அதிகார வர்க்கத்தின் ஆணவத்தைக் காட்டுவதாக உள்ளது. கடந்த தேர்தலில் 49ஓ-விற்கு ஓட்டுப் போட்டவர்களுக்கும் நக்ஸலைட் அமைப்புகளுக்கும் தொடர்பு உண்டா என்று கியூ பிராஞ்ச் போலீஸார் விசாரணை செய்கிறார்களாம். இன்று வக்கீல் சத்தியன்சந்திரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் ஒரு பொது நலமனு தாக்கல் செய்து, கியூ பிராஞ்சின் விசாரணைக்குத் தடை வாங்கி உள்ளார்.

எந்த சட்டத்தின் அடிப்படையில் இந்த விசாரணையை நடத்துகின்றார்கள் என்றே தெரியவில்லை. 49ஓ-வுக்கு ஓட்டுப் போடுவது சட்டப்படி தவறு அல்ல, அது நம் உரிமை. நியாயத்திற்கு 49ஓ-வை வாக்களிக்கும் இயந்திரத்தில் சேர்க்க வேண்டும். அதற்கு வக்கற்ற தேர்தல் கமிசனும் புத்திசாலி அதிகாரிகளும், 49ஓ போட வந்தவர்களை தனிப்படிவம் நிரப்பச் சொல்லி, பூத் ஏஜெண்டுகளுக்குக் காட்டிக் கொடுத்ததே தவறு. அத்தோடு நிறுத்தாமல், இப்போது 49ஓ போட்ட 24,594 பேரின் விவரங்களை கியூ பிராஞ்சுக்குக் கொடுத்துள்ளதாக வழக்கில் குற்றம் சாட்டப் பட்டுள்ளது.

49ஓ என்பது தான் என்ன? ‘எனக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளது. ஆனால் தற்போதைய அரசியல்வாதிகளின் மீது நம்பிக்கை இல்லை. அவர்களின் நடவடிக்கையை மறுபரிசீலனை செய்யவைக்கவும், நல்ல மாற்று சக்திகளை அரசியலுக்கு வரவழைக்க விரும்புகிறேன்’ என்பது தானே. நக்ஸலைட்கள் அடிப்படையில் இந்த ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இழந்தவர்கள். அவர்களும், அவர்கலோடு தொடர்புடையவர்களும் மெனக்கெட்டு, வாக்குச்சாவடிக்கு வந்து 49ஓ போடுவார்கள் என்று நிஜமாகவே இந்த அரசு நினைக்கிறதா? கொஞ்சம் யோசிக்கும் திறமை உள்ளவனனுக்குக் கூட இதில் உள்ள அபத்தம் புரிந்திருக்குமே!

உண்மையில் இவர்கள் செய்ய விரும்புவது மிரட்டல் தான். அடுத்த முறை 49ஓ போட மக்கள் யோசிக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடனே இந்த விசாரணையை இவர்கள் செய்வதாகத் தெரிகிறது. 49ஓ-விற்கு ஆதரவாக இணையதளங்களும், பத்திரிக்கைகளும் செய்தி வெளியிடுவதும், 24,000 பேர் துணிந்து ஓட்டுப் போட்டிருப்பதும் இவர்கள் கண்ணை உறுத்துகிறது போலும். யாருக்கு ஓட்டுப் போட்டோம் என்று நாமோ, வேறு யாருமோ வெளியில் சொல்வது சட்டப்படி தவறு. அப்படி இருக்கையில், இந்த கியூ பிராஞ் போலீஸார் முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டுயது அந்தப் பட்டியலை அவர்களிடம் கொடுத்தோர் மீது தான்!
நீதிமன்றம் தேர்தல் கமிசனிடமும் க்யூ பிராஞ்ச் போலீஸிடமும் இது தொடர்பாக விளக்கம் கேட்டுள்ளது. தேர்தல் கமிசனும் ‘நாங்கள் கொடுக்கவில்லை, பூத் ஏஜெண்ட்டுகளோ தேர்தல் அதிகாரிகளோ கொடுத்திருக்கலாம்’ என்று பதில் சொல்லி உள்ளது. இவர்களை நம்பித் தான் நமது ஓட்டுப் பெட்டியை ஒரு மாதத்திற்கு ஒப்படைத்துள்ளோம்!

தேர்தல் கமிசன் கொடுக்கவில்லை என்றால், கியூ பிராஞ்சிற்கு அந்தப் பட்டியலைக் கொடுத்தது யார் என்று நீதிமன்றத்தில் அவர்கள் சொல்ல வேண்டும். அதைக் கொடுத்தோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். 

ஏதோ தா.கிருட்டிணன் வழக்கு, சன் டி.வி அலுவலகம் தாக்கப்பட்ட வழக்குகளையெல்லாம் தீர விசாரித்து முடித்துவிட்டதாகவும், வேறு வேலையே இல்லாதது போன்றும் கியூ பிராஞ்ச் போலீஸ் இந்த விசாரணையில் இறங்கி இருப்பதைப் பார்த்தால் சிரிப்பதைத் தவிர வேறொன்றும் தோன்றவில்லை.

மேலும் வாசிக்க... "49ஓ போட்டவர்கள் நக்ஸலைட்களா - கியூ பிராஞ்ச் போலீசின் அராஜக விசாரணை"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

35 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Friday, April 22, 2011

கோ - திரை விமர்சனம்

கனாக் கண்டேன், அயன் என வித்தியாசமான கதைக்களனைத் தேர்ந்தெடுக்கும் கே.வி.ஆனந்த், இந்தப் படத்தில் தேர்ந்தெடுத்து இருப்பது பத்திரிக்கைத் துறையை. ஆனந்த்-சுபாவின் சொந்தப் பத்திரிக்கை அனுபவங்களை வைத்தே, இந்தக் கதையை உருவாக்கி உள்ளார்கள். நான் பத்திரிக்கைத் துறையுடன் நீண்ட காலமாக நெருங்கிய தொடர்பில் இருப்பவன் என்ற முறையில் இந்தப் படத்தினை ரொம்பவே எதிர்பார்த்திருந்தேன். (என்ன தொடர்பா?..சின்ன வயசுல இருந்தே குமுதம், விகடன் படிக்கிறேங்க..அது போதாதா?) கதை என்னன்னா.......
மலைமுழுங்கி மகாதேவனாக ஒரு முதல்வர்(பிரகாஷ் ராஜ்), மலையோடு அந்த மலைமுழுங்கியையும் விழுங்கக் காத்திருக்கும் ஒரு எதிர்க்க்கட்சித் தலைவர்(கோட்டா சீனிவாச ராவ்), மாற்று சக்தியாக படித்த இளைஞர்களின் சிறகுகள் அமைப்பு(அஜ்மல்) என மும்முனைப் போட்டியுடன் தேர்தல் வருகிறது. நம்மைப் போன்றே இருதரப்பின் மீதும் அதிருப்தியில் இருக்கும் தின அஞ்சல் நிருபர்களான கார்த்திகா-பியாவும், ஃபோட்டோகிராஃபரான ஜீவாவும் சிறகுகள் அமைப்பின் சேவையால் ஈர்க்கப்பட்டு, அவர்கள் பற்றிய செய்தியை முக்கியத்துவம் கொடுத்து வெளியிடுகின்றனர். அதனால் மக்கள் மத்தியில் சிறகுகள் அமைப்புக்கு ஆதரவு பெருகிறது. 

அஜ்மலில் வளர்ச்சி ஆளும் & எதிர்க்கட்சிகளின் கண்ணை உறுத்துகிறது. அடுத்து நடக்கும் அஜ்மலின் பிரச்சாரக் கூட்டத்தில் வெடிகுண்டு வெடிக்கிறது. பியாவும், சிறகுகள் அமைப்பின் சில உறுப்பினர்களும் அந்த வெடிவிபத்தில் உயிர் இழக்கின்றனர். ஜீவாவும் அஜ்மலும் கல்லூரி நண்பர்கள் என்பதும் திட்டமிட்டே இந்த இயக்கத்தைக் கட்டமைத்ததும் தெரிய வருகிறது. வெடிவிபத்திற்குப் பின் ஜீவாவும், அஜ்மலும் என்ன செய்தனர், வெடிவிபத்திற்குக் காரணம் யார், எதனால் அது நிகழ்ந்தது என்பதை பரபரவென ஸ்பீடான திரைக்கதையுடன் சொல்லி இருக்கின்றனர்.
ஜீவாவுக்கு இந்தப் படம் கமர்சியலாக முக்கியமான படம் தான். விளையாட்டுத் தனமான இளைஞனாக பாத்திரத்துடன் பொருந்திப் போகிறார். முதல் காட்சியிலேயே பைக்கில் காட்டும் சாகசம் கலக்கல். டைரக்டர்’ஸ் ஆக்டராக ஜீவா தன்னை நிரூபிக்கிறார். காதல், ஜாலி, ஆக்சன் என எல்லாவித நடிப்பையும் அனாயசமாக வெளிப்படுத்துகிறார். கே.வி.ஆனந்த் ஜீவாவை அழகாகக் காட்டி இருக்கிறார். கார்த்திகா சின்சியர் சிகாமணியாக வருகிறார். வில் போன்ற புருவமும், காந்தக் கண்களும் மட்டுமே தேறுகிறது. நடிப்பும் வருகிறது.மற்றபடி, பொண்ணு சுமார் தான். என்ன இருந்தாலும் அவங்கம்மா மாதிரி வருமா...

படத்தில் கலக்கியிருப்பது பியா தான். செம ஜாலியான கேரக்டரைசேசன், நம்ம நானா யோசிச்சேன் பகுதி மாதிரி! கேஷூவலாக ‘நான் அயிட்டம் ஆனா, எனக்கு என்ன ரேட்?’ என்பதும், ஜீவாவுடன் காட்டும் அன்னியோன்யமும், சேலை கட்டிவிட்டு நடந்து வரும் ஸ்டைலும் அட..அட.! ஒரு ஃப்ரெண்ட்லி நேச்சர் கேரக்டர் என்பதை அழகாக வெளிப்படுத்தி உள்ளார்.எல்லாப் படத்திலும்/ஸ்டில்லிலும் பியாவுக்கு ஒரு டைட் டவுசரையே மாட்டி விடுவார்கள். நல்லவேளையாக இதில் வேறு நல்ல காஸ்ட்யூம்களைத் தந்திருக்கிறார்கள். ஜீவா கார்த்திகாவைக் காதலிப்பதை அறியும் ஹோட்டல் சீனில் கலக்கி விடுகிறார். படத்தில் காமெடி இல்லாத குறையைத் தீர்ப்பது பியா தான். செம ஜாலிப் பட்டாசு!
அஜ்மலும் கனமான பாத்திரத்தை ஏற்று, செவ்வனே செய்திருக்கிறார்.கோட்டா சீனிவாசராவ், பிரகாஷ்ராஜ், போஸ் வெங்கட் என சரியான பாத்திரத் தேர்வுகள். 
படத்திற்குப் பிளஸ் பாயிண்ட் திரைக்கதையும், ஒளிப்பதிவும் தான். சுபாவும் .ரிச்சர்ட்.எம்.நாதனும் படத்தைத் தூண்போல் தாங்கி உள்ளனர். பீட்ட ஹெயின் கிளைமாக்ஸ் ஃபைட் சீன் தூள்!

ஹாரிஸ் ஜெயராஜ் இசை பற்றி என்ன சொல்ல..வரவர மாமியார் கழுதைபோல ஆனாளாம்ங்கிற மாதிரி, இந்தாளு இப்படி ஆகிட்டாரே. ’என்னமோ ஏதோ’ மட்டுமே தேறுகிறது. மற்றபடி, எல்லாப் பாட்டுமே எங்கேயோ கேட்ட ஃபீலிங் தான். ஒரு இடத்தில் பிண்ணனி இசையில் டைட்டானிக் ஃபேமஸ் க்ளிப்பையே ஸ்லோவா இழுத்துப் போட்டிருக்கார். அவ்வளவு தானா..சரக்கு காலியான்னு தெரியலை! 

முதல் பாதியில் ஜாலியாகச் செல்லும் படம், இரண்டாம் பாதியில் எதிர்பாராத திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நகர்கிறது. எடுத்துக்கொண்டிருக்கும் கதைக்களனும், இடங்களும் தமிழ்சினிமாவில் இவ்வளவு இயல்பாகக் காட்டியதே இல்லை. ஒரே ஒரு பாடல் தேவையில்லாத, பொருந்தாத இடத்தில் ’பணத்துக்காக எதுவும் செய்வாங்களா?’ என அரசியல்வாதிகளைப் பற்றி கார்த்திகா பேசும்போது வருகிறது. அதை நீக்கிவிட்டாலும் நல்லதே!
டைட்டில் சீன், வெடிகுண்டு வெடிக்கும் சீன், கிளைமாக்ஸ் ஃபைட் சீன் போன்றவற்றில் கே.வி.ஆனந்தின் டச் தெரிகிறது. சிறுசிறு குறைகள் இருப்பினும், தரமான ஜாலியான, அதே நேரத்தில் விறுவிறுப்பான கமர்சியல் படம் கொடுத்திருக்கிறார் கே.வி.ஆனந்த். மொத்த டீமிற்கும் பாராட்டுகள்.

கோ - விறுவிறுப்பான சுபா நாவல்!

மேலும் வாசிக்க... "கோ - திரை விமர்சனம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

56 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Thursday, April 21, 2011

காதல் கவிதை முதல் கண்றாவிக் கவிதை வரை..எழுதுவது எப்படி..(கண்டிப்பாக 18+)

டிஸ்கி: குழந்தைகளும் பெண்களும் தயவு செய்து இந்தப் பதிவைத் தவிர்க்கவும்! அடுத்த பதிவில் சந்திப்போம். நன்றி!


டிஸ்கி-2: இது ஒரு நகைச்சுவைப் பதிவு. உண்மையான கவிஞர்கள் யாரும் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்!

வருங்காலக் கவிஞர்களே!
உங்கள் அனைவருக்கும் வணக்கம்.

கவிதை என்பது படிப்போர்க்கு ஒரு கலவையான உணர்ச்சியைக் கொடுக்கவேண்டும். சரி.. கலவையான உணர்ச்சி என்பது என்ன?..உங்களுக்குப் புரியும்படி சொல்வதென்றால் ப்ரவுசிங் பண்ணும்போது, ஒரு டேப்பில் ‘சக்தி விகடனையும்’ ஒரு டேப்பில் ‘உண்மைத் தமிழனையும்’ மற்றொரு டேப்பில் ‘You tube-mallu hot’-ஐயும் திறந்து வைத்துக் கொண்டு மாற்றி மாற்றி பார்க்கும்போது தோன்றும் உணர்ச்சி ‘கலவையான உணர்ச்சி’க்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும்.

இப்போது கவிதைக்கும் வாக்கியத்திற்கும் உள்ள வித்தியாசத்தைப் பார்ப்போம். வாக்கியம் என்பது வார்த்தைகளை தொடர்ந்து எழுதி முற்றுப்புள்ளியுடன் முடிப்பது.
கவிதை
என்பது
வார்த்தைகளை
அல்லது
சில ஒத்த  விஷயங்களை
வரிக்கு
ஒன்று
என
ஒவ்வொன்றாக
எழுதி
ஆச்சரியக் குறியுடன் முடிப்பது!

கவிதைகளை காதல் கவிதைகள், புரட்சிக் கவிதைகள், பின் நவீனத்துவக் கவிதைகள், உடனடிக் கவிதைகள் எனப் பிரிக்கலாம். இப்போது ஒவ்வொன்றையும் எப்படி எழுதுவது எனப் பார்ப்போம்.

1.காதல் கவிதைகள்:
இதை எழுத ஒருதலைக்காதலாவது நீங்கள் செய்திருக்க வேண்டும். இதை எழுதுவது மிக எளிது. பார்த்தும் என்ன தோன்றுகிறதோ அது எவ்வளவு கேனத்தனமாக இருந்தாலும் அப்படியே எழுதிவிட வேண்டும். இவை பின்னால் பின் நவீனத்துவக் கவிதைகள் எழுத உபயோகப் படும். உதாரணமாக, என் முன்னாள் காதலி பெயரில் நான் எழுதிய கவிதை கீழே:

குஷ்பூ
நீயே ஒரு
பூ.
உனக்கெதற்கு
தலையில்
பூ!(அடடே..ஆச்சரியக் குறி)

2. புரட்சிக் கவிதைகள்:
இவைகள் ஜாதி, பொருளாதார வர்க்க பேதம், பகுத்தறிவு போன்றவை பற்றி எழுதப்படுபவை. பயப்பட வேண்டாம். நீங்கள் இந்தியா போன்ற தேசத்தில் இருப்பவர் என்றால், உடனே கதவைத் திறந்து, உங்கள் தெருமுனை வரை காலாற நடந்துவிட்டு வாருங்கள். இப்போது நீங்கள் பார்த்தவற்றை வசதி அடிப்படையில் ஒன்றன்பின் ஒன்றாக எழுதினால் கவிதை ரெடி:

நவீன இந்தியா
பளபளக்கும் பங்களாக்கள்
பாய்ந்து செல்லும் பென்ஸ் கார்கள்
ஜீன்ஸ் அணிந்த இளைஞர் கூட்டம்
குப்பைத்தொட்டியைக் கிளறும் பிச்சைக்காரன்! (உச்..உச்..உச்)

பகுத்தறிவுக் கவிதைகளை எழுதும்போது உங்கள் வீட்டுப் பெண்கள், வீட்டில் இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. அவர்களை அந்த நேரத்தில் கோவிலுக்கு அனுப்பிவிடுவது இன்னும் நல்லது!

3. பின் நவீனத்துவக் கவிதைகள்:
இவை அதிரடிக் கவிதைகள், உணர்ச்சிக் கவிதைகள் என பல பெயர்களில் அழைக்கப் படுகின்றன. இப்போது இதை எப்படி எழுதுவதெனப் பார்ப்போம்.

நீங்கள் இளம்வயதில் காதலித்த, உங்களுக்கு பல்பு கொடுத்த பெண்ணை நினைத்துக்கொள்ளுங்கள். இப்போதுள்ள கடுப்புடன் அல்ல, அப்போதிருந்த காதலுடன் நினைத்துக் கொள்ளுங்கள். அப்படித் தோன்றும் காதல் கவிதையை குறித்துக் கொள்ளுங்கள்..இப்படி:

பார்த்ததும் புன்னகைத்த அவளை
உள்ளத்தைத் திருடிய அவளை
நினைவிலேயே வாழும் அவளை
நினைத்து நினைத்து அழுகின்றேன்!(ரொம்ப நல்லது)

இப்போது ஏதாவது பலான பட டிவிடியை/வெப் சைட்டை திறந்துகொள்ளுங்கள். உள்ளங்கால் முதல் உச்சி வரை மோந்து பார்க்கும் மலையாளைப் படங்கள் வேலைக்காகாது. நல்ல Hardcore படமாகத் தேர்ந்தெடுங்கள். அதில் வரும் ஹீரோ நீங்கள்தான் என வழக்கம்போல் நினைத்துக் கொண்டு பார்த்ததை எழுதுங்கள்:

ஆவேசத்துடன் நெருங்கி
உடையைப் பறித்து
நினைத்த படியெல்லாம் முயங்கி
மூச்சு வாங்கினேன்.

இப்போதான் மெயின் மிக்சிங்..நம்ம ஃபோட்டோஷாப் வேலன் சார் மாதிரி இந்த 2 கவிதைகளையும் கச்சிதமாகச் சேர்த்தீர்கள் என்றால் பின் நவீனத்துவக் கவிதை ரெடி :

கரையாத காமம்
பார்த்ததும் புன்னகைத்த அவளை
ஆவேசத்துடன் நெருங்கி
உள்ளத்தைத் திருடிய அவளின்
உடையைப் பறித்து
நினைவிலேயே வாழும் அவளுடன்
நினைத்த படியெல்லாம் முயங்கி
மூச்சு வாங்க அழுகின்றேன்!

ஏதோவொரு புரிந்தும் புரியாதது போன்ற எஃபக்ட் வருகிறதல்லவா..இதே போன்று வேறு வேறு பெண்கள் மற்றும் படங்களைப் பார்த்து எழுதி தொடர்ந்து பயிற்சி செய்தால் கவிதை வசப்படும்.

எச்சரிக்கை: நீங்கள் ஆண் கவிஞர் என்பதால் நேரடிக் கெட்டவார்த்தை எழுத அனுமதியில்லை

4. உடனடிக் கவிதைகள்:
இவை தீபாவளி-பொங்கல் போன்ற பண்டிகைகளின்போதோ, பூகம்பம், சுனாமி வரும்போதோ, பைலட் விமானத்தை நட்டுக்குத்தலாய் இறக்கும்போதோ எழுதப்படுபவை. முதலிலேயே இவற்றை எதிர்பார்த்து எழுதி, கேட்ட உடன் சொல்ல நீங்கள் தயாராய் இருக்க வேண்டும். 


உதாரணமாக என் அலுவலக நண்பர் ஒருவர் சுனாமி பற்றி கவிதை சொல்லுமாறு என்னிடம் ஒருநாள் கேட்டார். நானும் ஒரு ‘சுனாமிக் கவிதை’ சொன்னேன். அதன்பிறகு அவர் என்னிடம் பேசவேயில்லை. அந்தக் கவிதையை இங்கு போடலாமா-ன்னு யோசிச்சேன். அப்புறம் நீங்களும் கடுப்பாகிட்டா, என் கடை என்னாகிறது? அதனால தான் அதை எழுதலை!

விடாமுயற்சியோடு, தொடர்ந்து எழுதிப் பழகுங்கள், கவிதை வசப்படும்! நன்றி!



வேண்டுகோள்: பின்னூட்டத்தில் கவிதை எழுதி பயிற்சி செய்வதைத் தவிர்க்கவும்.

மேலும் வாசிக்க... "காதல் கவிதை முதல் கண்றாவிக் கவிதை வரை..எழுதுவது எப்படி..(கண்டிப்பாக 18+)"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

47 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Wednesday, April 20, 2011

செங்கோவி பெயர்க் காரணம் - தொடர்பதிவு

பதிவர்களில் யாரோ ஒரு புண்ணியவான்/புண்ணியவதி, பதிவர்கள் தங்கள் பெயர்க்காரணம் பற்றி ஒரு புராணம் பாட வேண்டும் என்று தொடர்பதிவை ஆரம்பித்து விட்டார். கடைசியாக அந்தத் தொடர் பதிவில் எழுதிய பிரபலப் பதிவர் கொட்டைப்புளி, என்னைத் தொடரும்படி அன்புடன் கேட்டுக் கொண்டார். நான் அன்புக்கு அடிமை என்பதால் (ச்சே..ச்சே..தங்கமணி பேரு அன்பு இல்லீங்க!) எழுத ஒப்புக்கொண்டேன். அவருக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொண்டு..

’ஒவ்வொரு மனிதனும் உடலில் மச்சத்தைச் சுமந்துகொண்டு திரிவது போன்றே, சொந்த ஊரின் நினைவுகளையும் சுமந்து கொண்டே திரிகின்றான்’ என்று எஸ்.ராமகிருஷ்ணன் எங்கோ எழுதி இருந்தார். 


அந்த மனிதர்களில் ஒருவன் நான்.நான் முதல் முதலாக என் சொந்த ஊரை விட்டு வெளியேறியது எஞ்சினியரிங் காலேஜில் சேருவதற்காக மதுரை வந்த போது தான். அந்த நேரத்தில் மதுரையே அந்நிய மண் போல் தெரிந்தது. 


அப்போது தான் (1997ல்) இணையம் பிரபலமாகிக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் ஒரு மின்னஞ்சல் முகவரி ஆரம்பிப்பது என்று நண்பர்கள் முடிவு செய்தனர். அப்போது தான் என்ன பெயர் வைப்பது என்று குழப்பம் வந்தது.

சொந்த மண்ணை விட்டுப் பிரிந்து இருந்த எனக்கு என் ஊரின் பெயரைத் தவிர வேறெதும் நினைவில் இல்லை. நான் பிறந்த ஊர் கோவில்பட்டி. எங்களது பூர்வீக ஊர் கோவில்பட்டி அருகில் உள்ள செண்பகப்பேரி(செண்பகப்பூ ஏரி!) என்ற கிராமம். எனவே மின்னஞ்சலை செண்-கோவி (SHEN-KOVI) என்று வைத்தேன். 


நெருங்கிய நண்பர்கள் செண்கோவி என்று கூப்பிட ஆரம்பித்து, செங்கோவி என்று நிலைத்தது. செங்கோவி என்று நண்பர்கள் அழைக்கும்போதெல்லாம் எங்கள் ஊர் செம்மண் வாசம் ஞாபகம் வரும்.(இதை யாராவது நக்கல் பண்ணீங்க, பிச்சுப்புடுவேன் பிச்சு!)

மரியாதைக்குரிய பதிவர்(!) சிரிப்பு போலீஸ் பிறந்த ஊரும் கோவில்பட்டி தான். அவருக்கு நானும் அவர் ஊர் தான் என்று இப்போது வரை தெரியாது. அது தெரியாமலேயே வலைச்சரத்தில் என்னை அறிமுகப்படுத்தினார். அதுக்குப் பேரு தான் உள்ளுணர்வோ..இல்லே ஊருணர்வோ? 

மேலும் வினையூக்கி என்ற பெயரில் எழுதி வரும் மூத்த பதிவர் செல்வா, எனது கல்லூரி நண்பர். கல்லூரிக் காலத்தில் என்னுடன் தீவிர இலக்கிய/அரசியல்  விவாதம் புரிபவர். படிப்பு முடிந்த பின் பத்து வருடங்களாக எங்களுக்குள் எந்தத் தொடர்பும் இல்லை. சில வருடங்களுக்கு முன் ஏதோவொரு பதிவர் சந்திப்புப் புகைப்படத்தில் அவரைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தேன். 


ஆனாலும் என்னை வெளிக்காட்டிக் கொள்ளாமல், தொடர்ந்து அவரது பதிவைப் படிப்பதும் வேறு பெயர்களில் பின்னூட்டம் இடுவதுமாய் இருந்தேன். நேற்று தான் அவருக்கு மின்னஞ்சலில் என் ப்ளாக் அட்ரஸை அனுப்பி வைத்தேன். இன்ப அதிர்ச்சி என்றால் என்ன என்று நேற்று அவர் உணர்ந்திருப்பார். அந்தளவிற்கு கல்லுளிமங்கன் நான்! சும்மா ஜாலிக்குத் தான் இதைச் சொல்லவில்லை. இதிலென்னய்யா ஜாலி-ன்னு கேட்கக்கூடாது!

இது தான் எனது பெயர் உருவான வரலாறு!..இந்த தொடர் பதிவைத் தொடர நான் அழைப்பது:

டிஸ்கி:என்னைத் தொடர் பதிவிற்கு அழைத்த பிரபலப் பதிவர் கொட்டைப்புளி’-ன்னு சும்மா தான் எழுதினேன். அப்படி ஒரு ஆளே கிடையாது. பின்னே என்னங்க, யாருமே என்னை மனுசனா மதிச்சு தொடர்பதிவுக்குக் கூப்பிடலை. அதான் காண்டாயிட்டேன்.

இனிமேலாவது ஏதாவது தொடர்பதிவு போச்சுன்னா, என்னை அம்போன்னு விட்டுடாமக் கூப்பிடுங்க, இல்லே அடிக்கடி பிரபலப் பதிவர் கொட்டைப்புளியை நீங்க சந்திக்க வேண்டியிருக்கும்!

மேலும் வாசிக்க... "செங்கோவி பெயர்க் காரணம் - தொடர்பதிவு"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

65 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Friday, April 15, 2011

வெந்நீர் வைப்பது எப்படி? (தேர்தல் ஸ்பெஷல்)

நாம் எழுதுகிற ஒவ்வொரு எழுத்தும் இந்த சமூகத்திற்கு ஏதாவதொரு வகையில் பயன்பட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு நான் பதிவெழுதி வருவது நீங்கள் அறிந்ததே. அந்த வகையில் இன்று வெந்நீர் வைப்பது எப்படி என்று சொல்கிறேன். ஆரம்பிப்போமா..

முதல்ல இப்போ என்னாத்துக்கு வெண்ணி-ன்னு சொல்றேன். தேர்தல் பிரச்சாரம்ங்கிற பேர்ல இந்த அரசியல்வியாதிங்க அடிச்ச கூத்துல எல்லாரும் கிர்ரடிச்சுப் போயி இருப்பீங்க. அதனால இப்போ ஒரு எழுமிச்சம்பழத்தைத் தலையில தேச்சுக்கிட்டு, வெண்ணியை ஊத்துனா தெளிவாயிடும். அதனால இந்தப் பதிவை தேர்தல் ஸ்பெஷல்-னு வச்சுக்கோங்களேன்.

வெண்ணி வைக்க முதல்ல தேவை தண்ணி தான். தண்ணி-ன்னா கேப்டன் தண்ணி இல்லை, பச்சத் தண்ணி. அப்புறம் ஒரு பெரிய பாத்திரம் தேவை. பெரிய்ய பாத்திரம்னா ‘குஷி’ல மும்தாஜ் ஏத்துக்கிட்டாங்களே, அது மாதிரி பாத்திரம்னு நினைச்சுக்காதீங்க. நான் சொல்றது ஈயம் பித்தளைப் பாத்திரம்..அதாவது சட்டி! அடுத்துத் தேவை ஒரு அடுப்பு..அடுப்பு எப்படி இருக்கும்னு தெரிஞ்சுக்க கீழே உள்ள படத்தைப் பார்க்கவும்..
சாரிங்க, அடுப்பு படம் எவ்வளவு தேடியும் கிடைக்கலை..அதனால தான் இந்த இடுப்பு படத்தைப் போட்டிருக்கேன். ஒரு எழுத்து தானே வித்தியாசம்..அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க பாஸ்.

சரி, இப்போ பாத்திரத்துல தண்ணியைப் பிடிச்சிக்கோங்க. இப்போ வெயில் காலம்கிறதால அந்த தண்ணி ஒருவேளை சூடா இருக்கலாம். நமக்குத் தேவை பச்சத்தண்ணி. அதனால அதை முதல்ல ஆற வைக்கணும். அதனால அந்த தண்ணிப் பாத்திரத்தை உங்க வீட்டுல நடு ஹால்ல வச்சுட்டு, ஃபேனை ஹை-ஸ்பீடுல போடுங்க. 

இந்த விஷயத்தை ரொம்ப ஜாக்கிரதையாப் பண்ணனும். நடு ஹால்ல அந்தத் தண்ணி கொட்டி, உங்க சொந்தக்காரங்க வழுக்கி விழுந்துட்டா, அவங்க பிட்டாணி நகண்டிடும். அப்படியில்லாம உங்க தங்கமணியோட சொந்தக்காரங்க வழுக்கி விழுந்துட்டா, உங்க பிட்டாணியும் சேர்த்து நகட்டப்படும். அதனால ஜாக்கிரதையா தண்ணியை ஆற வைங்க.

ஓ.கே.  இப்போ அடுப்பைப் பத்த வைங்க. அடுத்து அடுப்பு மேல சட்டியைத் தூக்கி வைங்க. கரெக்டாப் படிங்க மக்கா..சட்டியை..ஜட்டியை இல்லை..அடுப்பு மேல ஜட்டியைப் போட்டா எரிஞ்சு போயிடும். (’போனாப் போவுது’ என்பது போன்ற ஆபாசப் பின்னூட்டங்களைத் தவிர்க்கவும்!). சரி, ஹீட் ட்ரான்ஸ்ஃபெர்-ங்கிற வெப்பக் கடத்தல் 3 வழில நடக்கும். ஒன்னு, டைரக்ட் காண்டாக்-னால..தீ மேல சட்டி உட்கார்ந்திருக்குல்ல..அது மாதிரி..இதுக்குப் பேரு Conduction!

இப்போ சட்டி, ஹீட்டை தண்ணிக்கு கடத்தும். அதனால அடில இருக்குற தண்ணி சூடாகும். அதனால அதனோட அடர்த்தி(Density) குறைஞ்சுடும். மேல இருக்குற வெயிட்டான தண்ணி, கீழ இறங்கும், கீழ இருக்குற சூடான தண்ணி மேல ஏறும். இப்படியே தொடர்ந்து, தண்ணியோட டெம்பரேச்சர் 100 டிகிரி செல்சியஸ் ஆனதும் தண்ணி ஆவியாக ஆரம்பிக்கும். இந்த மொத்த பிராசஸ்க்குப் பேரு Convection! இன்னொரு டைப் ரேடியேசன், சூரிய ஒளி மாதிரி..அது எதுக்கு நமக்கு..வெண்ணி வைக்க முத ரெண்டும் போதும்! 
இப்போ தொட்டுப் பாருங்க..யாரையா?..தண்ணியைத் தாங்க..இப்போ சூடு போதுமான அளவுக்கு இருக்கான்னு பாருங்க. ஓகே-ன்னா அடுப்பை அணைங்க..ஆமாங்க, அடுப்பைத் தாங்க! இப்போ நீங்க என்ன செய்யணும்னா ’ஏய்’ நமீதா மாதிரி, ’மேரா நாம் ஜோக்கர்’ பத்மினி மாதிரி, ’அந்த ஏழு நாட்கள்’ அம்பிகா மாதிரி, ’துரோணா’ ப்ரியாமணி மாதிரி, ’பூவிலங்கு’ குயிலி மாதிரி ’பாத்ரூம்’ த்ரிஷா மாதிரி குளிக்கணும். 

என்ன மக்கா, இப்போ எப்படி வெந்நீர் வைக்கணும்னு தெரிஞ்சுக்கிட்டீங்களா..ஏதாவது சந்தேகம் இருந்தா பின்னூட்டத்தில் தயங்காமல் கேட்கவும்.

குளித்து வாழ வேண்டும் - பிறர்
பார்க்கக் குளித்திடாதே!

மேலும் வாசிக்க... "வெந்நீர் வைப்பது எப்படி? (தேர்தல் ஸ்பெஷல்)"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

46 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Thursday, April 14, 2011

தமிழ்ப்புத்தாண்டும் ராஜபாளையம் அய்யனார் சாமியும்

ஒவ்வொரு வருடமும் எங்களுக்கு சித்திரை ஒன்றாம் தேதி விஷேசமானது. எங்களுக்கு என்றால், எங்கள் வம்சத்தைச் சேர்ந்த நூறு குடும்பங்களுக்கு! காலம் காலமாக, எங்கள் பாட்டன் முப்பாட்டன் காலத்தில் இருந்தே சித்திரை ஒன்றாம் தேதியன்று எங்கள் குலதெய்வம் அய்யனார் சாமியைத் தரிசித்து புத்தாண்டை ஆரம்பிப்பது எங்கள் குல வழக்கம். 

எங்கள் குல தெய்வம் அய்யனார், ராஜபாளையம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் வீற்றிருக்கிறார். இந்தப் பகுதி இயற்கை எழில் கொஞ்சும் பகுதியாகும். மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பாலாறும் நீராறும் ஒன்றாகச் சேரும் இடத்தில், அய்யனார் கோவில் அமைந்துள்ளது. 

வருடத்தின் மற்ற வாரங்களில் புதன் மற்றும் சனிக்கிழமை மட்டுமே இந்தக் கோவில் திறந்திருக்கும். அந்த நேரங்களில் சென்றால், ஏகாந்தச் சூழலில் அய்யனார் ஆற்றில் குளித்துவிட்டு, அமைதியாக அய்யனாரைத் தரிசித்து மகிழ முடியும். புத்தாண்டு அன்று கூட்ட்ம் நெரியும். பொதுவாக நான் அதிகாலை ஐந்து மணிக்கே அங்கு சென்றுவிடுவது வழக்கம். அப்போது தான் மனதார அய்யனாரைத் தரிசிக்க முடியும்.

அய்யனார் சாமி இங்கு வலப்பக்கம் பூர்ணாவும் இடப்பக்கம் புஷ்கலாவும் வீற்றிருக்க, தம்பதி சமேதராகக் காட்சி தருகிறார். அவர்கள் மட்டுமல்லாது, இங்கு வனகாளி,வனலிங்கம், தலைமலைசுவாமி, பெருமாள்-லட்சுமி, மாடன்-மாடத்தி, ரக்காச்சி அம்மன், வனப்பேச்சியம்மன், கருப்பசாமி, தர்மராஜர், சப்தகன்னிமார் ஆகியோரும் காவல் தெய்வமான அய்யனாருக்கே காவல் தெய்வமாக சின்ன ஓட்டக்காரனும் பெரிய ஓட்டக்காரனும் அருள்பாலிக்கிறார்கள்.

இந்தியாவில் எங்கு இருந்தாலும் புத்தாண்டு அன்று அனைவரும் குடும்பத்துடன் இங்கு வந்து சேர்வர். பெரும்பாலும் அனைத்துக் குடும்பங்களும் முதல் நாள் இரவில் எங்கள் கிராமத்தில் கூடும். பிறகு அதிகாலையில் அனைவரும் ஒன்றாக வேன், பஸ், லாரி போன்றவற்றில் கிளம்புவோம். கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு, இருவேளை கட்டுச் சோற்று உணவையும் முடித்து விட்டு, மாலை தான் அங்கிருந்து திரும்புவோம். 

ஒருவருக்கொருவர் சண்டையிட்ட குடும்பங்கள் கூட, அந்த ஒருநாளில் ஒரே இடத்தில் கூடி இருப்பதால் பகை மறந்து சமாதானம் ஆவர். ஒருவேளை அதற்காகவும், சொந்தம் விட்டுப் போய்விடக்கூடாது என்பதற்காகவும் தான் புத்தாண்டு அன்று இங்கு கூடும் வழக்கத்தை ஏற்படுத்தினர் போலும். இந்த வழக்கம் எப்போது ஆரம்பித்தது என்று தெரியவில்லை. ஆனால் எங்கள் தாத்தாவின் தாத்தாவும் இதே போன்று இங்கு வந்து குலதெய்வத்தை வழிபட்டு விட்டே, புத்தாண்டைத் துவங்கியதாய் அறிகிறோம்.


காருறழ் வெய்ய களிற்றிடையாகிப்
பாரிட எண்ணிலர் பாங்குற நண்ணப்
பூரணை புட்கலை பூம்புற மேவ
வாரணம் ஊர்பவன் முன்னுற வந்தான் 

- என்று கந்த புராணத்தில் சாத்தா படலத்தில் சிறப்பித்துப் பாடப்பெற்ற கடவுள், இந்த தம்பதி சமேத அய்யனார். நீங்கள் ராஜபாளையம் அருகில் இருந்தால் ஒருமுறை இயற்கை வனப்பு மிகுந்த அய்யனார் கோவிலுக்குச் சென்று அய்யனைத் தரிசித்துவிட்டு வாருங்கள்.

இந்தப் புத்தாண்டில் அய்யனாரப்பனும் முருகனும் உங்களுக்கு எல்லா வளங்களையும் தர அருள்புரியட்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.

தண்டாமரை முகமும் மலர்க்கண்களும் தன் கரத்தே
செண்டாயுதமும் தரித்து எமையாளும் சிவக்கொழுந்தைக்
கண்டேன் இரண்டு கரங்கூப்பினேன் வினைக் கட்டறுத்துக்
கொண்டேன் அழியாப் பெருவாழ்வு தான்வந்து கூடியதே!

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!


நன்றி: பதிவில் உள்ள புகைப்படங்கள் நந்தகுமார் எனும் அன்பரின் பிகாசா தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது. அவருக்கு எமது மனமார்ந்த நன்றிகள்!

மேலும் வாசிக்க... "தமிழ்ப்புத்தாண்டும் ராஜபாளையம் அய்யனார் சாமியும்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

36 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Tuesday, April 12, 2011

ஓய்ந்தது பிரச்சாரம்..ஒழியட்டும் காங்கிரஸ் பிசாசுகள்!

கடந்த இரு வாரங்களாக நம்மைத் திணறத் திணற அடித்த தேர்தல் பிரச்சாரம் ஒருவழியாக ஓய்ந்து விட்டது. இரு கூட்டணிகளும் தங்கள் தரப்பை மக்கள் முன் வைத்துள்ளன.  யாரை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவது என்பதில் நம்மிடையே குழப்பங்கள் இருந்தாலும், இந்தத் தேர்தலில் நம் ரத்தத்தைக் குடித்த காங்கிரஸ் பிசாசுகள் ஒழியவேண்டும் என்பதில் குழப்பம் வேண்டாம். 
மீனவர் பிரச்சினையில் இணையம் முதல் தெருமுனை வரை எல்லாப் போராட்டங்களும் நடத்தியாகி விட்டது. இதோ, மீண்டும் நான்கு மீனவர்களைக் காணவில்லை. ஒருவரின் சடலம் தாக்கப்பட்டு, சிதைக்கப்பட்ட நிலையில் கிடைத்துள்ளதாகத் தகவல்கள் வருகின்றன. தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த அன்னையும் பிள்ளையும் இதுபற்றி மூச்சு விடவில்லை. ஒரு பெரிய ஜனநாயக நாட்டுக் குடிமக்களை, ஒரு சிறிய சர்வாதிகார நாடு தொடர்ந்து தாக்கிக் கொலை செய்வதும், அதைக் கண்டிக்கக்கூட வக்கற்ற நிலையில் மத்திய அரசு இருப்பதும் வெட்கக்கேடு.

ராஜீவ் காந்தி என்ற ஒரு மனிதர் கொலை செய்யப்பட்டதற்கே பதறினோம். அப்போது நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கே வாக்களித்து நம் அனுதாபத்தை வெளிப்படுத்தினோம். ஆனால், இப்போது 540க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை இழந்துள்ளோம். சிறு சலனம் கூட அவர்களிடமிருந்து வரவில்லை.

ராஜீவ் மரணச் செய்தி கேட்டதும், தமிழகமே பதறியது. எனக்கு இப்போதும் அந்த இரவு ஞாபகம் உள்ளது. அந்தக் கொலைக்கு பின்னர் காரணங்கள் பல சொல்லப்பட்டாலும், பெருவாரியான தமிழர்கள் அப்போது மிகவும் வருத்தப்பட்டார்கள் என்பதே உண்மை. அதனாலேயே அப்போதைய அதிமுக-காங்கிரஸ் கூட்டணி தமிழகத்தில் வெற்றி வாகை சூடியது. உங்கள் வீட்டில் விழுந்த இழவிற்குக் கண்ணீர் வடித்தோமே, ஆறுதலாய் இருக்கட்டுமென அரியணையில் ஏற்றினோமே, அதற்கு நீங்கள் காட்டும் நன்றியா இது? எங்கள் வீட்டில் தொடர்ந்து விழும் இழவுகளின் ஒப்பாரிச் சத்தம் எப்படி உங்களுக்குக் கேட்க மறுக்கிறது?
மனசாட்சி என்ற ஒன்று இல்லாத அரசியல்வாதிகளைக் கண்டிருக்கிறோம். இப்போது தான் மனது என்ற ஒன்றே இல்லாத அரசியல்வாதிகளைப் பார்க்கின்றோம். எமது ஈழச் சொந்தங்களுக்காகப் பேசினால், அது அடுத்த நாட்டுப் பிரச்சினை என்று எங்கள் வாயை அடைப்பீர்கள். தமிழக மீனவனுக்கு என்ன பதில் வைத்திருக்கிறீர்கள்? 

எம்மைப் பற்றிய எவ்வளவு கேவலமான மதிப்பீடு இருந்தால், இங்கே வெட்கமின்றி வாக்குக் கேட்டு வருவீர்கள்? பணத்தை விட்டெறிந்தால் பீ தின்னும் சமூகம் என்று முடிவே செய்து விட்டார்களா? சொந்த ஜாதிக்காரன் நின்றால், ஜாதிப்பாசத்தில் ஆதரித்து விடுவோம் என்ற நம்பிக்கையா? கூட்டணியில் இருப்பதால், ஏமாளிக் கூட்டணிக் கட்சிக்காரன் ஓட்டுப் போட்டுவிடுவான் என்ற தெனாவட்டா? 

இந்தத் தேர்தலில் காங்கிரஸ்க்கு கிடைக்கப் போகும் முடிவை வைத்தே, தமிழினம் இந்தியாவில் மதிக்கப்படும். காங்கிரஸ் இப்போதும் வெற்றி பெற்றால், இந்திய அளவில் தலைகுனிந்து நிற்க வேண்டிய நிலையே ஏற்படும். ஏற்கனவே உலகில் எங்கு தமிழனுக்கு அடி விழுந்தாலும் கவனிக்க மாட்டார்கள். இப்போது ஜெயிக்கவும் வைத்து, நம் மானரோஷமற்ற தன்மையை நிரூபிக்கப் போகிறீர்களா?

ஒன்று இரண்டல்ல, இருபதினாயிரம் உயிர்கள் புல்டோசர் வைத்து நசுக்கப்பட்டன. அரசியல்வாதிகள் செய்யும் ஊழலைத் தான் மறந்து தொலைப்போம், இந்தப் படுபாதகச் செயல்களையும் மறப்பது மனிதம் தானா? 

கொஞ்சமாவது நம் மனதில் ஈரம் இருந்தால், மனசாட்சி என்ற ஒன்று இன்னும் உயிரோடு இருந்தால் இந்தத் தேர்தலில் காங்கிரஸைப் புறக்கணிப்போம். 


மேலும் வாசிக்க... "ஓய்ந்தது பிரச்சாரம்..ஒழியட்டும் காங்கிரஸ் பிசாசுகள்!"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

34 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Sunday, April 10, 2011

மெக்கானிகல் எஞ்சினியர்களுக்கு_தொடரின் நிறைவுப் பகுதி

இதுவரை மெக்கானிகல் எஞ்சினியரிங்கில் என்னென்ன வகையான வேலைகள் உள்ளன, அதற்கு எவ்வாறு ரெசியூம் ரெடி பண்ண வேண்டும் எனப் பார்த்தோம். இன்று தொடரின் நிறைவுப் பதிவாக இண்டெர்வியூ பற்றிய சில டிப்ஸ்களும், முடிவுரையும். 

பலரும் அட்டெண்ட் பண்ணும் நேர்முகத் தேர்வில், நீங்கள் மட்டும் தனித்துத் தெரியவேண்டும் என்றால், என்ன செய்ய வேண்டும்? பலரது சி.வி.க்களில் உங்கள் சி.வி.கவனிக்கப்பட என்ன செய்தீர்களோ அதையே இங்கும் செய்ய வேண்டும். 

சென்ற பதிவிலேயே சொன்னபடி, இண்டெர்வியூ செல்லும் முன் உங்கள் சி.வி.யில் உள்ள அனைத்து விஷயங்களைப் பற்றியும் தெளிவான ஐடியா உங்களுக்கு இருக்க வேண்டும். சி.வி.யில் உள்ள எந்தவொரு வார்த்தையைப் பிடித்தும் கேள்விகள் எழலாம்.உங்கள் சி.வி.யில் NDT என்ற வார்த்தை இருந்தால், அதன் விரிவாக்கம், உபயோகம், செய்முறை என எல்லாம் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். 

முதலில் அந்தக் கம்பெனி பற்றியும், வேலை செய்யப்போகும் டிபார்ட்மெண்ட் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.

’அதற்கேற்றால் போல்’ தயார் செய்த சி.வி.யை நன்றாக மனதில் உள்வாங்கிக் கொள்ளுங்கள்.

இண்டர்வியூவில் பொதுவாக முதலில் கேட்கப்படும் கேள்வி ‘Tell about yourself' தான். எனவே உங்களைப் பற்றிய சிறு அறிமுக உரையை தயார் செய்து கொள்ளுங்கள்.

அடுத்து உங்கள் கல்வி பற்றிக் கேட்கப்படும். தொடர்ந்து உங்களுடைய ஹாபீஸ் என்னென்ன? ரீடிங் என்றால் என்ன பத்திரிக்கை படிப்பீர்கள் என்பது போன்ற எளிய கேள்விகள் கேட்கப்படும். இவையெல்லாம் உண்மையில் உங்களை ரிலாக்ஸ் பண்ணவும், உங்களைப் பற்றிய ஒரு கருத்தை உருவாக்கிக்கொள்ளவுமே. இதற்கு உண்மையைச் சொன்னால் போதும். என்ன படிப்பீர்கள் என்ற கேள்விக்கு வேலை சம்பந்தப்பட்ட பத்திரிக்கை எதையாவது நீங்கள் படித்திருந்தால் அதைச் சொல்லலாம்.

அதன் பிறகு டெக்னிகல் கேள்விகள் ஆரம்பிக்கும். உங்கள் ஏரியா ஆஃப் இண்டெரெஸ்ட் / வேலை பார்த்த துறை பற்றிக் கேள்விகள் கேட்கப்படலாம். நீங்கள் ஏற்கனவே நன்றாகத் தயார் செய்துகொண்டு வந்திருந்தால் எளிதாகப் பதில் சொல்லலாம். கவனியுங்கள் பதில் ‘சொல்ல’ வேண்டும். ஒப்பிக்காதீர்கள். 

மெக்கானிகல் லைனில் வேறெதும் அப்டிடியூட் டெஸ்ட், குரூப் டிஸ்கசன் போன்றவை பெரும்பாலும் கிடையாது. ஒரு சில கம்பெனிகளே அவற்றை நடத்தும். அதைப் பற்றி முன்பே விசாரித்துக் கொள்ளுங்கள்.

’எனக்கொரு வேலை கொடுங்கள். எந்த வேலையாக இருந்தாலும் பரவாயில்லை. நான் சின்ஸியராக வேலை செய்வேன்’ என்று தான் பலரும் சொல்வார்கள். நீங்கள் முதலிலேயே இந்த வேலை பற்றி தெளிவாக அறிந்திருப்பதால், அந்த வேலைக்கு எது தேவையோ, அதைக் குறிப்பிட்டுப் பேசுங்கள். குறிப்பிட்டுப் பேசுங்கள். உதாரணமாக ‘டிசைன் எஞ்சினியராக வேலை செய்யவே விருப்பம். டிராயிங்கில் எனக்கு எப்போதும் ஆர்வம் அதிகம்..டிசைன் சாஃப்ட்வேர் இது-இது தெரியும்’ என்று சொன்னால்  நிச்சயம் கவனிக்கப்படுவீர்கள்.

இண்டர்வியூவிற்கு நேரத்திற்குச் செல்வது, நீட்டாகச் செல்வது போன்ற அடிப்படை விஷயங்களை நீங்கள் அறிவீர்கள் என்று நம்புகிறேன்.

---------------------------------

நான் ஒரே பதிவாக இதை எழுதலாம் என்று தான் ஆரம்பித்தேன். பிறகு தான் புரிந்தது, ஒவ்வொரு டிபார்ட்மெண்ட்டுக்கும் ஒரு பதிவு தேவைப்படும் என்று. இந்தத் தொடரின் முதல் நோக்கம், மெக்கானிகல் எஞ்சினியர் என்பது பல வேலைகளைக் குறிக்கும் ஒரு பொதுச்சொல், ஒன்றிற்கொன்று சம்பந்தமில்லா துறைகளைக் கொண்ட ஏரியா இது என்பதை மெக்கானிகல் படிக்கும் மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே.

பெரும்பாலான என் போன்ற முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்கு கம்பெனிச் சூழ்நிலை பற்றி எதுவும் படிக்கும்போது தெரிவதில்லை. எனவே தான் ஒவ்வொரு டிபார்ட்மெண்டின் தினசரி நடவடிக்கைகள் இந்தத் தொடரில் விளக்கப்பட்டன. மேலும், எங்கு அதிக சம்பளம் கிடைக்கும், எதைத் தவிர்ப்பது என்று தெரியாமல் தவறான துறைகளில் மாட்டிக்கொள்ளும் அவலமும் நடக்கிறது. அதைப்பற்றியும் இப்பொழுது ஒரு தெளிவு, உங்களுக்குக் கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன். 

சொலல்வலன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது - என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாக்கினை மனதில் கொண்டு, உங்கள் வாழ்வில் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துகள். 

இந்தத் தொடருக்கு ஆதரவளித்து பின்னூட்டமும் ஓட்டும் அளித்த நண்பர்களுக்கு நன்றி.

மேலும் ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின், இந்தப் பதிவை எப்போது படித்தாலும் பின்னூட்டதிலோ மின்னஞ்சலிலோ கேளுங்கள்.

மேலும் வாசிக்க... "மெக்கானிகல் எஞ்சினியர்களுக்கு_தொடரின் நிறைவுப் பகுதி"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

26 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Friday, April 8, 2011

தனுஷின் மாப்பிள்ளை - திரை விமர்சனம்

ரஜினிகாந்த் நடித்த ஆவரேஜ் ஹிட் படமான மாப்பிள்ளை படத்தின் ரீமேக், சூப்பர் ஸ்டார் ரஜினி வேடத்தில் அப்பாடக்கர் தனுஷ், ஸ்ரீவித்யா வேடத்தில் டொச்சுக் கிழவி மனீஷா கொய்ராலா - என நம்மிடம் எந்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தாத படம் இந்த மாப்பிள்ளை. ‘இருந்தும் செங்கோவி இந்தப் படம் பார்த்ததுக்குக் காரணம் ஹன்சிகா தான்’ என்று பின்னூட்டம் போட்டு, குடும்பத்தில் குழப்பம் விளைவிப்போருக்கு அடுத்த ஜென்மத்தில் கல்யாணமே ஆகாது என்பதைச் சொல்லிவிட்டு....
வீடு, வீடு விட்டால் கோயில் என்று பக்திப்பழமாக இருக்கும் தனுஷ் மீது கோடீஸ்வரி மனீஷாவின் மகள் ஹன்சிகாவிற்கு காதல் வருகிறது. ஏற்கனவே மனீஷாவின் மகனுக்கும் தனுஷின் தங்கைக்கும் காதல்- கர்ப்பம் என்று சைடில் இன்னொரு கதையும் ஓடுகிறது. வெள்ளை சொர்ணக்காவான மனீஷா, இந்தக் கல்யாணத்தை எதிர்ப்பார் என்று பார்த்தால், அவர் தனுஷை வீட்டோடு மாப்பிள்ளையாக ஏற்றுக் கொள்கிறார். காரணம் பக்திப் பழமான தனுஷ், தனக்கு அடங்கி இருப்பார் என்று தான். 

ஆனால் கல்யாண ஏற்பாடுகள் முடிந்து விட்ட நிலையில் தனுஷ் ஒரு பொறுக்கி என்று தெரிய வருகிறது. கடுப்பாகும் மனீஷா, தன்னுடன் ஒரே பிசினஸில் இருக்கும் ஆஷிஷ் வித்யார்த்தியின் மகனுக்கு மகளைக் கொடுக்க திட்டமிட, தனுஷ் அதை முறியடித்து ஹன்சிகாவை மணமுடிக்கிறார். கடுப்பாகும் மனீஷா, தனுஷிடம் மகளின் மனதை மாற்றி, இருவரையும் பிரிப்பேன் என்று சவால் விடுகிறார். இடையில் , முடிவில் யார் ஜெயித்தார்கள் என்பதை கொஞ்சம் மொக்கைத்தனமாகச் சொல்லி இருக்கிறார்கள்.

படத்தில் ஒரு ஆறுதல், காட்சிக்குக் காட்சி ரீமேக் என்ற பெயரில் சுடாமல் மெயின் ஸ்டோரியை மட்டும் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ரஜினி ரேஞ்சுக்கு பில்டப் கொடுக்காமல் தனுஷ் கொஞ்சம் அடக்கியே வாசித்திருக்கிறார். அவ்வப்போது தன்னையே கிண்டல் செய்யும் வசனங்களால் அந்தக் கேரக்டரை தனக்கு ஏற்றதாக மாற்றிக் கொண்டிருக்கிறார்.
படத்துக்குப் பெரிய மைனஸ் பாயிண்ட் மனீஷா கொய்ராலா தான். கொஞ்ச வருஷத்திற்கு முன் இந்தப் படத்தை எடுத்திருந்தால் ஸ்ரீவித்யாவையே நடிக்க வைத்திருக்க முடியும். ஸ்ரீவித்யாவிடம் இருந்த கம்பீரம், மனீஷாவிடம் மிஸ்ஸிங். அதுவும் க்ளோஸ்-அப் காட்சிகளில் பார்க்கவே சகிக்க முடியவில்லை. பத்து வருடங்களுக்கு முன் வந்த பாபாவிலேயே பாட்டியாகத் தெரிந்தவர் அவர். படத்திற்கு முதுகெலும்பே அந்தக் கேரக்டர் தான். அது அடிவாங்கியதில், படமே உட்கார்ந்து விடுகிறது.

ஒரு பிஸினஸ் டீலிங்கிற்கே சம்பந்தப்பட்ட நபரைப் பற்றி தீர விசாரிக்கும் மனீஷா, அக்கா வீட்டில் தங்கி இருக்கும் ‘மாப்பிள்ளை’ தனுஷ் பற்றி, அவரது சொந்த ஊரில் விசாரிக்க மாட்டாரா? ஆரம்பக் காட்சிகளிலேயே கர்ப்பமாகும் தனுஷின் தங்கை, கிளைமாக்ஸ் வரை அப்படியே வருகிறார். கதை குறைந்தது 3 மாதங்களுக்காவது நடக்கிறது. கர்ப்பமான மூன்று மாதத்தில் அவர்கள் எவ்வளவு கஷ்டப்படுவார்கள் என்பதும் , அப்போது கூட இருக்கும் அப்பாவிக் கணவனை என்ன பாடுபடுத்துவார்கள் என்பதும் நாம் அறிந்ததே!!! இதில் அந்தப் பெண் ஃப்ரெஷ் பீஸ் மாதிரியே(இப்படிச் சொல்லலாமான்னு தெரியலையே..) கடைசி வரை வருகிறார். இப்படி படம் முழுக்க லாஜிக் ஓட்டைகள் ஏராளம்.

படம் ஜாலியாக இருக்க வேண்டும், அவ்வளவு தான் என்று பூந்து விளையாடி இருக்கிறார்கள். எல்லாக் கேரக்டருமே ’பதிவர் அல்லது தமிழ்ப்படம் சிவா’ மாதிரி மொக்கை போடுவதிலேயே குறியாக இருக்கிறார்கள். மாமியார் கொட்டத்தை மருமகன் எப்படி அடக்கினார் என்பது தான் கதையே. ஆனால் கிளைமாக்ஸில் ஓவர் காமெடி செய்ததில், தனுஷ் கிழித்தது ஒன்றுமில்லை என்று ஆகி விடுகிறது.

இருந்தும் நம்மைத் தியேட்டரில் உட்கார வைப்பவர்கள் இருவர். முதலாமவர் விவேக். படிக்காதவன் மாதிரியே இதிலும் வடிவேலுவைக் காப்பி அடித்தே நடித்துள்ளார். அது உங்களுக்குப் பிடித்திருந்ததென்றால், இந்தப் படத்துக் காமெடியும் பிடிக்கும். விவேக்கும் அவரது நண்பர்கள் குரூப்பும் வசனங்களில் கலக்குகிறார்கள். ஆரம்பக்காட்சியில் ‘நமீதா ரசிகர் மன்றத் தலைவராக (நம்ம சிபிக்குப் போட்டியாக) அறிமுகம் ஆகி ‘உடல் மண்ணுக்கு, உயிர் நமீதாவுக்கு. முடிந்தால் உடலும் நமீதாவிற்கே’ என்று சொல்லும்போது தியேட்டரே அதிர்கிறது. முதல் அரைமணி நேரம் இவர் தான் ஹீரோவோ என்று நினைக்கும் அளவிற்கு தனுஷை பக்திப் பழம் என்று கூறி டம்மி ஆக்கியுள்ளனர். படத்தில் நிறைய இடங்களில் ரசிக்க வைக்கிறார். ஜோசியராக படம் முழுக்க வரும் மனோபாலாவும் சிரிக்க வைக்கிறார்.

அடுத்து இரண்டாமவர்.............நம்ம ’ஹன்சிகா மோத்வானி’( யாருப்பா அது விசில் அடிக்கிறது!). கொஞ்சம் பெரிய, ஆனால் குழந்தைத் தனமான முகம், நல்லா எக்ஸ்பிரசன்ஸ் கொடுக்கக்கூடிய முக அமைப்பு, வெள்ளாவியில் வெளுத்த கலர், வெள்ளந்திச் சிரிப்பு என்று கலக்கலான அறிமுகம் ஹன்சிகா. தமிழனுக்குப் பிடித்தமாதிரி எல்லா அம்சங்களுடன் ஓரளவு ரவுண்டாக ஹன்சிகா இருப்பதால், தமிழில் ஒரு ரவுண்டு வருவார் என்று நம்பலாம். பூமிகாவையும் மாளவிகாவையும் குஷ்பூவையும் தாப்ஸியையும் ஒன்றாக மிக்ஸ் செய்தது போல் இருக்கிறார் ஹன்சிகா. இதற்கு மேல் எப்படி ஜொள்ளுவது என்று தெரியவில்லை. நீங்களே ஃபோட்டோக்களைப் பார்த்துக் கொள்ளுங்கள்.

மணி சர்மாவின் இசையில் அறிமுகப் பாடலாக ஒரு முருகர் பாடலைப் போட்டிருக்கிறார். நன்றாக உள்ளது. மற்ற பாடல்களும் ஓ.கே. புதிய பாடல்களை விட ‘என்னோட ராசி’ ரீமிக்ஸ் அருமை. பழைய பாட்டைக் கெடுக்காமல் அடி பின்னியிருக்கிறார். மியூசிக் சேனல்களுக்குக் கொண்ட்டாட்டம் தான். இந்த மாதிரிப் படத்தில் ஒளிப்பதிவாளர் (சதீஷ் குமார்)  மட்டும் என்ன செய்துவிட முடியும்..எடிட்டிங்கில் இன்னும் கொஞ்சம் காட்சிகளைக் குறைத்திருக்கலாம். பொறுக்கியாக அறிமுகம் ஆகும் காட்சிகளும், மனீஷா கிராமத்துக் காட்சிகளும் இழுவை!

சுராஜும் சன் டிவியும் காமெடியை மட்டுமே போதும் என்று நம்பிக் களமிறங்கி இருக்கிறார்கள். அது ஓவர் டோஸ் ஆனதில் படத்தின் மெயின் ஸ்டோரி பஞ்சராகி நிற்கிறது! 

மாப்பிள்ளை - வீட்டோட மாப்பிள்ளை!


மேலும் வாசிக்க... "தனுஷின் மாப்பிள்ளை - திரை விமர்சனம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

67 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Thursday, April 7, 2011

ஜெயலலிதாவிற்கு தண்ணி காட்டிய கேப்டன்! (கோவைக் கூத்து)

தேர்தல் பிரச்சாரத்தின்போது எதிர் அணியினர் பலவகையான சவால்களை விடுவது வழக்கம் தான். ஆனால் இந்தத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு விடப்பட்ட சவால் போல் உலகில் வேறெங்கும் சவால் விடப்பட்டிருக்குமா என்று தெரியவில்லை. மிக எளிமையான சவால் தான். ‘உங்கள் கூட்டணித் தலைவர் விஜயகாந்துடன் ஒரே மேடையில் ஏறத் தயாரா’ என்பது தான் அது. சவாலே சமாளி நாயகிக்கு இப்படி ஒரு திரதிர்ஷ்டமான நிலை வந்திருக்கக்கூடாது தான். 
இருப்பினும் ’எதையும் தாங்கும்’ கம்யூனிஸ்ட் தோழர்களின் முயற்சியால் ஒருவாறு பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. உலக அதிசயம் ஒன்று நடக்கப்போவதாக வாக்காளப் பெருமக்களும் எதிர்பார்த்திருந்தனர். ஆனாலும் நம்ம கேப்டன் சாமானியப்பட்டவரா..அந்தப் பொதுக்கூட்டத்திற்கு வராமல் ஜெ. முகத்தில் கரியைப் பூசி விட்டார் கேப்டன்.

தொடர்ந்து எதிர் அணியினரால் குடிகாரன் என்றும் உளறுகிறார் என்றும் குற்றம் சாட்டப்பட்ட விஜயகாந்த், இந்த மேடையில் தன் இமேஜைச் சரி செய்துகொள்ளவும் வாய்ப்பிருந்தது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு, எப்படியாவது நல்லபடியாக ஒரு மேடைப்பேச்சை நிகழ்த்தி இருந்தால், எதிர்க்கட்சியினர் திட்டமிட்டு பொய்ப் பிரச்சாரம் செய்கிறார்கள் என்று சமாளிக்கவாவது உதவி இருக்கும். பிரகாஷ் காரத், சந்திரபாபு நாயுடு, ஏ.பி.பரதன் போன்ற தலைவர்கள் மத்தியில் விஜயகாந்தும் அமர்ந்திருந்தால், அது அவரது அரசியலுக்கு கொஞ்சமாவது மரியாதை கூட்டுவதாகவும் இருந்திருக்கும். ஆனாலும் விஜயகாந்த் கலந்து கொள்ளவில்லை.

ஏற்கனவே விஜயகாந்த்தை தாறுமாறாகத் தாக்கி வரும் திமுக கூட்டணியினருக்கு இது நல்லதொரு வாய்ப்பையே வழங்கியதாக ஆகும். இருப்பினும் நம்மைப் போன்ற நடுநிலையாளர்கள் நேர்மையுடன் இந்த விஷயத்தை அலசுவது தான் நியாயம். நல்லா அலசுவோம் வாங்க...
கேப்டன் கட்சி சார்பில் கலந்து கொண்ட பண்ட்ருட்டியார் பேசுகையில் கேப்டன் பிரச்சாரத்தில் இருப்பதாகவும், ஏற்கனவே ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிகள் இருந்ததால் வரமுடியவில்லை என்றும் சொல்லி இருக்கிறார். என்னமோ, மம்மி வேறு வேலையே இல்லாமல் கொடநாட்டில் இப்பொழுதும் குப்புறப் படுத்திருப்பது போன்றும், இன்று தூக்கம் வராமல் எழுந்து கோவைக்கு வாக்கிங் வந்தது போன்றும் பேசி இருக்கிறாரே..அடங்கொக்க மக்கா!

அவர் பிரச்சாரத்தில் இருப்பதால் வரமுடியவில்லையாம். ஜெ. என்ன கோவையில் மாரியம்மன் கோவிலுக்கு கூழ் ஊத்தவா வந்தார்? இங்கயும் பிரச்சாரம் தானய்யா நடக்குது..அங்கேயே பண்ட்ருட்டியாரைக் கும்மி இருக்க வேண்டும். ஆரம்பத்தில் ‘மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா’  என்று அவர் சொன்ன ஒரே காரனத்திற்காக பிழைத்துப் போகட்டும் என்று விட்டுவிட்டார்கள் போலும்.

சரி, இப்படி கூட்டணிக்கட்சித் தலைவர்கள் நடத்தும் பொதுக்கூட்டத்திற்குக் கூட வராமல் கேப்டன் அப்படி என்ன தான் கிழிக்கார்னு பார்ப்போம். 

ராதாபுரம் தொகுதிக்குப் போன கேப்டன் ‘அதிமுக கொள்கைகள் சிறையில் உள்ளன, அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் ராஜா சிறையில் உள்ளார்’-னு பேசினார். இதைக்கேட்ட அதிமுக தொண்டர்கள் டரியல் ஆகிவிட்டார்கள். பிறகு வேனில் இருந்த யாரோ ஒரு தைரியசாலி (ஹெல்மட் போட்டிருந்தாரா என்று தெரியவில்லை!) ‘அய்யா, அது அதிமுக இல்லை, திமுக ‘ என்று எடுத்துக் கூறினார். உடனே நம்ம கேப்டன் ‘நான் தப்புத் தப்பாக பேசுகிறேன் என்று நினைக்கிறேன். இதற்கு காரணம், இந்தக் கூட்டத்தின் சத்தம்தான்’ என்று கூறியபடி அங்கு கூடியிருந்த கூட்டத்தினரைப் பார்த்து நாக்கை துறுத்தி கண்ணை உருட்டி பயமுறுத்தினார்.(அட, உண்மைங்க!)..அட வெண்ணையாண்டி, கூட்டத்தோட சத்தம் பிடிக்கலைன்னா வீட்லயே இருந்திருக்க வேண்டியது தானே? எதுக்கு புள்ளை புடிக்கிறவன் மாதிரி தெருத்தெருவா அலையணும்?
அடுத்து தள்ளாடிய படியே திருத்துறைப்பூண்டி தொகுதிக்குப் போன கேப்டன் ‘இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு அரிவாள், சுத்தி, நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்களியுங்கள்’-ன்னு ஓட்டுக் கேட்டார். ஒரு மனுசன் ஒன்னு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு ஓட்டுப் போடலாம். இல்லே அரிவாள், சுத்தி, நட்சத்திரம் சின்னத்திற்கு ஓட்டுப் போடலாம். ஏன்னா அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சின்னம். கதிர் அரிவாள் சின்னம் தான் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சின்னம். இப்படி ஒரே நேரத்தில் ரெண்டுக்கும் போட்டா, அதுக்குப் பேரு செல்லாத ஓட்டுய்யா தர்பூஸ் மண்டையா.......இப்போதும் யாரோ ஒரு புன்ணியவான் ‘அய்யா, எங்க சின்னம் கதிர் அரிவாள் சின்னம்’-ன்னு எடுத்துச் சொன்ன பிறகு ‘கதிர் அரிவாளுக்கு வாக்கு அளியுங்கள்’-ன்னு சொல்லிட்டு ஓட்டம் எடுத்திருக்கிறார் கேப்டன்.

வேட்பாளர் பேரும் தெரியாது, கூட கூட்டணி வச்சிருக்கிற கட்சிப்பேரும் தெரியாது, அவங்க சின்னமும் தெரியாது. பொண்டாட்டி பேரையாவது ஒழுங்காச் சொல்லுய்யா..’எம் பொண்டாட்டி பிரேமலதா’ன்னு சொல்றதுக்குப் பதிலா வேறெதாவது ...தா-வைச் சொல்லிடாதீரும். உங்கூடக் கூட்டனி வச்ச பாவத்துக்கு அது ஒன்னு தான்யா பாக்கி! 

வேட்பாளரை அடிச்ச விவகாரத்திலும் இப்போது செம பல்டி! ’நான் எனது உதவியாளரை தலையை பிடித்து உள்ளே தள்ளினேன். ஆனால் வேட்பாளரை அடித்தார் என்று பொய்ப் பிரச்சாரம் செய்தனர்’ என்று பேராவூரணி தொகுதியில் சொல்லி இருக்கிறார். அட கூவை, ‘நான் அடிச்சா அவன் மகாராஜா ஆயிடுவான்’னு சொன்னது இந்த வாய் தானே...  ‘நான் என் கட்சிக்காரனைத் தானே அடிச்சேன். உனக்கென்ன’ன்னு பிரச்சாரத்துல பேசுனதும் இதே நாற வாய் தானே... இப்போ ஏன் இப்படிச் சொல்லுது.. சொல்ற இந்தாளு கூமுட்டையா, இல்லே கேட்கிற நாங்க கேணப்பயல்களா? உளறலுக்கும் ஒரு அளவு வேண்டாமா?..

நம்மளையும் ஆஃப் அடிக்க வைக்காம விடமாட்டார் போலிருக்கே சாமீ!

ஒன்னு மட்டும் தெரிஞ்சு போச்சு..இன்னும் மூணு நாளைக்கு செய்திகளைப் படிக்காமல்/பார்க்காமல் இருப்பது தான் நம்ம உடல்நலத்திற்கும், மனநலத்திற்கும் நல்லது!

மேலும் வாசிக்க... "ஜெயலலிதாவிற்கு தண்ணி காட்டிய கேப்டன்! (கோவைக் கூத்து)"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

70 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Wednesday, April 6, 2011

காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் மானமுள்ள தமிழர்களுக்கு..

சோனியாவும் காங்கிரஸாரும் தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். எந்த முகத்தை வைத்துக்கொண்டு, இவர்கள் வாக்குக்கேட்டு வருகிறார்கள் என்று தெரியவில்லை. எமது ரத்த சொந்தங்கள் கொத்துக் கொத்தாகக் கொலை செய்யப்பட்ட போது, அதைத் தடுத்து நிறுத்தக் கத்தினோம், கதறினோம். அதைக் காதில்கூட வாங்கவில்லை இந்த காங்கிரஸார்.

எமது மீனவச் சொந்தங்கள் சிங்கள ராணுவத்தால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட போதும், அதைத் தடுத்து நிறுத்தவோ, அவர்களுக்கு ஆறுதல் சொல்லவோ ஒரு காங்கிரஸ்காரனும் முன்வரவில்லை. எம்மையும் இந்திய மக்களாகக் கருதக்கூட காங்கிரஸ் தயாராக இல்லை என்பதே இதுவரையிலான காங்கிரஸின் நடவடிக்கை மூலம் தெரிய வருவது.

ஆனால் இப்போது, சீவிச் சிங்காரித்து ஓட்டுக் கேட்க கிளம்பி வருகிறார்கள். எங்களிடம் ஓட்டுக் கேட்பதற்கான யோக்கியதையோ உரிமையோ காங்கிரசுக்கு உள்ளதா? கடமையைச் செய்தோர் மட்டுமே தனக்கான உரிமையைக் கோர முடியும். போரைத் தடுத்து நிறுத்தவோ, மீனவப்படுகொலையைத் தடுத்து நிறுத்தவோ ஒரு துரும்பைக்கூட அசைக்காத காங்கிரஸ்க்கு நம்மிடம் ஓட்டுக்கேட்டு வரும் தைரியம் எப்படி வந்தது? உண்மையில் நம்மைப் பற்றி இவர்கள் என்ன தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்?

கலைஞர் தன் குடும்பம் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஜெயிலுக்குப் போகாமல் தடுக்க, காங்கிரஸின் காலில் வீழ்ந்து கிடக்கலாம். அதற்காக மொத்தத் தமிழகமுமே அப்படிச் சூடு சுரணையற்றுக் கிடப்பதாக காங்கிரஸார் நினைத்துக் கொண்டுள்ளனரா?
இதுவரை ராஜதந்திரியாகப் புகழப்பட்ட கலைஞர், காங்கிரஸால் அவமானப்படுத்தப்பட்டு, எதுவும் செய்ய இயலாமல் கூனிக்குறுகி நிற்கின்றார். இதனைப் பார்த்த பின்னும் திமுக தொண்டன், காங்கிரசுக்கு வாக்களிக்கலாமா? மானம் ரோஷம் உள்ள திமுககாரன் எவனாவது கைச் சின்னத்துக்கு ஓட்டுப் போடலாமா? ராகுல்காந்தி என்ன மனுசன்..அவரிடம் கேவலப்பட்டு நிற்க வேண்டிய துர்பாக்கிய நிலை கலைஞருக்கு! திமுககாரனிடம் முன்பிருந்த இன உணர்வு மரத்துப் போய்விட்டதா?

திமுககாரர்களை வெளிப்படையாகவே வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். கலைஞர் வேண்டுமானால் சூழ்நிலைக் கைதியாக இருக்கலாம். உங்களுக்கு என்ன வந்தது? இந்தத் தேர்தலில் காங்கிரஸை வீழ்த்தாவிட்டால், இனி திமுக காங்கிரஸின் முழு அடிமையாகவே ஆகிவிடும். உடன் இருந்தே கொல்லும் வியாதியாக இருக்கும் காங்கிரசை ஒழிக்க எம்முடன் கை கொடுங்கள்.

தமிழின உணர்வுள்ள திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகளும், ராமதாஸின் பாமகவினரும் கொஞ்சமாவது இன்னும் மனசாட்சி இருந்தால், காங்கிரசுக்கு ஓட்டு அளிப்பதைத் தவிர்க்க வேண்டும். பாராளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, காங்கிரஸை விட்டால் தற்போது வேறு வழியில்லை என்ற சூழ்நிலை இருந்திருக்கலாம். ஆனால் சட்ட மன்றத்தேர்தலில் காங்கிரஸ் ஒழிவதால் என்ன கேடு வந்துவிடும்?


இந்தத் தேர்தலில் நாம் காங்கிரஸைத் தோற்கடித்தால் மட்டுமே, காங்கிரஸின் தவறு இந்திய அளவில் எல்லொராலும் கவனிக்கப்படும். இல்லையெனில் காங்கிரஸ் செய்தது சரிதான் என்றே நாம் தீர்ப்பு அளித்ததாக ஆகும். தமிழினக் கொலையைக் கொண்டாடிய வட இந்திய ஊடகங்களும் அதை அங்கீகாரமாகவே எடுத்துக் கொள்ளும்.

காலமெல்லாம் நம் முதுகில் சவாரி செய்தே பிழைத்து வரும் காங்கிரஸ், தன் தகுதிக்கு மீறிய ஆட்டத்தை கடந்த ஐந்தாண்டுகளில் போட்டுள்ளது. காங்கிரஸ் கூட்டணியில் உள்ள தமிழர்கள், இனியும் காங்கிரஸைச் சுமக்க வேண்டுமா?

காங்கிரஸை ஒழிக்க நீங்கள் உங்களுக்குப் பிடிக்காத கட்சிக்கு ஓட்டுப் போட வேண்டியதில்லை. உங்கள் தொகுதியில் நிற்கும் நல்ல சுயேச்சை வேட்பாளர்களுக்கு உங்கள் ஓட்டை அளியுங்கள். அது வீணாகப் போனாலும் பரவாயில்லை, ஆனால் காங்கிரசுக்கு மட்டும் தயவு செய்து ஓட்டுப் போடாதீர்கள்.

ஈழப்போரை நிறுத்தச் சொல்லி தெருவுக்கு வந்து போராடினோம். சட்டமன்றத்தில் எல்லாக்கட்சியினரும் சேர்ந்து தீர்மானம் நிறைவேற்றி டெல்லிக்கு அனுப்பினோம். அதை மதித்ததா காங்கிரஸ்? அந்தத் தீர்மானம் ஒட்டுமொத்த தமிழர்களின் குரல். அதைக் குப்பைக்கூடையில் போட்ட காங்கிரஸ், இன்று வெட்கங்கெட்டு நம்முன் வாக்கு கேட்டு நிற்கிறது.

ஒரு இனத்தையே முள்வேலிக்குள் அடைத்தவர்களுக்கு, மனிதாபிமானமுள்ள நீங்கள் தரப்போகும் பதில் என்ன? உங்கள் கட்சி அபிமானத்தை இந்தத் தேர்தலில் ஒதுக்கி வைத்துவிட்டு, காங்கிரசைத் தோற்கடிக்க கை கொடுங்கள்.

உங்கள் உடலில் ஓடும் தமிழ் ரத்ததில் இன்னும் கொஞ்சமாவது இன உணர்வும் மனிதாபிமானமும் இருந்தால், காங்கிரசைத் தோற்கடிக்க உதவுங்கள். அதுவே ஈழப்போரில் உயிர்நீத்த 20,000க்கும் மேற்பட்ட ஈழச்சொந்தங்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி!

மேலும் வாசிக்க... "காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் மானமுள்ள தமிழர்களுக்கு.."
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

52 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.