Saturday, June 30, 2012

முருக வேட்டை_17


மூவிரு முகங்கள் போற்றி முகம்பொழி கருணைபோற்றி
ஏவரும் துதிக்க நின்ற ஈராறு தோள்கள் போற்றி
காஞ்சி மாவடி வைகும் செவ்வேள் மலரடி போற்றி யன்னான்
சேவலும் மயிலும் போற்றி திருக்கைவேல் போற்றி போற்ற!
 

மிழ்நாட்டில் பொதுக்கூட்டங்களுக்கு இப்போது எந்த மரியாதையும் இல்லை. பெரும் தலைவர்கள் வந்தாலன்றி, மக்கள் பொதுக்கூட்டங்களை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. 

சரவணன் மீட்டிங் நடக்கும் இடத்துக்குச் சென்றபோது, கூட்டத்தில் ஐம்பது பேர்கூட இல்லை. ஆனாலும் ஒரு தோழர் உணர்ச்சிகரமாகப் பேசிக்கொண்டிருந்தார். பின்னர் வரிசையாக சிறு பேச்சாளர்கள் பேசி முடித்த பின், நிகழ்ச்சிக்கு தலைமையுரை ஆற்ற வந்திருந்த தலைவர் பேச ஆரம்பித்தார்.

வணக்கத்துடன் ஆரம்பித்த உரை, ‘அவர்களே’ போட்டு மெயின் டாபிக்குக்கு வந்தபோது, அரை மணிநேரம் ஆகியிருந்தது. 

“நாமளும் இந்த மக்கள் திருந்தணும்னு பல வருஷமா பேசிக்கிட்டே இருக்கிறோம். ஆனால் இவங்க திருந்தற மாதிரித் தெரியலியே? திடீர்னு ஒரு சாமியார் கிளம்பி வர்றான். நான் தான் கடவுள்ங்கிறான். அடுத்து கொஞ்சநாள்ல அவன் ஜெயிலுக்குப் போயிடறான். அதைப் பார்த்தாவது திருந்தறாங்களா? இல்லை. உடனே அடுத்த சாமியாரைப் பார்த்து ஓடுறாங்க. நாம பலவருஷமா பல தடவை சொல்லிட்டோம். சாமி-ங்கிறதெல்லாம் கட்டுக்கதைன்னு. உன் துட்டை ஏமாத்திப் புடுங்க கண்டுபிடிச்ச சதி தான் மதம்னு சொல்றோம். எவனும் கேட்க மாட்டேங்கிறான்.

இந்த புராணஙக்ள்னு குப்பைகள் சில உண்டாக்கியிருக்காஙக் பாருங்க..படிச்சா கடவுள் நம்பிக்கை உள்ளவனுக்கும் நம்பிக்கை போயிடும். எல்லாமே ஆபாசக் குப்பைங்க. சரி, இத்தனை கடவுள்களை உண்டாக்குனாங்களே, அதையாவது சொந்தமா உண்டாக்குனாங்களான்னு அதுவும் இல்லை. எல்லாமே கிரேக்க, ரோமக் கடவுள்களோட காப்பி. 

நம்மாளுக அப்பவே காப்பி அடிக்கிறதுல பெரியாளா இருந்துருக்கான். இதை நான் சொல்லலைங்க. அய்யாவே ஆதாரப்பூர்வமா பல விஷயங்களைச் சொல்லிட்டுப் போயிருக்காங்க. சிவனும் இந்திரனும் யாரு? ஜூபிடர்ங்கிற கிரேக்கத் தெய்வத்தோட காப்பி. அந்த பிரம்மா யாருன்னு பார்த்தா, சாட்டர்னஸ்ங்கிற தெய்வத்தோட காப்பி. இவங்கள்லாம் முருகன்னு சொல்றாங்களே, அது யாரு தெரியுமா? மார்ஸுங்கிற ரோமானியக் கடவுளோட காப்பி. சரஸ்வதி மினர்வாங்கிற தெய்வத்தோட காப்பி. அய்யா தெளிவா எல்லாத்தையும் சொல்லியிருக்காங்க.

எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம் இருந்துச்சு. ’என்னடா இது..சின்ன ஒரு கூட்டம் வந்து இவ்ளோ மக்களை முட்டாளாக்கிடுச்சே.எப்படி, அவங்க என்ன அவ்ளோ புத்திசாலிகளா’ன்னு. ஆனால் உண்மை என்னன்னா அவங்களே கிரேக்க, ரோமானியக் கடவுள்களை காப்பி அடிச்சு, அதே கதையை நம்மகிட்டச் சொல்லித் தான் அடிமையாக்கியிருக்காங்க.”

தலைவர் பேசிக்கொண்டே போனார். ஆனால் சரவணன் காதில் அதன்பிறகு பேசிய எதுவுமே விழவில்லை.

மார்ஸ்...MARS 1024!

‘ங்கிறது ரோமானியக் கடவுளோட காப்பியா?..காலையில்கூட கவிதா ஏதோ சொன்னாளே..அதிபதி முருகன் என்று..’சரவணன் உடனே வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

இவர்கள் சொல்வது உண்மை தானா? நமது கடவுள்கள் எல்லாம் கிரேக்க, ரோமானியை இறக்குமதிகள் தானா? முருகரும் அப்படியா? அது தெரிந்து தான் பாண்டியன் MARS என்று எழுதி வைத்தானா? கேள்விகள் மண்டையைக் குடைய, வீட்டின் காலிங் பெல்லை அழுத்தினான்.

கதவைத் திறந்த கவிதா ‘என்னங்க வந்துட்டீங்க? இன்னும் மீட்டிங்ல யாரோ பேசறது கேட்குதே?” என்றாள்.

”ஆமா..அதிருக்கட்டும், நான் கேட்கிறதுகு பதில் சொல்லு. முருகர் ரோமனியக் கடவுள் மார்ஸோட காப்பியா?” 

அதைக் கேட்ட கவிதா சிரித்தாள். “காப்பியா? என்னங்க பேசறீங்க?”

“சரி..முருகரும் மார்ஸும் ஒன்னா?”

“செவ்வாய்க்கிழமைக்கு மார்ஸோட பேரை வச்சிருக்காங்கன்னு படிச்சிருக்கேன். ஆனா ரெண்டும் ஒன்னுன்னு யாரும் சொன்னதில்லையே..ஏன் கேட்கறீங்க?”

“இன்னிக்கு மீட்டிங்ல ஒருத்தர் சொன்னாரு..”

“அதை சீரியஸா எடுத்துக்கிட்டா கேட்கிறீங்க?”

“ஆமா..பாண்டியன் அதை தெரிஞ்சுக்கிட்டுத் தான் மார்ஸ்-ன்னு எழுதியிருப்பானோ?”

“எந்த முருக பக்தனும் இந்தக் கதையை நம்ப மாட்டான்..முதல்ல இந்த மார்ஸை விடுங்க..நான் சொல்றதைக் கேளுங்க. சிவநேசன் மாமாகிட்ட இருந்து மெயில் வந்திருக்கு. நம்மளை கென்யாக்கு வரச்சொல்லியிருக்காரு. ஒரு வாரம் ஜாலியா கென்யா டூர் போவோம்”

“கென்யாவா? அங்கே என்ன இருக்கு?”

“அங்க தானே என் மாமா இருக்கார்...வேற என்ன இருக்கோ, தெரியாது. ஆள் இருக்கிற இடத்துக்குத் தானே போக முடியும்?”

“எதுக்கு திடீர்னு கூப்பிடறார்?”

“நான் தான் மெயில் அனுப்பிக் கேட்டேன். சும்மா..ஒரு சேஞ்சுக்காக.”

“ஃபாரின் போகணும்னா ஆபீஸ்ல பெர்மிசன் வேற வாங்கணுமே?”

“அகிலாக்காகிட்ட நான் வாங்கிக்கிறேன். மார்ஸைத் தூக்கி பரண்ல போடுங்க. கென்யா பத்தி மட்டுமே யோசிப்போம்’.

(தொடரும்)
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

8 comments:

  1. மாம்ஸ்......

    கென்யாவுக்கு அவங்க மட்டுமா போறாங்க?

    ReplyDelete
  2. வணக்கம்,செங்கோவி!என்னென்னவெல்லாமோ சொல்லுறீங்க,காப்பிங்கிறீங்க,டீங்கிறீங்க!என்னமோ போங்க!ஹ!ஹ!ஹா!!!!

    ReplyDelete
  3. தமிழ்வாசி பிரகாஷ் said...மாம்ஸ்......கென்யாவுக்கு அவங்க மட்டுமா போறாங்க?////என்னா ஒரு சந்தோஷம்?????????

    ReplyDelete
  4. பாதியி இருந்து படித்ததால் புரிய வில்லை! முழுதும் படித்துவிட்டு சொல்கிறேன்! இந்து கடவுள்கள் காப்பி என்று ஏன் சொல்ல வேண்டும் நம்மதை அவங்க காப்பி அடிச்சிருக்க கூடாதா?

    ReplyDelete
  5. இந்த முறை செங்கோவி பெரிய சஸ்பென்ஸ் ஒன்றும் வைக்கவில்லை போலும்

    ReplyDelete
  6. //////பெரும் தலைவர்கள் வந்தாலன்றி, மக்கள் பொதுக்கூட்டங்களை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. //////

    பெரிய தலைவர்களுக்கு மட்டும் என்ன, தன்னாலேயா கூட்டம் வருது? காசு கொடுத்துதானே வருது....!

    ReplyDelete
  7. முருகனைவிட்டு இப்ப ரோமானியக்கடவுள் காப்பி என பல திக்கில்!ம்ம் இனி கென்யாவில் சந்திப்போம்!

    ReplyDelete
  8. முருக வேட்டைக்கு இப்பத்தான் கொஞ்சம் அர்த்தம் புரியுது... இனி கதை கென்யாவுலயா...?

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.