Sunday, May 27, 2012

இம்சையுடன் ஒரு பதிவர் சந்திப்பு...


டிஸ்கி: தலைப்பை பிரபல பதிவர்-தொழிலதிபர் இம்சை அரசன் பாபுவுடன் ஒரு பதிவர் சந்திப்புஎன்று விரித்துப் புரிந்து கொள்ளவும்.

மக்கு பதிவர்னாலே பயம்..அதுவும் பதிவர் சந்திப்புன்னா பயமோ பயம்..அதனால யார் கையிலயும் சிக்காம ஃப்ரீயா சுத்திக்கிட்டிருந்த எனக்கு சிரிப்பு போலீஸ் ரமேஷ் மூலமா ஒரு சோதனை வந்தது. இம்சை அரசன் பாபு கோவில்பட்டி தான்..நம்ம க்ளோஸ் ஃப்ரெண்டு..அவசியம் போய்ப் பாருங்கன்னு சொல்லி அட்ரசும் சொல்லிட்டார். டெய்லி அந்த வழியாத் தான் நான் போய்க்கிட்டு இருந்ததால பத்து நாள் தீவிரமா யோசிச்சு, இந்த சோதனையை எதிர்கொள்றதுன்னு முடிவு பண்ணேன்.

சிப்பு (இதை சிரிப்பு போலீஸ் ரமேஷ் என்று விரிக்கவும்!) ஃப்ரெண்ட்டுன்னா, அவர் மாதிரியே யாரோ ஒரு சின்னப் பையன்(!)ன்னு நினைச்சுக்கிட்டே அவர்கூட ஃபோன்ல பேசுனேன். இம்சை அரசனும் ரொம்ப சந்தோசமா ஃப்ரீயா இருக்கும்போது வாங்கன்னார். நம்மளோ குளிக்கும்போது தான் ஃப்ரீயா இருப்போம்..அப்போ எப்படிப் போறதுன்னு நானா யோசிச்சுக்கிட்டே இன்னைக்கு ஈவ்னிங் வர்றேன்னு சொன்னேன்.

அப்புறம் தான் சோதனை ஆரம்பிச்சுச்சு..உடனே அவரு வாங்க வாங்க..கோவில்பட்டிலேயே பெரிய்ய்ய ஹோட்டலாப் போய் ரெண்டு மணி நேரம் சாப்பிட்டுக்கிட்டே நிதானமாப் பேசலாம்னு சொன்னாரு. என்ன இருந்தாலும் அவரு ஒரு பதிவர் இல்லியா..அதனால எங்கயும் சிக்கிக்காத படி போகலாம்..சாப்பிடலாம்னு சொல்றாரே ஒழிய யாரு காசு கொடுக்கணும்னு சொல்லவேயில்லை. நானும் வர்றேன்னு சொல்லிட்டு ஃபோனை வச்சுட்டேன்.

எனக்கோ இதுல யாரு பலியாடுன்னு புரியலை..எதுக்கு வம்பு..இப்படியே எஸ் ஆகிடுவோம்னு முடிவு பண்ணி சாயந்திரமா அவருக்குக் கூப்பிட்டு அண்ணே, நான் ரொம்ப பிஸி..வர முடியலைன்னு சொன்னேன். அவரும் பரவாயில்லைங்க..நாளைக்கு என் ஆஃபிசுக்கு வந்திருங்கன்னு சொன்னாரு.

எனக்கும் அது சரின்னு தோணுச்சு..காலைல பத்து மணிக்குப் போனா யாருக்கும் சேதாரம் இல்லாம தப்பிச்சுடலாம்னு முடிவு பண்ணி, ஒலக முக்கியத்துவம் வாய்ந்த அந்த சந்திப்புக்கு நான் ஒத்துக்கிட்டேன்.

ஆனாலும் விதி செஞ்ச சதியால பதினொரு மணிக்கு அவர் ஆஃபீஸ் பில்டிங் முன்னாடி போய் நின்னேன். ஃபர்ஸ்ட் ஃப்ளோர்ல அண்ணன் ஆஃபீசு. மேல போயி ஆஃபீசுல வாசல்ல நின்னுக்கிட்டு இப்போ எப்படிக் கேட்கறது..இம்சை அரசன்னு சொன்னாத் தெரியுமான்னு யோசிக்கும்போதே வாங்க...வாங்கன்னு ஒரு தேன் மதுரக் குரல் கேட்டுச்சு..திரும்பிப் பார்த்துட்டு அசந்துட்டேன். நீங்களும் அசரணும்னா கீழே இருக்கிற ஸ்டில்லைப் பாருங்க:

என்னடா இது..நம்ம ஊருல இப்படி ஒருத்தரா..அஜித்குமாரோட அசல் மாதிரி இருக்காரே..பொதுவா பதிவர்னாலே பேக்கு மாதிரி தானே இருப்பாங்கன்னு பிரமிச்சு நின்னப்போ வாங்க செங்கோவி..உட்காருங்கன்னு சொன்னார். இவங்க தான் என் ஒய்ஃப்ன்னு அண்ணியாரை அறிமுகம் செஞ்சு வச்சார். யாரை முதல்ல பார்த்தாலும் பேக்கு மாதிரி முழிக்கிற என் வழக்கப்படி ஒரு வணக்கம் போட்டுட்டு முழிச்சேன்.

அண்ணனைப் பார்த்தவுடனே எல்லாருக்கும் தோணுற அதே கேள்வி எனக்கும் தோணுச்சு..கேட்டேன்..இவ்ளோ ஹேண்ட்சமா இருக்கிறீங்களே..நீங்க ஏன் உங்க ஸ்டில்லை உங்க ப்ளாக்ல போடுறதில்லைன்னு கேட்டேன்..அது வேணாங்க..ரசிகைங்க தொல்லை ஜாஸ்தி ஆகிடும்..நானோ ஏக பத்தினி விரதன்னாரு. எனக்கு புல்லரிச்சுடுச்சு.. அண்ணியாருக்கு கண் கலங்கிடுச்சு..கண்ணைத் துடைச்சுக்கிட்டேநீங்க பேசிக்கிட்டிருங்கன்னு சொல்லிட்டு வெளில போய்ட்டாங்க.

அண்ணியாரும் பிசினஸ்ல கூடவே இருந்து உதவி செய்றாங்கன்னு சொன்னாரு..அடப்பாவமே..வீட்டுக் கஜானாவை அவங்ககிட்ட கொடுத்தது பத்தாதுன்னு ஆஃபீஸ் கஜானாவையும் அங்க கொடுத்துட்டு உட்கார்ந்திருக்காரே..அப்போ நாம நேத்து எஸ்கேப் ஆனது சரி தான்ன்னு நினைச்சுக்கிட்டேன்.

ஆனால் அண்ணன் யாரு..விட்டுடுவாரா..அப்புறம், மதியம் சாப்பிட எங்க போகலாம்?”னாரு..ஆஹா...மனுசன் கொலைவெறியோட இருக்காரு போலிருக்கேன்னு நினைச்சுக்கிட்டு இல்லைண்ணே, இன்னிக்கு நான் விரதம்னு ஒரே போடாப் போட்டுட்டேன்.
ஒன்னுமே சாப்பிடமாட்டீங்களா?”ன்னாரு.
ஒன்லி ஜூஸ்ன்னு சொன்னேன். அவரும் ஆஃபீஸ் பாயை (பாய் தான்..!) மொபைல்ல கூப்பிட்டு ஏதாவது ஜூஸ் வாங்கிட்டு வா..ஆப்பிள்..ஆரஞ்சு..எதுன்னாலும் ஓகேன்னு சொல்லிட்டு, என்கிட்ட பேச ஆரம்பிச்சாரு.
அண்ணன்கிட்ட ஒரு அருமையான குணம் இருந்துச்சு..பொதுவா ஒரு பதிவர்கிட்ட நான் முருக வேட்டைன்னு ஒரு தொடர் எழுதறேன்ன்னு சொன்னா, ‘ஆங்..பார்த்தேன்..நான்கூட ஒரு தொடர் எழுதுனேன் முன்னாடி படிச்சீங்களான்னு ஆரம்பிச்சு அவங்க எழுதுனதைப் பத்தியே பேசுவாங்களேயொழிய நம்மளைப் பத்தி ஒன்னும் சொல்ல மாட்டாங்க. ஆனா அண்ணன் ரொம்ப நேரம் என் பதிவுகளைப் பத்தி விலாவரியாப் பேசுனாரு..

அப்புறம் தான் கவனிச்சேன்..அவருக்குப் பின்னாடி வரிசையா ஏகப்பட்ட சாமி ப்டங்களா மாட்டியிருந்துச்சு..அண்ணனோட தேஜஸ்க்கும் அதுக்கும் ஏகப் பொருத்தம்..நம்ம நித்திக்கு வேற மார்க்கெட் போயிருச்சே..பேசாம அண்ணன் கழுத்துல கொட்டையை மாட்டி, களத்துல இறக்கிடலாமான்னு யோசிச்சேன். ஆனாலும் ஆப்பிள் ஜூஸ் வர்ற வரைக்குமாவது சும்மா இருப்போம்னு நான் ஒன்னும் சொல்லலை.

ஆனாலும் தவளையும் தன் வாயால் கெடும்கிற கதையா நான் இன்னிக்கு காலைல ஒரு போஸ்ட் போட்டிருக்கேன்..பார்த்தீங்களா?”ன்னு கேட்டுட்டேன். அப்படியான்னு கேட்டுக்கிட்டே பக்கத்துல இருந்த கம்ப்யூட்ட்ர்ல ஜெ.வின் ஓராண்டு ஆட்சி-ஒரு பார்வைங்கிற பதிவை ஓப்பன் பண்ணாரு..கொஞ்சம் படிக்கவுமே டென்சன் ஆகிட்டாரு. அண்ணன் அந்தக் காலத்துல இருந்தே மம்மி ரசிகர் போல..

பதிவை இன்னும் நல்லா எழுதியிருக்கலாம்னு ஆரம்பிச்சு இது நல்ல ஆட்சி தான்ங்கிற மாதிரியே பேசுனாரு. பேசிக்கிட்டே மொபைலை எடுத்து யாருக்கோ மிஸ்டு கால் வேற கொடுத்தாரு. நமக்கு பகீர்னு ஆகிடுச்சு..ஆஹா..தேவையில்லாம ஒரு தொழிலதிபரை பகைச்சுக்கிட்டமேன்னு கவலையாப் போச்சு.

ஜூஸ் வாங்கப் போன ஆளும் திரும்பி வந்தாரு..பார்த்தா அரை டம்ப்ளர்ல கொஞ்சூண்டு பெப்சி..ஆஹா..அண்ணன் ஒரே ஒரு மிஸ்டு கால் கொடுத்து ஜூஸை பெப்சி ஆக்கிட்டாரே..இனிமே யாரையும் சந்திக்கிறதா இருந்தா, அன்னிக்கு பதிவே போடக்கூடாதுங்கிற பாடத்தைக் கத்துக்கிட்டேன். அப்புறம் அண்ணன் பல பதிவுகலக பயங்கர ரகசியங்களைப் பத்திப் பேசுனாரு..பல நல்ல அட்வைஸ்லாம் கொடுத்தாரு. அடுத்து அண்ணன் சொன்னதைக் கேட்டுத் தான் நான் மெல்ட் ஆகிட்டேன்.

ரொம்ப கேசுவலா எங்கயும் போகணும்னா என் காரை எடுத்துக்கிட்டுப் போங்க..சும்மா தயங்காமக் கேளுங்கன்னாரு. நான்லாம் என் பையனோட பொம்மைக் காரையே யாருக்கும் தர மாட்டேன்..பக்கத்து வீட்டுப் பையன் வந்து கதவைத் தட்டுனா, அந்த பொம்மைக் காரை ஒளிச்சு வச்சுட்டுத் தான் கதவையே திறப்பேன்..ஆனா அண்ணனுக்கு எவ்ளோ பெரிய மனசுன்னு நினைச்சு புல்லரிச்சுப் போச்சு எனக்கு.

அண்ணனும் தொடர்ந்து நான் ரொம்ப சிம்பிளா இருப்பேங்க..கார்ல ஆஃபீசுக்கு வந்தாலும், கீழேயே காரை விட்டுட்டு வந்திடுவேன். இந்த ஃபர்ஸ்ட் ஃப்ளோருக்கு நடந்தே தான் வருவேன்ன்னாரு..இதன்மூலமா அண்ணன் பூந்தி மாதிரி இனிமையானவர் மட்டுமில்லை, காந்தி மாதிரி எளிமையானவர்னும் தெரிஞ்சுக்கிட்டேன்.

அப்புறமா வீட்டுக்கு வாங்கன்னு சொல்லிட்டு, வீடு இருக்கிற இடத்தைச் சொன்னாரு..அது என் அண்ணன் இருக்கிற ஏரியா..அவரைத் தெரியுமான்னு கேட்டேன்..அடடா..அவர் என் ஃப்ரெண்டுங்க..அவர் தம்பியா நீங்கன்னு ரொம்ப சந்தோசப்பட்டார்.

ஆஹா..நாம ஃபாரின் ரிட்டர்ன்..பெரிய அப்ப்பாடக்கர்னு பீலா விடலாம்னு வந்தா, மனுசன் மெயின் ஆளையே கைக்குள்ள வச்சிருக்காரேன்னு நினைச்சுக்கிட்டு, ஆஃப் ஆகிட்டேன்..

அதுக்குள்ள அந்த அரை டம்ப்ளர் பெப்சியும் தீர்ந்து போயிடுச்சு..சரிண்ணே, நான் கிளம்பறேன்ன்னு சொல்லிட்டு எழுந்தேன்.

அவரும் எழுந்து கை கொடுத்துட்டு சரி, ஃப்ரீ ஆகிட்டு வாங்க..சாப்பிடப் போகலாம்னாரு.

அடப்பாவிகளா..போகலாம்.போகலாம்ங்கிறாங்க..ஆனா யாரு பே பண்ணுவாங்கன்னு சொல்லவே மாட்டேங்கிறாங்களேன்னு நொந்துக்கிட்டே திரும்பிட்டேன்.

இவ்வாறாக ஒரு சிங்கத்தை அதன் குகையிலேயே சந்தித்த திருப்தியுடன், அந்த பதிவர் சந்திப்பு இனிதே நிறைவுற்றது.

மேலும் வாசிக்க... "இம்சையுடன் ஒரு பதிவர் சந்திப்பு..."
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

33 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Wednesday, May 23, 2012

தன்ஷிகா தான் இனி ஹன்சிகாவா? (நானா யோசிச்சேன்)

நெஞ்சைத் தொட்ட வரிகள்:

ஹய்யோ.ஹய்யய்யோ...
ஏ..ஹய்யோ.ஹய்யய்யோ...

ஷாக் அடிக்குது சோனா
நீ நடந்து போனா!

ஹார்ட் அடிக்குது தானா
நீ ராஜஸ்தானி மானா?

ஹய்யோ.ஹய்யய்யோ...
ஏ..ஹய்யோ.ஹய்யய்யோ!

பதிவர் கலந்துரையாடல்:

காலை 8 மணி:

நான் : ஹலோ...கஸாலி...எப்படி இருக்கீங்க?

கஸாலி: நல்லா இருக்கேங்க..இப்போ கடைக்குக் கிளம்பிக்கிட்டு இருக்கேன்..அப்புறம் நானே கூப்பிடட்டுமா?

நான்:ஓகே..ஓகே..நான் சும்மா தான் கூப்பிட்டேன்..பார்ப்போம்.

காலை 10 மணி :

கஸாலி: என்ன தலைவரே, எப்படி இருக்கீங்க?
நான் : நல்லா இருக்கேன், கஸாலி, நான் இப்போ கோவில்பட்டி போய்க்கிட்டு இருக்கேன். அப்புறம் கூப்பிடட்டுமா?
கஸாலி: பரவாயில்லைங்க..போய்ட்டு வாங்க..நான் சும்மா தான் கூப்பிட்டேன்.

மதியம் ஒரு மணி:

நான்: என்ன தலைவரே.........பிஸியா?
கஸாலி: இல்லைங்க..சாப்பிடப் போகலாம்னு கிளம்பினேன்.
நான்: ஓ..சரிசரி..சாப்பிடப் போங்க..நான் சும்மா தான் கூப்பிட்டேன்.

மாலை 4 மணி :

கஸாலி: என்னங்க..என்ன செய்றீங்க?
நான் : ஒரு நிலம் ஒன்னு பார்க்க வந்திருக்கிறேன்..அப்புறம் கூப்பிடட்டுமா?
கஸாலி: பாருங்க..அபருங்க..நான் சும்மா தான் கூப்பிட்டேன்.

மாலை 6 மணி:
நான் : கஸாலி..செங்கோவி பேசறேன்

கஸாலி : கடைல கொஞ்சம் கூட்டமா இருக்கு..அப்புறம் கூப்பிடட்டுமா?
நான் :ஓகே..ஓகே..நான் சும்மா தான் கூப்பிட்டேன்.


இத்தனையும் பார்த்துக்கிட்டிருந்த என் தங்கமணி : அடப்பாவிகளா.... நீங்க 2 பேரும் தான் இப்படியா? இல்லே, எல்லாப் பதிவர்களுமே இப்படித் தானா?

அவ்வ்வ்வ்வ்!

அஞ்சலியின் அட்டகாசம் :

கலகலப்பு படம் இன்னும் பார்க்கலை. ஆனாலும் அஞ்சலி அதீத கவர்ச்சி காட்டியிருக்கிறதா ஒரு தகவல்...ஏறகனவே அஞ்சலி கவர்ச்சி காட்டுறது ‘ராமராஜன் கையில மெசின்கன்னைக் கொடுத்தா மாதிரி’ இருக்குன்னு சொல்லிட்டேன்...ஆனாலும் அந்தப் புள்ளை திருந்தற மாதிரித் தெரியலியே..இதைவிடக் கேவலமா எப்படிச் சொல்ல..கேப்டன் கையில ரோசாப்பூ கொடுத்த மாதிரின்னு சொல்லலாமா? நமக்கு என்ன வருதோ, அதை ஒழுங்காப் பண்ணிக்கிட்டுப் போனாப் போதாதா..எதுக்கு இந்த வேண்டாத வேலை..

ஏன் அஞ்சலி இப்படி கவர்ச்சிக்கன்னி ஆகியே தீருவேன்னு அடம்பிடிக்குது? யாராவது அதுக்கு எடுத்துச் சொல்லக்கூடாதா?மத்தவங்களை விடுங்க.. ‘கூடவே’ இருந்த கேபிளாராவது “இதோ பாரும்மா..ஆண்டவனே நினைச்சாலும் இனிமே உன்னால கவர்ச்சியாவும் ஆக முடியாது..கன்னியாவும் ஆக முடியாது”ன்னு சொல்லியிருக்கலாம்ல? ஒருவேளை மனுசன் ‘யூத்’துங்கிறதுக்கு தப்பான அர்த்தத்தை அஞ்சலிக்கும் சொல்லிக் கொடுத்திட்டாரோ?..முடியலை பாஸ், முடியலை!


ரஞ்சிதானந்தா:

நித்தி ஒரு வழியா உண்மையை ஒத்துக்கிட்டாரு..ஆமாங்க..’நான் ஆணுமல்ல..பெண்ணுமல்ல’ன்னு ஓப்பனா சொல்லிப் புட்டாருல்ல..

அந்த வீடியோ பார்த்தப்பவே எனக்கு டவுட்டுங்க..என்னடா இது..ரஞ்சிதாவை சீரியல்ல பார்த்தாலே பசங்க நிலைமை சீரியஸ் ஆகிடுமே..இந்த மனுசன்  ரஞ்சி மாஞ்சு மாஞ்சு சேவை செய்யும்போது யார் வீட்டு எழவோனு டிவில சீரியல் பார்க்கானேன்னு நினைச்சேன்..நினைச்சது சரியாப் போச்சு..ஆனா, அந்த ரஞ்சியைத் தாங்க நம்மால புரிஞ்சிக்க முடியலை..ஏன் இப்படி ஒரு பாழுங்கிணத்துல போயி தண்ணி இறைச்சாரு?

தன்ஷா..ஹன்ஸா?:

போன வாரம் ஏதோ ஒரு வேகத்துல ஹன்சி மன்றத்தைக் கலைக்கலாமான்னு கேட்டுட்டேன்..உடனே ஒரு பதிவர் கிட்டேயிருந்து ஃபோன்..ஒரு பதிவர் என்ன..ஒரு பதிவர்..நம்ம தமிழ்வாசி தான் அது...(இப்போல்லாம் நாம ஒரு கிசுகிசு எழுதுனா, 4 பேர் வந்து என்னைத் தானே சொன்னே?-ன்னு கேட்டு 4 வேறவேற மேட்டர் சொல்றாங்க..எதுக்கு வம்பு!)..

தமிழ்வாசி ஃபோன் பண்ணி எனக்கு ஆறுதல் சொல்லிட்டு “நீங்க ஹன்சிக்குப் பதிலா தன்ஷிகாவை  ஏன் வச்சுக்கக்கூடாது?”ன்னு கேட்டார்.

இன்ப அதிச்சியாகி “வாட் டூ யூ மீன்”னு கேட்டேன். அவரும் உஷாராகி “தலைவியா ஏன் வச்சுக்கூடாது?”ன்னு கேட்டேன்,

“அப்படியா...சரி, தன்ஷிகா யாரு?”ன்னு கேட்டேன்.

“என்னய்யா இப்படிக் கேட்கீரு? தன்ஷிகா தெரியாதா? பேராண்மைல ‘ஒன்னுமில்லாம’ ஹாஸ்டலைச் சுத்தி வருமே..இப்போ அரவான்லகூட காட்டுகாட்டுன்னு காட்டியிருந்துச்சே”ன்னாரு..

நமக்கு டென்சன் ஆகிருச்சு..”யோவ், அது பார்க்கிறதுக்கு எங்கூர்ல ஆடு மேய்க்கிற பிள்ளை மாதிரில்ல இருக்கு..நம்ம ஹன்சி எங்கே..அது எங்கே..போய்யா”ன்னு ஃபோனை கட் பண்ணிட்டேன்..

என்ன அநியாயம் பாருங்கய்யா..நம்ம பரந்த மனசுக்கு ஏத்த மாதிரி ஒரு பரந்த ஃபிகரைக் காட்டாம இப்படி வத்தலும் தொத்தலுமாக் காட்டுனா எப்படிய்யா...ஹன்சியை ஏன் விடணும்..இல்லே, ஏன் விடணும்ங்கிறேன்..’பாழடைஞ்ச’ பத்மினியைவே நாம கைவிட்டதில்லையே..இந்த பளபள பங்களாவை ஏன்யா கைவிடணும்? கழுதை, அதுவும் ஒரு ஓரமா இருந்துட்டுப் போகட்டும்கிறேன்..என்னாங்கிறீங்க?

குவைத்துக் காரனுகளாம்...........!

என் பையன் அட்டகாசம் தாங்க முடியலீங்க..குவைத்ல ஜெயில்ல இருந்த மாதிரி இருந்துட்டு, இங்க வரவும் ஆளைப் பிடிக்க முடியலை..கடைக்குப் போய்க் காசு கொடுத்தாத் தான் மிட்டாய் தருவாங்கன்னும் புரிஞ்சுக்கிட்டான்..ரெண்டு நாள் முன்னே, பர்ஸை எப்படியோ கீழே வச்சுட்டேன். பையன் அதுல இருந்து ஒரு ஆயிரம் ருபா நோட்டை உருவிக்கிட்டு, நைஸா கடையைப் பார்த்து எஸ் ஆகியிருக்கான். நேரா கடைக்குப் போய் ஆயிர ருபா நோட்டைக் கொடுத்துட்டு, ஒரு ருபா வாட்ச் மிட்டாய் வாங்கிட்டு திரும்பிட்டான். கடைக்காரர் தான் மிரண்டுட்டாரு..

‘ஏ..ஃபாரின் போன எத்தனையோ பயலுகளைப் பார்த்திருக்கேம்யா..ஆனா செங்கோவி மாதிரி ஒரு பந்தாப் பேர்வழியைப் பார்த்ததில்லைய்யா..பிள்ளைக்க்கு முட்டாய் வாங்க ஆயிர ரூபா நோட்டால்ல கொடுத்து வுடுதான்..இங்கே இருந்த வரைக்கும் நல்லாத் தானய்யா இருந்தான்..ஒரு வருசத்துக்குள்ள வடிவேலு மாதிரில்ல ஆகிட்டான்’-ன்னு ஆரம்பிச்சு கடைக்காரரு நம்மை நாறடிச்சுப்புட்டாரு...

அட அசட்டுப்பய மவனே..இப்படியாடா பண்ணுவே...அப்பன் பேரை ஒரே நாள்ல இப்படி ரிப்பேர் ஆக்கிட்டயே...சீக்கிரம் உன்னை பேக் பண்ணனும்டோய்!

தீவிரமா யோசிக்கிறது..:
நம்ம நாடு எப்போ ஃபாரின் மாதிரி ஆகும்னு முன்னாடி யோசிச்சிருக்கேன்..ஆனா விலைவாசி விஷயத்துல இப்பவே ஃபாரின் மாதிரி ஆகிடுச்சே..100 ரூபா இல்லாம பொட்டிக்கடைக்குப் போக முடியலை..500 ரூபா இல்லாம சும்மாகூட கோவில்பட்டிக்குப் போக முடியலை!

மாமனார் ஊருல இருந்து சொந்த ஊருக்கு வந்ததுல இருந்து கறியே எடுக்கலியே..இன்னிக்கு எடுப்போம்னு போனா..ஒரு கிலோ மட்டன் 400 ரூபாங்கிறாங்க..என்னய்யா இது..இப்படி இருந்தா ஒரு மனுசன் எப்படிக் க்றி சாப்பிடறது..இவங்களே நம்மளை ஜீவ காருண்ய சங்கத்துல சேர்த்து விட்ருவாங்க போலிருக்கே...

இப்போ என்ன பண்றது?..பேசாம மாமனார் ஊருக்கே திரும்பப் போயிடலாமா?......ஒரு மனுசனுக்கு எது முக்கியம்? மட்டனா?.....மான ரோசமா?

அய்யோ...அம்மா...:

மேலும் வாசிக்க... "தன்ஷிகா தான் இனி ஹன்சிகாவா? (நானா யோசிச்சேன்)"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

20 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Friday, May 18, 2012

முருக வேட்டை_10


"தாயே..”

முருகர் வேடத்தில் இருந்த குழந்தை அழைத்தது

”மகனே”

“பத்திரமாக என்னை மலையில் கொண்டு போய் விட்டு வருவாயா?”

கவிதாவிற்கு கண்ணீர் முட்டியது.

“என் கண்ணே, இந்த அம்மாவுடனே நீ இருக்கக்கூடாதா? உன்னை கூடவே வைத்துக்கொள்ளும் அருகதையற்றவளா இந்தப் பேதை?”

முருகர் வேடத்தில் இருந்த குழந்தை சிரித்தது.

“நான் இருக்க வேண்டிய இடம் குன்று தானே தாயே?”

“முருகா..உன் விருப்பம் அதுவென்றால் இனி நான் சொல்ல என்ன இருக்கின்றது?”

பதறியபடி கண் விழித்தாள் கவிதா. சரவணனும் திடுக்கிட்டு மடியில் படுத்திருந்த கவிதாவைப் பார்த்தான்.

”என்ன அச்சு? என்ன ஆச்சு?”

“ஒ..ஒன்னுமில்லை..கனவுன்னு நினைக்கிறேன்” சொல்லியபடியே எழுந்தாள் கவிதா.

“என்ன கனவு?”

“நான் ஏறக்குறைய அவ்வையார் வேஷத்தில் இருந்தேன். அப்போ....” சொன்னாள் கவிதா.

சரவணன் சிரித்தான்.“லூசு..லூசு..நானே ஒரு நிமிசம் பதறிட்டேன்..சரி, நான் கிளம்பறேன்”

“சரி”என்றாள் ஏதோ யோசனையுடன்.

சரவணன் வெளியேறியதும் பூஜை ரூம் நோக்கி நடந்தாள். அங்கேயிருந்த முருகர் படத்தை உற்றுப் பார்த்தபடியே நின்றாள்.

‘என்ன இது...என் குழந்தை எனக்கில்லையா? என்ன சொல்கிறாய் நீ?’ யோசிக்கும்போதே கண்ணீர் முட்டியது.

‘எல்லோரும் கணவன் மாதிரியோ அப்பா மாதிரியோ குழந்தை வேண்டும் என நினைப்பார்கள். நான் உன்னை மாதிரியே அல்லவா ஒரு குழந்தையை கேட்டுக் கொண்டிருக்கிறேன். என்ன சொல்கிறாய் நீ?’

எதிரே இருந்த முருகன் எதுவும் சொல்லாமல் சிரித்துகொண்டேயிருந்தான்.
----------------------------------------------------------------------------------------------------------------------

பாண்டியன் கிண்டி சிபிசிஐடி ஆஃபீசின் கீழே பார்க்கிங் ஏரியாவில் பைக்கை நிறுத்தினான்.

அடுத்து என்ன செய்வது என்று யோசித்தான்.

முத்துராமனுக்குத் தெரிந்த நபர் தான் கொலையாளி என்றால், பாண்டியனை முத்துராமனுக்குத் தெரியும். 

பாண்டியன் யார்? ஒரே ஆஃபீசில் நான்கு வருடங்களுக்கு மேலாக வேலை பார்த்தாலும், பாண்டியன் பற்றி அதிக விவரங்கள் தெரியவில்லை. முதலில் அதைத் தெரிந்து கொள்ளவேண்டும்.

சரவணன் தன் ஆஃபீசில் உள்ள டாக்குமெண்ட் கண்ட்ரோல் ரூமின் உள்ளே சென்றான். அங்கே இருந்த ரங்கராஜன் “வாங்க சார்..என்ன இந்தப் பக்கம்..அதிசயமா இருக்கு?” என்று சிரித்தபடியே வரவேற்றார்.

”இல்லே..சும்மா தான்..ஒரு எம்ப்ளாயி டீடெய்ல் பார்க்கணும் சார்”

“யாரு?” கண்ணைச் சுருக்கியபடியே கேட்டார் ரங்கராஜன்.

“செந்தில் பாண்டியன் சார்”

“பாண்டியனா?..என்ன சார், இன்னும் உங்களுக்குள்ள பிரச்சினை முடியலியா?”

“அப்படி இல்லை சார்..இது சும்மா..வேற ஒரு ரீசனுக்காக”

”ம்..என்னா ரீசனோ..” என்று இழுத்தபடியே செல்ஃப்களில் அடுக்கப்பட்டிருந்த ஃபைலை எடுத்தார் ரங்கராஜன்.

சரவணன் பரபரப்புடன் வாங்கிப் பார்த்தான்.

செந்தில் பாண்டியன் - அப்பா பெயர் முருகையன் - திருப்பூர் - பிறந்த தேதி - ஜாதி : SC/ST - பிரம்மச்சாரி-திருப்பூர் முகவரி - சென்னை முகவரி...

வேகவேகமாக கண்ணை ஓட்டினான் சரவணன்.

திருப்பூர்..

முத்துராமனின் சொந்த ஊர் கோயம்புத்தூர் என்றார்கள். கோவிலுக்குச் சென்றது மருதமலை. பாண்டியனின் ஊர் திருப்பூர்.

இவற்றுக்கு இடையே ஏதாவது தொடர்பு உண்டா? கொங்கு மண்டலம் தாண்டி வேறு ஏதாவது தொடர்பு இருக்குமா?

”என்ன சார்..ஃபைலை எடுத்து வச்சிடவா?”

“ம்..வச்சிடுங்க சார்..தேங்க்ஸ்” என்றபடியே வெளியே வந்தான் சரவ்ணன். யோசித்தபடியே தன் கேபினை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

முத்துராமன் யாரையோ எதிர்பார்த்துத்தான் மருதமலை போகவில்லை என்றால், நிச்சயம் அவருக்கு அந்த நபர் ஃபோன் செய்திருக்க வேண்டும். அது பாண்டியன் என்றால் பாண்டியனின் நம்பரும் அங்கே இருக்க வாய்ப்பு உண்டு.

சரவணன் உடனே ஆஃபீசினுள் நுழைந்தான். முன்பு இன்ஸ்பெக்டர் விசாரித்த கேஸ் கட்டை தன் டேபிளில் இருந்து எடுத்தான்.

முத்துராமனுக்கு கடைசியாக வந்த நம்பர் என்ன என்று பார்த்தவன் அதிர்ந்தான்.

23242526.

கிண்டி சிபிசிஐடி ஆஃபீசின் நம்பர்.

(தொடரும்)

மேலும் வாசிக்க... "முருக வேட்டை_10"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

5 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Tuesday, May 15, 2012

ஹார்ட் அட்டாக்- சர்க்கரை நோய் குணமாக...(ஆயுர்வேத மருத்துவம்)


டிஸ்கி-1: இப்பதிவு என் சொந்த அனுபவத்தின் அடிப்படையில் எழுதப்படுகிறது. இதனால் ஏற்படும் எந்தவொரு பின்விளைவிற்கும் செங்கோவி பொறுப்பல்ல!


றக்குறைய இரண்டு வருடங்களுக்கு முன் ‘மாமியாருக்கு ஹார்ட் அட்டாக்’ என்று ஃபோன் வந்தது. தகவல் கேட்டதும் மனது பதறிப்போனது.(அட, எனக்கில்லீங்க..தங்ஸ்க்குத் தான்!). ஏற்கனவே அவர் ஒரு சர்க்கரை நோயாளி. இன்சுலின் ஊசி  போட்டே வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருப்பவர். கூடவே ஹார்ட் அட்டாக்கும் சேர்ந்து கொள்ள நிலைமை மிகவும் மோசம் ஆனது. 


முதல் அட்டாக் என்பதால் மாத்திரை மூலம் சரி செய்யலாம் என்று டாக்டர்கள் சொல்ல, வேளைக்கு பத்து மாத்திரை என தினமும் முப்ப்து மாத்திரைகள் சாப்பிட வேண்டிய நிலை. மாத்திரைகளும் இன்சுலின் ஊசியும் சேர்ந்து, அவரை மேலும் பலவீனமானவராய் ஆக்கின. எங்கேயும் பயணம் செய்ய முடியாது. ஒருகுடம் தண்ணீர்கூட தூக்க முடியாது. முடிந்தவரை இப்படியே காலத்தை ஓட்டிவிடலாம் என்றே அவர் முடிவு செய்தார்.


டாக்டர்களிடம் வேறு ஏதேனும் வழியில்லையா என்றுகேட்டபோது ’ஆபரேசன் செய்ய வேண்டும் என்றும் அடைப்பு இருக்கிறது, இதயம் சிறிது வீங்கினாற்போல் உள்ளது. சரிப்படுத்த முயற்சி செய்து பார்க்கலாம்’ என்றார்கள். அந்த மருத்துவமனை சி.எம் போன்ற பெரிய கைகள் செல்லும் பிரபல உயர்தர மருத்துமனை. ஸ்கேன், சோதனை என பல காரியங்களைச் செய்து என்ன பிரச்சினை என்று கண்டுபிடிக்கவே லட்சங்களில் பில் வந்திருந்தது. இன்னும் ஆபரேசன் என்றால்..(தங்கமான!) மச்சினனைத் தான் எங்காவது அடகு வைக்க வேண்டும். எனவே மருந்து மாத்திரைகளுடன் கொஞ்ச நாள் வ்ண்டி ஓடட்டும் என்று விட்டுவிட்டோம். 


அப்போது தான் கோயம்புத்தூரில் இருந்து எங்கள் உறவினர் பெண்மணி ஒருவர் எங்கள் வீட்டிற்கு வந்தார். அவருக்கும் இதயத்தில் அடைப்பு இருந்ததாகவும் கோவை-டூ-பாலக்காடு செல்லும் வழியில் மதுக்கரையில் உள்ள ஒரு ஆயுர்வேத நிலையத்தில் மருந்து வாங்கிச் சாப்பிட்டதாகவும் இப்போது எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் சொன்னார். மீண்டும் அலோபதி டாக்டரிடம் சென்று ஸ்கேன் செய்து பார்த்தபோது இதயத்திற்கு ரத்தம் செல்லும் பாதையில் இருந்த அடைப்பு நீங்கிவிட்டதாக ரிசல்ட் வந்திருக்கிறது. டாக்டராலும் நம்ப முடியவில்லையாம். 


அந்த மருந்தை 100 நாட்களுக்கு சாப்பிட வேண்டும் என்றும் இருபதாயிரம் ரூபாய் விலை  என்றும் சொன்னார். ஏகப்பட்ட போலிகள் நடமாடும் உலகில், இதை நம்ப் முடியவில்லை. ஆனால் அவர் மீண்டும் வற்புறுத்தி அங்கே சென்று வரச்சொன்னார். போகும்போது இதுவரை செய்த அனைத்து டெஸ்ட் ரிப்போர்ட்களையும் கொண்டு செல்லச் சொன்னார். ‘பல லட்சங்கள் செலவழித்தும் சரியாகாத விஷயம், இருபதாயிரம் ரூபாய் மருந்தில் மட்டும் எப்படிச் சரியாகும்?’ என்று நம் அறிவுஜீவி  மூளை யோசித்தாலும் அதையும் செய்து பார்ப்போமே என்று மதுக்கரைக்கு மச்சினர் சென்று அந்த மருந்தை வாங்கி வந்தார். (ஐயாயிரம், ஐயாயிரமாக நான்கு முறை வாங்கிக் கொண்டோம்.)


ஒரு பாட்டில் நிறைய மாத்திரைகள், மற்றொரு பாட்டிலில் டானிக். கேரளா-கொச்சியில் உள்ள ஐ.எஸ்.ஓ.தரச் சான்றிதழ் பெற்ற ஒரு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ஆயுர்வேத மருந்துகள் அவை.  50 நாட்கள் மருந்து சாப்பிட்டார் என் மாமியார். உடல்நிலை சீரானது போல் தோன்றியது. இதற்கிடையில் ‘அந்த’ பிரபல மருத்துவமனையில் எங்களுக்குத் தெரிந்த டாக்டர் ஒருவர் வேலை செய்வதாக அறிந்தோம். எனவே அவர் மூலம் மீண்டும் ‘முழு உடல் பரிசோதனை’ செய்யலாம் என்று அங்கே பழைய ஸ்கேன் ரிப்போர்ட்களுடன் போனோம்.(ஆயிர்வேத சிகிச்சை எடுத்தது பற்றி நாங்கள் ஒன்றும் சொல்லவில்லை.)


ஒரு மணி நேர சோதனை என்று உள்ளே அழைத்துச் சென்றார்கள்.  நான்கு மணி நேரம் கழித்தே வெளியில் விட்டார்கள். பின்னர் அந்த உறவினர் டாக்டர் குழம்பிய நிலையில் கையில் பழைய-புதிய ரிப்போர்ட்களுடன் அமர்ந்திருந்தார். நாங்களும் என்ன ஆச்சு என்று பதறிப்போய்க் கேட்க ‘மூணு மாசம் முன்னாடி அடைப்பு-வீக்கம்-சர்க்கரை நோய்னு ஏகப்பட்ட பிராப்ளம் இருந்திருக்கு. இப்போ சர்க்கரை நோயும் இல்லை. 240ல் இருந்த சர்க்கரை அளவு 110க்கு வ்ந்துவிட்டது. இதயத்திலோ ரத்த ஓட்டத்திலோ எந்த்ப் பிரச்சினையும் இல்லை. இனிமே எந்த மருந்தும் எடுத்துக்கத் தேவியில்லை. எப்படி இது சரியாச்சுன்னு புரியாமத் தான் குழம்பிப் போய்த்தான் பார்த்துக்கிட்டு இருக்கிறேன்’ என்றார். 


ஆனாலும் அதிகளவு மாத்திரைகள் எடுத்துக்கொண்டதால், இதயத்தைச் சுற்றியிருக்கும் தோல் மட்டும் புண்ணாகியிருப்பதாகவும் அதை மட்டும் சரி செய்தால் போதும் என்றும் அந்த டாக்டர் சொன்னார். இப்போது அதற்கு மட்டுமே மாத்திரை எடுத்துக்கொண்டிருக்கிறோம்...


அந்த ஆயுர்வேத மருந்து ரத்தத்தை சுத்தம் மட்டுமே செய்வதாகவும், அதன்மூலமே மற்ற பிரச்சினைகள் தானாகவே தீர்வதாகவும் சொல்கிறார்கள். பைபாஸ் சர்ஜரி, ஆஞ்சியோபிளாஸ்ட்டி போன்ற எதுவும் தேவையில்லை என்றும் சொல்கிறார்கள்.


நான் மருத்துவம் கற்றவன் அல்ல. எங்கள் புரிதலில் ஏதேனும் தவறும் இருக்கலாம். இருப்பினும் நாங்கள் பெற்ற பயனை எல்லோரும் பெறும் வண்ண்ம், இங்கே நடந்ததைப் பதிவு செய்திருக்கிறேன். மாற்றுக்கருத்துகள் இருப்பின், பின்னூட்டத்தில் சொல்லவும். 


இதய நோய் உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள் விருப்பமிருந்தால், கீழ்க்காணும் முகவரியை அணுகி பயன்பெறுங்கள்:


ஃபேர் ஃபார்மா(Fair Pharma),
18/23 & 24, முருகன் காம்ப்ளக்ஸ்,
ஸ்ரீநாராயண குரு பாலிடெக்னிக் பஸ் ஸ்டாப் அருகில்,
மதுக்கரை - 641 105
கோயம்புத்தூர்.


ஃபோன்:
0422-2622383 / 2623240 / 6554382 / 2623506


மின்னஞ்சல் : fairpharmakovai@gmail.com
Website : www.fairpharmacochin.com


டிஸ்கி-2: அந்த மருந்து கம்பெனியுடன் எனக்கோ என் சொந்தக்களுக்கோ யாதொரு வியாபாரத்தொடர்பும் இல்லை.


டிஸ்கி-3: வாலிப வயோதிக அன்பர்களே, அந்த மருந்து நெஞ்சு வலிக்கு மட்டுமே!


மேலும் வாசிக்க... "ஹார்ட் அட்டாக்- சர்க்கரை நோய் குணமாக...(ஆயுர்வேத மருத்துவம்)"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

27 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Monday, May 14, 2012

முருக வேட்டை_9

கவிதா காலிங் பெல் சத்தம் கேட்டு கதவைத் திறந்தாள். சரவணன் நின்று கொண்டிருந்தான்.

“என்னங்க திடீர்னு...? ஆஃபீஸ் போகலியா?”

“இல்லை அச்சு... தலைவலி..கொஞ்சம் காஃபி போட்டு எடுத்துட்டு வாயேன்” சொல்லியபடியே சோஃபாவில் சரிந்தான் சரவணன்.

கவிதா கிச்சனை நோக்கி நகர்ந்தாள்.

சரவணனுக்கு குழப்பமாக இருந்தது. தன்னைப் பழி வாங்கத் தான் பாண்டியன் இந்தக் கொலையைச் செய்திருக்கிறானா? முத்துராமன் அகிலாவிற்கு காட் ஃபாதர் போன்றவர். அவரின் வழிகாட்டுதல் மூலமாகவே படித்து இந்தளவிற்கு உயர்ந்தவர் அகிலா. அகிலாவின் தந்தையும் முத்துராமனும் நெருங்கிய நண்பர்கள். எனவே என்னையும் அகிலாவையும் ஒருசேர பழி வாங்கும் விதமாக முத்துராமனை பாண்டியன் கொலை செய்தானா?

பொதுவாக சரவணன் தான் டீல் செய்யும் கேஸ்களைப் பற்றி கவிதாவிடம் டீடெய்லாக விவாதிப்பது வழக்கம். ஆனால் இப்போது கவிதா கன்சீவ் ஆகிவிட்டதால், இந்தக் கேஸ் பற்றி எதுவும் பேசுவதில்லை. அதிர்ச்சியூட்டும் விதமாக எதுவும் அவளுக்கு சொல்லக்கூடாது என்பது அகிலா மேடத்தின் கண்டிசன்.

“இந்தாங்க காஃபி” என்றாள் கவிதா.

காஃபியை வாங்கியபடியே கவிதாவைப் பார்த்தான். மிகவும் சோர்வாக இருந்தாள்.

“இன்னும் வாமிட் நிக்கலையா, அச்சு?”

“இல்லை..சாப்பிடவும் முடியலை..அதுவும் நானே சமைச்சு நானே சாப்பிடறது ரொம்பக் கஷ்டமா இருக்கு”

“அப்போ ரமணாஸ்ல வேணா சாப்பாடு சொல்லட்டுமா?”

“இருக்கட்டும்..பார்த்துக்கலாம்..என்ன ஆச்சு? ஏன் தலைவலி?”

சரவணனுக்கு கொஞ்சமாவது புலம்பினால் தான் தெளிவாகும்போல் தோன்றியது. முத்துராமன் கொலைக்கேஸை ஆரம்பம் முதல் சொன்னான். ஆனாலும் பாண்டியன் பற்றியோ, இன்று பாண்டியன் சொன்னது பற்றியோ ஒன்றும் சொல்லவில்லை. பாண்டியனை தன் சொந்த அண்ணனாகவே நினைப்பவள் கவிதா. அவன் பேசாததற்கே வருத்தப்பட்டவள், கொலை செய்யுமளவுக்குப் போய்விட்டான் என்று தெரிந்தால் அதிர்ச்சியாகி விடுவாள் என்பதால் அதைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை.

“பூஜை ரூம்ல புகுந்தா திருடியிருக்காங்க, பாவிப்பயக?”

“ஆமா அச்சு..ஆனால் மற்ற ரூம்கள்ல திருடலை”

“அப்படீன்னா அந்த பூஜை ரூம்ல தான் ஏதோ இருக்கு, இல்லியா?”

“ஆமா..அங்கே ஃபுல்லா தேடிப் பார்த்துட்டோம்..வேற தடயமே இல்லை”

”பாண்டியண்ணன் என்ன சொல்றார்?”

“அவன்..அவனுக்கும் ஒன்னும் புரியலை”

“அவரை வீட்டுக்கு கூட்டி வரச்சொன்னேனே, சொன்னீங்களா?”

“இல்லே, மறந்துட்டேன்..சொல்லிடறேன்”


“ம்..பூஜை ரூம்ல என்ன எழுதியிருந்துச்சு?”

“MARS-1024"

”அப்படீன்னா என்ன?”

“அதானே தெரியலை”

“M..ங்கிறது முத்துராமனா இருக்குமா?”

சரவணனுக்கும் அதே தான் தோன்றிக்கொண்டிருந்தது.

“இருக்கலாம்”

“அப்போ...A யாரு?”

“தெரியலை அச்சு”

“அப்படீன்னா அடுத்த கொலை விழுறவரை வெயிட் பண்ண வேண்டியது தானா?”

“மார்ஸ்-ங்கிறது நாம நினைக்கிற மாதிரி ஆள் பேர்னா, வேற வழியில்லை”

கவிதா தீவிரமாக யோசிக்கலானாள். முத்துராமன் மாதிரி ஒரு நல்ல மனிதரை பூஜை ரூம் என்ற புனிதமான இடத்தில் கொன்றது ஏன்? அந்த பூஜை ரூமில் ஏதோ இருக்கிறது. ஆன்மீகரீதியில் ஏதேனும் தவறு செய்திருப்பாரா? ஏறக்குறைய மாதம் ஒரு முறை மருதமலைக்கு போகும் குடும்பம் அது..அதுபோக முருகனின் அறுபடை வீடுகளுக்கும் அடிக்கடி ஆன்மீகச் சுற்றுலா போவார்கள் என்று சரவணனே ஒருமுறை சொல்லியிருக்கிறான். முத்துராமனில் ஆரம்பித்து அவரது பேரப்பிள்ளைகள் வரை அனைவருமே பக்திப்பூர்வமாய் வாழ்பவர்கள். அப்படி இருக்கும்போது, யார் இப்படிச் செய்வது?..அதுவும் பூஜை ரூமிலேயே? ’சாமின்னு ஒன்னு இருக்கா?’ என்று சவால் விடுவது போல் அல்லவா இருக்கிறது?

யோசிக்க யோசிக்க கவிதாவிற்கு தலை கிறுகிறுத்தது.

“நான் படுத்துக்கட்டுமா?” என்றபடியே சரவணனின் மடியில் சாய்ந்தாள் கவிதா.

சரவணன் அவளின் தலையைத் தடவியபடியே யோசித்துகொண்டிருந்தான்.

இன்னொரு கொலை விழுந்து, அவருக்கும் முத்துராமனுக்கும் பொது எதிரி யார் என்று பார்ப்பதற்குள், மேலிடத்தில் வறுத்தெடுப்பார்களே என்று சரவணனுக்கு கவலையாக இருந்தது.

M...A....R...S

பாண்டியன் தான் கொலையாளி என்றால், அடுத்து யாரைக் கொல்வான்?

A......யார்? பாண்டியனுக்கு யாரைப் பிடிக்காது?

நான்..சரவணன்..

அடுத்து

அகிலா?

யோசிக்கும்போதே பகீரென்றது சரவணனுக்கு!

(தொடரும்)

மேலும் வாசிக்க... "முருக வேட்டை_9"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

7 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Saturday, May 12, 2012

முருக வேட்டை_8

“ப்ளீஸ் ஸ்டாப்பிட் சரவணன்..அந்த இன்ஸ்பெக்டர் இதை விட மோசமால்லாம் கேள்வி கேட்டுட்டார். அப்படி எதுவும் இல்லை.இருந்தா அவங்களை ஏன் நாங்க மறைச்சு, காப்பாத்தப்போறோம்? கொலைகாரன் எங்க குடும்பத்து ஆளாத்தான் இருக்கணும்னு இல்லை. அவர்கூட ஒர்க் பண்ணவங்களாக்கூட இருக்கலாம் இல்லியா? உங்க ஆஃபீஸ்ல ஒர்க் பண்றவங்களாக்குட இருக்கலாம்..ஏன், நீங்களாக்கூட இருக்கலாம்..பேசறதுன்னா என்ன வேணா பேசலாமா சரவணன்?” என்றார் ஸ்ரீனிவாசன்.

சரவணனுக்கு ஸ்ரீனிவாசனிடம் இதற்கு மேல் கேட்க ஏதுமில்லை. ஏற்கனவே போலீஸ் ரிப்போர்ட்டை முழுதாகப் படித்திருந்ததால், விசாரணையை முடித்துக்கொள்ளும்விதமாக எழுந்தான்.

“ஓகே, சாரி சார்..வேற ஏதாவது டீடெய்ல் தேவைப்பட்டா மறுபடி வருவோம். பொறுத்துக்கணும்”

“ஷ்யூர்..நிச்சயம் எங்களால முடிஞ்ச உதவியைச் செய்வோம்”

சரவணன் பாண்டியனுடன் வெளியே வந்தான். தலை வலிப்பது போல் இருந்தது. 

“உஸ்ஸ்..பாண்டியா, எனக்கு ஒன்னும் விளங்கலை..ஒரு லீடும் கிடைக்கலை..எந்தத் தடயமும் இல்லாம பக்காவா ப்ளான் பண்ணிப் பண்ணியிருக்காங்க. உனக்கு ஏதாவது புரியுதா?”

பாண்டியன் சிரித்தான். 

“நீ பெரிய்ய ஆளு ..நீ தான் புத்திசாலின்னு புரமோசனை உனக்கு தூக்கிக்கொடுத்தால்ல அவகிட்டப் போய்க்க் கேளு, சொல்வா. என்கிட்ட ஏன் 
கேட்கிறே?” என்றான் நக்கலுடன்.

சரவணன் கோபமானான். “அப்புறம் ஏன் வலிய எனக்கு அசிஸ்டெண்ட்டா வந்து சேர்ந்தே? ஒதுங்கிப் போனவன், அப்படியே போக வேண்டியது தானே?”

“ஹா..ஹா..இதோ பார்றா...நான் உனக்கு அசிஸ்ட் பண்ணத்தான் உன்கூட வந்தேன்னு நினைக்கிறயா? இதிலேயே தெரியுதே, நீ எவ்ளோ பெரிய்ய புத்திசாலின்னு..மடையா..நான் வேடிக்கை பார்க்க வந்திருக்கிறேன்..உன்னால ஒன்னும் கிழிக்க முடியாதுன்னு எல்லாருக்கும் தெரிய வைக்க வந்திருக்கிறேன். நீயே உனக்கு வந்த புரமோசன் தப்புன்னு ஒத்துக்கறவரைக்கும் விட மாட்டேன்.”

”நான் கொலையாளியைப் பிடிச்சுட்டா?”

“உன்னால முடியாது..இங்கேயே இப்படியே நிற்க வேண்டியது தான்..கேஸ் இதுக்கு மேல ஒரு அடிகூட நகராது. ஃபிங்கர் ப்ரிண்ட்ஸ் ஏதாவது கிடைச்சிருக்கா சரவணா?”

“இல்லை”

“வேற ஏதாவது நகமோ, முடியோ கிடைச்சிருக்கா?”

“இல்லை”

“வேற என்ன தான் லீடு வச்சிருக்கே?”

“ஒன்னும் இல்லையே...கொலையாளி கண்டிப்பா புத்திசாலியாத் தான் இருக்கணும்”

“ஹா..ஹா..அப்படி ஒத்துக்கோ..அது தான் எனக்கு வேணும்”

“என்ன சொல்றே?”

“ஹா..ஹா..முத்துராமனைக் கொன்னது யாருன்னு எனக்குத் தெரியும்”

“என்ன?”

“ஆமா, எனக்குத் தெரியும். யாருன்னு சொன்னா, ஆதாரத்தோட பிடிச்சு உள்ளே போட்டிடுவயா?”

“யாரு?..சொல்லு, யாரு?”

”யாருன்னு நான் சொன்னாலும் உன்னால ஒன்னும் கிழிக்க முடியாது.”

“யாருன்னு சொல்லு..கிழிச்சுக் காட்டறேன்”

“நான் தான்”

சரவணன் அதிர்ச்சியானான்.

“என்ன?”

“நான் தான் முத்துராமனைக் கொன்னேன். நீ ஒரு முட்டாள்னு எனக்குத் தெரியும். இன்னும் ஒரு வருசம் ஆனாலும் இந்தக் கேஸை உன்னால க்ளோஸ் பண்ண முடியாதுன்னும் எனக்குத் தெரியும். இதோ, நானே சொல்றேன். நான் தான் கொலையாளி. முடிஞ்சா, அதை ப்ரூஃப் பண்ணு. என்னை ஆதாரத்தோட உள்ளே தள்ளுனா, அப்போ ஒத்துக்குவேன், புரமோசன் வாங்க நீ தகுதியானவன் தான்னு..இதை ஒரு சவாலாவே சொல்றேன். என்னைப் பிடிச்சுக்காட்டு, பார்ப்போம்”

சரவணன் உறைந்து போய் நின்றான்.


(தொடரும்)


மேலும் வாசிக்க... "முருக வேட்டை_8"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

9 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Sunday, May 6, 2012

முருக வேட்டை_7

லோக்கல் போலீஸிடம் இருந்து முத்துராமன் கொலைக்கேஸை சிபிசிஐடிக்கு மாற்றுவது அவ்வளவு எளிதாக இல்லை. இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரனுக்கு மேலதிகாரிகள் மட்டத்தில் நல்ல செல்வாக்கு இருந்ததால், அகிலாவின் கையில் கேஸ் வருவதற்குள் பெரும்பாடு படவேண்டியதாயிற்று. ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் குற்றவாளி பற்றி எவ்விதத் தடயமும் கிடைக்கவில்லை என்று ஆனபிறகே, மேலிடம் மனமிரங்கி அகிலாவிடம் இந்தக் கேஸைக் கொடுத்தது. 

சரவணன் அஃபிசியலாக விசாரணையைத் துவக்கினான். செந்தில் பாண்டியனை உடன் வைத்திருப்பது இம்சையாகவே இருக்கும் என்று தோன்றியது. எனவே அகிலாவிடம் வேறு ஆள் தரும்படி கேட்டான்.

“நோ..நோ..நீங்க ரெண்டு பேரும் இதுக்கு முன்னே ஒன்னா டீல் பண்ண கேஸ் எல்லாமே சீக்கிரமா முடிஞ்சிருக்கு. இந்தக் கேஸும் அப்படி முடியணும்னு நினைக்கிறேன். இன்னைக்குக் காலையில்கூட பாண்டியன் வந்து பேசிக்கிட்டிருந்தார்.உங்ககூட திரும்ப ஒர்க் பண்றது ரொம்ப சந்தோசமா இருக்குன்னார். நீங்க தேவையில்லாம பயப்படுறீங்கன்னு நினைக்கிறேன். நான் இருக்கேன்ல?”

பாண்டியன் தன்னிடம் பேசும்விதம் வேறு, அகிலாவிடம் பேசும் விதம் வேறு என்று புரிந்தது. வேறுவழியேயின்றி செந்தில் பாண்டியனையும்கூடவே வைத்துக்கொள்ள வேண்டியதாயிற்று.

சரவணன் முதல் விசாரணையை ஸ்ரீனிவாசனிடம் ஆரம்பிப்பதே நல்லது என்று முடிவு செய்து, முத்துராமனின் வீட்டுக்கு பாண்டியனுடன் போனான். முத்துராமன் குடும்பம் கே.கே.நகரில் இருக்கும் மற்றொரு வீட்டிற்கு மாறியிருந்தார்கள். 

ஸ்ரீனிவாசன் சுரத்தேயில்லாமல் வரவேற்றார்.

“வாங்க சரவணன். செந்தில் பாண்டியன் நீங்களும் இந்தக் கேஸை டீல் பண்றீங்களா?”

“ஆமாம் சார்..எப்படி இருக்கிறீங்க?”

“அதான் பார்க்கிறீங்களே..போலீஸ் விசாரணைன்னு பொழுது ஓடுது”

ஹாலில் மூவரும் அமர்ந்தார்கள். ஸ்ரீனிவாசனின் மனைவி, குழந்தைகள் எட்டிப்பார்த்துவிட்டு உள்ளே போய்விட்டார்கள். முத்துராமனின் மனைவியைக் காணவில்லை.

சரவணன் விசாரணையை மென்மையாகத் துவங்கினான். ”அம்மா எங்கே?”

“மருதமலை போயிருக்காங்க.”

“மறுபடியுமா?”

“ஆமாம். அப்பா போனப்புறம் அவங்க ரொம்ப இடிஞ்சு போய்ட்டாங்க. அதனால தான்..”

செந்தில் பாண்டியன் குறுக்கிட்டு “சார், சென்னைக்கு திருத்தணி தானே பக்கம்? ஏன் எல்லாரும் எப்பவும் மருதமலை போறீங்க?” என்றான்.

“எங்க பூர்வீகம் கோயம்புத்தூர். மூணு ஜெனரேசன் முன்னாடியே இங்க வந்துட்டோம். அதனால தான்”

”சார், நான் சில பேசிக் கொஸ்டீன்ஸை மறுபடி கேட்கவேண்டியிருக்கு. நீங்க கொஞ்சம் ஒத்துழைச்சீங்கன்னா..” சரவணன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே ஸ்ரீனிவாசன் இடைமறித்து பேச ஆரம்பித்தான்.

“வீட்ல அடிக்கடி மருதமலை போவோம். அப்பா இறந்தப்பவும் அப்படித்தான் எல்லாருமே முடிவு செஞ்சுதான் கிளம்பினோம். அப்பா தான் கடைசி நேரத்தில் நான் வரலைன்னு சொல்லிட்டார். ஏன் அப்படிச் சொன்னார்னு இப்போ வரைக்கும் எங்களுக்குத் தெரியலை. எனக்கு அதே நாள் ஆஃபீஸ்ல யூரொப் க்ளையண்ட் கூட மீட்டிங் இருந்துச்சு. அதனால நான் மட்டும் சாமி கும்பிட்டுட்டு திரும்பி வந்துட்டேன். என்னோட கார்ல தான் திரும்பி வந்தேன். வீட்டுக்கு வந்து காலிங் பெல் அடிச்சா, அபப வந்து கதவைத் திறக்கலை. அதனால கதவைத் திறந்து பார்த்தேன். திறந்திடுச்சு. உள்ளே போய்ப் பார்த்தா அப்பா அந்த நிலைமைல கிடந்தார். உடனே அகிலா மேடத்துக்கு கால் பண்ணேன். அவங்க தான் லோக்கல் ஸ்டேசனுக்கும் சொல்லச் சொன்னாங்க”..

ஸ்ரீனிவாசனுக்கு மூச்சு வாங்கியது. பெருமூச்சுடன் தொடர்ந்தான் “ இதையே பல தடவை போலீஸ்கிட்டச் சொல்லியாச்சு. இப்போ நீங்க..வீட்ல, ஆஃபீஸ்ல தேவைப்பட்டா யூரோப் க்ளையண்ட்கிட்டக் கூட விசாரிச்சுக்கோங்க. உங்களால முடிஞ்சா குற்றவாளியைக் கண்டுபிடிங்க. இல்லேன்னா, சும்மா விடுங்க. அந்த முருகன் பார்த்துப்பான். தயவு செஞ்சு விசாரணைங்கிற பேர்ல எங்களை மட்டுமே குறிவச்சு இம்சை பண்ணாதீங்க”

சரவணன் அவசரமாக தலையை ஆட்டியபடி ஆரம்பித்தான். “இல்லை சார், உங்களையோ உங்க குடும்பத்து ஆட்களையோ நாங்க சந்தேகப்படலை. காணாமப் போனது பூர்வீக நகைங்கிறதால, உங்க குடும்பத்தார்கிட்டயிருந்து விசாரணையை ஆரம்பிக்க வேண்டியதாயிடுச்சு. இப்போ நாங்க இங்கே வந்தது உங்களைப் பத்திக் கேள்வி கேட்க இல்லை. உங்களுக்கு வேற யார் மேலயாவது சந்தேகம் இருக்கா?  மார்ஸ்-1030-ங்கிறது என்னன்னு ஏதாவது ஐடியா உங்க யாருக்காவது இருக்கான்னு தெரிஞ்சுக்கத் தான்”

“எங்க அப்பா நல்லவர். பதவியை யூஸ் பண்ணி, அஞ்சு பைசாகூட அவர் சம்பாதிச்சதில்லை. ஏன், எனக்கு வேலை கூட நானே படிச்சு வாங்கிக்கிட்டது தான். அவர் எத்தனையோ குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக்கொடுத்திருக்கார். எத்தனையோ அரசியல்வாதிங்க பேச்சைக் கேட்காம, மனசாட்சிப்படி நடந்திருக்கார். அதனால எதிரிங்கன்னா அவங்கள்ல யாராவது இருக்கலாம்”


“நீங்க இதுவரை சொன்னதை வச்சுப் பார்க்கிறப்போ, உங்க அப்பா யாரையோ எதிர்பார்த்துத்தான் உங்ககூட மருதமலைக்கு வரலையோன்னு தோணுது. அப்படியும் இருக்கலாமோ?”

“தெரியலை சரவணன்”

சரவணன் தயங்கியபடியே அந்தக் கேள்வியைக் கேட்டான்.”சாரீ ஃபார் ஆஸ்க்கிங் திஸ் கொஸ்டீன்....பூர்வீக நகைக்காகத் தான் கொலைன்னா, உங்க சொந்தக்காரங்க யாராவது பண்ணியிருக்கலாம் இல்லியா? இல்லேன்னா சாருக்கு உங்களைத் தவிர வேற ஏதாவது...”

(தொடரும்)

மேலும் வாசிக்க... "முருக வேட்டை_7"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

15 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Saturday, May 5, 2012

முருக வேட்டை_6

செந்தில் பாண்டியன் சரவணனின் நண்பன். முன்னாள் நண்பன் என்றும் சொல்லலாம். இருவருமே ஒரே நேரத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்றவர்கள். அப்போதிருந்தே பல கேஸ்களில் ஒன்றாகவே வேலை பார்த்தவர்கள். கவிதாவுக்கு உடன்பிறந்தோர் கிடையாது. எனவே செந்தில் பாண்டியனையே அண்ணனாக ஏற்றுக்கொண்டவள். ஆனாலும் பிரச்சினை சரவணன் இன்ஸ்பெக்டராகப் பதவி உயர்வு பெற்றபோது, வெடித்தது. செந்தில் பாண்டியன் தனக்கு ஏன் புரமோசன் வரவில்லை என்ரு அகிலாவிடமும் சரவணனிடமும் நேரடியாகவே சண்டை போட்டான். ஆஃபீசே ரணகளமாய் ஆன நாட்கள் அவை.

அதன்பின் செந்தில் பாண்டியன் யாரிடமும் அதிகம் பேசுவதில்லை. சரவணனின் வீட்டுக்கு வருவதையும் நிறுத்திவிட்டான். கவிதாவின் சமாதானமும் எடுபடவில்லை. அவனை தனக்கு அசிஸ்டெண்டாய்ப் போடுவதாகச் சொன்னால், அதிர்ச்சி ஆகாமல் என்ன செய்வது’என்று சரவணன் நினைத்துக்கொண்டே “எதுக்கு மேம் வம்பு?” என்றான்.

”நானாச் சொல்லலை சரவணன்..பாண்டியனே வந்து கேட்டார்.’அப்போ ஏதோ கோபத்துல நடந்துக்கிட்டேன், சாரி’ன்னார். உங்ககூட திரும்ப ஒர்க் பண்ண ஆவலா இருக்காராம். உங்க ஃப்ரெண்ட்ஷிப்பை கெடுத்துட்டமோன்னு ஃபீல் பண்ணிக்கிட்டே இருந்தேன்.இப்போத்தான் எனக்கு நிம்மதியா இருக்குப்பா.”

“எதுக்கும் நல்லா யோசிச்சுப்போம் மேம்..எனக்கென்னவோ இது நல்லதாப் படலை”

“ஒன்னும் ஆகாது.பாண்டியன் பேசிக்கலா நல்ல பையன்னு தெரியாதா உங்களுக்கு?”

“பேசிக்கலா அவன் கோபக்காரன்னும் தெரியும் மேம்..ஏதாவது மனசுல வன்மம் வச்சுக்கிட்டு..”

“ச்சே..ச்சே..பாசிடிவ்வா யோசிங்க சரவணன்..நான் இருக்கேன்ல..உங்க சீட்டுக்குப் போங்க..பாண்டியனை வந்து பார்க்கச் சொல்றேன்”

“இல்லே, நானே போய்ப் பார்க்கிறேன் மேம்”

“ரொம்பப் பயப்படுறீங்க போல?”

“ஆமாம் மேம்” என்றபடியே எழுந்தவன் ஞாபகம் வந்தவனாய் ”ஒரு குட் நியூஸ் மேம்” என்றான்.

“என்ன?”

“கவிதா கன்சீவ் ஆகியிருக்காளாம்.இப்போத் தான் ஃபோன் பண்ணா”

“கங்கிராட்ஸ்..ஆகியிருக்காளாம்னு கதை மாதிரி சொல்றீங்க? நீங்க கூடப் போகலையா?”

“காலைலேயே தலை வலிக்குது, அடிக்கடி யூரின் வருதுன்னா..நான் கிண்டல் பண்ணிட்டு வந்துட்டேன்..கன்சீவ் ஆனால் வாமிட் தானே வரும்னு நினைச்சேன்”

“நோ..நோ..கன்சீவ் ஆனதுக்கு முதல் அறிகுறியே தலைவலியும் யூரினும் தான். வாமிட் அதுக்கு அப்புறம் தான்”

“ஓ..”

"கருப்பை வளரும்போது சிறுநீர்ப்பையை அழுத்தும். அதோட ஸ்பேஸ் குறையறதால அடிக்கடி யூரினை வெளியேத்த வேண்டி வரும்”

“ஐ சீ..எனக்கு இதெல்லாம் தெரியாது மேம்”

“ம்..போகப் போக நிறையத் தெரிஞ்சுப்பீங்க. அப்போத் தான் தாய்மைன்னா என்னன்னும் உங்களுக்கு முழுசாப் புரியும்”

“ஓ...ஓகே, நான் வீட்டுக்குப் போகணும். பாண்டியனைப் பார்த்துட்டுக் கிளம்பிக்கட்டுமா மேம்?”

“ஷ்யூர்..நானும் கவிதாகிட்டப் பேசுறேன்” சொல்லியபடியே ஃபோனை எடுத்தாள் அகிலா.

“ஓ.கே மேம்” விடைபெற்ற சரவணன் பாண்டியனின் கேபினை நோக்கி தயக்கத்துடன் நடந்தான். 

அகிலா கவிதாவின் மொபைலுக்கு கால் செய்தாள்.

“கங்கிராட்ஸ் கவி”

“அக்கா...தேங்க்ஸ்..நானே சொல்வோம்னு நினைச்சேன். அதுக்குள்ளே சொல்லிட்டாங்களா?”

“டாக்டர் என்ன சொன்னாங்க?”

“அவங்க ’இருக்கலாம்’னு தான் சொன்னாங்க..நானே டெஸ்ட் பண்ணிப் பார்த்துட்டேன்..அக்கா, ஒரு மாதிரி, பரபரப்பா இருக்கு..ஏஜ் அட்டெண்ட் பண்ணப்போ இருந்த மாதிரி..”என்று சொல்லிவிட்டுச் சிரித்தாள் கவிதா.

“யா..ரியல்லி, இட்ஸ் எ கிரேட் ஃபீலிங்..ரொம்ப நேரம் எங்கேயும் நிக்காதே. கிறுகிறுன்னு வரும். கன்சீவ் ஆனா ரத்தக்குழாய் எல்லாம் விரிஞ்சிடுமாம். சோ, நின்னா ரத்தம் எல்லாம் கால்ல இறங்கிடும், தலை சுத்திடும்”

“ஓ..தேங்க்ஸ்க்கா”

“அப்புறம், மூணு மாசம் முடியறவரைக்கும் ஜாக்ரதையா இருக்கணும்..கரு கொஞ்சம் வீக்கா இருக்கும். புரியுதா?”

“சரிக்கா, நான் ஹாஸ்பிடலுக்கு போகும்போது ஸ்டெப்ஸ்ல தங்தங்குன்னு இறங்கிப் போயிட்டேன். ஆனா இப்போ தரையில் கூடப் பூனை மாதிரி தான் நடக்கிறேன்க்கா”

“ஹா..ஹா.அந்தளவுக்கு பயப்பட வேண்டாம்..நான் சொன்ன ‘ஜாக்ரதை’ அது இல்லை”

“அப்புறம்?”

“மூணு மாசம் முடியறவரைக்கும் கொஞ்சம் கட்டுப்பாடோட இருந்துக்கோங்க..எதுவும் வேண்டாம்”

கவிதா “ம்..”என்றபடியே வெட்கத்துடன் சிரித்தாள்.

---------------------
சரவணனுக்கு பாண்டியனுடன் பழகிய பழைய ஞாபகங்கள் வந்தன. ’எவ்வளவு திக் ஃப்ரெண்ட்ஸாக இருந்தோம்..ஒரே நாளில் கொஞ்சமும் தயங்காமல் உறவை அறுத்துவிட்டானே..கொஞ்சம் கெட்டிப்போன மனசு தான் பாண்டியனுக்கு’. பாண்டியன் உட்கார்ந்திருப்பது தெரிந்தது. மனது கொஞ்சம் திக் திக் என்று அடித்தது. சரவணன் படபடப்பாக உணர்ந்தான்.

பாண்டியன் எதிரில் போய் நின்றுகொண்டு ‘பாண்டியா” என்றான்.

பாண்டியன் முகத்தில் எவ்விதச் சலனமும் இன்றி நிமிர்ந்து பார்த்தான்.

“மேம் சொன்னாங்க..நாம திரும்ப ஒன்னா ஒர்க் பண்ணப் போறோம்னு..கேட்கவே சந்தோசமா இருந்துச்சு. அதான் பார்த்துட்டுப் போகலாம்னு வந்தேன்”

“பார்த்துட்டல்ல? போ” என்றான் பாண்டியன்.

“என்ன பாண்டியா, இப்படிப் பேசுறே?”

“பின்னே..நண்பான்னு கொஞ்சவா சொல்றே? ஒன்னா அஃபிசியலா ஒர்க் பண்ணப்போறோம், அவ்ளோ தான். திரும்பவும் நண்பா..நண்பான்னு பேசி கழுத்தறுக்கலாம்னு நினைச்சே...............”

(தொடரும்)

மேலும் வாசிக்க... "முருக வேட்டை_6"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

11 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.