Friday, September 30, 2011

விஷாலின் வெடி - திரை விமர்சனம்

அவன் இவன் படத்திற்கு அடுத்து விஷால் நடிப்பிலும் எங்கேயும் காதல் தோல்விக்குப் பின் பிரபுதேவா இயக்கத்திலும் ஆக்சன் மசாலாவாக இன்று வெளிவந்திருக்கும் படம் ‘வெடி’. இது 2008ல் தெலுங்கில் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆன ’சவுரியம்’ படத்தை விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணா தயாரிப்பில் ரீமேக்கியிருக்கிறார்கள்.
ஒளித்து மறைக்கிற அளவிற்கு கதையில் ஒன்னுமில்லை..அதனால.....

விஷாலும் பூனம் கவுரும் அண்ணன் - தங்கை. வறுமையால் சிறுவயதிலேயே மிஷனரியில் தங்கையைச் சேர்த்துவிட்டுப் பிரிகிறார் விஷால். அது புரியாமல், விஷாலை வெறுக்கிறார் பூனம். விஷால் பெரிய ஆளாகி போலீஸ் ஐ.பி.எஸ்.ஆகிறார். தூத்துக்குடி தாதா ஷாயாஜி ஷிண்டேவுடன் மோதி, அவரை ஜெயிலுக்கு அனுப்புகிறார். 

விஷால், தங்கை கல்கத்தாவில் இருப்பதை அறிந்து லீவ் போட்டு போகிறார். ஷாயாஜியும் விஷாலைப் பழி வாங்க, பூனத்தைத் தேடி கல்கத்தா வருகிறார். அப்புறம் என்னாச்சு, அண்ணன் - தங்கை சமாதானம் ஆனாங்களா, வில்லன் பழி வாங்கினாரா என்பதே கதை.

ஏதோவொரு ஊரிலிருந்து டவுனுக்கு வரும் ஹீரோ - அங்கே காமெடியன் + ஹீரோயினுடன் கொஞ்சம் சீன்ஸ் - திடீரென ஹீரோவைத் தேடி வரும் தடித்தடியான அடியாட்கள் - திடீர் பாட்ஷா ஆகி, அவர்களை துவம்சம் செய்யும் ஹீரோ - என்ன பிரச்சினை என ஒரு ஃப்ளாஷ்பேக் (இங்கே 2...தங்கச்சிக்கு ஒன்னு- வில்லனுக்கு ஒன்னு) - முடிவில் ரணகளமாகி, சுபமாகும் கிளைமாக்ஸ்!!!

-- இப்படி ஒரு திரைக்கதையுடன் 2008ல் ஆந்திராவில் ஒருபடம் வந்து வெற்றி பெற்றது ஆச்சரியம் இல்லை. ஆனால் அதன்பின் அதே சாயலில் பல படங்கள் (அதில் விஷாலின் திமிரும் ஒன்று) வந்து, நம்மை நையப்புடைத்துவிட்ட பின், அதே டெம்ப்ளேட்டில் வெடியைப் பார்க்க ‘சவுரியமாய்’ இல்லை. 
பிரபுதேவாவின் திரைக்கதையில் அவரது டச் இருக்கும். இதில் டைட்டிலில் மட்டுமே பிரபுதேவா இருக்கிறார். வழக்கமாக ஏதாவது ஒரு பாடல் காட்சியில் தலையைக் காட்டுவார், இங்கே அதுவும் மிஸ்ஸிங். எனவே ஏதோவொரு தெலுங்குப்படம் பார்த்த ஃபீலிங் தான் வருகிறதேயொழிய, பிரபுதேவா படம் என்று சொல்ல ஏதுமில்லை. 

விஷாலிற்கு பொருத்தமான கேரக்டர் தான். அவரது பாடியும் ஆக்சன் ஹீரோ வேஷத்திற்கு கச்சிதமாகப் பொருந்துகிறது. நடிப்பிலும் நல்ல முன்னேற்றம். முகத்தில் முன்பெல்லாம் எக்ஸ்பிரசன்ஸ் வராது. இப்போது நன்றாகவே நடிக்கின்றார். நன்றி பாலா! ஏற்கனவே சத்யம், தோரணை, மலைக்கோட்டை என ஆப்பு வாங்கியபின்னும் விஷால் இப்படியொரு விஷப்பரிட்சையில் ஏன் இறங்கினார் என்று தெரியவில்லை.

சமீரா ரெட்டி லாங் ஷாட்டில் மட்டும் இளமையாக, அழகாக இருக்கிறார். பாடல்காட்சிகளில் தாராளமும் உண்டு. எல்லா பிரபுதேவா பட ஹீரோயின் போலவே, இவரும் ஜோதிகா ஸ்டைல் எக்ஸ்பிரசன்ஸ் கொடுக்கிறார், நன்றாகவே இருக்கிறது. ஆனால் கதைக்கும் இவருக்கும் சம்பந்தம் கிடையாது. பூனம் கவுருக்கு கதையின் முக்கியப் பாத்திரம். ஹீரோயினாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டவர், தங்கையாகி விட்டார். சமீரா ரெட்டியை விட பளிச்சென்று இருக்கிறார். ஆனால் ஸ்டில்லில் இருக்கும் அழகு, படத்தில் நடிக்கும்போது இல்லை.
படத்தில் கொஞ்சம் ரிலீஃப், விவேக் தான். சில காட்சிகளில் நன்றாகவே சிரிக்க வைக்கிறார். அவரும் இடைவேளைக்கு மேல் காணாமல்போய்விட, அரிவாளும் ‘ஏய்’-ம் தான் மிஞ்சுகிறது.படத்தின் முக்கிய பலம், பாடல்கள் தான். எல்லாப் பாடலுமே நன்றாக இருக்கின்றன. ஆனால் நடன அமைப்பில் கோட்டை விட்டிருக்கிறார்கள். ’இச்சுக் கொடு’ பாட்டில் மட்டுமே கொஞ்சம் வித்தியாசம் காட்டியிருக்கிறார்கள். 

படத்தில் இன்னும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவர் டாக்டராக ஒரு சீனில் வரும் ஊர்வசி. அவரது அப்பாவித்தனமான படபட பேச்சு, இப்போதும் சிரிப்பை வரவழைக்கிறது. வில்லனுடன் அவர் ஆம்புலன்சில் ஊர் சுற்றும் காட்சி நீளம் என்றாலும், ஊர்வசி கலக்குகிறார். 

படம் வழக்கமான படமாக ஆகிவிட்ட நிலையில், ஆர்.டி.ராஜசேகரின் கேமிராவைப் பற்றியும், வி.டி.விஜயனின் எடிட்டிங் பற்றியும் சொல்வதற்கு ஒன்றுமில்லை.

படத்தில் லாஜிக் பற்றியும் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. என்ன தோணுதோ, அதைச் சொல்கிறார்கள், செய்கிறார்கள். தூத்துக்குடி தாதா, கல்கத்தாவிற்கு வருகிறார், தன் அத்தனை அடியாட்களுடன். எப்படியும் 100 பேர் இருக்கும். அத்தனை தடியர்களையும் மெயிண்டய்ன் பண்ணதிலேயே அவர் ஆண்டி ஆகியிருக்க வேண்டும். கல்கத்தாவில் நடுரோட்டில் வெட்டுக் குத்து நடந்தாலும், போலீஸோ மீடியாவோ கண்டுக்கிட்ட மாதிரியே தெரியலை. ஒருவேளை வெளியூர்க்காரங்க அடிச்சுக்கிட்டா, அந்த ஊர்ச் சட்டப்படி அரெஸ்ட் பண்ண முடியாதோ என்னவோ..

படத்தில் நம்மை ஒன்ற விடாமல் செய்வதே தெலுங்கு மசாலா வாடை தான். ஐம்பது பேர் வந்தாலும் அசராமல் அடிக்கும் ஹீரோ, யாராலும் கட்டுப்படுத்த முடியாத, நகரில் அட்டகாசம் செய்யும் வில்லன்கள் (லேடி போலீஸையே ரேப் பண்ணினாலும், நோ ஆக்சன்), பாடல்காட்சிக்காகவே வந்து போகும் ஹீரோயின் என பக்கா தெலுங்குப் படமாகவே வந்திருக்கிறது வெடி. இன்னும் கொஞ்சம் தமிழ்ப்படுத்தியிருக்கலாம்.

வெடி - ஆந்திராப் புஸ்வாணம்
மேலும் வாசிக்க... "விஷாலின் வெடி - திரை விமர்சனம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

102 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Tuesday, September 27, 2011

உண்ணாவிரதம் : காந்தி -அன்னா ஹசாரே - மற்றும்............

மீபகாலமாக உண்ணாவிரதம் பற்றி தீவிரமான விவாதங்கள் இணையத்தில் நடந்து வருகின்றன. இதற்கான பிள்ளையார் சுழி அன்னா ஹசாரேவால் போடப்பட்டது. தொடர்ந்து கூடங்குளம் உண்ணாவிரதமும் தமிழகத்தில் பரபரப்பை ஏற்றிவிட, உண்ணாவிரதம் பற்றி சில அடிப்படையான கேள்விகள் மேலெழுந்து வருகின்றன. 

எனவே உண்ணாவிரதப் போராட்டம் பற்றிய சில அடிப்படைப் புரிதல்கள் நமக்கு அவசியம் ஆகின்றன. உண்ணாவிரதத்தை ஒரு போராட்ட வடிவாக மாற்றியவர், நமக்குக் கற்றுக்கொடுத்தவர் காந்தியடிகள் தான். 
சத்யாக்கிரகப் போராட்டத்தில் முக்கிய ஆயுதமாக உண்ணாவிரதத்தை அவர் பயன்படுத்தினார். அவரது வாழ்வில் மொத்தம் 17 முறை அவர் உண்ணாவிரதம் இருந்திருக்கிறார். அவர் முதன்முறையாக தென்னாப்பிரிக்க சத்யாக்கிரகத்தின்போதே, உண்ணாவிரதத்தை சோதித்துப் பார்த்தார். அவரது எல்லா வழிமுறைகளும் பலமுறை அவரால் சிறு அளவில் நடத்தப்ப்ட்டு, சோதிக்கப்பட்டு பின்னரே பெரிய அளவில் நடைமுறைப்படுத்தப்படும். அந்த வகையில் அவர் அவர் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு சில கட்டுப்பாடுகளை உருவாக்கினார். 

அவையாவன:

- யார் நமது அன்பிற்குரியவர்களோ, அவர்களுக்கு எதிராகவே / அவர்களை நோக்கியே உண்ணாவிரதம் நடத்தப்பட வேண்டும்.

- அந்த உண்ணாவிரதத்திற்கு வலுவான, குறிப்பிட்ட குறிக்கோள் இருக்க வேண்டும்.

- ஒருவரது சொந்த நோக்கங்களுக்காக / சுய நலத்திற்காக உண்ணாவிரதம் இருக்கக்கூடாது.

- மக்களால் முடியாத ஒன்றை செய்யும்படி, அந்த உண்ணாவிரதம் கோரக்கூடாது.

அவர் இவற்றின் அடிப்படையிலேயே உண்ணாவிரதம் இருந்தார். காந்தி தன் வாழ்நாளில் ஒருமுறைகூட ஆங்கிலேய அரசுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்ததில்லை. எப்போதெல்லாம் மக்கள் அஹிம்சாக் கொள்கையில் இருந்து திசை மாறுகிறார்களோ அப்போது இருந்தார். இந்து - முஸ்லிம்கள் மதக்கலவரத்தில் இறங்கியபோது, அதனை நிறுத்தக்கோரி உண்ணாவிரதம் இருந்தார். ஆம், அவர் மக்களை நோக்கியே உண்ணாவிரதம் இருந்தார். மக்களை ஒன்றுபடுத்தவே உண்ணாவிரதம் இருந்தார். ஏன் அவர் அரசுக்கு எதிரான ஆயுதமாக உண்ணாவிரத்தை பயன்படுத்தவில்லை?
கிறிஸ்துவத்தின் அடிப்படையிலேயே காந்தி உண்ணாவிரதத்தைக் கண்டடைந்தார். கிறிஸ்துவத்தின் தலைசிறந்த விஷயம் இயேசு கிறிஸ்துவின் தியாகம் தான். மக்களுக்காக அவர் சொன்ன நற்செய்திகள், அவர் சிலுவையில் அறையப்பட்ட பின்னரே மக்களிடம் சரியான முறையில் போய்ச்சேர்ந்தது. தன்னைப் பலியிட்டே கிறிஸ்துவத்தை நிலைநாட்டினார் இயேசு நாதர்.  ’தமக்காக பாரம் சுமந்த மனிதன் ‘ எனும் சித்திரமே பல லட்சக்கணக்கான மக்களின் மனசாட்சியுடன் பேசியது. காந்தி லண்டனில் படித்தபோது கிறிஸ்துவத்தின் மேல் ஆர்வம் கொண்டிருந்தார். 

அடிப்படையில் வைணவரான காந்திக்கு விரதம் என்பது பழக்கமான விஷயம். அது கொடுக்கும் மனவலிமையும் அவருக்கு நன்றாகவே தெரியும். இந்த இரண்டையும் இணைத்தே அவர் உண்ணாவிரதப்போராட்டத்தை வடிவமைத்தார். உண்ணாவிரதம் என்பது தனக்கு மனவலிமையூட்டும் அதே நேரத்தில் தன்னைச் சார்ந்தோரின் மனச்சாட்சியுடன் பேசும் என்பதை அவர் தீர்க்கமாக நம்பினார். 

அரசுக்கு மனசாட்சி கிடையாது. அரசு என்பது எப்போதும் இறுக்கமானது. அரசின் நடவடிக்கைகள் பொருளாதாரம், அந்நிய நாடுகளுடனான உறவு போன்ற சிக்கலான காரணிகளால் தீர்மானிக்கப்படுவது. சில நேரங்களில் மக்கள் விரோத நடவடிக்கையாகவும் அரசின் செயல்பாடுகள் அமைவதுண்டு. மொத்தத்தில் அரசு ஒரு இயந்திரத்தனமான அமைப்பு. 

அதனுடன் போராடுவதற்காக உண்ணாவிரதத்தை கையில் எடுத்தால் அது ஆபத்தாகவே முடியும். காந்தி அத்தகைய ஆபத்தை தன் தொண்டர்களுக்கு வழங்க விரும்பவில்லை. அப்படியென்றால் உண்ணாவிரதத்தால் அரசை ஒன்றுமே செய்ய முடியாதா என்றால், நேரடியாக ஒன்றுமே செய்யமுடியாது என்பதே உண்மை. அதனால் மாபெரும் பயன் ஒன்று உண்டு.

ஆம், மேலே சொன்னபடி அது மக்களின் மனசாட்சியுடன் பேசும். கோரிக்கையில் நியாயம் இருந்தால், அந்தக் கோரிக்கை சமூகத்திற்கு நன்மை பயக்கும் என்று இந்தச் சமூகம் நம்பினால் மக்களை ஓரணியில் திரட்டும் வல்லமை உண்ணாவிரதத்திற்கு உண்டு. உண்ணாவிரதத்தால் முடியும் ஆகச்சிறந்த காரியம் அது மட்டுமே.
ஐரோம் ஷர்மிளா
மக்களைத் திரட்டவும், மக்களின் மனசாட்சியை தட்டியெழுப்பவும் அது உதவும். ஜனநாயக அரசு எப்போதும் எண்ணிக்கைக்கு பயப்படும். மக்கள் எந்தவொரு விஷயத்திற்காய் கூடினாலும், அரசு இறங்கி வரும். சமூக ஒழுங்கு கெட்டுவிடக்கூடாதென்பதாலும், ஓட்டுக்காகவுமே ஜனநாயக அரசு இறங்கிவரும்.

இந்த அடிப்படையிலேயே நாம் நமக்குத் தெரிந்து நடந்த உண்ணாவிரதங்களை பார்க்க வேண்டும். 

அன்னா ஹசாரே உண்ணாவிரதம் ஊழலுக்கு எதிரானது. இந்திய மக்கள் ஊழலைக் கண்டு மனம் வெறுத்த நிலையில் இருக்கிறார்கள். ஊழலே இந்தியாவின் மிகப்பெரிய எதிரி என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. குவிக்க முடியா எதிர்ப்பு சக்தியாக ஊழலின் மீதான கோபம் இந்தியாவெங்கும் விரவிக்கிடக்கிறது. அன்னா ஹசாரே செய்தது, அந்த கோபத்தை ஒருங்கிணைத்தது தான். இந்தியத் தலைநகரில் பல்லாயிரக்கணக்கானோர் கூடுவது என்பது அரசிற்கு நிச்சயம் தலைவலியான விஷயம். 

மீடியாக்களின் ஆதரவுடன் நடந்த அந்தப் போராட்டத்தை உடனே மேலும் பரவிடாமல் தடுக்க வேண்டிய கட்டாயம் அரசிற்கு வந்தது. எனவே அரசும் இறங்கி வந்தது. ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய நிகழ்வாக அது அமைந்தது. அன்னா ஹசாரே போன்ற வயதான பெரியவர் நினைத்தால்கூட, இந்திய அளவில் மக்களை அரசுக்கு எதிராக திருப்பிவிட முடியும் என்று அரசுக்கு உணர்த்தியதே அந்தப் போராட்டத்தின் வெற்றி. உண்ணாவிரதப் போராட்டத்தால் அவ்வளவு தான் முடியும். 

வெற்றியடையாத போராட்டங்களாக ஐரோம் ஷர்மிளாவின் போராட்டமும், திலீபனின் போராட்டமும் பலரால்குறிப்பிடப்படுகின்றன. 

ஐரோம் ஷர்மிளா என்ற மாபெரும் போராளி 25 வருடங்களாக, மணிப்பூரில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அரசு அவருக்கு வலுக்கட்டாயமாக குளுக்கோஸ் ஏற்றிவருகிறது. மணிப்பூரில் இந்திய ராணுவக் கொடுமைகளை எதிர்த்தும், இந்திய ராணுவம் விலக்கிக்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் போராடுகின்றார். ஆனால் மத்திய அரசு அதனைக் கண்டுகொள்ளவே இல்லை. அதற்கான முக்கியக் காரணம் மணிப்பூர் தாண்டி, வெளியே அந்தப் போராட்டம் மக்களுக்குத் தெரியவில்லை. அதன் நியாயங்கள் இங்கே சொல்லப்படவில்லை. அந்த நியாயங்களால் பிற மாநில மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை - என்ற சுயநலச் சிந்தனையும் ஐரோம் ஷர்மிளாவின் போராட்டம் வெற்றி பெறாமைக்கு முக்கியக் காரணம். தனக்கு பலன் இல்லாத விஷயங்களுக்கு போராட மக்கள் முன்வர மாட்டார்கள் என்பதே யதார்த்தம்.

ஈழத் தியாக தீபம் திலீபனின் உண்ணாவிரதப் போராட்டம் ஈழ வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வு. உண்ணாவிரதப் போராட்டத்தினால் ஆகக்கூடிய காரியம், மக்களை அந்த நோக்கத்திற்காக ஒன்றுதிரட்டுவதே. திலீபனின் தியாகம் அந்த வகையில் வெற்றி பெற்றது என்றே சொல்ல வேண்டும்.

அந்த 12 நாட்களும் நல்லூர்க் கந்தசாமிக் கோயிலில் பல்லாயிரக்கணக்கான மக்களை ஒன்றுகூட வைத்தது அந்தப் போராட்டம். புலிகளின் வரலாற்றில் முக்கிய நிகழ்வாக அமைந்தது திலீபனின் தியாகம். ஈழப்போராட்டம் பயங்கரவாதப் போராட்டம் அல்ல என்பதற்கு சாட்சியாக திலீபன் ஆனார்.ஆனாலும் ஏன் அந்த உயிர்த் தியாகம் காந்தி தேசத்தால் கண்டுகொள்ளப்படவில்லை என்ற கேள்வியும் நம்மிடையே எழுகிறது. 
தேசம் என்பது மக்கள் தானேயொழிய அரசு அல்ல. எப்போதும் இந்திய அரசு காந்திய அரசாக இருந்ததில்லை. சுதந்திரம் வாங்கிய நாள்முதலே ஆட்சியாளர்களுக்கு காந்தி வேண்டாத பொருளாகிப் போனார். அவர் அரசுக்குச் சொன்ன யோசனைகள் யாவும் பெரும் இம்சைகளாகவே இந்திய ஆட்சியாளர்களுக்குத் தோன்றியது. காந்தியம் வாழ்வது மக்களிடையே தானேயொழிய அரசிடம் அல்ல. 

ஒரு அரசு தன் மக்கள் ஒன்றுகூடிப் போராடினால் மட்டுமே பயப்படும். ஈழத்தில் நடந்த போராட்டம் ஈழ மக்களை ஒன்று திரட்டியும் இந்திய அரசால் கவனிக்கப்படாமல் போனதற்குக் காரணம், ஈழ மக்கள் ஒன்றுதிரளுதல் அன்னிய அரசான இந்திய அரசிற்கு ஒரு பொருட்டல்ல என்பதால் தான்.

அன்னியரான ஆங்கிலேயருக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்திருந்தால், காந்தியும் அதே நிலையையே அடைந்திருப்பார். அதனாலேயே உண்ணாவிரதப் போராட்டத்திற்கு முதல் கட்டுப்பாடாக ‘ யார் நமது அன்பிற்குரியவர்களோ, அவர்களுக்கு எதிராகவே உண்ணாவிரதம் நடத்தப்பட வேண்டும்’ என்பதை வைத்தார்.

திலீபனின் போராட்டம், தமிழர்களின் மனசாட்சியுடன் பேசியது, இன்றும் எதிர்கொள்ள முடியாத துக்கமாக அது உள்ளது. தியாகங்களின் சிறப்பே காலம் கடந்த பின்னும், வீரியம் குறையாமல் மக்களின் நினைவில் அது எழுப்பும் உரையாடல் தான். அந்த வகையில் என்றும் திலீபன் நம் மக்களுடன் பேசிக்கொண்டே தான் இருப்பார்.

இந்திய அளவிலும் உண்ணாவிரதப் போராட்டங்கள் நடத்தப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. அவற்றின் நோக்கம் சக மக்களின் ஆதரவைப் பெறுவதும், அவர்களையும் தன் போராட்டத்தில் பங்கெடுக்க வைப்பதாகவுமே இருக்க வேண்டும். 

கூடங்குளத்தில் நம் மக்கள் உண்ணாவிரதம் இருக்கும்போது, நம் பிரதமர் அதைக் கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் ஐ.நா.சபை மீட்டிங்கிற்கு கிளம்பியதை நாம் கவனத்தில் கொள்வது அவசியம். மாநில அரசு இதில் தலையிட்டதற்குக் காரணம் போராட்டத்திற்குப் பெருகும் ஆதரவு தென்மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கலாம் என்ற அச்சமே. 

நம் அன்பிற்குரியவராக மன்மோகன்சிங் இல்லாத நிலையில், மன்மோகன்சிங்கின் அன்பிற்குரியவர்களாக நாமும் இல்லாத நிலையில் அவரை நோக்கி உண்ணாவிரதம் இருப்பது நேரடியாக எவ்விதப் பலனையும் தராது என்பதே யதார்த்தம். 

முத்தாய்ப்பாக எப்போதெல்லாம் உண்ணாவிரதம் இருக்கலாம் என்று காந்தி சொன்னார் என்றால்.....

- நம் அன்பிற்குரியவர்கள் ஏதேனும் ஒரு காரியத்தில் நம்மை ஏமாற்றிவிட்ட நிலையில், நம் ஆழ்ந்த வருத்தத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்த. 

- தன்னைச் சார்ந்த மக்கள் / தொண்டர்கள், தவறான காரியத்தில் ஏதோவொரு வேகத்தில் இறங்கிவிடும்போது, பரிகாரம் தேட / அவர்களை நல்வழிக்குத் திருப்ப.

- மக்களின் மனசாட்சியுடன் பேசுவதற்கான கடைசி ஆயுதமாக பயன்படுத்த.

- சண்டையிட்டுக் கொள்ளும் தனது இருதரப்பு மக்களை ஒன்றுபடுத்த. 

ஆம், மக்களை நோக்கி நடத்தப்படுவதே காந்திய உண்ணாவிரதம்.

தியாக தீபம் திலீபனுக்கு எம் வீர வணக்கங்கள்!





மேலும் வாசிக்க... "உண்ணாவிரதம் : காந்தி -அன்னா ஹசாரே - மற்றும்............"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

98 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Friday, September 23, 2011

எங்கேயும் எப்போதும் - சினிமா - ஒரு பார்வை

மிழ்சினிமாவில் தற்போதைய ஹாட் டாபிக்காக ஆகியிருப்பது எங்கேயும் எப்போதும் படத்தின் வெற்றி தான். ஒரு நல்ல படைப்பு கொண்டாடப்படும் என்பது மீண்டும் உறுதியாகியுள்ளது. இந்தப் படம் அடிப்படையில் விபத்து பற்றிய விழிப்புணர்வுப் படமாக இருப்பினும், தற்போது டிவிடி பார்த்து மட்டுமே ‘நல்ல’ படம் கொடுக்கும் படைப்பாளிகளுக்கும் விழிப்புணர்வு கொடுக்கும் படமாக இது வந்துள்ளது.
எங்கேயும், எப்போதும் நம்மிடையே கதைகள் இருந்துகொண்டேயிருக்கின்றன. அதைப் பார்க்கத் தேவையெல்லாம் நம் சமூகம் பற்றிய அடிப்படைப் புரிதலும், நல்ல சினிமா ரசனையுமே. இதற்கு முன் நல்ல படங்களாகக் கொண்டாடப்பட்ட சேது, பருத்துவீரன், சுப்ரமண்யபுரம் வரிசையில் இந்தப் படமும் சேர்வதற்குக் காரணம், நம்மிடம் இருந்தே நமக்கான கதையை இயக்குநர் சரவணன் உருவாக்கியிருப்பது தான்.

ஒவ்வொரு காட்சியிலும் யதார்த்தம் பளிச்சிடுகிறது. சென்னைக்கு புதிதாக வரும் பெண்ணின் சந்தேகக் கண்ணோட்டத்தில் ஆரம்பித்து மெக்கானிகல் லேத்தில் வேலை பார்ப்போரின் பேச்சுவழக்கு, கம்யூனிஸ்ட்களின் பொதுக்கூட்டம் என இந்தப் படத்தில் காட்டப்படும் அனைத்துக்காட்சிகளும் இது சினிமா அல்ல, வாழ்க்கை என்ற எண்ணத்தை நமக்குள் எளிதில் ஏற்படுத்திவிடுகின்றன.

நான்கு உலகப்பட டிவிடிக்களைப் பார்த்து காட்சிகளை சுட்டுவிட்டு, மிகச் சிறந்த படைப்பாளி என்று பெயர் எடுப்பவர்களும், திருட்டைச் சுட்டிக்காட்டினால் இன்ஸ்பிரேஷன் என்று பம்முகிறவர்களும் பார்க்க வேண்டிய படம் எங்கேயும் எப்போதும்.
பேய் வேகத்தில் பறக்கும் தனியார் பேருந்துகளில் பயணம் செய்யாத ஆட்கள் இருந்துவிட முடியாது. அந்த ஆம்னி பஸ்கள் விபத்துக்குள்ளாவதை செய்தியாக பார்க்காதவர்களும்/படிக்காதவர்களும் இல்லை. நமக்கெல்லாம் நன்கு தெரிந்த, நமக்கு மிகவும் சலிப்பைத் தரக்கூடிய அட்வைஸான ‘அதி வேகம் ஆபத்து’ என்ற செய்தியை திரைப்படமாக்கவே பெரும் துணிச்சல் வேண்டும். அந்த துணிச்சலை சரவணனுக்குத் தந்திருப்பது நீட்டான திரைக்கதை.

சமீபத்தில் வந்தான் வென்றான் படத்தின் காதல் காட்சிகளைப் பார்த்தபோது, பெரும் சலிப்பே வந்தது. அடுத்து வரும் காதல் காட்சிகள் என்ன, வசனம் என்ன என்பதை எளிதில் யூகிக்க முடிந்தது. தமிழ்சினிமா காதலை எல்லா விதத்திலும் காட்டி ஓய்ந்துபோய்விட்டதோ, இனி வித்தியாசமாய்க் காட்ட ஏதுமில்லையா என்ற கேள்வியும் எழுந்தது. அந்தக் கேள்விக்கு ஒன்றல்ல இரண்டு பதில்களை இந்தப் படம் சொல்லியுள்ளது.

சென்னை வரும் அப்பாவிப் பெண்ணான அனன்யாவிற்கு வரும் காதல் - திருச்சியில் வாழும் அதிரடிப் பெண்ணான அஞ்சலிக்கு வரும் காதல் என இரண்டு அழகான காதல்கள், பார்ப்போர் மனதைக் கொள்ளை கொள்ளும் வகையில் காட்டப்படுகின்றன. இதில் நம்மை மிகவும் ஆச்சரியப்படுத்தும் விஷயம், வழக்கமான காதல் வசனங்கள் ஒன்றுகூட இதில் இல்லை.  ‘உனக்காக உயிரைக் கொடுப்பேன்...நீயின்றி நானில்லை...என்னைத் தேடினேன், உனக்குள் கண்டுகொண்டேன்’ போன்ற அச்சுப்பிச்சு டயலாக்களுக்கு இங்கே இடம் இல்லை. அவ்வளவு ஏன், இந்தப் படத்தில் காதல் வசனங்களே இல்லை எனலாம். ஆனால் காதல் மட்டும் வலுவாக இருக்கிறது.
இந்தப் படத்தின் பலமே அது தான். திரைப்படம் ஒரு காட்சி ஊடகம் என்பதை சரியாகப் புரிந்துகொண்டு, அமைக்கப்பட்டுள்ள திரைக்கதை இது. வசனங்களை நாடாமல், கேரக்டர்களின் அசைவுகளை மட்டுமே வைத்து, காதல் இங்கே சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் இந்தப் படத்தை கொஞ்சமும் போரடிக்காமல் பார்த்துக்கொள்வது வசனங்கள் தான். மெல்லிய நகைச்சுவை, எதிர்பாராமல் சரக்கென்று திரும்பும் டயலாக்ஸ், அது கொடுக்கும் ஆச்சரியம் என பல நல்ல விஷயங்களை இந்தப் படம் உள்ளடக்கியுள்ளது.

அஞ்சலிக்கு அங்காடித் தெரு வரிசையில் இன்னொரு மைல்கல் இந்தப் படம். பேசும் கண்கள், தெனாவட்டான பாவனை, பட் பட்டென்று வந்து விழும் வார்த்தைகள் என கொஞ்சமும் சினிமாத்தனமில்லாத ஹீரோயின் கேரக்டர். சமீபகாலமாக கருங்காலி, மங்காத்தா என தப்பான படம்/கேரக்டரில் வீணாக்கப்பட்ட அஞ்சலியின் திறமை, இதில் முழுதும் வெளிப்படுகிறது. அங்காடித் தெரு பார்த்தபோது, ‘இந்தப் பெண்ணிற்கு இந்த ஒரு படமே போதும், அவர் பெயர் சொல்ல’ என்று தோன்றியது. மீண்டும் அதே உணர்வு இந்தப் படத்தைப் பார்க்கும்போதும் வருகிறது. இந்தப் படத்தில் சரியாக உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறார் இந்த நல்ல நடிகை.
முதல் காட்சியிலேயே இரு பேருந்துகளும் விபத்துக்குள்ளாவதை தெளிவாகக் காட்டியதால், அடிமனதில் ஒரு பதைபதைப்பு இருந்துகொண்டாயிருக்கிறது. ஒரு விபத்தில் பலியாவது உயிர்கள் மட்டுமல்ல, பல கனவுகளும் ஆசைகளும் தான். ஒரு உயிரின் இழப்பு பல உயிர்களின் வாழ்க்கையை தலைகீழாகப் புரட்டிப்போட்டுவிடுகின்றது. இரு பேருந்துகளிலும் வரும் பயணிகளின் வாழ்க்கை படத்திற்குள் குறும்படமாக காட்டப்படுகிறது. 

அந்த கேரக்டரை நாம் உள்வாங்கிய நொடியில், விபத்து நடக்கும் காலத்திற்கு திரைக்கதை வந்து சிதைந்த கனவைக் காட்டுகிறது. மீண்டும் ஃப்ளாஷ்பேக் போய் அடுத்த கனவு, அடுத்த உயிர் என இயக்குநர் சரவணன், தான் ஒரு முக்கியமான படைப்பாளி என்று இந்த ஒரு படத்திலேயே நிரூபித்துள்ளார். வழக்கமாக இந்த மாதிரி விழிப்புணர்சுப் படங்களில் மெசேஜ் கடைசியிலேயே சொல்லப்படும். நாம் எழுந்து ஓடவும் அது வசதியாக இருக்கும். ஆனால் இதில் அந்த உத்தியை மாற்றி, நம் மனதில் அந்த மெசேஜ் பதியும் வண்ணம் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. 

இந்த நல்ல கதையை படமாக்க முன்வந்த ஏ.ஆர்.முருகதாஸ் -ஃபாக்ஸ் நிறுவனத்திற்கு நிச்சயம் நாம் நன்றி சொல்ல வேண்டும். 

கந்தசாமி படத்தின் தோல்விக்கும் மிஷ்கின் ‘அவரா யோசிச்சு’ எடுத்த அபத்தமான நந்தலாலாவின் தோல்விக்கும் பதிவர்களின் விமர்சனங்கள் முக்கியக் காரணம் என்று சம்பந்தப்பட்டோரால் குற்றம் சாட்டப்பட்டது. எங்கேயும் எப்போதும் படத்திற்கு நம் சக பதிவர்கள் கொடுத்துள்ள ஆதரவையும், உருவாக்கியுள்ள நல்ல மவுத் டாக்கையும் பார்த்தாவது, பதிவுலகம் நல்ல படங்களை ஒருபோதும் விலக்காது என்பதை நம் சினிமா நண்பர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

டிஸ்கி : இந்தப் படம் குவைத்தில் ரிலீஸ் ஆகவில்லை. நெட்டில் தரவிறக்கியே பார்த்தேன். காசு கொடுத்து பார்க்காதவருக்கு ஒரு படத்தை விமர்சனம் செய்ய உரிமையில்லை என்று நான் நம்புவதால்............இது திரை விமர்சனம் அல்ல! நல்ல படத்தைப் பற்றி என் வலைப்பூ வாசகர்களுக்கான ஒரு அறிமுகமே இந்தப் பதிவு.

மேலும் வாசிக்க... "எங்கேயும் எப்போதும் - சினிமா - ஒரு பார்வை"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

92 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Friday, September 16, 2011

வந்தான் வென்றான் - திரை விமர்சனம்

ஜெயம் கொண்டான், கண்டேன் காதலை போன்ற காதல்+ஃபேமிலி டிராமா படங்களின் இயக்குநர் ஆர்.கண்ணன் கொடுத்திருக்கும் மூன்றாவது படைப்பு வந்தான் வென்றான். கோ என்ற சூப்பர் ஹிட் படம் கொடுத்த பின் ரௌத்திரத்தில் சறுக்கிய ஜீவாவும், நீண்டநாட்களாகவே சரியான வாய்ப்பு அமையாமல் திண்டாடிய நந்தாவும் இரட்டை நாயகர்களாக நடித்து, கே.எஸ்.ஸ்ரீனிவாசன் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் படம். 
நந்தா-ஜீவாவிற்கு அப்பா வேறுவேறு என்றாலும் அம்மா ஒன்று. முதல் கணவர் இறந்த பின் செய்துகொண்ட இரண்டாவது திருமணத்தில் பிறந்த பிள்ளை தான் ஜீவா. எனவே நந்தாவிற்கு தன்னை எல்லோரும் ஒதுக்குவதாக காம்ப்ளக்ஸ். ஒரு கட்டத்தில் தன் தம்பியை கிணற்றில் தூக்கிப் போட்டு கொலை செய்து (செய்ததாக நினைத்து) விட்டு, மும்பைக்கு ஓடிப் போகிறார் நந்தா. சினிமா வழக்கப்படி மும்பை போய் பெரிய தாதாவாகவும் ஆகிறார் நந்தா.

மும்பையை கலக்கும் தாதாவான நந்தாவிடம் ஒரு உதவி கேட்டு வருகின்றார் ஜீவா. தான் ஒரு பெண்ணை(டாப்ஸி) காதலிப்பதாகவும், அவள் தந்தையை ஒரு தாதா கொன்றுவிட்டதாகவும், அந்த தாதாவை சரணடைய வைத்தால் தன்னை அவள் திருமணம் செய்துகொள்ள தயாராக இருப்பதாகவும் சொல்லி, இதற்கு நந்தா உதவ வேண்டும் என்று கேட்கிறார் ஜீவா. விலாவரியாக ஜீவாவின் காதல்கதையை கேட்ட நந்தா, யார் அந்த தாதா என்று கேட்க ‘நீ தான்’ என்கிறார் ஜீவா. அதன்பிறகு ஜீவா தன் தம்பி என்பதும் நந்தாவிற்கு தெரியவருகிறது. 
நந்தா தம்பியை ஏற்றுக்கொண்டாரா, தம்பியின் காதலுக்காக தாதா தொழிலை விட்டொழித்து போலீஸில் சரணடைந்தாரா அல்லது தம்பி அண்ணனுக்காக காதலை விட்டொழித்தாரா, டாப்ஸி தன் தந்தையின் சாவுக்கு பழி வாங்கினாரா?...................................என்பதே கதை!

ஒரு பரபரப்பான நாவலுக்கான நல்ல ஸ்டோரி லைன் தான் இது. ஆனாலும் படத்தின் முதல் பிரச்சினை திரைக்கதை தான். அடுத்தடுத்த காட்சிகளை நம்மால் எளிதாக யூகிக்க முடிகிறது. காதல் தான் இங்கே மையப் பாத்திரம். அதற்காகத் தான் இந்தப் போராட்டம் என்பதாக கதை நகர்கிறது. அப்படியிருக்கும்போது, அந்த காதல் ஜோடி சேரவேண்டுமே என்ற பதைபதைப்பு ஆடியன்ஸிற்கு வரவேண்டும். அதற்கு அந்தக் காதல்காட்சிகள் வலுவானதாக இருக்க வேண்டும். 
அந்த காதல் ஜோடி (குறிப்பாக ஹீரோயின்) கேரக்டர்ஸ் ஆடியன்ஸ் மனதை டச் செய்வதாக இருக்கவேண்டும். இங்கோ சவசவவென்று காதல் காட்சிகள். காதல் வருவதற்கான காரணமும் கொஞ்சமும் நம்பும்படி இல்லை. ஜீவா பாதிக் கதை சொல்லிக்கொண்டிருக்கும்போதே நந்தாவின் எதிர் குரூப், அவர்கள் இருக்கும் இடத்தில் நுழைந்து தாக்குதல் நடத்துகிறது. படபடவென துப்பாக்கி எடுத்துச் சண்டை போடும் நந்தா, அது முடிந்ததும் திரும்ப உட்கார்ந்துகொண்டு ‘அப்புறம் என்னாச்சு..அந்தப் பொண்ணுகிட்ட உன் லவ்வைச் சொன்னியா’ என கேட்கும்போது நமக்கே கடுப்பாக இருக்கிறது. ‘ஜீவா சொன்னதே ஒரு மொக்கை காதல்கதை..அதை இந்த ரணகளத்திலயும் வந்து கண்டினியூ பண்ணச் சொல்றாரே’ன்னு நொந்து போறோம். 

அடுத்து ஜீவா கதை சொல்லிக்கிட்டு இருக்கும்போதே போஸீஸ் கமிசனர் வேற வந்திடறாரு. அவரை அனுப்பிட்டு திரும்பவும் காதல் கதை கேட்கறார் நந்தா. முக்கால்வாசிப் படம் வரை மும்பைக் காட்சிகளாகவும், ஃப்ளாஷ்பேக்காகவும் திரைக்கதையை நல்லாத் தான் பின்னியிருக்கிறார்கள்.

ஆனால் காதல் காட்சிகள் ஸ்ட்ராங்காக இல்லாததால், நமக்கு ஆர்வம் போய்விடுகிறது. கஜினி போன்று வித்தியாசமாக காதல் காட்சிகளை அமைத்திருக்க வேண்டிய படம்..எளிதில் யூகிக்க்க்கூடிய காட்சிகளால் படம் சாதாரணமாக நகர்கிறது. 

அடுத்தது பாத்திரத் தேர்வு..மும்பையின் பெரிய தாதாவாக நந்தா. ஒட்டிய கன்னமும் வெறித்த பார்வையுமாக பத்து நாள் சாப்பிடாதவர்போல் வருகிறார் நந்தா. கமல் முதல் ரஜினி வரை செய்துவிட்ட கேரக்டர் அது. மும்பையே பார்த்து பயப்படுகிறது என்று சொல்லிவிட்டு நந்தாவைக் காட்டும்போது சப்பென்றாகி விடுகிறது. 

ஜீவா வழக்கம்போல் கொடுத்த வேலையை நன்றாகச் செய்திருக்கிறார். காதலில் ஆரம்பித்து ஆக்சன் வரை ஓகே. ஆனாலும் அவரை பாக்ஸர் என்று (சும்மா தான் இருந்தாலும்..) சொல்வது இன்னொரு வேடிக்கை. 
ஆடுகளத்தில் நடித்து ’ஓஹோ’ன்னு பேர் வாங்கியும் ஏன் இந்தப் பெண்ணிற்கு அடுத்தடுத்து படமே அமையவில்லை என்று டாப்ஸியைப் பற்றி யோசித்த நமக்கு, இதில் விடை கிடைக்கிறது. (அப்பாவை) சுட்டுப் போட்டாலும் நடிப்பு வர மாட்டேன் என்கிறது. கோபம், தாபம், நடனம், கவர்ச்சி என எதுவும் தேறவில்லை. ரொம்பக் கஷ்டம். கதையின் மையப் பாத்திரம் இப்படி இருந்தால், என்ன ஒரு அட்டாச்மெண்ட் நமக்கு வரும்?

சந்தானம் சில நேரங்களில் சிரிக்கவைக்கிறார். பலநேரங்களில் மொக்கை தான். அவ்வப்போது வந்துவிழும் ஒன்லைனர் மட்டுமே ரசிக்க வைக்கிறது. 

தமனின் இசையில் காஞ்சன மாலா, முடிவில்லா..நகருதே போன்ற பாடல்கள் நன்றாகவே இருக்கின்றன. முடிவில்லா பாடலின் நடனமும் ஓகே. நந்தாவும் ஜீவாவும் மோதும் காட்சியில் மட்டும் பிண்ணனி இசை கவனிக்க வைக்கிறது. (ஆரண்ய காண்டத்தில் இதே போன்று யுவனும் செய்திருப்பார்). மும்பையை ஓரளவு அழகாக காட்டும் பி.ஜி.முத்தையாவின் கேமரா, முதல் கிராமத்துக் காட்சிகளில் அந்த டார்க் உணர்வுகளை அருமையாக வெளிப்படுத்தி இருக்கின்றது.

காதல் பற்றி டாப்ஸி -ஜீவா பேசிக்கொள்ளும் வசனங்கள் கலக்கல். பட்டுக்கோட்டை பிரபாகரின் இருப்பை அது மட்டுமே காட்டுகிறது. மற்ற நேரங்களில் வழக்கமான வசனங்கள், உதாரணமாக ‘இப்போ என்கிட்ட உனக்குச் சொல்ல இருக்கிறது ரெண்டே வார்த்தைகள் தான் ---------------குட் பை!’
ஃபேமிலி சார்ந்த முடிச்சு விழுந்த கதை + காதல் என்ற ஆர்.கண்ணனின் முந்தைய படங்கள் போன்றே இதிலும். ஆனாலும் படத்தில் மிக முக்கிய ட்விஸ்ட் ஒன்று உள்ளது. அது தான் படத்தின் பலம். ஆனால் அது மட்டுமே காப்பாற்றும் என்று இயக்குநர் நம்பியது பெரும் தவறு. ஃபைட் க்ளப் போன்ற படங்களில் பார்த்த ட்விஸ்ட் தான் என்றாலும் சராசரி ரசிகனுக்கு அது ஆச்சரியமாக இருக்கலாம். படத்தின் தூணாக அது இருப்பதால், நான் இங்கே அதைச் சொல்ல விரும்பவில்லை.

ஆனால் அப்படி ஒரு ட்விஸ்ட் வைத்தால், படம் நெடுக புத்திசாலித்தனமாக க்ளூ கொடுத்துக்கொண்டே செல்ல வேண்டும். அது தான் படத்தை திரும்பப் பார்க்க வைக்கும். ஃபைட் க்ளப், இந்தி டான் போன்றவற்றை மீண்டும் பார்க்கும்போதே ‘அடடா..நாம் கவனிக்காமல் விட்டுவிட்டோமே’ என்று தோன்றும். அதுவே படத்திற்கு அழகூட்டும். அது தான் சரியான புத்திசாலித்தனமான திரைக்கதையும்கூட. இங்கே படத்தை திரும்ப பார்க்க வேண்டிய அவசியமே இல்லாமல், கொஞ்சம் யோசித்துவிட்டு‘ஓ..அப்படியா’ என்ற தலையாட்டலோடு ரசனை முடிந்து போகிறது. தமிழ்ப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு டூயட் சாங் களால் ‘அந்த’ காட்சிகளை நிறைத்தது தவறு.

தமிழுக்கு அந்த ட்விஸ்ட், கொஞ்சம் புதிய நல்ல முயற்சி தான். ஆனாலும் மிஸ் ஆகிவிட்டது. (கரு.பழனியப்பனும் இதே போன்று செய்திருந்தாலும்!)

வந்தான் வென்றான் - வந்தான், ஆனால்...............................!

மேலும் வாசிக்க... "வந்தான் வென்றான் - திரை விமர்சனம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

83 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Tuesday, September 13, 2011

எனக்குப் பிடித்த டாப் 6 கலக்கல் கமெண்ட்ஸ்........!

ன்று கொஞ்சம் வித்தியாசமாக எனக்குப் பிடித்த பின்னூட்டங்களில் சிலவற்றை தொகுத்துள்ளேன். எனது பிற நண்பர்களின் சீரியஸான, உருப்படியான, ஆக்கப்பூர்வமா பின்னூட்டங்கள் இங்கே தவிர்க்கப்பட்டுள்ளது. சும்மா ஜாலியான கமெண்ட்ஸ் மட்டும் இங்கே. எனவே ஆறு மனமே ஆறு.............!
நலம் தானா!
டாப் 6 :


கேபிளார் : எல்லாம் வல்ல முருகக் கடவுள் ஆசியுடன் உங்கள் பதிவுலக கதவுகள் அகண்டு விரிந்து திறக்கட்டும்- கேபிள் சங்கர்

(எனது முதல் பதிவிற்கு வந்த முதல் கமெண்ட், அதுவும் எனக்குப் பிடித்த பதிவர் கேபிளாரின் கமெண்ட் என்பதால் ஸ்பெஷல் மரியாதை..

அகண்டு விரிந்து, திறந்துவிட்டது என்றே நினைக்கின்றேன்!)

டாப் 5 :


’தலைவர் ‘ புள்ளி ராஜா : இப்படி சிரிச்சி ரொம்ப நாளாச்சிங்க தல. வழக்கமா சாரு எதுனா சீரியஸா எழுதினாதான் இப்படி சிரிப்பேன். 

செங்கோவி : ஒரு மனுசன் சாட் பண்றதைப் பார்த்து சிரிக்கிறது ரொம்பத் தப்புய்யா.


டாப் 4:
வெரி செக்ஸி!


பதிவு : என்ன வேலையில் சேரலாம்? (மெக்கானிகல் என்ஜினியர்களுக்கு)_2

ஜீ...: நல்ல பதிவு! வாழ்த்துக்கள்!...............அப்புறம்? அதென்ன 'நட்'டா? :-)

செங்கோவி : நட்டு இல்லாம அதென்ன நமீதா தொப்புளா...

ஜீ... : அடடா! என்னா வெளக்கம்! உங்க பதிலைப் பார்த்து நான் திரும்ப அந்தப் படத்தைப் பார்த்தேன்னா..பாத்துக்குங்க! :-)

இந்தப் புன்னகை என்ன விலை..
டாப் 3 :


நிரூபன் : // இனிமே நம்ம கிட்டதான் அந்த ஜட்டி இருக்குன்னு சொன்னா, நாம தான் திருட்டிட்டு இப்போ பயந்து தர்றோம்னு ஆயிடும்னு, அதை அப்படியே பதுக்கிட்டேன்!//
ஆஹா... ஐ லைக் திஸ்...சமயோசிதமா தப்பியிருக்கீங்க. நீங்க பெரிய கில்லாடி தான் பாஸ்

செங்கோவி : என்ன பெரிய கில்லாடி..யூஸ்லெஸ் கில்லாடி..அந்த ஜட்டி எனக்குச் சேரலை தெரியுமா.....

சிரிச்சு..சிரிச்சு..வந்தா.. 
டாப் 2 :


RK நண்பன்: 

நானும் அவரின் வருகையை மிக ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன் செங்கோவி... 

ரஜினி காந்த்... நிஜமாவே காண்டம் இருக்கிறது அவரிடத்தில், இல்லைனா இதனா பேர் எதிர் பார்ப்பங்களா?


செங்கோவி : யோவ், உம்ம தமிழ் டைப் ரைட்டர்ல தீயை வைக்க! அது காண்டம் இல்லையா, காந்தம்.. ஏன்யா இப்படி தீபிகா படுகோனேவை பயமுறுத்துறீங்க?
ஆத்தாடி...!
டாப் 1 :


செங்கோவி : தமிழ்வாசி எப்பவும் இப்படித் தான் பாஸ்..கமலா காமேஷ்கிட்ட கூட..சரி, வேண்டாம்!

பன்னிக்குட்டி ராம்சாமி : யோவ் கமலா காமேஷ் பத்தி உங்களுக்கு ஒரு மேட்டர் தெரியுமா?

செங்கோவி : எனக்கு எப்படிண்ணே தெரியும்..சொல்லுங்க.

பன்னிக்குட்டி ராம்சாமி: //கதை இருக்கோ இல்லியோ, சதை முக்கியம் இல்லையா..அதனால அந்த விததுலயும் இந்தப் படம் நமக்கு சரிப்பட்டு வராது..//
ஆமா இப்போ மட்டும் திரிஷாவையும், அஞ்சலியவும் வெச்சி என்னத்த கிழிக்க போறாங்க?

செங்கோவி: ஆராய்ச்சில்லாம் இருக்கட்டும்..கமலா காமேஷ் பத்தி சொல்லுங்க.

பன்னிக்குட்டி ராம்சாமி: ////அதனால இந்த படத்தைத் தான் அப்படியே காப்பி பண்றாங்கன்னா அஜித்துக்கு இன்னொரு ஆப்பு கன்ஃபார்ம்./////
இத எடுத்தா ஆப்பு கன்பர்ம்னா தல இந்த படத்தைத்தான் செலக்ட் பண்ணி இருப்பாரு....

செங்கோவி : அண்ணே, அப்புறம் அந்த கமலா காமேஷ் மேட்டர்ணே?

பன்னிக்குட்டி ராம்சாமி: //இது.த்ரிஷா அம்மையார் மட்டுமில்லாம அஞ்சலிக்குட்டியும் நடிச்சிருக்கு. அப்போ கதைல (மட்டும்) கை வச்சிருக்காங்கன்னு தானே அர்த்தம்..//
அடடா...... அப்போ படத்துல பெருசா ஒண்ணையும் எதிர்பார்க்க முடியாதுன்னு சொல்லுங்க..

செங்கோவி : ஆமாண்ணே, கரெக்டா சொன்னீங்கன்னே..அந்த கமலா காமேசு...?

செங்கோவி : யோவ், பன்னிக்குட்டி...என்னய்யா அது கமலா காமேஷ் மேட்டரு..எவ்ளோ நேரமா கேட்டுகிட்டு இருக்கேன்..நடுராத்திரில என்னய்யா விளையாட்டு இது..சின்னப் புள்ள மாதிரி...

செங்கோவி :அடப்பாவிகளா..ரெண்டு பேரும் புலம்ப விட்டுட்டு போய்ட்டாங்களே..

பன்னிக்குட்டி ராம்சாமி : அண்ணன் இன்னிக்கு கமலாகாமேஷ் பத்தி சொல்லாம விடமாட்டாரு போல இருக்கே?

செங்கோவி : அப்பாடி அண்ணன் இருக்காரு..எனக்குத் தெரியும் அண்ணன் நல்லவருன்னு!

பன்னிக்குட்டி ராம்சாமி : சரி சொல்லுறேன், சொல்லவே கூடாதுன்னு தமிழ்வாசி கெஞ்சுறாரு...

செங்கோவி : அப்போ கண்டிப்பா கில்பான்சி மேட்டர் தான்..சொல்லுங்கண்ணே..

பன்னிக்குட்டி ராம்சாமி: அதாவது கார்த்திக்குக்கு முதல் காட்சியே கமலா காமேஷ்தானாம், அவங்ககிட்ட கத்துக்கிட்டதுதான் கார்த்திக்கை பெரிய ஆளாக்குச்சாம்....... போதுமா?

செங்கோவி: ஆ......................!

பன்னிக்குட்டி ராம்சாமி : என்ன இதுக்கே செங்கோவி இப்படி ஆகிட்டாரு.....

செங்கோவி : அண்ணே..எனக்கு மயக்க மயக்கமா வருது.. தலை கிர்ருன்னு சுத்துது...நான் சாயுறேன்..

தமிழ்வாசி - Prakash : இதுக்குதான் வேணாம்னு சொன்னேன்... செங்கோவியே வாயடச்சு போயிட்டார்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------
போனஸ் -1 :


நிரூபன் : உங்க மொபைலில் நடிகைகளோடை தொடர்பிலக்கம் சேமித்து வைத்திருக்கிறீங்களா?...எனக்கும் கொடுத்து உதவ முடியுமா பிரகாஷ்?

செங்கோவி: பிரகாசு, நிரூ நடிகைங்க ஃபோன் நம்பரைத் தான் அப்படிக் கேட்காரு..நீங்க ஏதோ கெட்ட வார்த்தைன்னு நினைச்சு கமெண்ட்டை அழிச்சுடாதீங்க.


மேலே ஏதோ இருக்கும் போலிருக்கே...
போனஸ் - 2 :


பன்னிக்குட்டி ராம்சாமி : சிபிக்குள்ள இருந்த அன்னியன் கெளம்பிட்டான் போல....?

செங்கோவி : நமக்கு உள்ளே பனியன் தானே இருக்கு..சிபிக்குள்ள மட்டும் எப்படி அன்னியன்? ஒன்னும் புரியலியே.

நிரூபன் : அவ்...ஏன் இந்தக் கொலை வெறி..வலிக்குது மச்சி.

பன்னிக்குட்டி ராம்சாமி : என்ன தமிழ்வாசி நேத்து கருங்காலி படம் பார்க்க போனீங்களாமே? அப்படியே கிளுகிளுன்னு ஒரு விமர்சனத்த போட்டுடுறது?

தமிழ்வாசி - Prakash : விமர்சனம் போடற அளவுக்கு படத்துல ஒண்ணும் பெரிசா இல்லை பண்ணிக்குட்டியாரே..

பன்னிக்குட்டி ராம்சாமி : அப்போ படம் பார்த்தது உண்மைதானா? (படத்துலதான் ஒண்ணும் இல்ல, படத்துல நடிச்சவங்களை பத்தியாவது ஒரு ரெண்டு வரி, நாலு ஸ்டில்லு....?)

செங்கோவி : பன்னியாரே..அஞ்சலியை தமிழ்வாசி அவமானப்படுத்திட்டார்.

பன்னிக்குட்டி ராம்சாமி : அதைத்தான் போன கமெண்ட்ல கொஞ்சம் டீசண்ட்டா சொன்னேன், இனி முடியாது, கூட்டுங்கய்யா பஞ்சாயத்த, எலேய் சின்ராரு எட்ராந்த சொம்ப...... கட்ரா வண்டியா...

தமிழ்வாசி - Prakash : பாவி பயலுக... கொலை வெறியில இருக்காங்களே... 
தங்கத் தலைவி தான்...!

மேலும் வாசிக்க... "எனக்குப் பிடித்த டாப் 6 கலக்கல் கமெண்ட்ஸ்........!"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

171 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Monday, September 12, 2011

காந்தி, நேரு, பாரதியார் எல்லாம் அயோக்கியர்கள் தானா?


இணையத்தில் அவ்வப்போது சமபந்தம் இல்லாமல் எதையாவது தேடிப் படிப்பது என் வழக்கம். இந்த முறை பாரதியார் என்று போட்டு, தேடிக்கொண்டிருந்தேன். ஏராளமான வசைகள் வந்து விழுந்தன. அவற்றைப் பார்த்து நொந்து போய், வேறு யாரைப் பற்றியாவது படிப்போம் என்று காந்தியைத் தேடினால், நிலைமை இன்னும் மோசமாகி விட்டது. ’ஏன் இப்படி..’ என்று யோசித்துக்கொண்டே, வேண்டாத ஆர்வத்துடன் வரிசையாக நமது தேசத்தலைவர்கள் நேருவில் ஆரம்பித்து பெரியார் வரை தேடினால், புகழ்ச்சிக்கு இணையாக வசை மழை!

பொதுவாக இந்த மாதிரியான கட்டுரைகள் எழுத கொள்கை சார்ந்த நியாயங்கள் சொல்லப்படுகின்றன. ஆனால் என்னுடைய கவனம் எல்லாம் பின்னூட்டங்களின் மீதே சென்றது. இதில் இன்னும் ஆச்சரியப்படத்தக்க விஷயம் என்னவென்றால், சிலர் ஏறக்குறைய எல்லா வசைப் பதிவுகளுக்கும் என்று ஆமாம்..சாமி போட்டிருந்தது தான். பொதுவாக பாரதியை திட்டுவோர், பெரியாரை திட்டுவதில்லை. பெரியாரைத் திட்டுவோர் காந்தியைத் திட்டுவதில்லை என திட்டுவதிலும் ஒரு கொள்கை இருக்கும். ஆனால் வெறும் வம்பளப்பாக, திண்ணைப் பேச்சாக இந்த வசைகள், தமிழ் இணைய உலகில் கொட்டிக்கிடக்கின்றன.

வருங்காலத்தில் இணையமே முக்கிய ஊடகமாக, தகவல் களஞ்சியமாக ஆகும்போது, நாம் நம் சந்ததிகளுக்கு இந்த வசைகளைத் தான் தரப்போகின்றோமா என்று யோசிக்க ஆரம்பித்தேன். பொதுவாகவே அதிக ஹிட்ஸ் வாங்க, ஏதேனும் ஒரு தலைவரை திட்டினால் போதும் என்பதே இங்குள்ள நிலைமை. 

ஹிட்ஸ் விஷயத்தில் தவறு பதிவர் பக்கம் என்று குறுகிய நோக்கில் நான் எப்போதும் நினைப்பதில்லை. ஹிட்ஸ் என்பது மக்கள் எந்த விஷயத்தின் மேல் ஆர்வமாக உள்ளார்கள் என்று அறிய உதவும் அற்புதமான விஷயம். எனவே தேசத்தலைவர்களை திட்டும் பதிவுகள், அதிக ஹிட்ஸ் வாங்குகிறதென்றால், நம் மக்கள் அதன்மீது விருப்பமாக இருக்கிறார்கள் என்றே அர்த்தம் ஆகின்றது. அப்படி அந்த மக்களுக்கு, இணைய வாசகர்களுக்கு நம் தேசத்திற்காக பாடுபட்ட தலைவர்கள் மேல் என்ன கடுப்பு என்று ஆச்சரியமாக உள்ளது.

இதைப் பற்றி யோசிக்கையில் என்னுடன் கோவையில் வேலை பார்த்த பெண்ணின் ஞாபகம் வந்தது. வள்ளி என்று பெயர் வைத்துக்கொள்வோம். (அய்யா, இது புனை பெயருங்!). ஒருமுறை எதற்கோ காந்தி பற்றி பேச்சு வந்தபோது, அவர் திடீரென ‘ஐ ஹேட் காந்தி’ என்றார். எனக்கு இது மாதிரியான காந்தி பற்றிய எதிர்ப்பு சொற்கள் பழக்கமானவை என்பதால், நிதானமாக ‘ஏன்மா அப்படி?’ என்றேன். அதற்கு அவர் சொன்ன பதில் தான் அட்டகாசமாய் இருந்தது. ‘ஐ டோண்ட் நோ..பட் சம்திங் இஸ் ராங் வித் தட் பெர்சன்..ஐ டோண்ட் லைக் ஹிம்’ என்று ஆவேசமாக மீண்டும் சொன்னார். 

ஒருவரை வெறுக்க ஏதேனும் காரணம் இருக்க வேண்டும் என்பதே பொதுவான விதி. ஆனால் எவ்விதக் காரணமும் இல்லாமல் நம் தேசத் தலைவர்கள் மீது ஏன் இப்படி வெறுப்பு என்று யோசித்தவாறே, ‘எப்போதெல்லாம் உனக்கு காந்தி பற்றி வெறுப்பு/கோபம் வருகிறது?’ என்றேன். அந்தப் பெண்ணும் அசராமல் ‘ எப்போதெல்லாம் காந்தி பற்றி கேள்விப்படுகிறேனோ, அப்போதெல்லாம் ’ என்று சொன்னார்.

‘அப்படி என்னம்மா கேள்விப்படுகிறாய்?” என்று கேட்டால் ‘அவரு நல்லவரு..வல்லவரு..போராடுனாரு-ன்னு அதே பாட்டு. சின்ன வயசுல இருந்து கேட்டுச் சலிச்ச அதே பல்லவி. காந்தி என்னெல்லாம் அயோக்கியத் தனம் பண்ணியிருக்காரு தெரியுமா?’ என்றார்.

‘தெரியாதே..சொல்லும்மா’ என்றேன்.

‘பகத்சிங் தூக்கில் தொங்க நாள் குறிச்சதே காந்தி தான். அவரை விடுதலை செய்ய சின்ன துறும்பைக்கூட அவர் தூக்கிப்போடலை’ என்றார்.

இதுவும் நமக்கு பழக்கம் என்பதால் ‘இல்லையம்மா..அவர் கடிதம் எல்லாம் எழுதி மன்றாடிக் கேட்டுக்கொண்டார்..ஆனாலும் பிரிட்டிஷார் அதைக் கேட்கவில்லை’ என்றேன். அதை அந்தப் பெண் நம்பவேயில்லை. ‘இல்லை சார், காந்தி பற்றி உங்களுக்கு சரியாத் தெரியலை’ என்று தீர்ப்பு சொல்லி விவாதத்தை முடித்துக் கொண்டார். (அந்தக் கடிதம் இப்போது இங்கே கிடைக்கிறது)

இப்போது இந்த பெரும்பாலான படித்த சமூகத்தினர் நம் தேசத்தலைவர்கள் மீது, இத்தகைய அருவறுப்பையே கொண்டிருக்கிறார்கள். அதன் வெளிப்படையான ஆதாரமே, இணையத்தில் கட்டுரைகளிலும், பின்னூட்டத்திலும் குவியும் வசைகள். அந்தப் பெண்ணும் இப்போது எங்காவது ஆவேசமாக பின்னூட்டம் போட்டுக்கொண்டிருக்கலாம். இந்த மனநிலைக்கான காரணம் என்ன என்று பல நாட்கள் யோசித்திருக்கிறேன். அப்படி என்ன தவறு, நம் தலைவர்கள் செய்து விட்டார்கள் என்று குழம்பி இருக்கின்றேன்.

காந்தி போன்றோர் தீவிரமாக தேசவிடுதலைக்குப் போராடிக்கொண்டிருந்த நேரத்தில் நாம் (அதாவது நம் தாத்தா/பாட்டனார்) என்ன செய்துகொண்டிருந்தோம் என்ற கேள்வியை முதலில் கேட்டுக்கொள்வது நம்மை சாந்தப்படுத்தும். எதுவுமெ செய்யாமல் இப்போது போலவே அப்போதும் ‘தானுண்டு..தன் வேலையுண்டு’ என்று தான் இருந்தோமா என்று விசாரித்து அறிந்து கொள்வது இன்னும் அமைதியைக் கொடுக்கும். அந்த அமைதியோடு, கீழ்க்கண்ட இரு விஷயங்கள் பற்றி, யோசிக்கலாம்...

முதலாவது காரணம்...பதின்ம வயது மனநிலை (டீன் ஏஜ் மெண்டாலிட்டி!)....

நமக்கு சிறுவயது முதலே பல விஷயங்கள் சொல்லிக்கொடுக்கப்படுகின்றன. சக்தி மிகுந்த கடவுள், அக்கறை மிகுந்த தன்னலமற்ற தலைவர்கள் என்று பல விஷயங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் நமக்கு போதிக்கப்படுகின்றன. நாம் பதின்ம வயதில் நுழைந்த உடன், நாம் நமது முந்தைய தலைமுறையை விட புத்திசாலிகள் என்ற முடிவுக்கு வருகின்றோம். 

அந்த முன்முடிவுடன் அதுவரை போதிக்கப்பட்டவைகளை மூர்க்கமாக வெறுக்கத் தொடங்குகிறோம். ‘அவர்களுக்கு ஒன்றுமே தெரியவில்லை..நாம் படித்தவர்கள்..நமக்கு எல்லாம் தெரிகிறது’ என்ற முடிவுக்கு வருகின்றோம். பதின்ம வயதில் கடவுள்-மறுப்புக் கொள்கைக்குள் போகாமல், அதைத் தாண்டுபவர்கள் வெகு குறைவே.

நம் ஈகோவின் காரணமாக பதில் அளிக்க முடியாக் கேள்விகளை பெரியோரிடம் கேட்கின்றோம். ஏன் பதில் அளிக்க முடியாக் கேள்விகள் என்றால், அவற்றை வார்த்தையால் விளங்க வைக்க முடியாது என்பதால் தான். அந்தப் பருவத்தில் எதெல்லாம் போற்றப்ப்டுகின்றனவோ, அதையெல்லாம் எதிர்ப்பதே அறிவுஜீவித்தனம் என்ற ‘தெளிவுக்கு’ வருகின்றோம். பலரும் பதின்ம வயது தாண்டியதும், மெதுவாக உண்மையை உணர்கின்றனர். தங்கள் அபத்தமான ஆட்டத்தை நினைத்து வெட்க்கப்படுகிறார்கள். எனவே தன் பிள்ளைகளிடம் அதே நல்ல விஷயங்களை போதிக்கிறார்கள். அந்தப் பிள்ளைகளும் ஒருநாள் ‘போப்பா..உனக்கு ஒன்னுமே தெரியலை’ என்று சொல்லும் என்றும் நினைவில் கொள்கிறார்கள்.

அப்படி பதின்ம வயது மனநிலையை தாண்டும் பாக்கியம் எல்லோருக்கும் கிடைத்து விடுவதில்லை. அறிந்தும், அறியாமலும் நமக்குள் அந்த மனநிலை இருந்துகொண்டே இருக்கின்றது. அதன் வெளிப்பாடே இத்தகைய ஏளன வசைச் சொற்களாக இங்கே கொட்டப்படுகின்றது.

இரண்டாவது முக்கியக் காரணம்...

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவனை வானுறையும் தெய்வத்துல் வைக்கும் நம் பண்பாட்டை விட்டு, நாம் விலகிச் செல்லும் துர்ப்பாக்கிய நிலை.

பொதுவாகவே சிறு உதவி செய்தோரைக் கூட ‘தெய்வம் மாதிரி வந்து உதவி செஞ்சாருய்யா’ என்று சொல்வது நம் மரபு. ’ஒவ்வொரு உயிரிலும் உறைகிறான் இறைவன் ‘ எனும் இந்து மத தத்துவத்தின் எளிமையான வெளிப்பாடு அது. இந்த நாகரீக உலகில், மீடியாக்களின் வெளிச்சத்தில் பல சுவாமிகளின் முகத்திரை கிழிக்கப்படுகின்றது. மீடியாக்களுக்கு ஒருவர் நல்ல துறவியாக இருப்பது செய்தியே அல்ல, ஒருவன் போலிச்சாமியாராக இருப்பதே சர்க்குலேசன் கூட்டும் செய்தி. மீடியா எப்போதும் நல்ல விஷயங்களை முன் நிறுத்துவதில்லை. (அவ்வாறு போலிச்சாமியார்கள் முகத்திரை கிழிக்கப்படுவதும் வரவேற்கத் தக்கதே..இங்கே அதன் மறைமுக விளைவுகள் மட்டுமே பேசப்படுகின்றன)

இந்து மதத்தின் ஆணிவேரை அழிக்கும் சக்திகளாக இந்த போலிச்சாமியார்கள் உருவெடுத்து வருகிறார்கள். தன்னிலும், பிற உயிரிலும் இறையைக் காணும் இந்து மதக் கோட்பாடு, மிக மோசமாக அடிவாங்கும் நேரம் இது. தவிர்க்க இயலா பேரவலமாக இது நடந்துகொண்டே உள்ளது. இந்துக்களே இதை நடத்தியும் வருகிறார்கள்.

மேலும் நமது தற்போதைய அரசியல்வாதிகளும் போலிச்சாமியார்களுக்கு இணையாக நம் நம்பிக்கையை சிதைத்து வருகிறார்கள்.

எனவே யாரெல்லாம் ஓர் அளவிற்கு மேல் போற்றப்படுகிறார்களோ, அவர்களை எல்லாம் சந்தேகப்பட வேண்டும் என்ற துரதிர்ஷ்டமான மனநிலைக்கு பெருவாரியான மக்கள், குறிப்பாக படித்த தலைமுறையினர் வந்திருக்கும் நேரம் இது. 

எனவே இந்தத் தாக்கம், நம் தலைவர்கள் மீதும் விழுகின்றது. எப்போதெல்லாம் ஒரு தலைவரைப் பற்றிய புகழுரையைக் கேட்கிறோமோ, அப்போதெல்லாம் நாம் எரிச்சலுக்கு ஆளாகின்றோம். இப்படி ஒரு மனநிலை ஒரு சமுகத்திற்கு நல்லதல்ல. ஆனாலும் நாம் அந்த நிலையிலேயே இருக்கின்றோம். 


அப்படியென்றால், நம் தலைவர்கள் எல்லோரும் நல்லவர்கள் மட்டும் தானா, அவர்களிடம் குறைகள் ஏதும் இல்லையா என்று கேட்டால், அது இருக்கவே செய்கிறது. நம்மிடம் இருப்பது போல். அவர்கள் காலத்தில் வாழ்ந்த நம் முன்னோர்களிடம் இருந்தது போல், அவர்களிடமும் இருக்கவே செய்கிறது. ஆனால் அது நாம் அவர்களை இந்த அளவிற்கு வெறுத்து ஒதுக்கும் அளவிற்கா இருக்கிறது என்றால் நிச்சயமாக இல்லை எனலாம். 

எப்படி கடுமையான ஜாதீயக் காழ்ப்புணர்ச்சியுடன் வாழ்ந்த நம் முன்னோர்களை முற்றிலும் ஒதுக்கி விடாமல், ‘அன்போடு’ அவர்களின் நல்ல பக்கங்களை மட்டும் பார்த்து பெருமிதம் கொள்கிறோமே, அதையே நம் தலைவர்கள் விஷயத்திலும் நாம் ஏன் செய்வதில்லை. ஒருவரை வெறுப்பதா, விரும்புவதா என்று எதை வைத்து முடிவு செய்வது என்றால், அய்யன் வள்ளுவன் தான் உங்களுக்கு வழி காட்ட வேண்டும் :

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல் - (504)
மேலும் வாசிக்க... "காந்தி, நேரு, பாரதியார் எல்லாம் அயோக்கியர்கள் தானா?"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

101 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Thursday, September 8, 2011

இதை வெளிய யார்கிட்டயும் சொல்லிடாதீங்க சார்....

டிஸ்கி : இங்கு பெயர், ஊர் மற்றும் சில அடிப்படை விவரங்கள் மாற்றப்பட்டுள்ளன. அதனால் கவலைப்படாமல் படிங்க.

ன்று மதியம் கொஞ்சம் லேட்டாக எங்கள் கம்பெனி கேண்டீனுக்கு சாப்பிடப்போனேன். அது மதுரைக்காரர் ஒருவர் லீசுக்கு எடுத்து நடத்தும் கேண்டீன். எனவே சில தமிழர்களும் சர்வர்களாக வேலை செய்கிறார்கள். அதில் மணி அண்ணனும் ஒருவர். ரொம்ப நல்லவர். எல்லோருக்கும் சிக்கன் பீஸ் ஒன்று வைத்தால், எனக்கு ரெண்டு வைப்பார். நான் சாம்பார் ரவுண்டு முடித்த அடுத்த கணமே ரசத்துடன் ரெடியாக நிற்பார். மற்றவர்கள் கூப்பிட்டால் தான் வருவார்.

எனக்கு எப்போதுமே ஸ்பெஷல் கவனிப்பு உண்டு. ஒருவேளை அதற்குக் காரணம் நான் அவரை அண்ணா என்று அழைப்பதால் இருக்கலாம். எல்லோரும் அவரை பெயர் சொல்லியோ, ‘சாம்பார்’ ‘ரசம்’ என்றோ அழைக்கும்போது, நான் அண்ணன் என்றது அவருக்குப் பிடித்திருக்கலாம். இன்று கேண்டீனில் நான் தான் கடைசி என்பதால், ஃப்ரீயாக இருந்தார்கள். நானும் சாப்பிட்டுவிட்டு, அவருடன் ‘எந்த ஊருண்ணே நீங்க?” என்று கேட்டேன்.

“எனக்கு ராஜபாளையம்ங்க..” என்றார்.

“ராஜபாளையமா...அங்க பக்கத்துல கிராமமா?”

“இல்லை சார்..டவுனே தான்..$$$ நகர்”

அங்கே என் அண்ணன் ஒருவர் ‘பெரிய கை’ என்பதால் ”அவரைத் தெரியுமா” என்றேன்.

“நல்லாத் தெரியும் சார்..அவர் என் பிஸினஸ்க்கு எவ்வளவோ ஹெல்ப் பண்ணி இருக்கார். அவரை உங்களுக்குத் தெரியுமா?”

“ம்..அண்ணன் தான்.”

சர்வர் பிஸினஸ் என்று சொல்கிறாரே என்று ஆச்சரியப்பட்டு “என்ன பிஸினஸ் பண்ணீங்க?” என்றேன்.

“என்ன பண்ணலைன்னு கேளுங்க. அவர் ஹெல்ப் பண்ணது செங்கல் சூளை பிஸினஸ்க்கு. முதல்ல நான் மலேசியால இருந்தேன் சார். அங்க இருந்தே யாவாரத்துல இறங்குனேன். நல்ல காசு. அப்புறம் நம்மூருக்கு வந்துட்டேன் சார். விவசாயம், செங்கச் சூளை, ஏஜென்ஸின்னு மூணு பிசினஸ் பண்ணேன்..காசு கொட்டோகொட்டுன்னு கொட்டுச்சு. உங்க அண்ணன்லாம் அப்போ சாதாரண ஆளு..தப்பா நினைச்சுக்காதீங்க..ஆனா என்கூட ரொம்ப பழக்கம். அவருக்குத் தெரிஞ்ச எல்லா காண்ட்ராக்டர்கிட்டயும் என்னைப் பத்திச் சொல்லி, நிறைய கஸ்டமரை தேடிக்கொடுத்தார்..நல்ல மனுசன்..”

“நான் ஒன்னும் நினைக்கலை..சொல்லுங்க..நம்மூருல அப்போ கார் ரொம்ப கம்மி சார். அப்பவே நானும் ஒரு கார் வாங்கிட்டேன். சம்சாரம், 2 பொம்பளைப்பிள்ளைன்னு அவ்வளவு சந்தோசமான வாழ்க்கை சார்..திடீர்னு சொந்தக்காரன் ஒருத்தன் வெளிநாட்டுக்கு ஆள் அனுப்புவோம், நல்ல பிசினஸ்ன்னு சொன்னான். அவனுக்கு நிறைய ஏஜெண்ட் கூட லின்க் இருந்துச்சு..

ஒரு வருசம் நல்லாத்தான் போச்சு. மொத்தமொத்தமா நிறையப்பேரை அனுப்புவோம். ஒருதடவை 60 பேரை அனுப்ப எல்லாம் ரெடி பண்ணோம். ஆளுக்கு ஒரு லட்சம் வாங்கி, ஏஜெண்ட்கிட்ட கொடுத்தோம். திடீர்னு அந்த ஏஜெண்ட் மாயமாயிட்டான். எங்க தேடியும் கிடைக்கலை.எல்லாரும் கொடுத்த காசைக் கேட்டு மிரட்டுறாங்க..என் சொந்தக்காரனும் விட்டுட்டு வெளிநாட்டுக்கு ஓடிட்டான். காசு கொடுத்தவன் எல்லாம் கூலி வேலை பார்க்கிறவங்க..கடன உடன வாங்கி கொடுத்திருந்தாங்க..ஓடறதுக்கு மனசு கேட்கலை..என் சொத்து எல்லாத்தையும் வித்து, எல்லாருக்கும் காசை கொடுத்திட்டேன் சார்..ரெண்டு வீடு, $$$மலைகிட்ட தோப்பு எல்லாம் போச்சு..”

“$$$ மலைகிட்ட தோப்பா? எந்தத் தோப்பு?” அந்த இடம் என் பூர்வீகக் கிராமத்திற்கு அருகில் என்பதால் ஆர்வத்துடன் கேட்டேன். அவர் இடத்தைச் சொன்னார்.

எனக்கு அவரை அடையாளம் தெரிந்தது..”மணி நாயக்கரா நீங்க?” என்றேன்.

அவர் கண் கலங்கிவிட்டது. “ஆமாம் சார், என்னை இப்படி இப்பக்குள்ள யாருமே கூப்பிடலை..அங்க எல்லாரும் இப்படிதான் மரியாதையா கூப்பிடுவாங்க சார் ” என்றார்.

அவர் வாங்கிய தோப்பு என் பெரியப்பாவுடையது. மூன்று பெண்ணைக் கட்டிக்கொடுத்து கடனாளி ஆன பெரியப்பா, கடனில் இருந்து மீள வழி இல்லாமல் அதை 18 வருடம் முன்பு விற்றார். அதை விற்கும் முடிவு எடுக்கும்போது, நான் அங்கு இருந்தேன். அந்த மூன்று பெண்களும் விற்க வேண்டாம் என்று அழுதார்கள். அதுவரை ’ பெரிய மனிதராக’ இருந்தவர், அதை விற்றபின் சாதாரண மனிதர் ஆனார். பொருள் இல்லாதவரை பொருளற்றவராகச் செய்தது பணம்.

அப்போது மணி நாயக்கர் பற்றி நிறையக் கேள்விப்பட்டேன். பிஸினஸ் மேன் என்ற கௌரவம் அவருக்கு இருந்தது. இப்போது அதே மணி நாயக்கரை சர்வராக பார்ப்பேன் என்று நினைக்கவில்லை. இப்போது நான் அவரைப் பற்றிக் கேட்டது பெரும் தவறென்று புரிந்தது. அவரைப் பற்றித் தெரிந்த என் முன் சர்வராக நிற்கும் அவலத்தை அவர் உணர்ந்தார். முகம் சுண்டிவிட்டது. ஆனாலும் தொடர்ந்து, தான் வீழ்ந்த கதையை சொல்லிக்கொண்டே சென்றார்...

எனக்கு இவரிடம் தன் தோப்பை விற்ற பெரியப்பா ஞாபகம் வந்தது. அவரும் எப்படி இருந்த மனிதர்..இவரைப் போலவே...

காலம் பலரின் வாழ்க்கையையும் தலைகீழாகப் புரட்டிப்போட்டு விடுகிறது. எங்கள் ஊரில் நான் சிறுவனாக இருந்த போது அதிகாரமிக்கவர்களாக இருந்த பல குடும்பங்கள், இப்போது ஒடுங்கிக் கிடக்கின்றன. கண்முன்னே பலரும் ஒரே நாளில் உச்சியில் இருந்து கீழே விழுந்துகொண்டே இருக்கின்றார்கள்..அதன்பின்னும் எது நம்மை ‘என்னை யாராலும் அசைக்க முடியாது..நான் பெரிய ஆள்’ என்று எண்ண வைக்கின்றது? எது அதிகாரமும் பணமும் இருப்பதாலேயே சகமனிதர்களை ஏளனமாக எண்ண வைக்கின்றது? எது நம்மை கண்மண் தெரியாமல் ஆட வைக்கின்றது?

“ரெண்டு பொட்டப்புள்ளைங்க சார்..கல்யாணத்துக்கு நிக்குது. அம்பது பவுனை என் பொண்டாட்டி அப்பவே பத்திரப்படுத்திட்டா. இப்போ கல்யாணச் செலவுக்கு காசு வேணும். அதான் இங்க வந்துட்டேன். டிரைவர் வேலைன்னு சொன்னாங்க சார். சொந்தமா கார் வச்சிருந்ததால ட்ரைவிங் தெரியும். இங்க வந்தா, சர்வரா போட்டுட்டாங்க”

“என்ன வேலையா இருந்தா என்னண்ணே..திருடுறமா, ஏமாத்துறமா?” என்றேன்.

“ஆமாம் சார்..ஆள் இல்லேன்னா எச்சித்தட்டுக்கூட கழுவுவேன் சார்..இப்போதைக்கு கொஞ்சம் காசு சேர்க்கணும் சார்..புள்ளைகளை கரையேத்தணும்” என்றார் மணி நாயக்கர்.

தன் குழந்தைகளுக்காக, அவர்களின் வாழ்க்கைக்காக இங்கே தினமும் அவமானப்பட்டு சம்பாதிக்கும் அந்த நல்ல மனிதரைப் பார்க்கும்போது எனக்கு மரியாதை அதிகம் ஆகியது. வாழ்க்கையில் கடும் தோல்வியைச் சந்தித்துவிட்டபின்னும், தன் குடும்பத்தை விட்டு ஓடாமல் அவரைக் கட்டி வைத்திருப்பது எது? இந்தப் பாசத்தின் அடிவேர் எங்குள்ளது?

”சார்..ஊருக்குப் போனா என்னைப் பார்த்தேன்னு யார்கிட்டயும் சொல்ல வேண்டாம் சார்” என்றார். ஏறக்குறைய அழுகின்ற நிலையில் இருந்தார். நானும் கனத்த மனதுடன் “இல்லைண்ணே..அதெல்லாம் சொல்ல மாட்டேன்” என்று சொல்லிவிட்டு யோசனையோடே என் இடத்திற்கு வந்தேன்.

’நம்ம வாழ்க்கையை நாம முழுசா வாழணும்..எஞ்சாய்’ என்ற ஆட்டத்திற்கு நடுவே, இந்த மனிதர்களை குடும்பத்திற்காக உழைக்க வைப்பது எது? ’தனிமனித வாழ்க்கையும் சுதந்திரமுமே முக்கியம்’ என்று பேசினாலும் அடிப்படையில் கண்ணுக்குத் தெரியாத ஏதோவொரு தர்மம், நம்மை இன்னும் மனிதர்களாகவே வைத்துள்ளது...நாம் இன்று வாழ்கின்ற இந்த வாழ்க்கை, இது போல் நமக்குத் தெரிந்த/தெரியாத முன்னோர்களின் தியாகத்தால் வந்ததல்லவா? காடு, கழனியில் உழன்று படிப்படியாக நம்மை இந்த நிலைக்கு கொண்டுவந்தது வம்சவம்சமாக அவர்கள் உழைத்த பலன் எதிர்பாரா உழைப்பல்லவா? அவர்கள் எதை எதிர்பார்த்து, தன்னை வருத்தி நம்மை இந்த இடத்திற்கு கொண்டு வந்தார்கள்? ‘தன் சந்தோசம் மட்டுமே முக்கியம்’ என்று எண்ணாமல் அவர்களைக் காத்தது எது?

நிலையில்லாத உலகில் நிலைத்து நிற்கும் அந்த தர்மம் தான் என்ன?............
மேலும் வாசிக்க... "இதை வெளிய யார்கிட்டயும் சொல்லிடாதீங்க சார்...."
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

125 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Wednesday, September 7, 2011

ஹன்சிகா ரசிகர் மன்றம் - 150வது நாள் சிறப்புப் பதிவு


தங்கத் தலைவி
உருண்டைக் கிழங்கு
ஃப்ரெஷ் பீஸ்
பிரம்மா படைச்ச கொழுக்கட்டை
நமக்குப் பிடிச்ச நாட்டுக்கட்டை
திம்முன்னு இருக்கும் திம்சுக்கட்டை 
ஹன்சிகா, தமிழ்சினிமாவில் அவதரித்து, இன்றோடு 150 நாள் ஆகின்றது.(சரி பார்த்துக்கோங்கப்பா)..எனவே இன்று அதற்கான ஸ்பெஷல் பதிவு மன்றச் சிறப்பு மலராக மலர்கிறது..

ஏற்கனவே நம்ம மன்ற நடவடிக்கைகளை முடக்குவதற்காக தமிழ்வாசி மாதிரி ஆளுங்க, தனிப்பதிவு போட்டு என்னை கேவலப்படுத்திக்கிட்டு இருக்கிறது,உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். இருந்தாலும் தலைவிக்காக உயிரை மட்டுமில்லாம உடலையும்(நன்றி-விவேக்) கொடுக்கத் தயாரா இருக்கும் நாம இதுக்கெல்லாம் அசருவோமா? எனது சேவை ஹன்சிகாவுக்குத் தேவைங்கிறதால..

பாரதியாரு என்னிக்குப் பொறந்தாருன்னு தெரியாட்டியும், பாப்பா1991ம் வருசம் ஆகஸ்ட் 9-ல் தான் பொறந்துச்சுன்னு உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். அம்மணிக்கு நடிக்கிறது ஒன்னும் புதுசு கிடையாது. ஏற்கனவே குழந்தை நட்சத்திரமா(இப்போ முகம் மட்டும் அப்படி இருக்குன்னு சொல்றாங்க) ஹிந்தில நடிச்சிருக்கு..படத்துப் பேரு கோயி மில் கயி..அதுக்கு என்ன அர்த்தம்னா கோழி மில் பக்கத்துல மேயுதுன்னு அர்த்தம்! 

ஆந்திராப் பார்ட்டிக நல்லா காரமாச் சாப்பிட்டுச் சாப்பிட்டு, ரொம்ப ஷார்ப்பா இருக்காங்கண்ணே..அதனால தலைவி பெரிய பொண்ணு ஆன மேட்டர், தலைவிக்கு தெரியுமுன்னமே அதை ஹீரோயினா புக் பன்ணிட்டாங்க..படத்துப் பேரு தேசாமூடுரு. இதுக்கு அர்த்தம் தெரியலை..ஏதோ மூடு சம்பந்தமா இருக்கும்னு நினைக்கேன்..அது பாட்டுக்கு இருக்கட்டும்..

திரும்ப ஹிந்தில ஆப் கா சரூர் (ஆப்பு கண்டிப்பா உண்டு-ன்னு அர்த்தம்)படத்துல நடிச்சுச்சு.அப்புறம் கன்னடம், தெலுங்குன்னு நடிச்சிக்கிட்டு இருந்த பிள்ளை பிரபுதேவா கண்ணுல பட்டு, எங்கேயும் காதலுக்காக புக் பண்ணாரு. அது படத்துப் பேரு பாஸ்..புரளியை கிளப்பி நயந்தாராவையும் கோர்ட்டுக்கு அலைய வச்சுராதீங்க..அப்போத் தான் நம்ம கோலிவுட் ஆட்களுக்கு இந்த குளுகுளு ஐஸ்க்ரீம் கண்ணுல பட்டுச்சி. 

விதைச்சவன் ஒருத்தன்..அறுவடை பண்ணவன் ஒருத்தங்கிற கதையா, அடுத்து புக் ஆன மாப்பிள்ளை படம் முதல்ல ரிலீஸ் ஆகி, சரித்திரத்துல இடம் பிடிச்சிடுச்சு. அது ரிலீஸ் ஆனது ஏப்ரல் 8ல். இதையெல்லாம் ஞாபகம் வச்சிருக்கானேன்னு கேவலமாப் பார்க்காதீங்கய்யா..அன்னிக்கு விமர்சனம் போட்ட என் பதிவை வச்சு கண்டுபிடிச்சேன்.

அதுக்கு அப்புறம் பதிவுலகத்துல ஜொள்ளாறு ஓடுனதும், அதுல பலபேரு வழுக்கி விழுந்ததும் உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். நான் உங்களுக்குத் தெரியாத தலைவியோட மறுபக்கத்தை இப்போ காட்டப் போறேன்.

அது என்னன்னா........
ஒரு பத்திரிக்கைல அவரை பேட்டி எடுத்துப் போட்டாங்க. கேள்வி என்னன்னா உங்களை சின்ன குஷ்பூன்னு சொல்றாங்களே..அப்போ உங்களுக்கும் பிரபுக்கும்...ச்சே..உங்களுக்கும் கோயில் கட்டுவாங்களான்னு கேட்டாங்க. அதுக்கு தலைவி என்ன சொல்லுச்சு தெரியுமா..”நோ..நோ..அதெல்லாம் தப்பூ..அப்டில்லாம் செய் கூடாதூ. நட்கைன்னா ரஸ்க்கணும்..ரஸ்ச்சிட்டு உட்டுடணும்..டெம்பிள் கட்றதெல்லாம் பாவம்’னு சொல்லிருச்சு..ஆஹா..என்ன ஒரு தெளிவு...என்ன ஒரு தத்துவம்..இப்படி ரசிகர்களை நல்வழிப் படுத்துற நடிகை வேற யாராவது இருக்காங்களாய்யா?

அடுத்து அம்மணி தமிழ் படிச்சுக்கிட்டு இருக்கு. தமிழ்நாட்டுலயே பொறந்து வளர்ந்தாலும் ’ஐ டோண்ட் நோ டமில்’ சொல்ற நடிகைகளுக்கு மத்தில, வந்த 150 நாள்லயே தமிழ்படிக்க இறங்கி இருக்கிற தலைவியை நிச்சயம் நாம பாராட்டியே ஆகணும்..மச்சான்ஸ் தமிழ் மாதிரியே இன்னொரு தமிழ் சீக்கிரம் பொறக்கட்டும்.
பொறக்கட்டும்னு சொல்லவும் தான் ஞாபகம் வருது..நம்ம ஹன்சி போன மாசம் தன்னோட 20வது பிறந்த நாள் கொண்டாடுச்சு. அதை பத்திரிக்கை உலகமும், பதிவுலகமும் பப்ளிசிட்டி கொடுக்காம மறைச்சுட்டாங்க. ஆனா மன்றக் கண்மணிக நாம அப்படி விட்டுட முடியாது..அன்னிக்கு அது பண்ண காரியத்துனாக தான், அதோட ரசிகரா இருக்கற எல்லாருமே பெருமை அடைஞாங்க..என்னா பண்ணுச்சுன்னா, ஒரு ஏழைக் குழந்தையை தத்தெடுத்துக்கிச்சு.

அது மட்டும் இல்லே, ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் இதே மாதிரி ஒரு குழந்தையை தத்தெடுத்து, இப்போ 20 குழந்தைகளுக்கு அது அம்மாவா இருக்குதாம். அதைப் படிச்சதும் ஃபீல் ஆகிட்டேன். 

இப்போச் சொல்லுங்கய்யா, எங்க தலைவிக்கு ஈடா யாராவது இருக்காங்களா? அது அழகுக்கும் குணத்துக்கும் இணையா யாரையாவது சொல்ல முடியுமா?
அதோட நல்ல மனசுக்கு, அந்தப் புள்ள நல்லா இருக்கணும். நாந்தான் அவசரப்பட்டு கல்யாணம் பண்ணிட்டேன்..என்னை மாதிரியே நல்ல மனுசன் யாராவது அதுக்கு வூட்டுக்காரனா வந்து, அதை கண் கலங்காம பார்த்துக்கட்டும். ஒரே ஃபீலிங்ஸ் ஆயிருச்சுய்யா..நான் வர்றேன்..!
மேலும் வாசிக்க... "ஹன்சிகா ரசிகர் மன்றம் - 150வது நாள் சிறப்புப் பதிவு"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

213 comments:

«Oldest   ‹Older     Newer›   Newest»
«Oldest ‹Older     Newer› Newest»

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.