Thursday, August 23, 2012

முருக வேட்டை_25

உலகில் உள்ள தொட்டில் எல்லாம்
உன் பெயர் பாடும்!

உண்மை பேசும் மொழிகள் எல்லாம்
உன் புகழ் பேசும்! – ( கண்ண தாசன் )

மா..எங்க சாமியோட பேரு முருங்கு’. நீங்க முருகன்னு பாடவும் அவ முருங்குன்னு நினைச்சுட்டா

என்ன....உங்க சாமிப் பேரும் முருங்கா?”

"ஆம்..எங்கள் மலைக்கடவுளின் பெயர் முருங்கு தான்!

கூகி சொன்னதைக் கேட்டு ஆச்சரியத்தில் உறைந்தாள் கவிதா.

"மலைக்கடவுளா? எங்க முருகரும் மலைக்கடவுள் தான்

கூகி சிரித்தார். ஹா..ஹா..இதுக்கே ஆச்சரியப்பட்டா எப்படி? இங்கே இருக்கிற குஷைட் இனக்குழுகிட்டயும் ஒரு மலைக்கடவுள் இருக்கார். அவர் பேரு முரிக்’.”

என்ன சார் சொல்றீங்க?” அதுவரை அமைதியாக சரவணன் ஆச்சரியத்துடன் கேட்டான்.

ஆமா..இங்கே...ஆப்பிரிக்க நாடுகள்ல ஏறக்குறைய 21 பழங்குடி இனங்கள் முரிக்’-ங்கிற பேர்ல கடவுளை வணங்குறாங்க. சிலர் மலைக்கடவுள்னு சொல்வோம். சிலர் போர்க்கடவுள்னு சொல்வாங்க

போர்க் கடவுளா? எங்க சாமியும்..என்று கவிதா இழுக்கும்போதே கூகி தெரியும்..தெரியும்என்று சிரித்தார்.

ஆனால் இங்கே ஒரே ஒரு பிரச்சினை உண்டு. எங்க கடவுள்தான் சரின்னு ஆபிரகாமிய மதங்கள் மாதிரியே நாங்களும் நம்புறோம். அதனால ஒரு குழுவோட முரிக்’-க்கை இன்னொரு குழு கும்பிட மாட்டாங்க. இந்தியால வேற வேற பேருல இருக்கிற சாமிகளைக்கூட ஒன்னா இணைக்க முடிஞ்சது. ஆனால், இங்கே ஒரே பேர்ல இருக்கிற சாமிகளைக்கூட இணைக்க முடியலை. ஏன்னா, உங்ககிட்ட..உங்க முன்னோர்கிட்ட இருந்த தொலைநோக்குப் பார்வை எங்ககிட்ட இல்லை. உங்க முன்னோர்கள் உங்களுக்குக் கொடுத்த பொக்கிஷம்  
பிரம்மம்தான்

பிரம்மமா?”

ஆமாம்..இதுபத்தி சிவநேசன்கிட்ட நான் நிறைய டிஸ்கஸ் பண்ணியிருக்கேன்..வேற வேற இன மக்களை, வேற வேற கடவுளைக் கும்பிடற மக்களை, பிரம்மம்-ங்கிற தத்துவம் தானே இணைச்சது? அப்போ ஆறு பெரிய மதங்கள் இருந்தது இல்லியா? சைவம், வைணவம்..அப்புறம் இன்னும்.....

கூகி யோசிப்பதைப் பார்த்து கவிதா உள்ளே புகுந்தாள். கணாபாத்யம், சாக்தம், சௌரம் & கௌமாரம்

ஆங்..கரெக்ட்..கரெக்ட்..நீங்களே யோசிச்சுப்பாருங்க..இப்போ எங்க நாட்டு மக்கள் பண்ற மாதிரியே உங்க ஆறு பிரிவு மக்களும் எங்க சாமி தான் சரின்னு கிளம்பியிருந்தா, இந்தியா மாதிரி பல இன மக்கள் வாழும் நாடு என்ன ஆகியிருக்கும்? மிகப்பெரிய மனித அழிவில்லையா நடந்திருக்கும். உங்க துறவி ஒருத்தர் தானே எல்லாத்தையும் இணைச்சது?”

ஆமா..ஆதிசங்கரர்

ம்..அவர் மகான்...எப்பேர்ப்பட்ட தீர்க்க தரிசனம்..அவர் இணைச்சதுக்கு ஆன்மீகக் காரணம் மட்டுமில்லே, சமூகக்காரணமும் இருந்திருக்கணும்..அவங்களுக்குத் தெரிஞ்சிருக்கும்..இந்த பூமியை பிரம்மம்மட்டுமே காக்கும்னு..அதனால தானே உங்களால காசியையும் ராமேஸ்வரத்தையும் ஒன்னா கும்பிட முடியுது..மிகப்பெரிய விஷயம்..மிகப் பெரிய விஷயம்..இல்லேன்னா..இப்படித் தான்..எங்களை மாதிரி ஓரமா ஒளிஞ்சு வாழ்ந்துக்கிட்டு இருந்திருப்பீங்க..உலக அரங்கில் உங்களுக்கு இருக்கும் முக்கியத்துவம் வந்திருக்குமா? இந்தியாவே ரத்தக்களறியாகி, துண்டு துண்டாச் சிதறி இருக்கும்

இப்பவும் பலவிதத்துல அதுக்கான முயற்சி நடந்துக்கிட்டே இருக்கு..ஆனாலும் எங்கும் நிறைந்த பரப்பிரம்மம் எங்களைக் காக்கும்னு நம்புறேன்

ம்..காக்கணும்..காக்கணும்..அது காக்கலேன்னா, வேற யாரு நம்மைக் காப்பா?” உணர்ச்சிவசப்பட்டவராக பேசிய கூகி சற்று நேரம் அமைதியாக இருந்தார்.

நீங்களே பாருங்க..கொஞ்ச நேரம் முன்ன, போய் சாமி கும்பிடுங்கன்னு சொன்னேன்..நீங்க சரின்னு போய்க் கும்பிட்டீங்க. உண்மையைச் சொல்லணும்னா நாங்ககூட அப்படிப் பண்ண மாட்டோம். உங்களால எப்படி முடியுது? ஏன்னா உங்களுக்குத் தெரியும்..அல்லது தெரியாமலும் இருக்கலாம்..வம்ச வம்சமாச் சொல்லி ஊறிப்போன விஷயம் இல்லியா..தெரியாமலும் இருக்கும்..உங்களுக்கு..உங்களுக்குத் தெரியும்..நீங்க கும்பிடறது இந்த சிலையை இல்லை..இந்தக் கல்லை இல்லை..அதுக்குள்ள உறைஞ்சிருக்கும் இறையைன்னு..அப்படி ஒரு தத்துவம் இந்த மண்ணில் வரலை..எங்க துரதிர்ஷ்டம்..எங்க சாமியை குஷைட் ஒத்துக்க மாட்டான்..குஷைட் சாமியை கம்பா ஒத்துக்க மாட்டான்..கம்பா சாமியை நாங்க ஒத்துக்க மாட்டோம்..அப்புறம் எப்படி நாங்க விளங்குவோம்?”

கூகி சொல்லிக்கொண்டிருக்கும்போதே கூகியின் மனைவி அனைவருக்கும் உணவு கொண்டுவந்தார். எவ்வளவு நேரம் பேசிக்கிட்டிருப்பீங்க..சாப்பிடுங்கஎன்பது போல் ஏதோ சொன்னார். ஹாலில் இருந்த டைனிங் டேபிளில் அனைவரும் சாப்பிட அமர்ந்தனர்.

கவிதா இன்னும் ஆச்சரியம் அகலாதவளாக மீண்டும் அது எப்படி சாமி பேரெல்லாம் ஒரே மாதிரி இருக்கு? நம்பவே முடியலைஎன்றாள்.

கூகி புன்சிரிப்புடன் சாமிப் பேரு மட்டுமில்லை, சாமியோட குணநலன்களும் பெரும்பாலும் ஒன்னாத் தான் இருக்கு..ஒன்னு அது மலைக்கடவுளா இருக்கும் அல்ல்து போர்க்கடவுளா இருக்கும். போர்க் கடவுள்-ங்கிறது எங்கெல்லாம் இருக்குன்னு உலக அளவுல பார்த்தா, ரொம்ப ஆச்சரியப்படுவீங்க..அதுக்கான ஆரம்பம் மார்ஸாத் தான் இருக்கும்.

மார்ஸா?” என்று ஒரே நேரத்தில் கவிதாவும் சரவணனும் கேட்டனர்.

ஆமா..MARS தான்என்றார் கூகி.

(தொடரும்)
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

7 comments:

  1. thodurungal sengovi. awaiting for next episode.

    ReplyDelete
  2. க்ளுவுக்கு கிளைமாக்ஸ் நெருங்குது போல...

    ReplyDelete
  3. அப்பாடா ஒரு வழியா கதை விசாரணைக்கு திரும்பி இருக்கு

    ReplyDelete
  4. அருமையாக நகர்கிறது,முருக(முருங்கு)வேட்டை!வாழ்த்துக்கள்,செங்கோவி!!!

    ReplyDelete
  5. சுவையான பதிவு , தொடருங்கள்

    ReplyDelete
  6. ம்ம் திருபத்துடன் நகர்கின்றது!

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.