Saturday, August 25, 2012

முருக வேட்டை_27


சேல்பட்டு அழிந்தது செந்தூர் வயல்பொழில், தேங் கடம்பின்
மால்பட்டு அழிந்தது பூங்கொடியார் மனம், மா மயிலோன்
வேல்பட்டு அழிந்தது வேலையும், சூரனும், வெற்பும்!-அவன்
கால்பட்டு அழிந்தது இங்கு, என் தலைமேல், அயன் கையெழுத்தே!
-( கந்தர் அலங்காரம்)

ரவணனும் கவிதாவும் கென்யா டூரை முடித்துக்கொண்டு, சென்னை திரும்பினர். வீட்டிற்கு வந்ததும் கவிதா அகிலாவிற்கு ஃபோன் செய்தாள்.

கவிதா..வந்தாச்சா? வெரிகுட்..நான் பயந்துக்கிட்டே இருந்தேன்..ஆப்பிரிக்க நாட்டுக்குப் போயிருக்கே..எப்படி இருக்கறயோன்னு!

ஹா..ஹா..அதெல்லாம் ஒன்னும் பிரச்சினை இல்லைக்கா..நல்லபடியாப் போய்ட்டு வந்துட்டோம்.
ஓகே..இன்னிக்கு நல்லா ரெஸ்ட் எடுங்க..நாளைக்கு மதியம் லன்சுக்கு எங்க வீட்டுக்கு 
வந்திடுங்க

வீட்டுக்கா? எதுக்குக்கா?”

சரவணனை சஸ்பெண்ட் பண்ணதுல இருந்து மனசே சரியில்லை. அப்பாவும் ரொம்ப வருத்தப்பட்டார். அதான்..நீங்க ரெண்டு பேரும் வீட்டுக்கு வந்தீங்கன்னா, எங்களுக்கு ஆறுதலா இருக்கும்.

கவிதாவால் அதன்பிறகு மறுக்க முடியவில்லை. சரியென்று சம்மதித்தாள்.

சரவணன் பெட்டியில் இருந்து ஒவ்வொரு பொருளாக, எடுத்து பெட் ரூம் பீரோவில் வைத்துக்கொண்டிருந்தான். கவிதா சரவணனுக்கு சூடாக காஃபி கொண்டுவந்தாள். ஒரு வாரமாக காஃபி குடிக்காதது சரவணனுக்கு அப்போது தான் உறைத்தது. சந்தோசமாக வாங்கிக்கொண்டான்.

சரவணனிடம் திரும்பிய கவிதா அப்போ நான் ஆரம்பத்துல சொன்னது சரி..MARS-ங்கிறது முருகன் தான்என்றாள்.

சரவணனும் இப்போது தெளிவாக இருந்தான். உண்மை தான்..நான் தான் நீ சொன்னதைக் கேட்கலை

பாண்டியன் ஏன் வலுக்கட்டாயமா என்னை இதில இறக்கி விட்டாருன்னு எனக்கு இப்போப் புரியுது.என்றாள் கவிதா.

ஆமாம்..முருகன், ஆன்மீகம்னு சுத்தல்ல விட்டா எனக்கு ஒன்னும் புரியாதுன்னு அவனுக்குத் தெரியும். அதனாலயோ, என்னமோ திரும்பத் திரும்பச் சொன்னான்..உன்னால கண்டுபிடிக்கவே முடியாதுன்னு!

கவிதா சிரித்தாள்.

ஆமா..அதனால தான்னு நினைக்கிறேன்..கடைசியா அவர் சவால் விட்டதுகூட என் ஃபோன்ல தான்..அவரோட ஒரே நோக்கம், நான் இந்தக் கேஸில் தீவிரமா இறங்கணும்ங்கிறது தான்..ஆனால் ஏன்? ஒரு கொலையும் செஞ்சுட்டு, என்னைப் பிடின்னு க்ளூவும் கொடுத்துட்டு, கரெக்டா என்னையும் தூண்டிவிட்டு...ஏன் இப்படி? ஏன் அவர் வலிய மாட்டிக்கணும்னு நினைக்கிறார்?”

அவன் என்னை டெஸ்ட் செய்றது சரி..ஏன் உன்னையும் சேர்த்து டெஸ்ட் பண்றான்?” என்று திரும்பக் கேட்டான் சரவணன்.

உஸ்ஸ்..அதானே தெரியலை..இப்போ நமக்கு மார்ஸ் தான் க்ளியர் ஆகியிருக்கு..1024....அது என்ன?” என்றாள் கவிதா.

ம்க்கும்..அதுக்கு இன்னும் எத்தனை நாடு சுத்தணுமோ? உனக்கு ஒரு மாமா தானா? வேற மாமா யாராவது உகாண்டா/சோமாலியால இருக்காங்களா?” என்றான் சரவணன் கிண்டலுடன்.

கவிதா சிரித்தபடியே மார்ஸையே பிடிச்சாச்சு..நாலு நம்பரைப் பிடிக்க மாட்டோமா? பிடிப்போம்!என்றாள்.

கரெக்ட்..நீ ரொம்ப டயர்டாத் தெரியறே..நீ வேணாத் தூங்குஎன்றான் சரவணன்.

நானும் அதைத் தான் நினைச்சேன்...ஓகே, இங்கேயே படுக்கிறேன் என்று சொல்லிவிட்டு கட்டிலில் படுத்தாள் கவிதா.

யுத்தம்..கடுமையான யுத்தம் அவர்கள் இருவரிடையே நடந்தது கொண்டிருந்தது. கவிதா நினைத்தது போல் சூரன் ஒன்றும் சாதாரண வீரனல்ல. முருகனுக்கு இணையாக அவன் போரிட்டுக்கொண்டிருந்தான்.

கவிதாவிற்கு முருகனைப் பார்க்கும்போது, பயமாகவும், அதே நேரத்தில் ஆச்சரியமாகவும் இருந்தது. பொதுவாகவே முருகனை அவள் கனிவானவன், இனிமையான சுபாவமுள்ளவன் என்றே எண்ணி வந்தாள். ஆனால் இப்போது போரிட்டுக்கொண்டிருக்கும் முருகன் ஆக்ரோசத்துடன் அசுரனைப் போன்றே தோற்றமளித்தான்.

இப்படித் தனியாக வந்து கடற்கரையில் உட்கார்ந்திருக்கிறோமேஎன்று கவிதாவிற்குக் கவலையாக இருந்தது. முருக பக்தை என்பதால் நம்மிடம் கோபத்தைக் காட்ட மாட்டான் என்றும் தோன்றியது.

சுழற்றி அடித்த காற்று, மணலை வாரி இறைத்தது. காற்று கடலில் இருந்தா அல்லது இவர்களில் ஆவேச சண்டையில் இருந்தா என்று கவிதாவிற்குப் புரியவில்லை. கடலைத் திரும்பிப் பார்ப்போம் என்று நினைத்தாள். ஆனால் திரும்ப முடியவில்லை. திரும்பாமலேயே பின்னால் இருப்பது தண்ணீர்க்  கடல் அல்ல, அது பெரும் மணலால் ஆன கடல் என்று புரிந்தது. பின்னால் மணல் ஆளுயரத்திற்கு அலைபோல் எழும்பி, கரையில் மோதித் திரும்பிக்கொண்டிருந்தது.

கவிதா மீண்டும் யுத்தத்தை வேடிக்கை பார்த்தாள். மல்யுத்தம் போன்று இருவரும் ஒருவரை ஒருவர் தூக்கி எறிந்து கொண்டிருந்தனர். ஒருவேளை முருகன் தோற்றுவிட்டால் என்னாவது?’ என்று யோசித்தாள். அப்படியெல்லாம் ஆகாது, சூரசம்ஹாரம் என்றால் முருகன் தானே வெல்வான்என்று தனக்குத் தானே ஆறுதல் சொல்லிக் கொண்டாள்.

திடீரென முருகன் கையில் வேல் தோன்றியது. அதுவரை ஆக்ரோசமாகப் போரிட்ட சூரன் பயந்தான். முருகன் வேகத்துடன் வேலை எறிந்தான். வேல் சூரனை இரண்டாகப் பிளந்தது.

சூரன் கீழே விழும்போதே, முருகன் கவிதாவை நோக்கி வேகமாக ஓடிவந்தான். கவிதா பயத்துடன் எழுந்து நின்றாள்.வந்த வேகத்தில் முருகன் கத்தினான் :

நடந்த அனைத்திற்கும் நீயே சாட்சி! இனி நடக்கப் போவதற்கும் நீயே பொறுப்பு!

கவிதா திடுக்கிட்டு கண்விழித்தாள்.

சரவணன் என்ன?” என்று கேட்க, ”ஒன்றுமில்லைஎன்று பதில் சொல்லிவிட்டு நான் தூங்கி, ரொம்ப நேரம் ஆச்சா? என்று கேட்டாள்.

இல்லை, ஒன் அவர் தான் ஆகுது என்றான் சரவணன்.

கவிதா கனவைப் பற்றி யோசித்தபடியே, எழுந்து கிச்சனை நோக்கி நடந்தாள்.

 (தொடரும்)
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

8 comments:

  1. கடைசியில் சரவணனைவிட கவிதா தான் துப்பு துலக்குவாளோ!ம்ம் தொடர் விறுவிறுப்பின் உச்சம்!

    ReplyDelete
  2. 1024 !ம்ம் இனி என்னவோ எந்த நாடு காட்டுவதாக உத்தேசம் !

    ReplyDelete
  3. சட்டுனு கென்யாவிலேருந்து திரும்பிட்டாங்களே?கனவு பலிக்குமா?

    ReplyDelete
  4. போகப் போக விறுவிறுப்பா போகுது...

    ReplyDelete
  5. Mars=Murugan=Saravanan endu pokum pola... Very interesting and nice explanations regarding religious issues...Feel like watching a modern devotional film..

    ReplyDelete
  6. நல்ல பதிவுநன்றி,ஜோசப்http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  7. //பன்னிக்குட்டி ராம்சாமி said...

    கனவுல க்ளூ இருக்கு?//

    பின்னே, நம்மளை மாதிரி கிளுகிளுப்புக்கா கனவு கண்டாள்?

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.