Monday, April 30, 2012

முருக வேட்டை_5 (அதிரடித் தொடர்)


ரவணன் தனக்குத் தான் சரியாகக் கேட்கவில்லையோ என்று நினைத்தான்.

“என்னம்மா சொன்னே?”

“யூரின் அடிக்கடி வருது..ரெண்டு நாளாவே கோல்டு பிடிச்ச மாதிரி தலை கிண்ணுன்னு இருக்கு. தலையும் வலிக்குது. நல்லா தூக்கம் தூக்கமா வருது”

”ஏன் இப்படி..நான் இல்லாதப்போ பீர் ஏதாவது அடிச்சிட்டயா?”

“என்ன பேசுறீங்க நீங்க?”

“பின்னே..தலை வலிக்குது..பிஸ் வருதுன்னு காலங்கார்த்தால கம்ப்ளைண்ட் பண்ணிக் கடுப்பைக் கிளப்பிக்கிட்டு இருக்கே?”

“உங்ககிட்டப் போய்ச் சொன்னேன் பாருங்க..நானே டாக்டர்கிட்டப் போய்க்கிறேன்”

“என்னமோ டெல்லிக்குப் போற மாதிரிப் பேசுற..இந்தா தெருமுனைல இருக்கிற டாக்டரைப் பார்க்க இத்தனை பில்டப்பா?”

“என் கோவத்தைக் கிளப்பாதீங்க..நானே சுகர் ஏதும் வந்திருக்குமோன்னு பயந்துபோய் இருக்கேன்”

“சுகர் வந்தா என்ன? எல்லார்கிட்டயும் மை ஸ்வீட் வைஃப்-னு இண்ட்ரடியூஸ் பண்ணிப்பேன்ல?”

”ஹாஆஆ..ஹாஆஆ.ஹாஆ! உங்களுக்கு வேலை தானே முதல் பொண்டாட்டி..அதையே கட்டிக்கிட்டு அழுங்க. நான் என்னைப் பார்த்துக்கிறேன்”

“நோ..நோ..வேலை எனக்கு செகண்ட் வைஃப் தான்..இந்தக் காலத்துல எவன் ஃபர்ஸ்ட் ஒய்ஃபைக் கவனிக்கிறான்?”

கவிதா சோஃபா மேல் இருந்த தலையணையை அவன்மேல் விட்டெறிந்தாள். சரவணன் இனியும் இங்கே இருக்கக்கூடாதென பாத்ரூமை நோக்கி ஓடினான்.


ரவணன் கிண்டி ஆஃபீசில் நுழையும்போதே, கவிதாவிடம் இருந்து ஃபோன் வந்தது. 

”என்னம்மா?’

“ஹாஸ்பிடல் போய்ட்டு வந்துட்டேன்.”

“என்ன சொன்னாங்க?”

“கன்சீவ் ஆகியிருக்கலாம்னு சொன்னாங்க..பிரக்னன்சி டெஸ்ட் எடுத்துக்கச் சொன்னாங்க”

“நிஜமாவா?..எப்போ டெஸ்ட் எடுத்துக்கணுமாம்?”

“லாஸ்டா மென்சஸ் வந்ததுல இருந்து 45 நாள் கழிச்சு”

“அப்போ..ம்ம்..இன்னும் 4-5 நாள் இருக்கே?”

“நான் பார்த்துட்டேன்”

“என்ன?”

“ஆமா, நானே மெடிக்கல்ல வாங்கிட்டு வந்து இப்பவே பார்த்துட்டேன்..பாசிடிவ்”

சரவணனுக்கு குபீரென்று சந்தோசம் பொங்கியது.

“அப்படீன்னா...?”

அப்படீன்னா புராஜக்ட் சக்ஸஸ், நீங்க இனிமே தேவையில்லைன்னு அர்த்தம். நீங்க தாராளமா உங்க செகண்ட் ஒயிஃப்கூடவே இருக்கலாம்னும் அர்த்தம்”

“ஹே...நான் வர்றேன்..இப்போத்தான் வந்திருக்கேன்..மேடத்துகிட்டப் பேசிட்டு வந்திடறேன்”

----------------------------------------------------------------------------------------------------------------
ஃபீசில் நுழைந்ததும் சரவணன் நேரே அகிலாவின் ரூமுக்குப் போனான். அகிலாண்டேஸ்வரி-டி.எஸ்.பி என்ற போர்டைப் புன்சிரிப்புடன் வாசித்தான். ‘ஐ அம் நாட் அகிலாண்டேஸ்வரி..அகிலா..ஜஸ்ட் அகிலா..ஓகே?’ என்று அகிலா முன்பொருமுறை பொங்கியது ஞாபகம் வந்தது.

“குட் மார்னிங் மேம்”

“ஒருநாளைக்கு எத்தனை குட் மார்னிங்? உட்காருங்க”

“சார் வீட்டுக்குப் போனீங்களா மேம்?”

“ப்ச்..இல்லை சரவணன்..ஃப்யூனரலுக்கு போய்க்கலாம்..இப்போப் போய்ப் பார்த்தாக் கஷ்டமா இருக்கும்”

“அதுவும் சரி தான்..எனக்கே கஷ்டமா இருந்துச்சு மேம்”

“கேஸ் சீக்கிரமே நம்ம கைக்கு வந்திரும்..பேசிட்டேன்..சிஎம் வேற கடுப்பாகிட்டாங்க.”

“ஆமா, கேப்பிட்டல்ல, அதுவும் முன்னாள் ஏ.டி.ஜி.பி. கொலை மற்றும் கொள்ளைன்னா எதிர்க்கட்சிகள் ரகளை பண்ணிடுவாங்களே..அசெம்ப்ளி வேற போய்க்கிட்டு இருக்கு”

“நாம சீக்கிரம் கொலையாளியைக் கண்டுபிடிச்சாகணும் சரவணன்.”


”சில கேஸ்ல ஒன்னுமே தடயம் இருந்ததில்லை..அதையே கண்டுபிடிச்சிருக்கோம். இப்போ நிறைய தடயங்கள் இருக்கே..ஈஸியா பிடிச்சுடலாம் மேம்”

“ஓகே, உங்களுக்கு அசிஸ்டெண்ட்டா நான் ஒரு ஆளை செலக்ட் பண்ணியிருக்கேன்..யாருன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க”

சரவணன் ஆவலுடன் “யாரு மேம்?” என்றான்.

“செந்தில் பாண்டியன்”

சரவணன் திடுக்கிட்டுப் போய்ப் பார்த்தான். பேச நாவே எழவில்லை.

“என்ன சரவணன், ஆச்சரியப்படச் சொன்னா பேயறைஞ்ச மாதிரி ஆகுறீங்க?”

(தொடரும்)

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

7 comments:

  1. மாம்ஸ் ட்விஸ்ட் சரவணன் வீட்டுல... ஹி..ஹி...

    என்னமா யோசிக்கறிங்க?

    ReplyDelete
  2. செந்தில் பாண்டியன் யாரு ம்ம்ம் காத்திருக்கின்றேன் அடுத்த தொடருக்கு.

    ReplyDelete
  3. சரவணணுக்கு பிறக்க இருப்பது எந்த வாரிசு ம்ம்ம்ம் என்னஒரு ஆசை அறிய ஆவல் செங்கோவி ஐயா!

    ReplyDelete
  4. இரவு வணக்கம்,செங்கோவி!!!தொடர் நன்றாகப் போகிறது,டெஸ்ட்டும் தான்!///செங்கோவி said...

    அடுத்த பகுதியில் ஒரு சோதனை வரும்..எதற்கும் அதைச் செய்து பாருங்கள் ஐயா!!///நான் தான் முதலிலேயே சொன்னேனே?"எல்லா" டெஸ்ட்டும் எடுத்தும்,ஒன்றும் தென்படவில்லை என்று சொல்லி விட்டார்கள்,ஹ!ஹ!ஹா!!!ஹி!!ஹி!ஹி!!ஹோ!ஹோ!ஹோ!!!!!

    ReplyDelete
  5. செந்தில் பாண்டியன் பேர கேட்டவுடனே நம்ம டெரர் பாண்டியன் பேர கேட்ட மாதிரி ஷாக்காகிட்டாரே சரவணன்?

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.