Thursday, February 26, 2015

காக்கிச்சட்டை - திரை விமர்சனம்

அதாகப்பட்டது..:
சினிமாவுக்குள் வந்த குறுகிய காலத்திலேயே ஸ்டார் அந்தஸ்துக்கு உயர்வது என்பது எல்லோருக்கும் நடப்பது அல்ல..அந்த வகையில் சமீபகாலத்தில் கார்த்திக்கு அப்புறம் அப்படி ஸ்டார் ஆகியிருப்பவர், சிவகார்த்திகேயன். காமெடியனாக ஆவோம் என்று வந்தவர் சட்டென்று உயரே போய்விட்டார். அதற்கு இரண்டு முக்கியக் காரணங்கள்..ஒன்று, அவரது காமெடி சென்ஸ், அடுத்து அவரது தன்னடக்கம். இது இரண்டும் இருக்கும்வரை, அவரது வளர்ச்சி தொடரவே செய்யும்.

இன்று தனுஷ் தயாரிப்பில் சிவாவின் காக்கிச்சட்டை ரிலீஸ். ஒரு ஹீரோவின் ஸ்டேடஸ் என்ன என்பதை, இங்கே (குவைத்தில்) டிக்கெட் புக் ஆவதிலேயே தெரிந்துகொள்ளலாம். ரஜினி-விஜய்-அஜித்-சூர்யா படங்கள் என்றால், ஆன்லைனில் புக்கிங் ஆரம்பித்த ஒரு மணிநேரத்தில் எல்லா ஷோவும் புக் ஆகிவிடும். அதே போன்றே சிவகார்த்திகேயனுக்கும் தியேட்டர் ஹவுஸ்ஃபுல். வ.வ.சங்கம், மான் காராத்தே தந்த நம்பிக்கையில் ஃபேமிலி சீட்ஸ் உட்பட அனைத்து சீட்களும் ஃபுல். இந்த நம்பிக்கையை சிவா காப்பாற்றினார் என்றால், ‘அடுத்த சூப்பர் ஸ்டார்’ கேட்டகிரியில் இருக்கும் நடிகர்கள் லிஸ்ட்டில் இணைவார். இணைந்தாரா என்று பார்ப்போம்.

ஒரு ஊர்ல :
ஆதரவற்ற மனிதர்களைக் கொன்று உடல் உறுப்பைத் திருடும் ஒரு கும்பல் பற்றி கான்ஸ்டபிள் சிவகார்த்திகேயனுக்குத் தெரியவருகிறது. அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் அதற்கு உடந்தையாக இருக்க, ஒரு சாதா கான்ஸ்டபிள் எப்படி அதை அந்த கும்பலை ஒழித்துக்கட்டுகிறார் என்பதே கதை.

உரிச்சா:
சிங்கம் சூர்யா போன்று செம பில்டப்புடன் பஞ்ச் டயலாக்ஸுடன் பதற வைத்தபடி இன்ஸ்பெக்டராக அறிமுகம் ஆகிறார் சிவா. ‘போச்சுடா..தொலைஞ்சோம்’ என்று நாம் பதறும்போதே அது கனவு என்றும் அவர் ஒரு சாதாரண கான்ஸ்டபிள் என்றும் தெரியவருகிறது. அங்கேயிருந்து படத்தை ரசிக்க ஆரம்பிக்கிறோம். இன்ஸ்பெக்டர் பிரபு உட்பட ஸ்டேசனில் இருக்கும் அனைவரும் பெரிய கேஸ்களில் சிக்காமல் வாழ்க்கையை ஸ்மூத்தாக ஓட்டிக்கொண்டிருக்க, சிவாவிற்கு மட்டும் இளரத்தம் கொதிக்கிறது. க்ரைம் பிராஞ்ச் என்பதால் யூனிஃபார்ம்கூட போட முடியாமல் அவர் நொந்துபோய் அலையும் காட்சிகளுடன் படம் கலகலப்பாகப் போகிறது. அதிலும் ரயில்வே ஸ்டேசனில் பிச்சை எடுக்கும் சீன், அதகளம். ஸ்ரீதிவ்யா அறிமுகம் ஆக, அவரை காதலிக்க சிவா செய்யும் முயற்சிகளிலேயே முன்பாதியில் பெரும்பகுதி போகிறது. அவ்வப்போது வில்லன்களைக் காட்டி ஏதோவொன்று நடக்கிறது என்று மர்மமாக நமக்குச் சொல்கிறார்கள். அது என்ன என்று தெரிந்து, சிவா களத்தில் இறங்கும்போது இண்டர்வெல்.

ரஜினி படம் மாதிரியே காமெடியும் ஆக்சனும் கலந்த கலவையாக படம் நகர்கிறது. சிவாவின் காமெடி சென்ஸும் கைகொடுக்க, படம் முழுக்கவே ஒரு கலகலப்பு இருந்துகொண்டே இருக்கிறது. இரண்டாம்பாதியில் இவர் தான் வில்லன் என்று சிவா முன்னேற, உண்மையான வில்லன் வேறு ஆள் என்று தெரியவருவது அதிர்ச்சி. ஒரு ஆக்சன் படத்திற்குத் தேவையான வலுவான வில்லன் கேரக்டர். அவருடன் சிவா சவால்விட்டு மோதும் காட்சிகளில் பொறிபறக்கிறது. அதிலும் கமிசனரை தன் பக்கம் இழுக்க, சிவா செய்யும் வேலைக்கு தியேட்டரில் பயங்கர அப்ளாஸ். கூடவே, கிளைமாக்ஸும் ஆக்சனாக இல்லாமல் மூளையை யூஸ் செய்து முடிக்கிறார்கள்.

முதல்பாதியில் கதைக்கு வராமல் லவ்+காமெடியிலேயே ஓட்டுவது, இரண்டாம்பாதியில் சிவாவுக்கும் வில்லனுக்கும் நடக்கும் கண்ணாமூச்சி ஆட்டம் நீள்வது ஆகியவற்றைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், படம் போரடிக்காமல் நல்ல டைம் பாஸ் மூவியாக வந்திருக்கிறது.
சிவகார்த்திகேயன்:
ரஜினி ஃபார்முலாவை கச்சிதமாகக் கடைப்பிடிக்கிறார் சிவா. பில்டப் இல்லாமல் தன்னை சாமானியனாகக் காட்டிக்கொண்டே, ரசிகர்களின் மனதில் இடம்பிடிக்கிறார்.  காமெடியும் ஆக்சனும் ஒருங்கே கைவருகிறது. இதே ரேஞ்சில் சென்றால், விஜய்க்கு கடும்போட்டியை உருவாக்குவார் சிவா. இன்னொரு ‘அடுத்த சூப்பர் ஸ்டார்’ உருவாகிக்கொண்டிருக்கிறார் என்பது மட்டும் தெரிகிறது. நடிப்பில் பலமடங்கு முன்னேற்றம். முந்தைய படங்களில் ஹீரோயிசம் பண்ணலாமா எனும் தயக்கம் இருக்கும், இதில் அதை உதறி மேலே வந்திருக்கிறார்.

செல்ஃபி திவ்யா:
தாவணி அளவிற்கு மாடர்ன் ட்ரெஸ்ஸில் திவ்யா நம்மைக் கவரவில்லை. நர்ஸாக வந்து, ஹீரோவுக்கு உதவி செய்யும் வேடம். பெரிதாக நடிக்காவிட்டாலும், ஃபுல்மேக்கப்பில் பளிச்சென்று இருக்கிறார். வழக்கம்போல் படத்தில் கவர்ச்சி காட்டவில்லை, அது வாட்ஸப்பில் மட்டும் தான் போலும். ராசியான நடிகை & ஜோடி என்று இந்தப் படம் பெயர் பெற்றுத் தரும்.

இமான் அண்ணாச்சி:
ரொம்ப நாளாக சரியான களம் கிடைக்காமல் தடுமாறிக்கொண்டிருந்த அண்ணாச்சி, இதில் பட்டையைக் கிளப்பியிருக்கிறார். தூத்துக்குடி பாஷையில் அண்ணாச்சி பேசும் வசனங்கள் சிரிப்பை வரவைக்கின்றன. கூடவே, சிவா வில்லன்களை ஒழிப்பதில் கூடவே இருந்து உதவுகிறார். இனி அதிகப் படங்களில் இவரைப் பார்க்கலாம்.

நெகடிவ் பாயிண்ட்ஸ்:

- பாடல்கள். எல்லாப் பாட்டுக்கும் தியேட்டரில் எழுந்து செல்கிறார்கள். ’கொக்கி போட்டுத்தான்’ பாடல் மட்டும் ரசிக்க வைக்கிறது. அனிருத்திற்கு இது ஒரு பின்னடைவு தான்.
- ஆர்கன் திருட்டு என்றதும்...என்னை அறிந்தால் படம் ஞாபகத்திற்கு வருவது.
- இண்டர்வெல்வரை கதைக்குள் வராமல் சுற்றிக்கொண்டே இருப்பது.
- வில்லனை ஒழித்தாலும், திருட்டு தொடரும் என்பதே யதார்த்தம். மொத்தக் கும்பலையும் ஒழிக்காமல் வில்லனை ஒழித்ததுடன் திருப்திப்பட்டுக்கொண்டது.
பாசிடிவ் பாயிண்ட்ஸ்:
- சிவகார்த்திகேயன்
- காமெடியாகவே படத்தை நகர்த்துவது
- சிவா+ஸ்ரீதிவ்யா ஜோடிப் பொருத்தம்
- இரண்டாம்பாதியை நல்ல த்ரில்லராகக் கொடுத்திருப்பது
- டெரரான வில்லன்
- சுகுமாரின் ஒளிப்பதிவு. ஸ்ரீதிவ்யாவை சிவா காப்பாற்றும் ஃபைட்டில் ஒளிப்பதிவு அட்டகாசம்.
- க்ளிவேஜ்கூட இல்லாமல் படத்தை குடும்பத்துடன் பார்க்கும்படி நீட்டாக எடுத்தது. (ஒருவேளை குவைத் சென்சாரில் போயிடுச்சா?)

பார்க்கலாமா?
நல்ல டைம் பாஸ் மூவி..பார்க்கலாம்.

மேலும் வாசிக்க... "காக்கிச்சட்டை - திரை விமர்சனம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

14 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Tuesday, February 24, 2015

இனிமேல்....படித்தால் மட்டும் போதுமா?

குலத்தொழிலை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டிருந்தது, நம் சமூகம். நாட்டில் நாகரீகம் மலர, மலர தொழிலும் கல்வியும் ஜனநாயகமாக்கப்பட்டன. அப்போது கல்வி என்பதையே கட்டாயமாகப் புகுத்த வேண்டிய அவலநிலை நம் நாட்டில் இருந்தது. ஏறக்குறைய 25 ஆண்டுகளாக நமது அரசாங்கம் கல்வி பற்றிய விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்தது. பள்ளி ஆசிரியர்களும் அக்கறையுடன் கல்வியை வலுக்கட்டாயமாகத் திணித்தார்கள். (ஸ்கூல் போலீஸ் பற்றி இங்கே சுருக்கமாக எழுதியிருக்கிறேன்.)

ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது. ஒரு கூலித் தொழிலாளிகூட தன் பிள்ளையை ப்ரைவேட் ஸ்கூலில் படிக்க வைக்கிறார். ஸ்கூல் வேன்களில் பிள்ளைகள் பயணிப்பது, கிராமங்களில்கூட காணக்கிடைக்கும் காட்சியாகிவிட்டது. இது ஆரோக்கியமான, வரவேற்கத்தக்க விஷயம். கூடவே இதுவொரு சிக்கலையும் கொண்டு வந்துள்ளது.
கல்வியைப் பரவலாக்க உழைத்த அளவிற்கு, நம் அரசாங்கங்கள் வேலைவாய்ப்பில் அதற்கு இணையாக உயர்த்த உழைத்தார்களா என்றால் இல்லையென்று தான் சொல்ல வேண்டும். ஒவ்வொரு வருடமும் எத்தனை பேர் படித்து வெளியே வருவார்கள், அப்போது அவர்களுக்கு எத்தனை வேலை வாய்ப்புகள் காத்திருக்கும்?' என்பது பற்றியெல்லாம் இங்கே யாருக்கும் எப்போதும் பெரிய தொலைநோக்குப் பார்வை இல்லை.


முந்தைய தலைமுறைக்கு கல்வி பெரும் வரப்பிரசாதமாக இருந்தது. படித்தாலே போதும், ஏதாவது ஒரு வேலைக்குப் போய்விடலாம் எனும் வாய்ப்பு இருந்தது. காரணம், படித்தவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. ஆனால் இப்போது எல்லாருமே படித்தவர்கள் என்று ஆகும்போது, டிகிரி சர்ட்டிஃபிகேட் மட்டுமே வேலை கேட்பதற்கான தகுதி என்பது போய்விட்டது.

இதற்கு சமீப காலத்தில் நாம் பார்த்த ஐ.டி. வேலை வாய்ப்பினை உதாரணமாகச் சொல்லலாம். 1990களில் ஐ.டி.நிறுவனங்கள் வந்தபோது, இங்கே போதுமான ஐ.டி.வல்லுநர்கள் இல்லை. எனவே ஏதாவது ஒரு டிகிரி படித்திருந்து, கூடவே ஒரு ஐ.டி.கோர்ஸ் படித்த சர்ட்டிஃபிகேட் இருந்தாலே வேலை கிடைத்தது. இஞ்சினியரிங்கில் ஐ.டி.படித்தவர்களுக்கு மட்டுமல்லாது, மெக்கானிக்கல், சிவில் படித்திருந்தாலும் கேம்பஸ் இன்டர்வியூவிலேயே வேலைகிடைக்கும் காலம் இருந்தது.

ஆனால் எவ்வித தொலைநோக்குமின்றி, கன்னாபின்னாவென்று பொறியியல் கல்லூரிகளை ஆரம்பித்தார்கள். விளைவு, இன்றைக்கு ஐ.டி.படித்த 12 பேரில் ஒருவருக்கே வேலை கிடைப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்று சொல்கிறது.அப்படியென்றால், மெக்கானிக்கல் போன்ற வேறு பிராஞ்சில் படித்த பொறியியல் மாணவர்களுக்கோ, ஆர்ட்ஸ் காலேஜில் படித்த வேறு மாணவர்களுக்கோ இனி அங்கே (பெரும்பாலும்) இடம் இல்லை.

இந்த ஐ.டி.சூழ்நிலை எல்லாத் துறைகளுக்கும் பொருந்தும்.  வேலை வாய்ப்புச் சந்தையில் சப்ளை அதிகமாகி விட்டது, டிமாண்ட் குறைந்துவிட்டது. இதை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்பது தான் இந்தியா போன்ற வளரும் நாடுகளின் முன் இருக்கும் மிகப்பெரிய சவால். இதைத் தனி மனிதனாக எப்படி எதிர்கொள்ளலாம் என்று யோசித்தால்....

1.மேற்படிப்பு:
1970-80களில் டிப்ளமோ படிப்பு என்பது வேலைவாய்ப்பை அள்ளித்தரும் விஷயமாக இருந்தது. பொறியியல் கல்லூரிகள் வந்ததும், எஞ்னியரிங் டிகிரி அந்த இடத்தைப் பிடித்தது. இப்போது பி. இ. மலிந்துவிட்டநிலையில், இதற்கு அடுத்த இடம் நோக்கி நாம் நகரலாம். நமது எம்.இ-ஐ விட அமெரிக்க எம்.எஸ் இன்னும் மதிப்புடன் இருக்கிறது.

2. புதிய அலை: 1990களில் நமக்கு வரப்பிரசாதமாக வந்தது ஐடி அலை. அதற்கு முன்பு 1970களில் தொழிற்சாலைகளின் வரவு வேலை வாய்ப்பைக் கொடுத்தது. அதுபோன்று அடுத்து என்ன வருகிறது என்று பார்க்கலாம். (என் சிற்றறிவுக்கு ஒன்றும் பிடிபடவில்லை.)

3. வெளிநாடு வேலை வாய்ப்பு : நமக்கு முன்பே 100% கல்வியறிவு பெற்ற சேட்டன்கள் காட்டிய வழி. ஆனால் உலகம் முழுக்கவே சூழ்நிலை இப்போது மாறிவருகிறது. உதாரணமாக, வளைகுடா நாடுகளில் மண்ணின் மைந்தருக்கே வேலை எனும் கொள்கை மிகத்தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிரது.இன்றைய சூழ்நிலையில் ஒரு அரபி ஒரு டிகிரி முடித்தாலே அரசு வேலையில் சேர்துவிட முடியும். அரபி ஆண்களும் பெண்களும் அதிக அளவில் இங்கே வேலையில் சேர்ந்து வருகிறார்கள். அந்நியருக்கு அரசு வேலை என்பது ஏறக்குறைய நிறுத்தப்பட்டு விட்டது. இன்னும் 20 வருடங்களில் தனியார்க் கம்பெனிகளிலும் அதே நிலைமை வர வாய்ப்பு உள்ளது. எனவே ஐ.டி.க்காரன் மட்டும் தான் நாசமாப் போறான் எனும் கனவில் இருக்கும் பிறதுறை ஆசாமிகள் கொஞ்சம் விழித்துக்கொள்ளலாம்.

4. புதிய கல்விமுறை : நமது இன்றைய எல்லாச் சிக்கல்களுக்கும் காரணம் என்ன என்று பார்த்தால்.....நம் கல்விமுறை தான். 'படி, வேலை கிடைக்கும்'..'நல்லாப் படிச்சத்தான் நல்ல வேலைக்குப் போக முடியும்' என்றுசொல்லியே நம் பிள்ளைகளை வளர்க்கிறோம். அதாவது படிப்பு என்பது பிள்ளைகளை ஏதாவது ஒரு கம்பெனியில் அடிமைகளாக ஆக்குவது என்றே நம்புகிறோம். சுயதொழில் செய்து சொந்தக் காலில் நிற்பது பற்றி நமக்கு எவ்வித சிந்தனையும் இல்லை. காரணம், பாதுகாப்பு பற்றிய பயம்.

நம்மில் பெரும்பாலோனோர் முதல் தலைமுறை பட்டதாரிகள். வறுமையை கல்வியால் வென்றவர்கள். எனவே மீண்டும் ரிஸ்க் எடுத்து பிஸினஸ் செய்து, ஆரம்பித்த இடத்திற்கே பிள்ளைகளை அனுப்பி விடுவோமோ எனும் பயம் இருக்கிறது. ஆனால் வி.ஐ.பிகளாக பிள்ளைகளைஆக்குவதைவிட, படிப்புடன் சுயதொழில்கள் பற்றிய அறிவையும் பிள்ளைகளுக்கு பள்ளியிலும் வீட்டிலும் புகுத்துவது அவசியம் ஆகிறது. குஜராத் போன்று சுயதொழில் சார்ந்த சமூகமாக நாம் மாறவேண்டிய நிலையில் இருக்கிறோம்.

விவசாயத்தில் ஆரம்பித்து ரியல் எஸ்டேட்வரை எல்லாத் தொழில்கள் பற்றிய அறிவுடன் நம் பிள்ளைகள் வளரட்டும். படித்தால் வேலைக்குப் போகலாம் எனும் அடிமை மனோபாவத்தை மட்டும் உண்டாக்காதீர்கள். ஏனெனில் இனிவரும் காலத்தில் டிகிரி சர்ட்டிபிகேட் என்பது வேலைக்கான உத்தரவாதச் சீட்டு அல்ல!
மேலும் வாசிக்க... "இனிமேல்....படித்தால் மட்டும் போதுமா?"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

5 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Monday, February 23, 2015

திரைக்கதை சூத்திரங்கள் -II-பகுதி-38

துப்பாக்கி படத்தைத் தொடர்ந்து, இன்று திரைக்கதை வித்தகரின் 'முந்தானை முடிச்சு' படம் எந்த அளவிற்கு ப்ளேக் ஸ்னிடரின் பீட் ஷீட்டுடன் ஒத்துப்போகிறது என்று பார்ப்போம்.

அதற்கு முன்பு ஒரு விஷயத்தை தெளிவுபடுத்திவிடுகிறேன். முருகதாஸோ, பாக்கியராஜோ ப்ளேக்ஸ்னிடரைப் படித்துவிட்டு திரைக்கதை எழுதியதாக நாம் சொல்ல வரவில்லை. ஒரு நல்ல திரைக்கதையில் பீட் ஷீட்டின் அம்சங்கள் இருந்தே தீரும் என்பது ப்ளேக் ஸ்னிடரின் வாதம். அதற்கு இந்த ஆதாரங்களை உங்கள் முன் வைக்கிறோம். ஒரு வெற்றிகரமான கமர்சியல் படம் கொடுக்க, இந்த பீட் ஷீட் உதவும் என்பதையே இதன்மூலம் நாம் நிரூபிக்கிறோம்.

இப்போது, முந்தானை முடிச்சு...நம் விளக்கங்களுடன்:
OPENING IMAGE:
1. ஒரு தாத்தாவும் பாட்டியும் - அந்நியோன்ய தம்பதிகள் ( It explains theme.)

விளக்கம்: இந்தப் படம் குடும்ப வாழ்க்கை/தம்பதிகள் பற்றிய படம் எனும் குறிப்பு முதல் காட்சியிலேயே காட்டப்படுகிறது.

SET-UP:
2. பஞ்சாயத்து சீன் - ஊர்வசியும் மூன்று பொடியன்களும் குற்றவாளியாக நிற்க, அவர்களின் தந்தைகளே நாட்டாமைகளாக அமர்ந்திருக்கிறார்கள். ஊர்வசி & கோ சேட்டைக்காரர்கள் என்பது நமக்கு உணர்த்தப்படுகிறது.
3. மூன்று பொடியன்களுக்கும் ஊர்வசிக்கும் வீட்டில் அடிவிழுகிறது. ‘நம்ம ஜாதிசனத்துல இல்லாமல் வெளில மாப்பிள்ளை பாருங்க..நம்ம சாதிசனத்துல யாரு சின்னவீடு வைக்காம இருக்காங்க?’ என்று ஊர்வசி கேட்பது. (THEME STATED-1)
4. ஒரு சாமி ஊர்வலம் வருகிறது. எல்லோரும் கீழே விழ ஊர்வசி கோஷ்டி சதி பண்ணும் சீன்.
5. தோப்பில் ஊர்வசி கோஷ்டி...ஊருக்கு புதுவாத்தியார் வரும் தகவல் சொல்லப்படுகிறது. ’என்னை கட்டிக்கப்போற ஆளு பொண்டாட்டின்னா உசிரா இருக்கணும்’ என்று ஊர்வசி சொல்வது.(குறிக்கோள் & THEME STATED-2)..பாடல். ‘நான் பிடிச்ச மாப்பிள்ளை தான்.’
6. ஹீரோ வருகை. ஆய் இருந்த குழந்தையுடன் ஹீரோ அறிமுகம்..ஊர்வசி அதைப் பார்ப்பது. ஊர்வசி கோஷ்டி பாக்கியராஜிடம் பொருட்களைத் திருடுவது, அவர் வாத்தியார் என்று அறிவது.
7. ஹீரோ பள்ளியில் தேசியக்கொடி ஏற்றுவது. கிளாஸில் மூன்று பொடியன்களைப் பார்ப்பது. ஊர்வசி அங்கே வருவது.
8. ஹீரோ மளிகைக்கடையில் சாமான்கள் வாங்குவது. ஹீரோயின் அதைப் பார்ப்பது. ‘உன் பொண்டாட்டி ஏன் வரலை என்று ஊர்வசி கேட்பது. வருவாள் என்று ஹீரோ சொல்வது.

விளக்கம்: நாம் முன்பே பார்த்தபடி, இங்கே ஹீரோயின் தான் கதையின் நாயகி. ஹீரோயினுக்கே குறிக்கோள் உண்டு. ஹீரோ & ஹீரோயினின் சுபாவம், அவர்களது குடும்பச் சூழல் இங்கே விவரிக்கப்படுகிறது.

CATALYST:
9. ஹீரோ சமைக்க, ஊர்வசி கோஷ்டி திருடிச் சாப்பிடுவது. பாத்திரத்தை திரும்பித் தரும்போது, ஹீரோவின் மனைவி உயிரோட இல்லை என்று தெரிய வருவது.

விளக்கம்: ஹீரோயினின் மனமாற்றம் இங்கே தான் ஆரம்பிக்கிறது. முதலில் ஹீரோ மேல் அவருக்கு வருவது பரிதாபம்.

DEBATE:
10. ஸ்கூலுக்கு மூன்று பொடியன்களும் வருவது..காமெடி சீன். + ஹோம் ஒர்க் செய்யாத ஒரு பையனை அடிக்கப் போகும்போது, சித்தி கொடுமை பற்றித் தெரியவருவது.
11. பூர்ணிமா சின்ன ஃப்ளாஷ்பேக். குழந்தையைப் பார்த்துக்கோங்க என்று கதறுவது.
12. பாக்கியராஜ் வணக்கம் காமெடி சீன் + பிரசவத்திற்காக பாக்கியராஜ் வேஷ்டியைக் கொடுப்பது. ஊர்வசியை அதைப் பார்ப்பது.
13. ஹோட்டல்காரர்கள் ஊர்வசியிடம் சாப்பாடு கொடுத்து அனுப்புவது.

விளக்கம்: ஹீரோவின் மேல் காதலில் விழுவாரா இல்லையா எனும் டிபேட் இந்தக் காட்சிகளில் விவரிக்கப்படுகிறது. காதலை நோக்கி ஹீரோயினைத் தள்ளும் காட்சிகள் இவை.

BREAK INTO TWO:
14. மாந்தோப்புக் காரனுடன் ஹிரோ சண்டை. ஊர்வசிக்கு பாக்கியராஜ் மேல் காதல் வருவது..பாடல் -அந்தி வரும் நேரம்.
15. பாக்கியராஜின் மாமியார் வருகை. கொழுந்தியாளைக் கட்டிக்கொள்ளும்படி கேட்பது. பாக்கியராஜ் மறுத்து அனுப்பி வைப்பது.
16. சேலையில் ஊர்வசி...’என்னைக் கல்யாணம் கட்டிக்கிறயா?’ என்று பாக்கியராஜிடம் கேட்பது. பாக்கியராஜ் மறுப்பது.

விளக்கம்: ஆஹா...வந்திடுச்சு! இனி ஹீரோயின் பழைய விளையாட்டுப் பிள்ளை இல்லை. தன் குறிக்கோளை நோக்கி நகரும் லட்சியவாதி!!

B STORY:
17. முதியோர் கல்விக்கு டீச்சர் வருவதாக ஹீரோ சொல்வது.
18. ஊர்வசி கோவிலில் பூ எடுப்பது..பாசிடிவ்வாக வருவது. பாக்கியராஜ் மனைவிக்கு சாமி கும்பிடுவது + பூர்ணிமாவுடன் சின்ன ஃப்ளாஷ்பேக். வேறு கல்யாணம் பண்ணிக்கொள்ள  மாட்டேன் என்று பூர்ணிமாவிடம் சத்தியம் செய்வது.+ மீண்டும் ஊர்வசி பாக்கியராஜிடம் கேட்பது. (A STORY)
19.   டீச்சர் வருகை. ஊரே அசந்து போய் பார்ப்பது.
20. மூன்று பசங்க, டீச்சர் பற்றி ஊர்வசியிடம் சொல்வது..பாடல் - வா..வா..வாத்யாரே வா.

விளக்கம்: ஆடியன்ஸை மகிழ்விக்கவும், மெயின் கதையில் இருந்து நம்மை ரிலாக்ஸ் பண்ணவும் இந்த பி ஸ்டோரி.

GAMES:
21. ஊர்வசி தற்கொலைக்கு முயற்சிப்பதாக பசங்க சொல்ல, பாக்கியராஜ் காப்பாற்ற ஓடுவது. ஊரே கூடுவது.

விளக்கம்: ஹீரோயின் தன் குறிக்கோளை நோக்கி, ஒரு திட்டத்துடன் பயணிப்பது. ஆனால் இன்னும் முழு சீரியஸ்தன்மை வந்துவிடவில்லை. இங்கே FUN குறைவு.

MID POINT:
22. பஞ்சாயத்து சீன் - குழந்தையைத் தாண்டி, பாக்கியராஜ் தான் கெடுத்ததாகச் சொல்வது.- பாக்கியராஜ் தாலி கட்டுவது. - இடைவேளை.

விளக்கம்: காதலில் இருந்து கல்யாணம்...ஹீரோயினுக்கு தற்காலிக வெற்றி.

BAD GUYS CLOSE IN-1:
23. ஊர்வசியை அப்பா ஒரு பெட்டியுடன் வீட்டை விட்டுத் துரத்த, அவர் பாக்கியராஜ் வீட்டுக்கு வருவது. ‘இனி நீ வாழ்க்கை முழுக்க கன்னி தான்’ என்று பாக்கியராஜ் திட்டுவது.
24. காலையில் நல்ல பிள்ளையாக ஊர்வசி, பாக்கியராஜின் காலைத் தொட்டுக்கும்பிட்டு காபி போட...பாக்கியராஜ் எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது. குழந்தையை ஒரு பெண்மணி(வள்ளியம்மாள்)யிடம் பாக்கியராஜ் விட்டுச்செல்வது. (FUN & GAMES)
25. ஸ்கூலில் பசங்களுடன் பாக்கியராஜ். ‘இனிமே உங்களை நான் கண்டுகொள்ளவே மாட்டேன்’ என்று சொல்வது.
26. பாக்கியராஜ் ஹோட்டலில் சாப்பிட, ஊர்வசி வந்து சண்டை போடுவது. பாக்கியராஜ் அடிக்க, அதை ஊர்வசியின் அப்பா பார்ப்பது.

விளக்கம்: ஹீரோயின் தற்காலிகமாக ஜெயித்தாலும், வில்லன்(இங்கே ஹீரோவின் சூழ்நிலையும், அது உண்டாக்கும் ஹீரோவின் மனநிலையுமே வில்லன்) ஹீரோயினை தோல்வியை நோக்கித் தள்ளுவது.

FUN & GAMES:
27. ஊர்வசியின் சமையலை பாக்கியராஜ் சாப்பிட ஒத்துக்கொள்வது. ‘இறங்கவும் வேண்டாம்..ஏறவும் வேண்டாம். சோறைத் தின்னு அது போதும்’. ‘நீயா வந்து என்னைத் தொடாமல் நான் உன் பக்கத்தில் வரமாட்டேன்’ என்று ஊர்வசி சபதம் செய்வது. பாக்கியராஜ் முன் ட்ரெஸ் மாற்ற முயல, ஊர்வசியை விரட்டி விடுவது.
28. சீதனங்களுடன் ஊர்வசி அப்பா வருகை. மகளை அடித்தது ஏன் என அப்பா கேட்க, பாக்கியராஜ் சீதனத்தை மறுத்து திருப்பி அனுப்புவது.
29. முருங்கைக்காய் மேட்டரை ஊர்வசி அறிவது
30. ஊர்வசி சமைப்பது - பாக்கியராஜ் சாப்பிட...பாடல்..கண்ணைத் திறக்கணும், சாமி.

விளக்கம்: இந்தப் படத்தில் இரண்டாம்பாதியில் வருகிறது. நோட் திஸ் பாயிண்ட், யுவர் ஹானர்.

BAD GUYS CLOSE IN-2:
31. ஸ்கூலில் பசங்க மன்னிப்புக் கேட்பது. பாக்கியராஜின் மாமியார் வருகை. பூர்ணிமாவின் நகைகளைக் கொடுத்துவிட்டு, பேரனைத் தன்னிடம் கொடுக்கும்படி கேட்பது. ‘இளையவள் ஆரம்பத்தில் குழந்தையிடம் பாசமாகத் தான் இருப்பாள். பின்னர் மனம் மாறிவிடுவாள்’ என்று சொல்வது.
32. பூர்ணிமாவின் நகைகளை ஊர்வசி மாட்டிக்கொண்டு அலட்டுவது.
33. பாக்கியராஜின் குழந்தை காசை முழுங்குவது.-ஊர்வசி வந்து குழந்தையை வாங்கிச் செல்வது - குழந்தைக்கு உடம்பு முடியாமல் போக, வைத்தியரிடம் போவது - பழி ஊர்வசி மேல் விழுவது. ஊர்வசி பொய்ச் சத்தியம் செய்து, குழந்தையைத் தாண்டியதை எல்லோரும் அறிவது.-முழுங்கிய காசை வைத்தியர் வெளியே எடுப்பது.- இனிமேல் ஊர்வசியுடன் குடித்தனம் செய்ய மாட்டேன் என்று பாக்கியராஜ் சொல்லிவிட்டு விலகுதல். (ALL IS LOST)
34. டீச்சர் முதியோர் கல்வி நடத்துவது...காமெடி சீன். (FUN & B STORY)

BREAK INTO THREE:
35. குழந்தை காசை முழுங்கியதற்கு ஊர்வசி காரணம் அல்ல என்று பாக்கியராஜ் அறிவது. கோவிலில் ஊர்வசி மண்சோறு சாப்பிடுவதை பாக்கியராஜ் பார்ப்பது. (இங்கே DARK NIGHT OF SOUL இல்லாமல், நேராக BREAK INTO THREE)
36. சத்துணவு கொண்டு வருபவன் பாதிப்பேருக்கு சாப்பாடு இல்லை என்று சொல்வது.-சாப்பாடை ஹோட்டலில் விற்பது.- சண்டை.- பாக்கியராஜை வெட்ட வரும் அரிவாளை ஊர்வசி பிடிப்பது.
37. ஊர்வசியுடன் சமாதானம் (But All is Lost continues)

DARK NIGHT OF SOUL:

38. ஊர்வசி பாக்கியராஜுடன் சினிமாவுக்குக் கிளம்புதல். - பூர்ணிமா ஃபோட்டோ கிழே விழுந்து உடைதல்.
39. தொடர்ந்து சினிமாவுக்குப் போகும்போது, சித்தி கொடுமையால் பாதிக்கப்பட்ட பையனை பாக்கியராஜ் பார்ப்பது. ஊர்வசி பாக்கியராஜின் பிரச்சினையை அறிதல்.
40. ஊர்வசி வீட்டில் வாந்தி எடுக்க, அதை மாசமானதாக நினைத்து ஊர்வசியின் அப்பா-அம்மா வருகை. அது வெறும் வாந்தி என்று வைத்தியர் சொல்வது. சோகப் பாடல் : சின்னஞ் சிறு கிளியே.

விளக்கம்: இவ்வளவு செய்தும், ஹீரோவின் மனதில் ஹீரோயினால் முழுமையாக இடம்பிடிக்க முடியவில்லை. இன்னும் சித்தி கொடுமை பற்றிய பயம் என்பது வில்லனாக மிரட்டுகிறது. இங்கே ஹீரோ & ஹீரோயின் இருவருமே அவரவருக்கு உரிய நியாயத்துடன் இருக்கிறார்கள். இருவருமே இந்த வில்லனை மனதில் இருந்து அழித்து, முன்னேற வேண்டும்.

B STORY :
41. டீச்சர் பாக்கியராஜைத் தேடி வருவது- ராக்கி கட்டுவது- ஊர்வசி மகிழ்வது.
42. பிரசிடெண்ட் பையனை முந்தைய வாத்தியார் காசு வாங்கி பாஸ் பண்ணி விட்டதாகவும், நீங்களும் அதையே செய்யுங்கள் என்று டீச்சர் சொல்ல, ‘ஒரு வாத்தியார் பணம்  வாங்கினால் எல்லா வாத்தியாரும் வாங்குவார்களா?’ என்று பாக்கியராஜ் கேட்க, பதிலுக்கு ‘ஒரு சித்தி கொடுமை பண்ணினால், எல்லா சித்தியும் கொடுமை பண்ணுவாங்களா?’ என்று டீச்சர் பதிலுக்குக் கேட்பது.
43. டீச்சர் ராக்கி கட்டியதற்காக பெரிசுகள் அழுவது.

விளக்கம்: ப்ளேக் ஸ்னிடர் சொன்னபடி, மெயின் ஸ்டோரிக்கான தீர்வினைக் கொடுப்பதாக, தீர்வுக்கு உதவுவதாக பி ஸ்டோரி இங்கே இருக்கிறது. இரண்டு ஸ்டோரிகளும் இந்தப் புள்ளியில் (சீன் #41) இணைகின்றன.

FINALE:
44. இரவில் குழந்தை அழ, பாக்கியராஜ் பாலைக் கொட்டிவிடுவது..எனவே ஊர்வசி பால் கொடுப்பது. 'உனக்கொரு குழந்தை பிறந்தாலும் என் பிள்ளையை இப்படியே பார்த்துக்கொள்வாயா என்று பாக்கியராஜ் கேட்பது.
45. முதலிரவுக்கு பாக்கியராஜ் நல்லநேரம் பார்ப்பது.
46. குடும்பக்கட்டுப்பாடு நோட்டீஸ் ஊர்வசிக்குக் கிடைப்பது
47. வீட்டிற்கு வரும் பாக்கியராஜ் நோட்டீஸைப் பார்ப்பது. ஊர்வசி அங்கே போயிருப்பதை அறிவது.
48. பாக்கியராஜ் அதைத் தடுக்கப் போகும்போது, பழைய வில்லன்களுடன் ஃபைட்.
49. ஆபரேசன் செய்யவில்லை என்று டாக்டர் சொல்வது. பாக்கியராஜ் திருந்துவது.

விளக்கம்: பரிதாபம், காதல், காமம், பாசம் என எல்லா ஆயுதங்களும் தோற்ற நிலையில், ஹீரோயின் இறுதியாகக் கையில்  எடுப்பது தியாகம். எந்தப் பெண்ணும் செய்யத் துணியாத தியாகம். அதுவே ஹீரோயினுக்கு வெற்றியைத் தேடித் தருகிறது.

FINAL IMAGE:
50. முதலிரவு - கிளைமாக்ஸ்.

விளக்கம்: இதுக்கெல்லாமாய்யா விளக்கம் கேட்பீங்க?..பேட் பாய்ஸ்!

 
மேலும் வாசிக்க... "திரைக்கதை சூத்திரங்கள் -II-பகுதி-38"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

1 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Thursday, February 19, 2015

திரைக்கதை சூத்திரங்கள் -II-பகுதி-37

இதுவரை ப்ளேக் ஸ்னிடரின் பீட் ஷீட் பற்றி பார்த்துவந்தோம். இன்றைய பதிவில், அது எப்படி ஒரு படத்தில் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது என்று பார்ப்போம். ஏற்கனவே தொடரின் முதல் பாகத்திற்கு துப்பாக்கி படத்தை எடுத்துக்கொண்டது போன்றே, இப்போதும் துப்பாக்கி படத்தை எடுத்துக்கொள்வோம். இப்படி ஒரே படத்தைப் பார்ப்பதன் மூலம், நாம் இந்த தொடரில் வெறுமனே ஜல்லியடிக்கவில்லை என்றும் புரிந்துகொள்ளலாம்!!

இனி வருவது துப்பாக்கி படத்தின் காட்சிகளின் வரிசையுடன் பீட் ஷீட்: 

OPENING IMAGE:
1. ரயில்வே ஸ்டேசனில் ஹீரோவிற்காக, அவரின் குடும்பத்தினர் காத்திருக்கிறார்கள்.

SET-UP:
2. ஹீரோ சிறு சண்டையுடன் அறிமுகமாகிறார், கூடவே ஒரு ஃபைட். ஹீரோ ஒரு ராணுவ வீரர், லீவில் ஊருக்கு வருகிறார்.
3. ஹீரோவை அழைத்துக் கொண்டு பெண் பார்க்கப் போகிறார்கள்.
4. பெண் பார்க்கும் படலம், ‘அப்பாவி’யான ஹீரோயின் அறிமுகம்
5. பெண் பிடிக்கவில்லை என ஹீரோ சொல்கிறார்.
6. நண்பர் சத்யனின் அறிமுகம்..’ஒவ்வொரு வருசமும் லீவ்ல வருவே...என் வேலைல மூக்கை நுழைப்பே..சப்-இன்ஸ்பெக்டர்ல இருந்து இன்ஸ்பெக்டர் ஆகிற என்னை, திரும்ப சப்-இன்ஸ்பெக்டராவே ஆக்கிட்டுப் போயிடுவே’(THEME STATED.)

7. பாக்ஸிங் வீராங்கனையாக ஹீரோயினை ஹீரோ பார்ப்பது..பாடல் (B STORY)
8. பெண் பிடித்திருப்பதாக ஹீரோ சொல்ல, ஹீரோயின் கடுப்பாவது. (B STORY)

CATALYST:
9. ஆட்டோவில் வரும் ஹீரோயின் ஹீரோவைப் பார்ப்பது..பைக் சாவியை ஹீரோயின் எடுத்துக்கொண்டு கிளம்புவது.
10. பஸ்ஸில் ஹீரோவின் பயணம்...ஒரு பயணியின் பர்ஸ் திருடு போவது..பயணிகளை ஹீரோவும் சத்யனும் செக் பண்ணுவது. அதைப் பார்த்து, ஒருவன் தப்பி ஓடுவது..ஆனால் அவன் திருடன் அல்ல; ஏன் ஓடுகிறான் என்று ஹீரோ யோசிக்கும்போது ‘டமார்’. குண்டு வெடிப்பு.

DEBATE:
11. ஹீரோ அவனைப் பிடித்து போலீஸில் ஒப்படைப்பது.
12. ஹாஸ்பிடலில் தீவிரவாதி...ஹாஸ்பிடல் வாசலில் இருக்கும் கடையில் டிவியில் ஹீரோ நியூஸ் பார்ப்பது.
13. மெயின் வில்லன் டிவியில் நியூஸ் பார்த்தபடி அறிமுகம்..ப்ளான் செய்தபடி திட்டத்தை நிறைவேற்றும்படி மெசேஜ் அனுப்புதல் (SET-UP)

BREAK INTO TWO:
14. ஹாஸ்பிடலில் இருந்த தீவிரவாதி தப்பிக்க முயற்சித்தல்..ஹீரோ அவனைப் பிடித்து தன் வீட்டில் அடைத்து வைத்திருப்பது. (சுவாரஸ்யத்திற்காக, இது முன்பின்னாக வரும்)

FUN & GAMES:
15. தீவிரவாதியிடம் விசாரணை. தான் தப்பிக்க உதவியது செக்யூரிட்டு சீஃப் என்று சொல்வது.
16. செக்யூரிட்டி சீஃப் வீட்டில் விஜய். அவரிடம் விசாரணை. ‘பெரிய ஆபத்தை தொட்டுட்டே’ என்று சொல்லியபடி செக்யூரிட்டி சீஃப் தற்கொலை செய்துகொள்வது. 
17. வீட்டின் மாடியில் தீவிரவாதியுடன் விஜய்..அவன் பேக்கில் இருக்கும் பொருட்களை ஹீரோ செக் செய்வது. அதில் இருக்கும் ஒரு பேப்பரில் 12 புள்ளிகள். அதை இணைத்து, மும்பை மேப்பில் வைத்துப் பார்ப்பது..தீவிரவாதிகளின் திட்டம் புரிகிறது. ‘மும்பை சிட்டியில் 12 இடத்தில் அட்டாக்’. இன்று 24ம் தேதி...27ல் அட்டாக் என்று தீவிரவாதி சொல்வது.
18. வில்லனுக்கு ‘தப்பித்தவன் வந்து சேரவில்லை. போலீஸ் தவிர்த்து வேறு யாரோ பிடித்து வைத்திருப்பதாக’ மெசேஜ் வருகிறது.

B STORY:
19. ஃப்ரெண்ட் கல்யாணத்தில் ஹீரோயின்..ஃப்ரெண்ட் ஒரு சொட்டைத்தலையனை கல்யாணம் செய்துகொள்வது. ஹீரோயின் மனமாற்றம்.
20. சத்யனுடன் ஹீரோ..செக்யூரிட்டி சீஃபைக் கொன்றது தான் தான் & தீவிரவாதி தன்னிடம் இருப்பதை ஹீரோ சொல்ல வரும்போது....ஹீரோயின் வருகை.
21. ஹீரோயின் ஐ லவ் யூ சொல்வது. ஹீரோ காமெடிக்காக மறுப்பது. வேறு மாப்பிள்ளைக்கு ஓகே சொல்லிவிட்டதாக ஹீரோயின் சொல்வது.
22. அந்த மாப்பிள்ளை ஜெயராம்..ஹீரோவின் உயரதிகாரி. காமெடி சீன்.
23. ஜெயராமின் கெட் டூ கெதர் பார்ட்டி...பாடல்.

FUN & GAMES:
24. ஹீரோ வீட்டில் சத்யன்..தீவிரவாதியை பீரோவில் அடைத்து வைத்திருப்பதை சத்யனுக்கு விஜய் காட்டுவது.
25. ஃப்ரெண்ட் கல்யாண சீன்...பெண்-மாப்பிள்ளை கிஸ் பண்ணிக்கொள்வது..எல்லோரும் ஃபோட்டோ எடுத்துக்கொள்வது. ஒரு கேம் விளையாட விஜய், தன் பேட்ச் மேட்ஸை அழைப்பது.
26. ஹீரோ வீட்டுவாசலில் தன் டீமுடன் ஹீரோ...தன் ப்ளானை விவரிப்பது. தீவிரவாதி தப்பித்து வருவது.
27. ஸ்லீப்பர் செல்லை ஹீரோ&டீம் ஃபாலோ செய்வது...படத்தின் பெஸ்ட் சீகுவென்ஸ்..ஸ்லீப்பர் செல்லை ஹீரோவின் டீம் போட்டுத்தள்ளுவது.

MID POINT:
28. டிவிகளில் நியூஸ்..அதை ஹீரோ தன் வீட்டில் பார்ப்பது..வில்லனின் தம்பி சுட்டுக்கொல்லப்பட்டதை வில்லனும் தன் வீட்டில் பார்ப்பது.
29. வில்லன் ஒரு ஜாயின் செக்ரட்டரியிடம் பேசுவது. ஒரு ஃபோனை மட்டும் காணோம் என்று அவர் சொல்வது.
30. அந்த நம்பருக்கு வில்லன் ஃபோன் செய்ய, ஹீரோ எடுப்பது...’I AM WAITING'. - இடைவேளை.

B STORY:
31. விஜய் தூங்கிக்கொண்டிருக்க, ஹீரோயின் ஃபோன் செய்து ‘ஜெயராம் கூப்பிடுவதாகச் சொல்வது..
32. ஜெயராமுக்கு ஒரு ஐட்டத்தை ஹீரோ-ஹீரோயின் இருவரும் செட் செய்வது.

BAD GUYS CLOSE IN:
33. வில்லனின் மும்பை வருகை...கோட் சூட்டை வைத்து, கல்யாண ஃபங்சனாக இருக்கலாம் என வில்லன் அனுமானிப்பது.
34. ஹீரோ ஸ்லீப்பர் செல் பற்றி சத்யனிடம் விஜய் விளக்குவது. ஸ்லீப்பர் செல்லின் லீடர் தன்னைத் தேடி வருவான் என்று ஹீரோ சொல்வது.
35. ஜெயராம் வீட்டில் விஜய்-ஹீரோயின்...மாமா பெண்ணை கட்டிக்கப்போவதாக ஜெயராம் சொல்வது. காமெடி சீன் (FUN & B STORY)
36. கூகுள் பாடல்..ஹீரோயின் கிஸ் கேட்க, ஹீரோவுக்கு திருமண கிஸ் & கோட் சூட் ஞாபகம் வருவது. (B STORY - CONNECTS WITH A STORY)
37. சர்ச்சுக்கு ஹீரோ & சத்யன் பயணம்..அதற்கு முன் வில்லன் அங்கே!
38. மாப்பிள்ளை வீட்டில் வில்லன்..சர்ச்சில் ஹீரோ..மாப்பிள்ளை வீட்டில் கல்யாண ஆல்பத்தைப் பார்க்கும் வில்லன்...அங்கே 5 ஆர்மி டீம் ஃபோட்டோக்கள்..ஜோயல் ப்ரதரின் வருகை..அனைவரையும் வில்லன் சுட்டுக்கொள்வது.
39. ஹீரோவின் லேட் வருகை..கல்யாண ஆல்பத்தை ஹீரோவும் பார்ப்பது..டீமுக்கு ஒருவரை ஃபோட்டோவில் ரவுண்ட் செய்திருக்கிறார்கள்.
40. ஹீரோ ரவுண்ட் செய்யப்பட்ட ஆட்களுக்கு ஃபோன் செய்வது..அங்கே அனைவரும் நலம்.
41. ஹீரோ வெயிட்டிங்...ஒரு ஆர்மி மேனின் ப்ரதரின் மகள் கடத்தப்பட்டதாக ஃபோன் வருகிறது. ஹீரோ சத்யனுக்கு ஃபோன் செய்து, ரவுண்ட் செய்யப்பட்ட ஆர்மி மேன்களின் வீட்டுப் பெண்களின் ஃபோன் நம்பரை ட்ராக் செய்யச் சொல்வது.
42. ஹீரோ தன் தங்கைக்கு ஃபோன் செய்வது...சத்யன் நம்பர்ஸை ட்ராக் செய்வது.-இன்னொரு பெண் கடத்தப்படுவது-சத்யனை எதுவும் செய்யாமல் வரும்படி ஹீரோ அழைப்பது-4வது & 5வது பெண்களும் கடத்தப்பட்டதாக செய்தி- தன் தங்கச்சியும் கடத்தப்பட்டதாக ஹீரோ சொல்வது..ஃப்ளாஷ்பேக்கில் அந்த ஷாட்ஸ்.
43. ஹீரோ வளர்க்கும் நாய் வருகை - தங்கச்சியின் துப்பட்டாவை வைத்து நாய் மோப்பம் பிடிப்பது.
44. வில்லனின் இடத்தில் கடத்தப்பட்ட பெண்கள்..ஒவ்வொரு ஃபோட்டோவாகக் காட்டி வில்லன்கள் விசாரிப்பது. விஜய்யின் தங்கை மட்டும் ‘ஃபோட்டோவில் இருப்பது தன் அண்ணன் அல்ல’ என்று சொல்வது-குரூப் ஃபோட்டோவில் விஜய்யை அடையாளம் காட்டுவது. வில்லனுக்கு ஃபோன் - அந்த இடத்தை காலி செய்யும்படி வில்லன் சொல்வது.
45. விஜய் எண்ட்ரி - ஃபைட். வில்லனின் அடியாளை காரில் டிக்கியில் போட்டுக்கொண்டு, மீட்கப்பட்ட பெண்களின் விஜய் வெளியேறுதல்.
46. அடியாட்களின் இடத்தில் வில்லன்..மீண்டும் ஃபோட்டோக்களை ஓட்டிப்பார்ப்பது-விஜய் டீமின் ஃபோட்டோ வில்லனுக்கு கிடைப்பது.
47. காரில் விஜய் தங்கை, விஜய்யைத் திட்டுவது.- இன்னொரு மெயின் வில்லன் இருப்பதை விஜய் அறிவது.

B STORY:
48. பிடிபட்டவனை விஜய் பீரோவில் அடைத்து வைப்பது-ஹீரோயின் வருகை.-சத்யன் வருகை.- பாடல்

ALL IS LOST:
49. வில்லனின் அடியாளை ஹீரோ கொன்று போட்டிருப்பதை வில்லன் நியூஸில் பார்ப்பது. அந்த டீமை பெரிதாக அட்டாக் செய்யும்படி ஜாயின் செக்ரட்டரி வில்லனிடம் சொல்வது.
50. ஹீரோவுக்கு வில்லன் ஃபோன் செய்வது - ஹீரோவின் ஃப்ரெண்ட் இன்னும் 10 செகண்ட்ஸில் சாவான் என்று வில்லன் சொல்வது - ஹீரோ அங்கே கால் செய்யும்போது, அங்கே பாம் வெடிக்கிறது. மீதி 10 பேரும் இருக்குமிடத்தை வில்லனே சொல்வது. தான் சொல்வதைக் கேட்கவில்லை என்றால், அனைவரும் கொல்லப்படுவார்கள் என்று மிரட்டுவது. ஹீரோ வில்லனுக்கு அடிபணிதல்...ஆல் இஸ் லாஸ்ட்.

DARK NIGHT OF SOUL:
51. மாற்றுத்திறனாளி ராணுவ வீரர்களின் உதவியை ஹீரோ நாடுதல். ஹீரோவின் உடலில் சிப்புடன், தான் வில்லனை சந்தித்த 15வது நிமிடம் பாம் வெடிக்க வேண்டும் என்று ஹீரோ திட்டமிடுவது.
52. சத்யன் ஹீரோவிடம் வேண்டாம் என்று சொல்வது..ஹீரோ ராணுவ/போலீஸ் அதிகாரிகளின் தியாகத்தைச் சொல்வது.
53.  ஹீரோயினிடம் ஹீரோ கல்யாணம் வேண்டாம் என்று சொல்வது.-வீட்டில் ஃபேமிலி ஃபோட்டோக்களை ஹீரோ பார்ப்பது.

BREAK INTO THREE:

54. ஹீரோ உடலில் சிப்-ஐ செலுத்திக்கொண்டு கிளம்புதல் - வில்லன் சொல்லும் இடங்களுக்கு எல்லாம் சொல்லும் வாகனத்தில் செல்வது. ஹீரோவின் ஆள் பாமுடன் கிளம்புதல். சத்யன் ட்ராக் செய்தல்.

FINALE:
55. கப்பலில் வில்லனை ஹீரோ மீட் செய்தல்.  ஹீரோ நிறுத்திய கார்களில் பாம் இருப்பதை வில்லன் சொல்வது. அதை வைத்தது விஜய் தான் என்று போலீஸ்க்கு இன்ஃபர்மேசன் கொடுப்போம் என்று வில்லன் சொல்வது. ஜாயின் செக்ரட்டரி மூலம் ஆர்மிக்குள்ளேயே ஸ்லீப்பர் செல் நுழையும் என்று வில்லன் விளக்குவது. ஹீரோவின் ஆள் கப்பலில் பாம் செட் செய்தல். ஹீரோ தப்பித்தே ஆக வேண்டும்.
56. கிளைமாக்ஸ் ஃபைட். வில்லன் & ஜாயின் செக்ரட்டரி சாவது.

FINAL IMAGE:
57. ரயில்வே ஸ்டேசனில் ஹீரோ - ஜெயராமுக்கு உண்மை தெரிவது-ஆர்மி தான் கிரேட் என சத்யன் பேசுவது.- ஹீரோ & டீம் ஆர்மிக்குத் திரும்புவது!
--------------------------------------------------------





பீட் ஷீட் பற்றிய பதிவுகளில் சொன்னவற்றையும் இந்தக் காட்சிகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால், உங்கள் ஒன்லைன் ஆர்டரை எப்படிச் சரி செய்வது என்பது உங்களுக்கே தெளிவாகத் தெரியும். இந்த பீட் ஷீட்டில் உள்ள சில விஷயங்களுக்கு உங்கள் கதையில் இடம் இல்லாமல் இருக்கலாம். ஆனாலும் சுவாரஸ்யமாகக் கதை சொல்ல, இந்த பீட் ஷீட் உத்தரவாதம் அளிக்கும்.

இதுபற்றி இன்னும் கொஞ்சம் அடுத்த பதிவில்...

(தொடரும்)
மேலும் வாசிக்க... "திரைக்கதை சூத்திரங்கள் -II-பகுதி-37"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

2 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Thursday, February 12, 2015

அனேகன் - திரை விமர்சனம்

வி.ஐ.பிக்கு அடுத்து தனுஷின் நடிப்பில், கே.ஆவி. ஆனந்த இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம் அனேகன். மறுஜென்மக் கதை, ஐந்து கெட்டப், கார்த்திக் ரீஎண்ட்ரி என படத்தின் எதிர்பார்ப்பைக் கூட்டிய விஷயங்கள் பல..எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா?

ஒரு ஊர்ல :
ஹீரோயினுக்கு முன் ஜென்ம ஞாபகங்கள் பீறிட்டுக் கிளம்புகின்றன. எல்லா ஜென்மத்திலும் தனுஷை லவ்வுவதும், வில்லன்கள் பிரித்துக் கொல்வதுமாக இருக்கிறார்கள். இப்போது மீண்டும் சென்னையில் அதே தனுஷ்..அதே வில்லன்கள்..அதே காதல்..இந்த ஜென்மத்திலாவது......?

உரிச்சா:
சென்னையில் வாழும் ஹீரோயினுக்கு ‘ஒரு காரணத்துடன்’ முன் ஜென்ம ஞாபகங்கள் வர ஆரம்பிக்கின்றன. பர்மாவில் 1962ல் கதை விரிகிறது. அங்கே ஒரு ஆபத்தில் தனுஷ் ஹீரோயினைக் காப்பாற்ற, லவ் ஆகிறது. அதை பணக்கார அப்பா எதிர்க்க, உருக்கமான முடிவுடன் அந்த எபிசோடு முடிகிறது. இப்போது அதே பணக்கார அப்பா, ஹீரோயினுக்கு மாமாவாகப் பிறந்திருக்கிறார். பர்மாக் காட்சிகளில் ஹீரோ காப்பாற்றும் சீன், இறுதி கபல் சீன் தவிர்த்து மற்றவை சாதாரணமாக நகர்கின்றன. ’லவ் பண்றாங்க, சாகுறாங்க’ என்பதைத் தாண்டி அங்கே சுவராஸ்யமாக ஒன்றுமே இல்லை.

ஹீரோயினின் முன் ஜென்மக் கதையை யாரும் நம்பாதபோது, ‘தற்கால’ தனுஷ் அதே ஐ.டி.கம்பெனியில் ஜாயின் செய்கிறார். கம்பெனிக்கு ஓனர், கார்த்திக். ஹீரோயினின் கதையை தனுஷும் கண்டுகொள்ளாமல்விட, இன்னொரு ஜென்மக் கதையை ஓப்பன் செய்கிறார் ஹீரோயின். 25 வருடங்களாக சால்வ் பண்ண முடியாத ஒரு போலீஸ் கேஸை ஹீரோயின் தீர்த்துவைக்கிறார். அந்த கேஸ் தான் இன்னொரு ‘தனுஷ்-அமைரா(ஹீரோயின்)’ கதை. அதே காதல், அதே முடிவு. கொஞ்சம் ட்விஸ்ட்டுடன்.

இப்போது அந்த 25 வருடக் கதையின் வில்லன், இவர்களைக் குறிவைக்கிறான். இந்த ஜென்மத்திலாவது காதல் ஜெயிக்குமா எனும் பயங்கர ரகசியத்தை இழுத்துச் சொல்லி முடிக்கிறார்கள்.

படத்தின் இரண்டு முன் ஜென்ம எபிசோடுகளும் சவசவ என்று நகர்வது தான் பெரும்பிரச்சினை. 1960/1980களில் நடக்கும் சம்பவங்கள் என்பதற்காக, அந்தக் காலத்தைய படம் மாதிரியே சீன் வைத்தால் எப்படி பாஸ்? ஆனால் தற்போதைய காலகட்ட சீன்கள், ஒரு த்ரில்லர் மாதிரி விறுவிறுப்பாக நடக்கின்றன. இண்டர்வெல்வரை பில்டப்பை பயங்கரமாக ஏற்றிவிடுகிறார்கள். ஆனால் வில்லன் யார் என்று தெரியும்போதும், அதன்பிறகு நடக்கும் சம்பவங்களும் அந்த பில்டப்பிற்கு ஏற்ற அளவில் இல்லை.

ஒரு ஜென்மத்தில் வில்லனாக வருபவர்கள், இன்னொரு ஜென்மத்தில் நல்லவர்களாக வரும்போது, நமக்கே கொஞ்சம் கிர்ரென்று தான் இருக்கிறது. கிளைமாக்ஸையும் லாஜிக்கே இல்லாமல் ஹீரோ-ஹீரோயின் - வில்லனை ஒரே இடத்திற்குக் கொண்டுவந்து இழுத்து முடிக்கிறார்கள்.

செமயான கான்செப்ட், அட்டகாசமான பாடல்கள், வழக்கம்போல் தனிஷ் மற்றும் கார்த்திக்கின் அருமையான நடிப்பு, லாஜிக்கான வில்லன் கேரக்டர், செமயான சில சீன்கள்(லிஃப்ட் சீன், பேய்(?) வரும் சீன்) என எல்லாம் இருந்தும்....ஏதோ ஒன்று மிஸ் ஆவது போன்றே ஒரு ஃபீலிங்.

தனுஷ்:
பர்மா ஏழை, ஐடி இளைஞன், சென்னை ரவுடி, ஒரு பாடலில் மன்னன் என நடிப்புக்குத் தீனி போடும் வெரைட்டியான கேரக்டர்கள். தனுஷும் புகுந்து விளையாடுகிறார். சென்னை ரவுடி கேரக்டரில் தான் அதிகம் ஸ்கோர் செய்கிறார். ‘டங்கா மாரி’க்கு தியேட்டர் அதிர்வது நிச்சயம். ஆனால் கெட்டப் எதுவுமே ஒட்டவில்லை, பார்க்க நன்றாகவும் இல்லை.

கார்த்திக்:
ரொம்ப நாளைக்கு அப்புறம், நவரச நாயகனின் அதிரடி. வயதானாலும் அதே துள்ளலுடன் வருகிறார். ஹிப்னாடிஸ சீனில் ஹீரோயின் கதையை உட்கார்ந்து கேட்கும்போது பார்வையிலேயே அசத்துகிறார். முகத்தில் இப்போது கொஞ்சம் முத்துராமன் சாயல் தெரிகிறது. எலக்சன் டைம் தவிர்த்து மற்ற நேரங்களில் கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக ஒரு ரவுண்ட் வரலாம். எலக்சன் டைமில், ஒன்லி காமெடி ரோல்!


அமைரா:
தமிழ் சினிமாவிற்கு இன்னொரு நல்ல ஹீரோயின். மனிஷா கொய்ராலா மாதிரி முகச் சாயல், ஆனால் அந்த சிரிப்பு மிஸ்ஸிங். தனுஷுக்கு இணையாக நான்கைந்து வேடங்களில் வரவேண்டிய கட்டாயம். முதல் படமாக இருந்தாலும், சளைக்காமல் நடித்திருக்கிறார். கதையே இவரை மையமாகக் கொண்டு நகர்வதால், அதிகம் ஸ்கோர் செய்கிறார். அழகான, நடிக்கத் தெரிந்த நடிகைகள் வரிசையில் ஒரு புது வரவு.

நெகடிவ் பாயிண்ட்ஸ்:
- சவசவ என நகரும் காட்சிகள்
- இரண்டு முன் ஜென்மக் கதைகளிலே கற்பனை வறட்சி.
- சும்மாவே சுபா & ஆனந்த் கோஷ்டி நீளமாகக் கதை சொல்வதில் வல்லவர்கள். இதில் நான்கைந்து ஜென்மங்கள் வேறு.கேட்கணுமா? இரண்டே முக்கால் மணி நேரம்!
- காமெடி என்று பெரிதாக ஏதும் இல்லை
- லாஜிக் கன்னாபின்னாவென்று உதைக்கிறது. பர்மா தனுஷ் ஏன் சென்னை வில்லனைக் கொல்ல, கிளைமாக்ஸில் வருகிறார்?
- ஒரு ஜென்மத்தில் கெட்டவன், அடுத்த ஜென்மத்தில் நல்லவனாக இருப்பது லாஜிக் & ட்விஸ்ட் தான். ஆனால் அதுவே குழப்பத்தை உண்டாக்குகிறது.
- போதை மருந்து விற்கத் தயங்காத ஹிப்னாடிஸ டாக்டர், திடீரென நல்லவர் ஆவது
- தனுஷைக் கொல்ல சான்ஸ் இருந்தும், வில்லன் மிஸ் பண்ணி..கிளைமாக்ஸில் படத்தை முடிப்பது!!
- வில்லனைக் கொல்ல ஏன்யா அவ்ளோ தயக்கம்...மரத்துமேல கத்தியைச் சொருகி...முடியல!
- போதை மருந்தையும் முன் ஜென்ம நினைவையும் கலந்துகட்டி, இரண்டினால் வரும் விளைவுகளையும் ஹீரோயின் சொல்வதால், பாதி உண்மையாகவும் பாதி கற்பனையாகவும் சீன்கள் வருகின்றன. அதை எல்லாத் தரப்பு ஆடியன்ஸும் புரிந்துகொள்வார்களா?

பாசிடிவ் பாயிண்ட்ஸ்:
- தனுஷ் & கார்த்திக்
- ஃப்ரெஷ்ஷான ஹீரோயின் (ஹிஹி)
- திகிலைக் கூட்டும் ஐ.டி. கம்பெனி சீன்கள்
- புதுமையான மறுஜென்மக் கான்செப்ட். அது உண்மையா, ஹீரோயினின் கற்பனையா எனும் டைலம்மாவிலேயே ஆடியன்ஸை இண்டர்வெல்வரை வைத்திருப்பது
- வில்லனுக்குக்கூட லாஜிக்கான ஒரு காரணத்தைக் கொடுத்தது
- டங்கா மாரி உட்பட எல்லாமே சூப்பர்ஹிட் பாடல்கள். எடுத்த விதமும் அருமை. ஹாரிஸ் ஜெயராஜ் கலக்கிவிட்டார்.

பார்க்கலாமா? 
வித்தியாசமான முயற்சி....பார்க்கலாம்.

மேலும் வாசிக்க... "அனேகன் - திரை விமர்சனம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

10 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Monday, February 9, 2015

என்னை அறிந்தால்... - திரைக்கதை பற்றி....

கடந்த சில மாதங்களாக திரைக்கதை ஆலோசகராக பதவி உயர்வு  பெற்றுவிட்டேன். சில புதிய திரைக்கதையைப் படித்து, அதில் உள்ள நிறை, குறைகளைப் பட்டியலிடுவது, சில மாற்றங்களைப் பரிந்துரைப்பது என்று ஐ ஆம் பிஸி..கூடவே, ஒரு பிரபல இயக்குநரின் உதவி இயக்குநர் தனியே படம் செய்யும் முயற்சியில் இருக்கிறார். அவருடன் இணைந்து, அவரது திரைக்கதை உருவாக்கத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமாவில் எதுவுமே கடைசி நிமிடம் வரை நிச்சயம் இல்லை என்பதால்... அதிகம் தம்பட்டம் அடிக்காமல் கொஞ்சம் அடக்கியே வாசிக்கிறேன்.

ஒவ்வொரு திரைக்கதையிலும் இந்தப் புது இயக்குநர்கள் காட்டும் அக்கறையையும் உழைப்பையும் பார்த்துவிட்டு, தியேட்டரில் போய் உட்கார்ந்தால் லிங்கு, ஷங்கர், கௌதம் போன்ற பிரபல இயக்குநர்களின் திரைக்கதையைப் பார்க்கும்போது வயிற்றெரிச்சலாக உள்ளது. லாஜிக் பற்றியோ, திரைக்கதை வடிவம் பற்றியோ, குறைந்த பட்சம் ஆடியன்ஸ் பற்றியோ எவ்வித அக்கறையும் இல்லாமல் வேலை செய்கிறார்களோ என்று தோன்றுகிறது.

என்னை அறிந்தால் படம் பல குறைகளையும் தாண்டி, நன்றாகவே இருந்ததால் 'பார்க்கலாம்' என்று விமர்சனத்தில் எழுதிவிட்டேன். உடனே தங்கமணி 'அப்போ கூட்டிட்டுப் போ' என்று கழுத்தில் கத்தி வைத்துவிட்டார். இரண்டாம் முறை போனால், இன்டர்வெல்வரை  உட்கார முடியவில்லை. எவ்ளோ பெரிய்ய்ய்ய படம்!!! இரண்டாம்பாதியைத் தான் இரண்டாம் முறை ரசிக்க முடிந்தது. அப்போது யோசித்ததில் சில இங்கே:

1. அனுஷ்கா அறிமுகக் காட்சியும், ஆரம்பப் பாடலும் தேவையா? அது இல்லாமல் ஃப்ளைட்டில் படத்தை ஆரம்பித்திருந்தாலும் எளிதாகப் புரிந்திருக்குமே?

2. த்ரிஷாவிற்கு அவ்வளவு நீள மேடைப்பாடல் தேவையா? இரண்டு ஹீரோயினையும் பேலன்ஸ் செய்யவேன்டும் என்பதற்காக இப்படியா நம் பொறுமையைச் சோதிப்பது?

3. த்ரிஷாவை நான் தான் கொன்றேன் என்று அருண் விஜய் சொல்ல வேண்டிய அவசியமே இல்லையே? அதைச் சொன்னபிறகும், அனுஷ்காவை விட்டால் குழந்தையை விட்டுவிடுவான் எறு நம்பவே இடம் இல்லையே? ஹீரோவே த்ரிஷாவைக் கொன்றது யார் என்று கண்டுபிடிப்பது போல் அமைத்திருந்தால் அல்லவா நன்றாக இருக்கும்?

4. குழந்தை இருக்கும் இடத்தை வில்லனின் அடியாளே ஹீரோவுக்கு மெசேஜ் அனுப்பிச் சொல்கிறார். ஹீரோ எப்போதோ செய்த உதவி தான் காரணம் என்று ஒருவரி வசனத்தில் ஒரு விளக்கம்..என்ன கொடுமை சார் இது! ஹீரோயின்களுக்கு பாட்டு வைத்து வெட்டியாகச் செலவளித்த நேரத்தில், இதைக் காட்டியிருக்கலாமே!


5. படத்தில் வந்த பெரும்பாலான காட்சிகளில் இயக்குநரின் முந்தைய படங்களின் சாயல் நிறைய. காக்க காக்க படத்தையும் வேட்டையாடு விளையாடு படத்தையும் மிக்ஸியில் போட்டு அரைத்திருக்கிறார்கள். நண்பர் ஒருவர் தன் திரைக்கதையை கத்தி படம் வருமுன்பே எழுதி முடித்துவிட்டார். துரதிர்ஷ்டவசமாக நண்பரின் கிளைமாக்ஸும் கத்தி கிளைமாக்ஸும் 'கொஞ்சம்'ஒன்று போல் அமைந்துவிட்டது. நண்பர் அந்த கிளைமாக்ஸை தூக்கிப் போட்டுவிட்டு, புது கிளைமாக்ஸுக்காக கடந்த இரண்டு மாதங்களாக உழைத்துக்கொண்டு இருக்கிறார்.

இப்படி அடுத்தவர் படத்தில் வந்ததையே தன் படத்தில் வைக்க புதியவர்கள் யோசிக்கும்போது, தன் படத்தில் வந்ததையே திரும்பத் திரும்ப இந்தப் படத்தில் யூஸ் பண்ண வேண்டிய அவசியம் என்ன? சரக்குப் பற்றாக்குறை தானா?

6. இதையெல்லாம்விட மன்னிக்க முடியாத விஷயம், நரேசன் உத்தியை கௌதம் பயன்படுத்தியிருக்கும் முறை.

அஜித்தைப் பார்த்து மெர்சல் ஆகிறார் அனுஷா (விஷுவல்) - பின்னாலேயே நரேசன்..வாவ், வாட் அ ஹேண்ட்சம் மேன்

அஜித் தன் கையை இன்னும் கொஞ்ச நேரம் பிடித்தால் நன்றாக இருக்குமே என்று நினைக்கிறார் அனுஷ்கா -அதற்கு நரேசன், கையை விட்டுடாதடா.

கூடவே 'அப்போத்தான் அவனை நான் பார்த்தேன்...அவன் நடந்தான்' ரேஞ்சில் பிண்ணனியில் நரேசன்.

இந்தக் கொடுமை, அஜித்தின் ஃப்ளாஷ்பேக் ஆரம்பித்தபின்னும் தொடர்கிறது. யார், யாரிடம் சொல்கிறார்கள், டைரக்டாக ஆடியன்ஸிடமே பேசுகிறார்களா என்று ஒன்றும் புரியவில்லை.

அருண் விஜய் வரும்போது, அவரது குரல் பிண்ணனியில் பேச ஆரம்பித்துவிடுகிறது. 'கத்தியை எடுத்தேன், குத்தினேன்' என கிரிக்கெட் கமெண்டரி ரேஞ்சில் பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.

1950களில் வந்த படங்ககளில்....ஒரு அம்மா மகனுக்காக காத்திருப்பார். மகன் வந்ததும், 'ஆ..வந்துவிட்டாயடா கண்ணே..உன் வரவுக்காக வழி மேல் விழி வைத்து அம்மா எத்தனை மணி நேரம் காத்திருந்தேனடா' எனும் ரேஞ்சில் பேசிக்கொண்டே செல்வார். இப்போது யாராவது அப்படி டயலாக் எழுதினால், 'அம்மா காத்திருந்ததையும் காட்டியாச்சு. பையன் வந்ததையும் காட்டியாச்சு. அப்புறம் எதுக்கு இந்த டயலாக்?' என்று இயக்குநரே அதை கிழித்துப் போட்டுவிடுவார்.

ஆனால் இயக்குநர் கௌதம் மேனனோ விஷுவலாகக் காட்டி, அது போதாதென்று வசனத்தில் சொல்லி அதுவும் போதாதென்று நரேசனில் சொல்லிக் கொடுமை செய்திருக்கிறார். காக்க காக்க எனும் க்ரிப்பான திரைக்கதையை எழுதிய மனிதரா இப்படி ஒரு விஷுவல் மீடியத்தை ரேடியோ நாடகம் போன்று ஆக்கியிருக்கிறார் என்று அதிர்ச்சியாக இருக்கிறது.

பிரபலம் என்று ஆகிவிட்டால், 'நான் எடுக்கிறது தான் படம்' எனும் மிதப்பு வந்துவிடுமோ? 'வசன ஆடியோ ரிலீஸ் ஆகும் கொடுமை தமிழ் சினிமா தவிர வேறு எங்காவது உண்டா?' என்று பேசும் உலக  சினிமா அறிவுஜீவிகள் கௌதம் மேனனிடம் இதைக் குட்டிக் காட்டினால் நல்லது.
மேலும் வாசிக்க... "என்னை அறிந்தால்... - திரைக்கதை பற்றி...."
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

திரைக்கதை சூத்திரங்கள் -II-பகுதி-36

12. Dark night of Soul:

ஆல் இஸ் லாஸ்ட்டில் எல்லாவற்றையும் இழந்து தவிக்கும் ஹீரோவின் நிலைமையைக் காட்டும் சீன்கள் இவை. இது ஐந்து செகன்டாகவும் இருக்கலாம் அல்லது அரைமணிநேரமாகவும் இருக்கலாம். வில்லன்கள் திருப்பி அடித்து, ஆல் இஸ் லாஸ்ட்டில் வீழ்த்திவிட்டார்கள். இனி என்ன செய்வது என்று தெரியவில்லை, அதே நேரத்தில் ஆல் இஸ்லாஸ்ட்டால் ஹீரோ வருத்தத்திலும் இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் பொதுவாக கண்கள் சிவக்க, டாய் என்று ஹீரோ கத்தியபடியே, கடலில் புயல் வீசும் பேக்ரவுன்டுடன் கிளைமாக்ஸுக்குள் புகுந்துவிடுவது வழக்கம். ஆனால் இங்கே ஹீரோ தடுமாறி நிற்பது போல் வைத்தால், யதார்த்தமாக இருக்கும். ஆடியன்ஸ் எல்லோருமே இப்படி ஒரு சூழலை கடந்து வந்தவர்களாகத்தான் இருப்பார்கள் என்பதால், 'அடப்பாவமே..இப்போ என்ன செய்வானோ' எனும் சிம்பதி உண்டாகும்.

நம்பிக்கை இழந்து, இனி என்ன செய்வது என்று தவித்து, முடிவில் ஹீரோ ஒரு வழியைக் கன்டுபிடிக்கப் போகிறான். அதற்கு முன், இந்த தவிப்பு இந்தப் பகுதியில் ஆடியன்ஸுக்கு சொல்லப்பட்டுவிட வேண்டும்.

ஒருவழியாக ஹீரோ ஒரு வழியைக் கண்டுபிடிக்கும்போது...

13. Break Into Three:
 ....திரைக்கதை ஆக்ட்-3ல் நுழைகின்றது.

என்ன செய்வது என்று ஹீரோவுக்குத் தெரிந்துவிட்டது. ஹீரோவுக்கு ஒரு தெளிவு கிடைத்துவிட்டது. அந்தத் தெளிவு, இதற்கு முன்பு நாம் பார்த்த பி ஸ்டோரியில் இருந்து கிடைக்க வேண்டும் என்று சொல்கிறார் ப்ளேக் ஸ்னிடர். ஆனால் தமிழ் சினிமாவில் பி-ஸ்டோரி என்பது காதல் கதை தான் என்பதால், ஏதாவது ஒரு நட்டுவச்ச ரோஜாச் செடி தான் இங்கே தெளிவைக் கொடுக்கும்.

ஆனால் நல்ல திரைக்கதை என்பது மெயின் ஸ்டோரிக்கு உதவும் பி ஸ்டோரியைக் கொண்டிருக்க வேண்டும். அது ஒரு நல்ல ஃபீலிங்கக் கொடுக்கும். திரைக்கதையாசிருயனின் அக்கறையையும் அது காட்டும். உதாரணமாக, பில்லாவில் வரும் இரு கிளைக்கதைகளுமே ஆல் இஸ் லாஸ்ட்டில் இருக்கும் ஹீரோவுக்கு உதவுவதாக வரும்.

ஒன்று, பழி வாங்க வந்த ஹீரோயினின் ஆதரவு..இரண்டாவது, தேங்காய் ஸ்ரீனிவாசனின் உதவி. ஏ ஸ்டோரியுடன் பி ஸ்டோரி அழகாக கலக்கும் நேரம் அது. பி ஸ்டோரி என்பது வெறுமனே டைம் பாஸ்க்கு அல்ல, கதையை நிறைவு செய்ய உதவும் ஒரு விஷயம் என்று ஆடியன்ஸ் உணரும்போது, படத்தின் வெற்றி உறுதிப்படும்.

14. Finale :
 இது நமது கிளைமாக்ஸ். ஹீரோ தான் கற்றுக்கொண்ட மொத்த வித்தையையும் வில்லன்கள் மேல் (கவனிக்க: ஆடியன்ஸ் மேல் அல்ல!) இறக்கி வைக்கும் நேரம். ஒரு சாமானியனாக சாதாரண உலகில் வாழ்ந்துவந்த ஹீரோ, ஏதோ ஒரு கேடலிஸ்ட் சம்பவத்தால் உந்தப்பட்டு, ஒரு பிரச்சினையில் சிக்கி, அதைத் தீர்ப்பதாக நினைத்து ஆல் இஸ் லாஸ்ட் ஆகி, இறுதியில் ஒருவழியாக வெற்றிக்கொடி நாட்டும் இடம் இது.

வில்லன்கள் அழிக்கப்படுகிறார்கள், பிரச்சினைகள் தீர்க்கப்படுகின்றன. ஹீரோ ஹீரோயினுடன் ஐக்கியம் ஆகிறார். ஹீரோ ஹேப்பி, ஆடியன்ஸ் ஹேப்பி, புரடியூசர் ஹேப்பி!

15. Final Image:
ஓப்பனிங் இமேஜில் பார்த்தபடி, அதற்கு நேரெதிரான சீன் இது. நல்ல குணச்சித்திர வளைவு உள்ள படத்தில், இந்த சீன் பெர்fஎக்ட்டாக இருக்கும். உதாரணம், தேவர் மகன்.

காலேஜ் முடித்து, பங்க் ஸ்டைல் முடியுடன் ரயில்வே ஸ்டேசனில் வந்திறங்கும் சக்திவேல், ஃபைனல் இமேஜில் மீண்டும் அதே ஸ்டேசனுக்கு வந்து ரயில் ஏறுகிறார். பம்க்க் முடி இல்லை, பழைய ஆட்டம் பாட்டம் இல்லை. இப்போது அவர் சக்திவேல் இல்லை...தேவர் மகன் அல்லது அவரே இப்போது தேவர்.

அதே இடம்...அதே மனிதன்..இடையில் நடந்த பல விஷயங்கள் ஹீரோவின் வாழ்க்கையை தலைகீழாகப் புரட்டிப்போட்டுவிட்டன. அப்படி மாற்றிய வலுவான சம்பவங்கள் தான் படம்.

ஆடியன்ஸ் யாரும் ஓப்பனிங் இமேஜ் என்ன, ஃபைனல் இமேஜ் என்ன என்று கம்பேர் பண்ணி செஇக் பண்ணப் போவதில்லை. ஆனால் அவர்கள் ஒரு முழு வட்டத்தில் பயணம் செய்துமுடித்திருப்பதை, அவர்களின் சப்கான்ஷியஸ் மைண்ட் அறியும். அது ஒரு நல்ல படம் பார்த்த திருப்தியைக் கொடுக்கும். அதுவே நமது வெற்றி.


'இந்த பீட்ஷீட், சூத்திரம், வகுத்தல், பெருக்கல் எல்லாம் ஹாலிவுட்டுக்குத் தான் செட் ஆகும். இங்கே நாலு பஞ்ச் டயலாக்கும், 2 குத்துப்பாட்டும், காமெடியும் தான் ஹிட் ஆகும். தமிழ்ல யாராவது இப்படியெல்லாம் படம் எடுக்கிறாங்களா என்ன?' என்று இன்னும் நினைப்பவர்கள் ஒரு வாரம் காத்திருக்கவும்.

(தொடரும்)
மேலும் வாசிக்க... "திரைக்கதை சூத்திரங்கள் -II-பகுதி-36"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Thursday, February 5, 2015

என்னை அறிந்தால்... - திரை விமர்சனம்

தல அஜித் மற்றும் ஸ்டைலிஷ் டைரக்டர் கௌதம் மேனன் கூட்டணியில், பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகியிருக்கும் படம், என்னை அறிந்தால். ஏற்கனவே காக்க காக்க படத்தில் இணைய வேண்டிய கூட்டணி. நீண்ண்ண்ட இடைவேளைக்குப் பின் இப்போது இணைந்திருக்கிறார்கள். சூர்யா வேண்டாம் என்று ஓடியபின் அஜித் நடிக்கும் படம், கிளைமாக்ஸே முடிவாகாமல் ஷூட்டிங் போன படம் என்று பல நெகடிவ் தகவல்கள் வந்தாலும் அதையெல்லாம் மீறி, இந்தக் கூட்டணி வெற்றிக்கனியைப் பறித்திருக்கிறது. ஓகே...உரிப்போமா?
ஒரு ஊர்ல :
தனது சின்ஸியாரிட்டியால் மனைவியை வில்லன் கும்பலிடம் பலிகொடுத்த போலீஸ் ஹீரோ, குழந்தைக்காக கடமை உணர்ச்சியை ஆஃப் செய்துவிட்டு அமைதியாக வாழ்ந்தாலும், பழைய பகை அவரை விடுவதில்லை. எனவே...டமால், டுமீல்.

உரிச்சா:
சிறு வயது முதல் 38 வயசு வரை ஹீரோவின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களே கதை என்று கௌதம் மேனன் சொன்னபோது, வாரணம் ஆயிரம் ஞாபகம் வந்து பயமுறுத்தியது. பொதுவாக தமிழ் சினிமாவில் இத்தகைய வாழ்க்கைச் சரித்திரக் கதைகள், நாயகன் மாதிரி போரடிக்காமல் சொல்லப் படுவது அபூர்வம். குறிப்பாக, லீனியராக இதைச் சொன்னால் டெம்ப்போவை மெயின்டெய்ன் செய்வதும் கஷ்டம்.

என்னை அறிந்தால் படம், 38 வயசு அஜித்துடன் ஆரம்பிக்கிறது. விமானத்தில் அஜித்தும், அனுஷ்காவும் அருகருகே அமர, ஸ்மூத்தாக படம் டேக் ஆஃப் ஆகிறது. முதல் கால் மணி நேரத்திலேயே இது மீண்டும் ஒரு ஸ்டைலிஷான கௌதம் மேனன் படம் என்று தெரிந்துவிடுகிறது. பிறகு ஃப்ளாஷ்பேக் ஓப்பன் ஆக, அஜித்திற்கு போலீஸ் ஆசை வந்தது ஏன் எனும் சிறுவயது சம்பவத்துடன் சத்யதேவ்வின் எஸ்.கதை படத்தில் விரிகிறது.

ஜெயிலில் கைதியாக இருக்கும் அருண் விஜய்யிடம் ’கைதி’ அஜித் நட்பாவதும், அவர்கள் நட்பு எபிசோடும், அந்த எபிசோடின் கிளைமாக்ஸும் அட்டகாசம். அஜித் ஒரு போலீஸ் என்று அப்போது தான் தெரிய வருகிறது. படத்தின் போஸ்டரில் ஆரம்பித்து, எல்லா இடத்திலும் இது ஒரு போலீஸ் ஆபீசரின் கதை என்று விளம்பரப்படுத்தியபின் படத்தில் இந்த சஸ்பென்ஸ் பெரிதாக நம்மைக் கவரவில்லை. அவர் மாறுவேடத்தில் இருந்தாலும், முதலில் இருந்தே அவரை நாம் போலீஸாகத் தான் பார்க்கிறோம்.

கொஞ்சம் அசந்தாலும், ஹீரோ பஞ்ச் டயலாக் பேசும் மசாலாப் படமாக ஆகிவிடும் ஆபத்துள்ள கதை. அஜித் இயக்குநர் கௌதம் மேனனிடம் தன்னையே ஒப்படைத்துவிட்டு, ஒரு ஸ்டைலான படத்தைக் கொடுக்க ஒத்துழைத்திருக்கிறார். இது சாதாரண விஷயம் அல்ல. பல இடங்களில் மாஸ் காட்ட வாய்ப்பிருந்தும், சாதாரணமாக கடந்து போயிருக்கிறார்கள்.

ஆரம்பத்தில் இருந்து த்ரிஷாவை ’மாயாபஜார்’ நாட்டியத்தில் சந்திப்பதுவரை வேகமாகவும் நன்றாகவும் செல்லும் படம், அங்கேயிருந்து இண்டர்வெல்வரை சவசவ என்று நகர்கிறது. த்ரிஷா இறப்பது மட்டும் தான் அதில் உருப்படியான சீன். அந்த அரைமணி நேரம் ஒரு தூக்கம் போட்டு எழுந்தாலும் படம் நமக்குப் புரியும். இப்போது ரசிகர்களே இரண்டு மணி நேரப் படத்திற்குத் தயாராகிவிட்ட பின்பும், லிங்குசாமி, கே.எஸ்.ரவிகுமார், ஷங்கர், கௌதம் மேனன் என ஜாம்பவான்கள் எல்லாம் ஏன் விடாப்பிடியாக மூன்று மணி நேரம் இத்தகைய மொக்கைக் காட்சிகளால் நிரப்பிக் கொல்கிறார்கள் என்று தான் தெரியவில்லை. புரடியூசருக்கு காசு வேஸ்ட், எங்களுக்கு டைம் வேஸ்ட். கொஞ்சம் யோசிங்கய்யா.

ஆனால் இண்டர்வெல்லில் ஆரம்பித்து இறுதிவரை படம் செம வேகம். நீண்ட நாட்களுக்குப் பிறகு, ஒரு வலுவான வில்லனுடன் வந்திருக்கும் படம். அருண் விஜய்யும், அஜித்தும் மோதும் இரண்டாம்பாதி பரபர பட்டாசு. படத்தைக் காப்பாற்றுவதும் இந்த இரண்டாம்பாதி தான்.

கௌதம் மேனன் படங்களில் இங்கிலீஷ் பேசியே கொல்வார்கள். வாரணம் ஆயிரத்தில் ‘ஹி இஸ் நோ மோர்’ என முக்கியமான வசனத்தையே இங்கிலீஷில் வைத்து கடுப்பைக் கிளப்பியிருந்தார். ஆனால் இதில் அந்தளவுக்கு மோசம் இல்லை என்பது பெரும் ஆறுதல்.

கௌதம் மேனனின் பழைய படங்களின் பாதிப்பு அதிகம் தெரிகிறது. காக்க காக்க வில்லன், வேட்டையாடு விளையாடு ஹீரோ & (குழந்தையுடன்) ஹீரோயின் என முந்தைய பட கேரக்டர்களே வேறு உருவத்தில் வருகின்றன. ஆனாலும் ‘இனிமே இவர் அவ்ளோ தானோ?’ எனும் சந்தேகத்தைத் தீர்த்து, தன்னை நிரூபித்திருக்கிறார் கௌதம் மேனன்.

அஜித் :
இவர் கடைசியாக நடித்த படம்’ வரலாறு’. அதன்பிறகு சில அருமையான டைரக்டர்கள் கையில் சிக்கி, நடிகர் என்பதில் இருந்து இறங்கி ‘நடைகர்’ என்று ஆனது சோக வரலாறு. இதில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு, நல்ல நடிப்பு. தமிழின் கழுத்தைத் திருகித் துப்பும் வேலையும் இதில் இல்லை. அருமையான உச்சரிப்புடன் அமைதியாகப் பேசுகிறார். படத்தில் பல இடங்களில் இவரது நரேசன் தான். சின்ஸியர் போலீஸாக, ரவுடியாக, காதலனாக, அப்பாவாக நிறைவான நடிப்பு. ஆக்சன் காட்சிகளிலும் அருண் விஜய்யிடம் மோதும் காட்சிகளிலும் அமர்க்களம் காலத்து ஆக்டிவ் அஜித்தைப் பார்க்க முடிகிறது. தல ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.

அருண் விஜய்க்காக நிறைய விட்டுக் கொடுத்தும் நடித்திருக்கிறார். அதாரு உதாரு பாடம் அருணிடம் ஆரம்பிக்கும்போது, இந்த அநியாயத்துக்கு நல்ல மனுசன் இந்தப் பாட்டையும் அருணுக்கே கொடுத்திட்டாரோன்னு பகீர்னு இருந்தது. நல்லவேளை, அப்படி இல்லை. இனி இப்படி அவ்வப்போது நல்ல இயக்குநர்கள் படத்திலும் அஜித் நடிக்க வேண்டும், அப்போது தான் நடிப்பு மறக்காமல் இருக்கும்..நமக்கும் நல்ல படம் கிடைக்கும்.
அருண் விஜய்:
நடிப்பு, டான்ஸ், சண்டை என எல்லாத் திறமையிருந்தும் மேலே வரமுடியாமல் போன மனிதர். பாண்டவர் பூமி, இயற்கை, தடையறத் தாக்க மூன்றிலுமே இவரது நடிப்பு நம்மைக் கவர்ந்தது. ஆனால் படம் தான் ஏனோ ஓடவில்லை. எல்லாவற்றுக்கும் சேர்த்துவைத்து, இதில் பட்டையைக் கிளப்பியிருக்கிறார். பவர்ஃபுல்லான கேரக்டருக்கு உரிய நியாயத்தைச் செய்திருக்கிறார், வெல்டன்.

அனுஷ்கா :
லிங்கா மாதிரியே ஆரம்பத்தில் பில்டப்புடன் அறிமுகமாகி, இரண்டு மணி நேர(!) ஃப்ளாஷ்பேக் முடிந்தபின் மீண்டும் தலை காட்டும் கேரக்டர். அழகான நடிகை. இதில் முடியை முன்னால் இழுத்துவிட்டு, கந்தரகோலம் செய்திருக்கிறார்கள். ஆண்களில் ‘ஆண்ட்டி’ ஹீரோ உண்டு இல்லையா, அது போல் படத்தில் இவர் ‘அங்கிள்’ ஹீரோயினாக வருகிறார். கதைப்படியே 38 வயதான அஜித்தைப் பார்த்ததுமே ‘வாவ்..ஹேண்ட்சம்’ என்று காதலில் விழுகிறார். தேன்மொழி என்று அழகான பெயர் கொடுத்திருக்கிறார்கள்.

கமலா காமேஷ்:
வாழ்க்கையிலேயே முதன் முறையாக தனக்குப் பொருத்தமான வேடத்தில் நடித்திருக்கிறார், ஒரு குழந்தைக்குத் தாயாக. ஆர்ப்பாட்டமில்லாத, அருமையான நடிப்பு. முகத்தில் அநியாயத்திற்கு முதிர்ச்சி தெரிகிறது. கல்யாணம் நிச்சயம் ஆகிவிட்டதால்..இத்துடன் விடுவோம், பாவம்.

நெகடிவ் பாயிண்ட்ஸ்:
- படத்தின் நீளம்...உங்களுக்கு நிறைய க்ரியேட்டிவிட்டி இருக்கலாம் படைப்பாளீஸ்..எங்களுக்குப் பொறுமை இருக்கணும் இல்லையா?
- அனுஷ்காவின் ஆரம்ப பாட்டு & மாயா பஜார் பாட்டு. இரண்டாவதில் நடன & கெட்டப் விஷுவல்ஸ் கொடுமை.
- அஜித்தின் மகள், வருடங்கள் ஓடினாலும் வளராமல் அப்படியே இருக்கும் அதிசயம்..இதுமாதிரி லாஜிக் மிஸ்டேக்ஸுக்கு குறைவில்லை.
- படம் முழுக்க யாராவது நரேசனில் பேசிக்கொண்டே இருப்பது. விஷுவல் மீடியாவிற்கு இது தேவையா? ரசிகர்களுக்குப் புரியும் விஷயத்தைக்கூட பிண்ணனிக் குரல் விளக்கிச் சொல்கிறது.
- இது தல படம் அல்ல.. (இந்த நெகடிவ், அஜித் ரசிகர்களுக்கு!)
- பாசிடிவ் பாயிண்ட்ஸ்:
- அழகான, ஸ்டைலிஷான, ஆக்டிவ்வான அஜித்
- நீண்ட இடைவெளிக்குப் பின் கௌதம்-ஹாரிஸ்-தாமரை கூட்டணியில் அழகான பாடல்கள்
- மகளாக வரும் அந்தக் குழந்தை..நல்ல எக்ஸ்பிரசன்ஸ்.
- விவேக்கின் நறுக் காமெடி..சென்னை விமானநிலையத்தை ஓட்டுவதில் ஆரம்பித்து, ஹேமா ஏன் நிக்கா? எனக் கேட்டு கைதட்டல்களை அள்ளுகிறார். ரொம்ப நாளைக்கு அப்புறம் மனிதரை ரசிக்க முடிந்தது.
- ரொமான்ஸையும் ஆக்சனையும் சரிவிகிதத்தில் கலப்பது தான் கௌதமின் ஸ்பெஷாலிட்டி.இதிலும் அது அப்படியே வந்திருக்கிறது.
- ஒளிப்பதிவும் எடிட்டிங்கும்..இரண்டாம்பாதியில் அனல் பறக்க வைத்திருக்கிறார்கள்.
- ஸ்டண்ட் சில்வாவின் ஸ்டண்ட்ஸ்..அட்டகாசம்
- இது கௌதம் மேனன் படம். (இது, மற்றவர்களுக்கு)

பார்க்கலாமா?
தாரளமாகப் பார்க்கலாம்.
மேலும் வாசிக்க... "என்னை அறிந்தால்... - திரை விமர்சனம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Sunday, February 1, 2015

திரைக்கதை சூத்திரங்கள் – II-பகுதி 35

ப்ளேக் ஸ்னிடரின் பீ ஷீட்டில் இன்று ஆக்ட்-2வின் முடிவு வரை பார்ப்போம்.

9. Midpoint :
ஒரு திரைக்கதையில் மூன்று அங்கங்கள் முக்கியமானவையாக இருந்தாலும், அதைவிட முக்கியமானது கதை இருபாதியாகப் பிரியும் இந்த மிட் பாயிண்ட். இந்திய சினிமாக்களைப் பொறுத்தவரை இண்டர்வெல் என்பது திரைக்கதையை விட சினிமா வியாபாரத்தில் முக்கியமான விஷயம். (முன்பெல்லாம் தியேட்டர் கேண்டீனை லீஸ்க்கு எடுப்பதே ஒரு நல்ல பிஸினஸாக இருந்தது.) 
சதுரங்க வேட்டை
இங்கே ஒரு விஷயத்தை தெளிவுபடுத்திவிட வேண்டும். மிட் பாயிண்ட் என்று ப்ளேக் ஸ்னிடர் சொல்வது கதையின் மத்திமப் புள்ளியை. அது படத்தின் இண்டர்வெல் நேரத்திலும் வரலாம், அதற்கு முன் அல்லது (பெரும்பாலும்) பின் பாதியிலும் வரலாம். எனவே உங்கள் திரைக்கதையில் இது இண்டர்வெல்லில் வரவில்லையென்றால், குழம்ப வேண்டாம். நாம் ஏற்கனவே Debate-ல் பார்த்தபடி, டிபேட் முடியும் இடம்கூட இண்டர்வெல்லாக இருக்க முடியும். 

இந்த மிட்பாயிண்டில் நடப்பது என்ன? ஒன்று, ஹீரோ ஏதோவொரு வெற்றியை அடைந்துவிட்டார். அது ஒரு தற்காலிக வெற்றி. அதற்கு வில்லன் திருப்பி அடிப்பான். இன்னொரு வகை, ஹீரோ ஏதோவொரு பெரும் தோல்வியை அடைந்துவிட்டார் அல்லது பெரும் சிக்கலில் சிக்கிவிட்டார். இனி என்ன ஆகும்?

மொத்தத்தில் ஏதோ ஒன்று பெரிதாக நடந்துமுடிந்துவிட்டது. அதனால் ஹீரோவுக்கும் வில்லனுக்கும் இடையே சமாதானத்திற்கு இனிமேல் வழியே இல்லை. விருப்பம் இல்லாமல், விளையாட்டாக வந்த ஹீரோகூட இப்போது முழுவிருப்பத்துடன், முழு வேகத்துடன் வில்லனை எதிர்கொண்டே ஆகவேண்டும். அப்படி ஒரு திரும்பிப் போக முடியாத சூழலை தோற்றுவிக்கும் இடம் தான், இந்த மிட் பாயிண்ட்.

பில்லாவில் அஜித் ஊடுறுவி, பில்லாவாக செட் ஆகி ‘ஞாபகம் வந்திடுச்சு..ஐ ஆம் பேக்’ என்று சொல்வது இண்டர்வெல். பில்லாவாக எல்லோரையும் நம்ப வைத்தது ஒரு தற்காலிக வெற்றி. எனவே அது தான் மிட் பாயிண்ட்.

தேவர் மகனில் கமல் ‘தேவர் மகனாக’ வந்து நிற்பது வெற்றியும் அல்ல, தோல்வியும் அல்ல. அது ஒரு மாஸ் இண்டர்வெல் ப்ளாக். அது டிபேட் முடியும் இடம். ஏற்கனவே தேவர் மகன் படம், Hero with Thousand Faces-ஐ ஃபாலோ பண்ணி எடுத்த படம் என்று சொல்லியிருக்கிறோம். ரேவதியை மணக்க கமல் முடிவு செய்யும் இடம் தான், கதையின் மத்திமப் புள்ளி. அது இண்டர்வெல்லில் வரவில்லையே என்று நினைத்து, இண்டர்வெல்லிற்கு நகர்த்தினால், அதற்குப்பின்னால் போதுமான சீன் இல்லாமல் நீங்கள் முழிக்க நேரிடும். எனவே இந்த பீட்ஸ் கதையில் இருப்பது தான் முக்கியமே தவிர, ப்ளேக் ஸ்னிடர் சொல்வது போல் சரியாக அதே பக்கத்தில்(நேரத்தில்) வர வேண்டிய அவசியம் இல்லை.

இந்த மிட்பாயிண்டிற்குச் சமமான, எதிரான ஒரு விஷயம் ப்ரிகிளைமாக்ஸ் என்று அழைக்கப்படும் All is lost. மிட்பாயிண்ட்டில் ஹீரோ தற்காலிக வெற்றி அடைந்தால், ஆல் இஸ் லாஸ்ட்டில் ஹீரோ தற்காலிகத் தோல்வியடைய வேண்டும். மிட்பாயிண்ட்டில் ஹீரோ தற்காலிகத் தோல்வி அடைந்தால், ஆல் இஸ் லாஸ்ட்டில் ஹீரோ தற்காலிக வெற்றியடைய வேண்டும். 
பில்லா
10. Bad Guys Close In:

மிட் பாயிண்ட்டில் ஹீரோ ஒரு தற்காலிக வெற்றியை அடைந்துவிட்டதைப் பார்த்தோம். அந்த தற்காலிக வெற்றி, வில்லனால் உடைத்து நொறுக்கப்படும் பகுதியே, இந்த Bad Guys Close In ஆகும். மிட்பாயிண்ட்டில் தோல்வியடைந்த எதிரிகள், தங்கள் முழுபலத்தையும் திரட்டி ஹீரோவை அட்டாக் செய்யும் பகுதி இது.

நாம் ஏற்கனவே பார்த்தபடி, வில்லன் என்பது மனிதனாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை, சூழ்நிலை கூட வில்லன் தான். அதுவரை நன்றாக வாழ்ந்த ஹீரோ, வில்லனாலோ அல்லது சூழ்நிலையாலோ அங்கேயிருந்து வீழ்வதை இந்தப் பகுதி குறிக்கும்.

தற்காலிக வெற்றியை எஞ்சாய் பண்ணும் ஹீரோவை வைத்துக் கொஞ்சம் காட்சிகள், அடுத்து வில்லன் ஆட்கள் ஹீரோவை ரவுன்ட் கட்டுவது பற்றி சில காட்சிகள் என்று தான் இந்தப் பகுதிக்கான சீன்கள் எழுதப்படும்.

பில்லாவில் ரஜினி/அஜித், பில்லா குரூப்பில் இணைந்து பில்லாவாக அங்கே ஐக்கியம் ஆவது மிட்பாயின்ட். அடுத்து அஜித் வெற்றிகரமாக தகவல்களைச் சேகரிப்பதும், அந்த பில்லா கும்பல் போலீஸிடம் மாட்டுவதும் தற்காலிக வெற்றியை ஹீரோ எஞாய் பண்ணும் சீன்கள். அடுத்து உண்மையான வில்லன்கள் வெளிப்படுவதும், பிரபு சாவதும், அஜித் கைது செய்யபடுவதும் 'Bad Guys Close In'-க்கு நல்ல உதாரணங்கள்.

ப்ளேக் ஸ்னிடரைப் பொறுத்தவரை திரைக்கதை எழுதுவதிலேயே மிகவும் கஷ்டமான பகுதி, இந்தப் பகுதி தான். வில்லன்கள் எப்படி திருப்பித் தாக்குகிறார்கள், அதனால் ஹீரோவுக்கு ஏற்படும் இழப்பு என்ன என்பதை லாஜிக்காகவும் சுவாரஸ்யமான சீன்களாகவும் சொல்வது பெரும் சவால். உங்களுக்குச் சந்தேகம் என்றால், நீங்கள் இதுவரை எழுதி வைத்திருக்கும் திரைக்கதையை எடுத்துப் பாருங்கள்!

11. All is Lost:
சென்ற பகுதியில் பார்த்தபடி, வில்லன்கள் முழுபலத்துடன் திருப்பி அடித்துவிட்டார்கள். இப்போது ஹீரோ ஏறக்குறைய எல்லாவற்றையும் இழந்து நிற்கிறான் அல்லது முக்கியமான ஏதோ ஒன்றை நிரந்தரமாக இழக்கின்றான். ஆல் இஸ் லாஸ்ட் பற்றிப் புரிய, இந்தப் பதிவில் உள்ள ஸ்டில்களையும் அந்த சீன்களையும் ஞாபகப்படுத்திக்கொள்ளுங்கள்.

வேட்டையாடு விளையாடு
90% ஹீரோவின் நண்பன் சாவது அல்லது ஹீரோவின் அப்பா/அம்மா/மனைவி என ஹீரோவுக்கு வேண்டப்பட்ட யாரோ ஒரு ஆளை வில்லன் குரூப் போட்டுத்தள்ளும் சீன் தான் தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை ஆல் இஸ் லாஸ்ட்.

மிட் பாயின்டிற்கு நேரெதிரான நிலை இது என்று பார்த்தோம். மிட் பாயின்ட் --> கெட்டது நெருங்குகின்றது --> எல்லாம் போச்சு. இது தான் கதையின் மத்தியில் இருந்து இரண்டாம் ஆக்ட்டின் முடிவு வரை வரும் பகுதி.

பில்லாவில் பிரபு சாவதும், 'தான் பில்லா அல்ல' என்று நிரூபிக்கும் கட்டாயம் அஜித் மேலேயே விழுவதும் தான் ஆல் இஸ் லாஸ்ட். அஜித்திற்கு இருந்த ஒரே ஒரு ஆதரவும், சாட்சியும் போய் விட்டது. இப்போது என்ன செய்வார்? படம் பார்க்கும் ஆடியன்ஸும் திகைத்து யோசிக்கும்படி, இந்த ஆல் இஸ் லாஸ்ட்டை அமைப்பது தான் திரைக்கதை ஆசிரியரின் திறமை.
 
(தொடரும்)
மேலும் வாசிக்க... "திரைக்கதை சூத்திரங்கள் – II-பகுதி 35"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...