Thursday, November 17, 2011

பிராமண நண்பருக்கு...(வர்ணம், ஜாதி, இட ஒதுக்கீடு)_5

வணக்கம் செங்கோவி!

//எனவே இனி உடலால் உழைக்கும் அனைவரும் சூத்திரர்களே.  அதுவே இன்றைய யதார்த்தம். கீழ்மட்டத் தொழில்களாக கருதப்பட்ட கழிவறையை சுத்தம் செய்வது, சவரம் செய்வது போன்ற வேலைகளை இன்று எல்லா சாதியினரும் தன் வீட்டில் செய்துகொண்டிருக்கிறார்கள். //

இது முழுக்க முழுக்க உண்மை.  தனது வேலைகளை தானே செய்துகொள்வது வரவேற்கத்தக்கதே.

 பிராமணர்கள் மற்ற ஜாதியினருக்கு இழைத்த கொடுமைகளை நானும் நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன்.  அவர்கள் மேல் தவறில்லை என்று கண்டிப்பாக நான் சொல்லமாட்டேன்.  நான் தஞ்சையில் மூன்றாவது - நான்காவது படித்துக்கொண்டிருந்தபோது சுவரெங்கும் 'பாப்பான் குடுமியை / பூணலை பிடுங்கி எறி' போன்ற வாசகங்கள் எழுதப்பட்டிருக்கும்.  

அதற்கு ஒருமுறை என் தாத்தா (கோயிலில் குருக்களாக இருந்தவர்) சொன்னது இன்னும் என் நினைவில் உள்ளது.  'எப்போதும் தலைகால் புரியாமல் ஆடக்கூடாது.  அடுத்தவனைத் துச்சமாக நினைப்பதும் / நாம் எதோ சிறந்த பிறவிகள் என்ற நினைப்பு கூடாது.  

பிராமணர்கள் முன்னர் செய்த வினை, எதுவுமே நிலையில்லை என்பதை உணராமல் ஆட்டம் போட்டதற்கு இப்போது இதையும் பொறுமையாக அனுபவித்துதான் தீரவேண்டும்' என்று.  மேலும் அவர் சொன்னது ' அவன் மேல என்ன தப்பு இருக்கு, இத்தனை நாளாக மனதில் இருந்த வெறுப்பு இப்போது வெளியேறுகிறது' என்றார். 

//இங்கே திறமைக்கும் தகுதிக்கும் மதிப்பில்லை. அதிக மார்க எடுத்த எனக்குத் தானே முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்? - இந்த வாதம் பலவிதங்களில் திரும்பத் திரும்ப உங்களால் வைக்கப்படுகின்றது. //

இங்கே நான் மாறுபடுகிறேன் செங்கோவி!  நானும் மார்க் அடிப்படையில் முன்னுரிமை கொடுப்பதை ஆதரிக்கவில்லை.  என்னோடு படித்த நிறைய பெண்கள் மனப்பாடம் செய்தே (சில சமயம் கணிதத்தைக்கூட) நிறைய மார்க் வாங்கிவிடுவார்கள் (இது எல்லா ஜாதியினருக்கும் பொருந்தும்). 

ஆனால் ஏதாவது நுணுக்கமான கேள்வி ஆசிரியர்கள் கேட்டால் பதில் சொல்லத் திணறுவார்கள்.  முதலில் இந்த மனப்பாடம் செய்து பாஸ் ஆகும் முறையை ஒழித்துக்கட்டவேண்டும்.  (என் கனவுகளில் ஒன்று ஒரு பள்ளி ஆரம்பிப்பது, கண்டிப்பாக வியாபார நோக்குடன் அல்ல, அதில் என்னென்ன செய்யவேண்டும் என்று கூட நிறைய யோசித்து வைத்திருக்கிறேன்.  அதை ஆரம்பிக்க பணம் தேவை, மேலும் வேலையை விடவேண்டும்.  இப்போது அந்த ரிஸ்க் எடுக்கும் நிலையில் நான் இல்லாததால் பொறுமையாக இருக்கிறேன், ஆனால் எப்படியும் இன்னும் சில வருடங்கள் கழித்தாவது நடக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது).

நான் சொல்வது ஒருவருக்கு எதில் விருப்பம் இருக்கிறதோ, அதை ஜாதி/மத வித்தியாசம் பார்க்காமல் செய்யவிடலாமே?  நான் மற்ற ஜாதியினருக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டை கண்டிப்பாக எதிர்க்கவில்லை.  அவர்களுக்கு இது நீங்கள் எழுதியது போல் அவசியம் தேவை என்ற புரிதல் எனக்கு இருக்கிறது.  

உதாரணமாக எனக்கு கணிதம் நன்றாக வரும்.  ஆசிரியை ஒரு கணக்கு போட்டு புரிய வைத்தவுடனேயே, மீதி எல்லாம் நானே போட்டு விடுவேன்.  (இதை பெருமைக்காக நான் சொல்லவில்லை).  ஒருவருக்கு எதில் திறமை இருக்கிறதோ அதில் மேலே வளர இடம் கொடுக்கலாமே என்பதுதான் என் வாதம்.  ஒருவருக்கு படிப்பில் சுத்தமாக ஆர்வம் இல்லாமல் ஓவியம் வரைவதில் இருக்கலாம்.  அவரை அதில் ஊக்குவிக்கலாமே?  வரலாற்று வகுப்பு என்றாலே தூங்கி வழியும் எனக்கு அதைக்கொடுத்தது எந்த விதத்தில் நியாயம்?  

நான் இட ஒதுக்கீட்டை தவறு என்று சொல்லவில்லை.  அதில் உள்ள அபத்தங்களைத்தான் தவறு என்கிறேன்.  என் சக தோழிகள் college முதல்வரை சந்தித்து வேண்டுகோள் விடுக்குமாறு சொன்னார்கள்.  நானும் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு உள்ளே போனேன். 

பிரின்சிபால் என்னிடம் சொன்னது 'என்னம்மா பண்ண முடியும்?  வாழ்க்கையில் நிறைய விஷயங்கள் இப்படித்தான் நாம் நினைப்பது போல் நடக்காது.  எது நமக்கு கிடைத்திருக்கிறதோ அதிலேயே ஆர்வத்துடன் ஈடுபடு.  நானும்தான் law படித்தேன். ஆனால் இங்கே கல்லூரி முதல்வராக அமர்ந்திருக்கிறேன்' என்றார்.  இன்னொரு விஷயமும் சொல்லவேண்டும்.  

இந்த விஷயத்தில் எனக்கு ஒரு மறக்க முடியாத வாழ்க்கைப்பாடம் கிடைத்தது.  அப்போது அந்த வயதில் ரொம்ப பீல் செய்தாலும் போகப்போக இந்த விதி/ஜோதிடம் பற்றி படிக்க ஆரம்பித்ததும் 'எல்லாம் நல்லதிற்கே' என்ற ஒரு மனோபாவம் இப்போதெல்லாம் வந்துவிட்டது.  அதன்பின் அதே வரலாறைப்படித்து பி ஏ முழுமைக்கும் முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்றது எல்லாம் தனிக்கதை. 

முன்பே சொன்னதுபோல் தனியார் கல்லூரியில் (அ) அஞ்சல்வழியிலோ நினைத்ததைப்படிக்க முடியாத குடும்ப சூழல்.  அப்படி எல்லாருடைய ஆவலையும் ஒரு கல்லூரியில் நிறைவேற்ற நடைமுறை சாத்தியம் இல்லை என்றால் அதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்யவேண்டியது யார்?  அரசாங்கம்தானே?  இன்னொரு கல்லூரியை நிறுவலாமே?  

என்னுடன் முதல் க்ரூப்பில் படித்த அனைத்து மாணவிகளும் அதே தொடர்புடைய படிப்பைத் தொடர்ந்தபோது (மருத்துவம், பொறியியல், இயற்பியல் என) நானும் இன்னும் சில மாணவிகளும் வேறு வழியில்லாம வரலாறு, பூகோளம், எகோநோமிக்ஸ் எனப்படித்தோம். 

இங்கே கல்வியை வியாபாரமாக்க வழி அமைத்ததும் இந்த அரசாங்கம்தானே?

//அவர்களின் வழிகாட்டலால் அந்த குரூப் வேணும், இந்த குரூப் வேணும் என்று கேட்கும் அளவிற்கு உனக்கு அறிவிருக்கிறது. எங்களுக்கு என்னென்னெ குரூப் இருக்கிறதென்று சொல்லவே ஆள் இல்லை.//

இதை ஒத்துக்கொள்ளலாம்.  ஆனால் எல்லா பிராமணரது குடும்ப நிலையும் நீங்கள் சொல்வது போல் இல்லை என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும்.  எனது பெற்றோர்களும் அதிகம் படிக்கவில்லை.  எனது மாமா இரண்டு பேர்கள் படித்து நல்ல வேலையில் இருந்தனர்.  

சித்தப்பா கல்லூரி பேராசிரியராக இருந்தார்.  ஆனாலும் எனக்கு வழிகாட்ட யாரும் இல்லை என்பதுதான் உண்மை.  சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் எதெதற்கோ apply செய்தேன்.  அதில் ஒன்று polytechnic .  அதில் எனக்கு சீட்டும் கிடைத்து வந்து சேருமாறு அழைப்பு வந்தது.  அப்போது என்னவென்றே தெரியாது.  உறவினர்களைக்கேட்டபோதும் அவர்களுக்கும் அதைப்படித்தால் என்ன வேலைக்குப்போகலாம் என்று தெரியவில்லை.  

ஆனால் எல்லாரும் ஒருமித்த குரலில் ஒன்று சொன்னார்கள்.  பெண்களுக்கு அது சரிப்பட்டுவராது என்று.  அதைக்கேட்ட நானும் அதே முடிவுக்கு வந்துவிட்டேன்.  பிறகு வேலைக்கெல்லாம் போனபிறகுதான் அதைப்பற்றி புரிந்தது.  என் கணவரின் அனுபவம் வேறுவிதமானது.  அவருக்கு போலிசாக வேண்டும் என்ற ஆசையில் CRPF ல் (அவர் இருந்தது டெல்லியில்) தேர்வு பெற்றுவிட்டார்.  

ஆனால் அவர்கள் லஞ்சமாக பத்தாயிரம் ரூபாய் கேட்டதால் (அப்போதைய அவரின் பொருளாதார நிலையில் இதெல்லாம் நடக்காத விஷயம்) வந்த வாய்ப்பை விட்டுவிட்டார்.  நீங்கள் சொல்லும் அதே டயலாக் என் வீட்டிலும் கேட்கும் வேறுவிதமாக.  டிகிரி படிச்சு என்ன பண்ணப்போறா, பேசாம கல்யாணம் செய்துவை.  (யாரையாவது இழுத்துக்கொண்டு ஓடிவிட்டால் என்பது போன்ற கீழ்த்தரமான டயலாக் வரை).

//அவர்களின் வழிகாட்டலால் அந்த குரூப் வேணும், இந்த குரூப் வேணும் என்று கேட்கும் அளவிற்கு உனக்கு அறிவிருக்கிறது. எங்களுக்கு என்னென்னெ குரூப் இருக்கிறதென்று சொல்லவே ஆள் இல்லை.//

நீங்கள் இங்கே குறிப்பிட்டிருப்பதை நான் முழுமையாக மறுக்கவில்லை என்பதையும் சொல்ல விரும்புகிறேன். 

//இந்தச் சூழ்நிலையில் படித்து 70% மார்க் வாங்குபவன் புத்திசாலியா? அனைத்து வசதிகளோடும், படிக்க தனியறை, வழிகாட்ட சொந்தபந்தங்கள், சுற்றிலும் படிப்பில் போட்டி போடும் சொந்தங்கள், டியூசன்கள் -//

இந்த பொருளாதார வசதிகள் எல்லா குடும்பத்திலும் இல்லை என்பதையும் குறிப்பிடவேண்டும். 

இன்னொரு விஷயம், பிராமணர்கள் என்றாலே நல்ல குடும்ப சூழல் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்.  என் வீட்டிலேயே சாராயத்துக்கு அடிமையாகி உயிரை இழந்த இரண்டு சித்தப்பாக்கள் (அம்மா/அப்பா வழியில்) உண்டு.  அதில் ஒரு சித்தப்பா இறந்தபோது பையனும் / பெண்ணும் குழந்தைகள்.  அவர்களை வளர்க்க என் சித்திதான் மிகவும் சிரமப்பட்டார். அவரது முப்பதாவது வயதிலிருந்து இன்னமும்.  

அப்படி இருக்க எல்லா பிராமணர்களுமே நல்ல நிலையில் இருக்கிறார்கள் என்று சொல்லமுடியாது.  என் அப்பாவுக்கும் குடிப்பழக்கம் உண்டு, ஆனால் அது எங்களைப்பாதிக்காத வரையில் வெளியோடு நின்றது.  என் தாத்தா (அப்பா வழி) ஏகப்பட்ட தனது சொத்துகளை சீட்டாட்டம்/சூதாட்டத்திற்கு அடிமையாகி இழந்தவர். 

//எனவே தான் மார்க் மட்டுமே பார்க்கப்படாமல், அவனது பின்புலமும் பார்க்கப்படவேண்டிய அவசியம். அதைச் செய்வதே இட ஒதுக்கீடு.//

இதை நான் முன்பே குறிப்பிட்டபடி எதிர்க்கவில்லை.  ஆனாலும் இப்போதுள்ள முறையில் மாறுதல்கள் தேவை.  எல்லா சாதியினரது பொருளாதார நிலையையும் கணக்கில் கொள்ளவேண்டும்.

----------------------- நேற்று பஞ்சாங்கத்தை எடுத்து மாமியார் திவசம் எப்போது வருகிறது என பார்த்துக்கொண்டிருந்தேன்.  அதன்மேலே ஒரு வரி (இத்தனை நாளாக கவனிக்கவில்லை) 'இந்த உலகத்தில் பிராமணனாக பிறக்க செய்ததற்கு கடவுளே உனக்கு நன்றி' அப்படின்னு.  

படிச்சதும் சிரிப்பு வந்தது.  சும்மா இதை பகிர்ந்துக்கதான் எழுதினேன்.

அன்புடன்
********

---------------------------------------------------------------------------------------------------

 sengovi blog to *****:

அன்பு நண்பர்களுக்கு,


//இங்கே நான் மாறுபடுகிறேன் செங்கோவி!  //

இடையில் நீங்கள் மாறுபட்டுச் சொல்லியுள்ள விஷயம் கல்விச் சீர்திருத்தத்தின் கீழ் வருவது இல்லையா? அது ஜாதி சம்பந்தப்பட்ட பிரச்சினையல்ல..அனைத்து சாதிகளுக்கும் உள்ள பிரச்சினை தானே அது.

மற்றபடி நீங்கள் சொல்லிய அனைத்து உண்மைகளையும் நான் உணர்ந்தே இருக்கின்றேன்...

--செங்கோவி

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

அன்புச் சகோதரிக்கு,

நண்பர் செங்கோவி சொன்னது போல்... பிராமணர்கள் கல்வியால் ஓரளவு தப்பிக்க முடிந்தது... வைசியர்கள் அவர்களும் தங்களிடம் இருந்த சொத்துக்களை கொண்டும்.. வர்த்தகத்தைக் கொண்டும் தப்பித்தார்கள்... அதிலே சத்திரியர்கள் தாம் பாவம்.. இதிலே நண்பர் சொல்லக் கூச்சப் பட்டுக் கொண்டும் ஒரு விஷயத்தை விட்டுவிட்டார் என்று நினைக்கிறேன்.. 

அது தென் மாவட்டங்களிலே குறிப்பாக மதுரை மாவட்டத்திலே பரமலைக் கள்ளர்கள் என்று ஒருப் பிரிவினர் இருக்கிறார்கள் அவர்களின் நிலை தான் மிகவும் கொடுமை.. உண்மையில் அவர்கள் வேறு வழயில்லாமல் அதிலும் வானமும் பொய்த்துப் போக கரிசல் நிலங்களிலே வருமானமும் இல்லாமல்.. திருடவே செய்து (குடும்பமே திருடும்) ஜீவனம் செய்தார்கள்.. வீரத்திற்கு பேர் போன பரம்பரை அவர்கள் உண்மையில் பாவம்... 

அவர்களை சுதந்திரத்திற்கு பின்பும் பல அடக்கு முறையிலே அரசாங்கமே கட்டிப் போட்டிருந்தது என்றும் அறிகிறேன்... யாரும் அவர்களை நம்புவதில்லை.... ஊரைவிட்டு வெழியே சென்றால் போலீசிடம் சொல்லிவிட்டுத் தான் போக வேண்டும் என்று இன்னும் பல அடக்கு முறைகள்.. 

இவைகள் யாவும் சரி தான் அதனாலே தான்.. பொருளாதார ரீதியில் சமூகத்தை அரசாங்கம் அணுக வேண்டும்.. சாதி தேவையில்லை.. என்று காலகாலமாக சமுதாய அக்கறை கொண்டவர்கள் சொல்லி வருகிறார்கள்... யார் கேட்பா? 

அது தான் இன்றைய அரசியலின் ஆணி வேர் அது போனால் அவர்கள் பிழைப்பில் மண் விழும்...

நன்றி. 

அன்புடன்
*********
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

49 comments:

  1. ஒரு சமுகத்தின் உள்ளக்குமுறலை வெளியீட்டதுடன் எதிர்கால சமுகமாற்றத்தை வேண்டியும் அரசின் செயல்களையும் முழுமையாக விமர்சிக்கும் வாதம் தொடரட்டும்!

    ReplyDelete
  2. எந்த ஒரு வழக்கிலும் இருதரப்பு வாதங்களிலும் ஓரளவாவது நியாயம் இருக்கும். இடஒதுக்கீடும இதற்கு ஒரு விலக்கல்ல. காலத்திற்கு தகுந்த மாற்றங்கள் இடஒதுக்கீட்டில் கண்டிப்பாக தேவை

    ReplyDelete
  3. தேவையான பகிர்வுதான்.

    ReplyDelete
  4. தொடருங்கள் வாசிக்கின்றேன்

    ReplyDelete
  5. Hi செங்கோவி,சும்மா தமிழ் டைப் பண்ணி பாத்தேன். :)

    ReplyDelete
  6. போன பதிவு போலவே விவாதம் சாதியை விட்டு இட ஒதுக்கீட்டுக்கு முன்னேறி விட்டது... அதற்க்கு பதிலை போன பதிவிலேயே சொல்லி விட்டதாலும்... அதன் அடி நாதமாக இந்த பதிவும் இருப்பதாலும் அடுத்த தொடர்ச்சிக்கு காத்திருக்கிறேன் விடு ஜூட்

    ReplyDelete
  7. கருத்துச் செறிவான விவாதங்கள்!

    ReplyDelete
  8. //எனவே இனி உடலால் உழைக்கும் அனைவரும் சூத்திரர்களே. அதுவே இன்றைய யதார்த்தம். கீழ்மட்டத் தொழில்களாக கருதப்பட்ட கழிவறையை சுத்தம் செய்வது, சவரம் செய்வது போன்ற வேலைகளை இன்று எல்லா சாதியினரும் தன் வீட்டில் செய்துகொண்டிருக்கிறார்கள். //

    சரி ஒரு பேச்சுக்கு ஒப்புக் கொள்வோம்.

    உடலால் உழைக்காதவன் அப்போ என்ன? அதாவது வெள்ளைக் கால்ர் வேலைக்காரன் எல்லோரும் பிராமணனா? அதாவது அறிவு சார்ந்த தொழில் செய்பவர் பிராமண‌னா ?

    மறுபடியும் ஒரு 'சைக்கிள்' வர்ண அமைப்பு வரப்போகிறதோ?

    ReplyDelete
  9. //அதற்கு ஒருமுறை என் தாத்தா (கோயிலில் குருக்களாக இருந்தவர்) சொன்னது இன்னும் என் நினைவில் உள்ளது. 'எப்போதும் தலைகால் புரியாமல் ஆடக்கூடாது. அடுத்தவனைத் துச்சமாக நினைப்பதும் / நாம் எதோ சிறந்த பிறவிகள் என்ற நினைப்பு கூடாது.

    பிராமணர்கள் முன்னர் செய்த வினை, எதுவுமே நிலையில்லை என்பதை உணராமல் ஆட்டம் போட்டதற்கு இப்போது இதையும் பொறுமையாக அனுபவித்துதான் தீரவேண்டும்' என்று. மேலும் அவர் சொன்னது ' அவன் மேல என்ன தப்பு இருக்கு, இத்தனை நாளாக மனதில் இருந்த வெறுப்பு இப்போது வெளியேறுகிறது' என்றார்.//

    "வேலையில் போட்டிக்கு வரும் உலகாயதப் பிராமண‌னே நமது எதிரி! வைதீகப் பிராமண‌ன் அல்ல" என்று பெரியார் சொன்னதாகக் கூறுவர்.அதேபோல பெரியாரின் கடுமையான விமர்சனத்தை தமது மனசாட்சியின் குரலாக எடுத்துக்கொண்டு, த‌னது ஆசார அநுஷ்டானங்களைச் மேலும் சரியானபடி ஒழுங்குபடுத்திக் கடைப்பிடிக்கத் தொடங்கிய பிராமணர்கள் ஏராளம்.

    அர்ச்சகரான தாத்தா பிராமணன் செய்த அக்கிரமங்களையும் பட்டியலிட்டால்
    மேற்கொண்டு பேசலாம்,

    // பிராமணர்கள் மற்ற ஜாதியினருக்கு இழைத்த கொடுமைகளை நானும் நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன்//

    'கொடுமை' என்று கடுமையாகச் சொல்லி இருக்கிறீர்கள். தங்களுடைய கேள்வி ஞானத்தினை விரிவாகச் சொல்லணும்.

    தாத்தாவும் பேத்தியும் சொல்லும் அக்கிரமங்கள், கொடுமைகள் பிற ஜாதியார் செய்துள்ள‌ அளவா , இல்லை அதற்கும் அதிகமா? ஏதோ ஹிட்லரைப் போல பிராமணன் லட்சக்கணக்கான‌ பேரைக்கொன்று விட்டதைப் போல அல்லவா தொனிக்கிறது உங்கள் குரல்?

    "முன்னால பாத்தா செட்டியர் குதிரை, பின்னால‌ பாத்தா ராவுத்தர் குதிரை"
    என்று சாட்சி சொன்னால் என்ன தீர்வு கிடைக்கும்?

    ReplyDelete
  10. //எனது பெற்றோர்களும் அதிகம் படிக்கவில்லை. எனது மாமா இரண்டு பேர்கள் படித்து நல்ல வேலையில் இருந்தனர்.
    சித்தப்பா கல்லூரி பேராசிரியராக இருந்தார். ஆனாலும் எனக்கு வழிகாட்ட யாரும் இல்லை என்பதுதான் உண்மை.//

    பிராமண‌ ஒற்றுமை இன்மைக்கு நல்ல எடுத்துக் காட்டு இது நம்மிடம் மட்டும் இல்லை.எல்லோரிடமும் உள்ளது.

    ஒரு தலித் ஆபீசர் தன்னுடைய கிராமத்து சித்தப்பா பைனை, அவனுடைய
    பி ஏவை வைத்துக் கொண்டு ஒன்றும் செய்ய முடியாது என்று விரட்டிவிட்டு முணு முணுத்தார்:"நீ யெல்லாம் டவுனுக்கு வந்துட்டா எங்க‌ நிலத்தை யார் பாத்துக்கிறது?

    ReplyDelete
  11. நல்ல பதிவு.
    எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  12. எல்லோருக்கும் சனி?!வணக்கம்!பொன் ஜூர்!!!! நீண்ட இடை?!வெளிக்குப் பிறகு எங்கள் கம்பியூட்டர் இயங்கத் தொடங்கியிருக்கிறது!ஒரு வேளை அதற்கும் குளிர் பீடித்ததோ தெரியவில்லை.தேடிய,மற்றும் தேடாத அத்தனை உறவுகளுக்கும் நன்றி!மீண்டும் சந்திப்போம்.

    ReplyDelete
  13. //அடுத்தவனைத் துச்சமாக நினைப்பதும் நாம் எதோ சிறந்த பிறவிகள் என்ற நினைப்பு கூடாது.//

    குருக்கள் சொன்னது தப்பு என்று நீங்களாக முடிவு கட்டிக் கொண்டு அவரின் அக்கிரமங்களை பட்டியிலடச் சொல்வதே
    ஒரு பெரிய அக்கிரமம். இது எப்படி இருக்குன்னா , "பெருசா நியாயம் பேச வந்துட்டான் , உன் யோக்யத எனக்குத் தெரியாதா" என்று வம்பளக்கும்
    உத்தியே.

    // am a Smartha Tamil Brahmin.Concerned about my community.Some times feeling a sense of pride //
    உங்கள் ப்ரோபைலில் நீங்கள் போட்ட 'பெருமை' படும் விஷயம் என்னவோ?
    இதிலிருந்தே தெரிகிறது குருக்கள் சொன்னது எவ்வளவு உண்மை என்று.

    நான் முதன் முதலில் இந்த தொடருக்கு போட்ட பின்னூட்டம் சரி என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிப்பது கண்கூடு.
    பர்சனல் அட்டாக்காக இது தோன்றினாலும் , உண்மை அது தான்.

    ReplyDelete
  14. // am a Smartha Tamil Brahmin.Concerned about my community.Some times feeling a sense of pride //
    உங்கள் ப்ரோபைலில் நீங்கள் போட்ட 'பெருமை' படும் விஷயம் என்னவோ?
    இதிலிருந்தே தெரிகிறது குருக்கள் சொன்னது எவ்வளவு உண்மை என்று.//

    என்னுடைய பிளாக்'பார்ப்பு ' என்னுடைய சமூகத்தாருக்கு திருமண வரன்களுக்கான ஜாதகப் பரிமாற்றத்திற்காகத்தான் துவங்க‌ப்பட்டது. ஆகவே நான் என் கிளை சாதி அடையாளத்தை அங்கே தெரிவித்து உள்ளேன்.

    மேலும் நான் ஒன்றும் சாதியை எல்லோரும் மறைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கொண்டவனல்ல. சென்னையில் "கிருஷ்ண பறையனார் பேசுகிறார்" என்று சுவர் விளம்பரம் செய்து இருந்தது. ஆம்!அவர் அப்படித் தலை நிமிர்ந்து பெருமையுடன் சொல்லிக் கொள்வதையே விரும்புகிறேன்.

    சாதியை ஒழிப்பதற்கு சாதிபெயரை போட்டுகொள்ளாமல் இருப்பது ஒன்றும் பெரிதாக உதவி விடாது.

    இந்த விவாதத்திலும் நான் ஒன்றும் என் சாதிப்பற்றை மறைக்கவில்லையே. என் சாதியை தாங்கிப் பிடிக்க எனக்கு எல்லா உரிமையும் உண்டு.

    அந்த‌ அம்மாளுடைய தாத்தா குருக்களே கிடையாது. வைதீகர். அவர் கோவில் பூசை செய்தவர்தான். ஆனால் குருக்கள் கிளைப் பிரிவு கிடையாது.இந்த விவரம் கூட அந்தப் பெண்மணி அறிந்து இருக்கவில்லை.நான் இதனை அவர் தெரிந்துகொள்ள வேண்டும் என்றே விரும்புகிறேன்.

    என்னைப்போல ப்ரொஃபிலில் சொல்லிக் கொள்ளாத தாங்கள் முற்றிலும் சாதி உணர்வே அற்றவரா?

    மனதில் சாதி வித்தியாசம் பார்ப்பவர்கள்,வெளியில் வேற்றுமையைக் காண்பிப்பவர்களை விட மோசமானவர்கள்.

    செங்கோவியைப்போலவே எனக்கும் மின் அஞ்சல் அனுப்பக் கூடியவர் அப் பெண்மணி. அவருடைய மனப்போக்கு ஓரளவு அறிவேன்.


    I am a Smartha Tamil Brahmin.Concerned about my community.Some times feeling a sense of pride and sometimes depressed about the new turns.So I want to share with my community people my joy and anguish.Hence this blog.Though started with the idea of a dialogue forum for Tamil Brahmmins, 'paarppu' has developed as an astrological column.Astrology has overtaken all other concerns. Okay let it be so.

    மேலே காண்பது என் முழு ப்ரொஃபைல். இதில் உங்கள் தேவைக்கு, என்னைக் காலை வார என்று நினைத்து ஒரு சிலதை எடுத்துக் கொடுத்துள்ளீர்கள்.அது சரியா?

    யாராக இருந்தாலும், சரியான ஆதாரங்கள் இல்லாமல் பொதுவாகப் பேசுவதை எதிர்ப்பேன்.தாத்தாவும் பேத்தியும் கட்டாயம் அவர்களுக்குத்தெரிந்த தகவல்களைச் சொன்னால் அவை உண்மையெனத் தெரிந்தால் ஏற்றுக் கொள்ளத் தயங்க மாட்டேன்.

    யார் பிராமணன்? என்ற கட்டுரையை செங்கோவிக்கு அனுப்பியவர் பெரும்பாலும் இந்தப் பெண்மணிதான் என்று நினைக்கிறேன்.அதனை எழுதியவர் பிராமண அகுப்பைச் சேர்ந்தவர் அல்ல.

    இது போல பிராமணரல்லாத‌வர்கள் தங்களுடைய சாதியின் பெரைப் போட்டு யார் முதலியார்? யார் நாயகர்? என்று எழுதுவதனை விட்டு, ஏன் பிராமணன் பற்றி எழுத வேண்டும்? கீதை முதலிய எடுத்துக் காட்டுக்களைக் காட்டி நீ பிராமணனே அல்ல் என்று எஙளை சுட்டிக் காட்டுவதை முதலில் ஏனயோர் நிறுத்த வேண்டும்.

    ReplyDelete
  15. //குருக்கள் சொன்னது தப்பு என்று நீங்களாக முடிவு கட்டிக் கொண்டு அவரின் அக்கிரமங்களை பட்டியிலடச் சொல்வதே
    ஒரு பெரிய அக்கிரமம். இது எப்படி இருக்குன்னா , "பெருசா நியாயம் பேச வந்துட்டான் , உன் யோக்யத எனக்குத் தெரியாதா" என்று வம்பளக்கும்
    உத்தியே.//

    நானாக முடிவு கட்டவில்லை.'அவருடைய அக்கிரமங்கள்'அல்ல.அவர் மற்ற பிராமணர்கள் செய்த அக்கிரமங்கள் பற்றி என்ன சொல்கிறார் என்று கேட்டு
    அதில் உண்மையிருப்பின் ஏற்றுக்கொள்ளும் மனோபாவத்திலேயே கேட்டுள்ளேன்.ஆதாரம் காட்டாமல் பொதுவாகச்சொல்லக்கூடாது.

    பல செய்திகளையும் ஆதாரத்துடன் திறந்த மனத்துடன் இங்கே பல மணி நேரம் செலவு செய்து பதிவு செய்துள்ளேன். இதெல்லாம் வெறும் வம்பு என்று உங்களுக்குத் தோன்றினால்......? என்ன செய்ய முடியும்?

    ReplyDelete
  16. செங்கோவி இப்படி ஒரு விவாதம் துவங்கப் போவதாகவும் அதில் கலந்து கொள்ள வேண்டும் என்று மின் அஞ்சல் அனுப்பியிருந்தார். ஆகவே கலந்துகொண்டேன்.நான் பிறப்பால் பிராமணன் ஆதலால் என் தரப்புக்குத்தான் பேச முடியும்.இது ஒரு வக்கீலின் வேலை போன்றதுதான் . எனவே ஏனையோர் பக்கத்தை அவர்கள் தான் பேச வேண்டும் நான் அவர்கள் பக்கத்தை பேச வேண்டும் என்று எப்படி எதிர் பார்க்க முடியும்?

    இந்தக் குற்றசாட்டுக்கள் என்னுடைய பிராமணர்கள் மீது வைக்கப்படும் போது அதனை டிஃபெண்ட் பண்ண எனக்கு சுதந்திரம் இல்லையா?

    தீண்டாமையும்.சாதிக் கொடுமையும் கிராமங்களில் பிறர் செய்து கொண்டிருக்க‌
    தன் வயிற்றுப் பிழைப்புக்காகக் கடல் கடந்து ஓடிக்கொண்டு இருக்கும் பிராமணைனை ஏன் காய்கிறீர்கள்?

    ReplyDelete
  17. //நான் முதன் முதலில் இந்த தொடருக்கு போட்ட பின்னூட்டம் சரி என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிப்பது கண்கூடு.
    பர்சனல் அட்டாக்காக இது தோன்றினாலும் , உண்மை அது தான்.//

    அது என்ன என்று சொன்னால் அதற்கு பதில் சொல்ல‌ வேண்டுமானால்/தேவை என்றால் சொல்கிறேன்.

    பர்சனல் அட்டாக் என்று உங்களுக்கே தெரிந்துள்ளது. ஓகே!

    என் முழு ப்ரொஃபைலையும் எடுத்துப் போட்டு இருந்தால் உங்களை உண்மையானவர் என்று பாராட்டியிருப்பேன். இப்போது....?

    ReplyDelete
  18. //பெரியாரின் கடுமையான விமர்சனத்தை தமது மனசாட்சியின் குரலாக எடுத்துக்கொண்டு, த‌னது ஆசார அநுஷ்டானங்களைச் மேலும் சரியானபடி ஒழுங்குபடுத்திக் கடைப்பிடிக்கத் தொடங்கிய பிராமணர்கள் ஏராளம்.//

    அர்ச்சகரின் கூற்றுக்கு என்னுடைய ரியாக்ஷன் இது.

    அர்சகர்கள், குருக்கள், வேத பண்டிதர்கள் இறைவன் பால் நம்மை கவனம் செலுத்தச் செய்பவர்கள்.நமது பாவங்களை சுட்டிக் காட்டுபவர்கள்.அதே போல் பெரியாரையும் கொண்டு அவர் கிரிடிசிஸதால் திருந்திய ஆஷாட பூதி பிராமணன் நிறைய.

    ReplyDelete
  19. //IlayaDhasan said... [Reply]
    பதிலில் நல்ல மெட்சுரிட்டி பாஸ்...ஆனா லேசுல ஒப்புக்கொள்ள மாட்டாங்க நாம எவளவு நியாயமா பேசினாலும்...
    இன்னும் ஒரு இரு நூறு வருசமாவது ஆகணும் அதுக்கு...

    தைரியம் இருந்தா கை வச்சிப் பாருடா!//

    இதுதான் நீங்கள் முதலில் சொன்ன பின்னூட்டம்.

    இந்த தலைப்பு "பிராண நண்பர்களுக்கு வர்ணம், சாதி, இட ஒதுக்கீடு..."

    தலைப்பே பிராமணர்களுக்கு என்று சொல்லியாகிவிட்டது. 'உங்கள் மீது இந்த இந்தக் காரணங்களால் நாங்கள் வெறுப்பு அல்லது வருத்தம் கொண்டுள்ளோம். அவற்றை இங்கு தொகுத்துக் கூறுகிறோம் அவற்றிற்கு எதேனும் பதில்/சமாதானம் இருந்தால் சொல்லலாம்' என்று அழைத்த பின்னரே இங்கு நான் மறுமொழி கூறி வருகிறேன்.

    இந்த விவாதத்தின் போது எதிர் தரப்பு தரம் தாழ்ந்து விமர்சித்தபோது நான் விலகினேன்.அப்போது செங்கோவி,

    "செங்கோவி said... [Reply]
    @kmr.krishnan ஐயா, விவாதத்தில் எதிர்தரப்பு கொஞ்சம் சூடாகப் பேசி விட்டது தான்..ஆனாலும் நீங்கள் தொடர்ந்து விவாதிக்க வேண்டும் என்பதே எமது விருப்பம். படிப்போரும் அதையே விரும்புவர் என்று நம்புகிறேன்..தொடர்ந்து கருத்திடுங்கள்.
    November 4, 2011 10:35 ப்ம்"

    என்று கூறினார்.

    நான் லேசில் ஒப்புக் கொண்டு விட்டால் அப்புறம் எதற்கு விவாதம்?

    நாங்கள் சொல்கிறோம் அவ்வளவுதான். விவாதம் கிடையாது என்று சொன்னால் அது சர்வாதிகரம்.

    செங்கோவி ஒரு ஜனநாயக வாதி. காந்திய சிந்தனையாளர்.

    ReplyDelete
  20. //Yoga.S.FR said...
    எல்லோருக்கும் சனி?!வணக்கம்!பொன் ஜூர்!!!! நீண்ட இடை?!வெளிக்குப் பிறகு எங்கள் கம்பியூட்டர் இயங்கத் தொடங்கியிருக்கிறது!ஒரு வேளை அதற்கும் குளிர் பீடித்ததோ தெரியவில்லை.தேடிய,மற்றும் தேடாத அத்தனை உறவுகளுக்கும் நன்றி!மீண்டும் சந்திப்போம்.//

    வணக்கம் ஐயா..மீண்டு(ம்) வந்ததில் சந்தோசம்.

    ReplyDelete
  21. kmr.krishnan said...

    //அர்ச்சகரான தாத்தா பிராமணன் செய்த அக்கிரமங்களையும் பட்டியலிட்டால் மேற்கொண்டு பேசலாம்..தாத்தாவும் பேத்தியும் கட்டாயம் அவர்களுக்குத்தெரிந்த தகவல்களைச் சொன்னால் அவை உண்மையெனத் தெரிந்தால் ஏற்றுக் கொள்ளத் தயங்க மாட்டேன். //

    ஐயா, உங்களுக்கு பிராமணர் செய்த அக்கிரமங்கள் அவர்கள் சொல்லித்தான் தெரிய வேண்டுமா? இதுவரை தெரியாதா? அப்படித் தெரியாதெனில், தெரியாமலேயே போகட்டும், அதுவே நல்லது.


    //செங்கோவியைப்போலவே எனக்கும் மின் அஞ்சல் அனுப்பக் கூடியவர் அப் பெண்மணி. அவருடைய மனப்போக்கு ஓரளவு அறிவேன்.//

    என்னுடன் மின்னஞ்சலில் விவாதித்த அனைவரின் பெயரும் மறைக்கப்பட்ட காரணம், விவாதத்தின் கவனம் விவாதப் பொருளில் மட்டுமே இருக்க வேண்டும் என்பது தான். அதையும் மீறி நீங்கள் தொடர்ந்து அதையே கிண்டுவது ஏன் என்று தெரியவில்லை. உங்களுக்கு தமிழகத்தில் உள்ள அனைத்துப் பிராமணப் பெண்மணிகளையும் தெரியும் என்றால், அவரையும் தெரிந்திருக்கும், தெரியாவிட்டாலும் பரவாயில்லை.

    //இது போல பிராமணரல்லாத‌வர்கள் தங்களுடைய சாதியின் பெரைப் போட்டு யார் முதலியார்? யார் நாயகர்? என்று எழுதுவதனை விட்டு, ஏன் பிராமணன் பற்றி எழுத வேண்டும்? கீதை முதலிய எடுத்துக் காட்டுக்களைக் காட்டி நீ பிராமணனே அல்ல் என்று எஙளை சுட்டிக் காட்டுவதை முதலில் ஏனயோர் நிறுத்த வேண்டும்.//

    உங்கள் வாதம் வேடிக்கையாக உள்ளது. ’அய்யர் என்பவர் யார்?’ என்றோ ‘அய்யங்கார் என்பவர் யார்?’ என்றோ விவாதம் நடந்தால் நீங்கள் இப்படிக் கேட்கலாம். நான்கு வர்ணத்தின் பெயர்களில் ஒன்றை தனக்கு மட்டுமே சொந்தமென திரிப்பதால்தான் இந்த விவாதம் ஆரம்பித்தது. மேலும், இங்கே வணிக ஜாதியில் பிறந்த அனைவரும் வைசியர் அல்ல, போரிட்ட ஜாதியில் பிறந்த அனைவரும் ஷத்ரியர் அல்ல என்றும் பேசியிருக்கிறோம். அதுபோன்றே அய்யர்-அய்யங்கார் போன்ற ஜாதிகளில் பிறந்த அனைவரும் பிராமண வர்ணத்தவர் அல்ல என்று சொல்கிறோம். எனவே இது பிராமணர்களை மட்டுமே குறிவைத்து எழுப்பப்படும் விவாதம் அல்ல. கீதையை ஆதாரமாகக் காட்டக்கூடாதென்றால், அதைவிடப் பொருத்தமான நூல் ஏதாவது இருக்கிறதா?

    உங்களுக்கு அதில் மாற்றுக்கருத்து இருந்தால், தாராளமாகச் சொல்லலாம். அதைவிடுத்து ‘யாரும் விவாதிக்கவே கூடாது’ என்பதும் பாசிசம் தான் ஐயா.

    ReplyDelete
  22. //ஐயா, உங்களுக்கு பிராமணர் செய்த அக்கிரமங்கள் அவர்கள் சொல்லித்தான் தெரிய வேண்டுமா? இதுவரை தெரியாதா? அப்படித் தெரியாதெனில், தெரியாமலேயே போகட்டும், அதுவே நல்லது.//

    அன்புள்ள செங்கோவி!

    விவாதம் தேங்கி நின்றபோது நீங்களே வந்து பின்னூட்டம் இட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

    சாதாரணமகவே பிராமணர்கள் இயல் இசை நாடகங்களில் பிரியம் உள்ளவர்கள். இது நான் சொல்வது உலகாயதப் பிராமணர்களைப்பற்றி. கூறியது கூறல் என்ற குற்றத்திற்கு ஆளாகியும் மீண்டும் சொல்கிறேன்.பிராமணர்களில் உலகாயதர்கள், வைதீகர்கள் என்று எப்போதும் இரு பிரிவுகள் உண்டு. இதை அய்யர், அய்யங்கார் ராவ்,குருக்கள் இவர்களுடன் குழப்பிக்கொள்ள்க்கூடாது.

    இலக்கிய ரசனை, கலை ரசனை பிராமணர்களுக்கு அதிகம்.பத்திரிகைத் துறை வருவதற்கும் முன்னர் மேடை நாடகங்கள் போன்ற்வற்றினை நடத்தி வந்ததில்
    உலகாயதப் பிராமணர்களுக்குப் பெரும் பங்கு உண்டு.அந்த நாடகங்களிலும் சரி,பத்திரிகைகள் வந்த பின்னரும் சரி பிராமணர்கள் அவர்களுக்கு மிகவும் பரிச்சயமான தங்களுடைய சாதிப் பழக்க வழக்கங்கள்,
    பேச்சு வழக்குகள்,வீட்டுப் பிரச்சனைகள், மனோதத்துவங்கள் இவற்றையே
    பொதுவில் வைத்தனர். தங்களுடைய கோமாளித்தனங்களைத் தாங்களே
    வேடிக்கை,பகடி செய்வதில் பிராமணர்களுக்கு நிகர் அவர்களே.

    நல்ல புனைவு எழுத்தாளரான தங்க‌ளுக்கு நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை, புனைவில் மிகைப் படக் கூறல் என்பது இருந்தாலே அக்கதை ரசிக்கும் அல்லவா? அப்படித்தான் தங்களுடைய‌ வாழ்வியலைத் தாங்களே மிகை கூறிக் கேலி செய்து கொண்டனர்.சினிமா வந்த பிறகு அது மேலும் பரவலாக்கப்பட்டது.சினிமா, வெகு ஜனப்பத்திரிகை ஒரு வியாபாரம்தான். எனவே எது விலை போகுமோ அது விற்கப்பட்டது.

    அப்படி செய்யும் போது தங்களை முற்போக்காகக் காட்டிக்கொள்ளும் எழுத்தாளர்கள்,ரியலிசம் சர்ரியலிசம் அது இது என்றும் பிராய்டியன் தியரி என்றும் ஐரோப்பாவில் என்னென்ன இலக்கிய பாணி உண்டோ அதையெல்லாம்
    இறக்குமதி செய்து விற்றனர்.

    அப்போது பிராமண‌ர்களின் செக்ஸ் வக்கிரங்கள்,அற்ப ஆசைகள், விதவைகளின் விர‌கங்கள்,இன்னும் என்னென்னவோ கதை பொருளாக்கப்பட்டன.அதனையெல்லாம் உயர்ந்த இலக்கியம் என்று பிராமணனும் ரசித்தான்.ஏனையொரும் ரசித்தனர்.

    பாலச்சந்தர் 'அடுத்தாத்து அம்புஜத்தைப் பார்த்தேளா...'பாடவைத்து, தமிழகம் முழுவதற்கும் பிராமண‌ வழக்கு மொழியை அறிமுகப்படுத்தி இழிவுபடுத்தினார்.யாரும் கேட்பாரில்லை.

    தீண்டாமை ஒழிப்புப் பிராசாரமாக கல்கி போன்ற‌வர்கள் எழுதிய கதைகள் கூட‌
    நிலவரம் மிக மோசம் என்ற உணர்வை ஏற்படுத்தின.

    அக்காலத்தில் கோபால கிருஷ்ண‌ பாரதியார் நந்தன் சரித்திரக் கீர்த்தனைகளை சங்கீத உபன்யாசத்திற்காகப் புனைவாக‌ எழுதினார்.அதுவே தலித்துக்களுக்கு எதிராக பிராமண நிலச்சுவாந்தார்கள் செய்த கொடுமைகளுக்குப் பெரிய
    ஆதாரமாயிற்று!அது புனைவு என்பதையே எல்லோரும் மறந்தனர்.

    இதுபோல தங்களுக்கு வார, மாதப் பத்திரிகைகள் ஊடகங்கள் மூலம் கிடைத்த
    செய்திகளினை வைத்துக்கொண்டு பிராமணக் கொடுமைகள், அக்கிரமங்கள்
    பற்றி பிராமணர்கள் தாங்களும் தங்களைப்பற்றியே ஒரு கற்பனையான‌ அபிப்பிராயத்திற்கு வரவும்,அதுபோலவே மற்றவர்களின் மனதில் பிராமண‌ன்
    அற்பன், தீயகுணமுடையவன், நயவஞ்சகன் என்ற அபிப்பிராயங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன.

    தாத்தாவும் ,பேத்தியும் இது போன்ற ஊடகத்தில் குமுதம், விகடன் போன்றவற்றில் படித்த புனைக் கதை அடிப்படையில் தான் பெரும்பாலும் சொல்வர்கள்.அவர்கள் உண்மையிலேயே மற்ற இனத்தவருக்கு பிராமணன் செய்த கொடுமையைக் கூறினால் அதற்கான பரிகாரத்தை என்னல் இயன்ற‌ அளவு செய்யக் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  23. //பிராமணர் செய்த அக்கிரமங்கள் அவர்கள் சொல்லித்தான் தெரிய வேண்டுமா?//

    முற்றும் முதலுமான குற்றச்சாட்டு பிராமணன் தீண்டாமை பார்த்தான் என்பதே

    இன்றைய தலித் ஆய்வுகளின் படி ஆதி பவுத்தர்களான பஞ்சமர்கள் பவுத்தம்
    இங்கே புகழினை இழந்தபோது, சாதி அமைப்பற்ற பவுத்தர்களான தலித் மக்கள் சாதிய அமைப்பான இந்து சமூகத்தாருடன் பகைத்து ஊரைவிட்டு வெளியேறித் தள்ளி வசிததனர்.
    (தற்போது கூட ஒரு கிராமத்து மக்கள் அப்படிப்பட்ட போராட்டம் நடத்தினர்)

    பிராம‌ண‌ர்கள் தான் இந்து மதத்தினை தலைமை ஏற்று நடத்தியதால் அவர்கள்
    மீது மத ரீதியில் தோல்விய‌டைந்த பவுத்த மதத்தினரான தலித்கள் தீராத பகை கொண்டனர். பிராமணாக‌ளைக் காண்பதும் தீட்டு என்று நினைத்தன்ர்.அப்படி ஒரு பிராமணன் சேரியின் பக்கம் போய்விட்டால் அவன் நின்ற‌ இடத்தினை
    சாண‌ம் கொண்டு சுத்தம் செய்த்னர். அவர்கள் உபயோகத்தில் இருந்த மண் பானைகளைப் போட்டு உடைத்தனர்.

    இது அயோத்திதாச பண்டிதர் எழுதியுள்ள நூல்களில் காணக்கிடக்கிறது.ஆக பிராமணன் அல்ல தீண்டாமையைத் துவக்கியது என்று ஆகிறது.

    ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் தனது மனதில் இருந்து பிராமணன் என்ற உயர் மன நிலையைப்போக்கிக் கொள்ள, தலித் காலனிகளுக்குச் சென்று அவர்களுடைய மலங்களைக் கழுவி விடுவாராம். பகல் நேரத்தில் சென்றால்
    "ஐயோ பிராமணன் வந்துவிட்டான்" என்று அலறி பானைகளை முச்சந்தியில் போட்டு உடைப்பார்களாம். சாணத்தைத்தெளிப்பார்களாம். இது வங்கத்திலும் நடந்துள்ளது.தினமும் அவர்களுக்குப் பானை நட்டமாகிறதே என்று இரவு நேரத்தில் அங்கே சென்று தன் ஜடா முடியால் சுத்தம் செய்வாராம்.

    ஆகத் தாங்களாகவே மற்றவர்களிடமிருந்து விலகி வாழ்ந்ததாக இப்போது வந்துள்ள் தலித் ஆய்வுகள் கூறுகின்றன.பாபாசாஹேப் அம்பேத்கரும் இதனை ஓரிடத்தில் குறிப்பிடுகிறார்.

    தந்தைப் பெரியார் ஒருமுறை 'தலித் பெண்கள் எல்லாம் ரவிக்கை போடுவதால்தான் துணிவிலை உயர்ந்து விட்டதா'க பொதுக்கூட்டத்தில் கூறினார்.தலித் சமூகம் கண்டித்தது பெரியாரை.

    இரண்டாவதாகப் பிராமணன் ஏனையோருக்குக் கல்வியினை அளிக்காமல் தடுத்தான் என்பது.

    நான் ஏற்கனவே கூறியபடி அனைவருக்குமான ஆரம்பக் கல்வியும், பிராமணனுக்கே உரிய வேதக் கல்வியும் இருந்துள்ளது.திண்ணைப் பள்ளியில் வேண்டுபவர்கள் எல்லாம் எழுதப்படிகவும் அன்றைய அரித்மெடிக் படிக்கவும் வாய்ப்பு எல்லோருக்கும் இருந்துள்ளது.

    1822ல் ஆங்கிலேயன் எடுத்தப் பள்ளிக் கணக்குப்படி பிராமணர்களைக் காட்டிலும் ஏனையோர் அதிக எண்ணிக்கையில் ஆரம்பக்கல்வி பெற்றுள்ளனர்.காண்க தர்ம்பாலின் 'பியூடிஃபுல் ட்ரீ'ஆய்வு நூல். ஏற்கனவே சுட்டியுள்ளேன்.

    வேதம் பிராமணன் படித்தாலும் 1890க்குப் பிறகு எல்லோரும் படிக்கும் படி புத்தகங்கள் வந்து விட்டன. வர்ண முறைப்படி முதல் மூன்று வர்ணமும் வேதம் படிக்க உரிமை உடையவர்களே.

    ReplyDelete
  24. தலித்துக்களுக்கான படிப்பு பற்றி ஓரிரு செய்தி கூறுகிறேன்.

    முதல் முதலில் ஆங்கிலத்தினைக் கற்க வாய்ப்புக் கிடைத்தவர்கள் தலித்துக்களே!அது எவ்வாறு என்றால், இங்கே வந்த ஆங்கிலேயர்களுக்கு பீஃப் என்ற மாட்டுக்கறி தேவை இருந்துள்ளது.அதனை அவர்களுக்கு சப்பிளை செய்யக்கூடிய நிலையில் இருந்தவர்கள் தலித்கள் அல்லது முஸ்லிம்கள்.அப்போது பல ஊர்களில் முஸ்லிம் சிற்றரசர்கள் இருந்ததால், கும்பனியாருக்கு தேவையானதை அளிப்பது ஆங்காங்கு உள்ள அரசர்களின் அனுமதியுடனேயே செய்தல் வேண்டும்.
    ஆகவே முஸ்லிம்கள் சற்றே தயங்கிய சமயம் ஆங்கிலேயருடன் நல்ல‌ உறவினை தலித்துக்கள் ஏற்படுத்திக் கொண்டனர்.ஏவலர், பட்லர் ,குதிரை பராமிப்பாளர், தோட்டக்காரர் போன்ற வேலைகளில் அமர்ந்தனர். கிராமங்களில் இருந்து நகரத்திற்குக் குடி பெயர்ந்த்னர்.ஆங்கில பாணி உடைகள் அணிந்தனர்.

    ஆங்கிலேயரின் உள் விஷயங்கள் தெரிந்தவராகவே இருந்தனர்.அரசியலில் ஏற்படப்போகும் மாற்றங்களை உடனுக்குடன் முன்கூட்டியே அறியும் இட்ங்களில் இருந்தனர்.

    1908ல் அரசுக்கு அளித்த மகஜரில் பல்வேறு பணிகளில் இருந்த தலித்கள் 2173 பேர் கையெழுத்து இட்டுள்ளனர்.

    காந்திஜி தென் ஆப்பிரிக்காவில் போராட்டத்தில் இறந்த சில தமிழர்களின் குடும்பத்தினரை சந்திக்க மயிலாடுதுறைக்கு வந்துள்ளார். அப்போது அவர் இந்திய சுதந்திரப் போரில் தெரியாத பெயர். அவருக்கு மயிலடுதுறையில் ஒரு வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. அதில் அவரிடம் தலித்துக்கள் முறையிட்டுள்ள‌னர்,அங்குள்ள கருப்பர், இந்திய வம்சாவளியினரைப் போலவே தாங்களும் இங்கே துன்புறுத்தப்படுவதாக. அந்தக் கூட்டத்திலேயே காந்திஜி 'அவர்கள் கூறுவது உண்மையானால் அதற்கான மாற்றுக்களை யோசிக்க வேண்டும்'என்று பேசுகிறார்.

    காந்திஜியின் தென் ஆப்பிரிக்கப் பணி பற்றி அறிந்து,அவரிடம் மகஜர் அளிக்கும் அளவுக்கு அர்சியல் விழிப்புணர்வு, படிப்பு ஆகியவை அப்போதே இருந்துள்ளது தலித் சமூகத்தில்.

    தலித்தில் ஒரு பிரிவினர் வள்ளுவர்கள்.இவர்கள்தான் சோதிடம் வானசாஸ்திரம்,கணித‌ம் அறிந்தவர்கள். பாடல்களாக உள்ள சோதிட சூத்திரங்களை மனப்பாடம் செய்து கூறுவர்.வள்ளுவர் வாக்கு பலிக்கும் என்பது தமிழர்களின் நம்பிக்கை. திருவள்ளுவர் இந்த இனத்தைச்சேர்ந்தவ்ர் என்பது தலித்துக்களின் துணிபு.கணக்கிட முடிய காலந் தொட்டே இவர்கள் எழுத்து அறிவு உள்ளவர்கள்.

    ஆங்கிலேயரின் நிர்வாக, க‌ல்விக் கொள்கை பல குழப்பங்களை ஏற்படுத்திவிட்டன.

    ஆர்ய சமாஜமும், தியாசபிச்ல் சங்கமும் தலித்துக்களுக்கெனவே பிரத்யேகப்பள்ளிகளைத் துவங்கினர்.கர்னல் ஆல்காட் அவர்களைப்பயிற்றுவிக்க
    ஒரு எளிய பாடத்திட்டத்தி வகுத்தார்.

    ராணுவப் பணியும், காவல்துறைப் பணியும் கிடைத்தன.

    மற்றவர்களுக்கு கிடைக்கு முன்னரே தலித்துக்களுக்கு நல்ல வளர்ச்சிக்கான சூழல் ஏற்பட்டது.

    1920 துவங்கி இட ஒதுக்கீடும் வந்து விட்டது.

    ReplyDelete
  25. "மூன்றாவது குற்றச்சாட்டு அரசுப் பணிகளில் தங்களுடைய ஜனத்தொகை விகிதாசாரத்துக்கு மிக அதிகமாகப் பிராமணர் பதவியில் இருந்தனர்.இட ஒதுக்கீட்டை சரியாகக் கடைப்பிடிக்காமல் பிற சாதியினரை வஞ்சித்துவிட்டனர்":

    முன்னரே 1967ல் திமுக அமைச்சரவையில் இருந்த மறைந்த சத்தியவாணிமுத்து கூறியதைக் கூறியுள்ளேன். "பிராமண அதிகாரிகளே இட ஒதுக்கீடு விதிகளை நாண‌யமாகக் கடைப்பிடிப்பர்"

    பலரும் பிராம‌ண அதிகாரிகளின் நேர்மையைப் பாராட்டியுள்ளனர்.

    அன்றைய சூழலில் அரசு வேலையை விட்டால் பிராமண‌னுக்கு வேறு கதியில்லை. வைதீகப் பிராமணனுக்கு வேதம் சோறு போட்டது. கைத்தொழில் எதுவும் கற்பிக்கப்படாத பிராம்ம‌ண‌ இளைஞன்(அன்றைய சூழலில் தொழிற்கல்வி அவனுக்கு மறுக்கப்பட்டது) அரசு வேலைகளில் ஆர்வம் காட்டினான். அவனுடைய அளவுக்கு அதிகமான இருப்பை 1870களிலேயே கண்டறிந்து மற்ற சமுதாயத்தினர் குரல் கொடுக்க ஆரம்பித்துவிட்டனர்.

    படிப்படியாக வெளியேற்றப்பட்டு இப்போது தமிழகத்தைப் பொறுத்தவரை இல்லை என்ற அளவுக்கு ஆகிவிட்டது.

    பிற ஜாதியினர் அரசு வேலை, தங்களுடைய பாரம்பரிய வேலை இரண்டையும் செய்ய வாய்ப்புப் பெற்றனர்.

    ReplyDelete
  26. நான்காவது குற்றச்சாட்டு ராஜாஜி முதலமைச்சர் ஆன போது 'குலக்கல்வித் திட்டதை'க்கொண்டு வந்து மற்றவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்கி விட்டார்.

    அத் திட்டத்திற்கு குலக் கல்வித் திட்டம் என்று பெயர் கொடுத்தது ராஜாஜி அல்ல.எதிர்கட்சியினரே. அன்று இருந்த சூழலில்,காந்திய வழியில் வந்தவர்கள் கஞ்சன் என்று பெயர் எடுக்கும் அளவு சிக்கன‌ம் ஆனவர்கள். இருக்கும் பள்ளிக் கட்டிடத்தினையும் தளவாடச் சாமான்களையும் பயன் படுத்தி, ஷிஃப்ட் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தினார் ராஜாஜி. அதன் மூலம் பல குழந்தைகளைச்
    சேர்க்க‌ வழியுண்டாகும். அரை நாள் பள்ளி. மீதி நேரம் என்ன செய்வார்கள் என்று கேட்டபோது 'தொழிற்பயிற்சி பெறட்டும்' என்றார்.எங்கே என்ற போது அருகில் உள்ள சிறிய தொழிற்கூடங்களில் என்றார்.

    ஏற்கனவே பள்ளிக்குப் பிள்ளைகளை அனுப்பாததற்குப் பெற்றோர் கூறிய காரணம் தங்களுடைய வேலைக்கு ஒரு ஆள் குறைந்து போகிறது.அரை நாள் அந்தப் பிள்ளைகள் குடும்ப வேலையில் ஈடுபடலாம் என்பது பெற்றொருக்கு மகிழ்ச்சி அளிக்கும் என்று அனுமானிக்கப்பட்டது.இது திட்டத்தில் ஒன்றும் சொல்லப்படவில்லை.நிருபர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு ஒரு பதிலாக பெற்றொருக்கு உதவி செய்யலாமே என்று சொன்னார்.

    இதனை அரசியலாக்கி அவர் வெளியேற்றப்பட்டார்.

    நிறை வேறாத அந்த திட்ட வரைவை இங்கே படியுங்கள்.

    http://www.education.nic.in/cd50years/g/12/28/12280V01.htm
    http://www.education.nic.in/cd50years/g/12/28/12281301.htm

    ReplyDelete
  27. ஐந்தாவது குற்றச்சாட்டு இந்துக் கோவில்களுக்குள் அனுமதி மறுப்பு.

    இதில் கோவில் பணியாளர் ஆன குருக்கள் ஒன்றும் செய்ய முடியாது.அப்போதிருந்த கிராம நிர்வாக அலுவலர்,தாசில்தார், கோவில் தர்மகர்தா ஆகியோர் எடுக்கும் முடிவை நிறைவேற்றும் பொறுப்பு அர்சகர் கையில்
    அர்சகர்தான் அந்த அமைப்பின் நேரடி பிரத்நிதியானதால் அவ்ர் சிலரை கோவில்ளூக்குள் அனுமதிக்கவில்லை போன்ற தோற்றம்.

    கோவில் நுழைவு சட்டமானதும் நிம்மதிப் பெருமூச்சு விட்டவன் குருக்கள்தான். அதுவரை உள்ளூர் பெரியவர்கள் சொற்கேட்டு நடக்க வேண்டிய சூழல்.காந்தியின் தொடர் போராடங்களால் அவர்களுக்கும்(both) நல்ல நேரம் வந்தது.

    ReplyDelete
  28. கோவில்களில் இருந்த தேவதாசி முறையை பிராமண‌ன் தோற்றுவித்து விபச்சாரத்திற்கு வித்திட்டான்.இது ஆறாவது குற்றச்சாட்டு.

    கணிகையர் ,பரத்தையர் போன்ற சமூதயத்தில் சீரழிந்த பெண்கள் தமிழ்நாட்டில் சங்க காலத்திலேயே உண்டு.அகம் ,புறம் ஆதாரம். பேரரசன் ராஜராஜன் கூட தஞ்சைப் பெரிய கோவிலில்
    400 தளிச்சேறுப் பெண்டிரான ஆடல் அழகிகளைக் குடியேற்றிக் கலை வளர்த்தான்.

    இந்த உன்னதமான ஆடல் கலை இழிந்த நிலையை அடைந்தது.அம்ம்மகளிர்
    போகப்பொருள் ஆயினர்.அவர்களை உடலாசைக்குப் பயன் படுத்தியவர்கள்
    பெருந்தனக்காரர்களே. அவர்களை அண்டிப்பிழைக்கும் ஏழை பிராமணன் மெள்ன சாட்சியே!

    ReplyDelete
  29. நரகம் சொர்க்கம் போன்ற பயங்களையும்,பாவங்களைப் பற்றி மிகைப்படுத்திப் பயமுண்டாக்கி மக்களிடம் பணம் பறிக்கிறான் பிராமணன்.இது ஏழாவது குற்றசாட்டு.


    நரகம், சொர்க்கம் புராணங்களில் வருவனவே. வேதம் இதனைப் பற்றி அதிகம் சொன்னதாகத் தகவல் இல்லை. நான் வேதம் பயிலாத லெளகீகன். ஆகவே அதில் என்ன உள்ளது என்பது எனக்குத் தெரியாது.கேள்வி ஞானப்படி வேதம் சொர்க்கம் நரகம் பற்றிப் பேசவில்லை.புராணங்களில் கூறப்படுவது வேதம் கூறுவதோடு ஒத்துப்போகவில்லை எனில் அதனை நாம் சீரியசாக எடுக்க வேண்டாம்.

    நமது இந்து மதத்தில் எந்த வலியுயுறுத்தும் கட்டுப்பாடும் கிடையாது.கட்டுப்பாடுகளை நிறைவேற்றுவதை கண்காணிக்கும் நிர்வாக அமைப்பும் கிடையாது. எனவே பணம் பறிக்கும் நோக்கத்துடன் ஏமாற்றும் பேர்வழிகளிடமிருந்து உங்களை நீங்களே காப்பாற்றிக் கொள்ள எதுவும் தடை அல்ல.

    ReplyDelete
  30. சமஸ்கிருத மொழிக்கு ஏற்றமும் தமிழ் மொழிக்குத் தாழ்வும் அளிக்கிறான்
    பிராமண‌ன்.இது எட்டாவது குற்றச்சாட்டு.

    அறிவு சார்ந்த தொழிலையே பிராமணன் செய்கிறான். எனவே பன்மொழி அறிவு அவனுக்கு அவசியம்.

    தமிழகப் பிராமண‌னுக்குத் தமிழ் தாய் மொழி. சமஸ்கிருதம் தந்தை மொழி.
    ஆகவே இரண்டையுமே மதிக்கிறான்.லெளகீகப் பிராமணர்களுக்கு சமஸ்கிருதம் சுத்தமாகத் தெரியாது.வைதிகர்களிலும் சிலருக்குத்தான் தெரியும். எல்லோருக்கும் தெரியாது.

    கோவில்களில் புரியாத பாஷைகளில் வழிபாடு செய்வது எல்லா நாடுகளிலும்
    உள்ளது.பொருள் புரியாத மொழியும், ஒலியும் ஒரு தெய்வீகக் கிறுகிறுப்பினை பக்தர்களுக்குக் கொடுக்கிறது.தமிழகக் கிருத்துவர்கள் நிறையப்பேர் சமஸ்கிருதச் சொற்கள் மலிந்துள்ள பைபிளயே அனுசரிகின்றனர்.கர்த்தர்,பரமபிதா, பரலோகம்,ஆத்துமா, ஜீவன், போன்றவை.ஆமென் என்ற ஹீப்ரு மொழிசொல்
    அவர்களுக்கு 'ஓம்' போல மன நெகிழ்வைக் கொடுக்கிறது.முஸ்லிம்கள் தமிழ் பக்கமே வருவதில்லை. பொருள் புரிந்தாலும் புரியாவிட்டலும் அரபுதான்.


    இன்று தமிழ் செம்மொழி ஆவதற்கு அதன் தொன்மங்களை வெளிக்கொண்டு வந்ததில் பிராமணர்களுக்குப் பெரும் பங்கு உண்டு.

    கலை இலக்கிய சினிமா மூலம் தமிழ் மொழியை வளப்படுத்தியதில் பிராமணனுக்குப் பெரும் பங்கு உண்டு.

    ReplyDelete
  31. //உங்கள் வாதம் வேடிக்கையாக உள்ளது. ’அய்யர் என்பவர் யார்?’ என்றோ ‘அய்யங்கார் என்பவர் யார்?’ என்றோ விவாதம் நடந்தால் நீங்கள் இப்படிக் கேட்கலாம். நான்கு வர்ணத்தின் பெயர்களில் ஒன்றை தனக்கு மட்டுமே சொந்தமென திரிப்பதால்தான் இந்த விவாதம் ஆரம்பித்தது. மேலும், இங்கே வணிக ஜாதியில் பிறந்த அனைவரும் வைசியர் அல்ல, போரிட்ட ஜாதியில் பிறந்த அனைவரும் ஷத்ரியர் அல்ல என்றும் பேசியிருக்கிறோம். அதுபோன்றே அய்யர்-அய்யங்கார் போன்ற ஜாதிகளில் பிறந்த அனைவரும் பிராமண வர்ணத்தவர் அல்ல என்று சொல்கிறோம். எனவே இது பிராமணர்களை மட்டுமே குறிவைத்து எழுப்பப்படும் விவாதம் அல்ல. கீதையை ஆதாரமாகக் காட்டக்கூடாதென்றால், அதைவிடப் பொருத்தமான நூல் ஏதாவது இருக்கிறதா?//

    பிராமணன் என்று பள்ளிக்கூட பதிவில் யார் யாரை சேர்க்க வேண்டும் என்று
    அரசு ஆணை இருக்கிறது.ஹிந்து=பிராமின்=அய்யர், அய்யங்கார், ராவ், குருக்கள் என்று திட்டவட்டமாகச் சொல்ல வேண்டும் என்று பலமுறை விளக்கம் சொல்லிய சுற்றறிக்கைகள் உள்ளன. இது நாங்கள் எவ்வகையிலும் ஒதுக்கீட்டுக் கொள்கையின் பயன்களுக்குள் வந்துவிடக்கூடாது என்பதற்காக
    பிராமணர்களிடம் காழ்ப்புக் கொண்டவர்கள் செய்த சதித் திட்டமே.

    ஆகவே பிராமணன் என்றபெயர் நாங்களே இந்தக் கலாச்சாரக் குழப்பக் காலத்தில் சூட்டிக்கொண்ட பெயரல்ல.உள் நோக்கத்துடன் எங்க‌ளுக்குச் சூட்டப்பட்ட பெயர்.

    ஒரு உயர்சாதிக் கள்ளர், ரிகார்டுக்காக பிரான்மலைக் கள்ளர் ஆகிவிடுகிறார்.
    ஒரு உயர்சாதி நாயக்கர் அதுபோலவே காட்டு நாயக்கர் ஆகிவிடுகிறார்.

    ர்'' 'ன்' ஆகிய சிறிய மாற்றத்தால் தங்களுடைய சாதியை கிழே, கீழுக்கும் கீழே கொண்டு சென்று இட ஒதுக்கீடு பெற்று விடுகின்ற‌னர்.

    அனால் பிராமணனுக்கு மட்டும் வர்ணப் பெயரால் மட்டுமே அறியப்பட வேண்டும் என்று சட்டம்!

    என் முன் பின்னூடங்களில் கோவில் பணியாளர்கள், சமையற்காரன், சவுண்டி பிராமணன் ஆகியோருக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தேன்.

    யாராவது ஓர் ஆத்மா, ஒரே ஒரு சொல் ஆதரித்து இங்கே பின்னூட்டம் இட்டதா?

    பிராமணர்களின் 'அக்கிரமங்க'ளை பகிரங்கப் படுத்திய அர்ச்சகர் தாத்தா பேத்தியாவது ஆதரவுக் குரல் கொடுத்தார்களா?

    பிராமண‌ர்களில் வேதம் மட்டும் பயின்று கொண்டு வர்ணக் கொள்கையில்
    கூறியபடி வாழ்ந்து வரும் பிராமணர்கள் ஆயிரத்தில் ஒருவர் உண்டு.அவர்களால் பூவோடு சேர்ந்து நாறும் மணக்கும் என்று லெள‌கீகப் பிராமண‌னையும் பிராமணன் என்று ஊர் சொல்கிறது. என் வீட்டில் ஒருவர் வேதம் படித்துவிட்டு கீதை இலக்கணப்படி பிராமண வாழ்க்கை வாழ்ந்தாலும்
    எங்கள் குடும்பத்திற்கே அந்த நல்ல பெயர் கிடைத்து விடுகிறது.

    கீதையில் சொல்லப்பட்ட க்ஷத்ரிய தர்மப்படி , வைஸ்ய தர்மப்படி,சூத்திர தர்மப்படி இவர் வாழ்கிறார் என்று ஒரு ஆளைச் சுட்டுங்கள், சொல்லுங்கள் பர்க்கலாம்.

    பிராமணன் யார் என்ற விளக்கததினை வேண்டும் அளவு அபிராமணர்கள் சொல்லி எங்களுக்குக் காது புளித்துவிட்டது. நாங்களும் 'வர்ண‌ பிராமணன் நாங்களில்லை. இப்போது அரசாங்கம் சொல்லும் சாதிப்பிராமணன் தான் நாங்கள்' என்று மீண்டும் மீண்டும் சொல்லி விட்டோம்.

    அதன் பின்னரும் செத்த பாம்பினிடம் வீரம் காண்பிக்கும் மறத் தமிழர்களுக்கு ஒரு தமிழ் வணக்கம்.

    ReplyDelete
  32. பிராமணன் பிறசாதியினருக்குச் செய்த நனமைகள்:

    1.தான் கல்வியில் நாட்டம் கொண்டு அதனால் விளையும் நன்மைகளை ஊர் அறியும் படி வாழ்ந்ததால் பிற சாதியினருக்கும் கல்வி கற்க வேண்டும் என்ற எண்ண்ம் தோன்ற எடுத்துக்காட்டாக‌ இருந்தான்.

    2.இறை வழிப்பாட்டு முறைகளை எல்லோருக்குமாகச் செழுமைப்படுத்தினான்.

    3.கோவில்களைக் கட்டிக் காத்து வருகிறான். கோவில் என்பது பொது இடம். அதனைப் புழங்குவது நிறுத்தப்பட்டால் நமது கலைப்பொக்கிஷங்கள், வரலாற்று அடையாளங்கள் காசுக்கு ஏற்றுமதியாகிவிடும்

    4.ஆங்கிலேயர் கல்வி சீர்திருத்தம் கொண்டு வந்த‌வுடன் ஆசிரியப் பணியினை
    விரும்பி ஏற்று பல நல்ல மாணவர்களை, எல்லா சாதியிலும், உருவாக்கினார்கள்.

    5.தன்னுடைய முன்னோக்கிப் பார்க்கும் அறிவால் வரப்போகும் மாறுதல்களைக்
    கணித்துத் தன் வருங்காலத்தைச் சீரமைத்துக்கொள்ளும் லாவகம்; இதனைப் பிறர் பார்த்துத் தாங்களும் அவனைப் பின்தொடர்வர்.

    6.அரசியல் அளவில் பெருந்தலைவர் காமராஜருடன் தொழிற்துறை அமைச்சராக இருந்து பல கனரகத் தொழிற்சாலைகளை தமிழகத்திற்குக் கொண்டு வந்தவர் ஆர். வெங்கடராமன் பிராமணரே.

    7.மதுவால் விவசாயக் கூலிகளும், தலித்துக்களும் சீரழிவதைப் பார்த்து,காந்திஜியின் செயல் திட்டத்தைத் தன் ஆட்சி காலத்தில் அமல் படுத்தி
    30 ஆண்டு காலம் மது அரக்கனை தமிழகத்தில் வலுவிழக்கச் செய்தவர் ராஜாஜி என்ற பிராமணரே.(அண்ணா காலம் வரை அமலில் இருந்தது.தமிழ் இனக் காவலர் சாராய சாம்ராஜ்யத்தினிடம் அன்பளிப்புப் பெற்று மீண்டும் விவசாயிகளையும், தலித்துக்களையும் பின்னடைவுச் செய்ய பேர் உதவி செய்தார். வாழ்க பகுத்தறிவு. ஒழிக பார்ப்பனீயம்!)

    8.விவசாயத்தில் நிலச்சொந்தக்காரனை விட உழைப்பவனுக்கு பலன் கூட இருக்கும் படி சட்டம் இயற்றியது ராஜாஜி என்ற பிராமணனே.குத்தகையாள் 60ம், நில உடஒமையாளனுக்கு 40ம் என்று சட்டம் போட்டது ராஜாஜியே.

    9.1967 முதல் இங்கு திராவிட ஆட்சி நடை பெற அடித்தளம் அமைத்தது
    ராஜாஜியே. இது காங்கிரசின் பிறகட்சிகளை உடைத்து வலுவிழக்கச்செய்யும் தந்திரத்தை முறியடிக்க தேர்தல் கூட்டணி முறையினைக் கொண்டு வந்தவர்
    ராஜாஜியே.மேடை தோறும் ஏறி பிரச்சாரம் செய்ததும் அவரே.

    10. விவசாயிகளின் கழுத்தை நெருக்கிய கந்து வட்டிக் கடன் நிவாரண சட்டம் கொண்டு வந்து அவர்கள் நலம் காத்தது பிராமண ராஜாஜியே.

    இன்னும் பல உண்டு.

    ReplyDelete
  33. பொதுவாகப் பார்ப்பனீயம் பற்றிப் பேசும் எவரும் குறிப்பிடத்தக்க குற்றச்சாட்டுகளை வைப்பதில்லை.பொத்தாம்பொதுவாகப் பேசுவதே வழக்கமாக உள்ளது. அவற்றில் பெரும்பாலான குற்றச்சாட்டுகளுக்கு கிருஷ்ணன் அவர்கள் பதில் சொல்லியிருக்கிறார்.

    மிஞ்சி மிஞ்சிப் போனால் பார்ப்பனன் ஆங்கிலேயர் ஆட்சியில் அதிக பதவிகளில் இருந்ததைச் சொல்வார்கள். அதற்கும் பதில் சொல்லப்பட்டது. பிற்படுத்தப்பட்ட சமுதாயம் என்று சொல்லிக் கொள்வோரிடம் நிலம் மற்றும் விவசாயம் சார்ந்த வேலைகள் இருந்தன. பெரும்பாலான பார்ப்பனர்களுக்கு அந்த வசதி இல்லாதததால் கல்வியில் கவனம் செலுத்தினர். விடயம் அவ்வளவுதான். விவசாய சமூகத்தில் இருந்தவர்களுக்கு கல்வியைப் பரவலாக்கிய அரசாங்கம் கல்வியை வாழ்வாதாரமாக வைத்திருந்த பார்ப்பனர்களுக்கு மாற்று வழி எதையும் காட்டாமல் பழி வாங்கியது என்பதை ஒப்புக் கொள்ளும் நேர்மை கூட பலருக்குக் கிடையாது.

    இன்றைய நிலையில் தமிழகப் பொறியியல், மருத்துவக் கல்லூரிகளில் பிற்படுத்திக் கொண்ட சமுதாயம் அளவுக்கு மீறி இடம் பெறுகிறது. இதை எதிர்த்து குரல் கொடுக்க எந்த பெரியாரும் வருவதில்லை.

    ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் சமூக நீதி, சமுதாய மேம்பாடு என்று பூசி மெழுகுவதெல்லாம் பார்ப்பன துவேஷத்தின் காரணமாக எடுக்கப்பட்டப் பழி வாங்கும் நடவடிக்கையே.

    பார்ப்பான் செய்த குற்றம் என்று ஒன்றே ஒன்றை மட்டும் சொல்வேன். மருத்துவக் கல்லூரியில் நுழைய சமஸ்க்ருதம் தெரிந்திருக்க வேண்டுமென்று 1932 வரை விதி இருந்தது கண்டிக்கத்தக்கது.

    பார்ப்பனீயம் பற்றிப் பேசும் எவரும் தன் சாதிப் பழக்க வழக்கங்களிருந்து வெளியே வரத் தயாராக இல்லை. இப்படி இரட்டை வேடம் போடுவதற்குப் பதிலாக " பார்ப்பனர்கள் இந்த நாட்டில் இருக்கத் தேவையில்லை.நாங்களாக இன அழிப்பு நடவடிக்கையை ஆரம்பிக்கும் முன் நீங்களே வெளியேறி விடுங்கள்" என்று சொல்லி விடலாம். பெரியார் சிலையை பிற்படுத்தப்பட்டவர் தாக்கினால் கூட உடைவது பார்ப்பான் மண்டைதானே.

    ReplyDelete
  34. @செங்கோவி

    நீங்கள் இப்படி ஒரு பாசிச வாதியாக இருப்பீர்கள் என்று நினைக்கவில்லை. என் பின்னூட்டத்தை நீக்கியதைக் கண்டித்து இந்த விவாதத்திலிருந்து விலகுகிறேன்.

    ReplyDelete
  35. @Jagannath அய்யோ..அய்யோ..

    எனக்கு வழக்கமா கமெண்ட் போடற பன்னிக்குட்டி ராம்சாமி, விளங்காதவன் போன்றோரின் சில கமெண்ட்ஸ்கூட ஸ்பேமில் போய் உட்கார்ந்து விடுகிறது..அவர்கள் (கமெண்ட்டிலேயே) சொன்ன பின் தேடி எடுத்து வெளியிடுவது வழக்கம்..அது மொக்கைப் பதிவுகள் என்பதால் அவர்கள் சீரியசாய் எடுத்துக்கொள்வதில்லை..இது சீரியஸ் பதிவு என்பதால் பொங்கிவிட்டீர்கள்!!!...எடுத்து விட்டாச்சு...வாழ்க பாசிசம்.

    ReplyDelete
  36. @Jagannath நீக்கினால் காரணம் சொல்லிவிட்டே நீக்குவேன் என்பதையும் சொல்லிக்கொள்கிறேன்!!

    ReplyDelete
  37. @செங்கோவி

    உங்களைத் தவறாக நினைத்ததற்காக வருந்துகிறேன். என் அவசர புத்தியை மன்னிக்கவும்.

    ReplyDelete
  38. //பார்ப்பான் செய்த குற்றம் என்று ஒன்றே ஒன்றை மட்டும் சொல்வேன். மருத்துவக் கல்லூரியில் நுழைய சமஸ்க்ருதம் தெரிந்திருக்க வேண்டுமென்று 1932 வரை விதி இருந்தது கண்டிக்கத்தக்கது.//

    தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி ஜகன்னாத்.ஏதோ ஒரு ஓல்டு மேனின் ஒற்றைப் புலம்பல் என்று விலகி விடாமல் நீங்கள் ஒருவரவது உங்கள் இருப்பைக் காட்டிக் கொள்கிறீர்களே.நன்றி!

    ஏற்கனவே சமஸ்கிருதம் பற்றிய செய்தியில் நான் பிற சாதியினரும் சமஸ்கிருத அறிவு பெற்று இருந்ததைக் குறிப்பிட்டு இருந்தேன்.உதாரணமாக ராமசாமி கவுண்டர் பற்றிக் கூறியிருந்தேன்.ஸ்ரீநாராயண குரு ஈழவர். அவருக்கு சமஸ்கிருத அறிவு இருந்துள்ளது. சுவாமி விவேகானந்தர் காயஸ்த என்ற வகுப்பினர். அவர் சமஸ்கிருத அறிவு பெற்றுள்ளார். இப்போது ஓரியனடல் பள்ளிகளில் படிக்கும் மணவர்கள் பிராமணர்கள் கிடையாது.அவர்களுக்கு சமஸ்கிருதம் ஒரு பாடம்.டாக்டர் அம்பேதகர் நல்ல சமஸ்கிருத ஸ்காலர்.

    ஆங்கிலேயன் நமது பாரம்பரிய தொழில் நுட்பங்களை ஸ்வீகாரம் செய்தது பல துறைகளில்.ஆரம்பக் கல்வித்துறையில் மாஸ் எஜுகேஷன‌க்கு நமது திண்ண்ணைப் பள்ளி மாடலே காப்பி அடிக்கப்பட்டது.

    மருத்துவத்தில் இங்குள்ள ஆயுர்வேதம், சித்தா ஆகியவையும்,ஆங்கில மருத்துவம் நேசன்ட் ஸ்டேஜில் இருக்கும் நிலையில், அவற்றினைப் புறக்கணிப்பது சரியல்லா என்பதால், ஆங்கிலேயனே ஆயுர்வேதம் பயில சமஸ்கிருத அறிவினை வலியுறுத்தினான்.

    அயோத்திதாச பண்டிதர், அப்பிரகாம் பண்டிதர் ஆகியோர் பரம்பரிய வைத்திய குலம். அவர்கள் பிராமணர் அல்லர். ஆனால் அவர்களுக்கு சமஸ்கிருத அறிவு இருந்ததால்தான் ஆயுர்வேத வைத்தியம் செய்தனர். இது போன்ற பாரம்பரிய வைத்தியர்களையே ஆயுர்வேதத்திற்கு ஆசிரியப் பணியையும் செய்ய ஆங்கிலேயன் பணித்துள்ளான்.அவர்களைக் கல‌ந்து கொண்டுதான் வைத்தியப் படிப்புக்கு சமஸ்கிருதம் என்ற விதி வந்திருக்க வேண்டும்.ஏனெனெனில் இப்படிப்பு குலத்தொழில் என்பதிலிருந்து எல்லோருக்கும் என்று திறந்து விட வேண்டும் என்ற போது, குலத்தொழில் செய்வோர் தமது பிழைப்பு கெடுகிறது என்று கூக்குரல் எழுப்பியிருப்பர். அவர்களுடைய அபிப்ராயமும் கேட்டுத்தான் வைத்தியம் பொதுக்கல்வி ஆகியிருக்க வேண்டும்.அவர்களே சமஸ்கிருதம் வைத்தியப் படிப்புக்குத் தேவை என்பதை ஏற்றுக்கொண்டு இருக்கக்கூடும்.இதில் பிராமண் சதி ஒன்றும் இல்லை என்றே நான் நினைக்கிறேன்.

    அந்த விதி இருந்தும் கூட பல அபிராமணர்களும் டாக்டர் ஆகியுள்ளனர் அல்ல‌வா?

    ReplyDelete
  39. எல்லாத் துறைகளிலும் முன்னோடி பிராமணன்.கனரகத் தொழிலிலும் அவனே.

    டி வி எஸ், ராயல் என்ஃபீல்டு, ஈசுன்,சிம்சன் ஆகியவை சிறப்பாகப் பணியாற்றி நல்ல பெயருடன் விளங்கு கின்றன. அதில் பணிபுரியும் ஊழியர் அனைவரும் பிராமணர் அல்ல. எல்லா சாதியினருமே.பெரும்பாலன அடிப்படை ஊழியர்கள் ஏழை பிற சாதியினரே.

    கழக ஆட்சியில் பெருகிய தொழில் சாராயமே.அது சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகளே விருத்தி ஆயிற்று. கார்த் தொழிற்சாலைகள்
    வெளி நாட்டவர் வந்து அமைத்தவை. நமது ஊக்கம் அல்ல.

    ReplyDelete
  40. //பெரியார் சிலையை பிற்படுத்தப்பட்டவர் தாக்கினால் கூட உடைவது பார்ப்பான் மண்டைதானே.//

    சாதாரணமாகப் பெரியார் சிலையை யாரும் தாக்குவது இல்லை. ராமனாதபுரம்,
    மதுரை நெல்லை பகுதிகளில் முக்குலத்தோரும் தலித்துக்களும் அடிக்கடி சலசலப்புச் செய்வர். அவர்கள் தலைவர்கள் சிலைதான் உடைபடும். அதற்கு பிராமணன் புருஷ சுக்தத்தில் ஏதோ சொன்னதுதான் காரணம் என்று தி.க அறிக்கை வெளியாகும். கஷ்டமடா சாமி.

    ReplyDelete
  41. Poverty and Brahmins in India

    Poverty knows no caste. Many Brahmins eke out a living cleaning toilets, pulling rickshaws.

    Not all Brahmins are successful technocrats or bureaucrats. Across the country the poor among the upper-most Hindu caste have to eke out a miserable existence like the rest of humanity's economically deprived.
    Forty of Sulabh's toilet cleaners are Brahmins, most of them from Bihar . Says Kashinath Jha, a maintenance engineer at Sulabh: "This is largely because of the abject poverty in Bihar ." The Brahmin sanitation staff are from what is believed to be a large Brahmin migrant labour population in Delhi consisting of rickshaw-pullers, coolies and vegetable vendors.

    Kamlesh Chaudhary, one of the Brahmin sanitation workers at Sulabh's toilet complex inside Azadpur vegetable market in Delhi , says: "Our income from farming is meagre as the region where we come from is prone to floods and drought. Most people like us leave in search of jobs and come to the cities." Jha left home in Samastipur and joined Sulabh six years ago after he heard of it from one of his relatives, another Brahmin, who also works for the NGO. Kamlesh and others like him earn Rs 2,500 per month. Since they are provided food and lodging, they save enough money to send back home. This, they say, is more than what they can earn working as casual labourers.

    Ramesh Jha, a Brahmin from Darbhanga in Bihar , is also an employee at Sulabh. He came to Delhi seven years ago but had to struggle. "I worked at a factory in Wazirpur for two months. I was paid Rs 1,200 a month and I found it very difficult to survive." Ramesh then switched to Sulabh after a chance meeting with one of its employees and is currently employed at the second toilet complex inside the Azadpur mandi. Doesn't the nature of his work upset him? "I have never had second thoughts about working at Sulabh. Why should I? I am not stealing or committing any crime. I have to earn my living and I am doing that here with my hard work," he says.

    Not just in Delhi . In Benares, Mumbai, Chennai and Jammu the plight of the poor Brahmin is the same. Poverty obviously knows no caste.

    ReplyDelete
  42. The above copy pasted from

    http://www.hinduwisdom.info/Caste_System12.htm

    ReplyDelete
  43. " Do you think you will gain anything by becoming non-Hindus, he told them, do not think you will gain anything by abusing, Brahmins or burning their homes. “Who were Tilak, Gokhale, Ranade and Agarkar?” he asked them. They were Brahmins, they were in the forefront of every nationalist struggle, they served the cause of non-Brahmins at the greatest cost to themselves, it is in many cases through the work of Brahmins that the non-Brahmins have been made aware of their rights, he told them. It is the Brahmins who exert for the uplift of the depressed classes, more than anybody else. Lokmanya Tilak is revered by all classes for his services to the country. The late Mr. Gokhale, Mr. Ranade and the Hon’ble Mr. Sastri have all done splendid work for the regeneration of the backward classes. You complain of the Brahmin bureaucracy. But let us compare it with the British bureaucracy. The latter follow the ‘divide and rule policy’ and maintains its authority by the power of the sword, whereas, the Brahmins have never restored to the force of arms and they have established their superiority by sheer force of their intellect, self-sacrifice, and penance. I appeal to my non-Brahmins brethren not to hate the Brahmin and not to be victims of the snares of the bureaucracy…”Mahathma Gandhiji

    (source: The Collected Works of Mahatma Gandhi vol. 20 p. 144).

    http://www.hinduwisdom.info/Caste_System12.htm

    ReplyDelete
  44. Edward Alsworth Ross (in his book Principles of Sociology, 1920 Ed.[iii] and 1922 Ed.) gives a detailed description of rigid and strict caste system of Europe, which lasted till the beginning of the nineteenth century.

    Ross noted that Europe had a strict caste system during the Roman Empire period, however, it had not been brought to Europe by the Roman conquests, but it was a product of forces within the European society (Ross, 1922, p. 322). Thus the Europeans of the "Middle Ages lived in their caste rather than in their people… Something of this spirit has lived on in Poland."

    "The tendency of the later empire was to stereotype society by compelling men to follow the occupation of their fathers, and preventing a free circulation among different callings and grades of life. The man who brought the grain of Africa to the public stores of Ostia, the labour who made it into loaves for distribution, the butchers who brought pigs from Samnium, Lucania or Bruttium, the purveyors of wine and oil, the men who fed the furnaces of the public baths, were bound to their calling from one generation to another… Every avenue of escape was closed… Men were not allowed to marry out of their guild… Not even a dispensation obtained by some means from the imperial chancery, not even the power of the Church could avail to break the bond of servitude."

    (Dill, p. 194, quoted by Ross, 1920, p. 322).[v]

    FROM http://www.hinduwisdom.info/Caste_System3.htm

    ReplyDelete
  45. "இந்துக்களிடையேயும் சமூகத் தீமைகள், தீங்கும் இருந்துவரவே செய்கின்றன. ஆனால் இவற்றில் ஓர் ஆறுதல் அளிக்கும் அம்சம் இருக்கிறது. அது என்ன?

    இந்துக்களில் சிலர் இத்தீமைகள் இருந்துவருவதை உணர்ந்துள்ளனர், தேர்ந்து தெளிந்துள்ளனர், சிலர் இவற்றை ஒழித்துக்கட்டுவதற்கு முன்னின்று பாடுபட்டும் வருகின்றனர்."

    Dr.B.R.AMBEDKAR

    ReplyDelete
  46. “நம்முடைய கருத்தை எதுவும் தடைசெய்யவோ, கட்டுப்படுத்தவோ கூடாது. பழைய காலங்களிலே கருத்துச் சுதந்திரம் எந்த அளவு இருந்தது என்பதற்கு நம்முடைய சாஸ்திரங்களே சாட்சி.

    நாஸ்திக வாதத்திற்கும் தத்துவ அந்தஸ்து கொடுத்து, அதை ஒரு a system of logic, a system of philosophy என்று வகுத்துக் கொடுத்திருக்கிறோம்.

    உலகத்திலேயே “லோகாயாத வாதம்” என்பதை நாம்தான் செய்திருக்கிறோம். அதைச் சொன்ன “ஜாபாலி” என்பவரும் ரிஷியாக நம்மால் அங்கீகரிக்கப் பட்டிருக்கிறார்.

    நம்முடைய உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம் ஆகியவற்றுக்கு வாக்கியங்கள் தோறும் உரை சொல்லுவார்கள்.

    அதற்கு ஒருவர் மறுப்புச் சொல்லுவார்.

    மறுப்புக்கு உரையாசிரியர் மறுபடியும் பதில் சொல்வார்.

    மறுப்புக்குப் “பூர்வபட்சம்” என்றும், அதற்கு அளிக்கப்படும் பதில் விளக்கத்திற்கு “சித்தாந்தம்” என்றும் பெயர்.

    சூத்திரத்திலே என்ன சந்தேகங்கள் வரும், அதை எப்படி விளக்க வேண்டும் என்று சூத்திர பாஷ்யத்திலேயே கூறுவார்கள்.

    இது நம் ஹிந்துப் பண்பாட்டில் உள்ள சிந்தனா சுதந்திரம்.

    எனவே, சிந்தனா சுதந்திரம் இல்லாமல் எந்த அமைப்பும் சரிவராது. சிந்தனா சுதந்திரம் இல்லாமல் ஒரு அமைப்பு வந்தால், அது சிறிது காலம் நன்றாக இருப்பது போலத் தெரியும். பின்பு, அது உடைந்து போய் விடும்”

    Swami Chithbavananthar

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.