கரூர் பெருந்துயரம். மக்களின் கதறல்கள் கலங்க வைக்கின்றன. 'இந்தியர்களுக்கு தன்னை ஆளத் தெரியாது. காட்டுமிராண்டிகள்' என்ற சர்ச்சிலின் வாக்கினை இன்னும் நாம் உண்மையாக்குகிறோமோ என்ற ஐயம் எழுகிறது.
சுதந்திரப் போராட்ட காலத்தில் எப்போதெல்லாம் வன்முறை வெடிக்கிறதோ, மக்கள் கட்டுப்பாட்டை இழந்து வெறியாட்டம் ஆடுகிறார்களோ, அப்போதெல்லாம் காந்தி சுதந்திரப் போராட்டத்தை நிறுத்தினார். மக்களை ஜனநாயகத்திற்கு பழக்கப்படுத்துவது தான் முதல் கடமை என்று நினைத்தார்.
சர்ச்சில் சொன்னதில் உள்ள உண்மையை காந்தி உணர்ந்திருந்தார். வருடக்கணக்கில் கூட அவர் சுதந்திரப் போராட்டங்கள் ஏதும் செய்யாமல், மக்களை நல்வழிப்படுத்த அலைந்து திரிந்தார். அதனால் 'பிரிட்டாஷாரின் கைக்கூலி' என்று தீவிர எண்ணம் கொண்டோரால் பழிக்கப்பட்டார். அந்த வசைகளை பொருட்படுத்தாமல், ‘முதலில் சுதந்திரம் வாங்கி நாம் பதவியில் அமர்வோம்’ என்று நினைக்காமல் உழைத்ததால் இந்தியா எனும் தேசமும் காங்கிரஸ் எனும் பேரியக்கமும் உருவானது.
காந்தியிடம் இருந்து பெரியார் பிரிந்தார். ஆனால் காந்திய வழிமுறைகளை எடுத்துக்கொண்டார். பதவி பற்றி எண்ணாமல், மக்களுக்கு முதலில் விழிப்புணர்வை ஊட்டினார். வலுவான திராவிடக் கட்டமைப்பு உருவாக அடித்தளம் அமைத்தார்.
பெரியாரிடம் இருந்து அண்ணா பிரிந்தார். ஏற்கனவே பெரியாரால் அரசியல்படுத்தப்பட்ட கூட்டம் அண்ணா பின்னால் நின்றது. அண்ணாவுக்குப் பின் அதே கூட்டம் கலைஞர் பின்னால் நின்றது.
பின் எம்.ஜி.ஆர் அதே அரசியல்படுத்தப்பட்ட கூட்டத்தில் ஒரு பகுதியை தன்னுடன் கூட்டிக்கொண்டு, அதிமுக ஆரம்பித்தார். எம்.ஜி.ஆர் ஆரம்பித்தது புதுக்கட்சி அல்ல. ஏற்கனவே வலுவான கட்டமைப்பு இருந்த கட்சி தான் இரண்டாகப் பிரிந்தது.
புதிதாக கட்சி ஆரம்பிப்பவர்கள் குறைந்தது பத்து வருடங்களாவது கட்சி கட்டமைப்பை வளர்க்கவும், தொண்டர்களை நல்வழிப்படுத்தவும் உழைக்க வேண்டும்.
அல்லது கேப்டனின் வழியை பின்பற்றலாம். கேப்டன் கட்சி ஆரம்பித்தபோது, பண்ரொட்டி ராமச்சந்திரன் போன்ற பிற கட்சி சீனியர்களை தன் கட்சிக்குள் கொண்டுவந்தார். அவரது ரசிகர் மன்றக் கட்டமைப்பும் மூத்தோரின் அனுபவமும் சேர்ந்தபோது, அரசியல்கட்சியாக தேமுதிக உருமாறியது.
அரசியல் என்பது அதிகாரம் மட்டும் அல்ல. தன்னை நம்பும் மக்களின் வாழ்க்கையுடன் விளையாடும் விளையாட்டு.
இதைத் தான் விஜய் போன்ற புதுக்கட்சிகளின் தலைவர் முதல் தொண்டர்வரை மனதில் நிறுத்த வேண்டும்.
முதலில் உங்களை தகுதிப்படுத்திக்கொள்ளுங்கள். பதவி தேடி வரும்.
மேலும் வாசிக்க... "காந்தி முதல் விஜய் வரை..."
Showing posts with label காந்தி. Show all posts
Showing posts with label காந்தி. Show all posts
Sunday, September 28, 2025
Monday, October 3, 2011
காந்தி தான் இந்தியா.....இந்தியா தான் காந்தி!
’காந்தி ஜெயந்தி இப்படி அநியாயமாக ஞாயிற்றுக்கிழமை வந்திடுச்சே..அடுத்த வருசமாவது வேலை நாள்ல வரட்டும்’ என்ற வேண்டுதலுடன் காந்தி ஜெயந்தி சிறப்புப் பதிவைஆரம்பிப்போம்.
பள்ளியில் படிக்கும்போது சுதந்திரப்போராட்டம் பற்றிய பாடங்களைப் பார்த்துவிட்டு, எங்கள் ஊரில் இருந்த பெரியோர்களிடம் ‘நீங்களும் சொதந்திரத்துக்குப் போராடியிருக்கீங்களா?...வெள்ளைக்காரன் உங்களையும் அடிச்சிருக்கானா?” என்று கேட்டிருக்கிறேன். ‘சோத்துக்கே வழியைக் காணோம், இதுல சுதந்திரம் ஒரு கேடா?’ என்பதில் ஆரம்பித்து ‘வெள்ளைக்காரன் நல்லாத்தான ஆட்சி பண்ணான்..இவனுக தேவையில்லாம போராட்டம் பண்ணி அடி வாங்குனானுக’ என்பது வரை பலதரப்பட்ட பதில்களை சந்தித்திருக்கிறேன். இப்போது அதைப் பற்றித் தான் யோசித்துக்கொண்டிருக்கிறேன்.
நம் மக்களில் பெரும்பாலோனோர் ஏன் அப்படியிருந்தார்கள்? வறுமை மட்டுமே காரணமா? வறுமையையை விட அறியாமையே முக்கியக்காரணம் என்று தோன்றுகிறது. எங்கள் பகுதி ஒரு ஜமீனுக்கு உட்பட்டது. ஜமீன் ஆட்சிமுறை பற்றியும் நிறைய விசாரித்திருக்கிறேன். ‘ராசா ஏதாவது நல்லது பண்ணியிருக்காரா? பாதை, தண்ணி வசதி ஏற்படுத்தித் தந்திருக்கிறாரா?” என்பது போன்ற கேள்விகளுக்கு ‘ராசாகிட்டக் கேட்கலாம். விண்ணப்பிக்கலாம். அவர் மனசு வச்சுச் செஞ்சாச் சரி. இல்லேன்னா, நாமளே பண்ணிக்கிறது தான்’ என்பதே பதில்.
இந்தப் பதில்களுக்குப் பின்னே ஒளிந்திருப்பது தான் அப்போதைய யதார்த்த நிலை. ‘அரசு என்பது மக்களுக்குப் பாதுகாப்பு வழங்குவது. ஒரு பெரிய காவல்காரன். அதற்கு வரி கொடுப்பது நம் கடமை. அது சரியான முறையில் செலவளிக்கப்படும் என்பது நம்பிக்கை. அது அந்தப்புரத்தை அழகுபடுத்த செலவளிக்கப்பட்டாலும், எதிர்த்துக் கேள்வி கேட்கக்கூடாது. கேட்டால், ராஜத் துரோகம். நாம் வேலை பார்த்து, நாம் சாப்பிடுவோம்’ - இதுவே அப்போதைய மக்களின் மனநிலை.
அப்போதிருந்த அரசுகளும் ‘தன் நாடு’ என்பதைத் தாண்டி சிந்தித்ததேயில்லை. பூலித்தேவன் வெள்ளையருக்கெதிராகப் போரிட்டபோது, திருவாங்கூர் மன்னன் துணைக்கு வரவில்லை. கட்டபொம்மன் போரிட்டபோது, எட்டப்பன் துணைக்கு வரவில்லை. அது பொதுவான போர் என்ற புரிதலே இல்லை. அவர்களுக்குள் ஏற்கனவே எல்லைப்பிரச்சினைகள் இருந்தன. அதற்குப் பழிவாங்க, ஆங்கிலேயருக்குத் துணை போனார்கள். அவர்களைப் பொறுத்தவரை நாடு என்பது தனது ஆட்சிக்கு உட்பட்ட சிறு நிலப்பகுதி மட்டுமே. அவர்களுக்கு இந்தியா என்ற அகண்ட தேசம் பற்றி எந்தக் கருத்தும் இல்லை. காரணம், இந்தியாவே அப்போது இல்லை.
ஜனநாயகம் பற்றி ஏதுமறியாத விசுவாசமிக்க குடிமக்கள், தன் நிலப்பகுதியைக் காக்க அன்னியருக்கு ஆதரவளிக்கத் துணியும் மன்னர்கள் என்பதே அப்போதைய இந்திய தேச நிலைமை. அந்த சூழ்நிலையே வெள்ளையர் இந்தியாவை அடிமைப்படுத்த உதவியது. அப்போது இந்தியா முழுமைக்கும் பொதுவான விஷயம் என்றால் அது இந்து மதம் தான். இந்து மதம் நிறுவனப்படுத்தப்பட்ட மதமல்ல என்பதாலும், பழங்குடி நம்பிக்கைகளின் தொகுப்பு என்பதாலும், அது அரசியல்ரீதியாக மக்களை ஒருங்கிணைக்க முயலவில்லை.
அதனாலேயே 200 வருடங்களுக்கு மேல் இந்தியா ஆங்கிலேயரிடம் சலனமேயில்லாமல் அடிமைப்பட்டுக்கிடந்தது. ஒருங்கிணைந்த நிலப்பரப்பும், வரி வசூலை எளிமைப்படுத்த வேண்டிய அவசியமும் ’இந்தியா’ என்ற தேசத்தை ஆங்கிலேயர் கட்டியெழுப்ப தூண்டியது. அதன்பின் இந்தியா முழுமைக்குமான பொது விஷயங்களாக இந்து மதத்தை அடுத்து, ஆங்கிலேயரும் ஆனார்கள்.
ஆங்கிலேயர் பொருளாதாரக் காரணங்களுக்காக இந்த பரந்த நிலப்பரப்பை இணைத்திருந்தும், அரசியல்ரீதியாக மக்களைத் திரட்ட அது உதவவில்லை. மக்கள் பிளவுபட்டே கிடந்தார்கள். ஆரம்பக்காலங்களில் காங்கிரஸ் என்பது மேல்மட்ட படித்த கனவான்கள் கூடி சுதந்திரம் வாங்க ஆலோசிக்கும் அமைப்பாக மட்டுமே இருந்தது. மக்கள் எண்ணங்களில் உருவாகியிருக்காத இந்திய தேசத்திற்கு விடுதலை வாங்க, மக்களை கூவி அழைத்தார்கள். அது சிறு சலசலப்பை மட்டுமே ஏற்படுத்தியது. பெரிய அளவில் போராட்டங்கள் ஏதும் நடத்தப்படவில்லை. காரணம், போராட்டம் ஏதும் நடத்தி நம் மக்களுக்கு பழக்கம் ஏதும் இல்லை.
அந்தச் சூழ்நிலையிலேயே ஒரு ஒளி தோன்றியது. தென்னாப்பிரிக்காவில் வெற்றிகரமாக போராட்டத்தை நடத்திமுடித்துவிட்டு, இந்தியா வந்தது காந்தி எனும் காந்த ஒளி.
இந்தியா வந்த காந்தி தேசம் முழுக்க சுற்றுப்பயணம் செய்தார். பலதரப்பட்ட மக்களுடன் கலந்துரையாடினார். முடிவில் அவர் கண்டுகொண்ட உண்மையே மேலே விவரிக்கப்பட்ட ‘ஜனநாயகம் பற்றிய புரிதல் அற்ற மக்களும், உருவாகியிராத இந்தியாவும்.
25 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு பயணங்கள், பொதுக்கூட்டம், போராட்டங்கள் மூலம் இந்த மக்களை ஒன்றிணைத்து, ஒரே தேசமாக கட்டியெழுப்பினார் காந்தி. அப்படி மக்களின் மனங்கள் இணைக்கப்படாமல், அரசுரீதியாக அதிகார வர்க்கம் மட்டுமே இணைக்கப்பட்டிருந்தால், சுதந்திரத்திற்குப் பின் இந்தியா சிதறி இருக்கும்.
காந்தி இந்தியாவிற்கு என்ன செய்தார் என்ற கேள்விக்கு சரியான விடை காந்தி இந்தியா எனும் தேசத்தை உருவாக்கினார் என்பதே. மக்களே தேசம் என்ற அடிப்படைப் புரிதல் காந்தியிடம் இருந்தது. மக்கள் ஆதரவைப் பெறாத, மக்களிடம் வலுப்பெறாத ஒரு கருத்து நிலைக்காது என்பதை அவர் புரிந்து வைத்திருந்தார். எனவே தான் தொடர்ந்து இந்த மக்களிடம் பேசி ‘இந்தியா’ என்ற தேசத்தை அவர்கள் மனதில் விதைத்தார். இந்தியாவை இணைக்கும் மையச் சரடாக காந்தி ஆனார்.
சுதந்திரம் கொடுத்தபோது, ஆங்கிலேயர் இந்தியா துண்டு துண்டாகச் சிதறும் என்றே நம்பினர். ஆனால் அப்படிச் சிதறாமல் காத்தது காந்தியமே. அதனாலேயே பிரிவினை சக்திகளால் இன்றளவும் கடுமையாக வசை பாடப்படுகிறார் காந்தி.
காந்தி என்ற தனிப்பெருங்கருணை வலுவாக இருக்கும்வரை, இந்த தேசம் சிதறிவிடாது என்பதாலேயே அன்னிய நாட்டுக் கைக்கூலிகளான பிரிவினை சக்திகள் காந்தி அளவிற்கு அவதூறுகளால் வசபாடப்பட்ட தலைவர் வேறு யாரும் இல்லை. சர்ச்சில்கூட இந்த அளவிற்கு வசை பாடப்பட்டதில்லை.
அதற்கான அடிப்படைக் காரணம் இந்த தேசத்தின் மையக் கருத்தோட்டமாக காந்தியம் இருப்பது தான். காந்தி என்ற பிம்பத்தை உடைப்பதே, தங்கள் நோக்கத்தை நிறைவேற்றும் என்ற நம்பிக்கையில் பல்வேறு அமைப்புகளின் நிதிஉதவியுடன் இந்த வசைபாடல் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
அவர்கள் சொல்வது இரண்டே விஷயங்களைத் தான், முதலாவது ‘இந்தியா ஒரு தேசமே அல்ல. ஒட்டுப் போட்ட துணி’. இரண்டாவது ‘காந்தி நல்ல தலைவரே அல்ல. அயோக்கியர்’. உண்மையில் இரண்டும் ஒரே கருத்தே! இந்தியாவிற்கு எதிரான எல்லா பிரிவினை சக்திகளின் முதல் டார்கெட் ‘காந்தி’ தான். எது ஒரு தேசத்தின் அடிநாதமோ, அதைச் சிதைப்பதே அவர்களின் குறிக்கோள்.
ஆனாலும் உண்மை வலுவானது. தாமதமாகவேனும் உண்மை தன்னை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறது. அதுவே காந்தியையும் இந்தியாவையும் இன்று வரை காக்கின்றது, இனியும் காக்கும்!
போனஸ் :
சென்ற சுதந்திர தினத்தன்று எனது வலைப்பூவில் ஒரு சுதந்திரப் போராட்ட தியாகியின் டைரியில் இருந்து..என்ற பதிவு வெளியிடப்பட்டது தங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். அந்த டைரி விரிவான தகவல்களுடன் இங்கே கிடைக்கிறது : காந்தி ஆசிரமம் கிருஷ்ணன்
போனஸ் :
சென்ற சுதந்திர தினத்தன்று எனது வலைப்பூவில் ஒரு சுதந்திரப் போராட்ட தியாகியின் டைரியில் இருந்து..என்ற பதிவு வெளியிடப்பட்டது தங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். அந்த டைரி விரிவான தகவல்களுடன் இங்கே கிடைக்கிறது : காந்தி ஆசிரமம் கிருஷ்ணன்
Tuesday, September 27, 2011
உண்ணாவிரதம் : காந்தி -அன்னா ஹசாரே - மற்றும்............
சமீபகாலமாக உண்ணாவிரதம் பற்றி தீவிரமான விவாதங்கள் இணையத்தில் நடந்து வருகின்றன. இதற்கான பிள்ளையார் சுழி அன்னா ஹசாரேவால் போடப்பட்டது. தொடர்ந்து கூடங்குளம் உண்ணாவிரதமும் தமிழகத்தில் பரபரப்பை ஏற்றிவிட, உண்ணாவிரதம் பற்றி சில அடிப்படையான கேள்விகள் மேலெழுந்து வருகின்றன.
எனவே உண்ணாவிரதப் போராட்டம் பற்றிய சில அடிப்படைப் புரிதல்கள் நமக்கு அவசியம் ஆகின்றன. உண்ணாவிரதத்தை ஒரு போராட்ட வடிவாக மாற்றியவர், நமக்குக் கற்றுக்கொடுத்தவர் காந்தியடிகள் தான்.
சத்யாக்கிரகப் போராட்டத்தில் முக்கிய ஆயுதமாக உண்ணாவிரதத்தை அவர் பயன்படுத்தினார். அவரது வாழ்வில் மொத்தம் 17 முறை அவர் உண்ணாவிரதம் இருந்திருக்கிறார். அவர் முதன்முறையாக தென்னாப்பிரிக்க சத்யாக்கிரகத்தின்போதே, உண்ணாவிரதத்தை சோதித்துப் பார்த்தார். அவரது எல்லா வழிமுறைகளும் பலமுறை அவரால் சிறு அளவில் நடத்தப்ப்ட்டு, சோதிக்கப்பட்டு பின்னரே பெரிய அளவில் நடைமுறைப்படுத்தப்படும். அந்த வகையில் அவர் அவர் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு சில கட்டுப்பாடுகளை உருவாக்கினார்.
அவையாவன:
- யார் நமது அன்பிற்குரியவர்களோ, அவர்களுக்கு எதிராகவே / அவர்களை நோக்கியே உண்ணாவிரதம் நடத்தப்பட வேண்டும்.
- அந்த உண்ணாவிரதத்திற்கு வலுவான, குறிப்பிட்ட குறிக்கோள் இருக்க வேண்டும்.
- ஒருவரது சொந்த நோக்கங்களுக்காக / சுய நலத்திற்காக உண்ணாவிரதம் இருக்கக்கூடாது.
- மக்களால் முடியாத ஒன்றை செய்யும்படி, அந்த உண்ணாவிரதம் கோரக்கூடாது.
அவர் இவற்றின் அடிப்படையிலேயே உண்ணாவிரதம் இருந்தார். காந்தி தன் வாழ்நாளில் ஒருமுறைகூட ஆங்கிலேய அரசுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்ததில்லை. எப்போதெல்லாம் மக்கள் அஹிம்சாக் கொள்கையில் இருந்து திசை மாறுகிறார்களோ அப்போது இருந்தார். இந்து - முஸ்லிம்கள் மதக்கலவரத்தில் இறங்கியபோது, அதனை நிறுத்தக்கோரி உண்ணாவிரதம் இருந்தார். ஆம், அவர் மக்களை நோக்கியே உண்ணாவிரதம் இருந்தார். மக்களை ஒன்றுபடுத்தவே உண்ணாவிரதம் இருந்தார். ஏன் அவர் அரசுக்கு எதிரான ஆயுதமாக உண்ணாவிரத்தை பயன்படுத்தவில்லை?
கிறிஸ்துவத்தின் அடிப்படையிலேயே காந்தி உண்ணாவிரதத்தைக் கண்டடைந்தார். கிறிஸ்துவத்தின் தலைசிறந்த விஷயம் இயேசு கிறிஸ்துவின் தியாகம் தான். மக்களுக்காக அவர் சொன்ன நற்செய்திகள், அவர் சிலுவையில் அறையப்பட்ட பின்னரே மக்களிடம் சரியான முறையில் போய்ச்சேர்ந்தது. தன்னைப் பலியிட்டே கிறிஸ்துவத்தை நிலைநாட்டினார் இயேசு நாதர். ’தமக்காக பாரம் சுமந்த மனிதன் ‘ எனும் சித்திரமே பல லட்சக்கணக்கான மக்களின் மனசாட்சியுடன் பேசியது. காந்தி லண்டனில் படித்தபோது கிறிஸ்துவத்தின் மேல் ஆர்வம் கொண்டிருந்தார்.
அடிப்படையில் வைணவரான காந்திக்கு விரதம் என்பது பழக்கமான விஷயம். அது கொடுக்கும் மனவலிமையும் அவருக்கு நன்றாகவே தெரியும். இந்த இரண்டையும் இணைத்தே அவர் உண்ணாவிரதப்போராட்டத்தை வடிவமைத்தார். உண்ணாவிரதம் என்பது தனக்கு மனவலிமையூட்டும் அதே நேரத்தில் தன்னைச் சார்ந்தோரின் மனச்சாட்சியுடன் பேசும் என்பதை அவர் தீர்க்கமாக நம்பினார்.
அரசுக்கு மனசாட்சி கிடையாது. அரசு என்பது எப்போதும் இறுக்கமானது. அரசின் நடவடிக்கைகள் பொருளாதாரம், அந்நிய நாடுகளுடனான உறவு போன்ற சிக்கலான காரணிகளால் தீர்மானிக்கப்படுவது. சில நேரங்களில் மக்கள் விரோத நடவடிக்கையாகவும் அரசின் செயல்பாடுகள் அமைவதுண்டு. மொத்தத்தில் அரசு ஒரு இயந்திரத்தனமான அமைப்பு.
அதனுடன் போராடுவதற்காக உண்ணாவிரதத்தை கையில் எடுத்தால் அது ஆபத்தாகவே முடியும். காந்தி அத்தகைய ஆபத்தை தன் தொண்டர்களுக்கு வழங்க விரும்பவில்லை. அப்படியென்றால் உண்ணாவிரதத்தால் அரசை ஒன்றுமே செய்ய முடியாதா என்றால், நேரடியாக ஒன்றுமே செய்யமுடியாது என்பதே உண்மை. அதனால் மாபெரும் பயன் ஒன்று உண்டு.
ஆம், மேலே சொன்னபடி அது மக்களின் மனசாட்சியுடன் பேசும். கோரிக்கையில் நியாயம் இருந்தால், அந்தக் கோரிக்கை சமூகத்திற்கு நன்மை பயக்கும் என்று இந்தச் சமூகம் நம்பினால் மக்களை ஓரணியில் திரட்டும் வல்லமை உண்ணாவிரதத்திற்கு உண்டு. உண்ணாவிரதத்தால் முடியும் ஆகச்சிறந்த காரியம் அது மட்டுமே.
ஆம், மேலே சொன்னபடி அது மக்களின் மனசாட்சியுடன் பேசும். கோரிக்கையில் நியாயம் இருந்தால், அந்தக் கோரிக்கை சமூகத்திற்கு நன்மை பயக்கும் என்று இந்தச் சமூகம் நம்பினால் மக்களை ஓரணியில் திரட்டும் வல்லமை உண்ணாவிரதத்திற்கு உண்டு. உண்ணாவிரதத்தால் முடியும் ஆகச்சிறந்த காரியம் அது மட்டுமே.
![]() |
| ஐரோம் ஷர்மிளா |
மக்களைத் திரட்டவும், மக்களின் மனசாட்சியை தட்டியெழுப்பவும் அது உதவும். ஜனநாயக அரசு எப்போதும் எண்ணிக்கைக்கு பயப்படும். மக்கள் எந்தவொரு விஷயத்திற்காய் கூடினாலும், அரசு இறங்கி வரும். சமூக ஒழுங்கு கெட்டுவிடக்கூடாதென்பதாலும், ஓட்டுக்காகவுமே ஜனநாயக அரசு இறங்கிவரும்.
இந்த அடிப்படையிலேயே நாம் நமக்குத் தெரிந்து நடந்த உண்ணாவிரதங்களை பார்க்க வேண்டும்.
அன்னா ஹசாரே உண்ணாவிரதம் ஊழலுக்கு எதிரானது. இந்திய மக்கள் ஊழலைக் கண்டு மனம் வெறுத்த நிலையில் இருக்கிறார்கள். ஊழலே இந்தியாவின் மிகப்பெரிய எதிரி என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. குவிக்க முடியா எதிர்ப்பு சக்தியாக ஊழலின் மீதான கோபம் இந்தியாவெங்கும் விரவிக்கிடக்கிறது. அன்னா ஹசாரே செய்தது, அந்த கோபத்தை ஒருங்கிணைத்தது தான். இந்தியத் தலைநகரில் பல்லாயிரக்கணக்கானோர் கூடுவது என்பது அரசிற்கு நிச்சயம் தலைவலியான விஷயம்.
மீடியாக்களின் ஆதரவுடன் நடந்த அந்தப் போராட்டத்தை உடனே மேலும் பரவிடாமல் தடுக்க வேண்டிய கட்டாயம் அரசிற்கு வந்தது. எனவே அரசும் இறங்கி வந்தது. ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய நிகழ்வாக அது அமைந்தது. அன்னா ஹசாரே போன்ற வயதான பெரியவர் நினைத்தால்கூட, இந்திய அளவில் மக்களை அரசுக்கு எதிராக திருப்பிவிட முடியும் என்று அரசுக்கு உணர்த்தியதே அந்தப் போராட்டத்தின் வெற்றி. உண்ணாவிரதப் போராட்டத்தால் அவ்வளவு தான் முடியும்.
வெற்றியடையாத போராட்டங்களாக ஐரோம் ஷர்மிளாவின் போராட்டமும், திலீபனின் போராட்டமும் பலரால்குறிப்பிடப்படுகின்றன.
ஐரோம் ஷர்மிளா என்ற மாபெரும் போராளி 25 வருடங்களாக, மணிப்பூரில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அரசு அவருக்கு வலுக்கட்டாயமாக குளுக்கோஸ் ஏற்றிவருகிறது. மணிப்பூரில் இந்திய ராணுவக் கொடுமைகளை எதிர்த்தும், இந்திய ராணுவம் விலக்கிக்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் போராடுகின்றார். ஆனால் மத்திய அரசு அதனைக் கண்டுகொள்ளவே இல்லை. அதற்கான முக்கியக் காரணம் மணிப்பூர் தாண்டி, வெளியே அந்தப் போராட்டம் மக்களுக்குத் தெரியவில்லை. அதன் நியாயங்கள் இங்கே சொல்லப்படவில்லை. அந்த நியாயங்களால் பிற மாநில மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை - என்ற சுயநலச் சிந்தனையும் ஐரோம் ஷர்மிளாவின் போராட்டம் வெற்றி பெறாமைக்கு முக்கியக் காரணம். தனக்கு பலன் இல்லாத விஷயங்களுக்கு போராட மக்கள் முன்வர மாட்டார்கள் என்பதே யதார்த்தம்.
ஈழத் தியாக தீபம் திலீபனின் உண்ணாவிரதப் போராட்டம் ஈழ வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வு. உண்ணாவிரதப் போராட்டத்தினால் ஆகக்கூடிய காரியம், மக்களை அந்த நோக்கத்திற்காக ஒன்றுதிரட்டுவதே. திலீபனின் தியாகம் அந்த வகையில் வெற்றி பெற்றது என்றே சொல்ல வேண்டும்.
அந்த 12 நாட்களும் நல்லூர்க் கந்தசாமிக் கோயிலில் பல்லாயிரக்கணக்கான மக்களை ஒன்றுகூட வைத்தது அந்தப் போராட்டம். புலிகளின் வரலாற்றில் முக்கிய நிகழ்வாக அமைந்தது திலீபனின் தியாகம். ஈழப்போராட்டம் பயங்கரவாதப் போராட்டம் அல்ல என்பதற்கு சாட்சியாக திலீபன் ஆனார்.ஆனாலும் ஏன் அந்த உயிர்த் தியாகம் காந்தி தேசத்தால் கண்டுகொள்ளப்படவில்லை என்ற கேள்வியும் நம்மிடையே எழுகிறது.
அந்த 12 நாட்களும் நல்லூர்க் கந்தசாமிக் கோயிலில் பல்லாயிரக்கணக்கான மக்களை ஒன்றுகூட வைத்தது அந்தப் போராட்டம். புலிகளின் வரலாற்றில் முக்கிய நிகழ்வாக அமைந்தது திலீபனின் தியாகம். ஈழப்போராட்டம் பயங்கரவாதப் போராட்டம் அல்ல என்பதற்கு சாட்சியாக திலீபன் ஆனார்.ஆனாலும் ஏன் அந்த உயிர்த் தியாகம் காந்தி தேசத்தால் கண்டுகொள்ளப்படவில்லை என்ற கேள்வியும் நம்மிடையே எழுகிறது.
தேசம் என்பது மக்கள் தானேயொழிய அரசு அல்ல. எப்போதும் இந்திய அரசு காந்திய அரசாக இருந்ததில்லை. சுதந்திரம் வாங்கிய நாள்முதலே ஆட்சியாளர்களுக்கு காந்தி வேண்டாத பொருளாகிப் போனார். அவர் அரசுக்குச் சொன்ன யோசனைகள் யாவும் பெரும் இம்சைகளாகவே இந்திய ஆட்சியாளர்களுக்குத் தோன்றியது. காந்தியம் வாழ்வது மக்களிடையே தானேயொழிய அரசிடம் அல்ல.
ஒரு அரசு தன் மக்கள் ஒன்றுகூடிப் போராடினால் மட்டுமே பயப்படும். ஈழத்தில் நடந்த போராட்டம் ஈழ மக்களை ஒன்று திரட்டியும் இந்திய அரசால் கவனிக்கப்படாமல் போனதற்குக் காரணம், ஈழ மக்கள் ஒன்றுதிரளுதல் அன்னிய அரசான இந்திய அரசிற்கு ஒரு பொருட்டல்ல என்பதால் தான்.
அன்னியரான ஆங்கிலேயருக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்திருந்தால், காந்தியும் அதே நிலையையே அடைந்திருப்பார். அதனாலேயே உண்ணாவிரதப் போராட்டத்திற்கு முதல் கட்டுப்பாடாக ‘ யார் நமது அன்பிற்குரியவர்களோ, அவர்களுக்கு எதிராகவே உண்ணாவிரதம் நடத்தப்பட வேண்டும்’ என்பதை வைத்தார்.
திலீபனின் போராட்டம், தமிழர்களின் மனசாட்சியுடன் பேசியது, இன்றும் எதிர்கொள்ள முடியாத துக்கமாக அது உள்ளது. தியாகங்களின் சிறப்பே காலம் கடந்த பின்னும், வீரியம் குறையாமல் மக்களின் நினைவில் அது எழுப்பும் உரையாடல் தான். அந்த வகையில் என்றும் திலீபன் நம் மக்களுடன் பேசிக்கொண்டே தான் இருப்பார்.
அன்னியரான ஆங்கிலேயருக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்திருந்தால், காந்தியும் அதே நிலையையே அடைந்திருப்பார். அதனாலேயே உண்ணாவிரதப் போராட்டத்திற்கு முதல் கட்டுப்பாடாக ‘ யார் நமது அன்பிற்குரியவர்களோ, அவர்களுக்கு எதிராகவே உண்ணாவிரதம் நடத்தப்பட வேண்டும்’ என்பதை வைத்தார்.
திலீபனின் போராட்டம், தமிழர்களின் மனசாட்சியுடன் பேசியது, இன்றும் எதிர்கொள்ள முடியாத துக்கமாக அது உள்ளது. தியாகங்களின் சிறப்பே காலம் கடந்த பின்னும், வீரியம் குறையாமல் மக்களின் நினைவில் அது எழுப்பும் உரையாடல் தான். அந்த வகையில் என்றும் திலீபன் நம் மக்களுடன் பேசிக்கொண்டே தான் இருப்பார்.
இந்திய அளவிலும் உண்ணாவிரதப் போராட்டங்கள் நடத்தப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. அவற்றின் நோக்கம் சக மக்களின் ஆதரவைப் பெறுவதும், அவர்களையும் தன் போராட்டத்தில் பங்கெடுக்க வைப்பதாகவுமே இருக்க வேண்டும்.
கூடங்குளத்தில் நம் மக்கள் உண்ணாவிரதம் இருக்கும்போது, நம் பிரதமர் அதைக் கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் ஐ.நா.சபை மீட்டிங்கிற்கு கிளம்பியதை நாம் கவனத்தில் கொள்வது அவசியம். மாநில அரசு இதில் தலையிட்டதற்குக் காரணம் போராட்டத்திற்குப் பெருகும் ஆதரவு தென்மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கலாம் என்ற அச்சமே.
நம் அன்பிற்குரியவராக மன்மோகன்சிங் இல்லாத நிலையில், மன்மோகன்சிங்கின் அன்பிற்குரியவர்களாக நாமும் இல்லாத நிலையில் அவரை நோக்கி உண்ணாவிரதம் இருப்பது நேரடியாக எவ்விதப் பலனையும் தராது என்பதே யதார்த்தம்.
முத்தாய்ப்பாக எப்போதெல்லாம் உண்ணாவிரதம் இருக்கலாம் என்று காந்தி சொன்னார் என்றால்.....
- நம் அன்பிற்குரியவர்கள் ஏதேனும் ஒரு காரியத்தில் நம்மை ஏமாற்றிவிட்ட நிலையில், நம் ஆழ்ந்த வருத்தத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்த.
- தன்னைச் சார்ந்த மக்கள் / தொண்டர்கள், தவறான காரியத்தில் ஏதோவொரு வேகத்தில் இறங்கிவிடும்போது, பரிகாரம் தேட / அவர்களை நல்வழிக்குத் திருப்ப.
- மக்களின் மனசாட்சியுடன் பேசுவதற்கான கடைசி ஆயுதமாக பயன்படுத்த.
- சண்டையிட்டுக் கொள்ளும் தனது இருதரப்பு மக்களை ஒன்றுபடுத்த.
ஆம், மக்களை நோக்கி நடத்தப்படுவதே காந்திய உண்ணாவிரதம்.
தியாக தீபம் திலீபனுக்கு எம் வீர வணக்கங்கள்!
Monday, September 12, 2011
காந்தி, நேரு, பாரதியார் எல்லாம் அயோக்கியர்கள் தானா?
இணையத்தில் அவ்வப்போது சமபந்தம் இல்லாமல் எதையாவது தேடிப் படிப்பது என் வழக்கம். இந்த முறை பாரதியார் என்று போட்டு, தேடிக்கொண்டிருந்தேன். ஏராளமான வசைகள் வந்து விழுந்தன. அவற்றைப் பார்த்து நொந்து போய், வேறு யாரைப் பற்றியாவது படிப்போம் என்று காந்தியைத் தேடினால், நிலைமை இன்னும் மோசமாகி விட்டது. ’ஏன் இப்படி..’ என்று யோசித்துக்கொண்டே, வேண்டாத ஆர்வத்துடன் வரிசையாக நமது தேசத்தலைவர்கள் நேருவில் ஆரம்பித்து பெரியார் வரை தேடினால், புகழ்ச்சிக்கு இணையாக வசை மழை!
பொதுவாக இந்த மாதிரியான கட்டுரைகள் எழுத கொள்கை சார்ந்த நியாயங்கள் சொல்லப்படுகின்றன. ஆனால் என்னுடைய கவனம் எல்லாம் பின்னூட்டங்களின் மீதே சென்றது. இதில் இன்னும் ஆச்சரியப்படத்தக்க விஷயம் என்னவென்றால், சிலர் ஏறக்குறைய எல்லா வசைப் பதிவுகளுக்கும் என்று ஆமாம்..சாமி போட்டிருந்தது தான். பொதுவாக பாரதியை திட்டுவோர், பெரியாரை திட்டுவதில்லை. பெரியாரைத் திட்டுவோர் காந்தியைத் திட்டுவதில்லை என திட்டுவதிலும் ஒரு கொள்கை இருக்கும். ஆனால் வெறும் வம்பளப்பாக, திண்ணைப் பேச்சாக இந்த வசைகள், தமிழ் இணைய உலகில் கொட்டிக்கிடக்கின்றன.
வருங்காலத்தில் இணையமே முக்கிய ஊடகமாக, தகவல் களஞ்சியமாக ஆகும்போது, நாம் நம் சந்ததிகளுக்கு இந்த வசைகளைத் தான் தரப்போகின்றோமா என்று யோசிக்க ஆரம்பித்தேன். பொதுவாகவே அதிக ஹிட்ஸ் வாங்க, ஏதேனும் ஒரு தலைவரை திட்டினால் போதும் என்பதே இங்குள்ள நிலைமை.
ஹிட்ஸ் விஷயத்தில் தவறு பதிவர் பக்கம் என்று குறுகிய நோக்கில் நான் எப்போதும் நினைப்பதில்லை. ஹிட்ஸ் என்பது மக்கள் எந்த விஷயத்தின் மேல் ஆர்வமாக உள்ளார்கள் என்று அறிய உதவும் அற்புதமான விஷயம். எனவே தேசத்தலைவர்களை திட்டும் பதிவுகள், அதிக ஹிட்ஸ் வாங்குகிறதென்றால், நம் மக்கள் அதன்மீது விருப்பமாக இருக்கிறார்கள் என்றே அர்த்தம் ஆகின்றது. அப்படி அந்த மக்களுக்கு, இணைய வாசகர்களுக்கு நம் தேசத்திற்காக பாடுபட்ட தலைவர்கள் மேல் என்ன கடுப்பு என்று ஆச்சரியமாக உள்ளது.
இதைப் பற்றி யோசிக்கையில் என்னுடன் கோவையில் வேலை பார்த்த பெண்ணின் ஞாபகம் வந்தது. வள்ளி என்று பெயர் வைத்துக்கொள்வோம். (அய்யா, இது புனை பெயருங்!). ஒருமுறை எதற்கோ காந்தி பற்றி பேச்சு வந்தபோது, அவர் திடீரென ‘ஐ ஹேட் காந்தி’ என்றார். எனக்கு இது மாதிரியான காந்தி பற்றிய எதிர்ப்பு சொற்கள் பழக்கமானவை என்பதால், நிதானமாக ‘ஏன்மா அப்படி?’ என்றேன். அதற்கு அவர் சொன்ன பதில் தான் அட்டகாசமாய் இருந்தது. ‘ஐ டோண்ட் நோ..பட் சம்திங் இஸ் ராங் வித் தட் பெர்சன்..ஐ டோண்ட் லைக் ஹிம்’ என்று ஆவேசமாக மீண்டும் சொன்னார்.
ஒருவரை வெறுக்க ஏதேனும் காரணம் இருக்க வேண்டும் என்பதே பொதுவான விதி. ஆனால் எவ்விதக் காரணமும் இல்லாமல் நம் தேசத் தலைவர்கள் மீது ஏன் இப்படி வெறுப்பு என்று யோசித்தவாறே, ‘எப்போதெல்லாம் உனக்கு காந்தி பற்றி வெறுப்பு/கோபம் வருகிறது?’ என்றேன். அந்தப் பெண்ணும் அசராமல் ‘ எப்போதெல்லாம் காந்தி பற்றி கேள்விப்படுகிறேனோ, அப்போதெல்லாம் ’ என்று சொன்னார்.
‘அப்படி என்னம்மா கேள்விப்படுகிறாய்?” என்று கேட்டால் ‘அவரு நல்லவரு..வல்லவரு..போராடுனாரு-ன்னு அதே பாட்டு. சின்ன வயசுல இருந்து கேட்டுச் சலிச்ச அதே பல்லவி. காந்தி என்னெல்லாம் அயோக்கியத் தனம் பண்ணியிருக்காரு தெரியுமா?’ என்றார்.
‘தெரியாதே..சொல்லும்மா’ என்றேன்.
‘பகத்சிங் தூக்கில் தொங்க நாள் குறிச்சதே காந்தி தான். அவரை விடுதலை செய்ய சின்ன துறும்பைக்கூட அவர் தூக்கிப்போடலை’ என்றார்.
இதுவும் நமக்கு பழக்கம் என்பதால் ‘இல்லையம்மா..அவர் கடிதம் எல்லாம் எழுதி மன்றாடிக் கேட்டுக்கொண்டார்..ஆனாலும் பிரிட்டிஷார் அதைக் கேட்கவில்லை’ என்றேன். அதை அந்தப் பெண் நம்பவேயில்லை. ‘இல்லை சார், காந்தி பற்றி உங்களுக்கு சரியாத் தெரியலை’ என்று தீர்ப்பு சொல்லி விவாதத்தை முடித்துக் கொண்டார். (அந்தக் கடிதம் இப்போது இங்கே கிடைக்கிறது)
இப்போது இந்த பெரும்பாலான படித்த சமூகத்தினர் நம் தேசத்தலைவர்கள் மீது, இத்தகைய அருவறுப்பையே கொண்டிருக்கிறார்கள். அதன் வெளிப்படையான ஆதாரமே, இணையத்தில் கட்டுரைகளிலும், பின்னூட்டத்திலும் குவியும் வசைகள். அந்தப் பெண்ணும் இப்போது எங்காவது ஆவேசமாக பின்னூட்டம் போட்டுக்கொண்டிருக்கலாம். இந்த மனநிலைக்கான காரணம் என்ன என்று பல நாட்கள் யோசித்திருக்கிறேன். அப்படி என்ன தவறு, நம் தலைவர்கள் செய்து விட்டார்கள் என்று குழம்பி இருக்கின்றேன்.
காந்தி போன்றோர் தீவிரமாக தேசவிடுதலைக்குப் போராடிக்கொண்டிருந்த நேரத்தில் நாம் (அதாவது நம் தாத்தா/பாட்டனார்) என்ன செய்துகொண்டிருந்தோம் என்ற கேள்வியை முதலில் கேட்டுக்கொள்வது நம்மை சாந்தப்படுத்தும். எதுவுமெ செய்யாமல் இப்போது போலவே அப்போதும் ‘தானுண்டு..தன் வேலையுண்டு’ என்று தான் இருந்தோமா என்று விசாரித்து அறிந்து கொள்வது இன்னும் அமைதியைக் கொடுக்கும். அந்த அமைதியோடு, கீழ்க்கண்ட இரு விஷயங்கள் பற்றி, யோசிக்கலாம்...
முதலாவது காரணம்...பதின்ம வயது மனநிலை (டீன் ஏஜ் மெண்டாலிட்டி!)....
நமக்கு சிறுவயது முதலே பல விஷயங்கள் சொல்லிக்கொடுக்கப்படுகின்றன. சக்தி மிகுந்த கடவுள், அக்கறை மிகுந்த தன்னலமற்ற தலைவர்கள் என்று பல விஷயங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் நமக்கு போதிக்கப்படுகின்றன. நாம் பதின்ம வயதில் நுழைந்த உடன், நாம் நமது முந்தைய தலைமுறையை விட புத்திசாலிகள் என்ற முடிவுக்கு வருகின்றோம்.
அந்த முன்முடிவுடன் அதுவரை போதிக்கப்பட்டவைகளை மூர்க்கமாக வெறுக்கத் தொடங்குகிறோம். ‘அவர்களுக்கு ஒன்றுமே தெரியவில்லை..நாம் படித்தவர்கள்..நமக்கு எல்லாம் தெரிகிறது’ என்ற முடிவுக்கு வருகின்றோம். பதின்ம வயதில் கடவுள்-மறுப்புக் கொள்கைக்குள் போகாமல், அதைத் தாண்டுபவர்கள் வெகு குறைவே.
நம் ஈகோவின் காரணமாக பதில் அளிக்க முடியாக் கேள்விகளை பெரியோரிடம் கேட்கின்றோம். ஏன் பதில் அளிக்க முடியாக் கேள்விகள் என்றால், அவற்றை வார்த்தையால் விளங்க வைக்க முடியாது என்பதால் தான். அந்தப் பருவத்தில் எதெல்லாம் போற்றப்ப்டுகின்றனவோ, அதையெல்லாம் எதிர்ப்பதே அறிவுஜீவித்தனம் என்ற ‘தெளிவுக்கு’ வருகின்றோம். பலரும் பதின்ம வயது தாண்டியதும், மெதுவாக உண்மையை உணர்கின்றனர். தங்கள் அபத்தமான ஆட்டத்தை நினைத்து வெட்க்கப்படுகிறார்கள். எனவே தன் பிள்ளைகளிடம் அதே நல்ல விஷயங்களை போதிக்கிறார்கள். அந்தப் பிள்ளைகளும் ஒருநாள் ‘போப்பா..உனக்கு ஒன்னுமே தெரியலை’ என்று சொல்லும் என்றும் நினைவில் கொள்கிறார்கள்.
அப்படி பதின்ம வயது மனநிலையை தாண்டும் பாக்கியம் எல்லோருக்கும் கிடைத்து விடுவதில்லை. அறிந்தும், அறியாமலும் நமக்குள் அந்த மனநிலை இருந்துகொண்டே இருக்கின்றது. அதன் வெளிப்பாடே இத்தகைய ஏளன வசைச் சொற்களாக இங்கே கொட்டப்படுகின்றது.
இரண்டாவது முக்கியக் காரணம்...
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவனை வானுறையும் தெய்வத்துல் வைக்கும் நம் பண்பாட்டை விட்டு, நாம் விலகிச் செல்லும் துர்ப்பாக்கிய நிலை.
பொதுவாகவே சிறு உதவி செய்தோரைக் கூட ‘தெய்வம் மாதிரி வந்து உதவி செஞ்சாருய்யா’ என்று சொல்வது நம் மரபு. ’ஒவ்வொரு உயிரிலும் உறைகிறான் இறைவன் ‘ எனும் இந்து மத தத்துவத்தின் எளிமையான வெளிப்பாடு அது. இந்த நாகரீக உலகில், மீடியாக்களின் வெளிச்சத்தில் பல சுவாமிகளின் முகத்திரை கிழிக்கப்படுகின்றது. மீடியாக்களுக்கு ஒருவர் நல்ல துறவியாக இருப்பது செய்தியே அல்ல, ஒருவன் போலிச்சாமியாராக இருப்பதே சர்க்குலேசன் கூட்டும் செய்தி. மீடியா எப்போதும் நல்ல விஷயங்களை முன் நிறுத்துவதில்லை. (அவ்வாறு போலிச்சாமியார்கள் முகத்திரை கிழிக்கப்படுவதும் வரவேற்கத் தக்கதே..இங்கே அதன் மறைமுக விளைவுகள் மட்டுமே பேசப்படுகின்றன)
இந்து மதத்தின் ஆணிவேரை அழிக்கும் சக்திகளாக இந்த போலிச்சாமியார்கள் உருவெடுத்து வருகிறார்கள். தன்னிலும், பிற உயிரிலும் இறையைக் காணும் இந்து மதக் கோட்பாடு, மிக மோசமாக அடிவாங்கும் நேரம் இது. தவிர்க்க இயலா பேரவலமாக இது நடந்துகொண்டே உள்ளது. இந்துக்களே இதை நடத்தியும் வருகிறார்கள்.
மேலும் நமது தற்போதைய அரசியல்வாதிகளும் போலிச்சாமியார்களுக்கு இணையாக நம் நம்பிக்கையை சிதைத்து வருகிறார்கள்.
எனவே யாரெல்லாம் ஓர் அளவிற்கு மேல் போற்றப்படுகிறார்களோ, அவர்களை எல்லாம் சந்தேகப்பட வேண்டும் என்ற துரதிர்ஷ்டமான மனநிலைக்கு பெருவாரியான மக்கள், குறிப்பாக படித்த தலைமுறையினர் வந்திருக்கும் நேரம் இது.
எனவே இந்தத் தாக்கம், நம் தலைவர்கள் மீதும் விழுகின்றது. எப்போதெல்லாம் ஒரு தலைவரைப் பற்றிய புகழுரையைக் கேட்கிறோமோ, அப்போதெல்லாம் நாம் எரிச்சலுக்கு ஆளாகின்றோம். இப்படி ஒரு மனநிலை ஒரு சமுகத்திற்கு நல்லதல்ல. ஆனாலும் நாம் அந்த நிலையிலேயே இருக்கின்றோம்.
அப்படியென்றால், நம் தலைவர்கள் எல்லோரும் நல்லவர்கள் மட்டும் தானா, அவர்களிடம் குறைகள் ஏதும் இல்லையா என்று கேட்டால், அது இருக்கவே செய்கிறது. நம்மிடம் இருப்பது போல். அவர்கள் காலத்தில் வாழ்ந்த நம் முன்னோர்களிடம் இருந்தது போல், அவர்களிடமும் இருக்கவே செய்கிறது. ஆனால் அது நாம் அவர்களை இந்த அளவிற்கு வெறுத்து ஒதுக்கும் அளவிற்கா இருக்கிறது என்றால் நிச்சயமாக இல்லை எனலாம்.
எப்படி கடுமையான ஜாதீயக் காழ்ப்புணர்ச்சியுடன் வாழ்ந்த நம் முன்னோர்களை முற்றிலும் ஒதுக்கி விடாமல், ‘அன்போடு’ அவர்களின் நல்ல பக்கங்களை மட்டும் பார்த்து பெருமிதம் கொள்கிறோமே, அதையே நம் தலைவர்கள் விஷயத்திலும் நாம் ஏன் செய்வதில்லை. ஒருவரை வெறுப்பதா, விரும்புவதா என்று எதை வைத்து முடிவு செய்வது என்றால், அய்யன் வள்ளுவன் தான் உங்களுக்கு வழி காட்ட வேண்டும் :
குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல் - (504)
Monday, August 15, 2011
ஒரு சுதந்திரப் போராட்ட தியாகியின் டைரியில் இருந்து...(சுதந்திர தின ஸ்பெஷல்)
எனக்கு இன்று திரு. முத்துக்கிருஷ்ணன் (லால்குடி) அவர்களிடம் இருந்து சுதந்திர தின வாழ்த்துச் செய்தி வந்து சேர்ந்தது. அதனைக் கண்டு மிகவும் மகிழ்ந்தேன். காரணம், அன்னாரின் தந்தையார் ஒரு காந்தியவாதி என்பதும், சுதந்திரப் போராட்டத் தியாகி என்பதுமே. அடிப்படையில் காந்திய வாதியான எனக்கு சுதந்திர தினப் போனஸாக அவரது தந்தையின் போராட்ட அனுபவம் பற்றிய நாட்குறிப்பை அனுப்பி இருந்தார்கள்.
அந்தப் போராட்ட நாட்களில் சாதிமத வேறுபாடு இன்றி அனைவரும் ஒற்றுமையாகக் கட்டுப் பாட்டுடன் காந்தியடிகளின் தலைமையின் கீழ் எவ்வாறு இயங்கினர் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு. அதுவே நமக்கு வழிகாட்டியும் ஆகும்..எனது தள வாசகர்களும் அறியும் வண்ணம் ஐயாவின் அனுமதியுடன் இங்கே அதைப் பிரசுரிக்கின்றேன்...
அந்தப் போராட்ட நாட்களில் சாதிமத வேறுபாடு இன்றி அனைவரும் ஒற்றுமையாகக் கட்டுப் பாட்டுடன் காந்தியடிகளின் தலைமையின் கீழ் எவ்வாறு இயங்கினர் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு. அதுவே நமக்கு வழிகாட்டியும் ஆகும்..எனது தள வாசகர்களும் அறியும் வண்ணம் ஐயாவின் அனுமதியுடன் இங்கே அதைப் பிரசுரிக்கின்றேன்...
திரு.காந்திஆசிரமம் கிருஷ்ணன் அவர்களின் நாட்குறிப்பில் இருந்து...
நான் காந்தி ஆசிரமத்தில் சேர முடிவு செய்ததே அதன் மூலம் சத்தியாக் கிரகம் செய்து சிறை செல்வது என்ற எண்ணத்தில்தான். உப்பு சத்தியாக்கிரக காலத்தில் 1930 - 31 இல் எனக்கு சிறை செல்லும் வாய்ப்பு கிடைக்கவில்லை. 1932ம் வருட இயக்கத்தில் ஆங்காங்கே பலர் சிறை சென்று கொண்டிருந்தனர். ஆசிரம ஊழியர்கள் சிலரும் சிறை சென்று விட்டனர்.
திரு.கே.மாரப்ப கவுண்டர் நாமக்கல்லில் காந்தி ஆசிரம கதர் விற்பனை ஏஜன்டாக இருந்தார். அவருடன்தான் நான் தங்கியிருந்தேன். இயக்கத்தை மேற்கொண்டு எப்படித் தொடர்ந்து நடத்துவது என்று அங்குள்ள தேச பக்தர்கள் ஆலோசித்து வந்தார்கள். நாமக்கல் மாரியம்மன் கோவிலுக்கு எதிரே காங்கிரஸ் ஆபீஸ். அங்கு தினமும் கூடி ஆலோசித்தோம்.
ஒரு குறிப்பிட்ட நாளில் சில பேர் சேர்ந்து தேசியப் பாடல்களைப் பாடிக் கொண்டு ஊர்வலமாகச் சென்று கடை வீதியில் அன்னிய துணிக்கடைகளின் முன் சாத்விக மறியல் செய்வதெனத் தீர்மானித்து, மாவட்ட கலெக்டர், போலீஸ் உயர் அதிகாரி, நாமக்கல் இன்ஸ்பெக்டர் முதலியோருக்கு தேதி, இடம், நேரம் எல்லாம் குறிப்பிட்டுக் கடிதம் எழுதித் தபாலில் சேர்த்தோம். 1932 பிப்ரவரி மாதம் முதல் அல்லது இரண்டாவது சனிக்கிழமை பிற்பகல் 3 30 மணிக்கு மாரியம்மன் கோவிலிலிருந்து புறப்படுவதாக அறிவிப்பு செய்திருந்தோம்.
எங்கள் குழுவுக்குத் தலைவர் 1) திரு. வரதராஜ முதலியார். இவர் நாமக்கல்லில் யூனியன் பிரஸ் என்ற அச்சகத்தின் உரிமையாளர்.2)திரு.சந்தான முதலியார் - இவர் சில தறிகள் வைத்து நடத்தி வந்தார்.3)திரு.கணபதி முதலியார்- இவர் தவில் வித்வான்.உலகப்புகழ் பெற்ற நாகஸ்வர வித்வான் நாமகிரிப்பேட்டை கிருஷ்ணனின் தாய் மாமன். 4)அடியேன் அ. கிருஷ்ணன் (நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவன்.)5) திரு.அப்துல் கஃபார் - இவர் முகம்மது ஊஸ்மானின் (ஏற்கனவே சிறை சென்றவர்) இளையவர்.6) திரு. அனுமந்த ராவ்.(ஹனுமி என்று அழைக்கப்பட்டவர்), பின்னாட்களில் லாரி புரோக்கராகவும், லாரி டிரைவராகவும் வேலை பார்த்தவர். 7) திரு.என் ஏ. கிருஷ்ணமூர்த்தி - இவர் பின்னாட்களில் எல்.ஐ.சி ஏஜன்டாக இருந்தார். 8) திரு.காசி விஸ்வநாதப் பண்டாரம் - (இவர் பின்னாட்களில் திராவிட கழகத்தில் சேர்ந்தார்). முதல் மூன்று பேர்களும் அந்நாளிலேயே நாற்பது வயதைத் தாண்டியவர்கள். குடும்பஸ்தர்கள். மற்றவர்கள் 25 வயதுக்குட்பட்டவர்கள்.
நாங்கள் அறிவிப்பு அனுப்பியதின் பேரில், அந்த மூன்று பெரியவர்களையும் தனித் தனியாக அவர்களின் வீடுகளில் சென்று, காவல் துறையினர் சத்தியாக்கிரகம் செய்ய வேண்டாமென்றும், இனி யாராயிருந்தாலும் கைது செய்ய வேண்டாமென்றும் அவர்களை அடித்துத் துரத்த வேண்டுமென்றும் மேலிடத்து உத்திரவு வந்திருப்பதாகவும், ஆகவே தங்களுக்குத் தர்மசங்கடமான நிலை இருப்பதாகவும், சத்தியாக்கிரகம் செய்ய வேண்டாமென்றும், இன்ஸ்பெக்டர் சொல்லி அனுப்பியதாகவும் தெரிவித்தனர்.
சப் இன்ஸ்பெக்டர் ரங்கசாமி அய்யங்கார், என்னை மாரப்ப கவுண்டர் வீட்டில் சந்தித்து 'ஏம்ப்பா! எங்க கழுத்தை அறுக்கிறே!, திருச்செங்கோட்டிலே சத்தியாக்கிரகம் பண்ணுவதுதானே, இங்கு ஏன் வந்து தொந்தரவு கொடுக்கிறே? உன் பிடிவாதத்தால்தானே அந்த மூன்று முதலியார்களும் பிடிவாதமாக இருக்கிறார்கள்!உங்களையெல்லாம் அடித்துத் துரத்தும்படி சர்க்கார் உத்திரவு. இன்ஸ்பெக்டரும் தெய்வ பக்தி உடையவர்; சங்கடப்படுகிறார். எனக்கோ ஒரே பிள்ளை. உங்களையெல்லாம் எப்படி நானடிப்பேன்? ஆகையினால் அந்த முதலியார்களிடமும் சொல்லி திட்டமிட்ட சத்தியாக்கிரகத்தைக் கைவிடுங்கள்' என்று கெஞ்சாத குறையாகக் கேட்டுக் கொண்டார்.
நாங்கள் முன் வைத்த காலைப் பின் வாங்குவ தில்லையென்று தீர்மானித்து விட்டோம். நாமக்கல் ஊரில், சனிக்கிழமை வாராந்திர சந்தை தினம். நாங்கள் திட்டமிட்டபடி பிற்பகல் மூன்றரை மணிக்கு 8 பேர்களும், 'வந்தே மாதரம்!' 'அல்லாஹூஅக்பர்' 'மகாதமா காந்திஜிக்கு ஜே!' என்ற கோஷங்கள் எழுப்பிக் கொண்டு, மாரியம்மன் கோவிலிலிருந்து புறப்பட்டோம். அதற்கடுத்த பத்து கஜ தூரத்தில், கிராம முன்சீஃப் சாவடி, PWD Section Office, Girls High School போன்றவை இருந்தன. அன்பர்கள் சுமார் 200 பேர்களுக்கு மேல் கூடியிருந்து எங்களை உற்சாகப்படுத்தி, வழியனுப்பி வைத்தனர். ஆனால், PWD Section Office முன்னிலையில், ஒரு மேஜை போட்டு அதன் மேல் ஒரு நாற்காலியில், சப் மாஜிஸ்ட்ரேட் திரு ராமஸ்வாமி நாயுடு உடகார்ந்திருந்தார்.
எங்கள் குழுவுக்குத் தலைவர் 1) திரு. வரதராஜ முதலியார். இவர் நாமக்கல்லில் யூனியன் பிரஸ் என்ற அச்சகத்தின் உரிமையாளர்.2)திரு.சந்தான முதலியார் - இவர் சில தறிகள் வைத்து நடத்தி வந்தார்.3)திரு.கணபதி முதலியார்- இவர் தவில் வித்வான்.உலகப்புகழ் பெற்ற நாகஸ்வர வித்வான் நாமகிரிப்பேட்டை கிருஷ்ணனின் தாய் மாமன். 4)அடியேன் அ. கிருஷ்ணன் (நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவன்.)5) திரு.அப்துல் கஃபார் - இவர் முகம்மது ஊஸ்மானின் (ஏற்கனவே சிறை சென்றவர்) இளையவர்.6) திரு. அனுமந்த ராவ்.(ஹனுமி என்று அழைக்கப்பட்டவர்), பின்னாட்களில் லாரி புரோக்கராகவும், லாரி டிரைவராகவும் வேலை பார்த்தவர். 7) திரு.என் ஏ. கிருஷ்ணமூர்த்தி - இவர் பின்னாட்களில் எல்.ஐ.சி ஏஜன்டாக இருந்தார். 8) திரு.காசி விஸ்வநாதப் பண்டாரம் - (இவர் பின்னாட்களில் திராவிட கழகத்தில் சேர்ந்தார்). முதல் மூன்று பேர்களும் அந்நாளிலேயே நாற்பது வயதைத் தாண்டியவர்கள். குடும்பஸ்தர்கள். மற்றவர்கள் 25 வயதுக்குட்பட்டவர்கள்.
நாங்கள் அறிவிப்பு அனுப்பியதின் பேரில், அந்த மூன்று பெரியவர்களையும் தனித் தனியாக அவர்களின் வீடுகளில் சென்று, காவல் துறையினர் சத்தியாக்கிரகம் செய்ய வேண்டாமென்றும், இனி யாராயிருந்தாலும் கைது செய்ய வேண்டாமென்றும் அவர்களை அடித்துத் துரத்த வேண்டுமென்றும் மேலிடத்து உத்திரவு வந்திருப்பதாகவும், ஆகவே தங்களுக்குத் தர்மசங்கடமான நிலை இருப்பதாகவும், சத்தியாக்கிரகம் செய்ய வேண்டாமென்றும், இன்ஸ்பெக்டர் சொல்லி அனுப்பியதாகவும் தெரிவித்தனர்.
சப் இன்ஸ்பெக்டர் ரங்கசாமி அய்யங்கார், என்னை மாரப்ப கவுண்டர் வீட்டில் சந்தித்து 'ஏம்ப்பா! எங்க கழுத்தை அறுக்கிறே!, திருச்செங்கோட்டிலே சத்தியாக்கிரகம் பண்ணுவதுதானே, இங்கு ஏன் வந்து தொந்தரவு கொடுக்கிறே? உன் பிடிவாதத்தால்தானே அந்த மூன்று முதலியார்களும் பிடிவாதமாக இருக்கிறார்கள்!உங்களையெல்லாம் அடித்துத் துரத்தும்படி சர்க்கார் உத்திரவு. இன்ஸ்பெக்டரும் தெய்வ பக்தி உடையவர்; சங்கடப்படுகிறார். எனக்கோ ஒரே பிள்ளை. உங்களையெல்லாம் எப்படி நானடிப்பேன்? ஆகையினால் அந்த முதலியார்களிடமும் சொல்லி திட்டமிட்ட சத்தியாக்கிரகத்தைக் கைவிடுங்கள்' என்று கெஞ்சாத குறையாகக் கேட்டுக் கொண்டார்.
நாங்கள் முன் வைத்த காலைப் பின் வாங்குவ தில்லையென்று தீர்மானித்து விட்டோம். நாமக்கல் ஊரில், சனிக்கிழமை வாராந்திர சந்தை தினம். நாங்கள் திட்டமிட்டபடி பிற்பகல் மூன்றரை மணிக்கு 8 பேர்களும், 'வந்தே மாதரம்!' 'அல்லாஹூஅக்பர்' 'மகாதமா காந்திஜிக்கு ஜே!' என்ற கோஷங்கள் எழுப்பிக் கொண்டு, மாரியம்மன் கோவிலிலிருந்து புறப்பட்டோம். அதற்கடுத்த பத்து கஜ தூரத்தில், கிராம முன்சீஃப் சாவடி, PWD Section Office, Girls High School போன்றவை இருந்தன. அன்பர்கள் சுமார் 200 பேர்களுக்கு மேல் கூடியிருந்து எங்களை உற்சாகப்படுத்தி, வழியனுப்பி வைத்தனர். ஆனால், PWD Section Office முன்னிலையில், ஒரு மேஜை போட்டு அதன் மேல் ஒரு நாற்காலியில், சப் மாஜிஸ்ட்ரேட் திரு ராமஸ்வாமி நாயுடு உடகார்ந்திருந்தார்.
அவருக்கு இடப்புறமும், வலப்புறமுமாக போலீஸ் இன்ஸ்பெக்டரும், சப் இன்ஸ்பெக்டரும் நடுரோட்டில் நின்று கொண்டிருந்தனர். 16 போலீஸ்காரர்கள் போலீஸ் உடையில், ரோட்டை மறித்து சுவர் வைத்தாற் போல் கையில் அரை அங்குல விட்டமும் நாலடி நீளமும் உள்ள பிரம்புகள் கையில் தாங்கி நின்று கொண்டிருந்தனர். சாதாரண உடையில் சி.ஐ.டி. போலீஸ்காரர்கள் சிலர் கூட்டத்தினிடையே கலந்து நின்றனர். போலீஸ் ரைட்டர், சப்மாஜிஸ்ட்ரேட் ஆபீஸ் குமாஸ்தாக்கள் இருவர், கையில் நோட்டுப்புஸ்தகங்களுடன் நின்று கொண்டிருந்தனர். எங்களை மேலே செல்லவொட்டாமல், 16 போலீசாரும், நின்று கொண்டனர். அவர்களை நெருங்கியதும் ஒரு போலீஸ் விசில் பெரிய சத்தத்துடன் கேட்டது. உடனே சப் இன்ஸ்பெக்டர், “இது சட்ட விரோதமான செயல். 144 சட்டத்தை மீறுகிறீர்கள். ஐந்து நிமிடத்தில் நீங்கள் கலைந்து செல்லாவிடில், உங்களை அடித்துத் துரத்துவோம்.” என்று உரத்த குரலில் கூறினார்.
“சொந்த நாட்டில் பிறர்க்கடிமை செய்தே துஞ்சிடோம்; இனி அஞ்சிடோம்!” என்ற பாரதி பாடலை மிக ஆவேச உணர்ச்சியுடன் நான் பாடினேன். எல்லோரும் சேர்ந்து 'அச்சமில்லை! அச்ச மில்லை' என்ற பாடலை பாடிக் கொண்டும், கோஷங்கள் இட்டுக் கொண்டும், நின்றிருந்தோம். ஐந்து நிமிடங்கள் சென்றதும், மாஜிஸ்ட்ரேட், 'சார்ஜ்' என்றார். உடனே 16 போலீஸ்காரர்களும் தங்கள் கைகளில் வைத்திருந்த பிரம்புகளால் எட்டு பேர்களையும் கண்மண் தெரியாமல் அடித்தார்கள்.
நாங்கள் நின்று கொண்டே அடிகளை வாங்கிக்கொண்டு, கோஷங்கள் எழுப்பிக் கொண்டிருந்தோம். என்னைத் தவிர மற்ற ஏழு பேர்களும், உள்ளூர்வாசிகள். ஆகவே அவர்கள் உறவினர்கள், நண்பர்கள் வந்து அவர்களை இழுத்துச் சென்றார்கள். ஆனால் முதல் மூன்று பெரியவர்கள் மட்டும் “செத்தாலும் திரும்ப மாட்டோம்.” என்று உறுதியாகக் கூறி விட்டனர். 15 நிமிடங்கள் ஆனதும், சப் இன்ஸ்பெக்டர் 'ஸ்டாப்' என்று சத்தம் கொடுத்தார். உடனே 16 போலீஸ்காரர்களும் அடிப்பதை நிறுத்தி விட்டு, முன் போல் வழி மறித்து சுவர் வைத்தால் போல் நின்று கொண்டனர். சப் இன்ஸ்பெக்டர் மீண்டும் 'கலைந்து போகும்படி' சொன்னார். 15 நிமிடங்கள் இடைவெளிக்குப் பின், மீண்டும் மாஜிஸ்ட்ரேட், 'சார்ஜ்' என்று குரல் கொடுத்தார்.
16 போலீஸ்காரர்களும் மீண்டும் தங்கள் கைகளில் வைத்திருந்த பிரம்புகளால் நான்கு பேர்களையும் கண்மண் தெரியாமல் அடித் தார்கள். உடனே நாங்கள் தரையை முத்தமிட்டவாறு ரோட்டில் படுத்துக் கொண்டோம். முதல் தடவை, தலை, கண், காது, உடல் முன் பின் பக்கங்கள், எல்லாப் பகுதிகளிலும் அடிகள் விழுந்தன. இத்தடவை உடலின் பின் பகுதி களில மட்டுமே அடிகள் விழுந்தன, அது திருச்சி - சேலம் நெடுஞ்சாலை; திருச்செங்கோடு - நாமக்கல் ரோடு. ஆகவே, அங்கங்கே பஸ்கள், வண்டிகள், தட்டாரத் தெரு வழியாகத் திருப்பி யனுப்பப்பட்டன.
சந்தை தினமானதால், 5 மணி யளவில், 5000க்கும் மேறபட்ட கிராமத்து மக்கள், ஆண் பெண்கள் கூடிவிட்டனர். ”முதலியாரே! உத்தரவு கொடு! - இவங்கள் என்ன, முப்பது நாப்பது பேர்கள் தானே, நாங்கள் நினைத்தால் இவர்கள் அனைவரையும் கொன்று தீர்த்து விடுகிறோம். இந்தக் கணறாவியைப் பார்த்துக் கொண்டு நாங்கள் சும்மா இருப்பதா?” என்று கூச்சல் போட்டனர். வரதராஜ முதலியார் கையெடுத்துக் கும்பிட்டபடியே, ஆத்திரமடைந்துள்ள மக்களைப் பார்த்து, “அப்படி ஏதும் அசம்பாவிதமாகச் செய்து விடாதீர்கள். இது சத்தியாக்கிரகம். நீங்கள் பலாத்காரத்தில் இறங்கினால் காந்தியடிகள் மிகுந்த வேதனைப் படுவார். ஆகவே இந்த சத்தியாக்கிரகம் வெற்றி பெற,நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும்.” என்று உரத்த குரலில் கூறினார். மாஜிஸ்ட்ரேட், போலீஸ்காரர்களுக்கு மிகுந்த தர்ம சங்கடமான நிலை உண்டாகி விட்டது. மீண்டும் இரண்டு முறை 'சார்ஜ்' சொல்லி விட்டு, எங்கள் நால்வரையும் அப்படி அப்படியே விட்டு விட்டு அரசு உத்தியோகஸ்தர்கள் அனைவரும் கலைந்து சென்று விட்டனர்.
கூட்டத்தினர் ஓடி வந்து டாக்டர்கள் சாம்பசிவ அய்யர், சௌந்தர ராஜன் இருவரையும் அழைத்து வந்து, அவர்களின் மருத்துவ மனைகளுக்கு எங்களை வண்டிகளில் கொண்டு போய்ச் சேர்த்தார்கள். குண்டாந்தடிகளால் தாக்கியிருந்தால் திருப்பூர் குமரனுக்குக் கிடைத்த அமரத்துவம் எங்களுக்கும் கிடைத்திருக்கும். பிரம்புகளால் அடித்ததால், உடல் முழுவதும், பெருமளவு உடலின் பின் பகுதியில், தடித்த காயங்களும், ரத்தக் கசிவுகளும் ஏற்பட்டிருந்தன.
கூட்டத்தினர் ஓடி வந்து டாக்டர்கள் சாம்பசிவ அய்யர், சௌந்தர ராஜன் இருவரையும் அழைத்து வந்து, அவர்களின் மருத்துவ மனைகளுக்கு எங்களை வண்டிகளில் கொண்டு போய்ச் சேர்த்தார்கள். குண்டாந்தடிகளால் தாக்கியிருந்தால் திருப்பூர் குமரனுக்குக் கிடைத்த அமரத்துவம் எங்களுக்கும் கிடைத்திருக்கும். பிரம்புகளால் அடித்ததால், உடல் முழுவதும், பெருமளவு உடலின் பின் பகுதியில், தடித்த காயங்களும், ரத்தக் கசிவுகளும் ஏற்பட்டிருந்தன.
ரோட்டு மண்ணில் நாங்கள் படுத்துக்கொண்டதால், காயங்களிலெல்லாம் ரோட்டுப் புழுதி மண் ஒட்டிக்கொண்டிருந்ததால், ஒவ்வொரு காயமும் தனித் தனியாகக் கழுவி, பஞ்சு வைத்துக் கட்ட வேண்டியதாயிற்று. நான் 24 வயது வாலிபன். வரதராஜ முதலியாரும், கணபதி முதலியாரும், சதைப்பற்றுள்ள தேக முடையவர்கள். சந்தான முதலியார் மெலிந்த உடல்வாகு உடையவர். அவர் மிகவும் கஷ்டப்பட்டார். அந்த மூவருக்கும், அவரவர்கள் வீட்டிலேயே சிகிச்சை நடந்தது. எனக்கு கே. மாரப்ப கவுண்டர் வீட்டில் டாக்டர் வந்து புண்களுக்கு மருந்து போட்டார். ஞாயிறு, திங்கள் இரண்டு நாட்களில், நாங்கள் ஓரளவு குண மடைந்து வந்தோம். சி.ஐ.டி. போலீசார் வந்து, எங்கள் நிலைமைகளை விசாரித்து அறிந்து சென்றார்கள்.
செவ்வாய்க்கிழமை காலை, நான் இருக்குமிடத்துக்கு, சப்இன்ஸ்பெக்டர் ரங்கசாமி அய்யங்கார் வந்து, "மேற்கொண்டு என்ன செய்ய உத்தேசம்" என்று கேட்டார். இன்னும் ஒரு வாரத்தில் மீண்டும் சத்தியாக்கிரகம் செய்வேன் என்றேன். அன்று மாலையில், திரு கே. மாரப்ப கவுண்டர் வீட்டுக்கு ஒரு குதிரை வண்டி வந்தது. ஒரு போலீஸ்காரர் வந்து 'உங்களை இன்ஸ்பெக்டர் ஸ்டேஷனுக்கு அழைத்து வரச்சொன்னார்.' என்றார்.
செவ்வாய்க்கிழமை காலை, நான் இருக்குமிடத்துக்கு, சப்இன்ஸ்பெக்டர் ரங்கசாமி அய்யங்கார் வந்து, "மேற்கொண்டு என்ன செய்ய உத்தேசம்" என்று கேட்டார். இன்னும் ஒரு வாரத்தில் மீண்டும் சத்தியாக்கிரகம் செய்வேன் என்றேன். அன்று மாலையில், திரு கே. மாரப்ப கவுண்டர் வீட்டுக்கு ஒரு குதிரை வண்டி வந்தது. ஒரு போலீஸ்காரர் வந்து 'உங்களை இன்ஸ்பெக்டர் ஸ்டேஷனுக்கு அழைத்து வரச்சொன்னார்.' என்றார்.
நான் உடனே புறப்பட்டு குதிரை வண்டியில் சென்றடைந்தேன்.அங்கு ஏற்கனவே மூன்று முதலியார்களும் அவரவர் வீடுகளிலிருந்து தனித்தனி குதிரை வண்டிகளில், வந்து சேர்ந்திருந்தனர். இன்ஸ்பெக்டர் சாமி. சிதம்பரனார் எங்களைப் பார்த்து, "மேற் கொண்டு என்ன செய்ய உத்தேசம்?" என்று கேட்டார். "புண் ஆறியபின், மீண்டும் அதே இடத்திலிருந்து 144 தடை உத்தரவை மீறி அன்னிய துணிக்கடைகளின் முன் சாத்விக மறியல் செய்வோம்" என்றோம். "அப்படி யானால் உங்களைக் கைது செய்வேன்" என்றார். நாங்கள் மீண்டும் சத்தியாக்கிரகம் செய்யத்தான் போகிறோம்" என்றோம். "உங்களை அரெஸ்டு செய்திருக்கிறேன். " என்றார். நாங்கள் கைதானோம். ஓட்டலில் இருந்து உணவு கொண்டு வரப்பட்டு பரிமாறப்பட்டது. சாப்பிட்டு முடிந்ததும் எதிர்ப்புறம் உள்ள சப்ஜெயிலில் எங்களை அடைத்தார்கள்.
தலையணை, போர்வை ஏதும் இல்லாமல், வெறும் கல் தரையில் படுத்தது மிகவும் சிரமமாகத்தான் இருந்தது. எங்கள் நால்வரைத் தவிர, வேறு குற்றங்கள் புரிந்த காவற்கைதிகளும், அந்த 15 X 10 அடி அறையில் ஆறு பேர்கள் இருந்தார்கள். அவர்களில் ஆஸ்துமா நோயாளி இரவு முழுவதும் இழுப்பு வேதனையில் இருந்தார்.
தலையணை, போர்வை ஏதும் இல்லாமல், வெறும் கல் தரையில் படுத்தது மிகவும் சிரமமாகத்தான் இருந்தது. எங்கள் நால்வரைத் தவிர, வேறு குற்றங்கள் புரிந்த காவற்கைதிகளும், அந்த 15 X 10 அடி அறையில் ஆறு பேர்கள் இருந்தார்கள். அவர்களில் ஆஸ்துமா நோயாளி இரவு முழுவதும் இழுப்பு வேதனையில் இருந்தார்.
மற்றவர்கள் நிலையோ விரும்பத் தக்கதாய் இல்லை. ஆகவே, நாங்கள் நால் வரும் எங்கள் கதைகளைப் பேசிக்கொண்டே தூங்காமல் இரவைக் கழித்தோம் உடம்பில் அடிபட்ட காயங்கள் பல இன்னும் குணமாகவில்லை. ஆகவே, அந்த கரடுமுரடான கல் தரையில் புரண்டு படுக்கும் போது, நாங்கள் பட்ட வேதனை சொல்லி முடியாது. மறுநாட் காலை ஆறு மணிக்கு இரும்புக் கதவுகளைத் திறந்தார்கள். இரண்டிரண்டு பேர்களாக சுமார் முப்பது கைதிகளை நிறுத்தி வைத்து, எண்ணிப் பார்த்து கழிவறைக்கு 'மார்க்' செய்யப் பட்டோம்.
அதைப் பற்றி (சுகாதாரத்தைப் பற்றி,) சொல்லாமல் விடுவது நல்லது. ஏதோ நரகம் எனகிறார்களே அது இதுதானோ என எண்ணிக் கொண்டோம். பல் துலக்கி முகம் கை கால் கழுவிக் கொண்ட பின் எங்கள் முப்பது பேர்களையும், (நாங்கள் நான்கு பேர்கள் மட்டுமே அரசியல் கைதிகள்). ஒரு இடத்தில் மண் தரையில் உட்கார வைத்து எத்தனையோ பேர்கள் மாறி மாறி உபயோகித்த நசுங்கி உருக் குலைந்த அலுமினியத் தட்டுகளில், அரிசிக் கஞ்சியை ஊற்றி அனைவரிடமும் ஒவ்வொரு தட்டாகக் கொடுத்தார்கள். வேண்டா வெறுப்பாகச் சிறிது சாப்பிட் டோம் மீதியை அங்குள்ள தொட்டியில் கொட்டினோம். பத்து மணியளவில் எங்கள் நால்வரையும் சப்டிவிஷனல் மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டுக்கு நான்கு போலீஸ் ஜவான்கள் இட்டுச் சென்றனர்.
எங்களை விசாரித்த சப் டிவிஷனல் மாஜிஸ்ட்ரேட், என் பெயரில் - தொழில் என்ற இடத்தில், vagrant என்று போட்டிருந்ததைப் பார்த்து, "What do you mean by this?" என்று சற்றுக்கோபமாக ஹெட் கிளார்க்கைப் பார்த்துக் கேட்டார். " He is not employed, Sir!" என்றார். என்னைப் பார்த்து 'நீங்கள் ஏதாவது வேலை பார்த்தீர்களா?' என்றார். 'நான் இரண்டு ஆண்டுகளாக திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தில் வேலை பார்த்து வருகிறேன். சத்தியாக்கிரகம் செய்வதற்காக,ராஜினாமா செய்தேன். ஆசிரமத்தில் சேருவதற்கு முன்பு திருநெல்வேலி ஜில்லா போர்டிலும், அதற்கு முன்பு, தனியார் நிறுவனம் ஒன்றிலும் வேலை பார்த்தேன்.' என்றேன்.
"You see! you change it as at present unemployed." இவ்வளவுக்கும் ஹெட்கிளார்க் ராமஸ்வாமி அய்யங்கார் என்னை நனகு அறிந்தவர்.வக்கீல்கள், சப்டிவிஷனல் மாஜிஸ்ட்ரேட்டின் நேர்மையையும் அந்த சூழ்நிலையில் அவர் காட்டிய தைரியத்தையும் பாராட்டினர். மேற்கொண்டு அவர் வழக்கை விசாரித்தார். "நாங்கள் சத்தியாக்கிரகிகள்; ஆகவே எதிர் வழக்காட மாட்டோம். 144 தடை யுத்தரவை மீறித்தான் அன்னியத் துணிக் கடை மறியலுக்குப் புறப்பட்டோம்", என்றோம்.
இரண்டு செக்ஷன்களில் ஒவ்வொன்றுக்கும் ஆறு மாதக் கடுங்காவல் தண்டனையளித்து இரண்டும் தனித்தனியாக அனுபவிக்க வேண்டும் எனத் தீர்ப்பளித்தார். அவரவர் வீடுகளிலிருந்து தனித் தனியாக போலீஸ் நிலையம் அழைத்து வரப்பட்டதால், கையில் பணமோ மாற்று உடையோ எடுத்து வரவில்லை. நண்பர்களும் உறவினர்களும் கூட, பயத்தால் எங்களை வந்து பார்க்கவுமில்லை....
Thursday, March 31, 2011
ஜெயமோகனின் இன்றைய காந்தி - நூல் விமர்சனம்
’ஒரு தலைவர் பெரும்பான்மையான மக்களால் புகழப்படுகிறார் என்றால், அவர் ஒரு அயோக்கியனாகத் தான் இருக்க வேண்டும்’ என்று எண்ணும் மனநிலைக்கு நம்மை தற்காலத் தலைவர்கள் கொண்டு சென்றுள்ளனர். இப்படி ஒரு துரதிர்ஷ்டமான நிலை, உலகில் வேறெங்கும் நிலவுகிறதா எனத் தெரியவில்லை.
அப்படி நம்மால் மிகத் தவறாகப் பார்க்கப்படும் நம் தேசத் தந்தை மகாத்மா காந்தியைப் பற்றி, தெளிவான பார்வையைக் கொடுக்கும் புத்தகமே ஜெயமோகனின் ‘இன்றைய காந்தி’.
நான் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்போது, பழுப்பேறிய கிழிந்த ’சத்திய சோதனை’ புத்தகம் எனக்குக் கிடைத்தது. அதில் இருந்த சம்பவங்களும் கருத்துக்களும் நான் வளர்ந்த சூழ்நிலைக்கு முற்றிலும் புதிதாக இருந்தது. சத்தியத்தைப் பற்றியும் அஹிம்சையைப் பற்றியும் ஆழமான புரிதலைக் கொடுத்தது அந்தப் புத்தகம். அதன்பிறகான எனது அத்தனை சிந்தனைகளும் காந்தியத்தின் அடிப்படையில் கட்டமைக்கப் பட்டவையே.
நான் காந்தியின் ரசிகன் ஆனேன். அவர் மேல் மிகப்பெரிய மரியாதையை அடைந்தேன். ஆனால் அதை என் பள்ளி நண்பர்களிடமும் கல்லூரி நண்பர்களிடமும் வெளிப்படுத்தியபோது, எனக்குக் கிடைத்தது கேலியும் கிண்டலுமே. காந்தியைப் பற்றி பலவாறான அவதூறுகள் சகஜமாக அவர்களால் பேசப்பட்டன.
காந்தியைப் பற்றி பழித்துப் பேசுபவர்களே புத்திசாலிகளாகவும், காந்தியவாதிகள் அசமந்தமாகவும் இச்சமூகத்தால் பார்க்கப்படுவதை உணர்ந்தேன். எத்தனை எத்தனை அவதூறுகள்..
காந்தி ஒரு மோசமான அப்பா..அவர் பிள்ளைகள் எதுவும் உருப்படவில்லை..
தாழ்த்தப்பட்டோரின் விரோதி காந்தி..
வர்ணாசிரமத்தை தூக்கிப் பிடித்தவர் காந்தி..
முஸ்லிம்களின் விரோதி காந்தி..
இந்துக்களின் துரோகி..
ஏமாற்றுக்காரர்..
முஸ்லிகளுக்கு அதிக சலுகை காட்டி, போலி மதச்சார்பின்மையை அன்றே ஆரம்பித்து வைத்தவர்..
பகத்சிங் தூக்கிலப்படுவதை தடுக்காதவர்..
நேதாஜியின் மறைவுக்கு காரணமானவர்..
இவ்வாறு பல அவதூறுகள்..விவாதித்து, விவாதித்து அலுத்துப்போன விஷயங்கள்..அதன்பிறகு நான் காந்தியைப் பற்றி பேசுவதை நிறுத்தி விட்டேன்..
சென்ற வருடம் தன் இணைய தளத்தில் ஜெயமோகன் காந்தி பற்றிப் பேச ஆரம்பித்தார். வலுவான ஆதாரங்களுடன் காந்தியின் தரப்பை முன் வைத்தார். நீண்ட விவாதமாக சென்றது அது. அந்த விவாதங்களின் தொகுப்பே ‘இன்றைய காந்தி ‘என்ற நூல்.
காந்தியைப் பற்றி பலவித அவதூறுகள் எப்படித் திட்டமிட்டு பரப்பப்படுகின்றன, அவை எந்த அளவிற்கு பொய்யானவை என பொட்டில் அடித்தாற்போன்று எழுதியுள்ளார். நான் இழந்து விட்ட காந்தியை மீண்டும் நமக்கு மீட்டுத் தந்தார் ஜெயமோகன். மானுடம் தன்னை முன்னேற்றிக் கொள்வதற்கான வழி காந்தியமே..அதுவே இனி உலகை வழி நடத்தும் என அறைகூவல் விடுகிறார் ஜெயமோகன்.
’காந்தியின் மகனே சொன்னார், அவர் ஒரு மோசமான தந்தை என்று’. -இதுவே காந்தியைப் பற்றிய முக்கிய அவதூறு. காந்தியின் மகன் ஹரிலால் அப்படித் தான் சொன்னார், மேடை மேடையாகப் பேசினார். மதுவுக்கும் பெண்ணாசைக்கும் அடிமையான ஹரிலால் தொடர்ந்து காந்தி சாகும் வரை காந்தியைத் திட்டி வந்தார். அதைப்பற்றி விலாவாரியாகப் பேசுபவர்கள், காந்தியின் மற்ற மூன்று பிள்ளைகளைப் பற்றி எதுவும் சொல்வதில்லை.
அவர்கள் காந்தியை மதித்ததைப் பற்றியோ, சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதைப் பற்றியோ, காந்தியைப் பற்றி அவர்கள் சொன்ன கருத்துகளைப் பற்றியோ யாரும் ஜாக்கிரதையாக எதுவும் சொல்வதில்லை. ஒரு பிள்ளை(ஹரிலால்)-யின் கருத்தைச் சொல்பவர்கள், மற்ற மூன்று பிள்ளைகள் காந்தியைப் பற்றிக் கொண்டிருந்த மதிப்பைச் சொல்ல மறுப்பதேன்? அது நமக்கு ஒத்து வராத கருத்து என்பதாலா?
’காந்தியின் மீதான தாக்குதல், உண்மையில் நமது தேசத்தின் மீதான தாக்குதல். காந்தியின் மீதான அவதூறுகளுக்குப் பின்னால் ஏதோவொரு அன்னிய நாட்டின் ஆதரவு உண்டு’ என்பதைத் திட்டவட்டமாக நிறுவுகிறது இந்நூல்.
ஒரு நண்பர் என்னிடம் காரசாரமாக ‘தன் பிள்ளைகளுக்கே நல்ல தந்தையாக இல்லாதவரை எப்படி மகாத்மாவாக, தேசத் தந்தையாக ஏற்றுக் கொள்ள முடியும்?’ என காந்தியப் பற்றி எதுவுமே படிக்காமல் வாதிட்டார். நான் அவரிடம் கீழ்க்கண்டவாறு சொன்னேன்: ‘ஒரு நல்ல தந்தையாக இருக்கும் தலைவரைத் தான் மகாத்மாவாக ஏற்பீர்கள் என்றால், கலைஞர் கருணாநிதியைத் தான் மகாத்மா என்று சொல்ல வேண்டும்’.
ஒரு சினிமாப் படத்தைப் பற்றிக் கருத்துச் சொல்லக்கூட, அந்தப் படத்தைப் பார்த்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம். ஆனால் நம் தேசத் தலைவர்கள் பற்றிப் பேச, அவர்களைப் பற்றி எதுவும் படித்திருக்கத் தேவையில்லை, வம்புப் பேச்சே போதும் என்று நாம் இருப்பது சரி தானா?
காந்தியைப் பற்றி அளவிட நமக்குத் தெரியாத ஆராய்ச்சித் தகவல்கள் தேவையில்லை. நமக்குத் தெரிந்த இரு தகவல்களே போதும்.
1. உலக வரலாற்றில், ஒரு சுதந்திரப்போராட்டத்தை தலைமையேற்று நடத்திச் சென்றவர் யாரோ, அவர் தான் அந்த நாடு விடுதலை அடைந்ததும் அதிபராக ஆகி, பதவியை அனுபவிப்பர். காந்திக்கு அம்மாதிரியான எண்ணங்கள் சிறிதும் இருந்ததில்லை.
2.’காந்திக் கணக்கு’ என்று செல்லமாக அழைக்கப்பட்ட சுதந்திரப்போராட்டத்தின் மொத்த நிதியும் காந்தியின் கட்டுப்பாட்டிலேயே இருந்தன. அதிலிருந்து ஒரு பைசாவைக் கூட தனக்கோ, தன் குடும்பத்தினருக்கோ அவர் எடுத்துக் கொள்ளவில்லை.
நம் தேசத்தந்தையைப் பற்றிப் புரிந்துகொள்ள நேரமும் மனமும் உள்ள இந்தியர்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் ‘இன்றைய காந்தி’. (இது கட்டுரை வடிவில் ஜெயமோகனின் இணையதளத்திலும் கிடைக்கிறது.)
நூல் விபரம்:
நூல் : இன்றைய காந்தி
ஆசிரியர் : ஜெயமோகன்
பதிப்பகம் : தமிழினி பதிப்பகம்
ஆன்லைனில் வாங்க: http://www.udumalai.com/?prd=Indraya%20Gandhi&page=products&id=6320
Wednesday, January 26, 2011
தாய் மண்ணே வணக்கம்
என்னைப் பொறுத்தவரை சுதந்திர தினத்தை விடவும் முக்கியமானது குடியரசு தினம். பல்லாயிரக்கணக்கான வருடங்களாக முடியாட்சியின் கீழ் வாழ்ந்துவந்த நாம், இப்போது வெற்றிகரமாக அறுபத்தியிரண்டாம் குடியரசு தினத்தில் அடியெடுத்து வைக்கின்றோம்.
பொருளாதார ரீதியாக நாம் முன்னேறிக் கொண்டிருந்தாலும், காந்தி தேசம் காந்திய வழிகளில் இருந்து விலகிச் செல்வது நமக்குப் பெரும் வருத்தத்தையே தருகிறது.
’நம் தாய்நாடு இந்தியா’ என்று நாம் பெருமிதம் கொள்ள இப்போதும் எஞ்சியிருப்பது நமது ஜனநாயகம் தான். அரசியல்வாதிகள் எவ்வளவுதான் கொள்ளை அடித்தாலும் பல அக்கிரமங்களைச் செய்தாலும் அதற்கான எதிர்ப்பை வெளிக்காட்டும் உரிமையையாவது இன்னும் விட்டு வைத்திருக்கிறார்களே என்று சந்தோஷப்படவேண்டிய நிலையில்தான் நாம் இருக்கிறோம்.
ஜனநாயகம் என்பது எண்ணிக்கை சார்ந்தது. எவ்வளவு தூரம் நாம் பொதுப்பிரச்சினைகளில் ஒன்றுபடுகிறோமோ அவ்வளவுக்கு ஜனநாயகம் நமக்குப் பயப்படும்.
பல வேதனையான நிகழ்வுகளைத் தடுப்பதற்குக்கூட ஒன்றுபட்டு போராட முடியாதவர்களாக நாம் இருக்கின்றோம். நமது எதிர்ப்பைப் பதிவதற்கான எல்ல வாய்ப்புகளை நம் நாடு கொடுத்தும் ஒற்றுமையின்மையால் எல்லவற்றையும் இழந்துகொண்டுள்ளோம்.
மத்திய அரசில் அதிக மந்திரிகளைப் பெற்றுள்ள மாநிலங்கள் மகாராஷ்ட்டிராவும் தமிழ்நாடும் தான். அதில் காட்டும் அக்கறையை மக்கள் மீதும் காட்டும் தலைவர்களை நாம் எப்போது பெறப்போகிறோம் எனத் தெரியவில்லை. அதுவரை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் குடியரசு தினச் சிறப்பு நிகழ்ச்சிகளில் மூழ்கியிருப்போம்.
அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துகள்.
ஜெய் ஹிந்த்.

















