Showing posts with label ஸ்பெக்ட்ரம். Show all posts
Showing posts with label ஸ்பெக்ட்ரம். Show all posts

Sunday, May 8, 2011

அம்போ ஆன ராசாவும் அம்பலப்பட்டுப் போன கலைஞரும்

“ஸ்பெக்டரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் கனிமொழிக்கு எந்தத் தொடர்பும் இல்லை. ஆ.ராசாவே முழுப்பொறுப்பு” என்று வாதாடினார் ராம் ஜெத்மலானி

கனிமொழி கைது செய்யப்படவில்லை. விசாரணை முடிந்ததும், தன் கணவருடன் காரில் ஏறிப் பறந்தார் கனிமொழி!

- என்ற இரு கெட்ட செய்திகளும் இந்நேரம் ராசாவை எட்டி இருக்கும். என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதும் அவருக்குப் புரிந்திருக்கும்.
வெறும் விசாரணைக்கு மட்டுமே அழைக்கிறார்கள் என்று நினைத்துப் போன ராசாவை கைது செய்து, இவ்வளவு நாட்கள் உள்ளே வைப்பார்கள் என்று ராசாவே எதிர்பார்த்திருக்க மாட்டார். எப்படியும் கட்சி கை கொடுக்கும் என்று நம்பி இருந்தார். தேர்தல்வரை பொறுத்திருக்கும்படியும், பின்னர் கட்சி ராசா விஷயத்தில் தீவிரமாக இறங்கும் என்றும் ராசாவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களது தீவிரம் ‘ராசாவை நிரந்தரமாக உள்ளே வைப்பதற்கே’ என்பது நன்றாகத் தெரிந்து விட்டது இப்போது.

கலைஞரைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது. சமீபகால அரசியல் வரலாற்றில் இவ்வளவு மோசமான நிலைமை வெறெந்தத் தலைவருக்கும் ஏற்பட்டதில்லை.

அறிஞர் அண்ணாவிற்குப் பிறகு, கட்சியை தன் வசப்படுத்திய சாமர்த்தியம், வெற்றிகரமான கதை வசனகர்த்தாவாக, பகுத்தறிவுவாதியாக தன்னை தனது ஆரம்பக்காலங்களில் நிலைநிறுத்திக்கொண்டவர் கலைஞர். திமுக தொண்டர்களுக்கு அதிமுக தொண்டர்களை விட நாம் உயர்ந்தவர்கள், கலைஞர் என்ற சாமர்த்தியசாலியின் பின்னால் நிற்கும் அறிவுஜீவிகள் என்ற எண்ணம் எப்போதும் உண்டு. 

தமிழின் மீதும் தமிழினத்தின் மீதும் அக்கறை கொண்டவர் என்பதால் திமுக தொண்டர்களால் ‘தமிழினத் தலைவர்’ என்றும் அழைக்கப்பட்டார். அதனை பிறகட்சியினரும் பெரிய தவறென்று சொன்னதில்லை...ஈழப்படுகொலைக்கு முன்பு வரை!

தமிழ்ப்பற்று, ஈழ ஆதரவு நிலைப்பாடு, சாணக்கியத்தனம், ஆரிய-திராவிட வாதம், விஞ்சானப்பூர்வமாக ஊழல் செய்யும் திறமை ஆகியவற்றை அணிகலன்களாகக் கொண்ட கலைஞரின் வீழ்ச்சி, அவரது வாரிசுகளின் அரசியல் பிரவேசத்தால் ஆரம்பித்தது.அவரது மோசமான அரசியல் வாரிசாக கனிமொழி உருவெடுத்து வந்தார்.

ஆ.ராசா தான் அமைச்சராக வேண்டும் என்று அடம்பிடித்து தொலைத்தொடர்புத் துறையை வாங்கினார். தொடர்ந்து ஸ்பெக்ட்ரம் ஊழல் அரங்கேற்றப்பட்டது. அன்றிலிருந்து கலைஞரின் அணிகலன்கள் கழன்று விழ ஆரம்பித்தன.

கூட ரெண்டு ஓட்டு விழுமென்றால், குட்டிக்கரணம் போடவே தயங்காத கலைஞருக்கு ஈழப்படுகொலை நல்ல வாய்ப்பாக வந்தது. பழைய கலைஞர் என்றால் புகுந்து விளையாடி இருப்பார். ஆனால் ஸ்பெக்ட்ரம் என்ற பேய் பிடித்த பிறகு, காங்கிரஸை மீறி என்ன செய்துவிட முடியும்? 

பலவருடங்களாகக் கட்டி எழுப்பி வந்த ‘தமிழினத் தலைவர்’ இமேஜை மூன்று மணி நேர சூப்பர் ஃபாஸ்ட் உண்ணாவிரத்த்தில் தொலைத்தார்.

ராசாவின் மீது குற்றச்சாட்டு சொல்லப்பட்டபோது, இது ஆரிய சதி என்றும், தலித் என்பதால் ராசா குறிவைக்கப்படுவதாகவும் கலைஞர் சொன்னார். இன்று கலைஞரால் நியமிக்கப்பட்ட வக்கீல் ‘திராவிடச் செம்மல்’ ராம் ஜெத்மலானி சொல்கிறார் ‘தலித் ராசாவே எல்லாவற்றுக்கும் காரணம்’ என்று! இபோது தலித் ராசாவைக் குறிவைப்பது யார்? கலைஞர் எப்போது ஆரியர் ஆனார்? இவ்வள்வு வெளிப்படையாக கலைஞர் கீழிறங்குவார் என்று நாம் எதிர்பார்க்கவில்லை.

ராசா கைதை எதிர்த்து திமுக நிறைவேற்றிய தீர்மானத்தில் “ராசா குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் அதற்குப் பிறகு கட்சி தயவு தாட்சண்யம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்கும் என்று கூறியிருக்கிறார். ஆனால் ஒருவர் கைது செய்யப்பட்டு விட்ட காரணத்தாலேயே அவர் குற்றவாளியாக ஆகி விட மாட்டார் என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.” என்று சொன்னார்கள். இப்போது தயவு தாட்சண்யம் காணாமல் போய் உள்ளதே.அப்படியென்றால்...

தனது வாழ்வின் கடைசிக்கட்டத்தில் உள்ள ஒரு தலைவர், தனது தைரியத்தையும் கொள்கைகளையும் இழந்துவிட்டு, அம்பலப்பட்டு நிற்பதைப் பார்க்கும்போது நமக்கு பரிதாபமே மேலிடுகிறது.

கட்சியா, கனிமொழியா என்பதே தற்போதைய கேள்வி. கனிமொழியே முக்கியம் என்று கலைஞர் முடிவெடுத்துவிட்டது துரதிர்ஷ்டமே. கனிமொழியைக் கைகழுவுவதே கட்சி இழந்த பெயரை மீட்டுத்தர உதவும். அதை கலைஞரின் காலத்திற்குப் பின் ஸ்டாலினும் அழகிரியும் செய்வர்.

இப்போது கனிமொழி மீதான வழக்கு எப்படிப் போகும் என்பது மே13ம் தேதி வரும் ரிசல்ட்டைப் பொறுத்தது. திமுக கூட்டணி வென்றால், காங்கிரசின் கூட்டணி ஆட்சி என்ற மிரட்டலுக்கு அடிபணிந்தால், அம்பானியைப் போல் கனிமொழியும் கைது செய்யப்படாமல் வெளியில் உலவலாம்.

இல்லையென்றால், கனிமொழி மீது சிபிஐயின் பிடி இறுகும். விசாரணைக்காக கொஞ்ச நாள் உள்ளே போக வேண்டி வரலாம். அதன்பிறகு என்ன ஆகும் என்பதைச் சொல்ல ஜோதிட ஞானம் எல்லாம் தேவையில்லை. நமது  பத்திரிக்கைகள் மென்று முழுங்கிச் சொல்லும் செய்தி ஒன்றே போதும்.

மே 11ம் தேதி சிபிஐ கோர்ட்டில் பிறந்த நாள் பரிசு வழக்கில்   புரட்சித்தலைவி ஆஜராகத் தேவையில்லை-ஐகோர்ட் உத்தரவு’. 1992ஆம் ஆண்டில் அடித்த கொள்ளைக்கே இன்னும் முக்கி முக்கி வழக்கு நடந்து வருகிறது. 

எனவே 2031ஆம் ஆண்டு இப்படிச் செய்தி வரலாம்: ‘மே14 சிபிஐ வழக்கில் கனிமொழி ஆஜரானார். விசாரணை முடிந்த பின் கணவர் மற்றும் பேரப்பிள்ளைகளுடன் காரில் ஏறிப் பறந்தார்.

அப்போ ராசாவும் சரத்குமார் ரெட்டியும்? அம்போ தான்!

மேலும் வாசிக்க... "அம்போ ஆன ராசாவும் அம்பலப்பட்டுப் போன கலைஞரும்"

Thursday, December 16, 2010

ஸ்பெக்ட்ரம் விசாரணையும் வாழைப்பழக் காமெடியும்

ஆ.ராசாவாக இருந்தவர் ஆ! ராசாவாக ஆனதால் கடுப்பான எதிர்க்கட்சிகள் ராசாவிடம் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டுமெனக் கேட்டும், காங்கிரஸ் மறுத்துவிட்டது. ஆகவே அவர்களையும் உங்களையும் குஷிப்படுத்த நானே மன்மோகன் சிங்கைத் தலைவராகப் போட்டு நாடாளுமன்ற கூட்டுக்குழுவைக் கூட்டிவிட்டேன்..இனி விசாரணை ஆரம்பம்..


மன்மோகன் சிங்: மிஸ்டர் ராசா..நான் உங்க கிட்ட என்ன சொன்னேன்?

ராசா: ஏலம் விடச் சொன்னீங்க. 
சிங்: எவ்வளவுக்கு விடச் சொன்னேன்?
ராசா: 1,80,000 கோடிக்கு.
சிங்: விட்டீங்களா
ராசா: விட்டனே!
சிங்: ஏலம் எடுத்தவங்க பணத்தைக் குடுத்தாங்களா?
ராசா: கொடுத்தாங்க.
சிங்: சரி, அதுல 10,000 கோடி இங்க இருக்கு..மீதி எங்க?
ராசா: அதான் சார் இது.

அத்வானி: ப்ச்..இவர் சரிப்பட்டு வர மாட்டாருங்க..பேசாம இவருக்கு சுன்னத் பண்ணி குஜராத்ல விட்டுடுவோம்ங்க. மத்ததை நண்பர் மோடி பார்த்துக்கிடுவார்..

சோனியா:(வருகிறார்): என்ன இங்க சத்தம்..என்ன இங்க சத்தம்..
ராகுல்: மம்மி..சிங் ராசாகிட்ட ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விடச்சொன்னராம்..ராசாவும் விட்டுட்டு 10,000 கோடியைக் கொண்டுவந்திருக்காரு..மீதி எங்கேன்னு கேட்டா அதான் இதுங்கிறார்..ஹா..ஹா..
சோனியா: மை சன். இப்பவும் இளிப்பா..எதைத் தான் நீ சீரியஸா எடுத்துக்கப் போறியோ..உன்னையெல்லாம் வச்சு...சரி..சரி..மிஸ்டர் ராசா, சிங் உங்ககிட்ட என்ன சொன்னாரு?
ராசா: ஏலம் விடச் சொன்னாரு..
சோனியா: விட்டீங்களா?
ராசா: விட்டேனே.
சோனியா: எவ்வளவுக்கு விட்டீங்க?
ராசா: 1.80,000 கோடிக்கு.
சோனியா: சரி..அதுல 10,000 கோடி இங்கயிருக்கு..மீதி எங்க?
ராசா: அதான் மேடம் இது..
சிங்: ஏய்..நான் சத்தமாப் பேசி நானே கேட்ட்தில்லை..என்னைப் பேச வச்சுடாதே..
ராகுல்: சிங்ஜி..பஞ்ச் டயலாக் சூப்பர்..ஹா..ஹா..

பிரகாஷ் காரத்: ராசா, அடிச்ச காசை நீங்க ஏதாவது சின்ன வீட்டுக்குக் கொடுத்தாக் கூட நாங்க விட்டிருப்போம்..ஆனா தேர்தலப்போ அதுல ஒரு பிட்டை மக்களுக்கு கொடுத்து எங்களுக்கு ஆப்பு வைக்கிறீங்களே..அதுதான் எங்களைக் கடுப்பேத்துது..

மைத்ரேயன்: ஊழல் விசாரணைக்கு தலைவரா சிங்கைப் போட்ட்து தப்புங்க..எங்க அம்மாவைப் போட்டிருக்கணும்..கடந்த 10 வருஷத்துல பல ஊழல் வழக்குகளைக் கண்டவர் எங்க புரட்சித் தலைவி!
ப்ரணாப் முகர்ஜி: என்னமோ அவர் ஜட்ஜா இருந்து பார்த்த மாதிரி சொல்றாங்களே..இவங்களுக்கு மனச் சாட்சியே கிடையாதா..
மைத்ரேயன்: ஆகவே, ராசாவை டெலிஃபோனில் விசாரணை பண்ண எங்க அம்மா தயாரா இருக்காங்க..மேலும் இந்த ராசாவும் ஃபோன்லதான் உண்மையைப் பேசுவார்..நேர்ல உண்மை பேசி இவருக்குப் பழக்கமிருக்கான்னே சந்தேகம்தான்.
சிங்: நோ..நோ..அதெல்லாம் அனுமதிக்க முடியாது.
மைத்ரேயன்: அப்போ, நீங்க அம்மாகிட்ட பேசுங்க..
சிங்: அய்யோ!..வேணாம்..வேணாம்..ராசாவே பேசட்டும்.

(மைத்ரேயன் சேரிலிருந்து எழுந்து, இடுப்புக்கு மேலே உடம்பை முன்பக்கமாக 30 டிகிரி வளைத்து, முழங்காலுக்கு மேல்பகுதியை 30டிகிரி பின்னால் வளைத்து நின்றுகொண்டு செல்போனில் கால் பண்ணுகிறார்)

மம்தா பானர்ஜி: என்னங்க பண்றார்?

டி.ஆர்.பாலு: இதுக்குப் பேரு கொக்காசனம்’..அதிமுக காரங்க அந்தம்மாகிட்ட பேசறதுக்குன்னே கண்டுபிடிச்சது..இவங்க கிட்ட நீங்க கத்துக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கு..

மைத்ரேயன்:(போனில்)..அம்மா..ஆமாங்கம்மா....குடுக்கிறென்மா..ராசா, இந்தாங்க.

அம்மா: என்ன ராசா, விசாரணை அது இதுன்னு ரொம்ப டார்ச்சர் பண்றாங்களா?

ராசா: ஆங்!...ஆமாம்மா..ரொம்பப் படுத்தறாங்க..

அம்மா: பணம் இன்னைக்கு வரும், நாளைக்குப் போகும்..அது புரியாத சின்னப் பசங்க அவங்க..

ராசா: கரெக்டாச் சொன்னீங்கம்மா.

அம்மா: இந்த ஊழல், பணம், கோடி இதெல்லாம் விடுங்க..6 கோடித் தமிழர்கள் மனசை அரிச்சுக்கிட்டு இருக்கிற ஒரு விசயத்தை உங்க கிட்டே இப்போ கேட்கிறேன். அதுக்கு மட்டும் பதில் சொன்னாப் போதும்.

ராசா: கேளுங்கம்மா..சொல்றேன்.

அம்மா: நீங்க அவரைக் கரெக்ட் பண்ணீட்டீங்களா?..இன்னும் இல்லையா?

ராசா: அம்மாஆஆஆஆ!.. சொல்லால் அடித்த சுந்தரி..மனம் சுட்டுவிட்ட கோலம் என்னடி...பட்ட காயத்துக்கு மருந்தென்னடி....


மேலும் வாசிக்க... "ஸ்பெக்ட்ரம் விசாரணையும் வாழைப்பழக் காமெடியும்"