Monday, October 1, 2012

முருக வேட்டை_41

கிலா தன் ஜீப்பை முத்துராமனின் பங்களா முன் நிறுத்திவிட்டு, உள்ளே நுழைந்தாள். வீட்டின் முன் நின்றுகொண்டு காலிங் பெல்லை அழுத்தினாள்.

செந்தில் பாண்டியனும் இப்படித் தான் வந்திருப்பானா?’

ஸ்ரீனிவாசன் கதவைத் திறந்துவாங்க அகிலாஎன்றார்.

முத்துராமன் சாரும் இப்படித் தான் பாண்டியனை நம்பி அழைத்திருப்பாரா?’

 அகிலா புன்சிரிப்புடன் உள்ளே நுழைந்தாள்.

வாங்க..உட்காருங்கஎன்று சோஃபாவைக் காட்டினார் ஸ்ரீனிவாசன்.

பாண்டியனும் இப்படித்தான் அமர்ந்தானா?’

சொல்லுங்க அகிலா..என்ன திடீர்னு?”

அகிலா சுயநினைவுக்கு வந்தவளாகஒன்னும் இல்லை சார்..கேஸ்ல இன்னும் சில விவரம் கிடைச்சிருக்கு..அதனால உங்க பூஜை ரூமையும் சார் ரூமையும் மறுபடியும் ஒருதடவை பார்த்துட்டுப் போகலாம்னு வந்தேன்.” என்றாள்.

ஸ்ரீனிவாசனுக்கு எத்தனை முறை இவர்களுக்கு சுற்றிக்காட்டுவது என்று சலிப்பாக இருந்தது. கேட்பது அகிலா என்பதால் ஒன்றும் சொல்லாமல், “ஓகே..உங்களுக்குத் தான் எல்லா இடமும் தெரியுமே..போய்ப் பாருங்கஎன்றார்.

அம்மா இருக்காங்களா?” என்று கேட்டாள் அகிலா.

இல்லை..சிஸ்டர் வீட்டுக்குப் போய்ட்டாங்க..இனிமே இங்கே அவங்களால எப்படி இருக்க முடியும்?”

கஷ்டம் தான்என்று சொல்லிவிட்டு, அகிலா எழுந்தாள்.

இதே சோஃபாவில் தான் பேசிக்கொண்டிருந்தார்களா?..தங்க வேலை எங்கே? என்று கேட்டுத் தான் டார்ச்சர் செய்தானா?’ அகிலா யோசனையுடன் மாடிப்படிகளில் ஏறினாள்.
பூஜை ரூம் வாசலில் போய் நின்றாள்.

எப்போதும், எல்லாரையும் ஆச்சரியப்படுத்துவது இந்த பூஜை ரூமின் சைஸ் தான்..’வீட்டுக்குள்ளேயே கோவில் மாதிரி கட்டியிருக்கிறாங்க மேம்என்று சரவணன் ஆச்சரியப்பட்டது ஞாபகம் வந்தது.

கோவில் மாதிரியா? கோவிலே தானா?’ என்று நினைத்தபடி அகிலா உள்ளே நுழைந்தாள். குறைந்தது 20 பேராவது ஒரே நேரத்தில் சாமி கும்பிட முடியும் என்று தோன்றியது. நேரெதிரே மூன்று செல்ஃப்கள் இருந்தன. முதல் செல்ஃபில் எதுவும் இல்லை. இரண்டாவதில் சாமி படங்கள். மூன்றாவதில் பூஜை சாமான்கள்..அப்படியென்றால், முதல் செல்ஃபில் என்ன இருந்தது? பூர்வீக நகைகள் இருந்தது லாக்கரில்..அப்படியென்றால்........’

அகிலா அதற்கு மேல் சிந்திக்கக்கூட முடியாமல், அந்த செல்ஃபையே பார்த்தாள்..’அதுவா?...அது இங்கேயா இருந்தது? அதற்காகத்தான் இத்தனை பெரிய பூஜை ரூமா? குடும்பத்தில் அனைவரும்கூடி, கும்பிட்டது அதைத் தானா?’

அதற்கு நேர்மேலே எழுதியிருந்ததைப் பார்த்தாள் அகிலா.

MARS 1024

அதற்குக் கீழே காலியான செல்ஃப்..அதற்கும் கீழே சாமி படங்கள்..கீழே பார்த்த அகிலா அதிர்ந்தாள்.

வரிசையாக இருந்த பல சாமி படங்களில், முருகர் படம் மட்டும் MARS 1024க்கு நேர்கீழே இருந்தது..

க்ளியர்!..மிகச் சரியாக முருகர் படத்திற்கு மேலே எழுதிவிட்டுப் போயிருக்கிறான்..இதை எப்படிக் கவனிக்காமல் விட்டோம்..இதை நிச்சயம் முத்துராமன் ஃபேமிலி கவனித்திருக்க வேண்டும்..அவர்களுக்கு எதனால் கொலை என்று புரிந்து தான், அமைதியாகி விட்டார்களா? ஒருமுறைகூட ஸ்ரீனிவாசன்கொலைகாரனைக் கண்டுபிடிச்சாச்சா?’ என்று கேட்கவில்லையே? இதைக் கண்டுபிடித்தால், பல விஷயங்கள் வெளியே வரும்..அதனால்தான் ஆர்வம் காட்டாமல் இருக்கிறார்களா?’

அகிலா யோசித்தபடியே, மாடிப்படிகளில் இருந்து கீழே வந்தாள்.

ஸ்ரீனிவாசன்அப்பா ரூமைப் பார்க்கலியா?” என்றார்.

இல்லை..தேவையில்லைன்னு நினைக்கிறேன்..சார், காணாமல் போன எல்லாத்தையுமே சீக்கிரம் கண்டுபிடிச்சிடுவோம்னு நம்புறேன்என்று சொல்லிவிட்டு, ஸ்ரீனிவாசனைக் கூர்ந்து பார்த்தாள் அகிலா.

அவர் சலனமேயில்லாமல்கண்டுபிடிச்சா நல்லது தான்என்றார்.

அது திரும்பக் கிடைக்கணும்னு உங்களுக்கு ஆசை இல்லியா சார்?’ என்றாள்.

கிடைக்கறதும் கிடைக்காததும் முருகனோட விருப்பம்...அவன் மேலேயிருந்துக்கிட்டு என்ன முடிவெடுக்கிறானோ, அதுக்குக் கட்டுப்படறது தானே சரி..அப்பாவும்எதையும் முடிஞ்சவரை காப்பாத்தணும்..அப்புறம் அவன் இஷ்டம்னு சொல்வார்..எங்களோட பொருள்னு முருகன் நினைச்சா, எங்களுக்கே திரும்பக் கிடைக்கும்..நடக்கறது நடக்கட்டும்என்றார் ஸ்ரீனிவாசன்.
அகிலாவும் புரிந்துகொண்டு, அங்கிருந்து வெளியேறினாள்.

(தொடரும்)

மேலும் வாசிக்க... "முருக வேட்டை_41"

முருக வேட்டை_40

ருநாள் எங்க சமூகம் சாமி கும்பிடுவோம்னு போனப்போ, அங்கே எங்க சாமியும் இல்லை, அதுக்குக் கீழே இருந்த எங்க சேமிப்பும் இல்லை.”

"அய்யோ..அப்புறம் என்ன ஆச்சு?”

என் தாத்தாவும் கோவில் பூசாரியும் போலீஸ்ல போய்க் கம்ப்ளைண்ட் கொடுத்தாங்க. எதிர்க்கட்சிகளும் இந்த விஷயத்துல உள்ளே வந்தாங்க. எத்தனையோ போராட்டம், பதிலுக்கு எத்தனையோ மிரட்டல்கள். அங்கே அப்படி ஒரு சிலையே இல்லை, நாங்க பொய் சொல்றோம்னு சொல்லிக் கேஸை மூடிட்டாங்க. எங்ககிட்ட எந்த ஆதாரமும் இல்லை. அதோட அவங்க விடலை..எங்க கோவில் இருந்த பகுதி, நாங்க வசித்த பகுதி எல்லாத்தையும் வனத்துறையோட கட்டுப்பாட்டுக்குள்ள கொண்டுவந்துட்டாங்க. எங்களை எங்க மண்ணை விட்டே விரட்டி அடிச்சிட்டாங்க.”

கவிதா என்ன சொல்வதென்றே தெரியாமல் கலங்கிப் போய் நின்றுகொண்டிருந்தாள். பாண்டியன் தொடர்ந்தான்.

அந்த அதிர்ச்சியில எங்க தாத்தா இறந்துட்டார். எங்க சமூகமும் ஆளுக்கொரு பக்கமா சிதறிடுச்சு. அந்தக் கோவில் பூசாரி குடும்பம் மருதமலை கோவில் வாசல்ல போய் உட்கார்ந்திடுச்சு. இன்னிக்கு நீங்க பார்த்தீங்களே..ஒரு பெரியவர், அவர் ஒய்ஃப், அவங்க பையன்..”

உங்களுக்கு அது தெரியுமா?”

ம்..அந்தப் பையன் ஃபோன் பண்ணிச் சொன்னான்...எங்க தாத்தா இறந்தப்புறம், எங்க அப்பா எப்படியும் அந்தச் சிலையை மீட்டே ஆகணும்னு முடிவு பண்ணாரு. எங்களுக்கு இருந்த முக்கியப் பிரச்சினை கல்வி தான்..அதுதான் உங்களோட எங்களை மிங்கிள் ஆகவிடாம, பிரிச்சுக்காட்டுச்சு. அதனால என்னை நல்லா படிக்க வச்சாரு. எங்களோட ஒரே நோக்கம், படிச்சு போலீஸ் வேலைல. அதுவும் சிபிசிஐடி ஆபீசுக்குள்ள நுழையணும்ங்கிறது தான். முருகன் அருளால, முப்பது வருசப் போராட்டத்துக்கு அப்புறம் அது நடந்துச்சு..”

ஏன் சிபிசிஐடி ஆகணும்னு முடிவு பண்ணீங்க?”

அந்தக் கேஸை கடைசியா டீல் பண்ணது சிபிசிஐடி தான். பாதியிலேயே இந்த விசாரணையை நிறுத்திட்டாங்க. சோ, உள்ளே வந்தா, என்ன நடந்துச்சுன்னு தெரிஞ்சுக்கலாம். அந்த தங்கவேல் எங்கே இருக்குன்னு தெரிஞ்சிக்கலாம்னு தான் வந்தேன்.”

அந்தக் கேஸை டீல் பண்ணது முத்துராமனா?”

ஆமா..அதனால அவரை அகிலா மூலமா நெருங்கினேன். அவர்கிட்ட நல்லாப் பழகி, தனியா அவரை மீட் பண்ற அளவுக்கு க்ளோஸ் ஆனேன். முதல்ல அவர்கிட்ட கேசுவலாப் பேசுறமாதிரி, அந்த கேஸ் பத்திப் பேசிப்பார்த்தேன். அவர் வாய் திறக்கலை. அப்புறம் ஃபோன்ல வேற பேர்ல அவரை மிரட்ட ஆரம்பிச்சேன்

மிரட்டினீங்களா? என்னன்னு?”

ஆமாம்..அந்தக் கேஸில் உண்மை என்ன, நீ என்ன பண்ணே-ன்னு எல்லாமே எனக்குத் தெரியும். நீ செஞ்ச பாவத்திற்கான தண்டனை அடையும் நேரம் இதுன்னு சொன்னேன்.”

அதுக்கு அவர் என்ன சொன்னார்?”

நான் தப்புப் பண்ணலேன்னு அவர் சொல்லலை..நீ யாருன்னு கேட்டார். உனக்கு என்ன வேணும்னு கேட்டார். நான் அந்த வேல் வேணும்னு சொன்னேன். அவர் பதிலே சொல்லலை..ரொம்ப டென்சன் ஆகிட்டார்..ஃபோனை வச்சிட்டார். அவரைத் தொடர்ந்து வாட்ச் பண்ணப்போ, ஒரு விஷயம் புதிரா இருந்துச்சு. என் ஃபோன் வந்தப்புறம், அவர் அந்த வீட்டை விட்டு வெளியேறலை. கோவிலுக்கு குடும்பத்தோட போறவர், அதுக்கப்புறம் குடும்பத்தை அனுப்பிட்டு தனியா இருக்க ஆரம்பிச்சார்

ஏன்..வெளில வர பயந்துட்டாரா?”

நானும் அப்படித் தான் நினைச்சேன். அந்தக் கொலை நடந்த அன்னிக்கு அவர் வீட்ல எல்லாரும் மருதமலை கிளம்பினாங்க..எங்க சாமிக்கும் மருதமலை முருகனுக்கும் உள்ள தொடர்பு அவங்களுக்குத் தெரியும். அதனாலதான் பாவப்பிராயச்சித்தமா, அடிக்கடி மருதமலை போவாங்க. அவர் தனியா இருக்கிறது தெரிஞ்சு, நான் அன்னிக்கு நைட் அங்கே போனேன். அந்த சிலை இப்போ, யார்கிட்ட இருக்குன்னு தெரிஞ்சிக்கிறதுக்காகப் போனேன்.”

இந்தக் கேஸ்ல எத்தனையோ பேர் சமபந்தப்பட்டிருக்காங்க. ஏன் முத்துராமனை மட்டும் குறிவச்சுப் போனீங்க?”

அந்த முன்னாள் மந்திரி-அவர் பிள்ளைங்க-அந்த வனத்துறை மந்திரி-அவங்களோட கட்சி ஆட்கள்னு பெரிய குருப்பே இதுக்குப் பின்னால இருந்துச்சு. என் நோக்கம் பழி வாங்கறதுகூட இல்லை. எங்க சாமியை மீட்கறது மட்டும் தான். அதனால, அவர் மூலமா அது இருக்கிற இடத்தைத் தெரிஞ்சுக்கிட்டு, அப்புறம் யார்கிட்ட அந்தச் சிலை இருக்கோ, அவங்களை அட்டாக் பண்ணிக்கலாம்னு நினைச்சேன். ஆனால் விதியின் விளையாட்டு வேறு விதமா இருந்துச்சு

ஏன்..அன்னிக்கு நைட் என்ன ஆச்சு?” என்று கேட்டான் சரவணன்.

(தொடரும்)

மேலும் வாசிக்க... "முருக வேட்டை_40"