Monday, April 17, 2017

இனியாவும் மாலாக்காவும் பின்னே ஷிவதாவும்...


'வாகை சூட வா’ பார்த்தபோது, இனியா ஒரு நல்ல நடிகையாக வருவார் என்று நினைத்தேன். மிக யதார்த்தமான நடிப்புடன், ஒரு கிராமத்துப்பெண்ணை பிரதிபலித்திருந்தார்.

ஆனால் கொஞ்சநாளிலேயே ஒரு குத்துப்பாட்டுக்கு டான்ஸ் ஆடினார். பிறகு கள்ளக்காதல் கேரக்டர் என்றாலே இனியா தான் என்று பெயர் வாங்கிவிட்டார். ஏன் இப்படி ஆனது என்று எவ்வலவு யோசித்தும் புரியவில்லை.

இப்போது, மாலாக்கா முறை. சிஜாவோ..ரோஸோ..ஏதோ ஒரு பெயர்..அது என்னவாக இருந்தால் என்ன, நமக்கு அவர் மாலாக்கா தான். (உங்களுக்குமா அங்கிள்னு ஷாக் ஆகக்கூடாது!)

கோழிகூவுது, மாசாணி என இரண்டு படங்களில் ஹீரோயினாக நடித்தார். கோழிகூவுது படத்தின் சில ஸ்டில்கள் கவனிக்க வைத்தன. நல்ல பாந்தமான முகம். ஒரு ஹோம்லி ஹீரோயினாக வலம் வருவார் என்று நினைத்தேன். நினைத்தபடியே மாலாக்காவாக வந்தார்.
ஆனால் அடுத்து பைரவா பார்த்தபோது நெஞ்சே வெடித்துவிட்டது. கீர்த்தி சுரேஷ் தங்கையாம்..இவர் அக்காவாம்..கீர்த்தி விஜய்க்கு ஜோடியாம்..இவர் ஒரு வில்லன் நடிகருக்கு ஜோடியாம்.றெக்க படத்தில் லஷ்மி மேனனை ஹீரோயின் என்று சொன்னதையே ஊர் நம்பவில்லை. இதில் பைராவா இப்படிச் செய்தால் படம் எப்படி ஓடும்கிறேன்?

இவர் ஏன் இது மாதிரி சப்பையான கேரக்டர்களை எல்லாம் ஒத்துக்கொள்கிறார் என்று தெரியவில்லை. கொஞ்சம் பொறுமையாக இருந்து முயற்சி செய்தால், இரண்டாம் கட்ட ஹீரோயினாக வலம் வர முடியும்.

ஒருவேளை பொருளாதார அழுத்தங்கள் இனியாவிற்கும் மாலாக்காவிற்கும் இருக்குமோ, என்னவோ!

அந்தவகையில் சரியான வழியில் பயணிப்பது ஷிவதா தான். நெடுஞ்சாலை என்று ஒரு படம் 2014ல் வந்தது. அதில் வரும் ஹீரோயின் கேரக்டர் அருமையாக இருக்கும். அதில் நல்ல நடிகை என்று பெயர் எடுத்தவர் பிறகு காணாமல் போனார். இப்போது அதே கண்களுடன் (!) திரும்பி வந்திருக்கிறார். இந்த வருடத்தில் குறிப்பிடத்தக்க பெர்ஃபார்மன்ஸ், அதே கண்கள் படத்தில்.

 
இடையில் திருமணம் வேறு ஆகிவிட்டதாக விக்கிபீடியா கிலி கிளப்புகிறது. ஆனாலும் அட்டகாசமான பெர்ஃபார்மன்ஸுடன் பார்த்த எல்லோர் மனதிலும் தந்திராவாக சிம்மாசனமிட்டு அமர்ந்துவிட்டார். அடுத்து எஸ்.ஜே.சூர்யாவுடன் மாயா இயக்குநர் படத்தில் நடிக்கப்போவதாக செய்தி பார்க்க, சந்தோசமாக இருக்கிறது.

மாலாக்காவை ஷிவதாவிடம் ட்யூசன் அனுப்ப வேண்டும்!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.