Tuesday, May 10, 2011

விபச்சாரியை விபச்சாரி என்று சொல்லலாமா?

சமீபத்தில் நண்பர் ஒருத்தர்கூடப் பேசிக்கிட்டு இருக்கும்போது விபச்சாரிகள்னு சொல்லிப்புட்டேன்..அவருக்கு உடனே கோவம் வந்துடுச்சு. ‘படிச்ச நீங்க இப்படிச் சொல்லலாமா?” ன்னு கோபமாக் கேட்டார். எனக்கு ஒன்னும் புரியலை. எப்படிச் சொல்லிட்டோம்..விபச்சாரியை நம்ம ஊர்ல இன்னும் கேவலமால்ல சொல்றோம்னு நினைச்சுக்கிட்டே ‘நான் என்னப்பா தப்பாச் சொல்லிட்டேன்’னு கேட்டேன். 

அவர் மனித உரிமை, ஆணாதிக்கம் அண்டர்வேருன்னு என்னன்னமோ சொல்லிக் கொந்தளிச்சாரு. கடைசியா ‘பாலியல் தொழிலாளி’ன்னு தான் சொல்லணும். பாவப்பட்ட ஜென்மங்க அவங்க. கருணையோட பேசுங்க’ன்னு பயங்கரமா அட்வைஸ் பண்ணாரு.

எனக்கு என்ன பதில் சொல்றதுன்னே தெரியலை. அப்புறம் அவர் போனப்புறம் எனக்குத் தெரிஞ்ச ரெண்டு விபச்..அய்யய்யோ பாலியல் தொழிலாளிகள் ஞாபகம் வந்துச்சு.
முத ஆளு எங்க கிராமந்தான். அந்தப் பொண்ணு பிஞ்சிலேயே பழுத்தது. ஆரம்பத்துல ஃப்ரீ சர்வீஸ்தான் பண்ணிக்கிட்டு இருந்துச்சு. நம்ம ஆளுகதான் நல்ல மனுசன் கையில கூட லஞ்சத்தைத் திணிச்சு ‘சும்மா வச்சுக்கோங்கண்ணே’ன்னு சொல்றவங்களாச்சே. 

அதனால் அந்தப் பொண்ணுகிட்டயும் ஜிமிக்கி, வளையல் வாங்கிக் கொடுத்து’ நாங்க எதையும் சும்மா வாங்கிக்க மாட்டோம்’னு நிரூபிச்சாங்க. அப்புறம் அந்தப் பொண்ணும் ஏதாவது பொருள் கொடுத்தவனுக்கு முன்னுரிமை கொடுக்க ஆரம்பிச்சுச்சு. 

அப்புறம் அது வீட்டுக்குத் தெரிஞ்சு, உடனே கல்யாணம் பண்ணிக் கொடுத்தாங்க. ஆடுன காலும்..னு பழமொழி சொல்வாங்களே..அதுக்கு ஏத்த மாதிரி அந்தப் பொண்ணும் ஒரே மாசத்துல திரும்பி வந்துடுச்சு. அப்புறம் பொருளுக்குப் பதிலா காசு வாங்க ஆரம்பிச்சுச்சு. 

அவங்க வீட்ல அந்தப் பொண்ணைத் திருத்த எவ்வளவோ ட்ரை பண்ணாங்க. ‘எங்களைக் கேவலப்படுத்தன்னே பிறந்திருக்காய்யா’ன்னு அந்தப் பொண்ணு ஐயா, எங்கப்பாகிட்ட சொல்றதை நான் கேட்டிருக்கேன். அது திருந்தவே இல்லை. தப்புப் பண்ணலாமா..வேணாமா-ன்னு யோசிக்கிற பலபேரும் அது வலையில விழுந்தாங்க. காடு, வயலு, ஓடைன்னு சர்வீஸ்க்கு இடம்,பொருள், ஏவல்லாம் கிடையாது. தன்னோட (ஏறக்குறைய) 35 வயசு வரைக்கும் சர்வீஸ் பண்ணுச்சு. திடீர்னு ஒருநாள் எங்கயோ கிளம்பிப் போயிடுச்சு.

ரெண்டாவது பாலியல் தொழிலாளியை நான் பார்த்தது சிங்கப்பூர் ஏர்போர்ட்ல. எங்கூட விமானத்துல அடுத்த சீட் தான் அதுக்கு. 

அது வந்து உட்காரவும் ‘என்ன வேலை செய்றீங்க?’ன்னு கேட்டேன். 

“அதைச் சொன்னா போலீஸ் பிடிச்சுட்டுப் போயிரும்’னு சொல்லிட்டுச் சிரிச்சது.

நான் டர்ர்ர் ஆயிட்டேன். போலீஸ் கேள்வி கேட்ட என்னையும் பிடிக்குமோன்னு பயம்!

அப்புறம் நாம தான் இலக்கியம்லாம் படிக்கிற ஆளாச்சே..அதனால பரிவோட “நீங்க ஏன் இந்தத் தொழிலுக்கு வந்தீங்க’ன்னு கேட்டேன்.

“என் புருஷன் ரெண்டு குழந்தையோட என்னைத் தவிக்க விட்டுட்டு செத்துப் போய்ட்டாரு. அதான் இந்தத் தொழிலுக்கு வந்துட்டேன்”ன்னுச்சு.

எனக்கு பாவமாப் போச்சு..அடடான்னுட்டு, ‘வேற வேலைக்குப் போயிருக்கலாமே’ன்னேன். அதுக்கு அது ‘வேற வேலைக்குப் போயி என்னைக்கு செட்டில் ஆகறது..சீக்கிரம் செட்டில் ஆக இதான் சரி’ ன்னு சொல்லிட்டு சிரிச்சது. 
நாகரீகக் கனவான்கள்லாம் ‘பாலியல் தொழிலாளிகள் சமூகத்தால் வஞ்சிக்கப்பட்டவர்கள். அடிமட்ட மக்கள்.’ அப்படி இப்படின்னு பேசும்போது எனக்கு இவங்க ஞாபகம் தான் வருது.

எங்க ஏரியால தீப்பெட்டித் தொழிற்சாலைகள் அதிகம். அங்க எப்பவும் வேலைக்கு ஆளுங்க தேவைப்படும். திடீர் திடீர்னு வெளியூர்க்காரங்க வந்து வேலை கேட்டு நிப்பாங்க. நம்ம ஆட்களும் வேலை கொடுத்து அங்கயே செட்டில் ஆக உதவுவாங்க.

இப்போ எங்க ஏரியால விவசாயக் கூலி வேலைக்கு ஆளுங்க கிடைக்க மாட்டேங்குது.விவசாயம் பண்றவங்க, குடும்பத்தோட காட்டுல உழைக்க வேண்டிய நிலைமை.

இப்படி இருக்குற ஒரு சமூகச் சூழல்ல ‘எனக்கு வேற வழியில்லை. அதான் உடம்பை விக்க ஆரம்பிச்சேன்’ங்கிறதும். ‘நாங்கள்லாம் வஞ்சிக்கப்பட்டவங்க’ங்கிறதும் எந்த அளவிற்குச் சரின்னு எனக்குப் புரியலைங்க..

இவங்க தெரிஞ்சோ தெரியாமலோ ‘பொம்பளை வெறும் போகப் பொருள் மட்டும் தான்’ன்னு இநத சமூகம் நினைக்க துணை போறாங்க தானே?

ஒரு விதவைப் பெண், நல்ல வழில தன் குடும்பத்தைக் கரையேத்த முடியாத சூழ்நிலையா இங்க இருக்கு?

நம்மோட சில தலைவர்களும், நடிகர்களும் விதவைத் தாயால் வளர்க்கப்பட்டவங்க தானே? அந்தத் தாய்களும் ‘சீக்கிரம் செட்டில் ஆகணும்’னு அந்தத் தொழில்ல இறங்கலையே..கஷ்டப்பட்டு உழைச்சுத் தானே தன் பிள்ளைகளை அவங்க பெரிய ஆளாக்குனாங்க?

கொத்து வேலை பாக்குற பெண்கள், பட்டாசுத் தொழிற்சாலைல வேலை பார்க்குற பெண்கள், டெய்லர்கள்னு எத்தனை எத்தனை உழைப்பாளிங்க நமக்கு மத்தியில இருக்காங்க..

அப்படி இருக்கும்போது, இந்த விபச்சாரிகளுக்கு மட்டும் வாழ முடியாத நிலை எப்படி வந்துச்சு?

சிலபேர் ரவுடிக் கும்பலால் கடத்தப்பட்டு, கட்டாயமாக இந்தத் தொழில்ல ஈடுபடுத்தப் படுறதாச் சொல்றாங்க. அவங்களை மீட்டு, நல்ல வாழ்க்கைக்கு அவங்க திரும்ப உதவலாம். அதை விட்டுட்டு, பரிதாபம் காட்டுறேங்கிற பேர்ல அவங்க செய்யுற தொழிலை சரின்னு ஒத்துக்கிறது நியாயமா?

நாகரீகம்ங்கிற பேர்ல ரொம்ப ஓவரா கனிவு காட்டுறமோன்னு தோணுது. 

எப்படி யோசிச்சும் இந்த விபச்சாரிகள் மரியாதைக்கு உரியவர்களா என்பது எனக்குத் தெரியலை..என்ன தான் கோட்டுசூட்டுப் போட்டாலும் உள்ளுக்குள்ள நான் இன்னும் ‘கிராமத்துக் கோவணாண்டி’ தாண்ணே..அதனால யாராவது நாகரீகமானவங்க பின்னூட்டத்துல எனக்குப் புரியற மாதிரி விளக்குனா, புண்ணியமாப் போகும்.

நன்றி!

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

156 comments:

  1. இதைப்பற்றி நிறைய பேசமுடியும், சிங்கப்பூருக்கு மனைவியை விபச்சாரதுக்கு அனுப்பிவைத்த கனவர் கதையெல்லாம் இருக்கிறது.

    ReplyDelete
  2. @கே.ஆர்.பி.செந்தில் அண்ணன் கமெண்ட்கூட அதிரடியா இருக்கே..விபச்சாரத்துக்கு அனுப்பினாரா..இல்லே பாலியல் தொழிலுக்கு அனுப்பினாரா..

    ReplyDelete
  3. விபச்சாரி என்ற சொல் தவறானதே சகோ. அவள் எப்படி பாலியல் தொழில் ஈடுபடத் தொடங்கி இருந்தாலும், அப்படி சொல்லக் கூடாது. அது மட்டுமின்றி அது பெண்ணை மட்டும் குறிக்கும் சொல்லாகவும் வருகின்றது. இன்றையக் காலத்தில் பெண் மட்டும் தன் விபச்சாரத்தில் ஈடுபடுகின்றாளா?

    ஆண்களும் விபச்சாரத்தில் ஈடுபட்டுத் தான் வருகின்றார்கள். பழங்காலம் முதல் இன்று வரை, ஆணின் தேவைக்காக பெண், ஆண், திருநங்கை ஆகிய மூவினமும் விபச்சாரத்துக்காகப் பயன்படுத்தப் பட்டார்கள்.

    ReplyDelete
  4. ஆனால் பெண் இன்று பொருளாதார சுதந்திரம் பெறவும், ஆண், பெண் ஆகிய இருவருக்காகவும் ஆண், பெண், திருநங்கை விபச்சார சேவைகளில் ஈடுப்படுத்தப் பட்டு வருகின்றார்கள்.

    அப்படி இருக்க ஆணுக்காக பயன்படும் பெண்ணை மட்டும் விபச்சாரி என்பது சரியாகுமா?

    பாலியல் தொழிலாளர் என்பதே சரியானப் பதம். பாலியல் தொழிலாளர் என்பது ஆணாகவோ, பெண்ணாகவோ, திருநங்கையாகவோ இருக்கலாம் ........ !!!

    ReplyDelete
  5. விபச்சாரம் என்பது தொழிலாக தமிழ்நாட்டில் அனுமதிக்கப்படவில்லை... அனுமதிக்கப்படாவிட்டால் விபச்சாரம் இங்கு நடக்கவில்லையா என்ன.. ஒவ்வொரு 5 ச.கி.மீக்கும் ஒரு வீட்டிலாவது விபச்சாரம் நடந்துத் தான் வருகின்றன .... !!!

    மதப் பழமைவாத நாடுகளில் இருந்து மதம் துறந்த நாடுகள் வரை விபச்சாரம் இருக்கின்றன ........... !!!

    ReplyDelete
  6. இன்னொன்று விபச்சாரம் செய்யும் படி ஒருவர் மற்றவரை வற்புறுத்தி ஈடுபடச் செய்வது அப்பட்டமான மனித உரிமை மீறல் - அது கணவனாக, மனைவியாக, பெற்றோராக, உற்றாராக, நண்பராக, அறியாதவராக எவர் ஆனாலும் அது குற்றமே ....

    ReplyDelete
  7. நல்லதொரு பதிவு சகோ.

    ஆனால் விபச்சாரிகள் மரியாதைக்கு உரியவர்களாக இல்லை என்பதை நாம் எப்படி சொல்ல முடியும். ஒவ்வொரு மனிதனும் மற்ற மனிதனை மதிக்க வேண்டும். விபச்சாரத் தொழிலில் ஈடுபடுவோருக்கு அவர் விரும்பும் பட்சத்தில் வேற்றுத் தொழில்களில் ஈடுபட உதவ வேண்டும் .............

    ஆனால் மனித குலம் உள்ளவரை விபச்சாரம் அழியாது சகோ....

    இதற்கு என்ன தீர்வு என்பதை இளைய சமூகம் சற்றே சிந்திக்க வேண்டும் ...........

    ReplyDelete
  8. @இக்பால் செல்வன்//ஆனால் விபச்சாரிகள் மரியாதைக்கு உரியவர்களாக இல்லை என்பதை நாம் எப்படி சொல்ல முடியும். // மாற்றுத் தொழிலுக்கான வாய்ப்புகள் இருந்தும் விபச்சாரம் செய்வதேன்?

    ReplyDelete
  9. nalla alasal boss...
    naanum unga pakka paarvaiyil thaan irukken...

    ReplyDelete
  10. ஒரு ஆணுடன் தானே விபச்சாரம் செய்கிறாள் அப்படிஎன்றால் ஆணுமல்லவா குற்றவாளி, ஆனால் ஆண்களை விட்டு பெண்ணை மட்டும் வஞ்சிப்பது எனக்கு சரியில்லை என்று தான் தோன்றுகிறது!

    ReplyDelete
  11. @ செங்கோவி - ஒரு விபச்சாரம் நடக்கின்றது என்றால் - அதுக்கு உடந்தையாக இருக்கும் கபோதி வாடிக்கையாளர்களை விட்டுவிட்டு அவர்களை மட்டும் வன்மையாக நாம் பார்ப்பது எப்படி நியாயம் ............

    மாற்றுத் தொழிலுக்கான வாய்ப்புகள் - என்ன வாய்ப்புக்கள் கொஞ்சம் சொல்லினால் நல்லா இருக்கும் .............

    தமிழ்நாட்டில் எவ்வளவு பெயர் விபச்சாரத்தில் இருக்கின்றார்கள் தெரியுமா சகோ ??? எத்தனைப் பெயர் வயிற்றுப் பிழைப்புக்காக விபச்சாரம் செய்கின்றார்கள் ?? எத்தனைப் பெயர் சொகுசாக வாழ விபச்சாரம் செய்கின்றார்கள் ?? எத்தனைப் பெயர் வற்புறுத்தலின் பெயரில் விபச்சாரம் செய்கின்றார்கள் ?? எத்தனைப் பெயர் ஹைட்டெக் விபச்சாரி ???

    முதலில் யார் யார் எல்லாம் விபச்சாரிகள் என்றே தெரியவில்லை ? மற்றது அதில் விருப்பமே இல்லாமல் எத்தனை பேர் ஈடுபட்டுள்ளார்களே என்றே தெரியாது ? அவர்களுக்கு எப்படியான மாற்றுத் தொழில் மற்றும் வாழ்வதற்கு வசதிகள் செய்துக் கொடுக்கப்பட்டுள்ளது ??

    பொத்தாம் பொதுவாக பொம்பளைங்க விபச்சாரி ? அவங்களுக்கு என்ன மண்ணுக்கு மரியாதை ? என்ன செஞ்சாலும் அவளுக திருந்தவே மாட்டாளுக என்று சொல்வது நியாயமா?

    ReplyDelete
  12. உழைக்காமல்(?!) வருமானம் வருவதை ருசிபார்த்த பின்பு அதையே தொடர்கின்றனர். ஆண்கள் மட்டும் உத்தமர்களா? இன்றைய லேட்டஸ்ட் டிரண்ட் என்ன தெரியுமா? ஆண் பாலியல் தொழிலாளர்கள் ஏதேனும் ஒரு பொது இடத்தில் நிற்க, அவரை அள்ளிக்கொண்டு செல்கின்றனர் காரில் வரும் பணக்கார ஆண்ட்டிகள். இந்த லட்சணத்தில் இருக்கிறது நாடு.

    ReplyDelete
  13. முதலில் பெண்கள் மட்டுமா விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்கள் என நினைக்கின்றீர்கள் ?? இல்லை ஆண்களும், திருநங்கைகளும் கூட உள்ளார்கள். தொலைக் காட்சியில் அழகிகள் கைது என செய்தி வருகின்றதே. அதில் ஏழைப் பாலியல் தொழிலாளிகளைத் தான் போடுவார்கள் ஹைட்டெக் விபச்சாரம் வெளியில் வருவதில்லை, அரசியலில் பலிக் கடாவாக்கப்படும் சினிமா நடிகைகள் உட்பட பல பெண்களினைப் பற்றி இந்த சமூகம் எதாவது செய்தது உண்டா?

    விபச்சாரத்தில் கீழ்தட்டு முதல் மேல்வர்க்கம் வரை ஈடுபடும் ஆண், பெண், திருநங்கையரில் 90 சதவீதம் வற்புறுத்தலின் பெயரால் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப் படுபவர்கள் .......... என்றுத் தெரியுமா நமக்கு ........

    ReplyDelete
  14. ஒன்னும் இல்லீங்க.. விபச்சாரி என இழிவாகப் பேசும் நாம் .. ஒரு விபச்சாரி மனம் திருந்தி நல்ல வேலைக்கு சென்று வாழ எப்படியான சந்தர்பங்களைக் கொடுத்துள்ளோம் ..............

    விபச்சாரியாக இருந்து வேறு தொழிலுக்கு செல்லும் ஒருவருக்கு வீடுக் கொடுப்போமா .... பாதுகாப்புக் கொடுப்போமா ... அல்லது அவர்களை சமூகத்தில் அரவணைத்துக் கொள்ள வழி இருக்கா.. அல்லது வாடிக்கையாளனாக இருந்த எந்த பெட்டைமகனாவது அவரை மணம் முடிக்க முன்வருவாரா?

    ஏழைப் பாலியல் தொழிலாளிக்கு கொடுக்கப்பட்ட மாற்றுத் தொழில் என்னவென்று போய் பார்த்ததுண்டா சகோ. கிழிந்த துணித் தைப்பது, பொம்மை செய்வது, மெழுகு வர்த்தி செய்வது -- இன்றையக் காலக் கட்டதில் இதனை செய்து ஒரு வாரம் சாப்பாடவது வாங்க முடியுமா ???

    அவர்களுக்கு social assitance அரசு எவ்வளவுக் கொடுக்கும், அவர்கள் ஒரு கல்விக் கற்க எந்த உதவி செய்யப்படுகின்றது, பாலியல் தொழிலாளி மனம் திருந்தி வந்தால் பள்ளியிலோ, கல்லூரியிலோ இலவசக் கல்விக் கொடுப்பார்களா?

    ReplyDelete
  15. ஒரு கருமாந்திரத்தையும் செய்ய மாட்டோம் --- பாலியல் தொழிலாளிகளில்

    வர்க்க ரீதியாக Lower, Middle, Upper என மூன்று பிரிவுகளில் உள்ளார்கள்.

    நேர ரீதியாக part time, full time, seasonal, casual என்று உள்ளார்கள்.

    அவர்களில் பலர் பாலியல் அடிமைகளாக இருக்கின்றார்கள். பலர் வேறு வழியோ, உதவியோ இல்லாமல் வாழ்கின்றார்கள். பலர் குடும்பத்தவர்களாலேயே வற்புறுத்தப்பட்டு பாலியல் தொழில் ஈடுபடுகின்றார்கள். சிலர் குடும்பத்தவராக இருந்துக் கொண்டே பகுதி நேரமாக பாலியல் தொழில் இருக்கின்றார்கள்.

    சிலருக்கு பணியிடத்தில் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு பாலியல் தொழில் ஈடுப்படப் படுத்தப் படுகின்றார்கள்...... !!!

    இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக பாலியல் தொழில் தள்ளப்படுகின்றார்கள் ..........

    ReplyDelete
  16. முதலில் தேவையானது - பாலியல் தொழிலை அங்கீகரிப்பதே. இதனால் எத்தனைப் பேர் பாலியல் தொழில் ஈடுபடுகின்றார்கள் என்பதை வெளிப்படுத்த முடியும்.

    இரண்டாவது பாலியல் தொழில் இருந்து விடுபட நினைப்பவர்களுக்கு

    உதவித் தொகை, வீடு, மாற்றுத் தொழில் பயிற்சி அல்லது கல்விப் பயிற்சி - அதற்கான தொகையை அரசு - பகுதி உதவியாக பகுதி கடனாக அளிப்பது, வேலை வாய்ப்புப் பெற்றுத் தர உத்தரவாதம் அளிப்பது.

    சுய உதவிக் குழுக்கள் மூலமாக பாலியல் தொழில் இருந்து விடுபட ஊக்குவிப்பது போன்றவற்றை செய்யலாம்.

    பாலியல் தொழில் இருந்து விடுபட விருப்பம் இல்லை என்பவர்களை நாம் ஒன்றும் செய்ய முடியாது .......... .... !!!

    அத்தொழிலை அங்கீகரிப்பதும், பாலியல் பகுத்தறிவை, நோய் தடுப்பு முறைகளை ஏற்படுத்துவதும், அவர்களிடம் வரி வசூலிப்பதுமே ஆகும். ஆனால் மாற்று ஏற்பாடுகளும், உதவிகளும், பாதுகாப்பும் இருக்கும் பட்சத்தில் இன்று பாலியல் தொழில் முழுநேரமாக ஈடுபடும் 90 சதவீதம் மீளத் திரும்பும் வாய்ப்பு உள்ளது சகோ.

    ReplyDelete
  17. // உழைக்காமல்(?!) வருமானம் வருவதை ருசிபார்த்த பின்பு அதையே தொடர்கின்றனர். //

    அனைவரும் அப்படியாக இல்லை என்பது எனதுக் கருத்து ... ஆண்கள் ஆண்களுக்காக விபச்சாரத்தில் ஈடுபடுவதையும் தாங்கள் அறியவில்லைப் போலும் ........... !!!

    முதலில் இதுக் குறித்து விழிப்புணர்வும் - பாலியல் தொழில் இருந்து விடுபட நினைப்பவர்களுக்கு முழு உதவியும் செய்ய முற்படுவோம் ...

    அப்புறம் மற்ற கேஸ்களைப் பற்றி முடிவுக்கு வரலாம் .........

    காவல் துறையின் மெத்தனமும், ஒழுக்கமற்ற செயல்களும் காரணமே .. வெறும் பாலியல் தொழிலாளியை மட்டும் குற்றம் சொல்லி பயனில்லை - அவர்களின் வாடிக்கையாளர்கள் - பாலியல் தொழில் நடத்துபவர்கள் - அனைவரையும் வழிக்குக் கொண்டு வர முனைய வேண்டும் .

    ReplyDelete
  18. ஒருவரை மதிப்பதும்,மதிக்காததும் உங்கள் இஷ்டம்.இரண்டு பாலியல் தொழிலாளிகளிடம் மட்டும் கருத்து கேட்டு பதிவிட்டது சரியான கருத்தை கொடுக்காது.எதற்கு திரைப்பட நடிகைகளின் புகைப்படம் இங்கே?பதிவு மதிக்கும் படி இல்லை.(எனக்கும் கருத்து சொல்ல உரிமை இருக்கு)

    ReplyDelete
  19. இக்பால் இந்த பதிவுக்கு பதில் போடக்கூடாது என்றிருந்தேன். பதிவர் பெண்களை மிக கேவலமாக பார்ப்பவர்..என்பதால்..

    இருப்பினும் உங்க கருத்துகள் கண்டு மிக மகிழ்சியடைகிறேன்.. தயவுகூர்ந்து இதை பதிவாக போடவும் உங்க தளத்தில்..

    ReplyDelete
  20. வரதட்சணை வாங்கிவிட்டு மனைவியோடு தாம்பத்யம் செய்தவரை என்னெவென அழைப்பது?..

    விபச்சாரர் என்றா?..

    ReplyDelete
  21. எதற்கு திரைப்பட நடிகைகளின் புகைப்படம் இங்கே?பதிவு மதிக்கும் படி இல்லை//

    நானும் இதையே சொல்ல நினைத்தேன்.

    ReplyDelete
  22. அது மட்டுமல்ல இல்லற வாழ்வில் விருப்பமில்லமலே சமூக கட்டாயத்துக்காக , குழந்தை , குடும்பத்துக்காக , பணத்துக்காக , தாம்பத்யத்தில் கடனேன்னு இணையும் அனைவருமே விபச்சாரர், விபச்சாரியே..

    ReplyDelete
  23. //அந்தப் பொண்ணு பிஞ்சிலேயே பழுத்தது//
    அப்பிடியாண்ணே?

    //தப்புப் பண்ணலாமா..வேணாமா-ன்னு யோசிக்கிற பலபேரும் அது வலையில விழுந்தாங்க//
    :-)

    //அப்புறம் நாம தான் இலக்கியம்லாம் படிக்கிற ஆளாச்சே..அதனால பரிவோட “நீங்க ஏன் இந்தத் தொழிலுக்கு வந்தீங்க’ன்னு கேட்டேன்//
    எலக்கியம் படிக்கிறவுகன்னா இப்பிடிக் கேக்கனுமாண்ணே....நோட் பண்ணிக்கிறேன்! :-)

    ReplyDelete
  24. //எண்ணங்கள் 13189034291840215795 said... [Reply]
    எதற்கு திரைப்பட நடிகைகளின் புகைப்படம் இங்கே?பதிவு மதிக்கும் படி இல்லை//

    நானும் இதையே சொல்ல நினைத்தேன்.//

    அவிங்க எல்லாம் பாலியல் சமூக சேவை தொடர்பான விவாத அரங்கு ஒன்றில் பங்கேற்றபோது எடுத்த படம் அது!
    உங்களுக்குத் தெரியாதா சத்யராஜ், சூர்யா எல்லோரும் பத்திரிகையாளர்களைப் பாராட்டிக் கூட நிறையப் பேசினாங்களே!

    ReplyDelete
  25. அண்ணன் சரியான படங்களைத்தான் போட்டிருக்கீங்க! இவங்களைப்பற்றி எழுதினா..வேணாம் பிலாக் நாறிடும்! :-)

    ReplyDelete
  26. @இக்பால் செல்வன்//பொத்தாம் பொதுவாக பொம்பளைங்க விபச்சாரி ? அவங்களுக்கு என்ன மண்ணுக்கு மரியாதை ? என்ன செஞ்சாலும் அவளுக திருந்தவே மாட்டாளுக என்று சொல்வது நியாயமா?// இக்பால், நான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாம் திசை திருப்புகிறீர்களோ என்று தொன்றுகிறது. பல ஏழ்ழி/உழைக்கும் பெண்கள் கஷ்டபட்டு, உழைத்து கௌரவமாக வாழப் போராடுகின்றனர். அவர்களால் மட்டும் முடிகின்ற விஷயம், விபச்சாரிகளால் ஏன் முடியவில்லை என்பதே அடிப்படைக் கேள்வி. ஏன் இந்தத் தொழிலில் இறங்குகிறார்கள் என்று அடிப்படையைக் கேட்கின்றேன்..நீங்கள் மாற்றுத் தொழில் பற்றிப் பேசுகின்றீர்கள். //சிலபேர் ரவுடிக் கும்பலால் கடத்தப்பட்டு, கட்டாயமாக இந்தத் தொழில்ல ஈடுபடுத்தப் படுறதாச் சொல்றாங்க. அவங்களை மீட்டு, நல்ல வாழ்க்கைக்கு அவங்க திரும்ப உதவலாம். அதை விட்டுட்டு, பரிதாபம் காட்டுறேங்கிற பேர்ல அவங்க செய்யுற தொழிலை சரின்னு ஒத்துக்கிறது நியாயமா?// இதுவும் பதிவுல இருக்கு பாஸ்..விபச்சாரிங்ககிட்ட போற ஆண்களும் மரியாதிக்குரியவர்கள் இல்லை, அது பிணத்துடன் புணர்வதைப் போன்றது. இதை நான் பதிவில் சொல்லாமல் விட்டது தவறு தான்.

    ReplyDelete
  27. @கந்தசாமி.ஆணையும் குறை சொல்வோம் கந்தசாமி..அதைவிடுத்து, ஆணைச் சொல்லலை, அதனால பெண்ணையும் சொல்ல வேண்டாம்னு எப்படிச் சொல்றீங்க..

    ReplyDelete
  28. @! சிவகுமார் !சிவா, ஆண் விபச்சாரர்கள் பற்றி எனக்குத் தெரியவில்லை. இருந்தால் பதிவு கேட்ட கேள்வி அவர்களுக்கும் பொருந்தும்..பல வேலைவாய்ப்புகள் இருந்தும், அந்தத் தொழிலுக்குப் போவதேன்..

    ReplyDelete
  29. @இக்பால் செல்வன்//முதலில் தேவையானது - பாலியல் தொழிலை அங்கீகரிப்பதே. இதனால் எத்தனைப் பேர் பாலியல் தொழில் ஈடுபடுகின்றார்கள் என்பதை வெளிப்படுத்த முடியும்.// சாரி பாஸ்..உங்க மற்ற கருத்துகளோடு ஒத்துப்போக முடிந்த என்னால்,, இந்தக் கருத்தோடு ஒத்துப்போக முடியாது..மும்பையில் அங்கீகரித்ததன் மூலம், எத்தனை பெண்களை விடுபடவைத்தீர்கள்? சிங்கப்பூரில் அங்கீகரித்ததின் மூல்ம், இந்தியப் பெண்களும் அங்கு போய் சீரழியத்தானே வழிவகுத்துள்ளீர்கள்..பாங்காங் பற்றித் தெரியாதா உங்களுக்கு..பாலியல் தொழிலை அங்கிகரிப்பது, மேலும் பலரின் வாழ்வைச் சீரழிக்கவே உதவும்..

    ReplyDelete
  30. @சார்வாகன்//இரண்டு பாலியல் தொழிலாளிகளிடம் மட்டும் கருத்து கேட்டு பதிவிட்டது சரியான கருத்தை கொடுக்காது.// சார், என் சொந்த அனுபவத்தை மட்டுமே நான் பதிவில் சொல்ல முடிஉம்..உண்மையில் இந்தப் பதிவை எழுதுமுன் சில நபர்களிடமும், நண்பர்களிடமும் விவாதித்து விட்டே எழுதினேன்..எதிர்ப்பு வரும் என்பதையும் அறிவேன்..யாராவது விளக்குங்கன்னு தானே போட்டிருக்கேன்.

    ReplyDelete
  31. @சார்வாகன்//எதற்கு திரைப்பட நடிகைகளின் புகைப்படம் இங்கே?பதிவு மதிக்கும் படி இல்லை// நிஜமாவே தெரியாமத் தான் கேட்கீங்களா..புவனேஷ்வரியும் பரிதாபத்திகுரிய பாலியல் தொழிலாளி..பலமுறை போலீஸால் விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள்.. அடுத்த புகைப்படத்தில் இருப்பவர்கள் புவனேஷ்வரியால் ‘விபச்சாரிகள்’என்று குற்றம் சாட்டப்பட்டவர்கள்.பதிவிற்குச் சம்பந்தமில்லாத ஃபோட்டோ அல்ல அது.

    ReplyDelete
  32. @எண்ணங்கள் 13189034291840215795//இக்பால் இந்த பதிவுக்கு பதில் போடக்கூடாது என்றிருந்தேன். பதிவர் பெண்களை மிக கேவலமாக பார்ப்பவர்..என்பதால்// உங்க புரிதலுக்கு நன்றி நண்பரே.

    ReplyDelete
  33. @எண்ணங்கள் 13189034291840215795//இக்பால் இந்த பதிவுக்கு பதில் போடக்கூடாது என்றிருந்தேன். பதிவர் பெண்களை மிக கேவலமாக பார்ப்பவர்..என்பதால்// உங்க புரிதலுக்கு நன்றி நண்பரே.

    ReplyDelete
  34. @எண்ணங்கள் 13189034291840215795ஆண்களை விபச்சாரர் என்று அழைப்பது பற்றி எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை நண்பரே.

    ReplyDelete
  35. @எண்ணங்கள் 13189034291840215795//அது மட்டுமல்ல இல்லற வாழ்வில் விருப்பமில்லமலே சமூக கட்டாயத்துக்காக , குழந்தை , குடும்பத்துக்காக , பணத்துக்காக , தாம்பத்யத்தில் கடனேன்னு இணையும் அனைவருமே விபச்சாரர், விபச்சாரியே..// விபச்சாரின்னி சொல்றதா..பாலியல் தொழிலாளின்னு சொல்றதா என்பது தான் எனது குழப்பமே..உங்க பின்னூட்டத்தால் அது தீர்ந்தது.

    ReplyDelete
  36. @சார்வாகன்//Negative Vote!!!!!!!!!!!!!!!!!// உங்க நேரத்தைச் செலவழிச்சு ஓட்டுப் போட்டதுக்கு நன்றி நண்பரே.

    ReplyDelete
  37. @சார்வாகன்//(எனக்கும் கருத்து சொல்ல உரிமை இருக்கு)// ஆமா..அதுக்குத்தானே பின்னூட்டப்பெட்டி வச்சிருக்கேன்..தொடர்ந்து வாருங்கல்..நன்றி.

    ReplyDelete
  38. @ எண்ணங்கள் 13189034291840215795

    //இக்பால் இந்த பதிவுக்கு பதில் போடக்கூடாது என்றிருந்தேன். பதிவர் பெண்களை மிக கேவலமாக பார்ப்பவர்..என்பதால்.//

    விபச்சாரியை பற்றி கேவலமாக எழுதினால் ஏதோ ஒட்டு மொத்த பெண்களையும் பதிவர் விமர்சித்ததாக நினைத்துக்கொண்டீர்கள் போல.


    //வரதட்சணை வாங்கிவிட்டு மனைவியோடு தாம்பத்யம் செய்தவரை என்னெவென அழைப்பது?..
    விபச்சாரர் என்றா?.. //

    வரதட்சனை கொடுத்து தாம்பத்தியத்தில் ஈடுப்படும் பெண்களை என்னவென்று சொல்வது? ஆண்களை குறைசொல்வதர்க்கே ஒரு கூட்டம் அந்த கூட்டத்தின் கோஷங்களை கேட்டு நீங்களும் அப்படியே பின்னூட்டும் போடுவது வருத்தமே.

    உங்கள் கூற்றுப்படி வரதட்சனை வாங்கும் ஆண் விபச்சாரர் என்றால் வரதட்ச்சனை கேட்க்கும் பெண்(மாமியார்) விபச்சார தரகர்தானே? வரதட்சனை வாங்கமாட்டேன், வேண்டாம் என்று சொல்ல பல ஆண்கள தயார் ஆனால் இதுற்கு முட்டுக்கட்டையே மாமியார் என்ற "பெண்தான்". உங்களுடைய வரதட்சணைக்கு எதிரான உபதேசம், விழிப்புணர்வு போன்றவற்றை எல்லாம் முதலில் பெண்களிடம் செய்யுங்கள். பெண்களின் பேராசையும், சமுதாய அக்கறை இல்லாத நிலையம் குறையும் வரை நீங்கள் சொல்லும் இந்த வரதட்சனை விபச்சாரத்தை ஒழிக்க முடியாது.

    வரதட்சணைக்கு எதிராக குரல் கொடுங்கள், பதிவு எழுதுங்கள், பின்னூட்டம் போடுங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் ஆனால் இதிலும் ஆணாதிக்கம் என்ற பெண்கள் பாதுகாப்பு கேடயத்தை நீங்கள் பயன்படுத்த நினைத்தால் எனது பதில் இப்படித்தான் இருக்கும்.

    ReplyDelete
  39. உங்கள் கூற்றுப்படி வரதட்சனை வாங்கும் ஆண் விபச்சாரர் என்றால் வரதட்ச்சனை கேட்க்கும் பெண்(மாமியார்) விபச்சார தரகர்தானே?//

    ஆம். மறுப்பேதுமில்லை..இதற்கு ஆதரவாக எவர் இருப்பினும் அவர்களுமே..

    //விபச்சாரியை பற்றி கேவலமாக எழுதினால்//

    இது போதாதா?.. அதோடு ஆபாச படமும், நடிகைகள் படமும் தேவையில்லாமல்..

    அவர்களுக்கென குடும்பம் இல்லையா?..புவனேஸ்வரி சொன்னார் என்பதற்காக நம்பிடுவதா?.. ஆதாரம் இருக்குதா?.. அப்படியென்றால் அவர்களோடு இணைந்த ஆண்கள் பற்றிய படம் ஏதுமில்லையே ஏன்?..

    ReplyDelete
  40. ஆனால் இதிலும் ஆணாதிக்கம் என்ற பெண்கள் பாதுகாப்பு கேடயத்தை நீங்கள் பயன்படுத்த நினைத்தால்//

    ஆம் ஆணாதிக்கம்தான்.. ஆனால் நீங்க நினைப்பது போல ஆணாதிக்கம்னா ஆணிடம் மட்டும்தான் இருக்கும் என்பதுதான் தவறு..

    நீங்க சொன்ன அந்த மாமியாரிடம் இருப்பது என்ன?.. ஆணாதிக்கம்தான்..

    Patriarchal முறைப்படியே சமூகம் வளர்ந்துள்ளது..அதன் பாதிப்பில்தான் பெண்களும் ஆணாதிக்கத்தை ஏற்றுக்கொண்டது/கொள்ளவைக்கப்பட்டது..

    இந்த பதிவில் பாலியல் தொழிலாளியை பற்றி விமர்சனம் செய்யுமுன் , அதை வளர்க்கும் ஆண்கள் பற்றி விமர்சனமில்லை.. அவர்கள் படமுமில்லை..

    ஏதோ பெண் மட்டும்தான் குற்றவாளி என்ற பார்வையை தவிர்க்காதவரையில் இச்சமுகம் ஒருபோதும் முன்னேறாது..


    இக்பால் செல்வன் கருத்தே என் கருத்தும்..

    ReplyDelete
  41. பாலியல் தொழிலாளி வயிற்றுப்பசிபோக்க உடல் விற்று சம்பாதிக்கிறாள் என வைப்போம்.

    ஆனால் புகழ் சம்பாதிக்க , அதன் மூலம் பணமும் சம்பாதிக்க , காமத்தை, ஆபாசத்தை எழுதும் எழுத்தாளர்களை எப்படி அழைக்கலாம்?.. எழுத்து பாலியல் தொழிலாள்கள் என்றா?..


    சினிமாவில் காமத்தை காட்ட வைத்து பணம் சம்பாதிப்பவர்களை , எப்படி அழைக்கலாம்.?..

    அதை பார்த்து ரசிக்கும் நாம் நம்மை எப்படி அழைக்கணும்.?..

    அதே காம படத்தை நம் வலைப்பூவில் போடும் நாம் ???.

    ReplyDelete
  42. தாம்பத்யத்தில் கடனேன்னு இணையும் அனைவருமே விபச்சாரர், விபச்சாரியே..//

    தொப்பி , இதில் பெண்ணையும் சேர்த்துத்தான் சொல்லியிருக்கிறேன்.. ஆணை மட்டுமல்ல..

    மொத்தத்தில் நாமெல்லோருமே Hypocrites என ஒத்துக்கொள்ளும்போது மட்டுமே சமூக பிரச்னை குறித்து வேரிலிருந்து அலச ஆராய முடியும்.. முகமுடி போட்டுக்கொண்டு சுட்டும்போதல்ல..

    ReplyDelete
  43. @THOPPITHOPPIதொப்பி, வருகைக்கு நன்றி...இதே பதிவிலேயே உழைக்கும் பெண்களைப் பற்றுஇக் குறிப்பிட்டுள்ளோம்..அவர்களை மதிப்பது சரி, ஆனால் ஏன் பெண் என்ற ஒரே காரணத்திற்காக விபச்சாரிகளை மதிக்க வேண்டும் என்ற்யு கேட்டால், திரும்ப திரும்ப நீ ஏன் ஆணைச் சொல்லலை, ஆணாதிக்கம்னு கிளைப்பிள்ளை மாதிரிப் பேசறாங்களே..விபச்சாரிகள் பல குடும்பப் பெண்களிம் வாழ்வையும் கெடுப்பவர்களே என்பதுகூடவா இவர்களுக்குத் தெரியவில்லை..சீர்திருத்தவாதியா இருக்க வேண்டியது தான்..

    ReplyDelete
  44. @எண்ணங்கள் 13189034291840215795// அப்படியென்றால் அவர்களோடு இணைந்த ஆண்கள் பற்றிய படம் ஏதுமில்லையே ஏன்//

    அய்யா, நான் புவனெஷ்வரி வீட்டுக்குள்ள போயா ப்டம் எடுக்க முடியும்...புவனேஷ்வரிகிட்ட போனவங்க படம் உங்ககிட்ட இருந்தாக் கொடுங்க போடுறேன்.இதுக்கொரு வழக்கா..பதிவை நல்லாப் படிங்க..இதுல குடும்பப்பெண்களைப் பத்தி எதுவும் சொல்லி இருக்கா?..விபச்சாரிகளைப் பத்தி மட்டும்தானே சொல்லி இருக்கு..அப்புறம் ஏன் ஒட்டுமொத்த பெண்களையும் இழிவுபடுத்தீட்டதா சீன் போடப் பாக்கீங்க?

    ReplyDelete
  45. @எண்ணங்கள் 13189034291840215795//நீங்க சொன்ன அந்த மாமியாரிடம் இருப்பது என்ன?.. ஆணாதிக்கம்தான்// இதென்னய்யா அநியாயமா இருக்கு..அது ஆணாதிக்கமா, பணத்தாசையா, அந்தஸ்தை கூட்டிக்காட்டச் செய்யப்படும் இழிசெயலா..உங்களுக்கு எதைப் பார்த்தாலும் ஆணாதிக்கமாவே தெரியுது போலிருக்கே..நான்கூட என் பதிவு மட்டும் தான் அப்படித் தெரிஞ்சிருச்சோன்னு பயந்துட்டேன்.

    ReplyDelete
  46. இதுல குடும்பப்பெண்களைப் பத்தி எதுவும் சொல்லி இருக்கா?..விபச்சாரிகளைப் பத்தி மட்டும்தானே சொல்லி இருக்கு..//

    மன்னிக்கவும் நீங்க பொதுபுத்தியில் பேசுகின்றீர்கள்.

    குடும்பப்பெண்கள் என்றால் என்ன, பாலியல் தொழிலாளி என்றால் என்ன?.. முதலில் இருவரையும் மனிதர்களாக பார்க்க பழகுவோம்..

    நம் சமூகம் நமக்கு சில கற்பிதம் தந்துள்ளது.. எதெல்லாம் தவறாக பார்க்கணுமோ அதையெல்லாம் தவறாக பார்க்காது.. எதையெல்லாம் பாவமாக பார்க்கணுமோ அதையெல்லாம் குற்ற மனப்பான்மையோடே பார்க்கிறது..

    சரி ஒரு கேள்வி கேட்கிறேன் அதற்குள்ளே பதில் இருக்கு .புரியமுடியுதான்னு பாருங்கள்..


    " ஒரு கோடி ரூபாய் தருகிறேன் என சொன்னால் எந்த குடும்ப பெண்ணாவது பாலியல் தொழிலுக்கு செல்வாரா ?"

    உலகிலேயே மிக பரிதாபப்படவேண்டிய தொழில் பாலியல் தொழில்.. குமட்டிக்கொண்டு வரும் குடிகாரனுக்கும், கண்ட நோயுடையவனுக்கும் பசியாற்றணும்.. யோசித்து பாருங்கள்..அந்த அருவருப்பை.. இதைவிட வேறு தொழில் நாகரீகமாக இருக்குமானால் போக மாட்டார்களா என்ன?..


    காதல் கணவருக்கே தினம் தாம்பத்யம் வழங்க முடியாமல் இருக்கக்கூடிய குடும்பப்பெண்கள் இருக்கையில் , கஸ்டமர் விரும்பும்போதெல்லாம் போகணும் என்றால் எத்தனை வேதனை அவள் மனதில் இருக்கும் னு எப்பவாவது எண்ணியிருப்போமா?..

    அடுத்தவனின் எச்சிலைக்கூட நாம் சகிக்க மாட்டோம்.. அப்படியிருக்க???????????

    அதற்காக நான் இந்த தொழில் வளரணும் னு சொல்லல்லை.. கண்டிப்பாக ஒழிக்கப்படணும்.. ஆனால் நடப்பதுபோல் தெரியலை.. அப்படியானல் அவர்களுக்கு அங்கீகாரம் கொடுங்கள்.. கெளரவமாக வாழ வழி செய்யுங்கள்..


    நம் சமூகத்தில் அவர்களும் ஒரு அங்கம்..


    அவர்களை புறக்கணிப்பது நம் உடம்பில் ஒருபக்கம் புண் வளரவிட்டு நாமே ரசிப்பதற்கு சமம்..

    ReplyDelete
  47. விபச்சாரிகள் பல குடும்பப் பெண்களிம் வாழ்வையும் கெடுப்பவர்களே என்பதுகூடவா இவர்களுக்குத் தெரியவில்லை//

    :))))

    இதுக்கெல்லாம் என்ன பதில் சொல்ல..

    குடும்பத்தை தேடி செல்பவர்கள் அவர்களா, இல்லை அவர்களை தேடி குடும்பஸ்தன்கள் செல்கிறார்களா?..

    சர்வே இருக்கா?..

    வாங்குபவர் இல்லையென்றால் பொருள் விற்காது..

    குத்தாட்டம் இல்லேன்னா சினிமா பார்க்க முடியாதா னு கேட்போமா?.. சினிமாவில் கவர்ச்சியே வேண்டாம் னு குரல் எழுப்பிட்டோமா?..அதற்கும் ஒரு பெண் தானே போகப்பொருளாய் வேண்டியிருக்கு?..

    நடிகைன்னா கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்வது ஏன்?.. அவரின் எந்த சேவைக்காக?.. எத்தனை பெண்கள் நடிகனுக்காய் கோவில் கட்டினார்கள்..?



    ( இன்னும் நிறைய பேரின் எழுத்துகளை , இக்பால் செல்வன் போன்றோரின் கருத்துகளை விரிவா படிங்க.. அதன்பின் நல்லதொரு புரிதலோடு விமர்சியுங்கள்..)

    ReplyDelete
  48. அய்யா, நான் புவனெஷ்வரி வீட்டுக்குள்ள போயா ப்டம் எடுக்க முடியும்...புவனேஷ்வரிகிட்ட போனவங்க படம் உங்ககிட்ட இருந்தாக் கொடுங்க போடுறேன்.//

    இது ஒரு பதிலா?..

    அப்ப நியாயமா என்ன செய்யணும்?.. அவரிடம் சென்றவர் படம் இல்லையென்றால் இவர் படத்தையும் நீங்க போடக்கூடதல்லவா?..

    நம் கலாச்சாரத்தில் அழகிகள் மட்டுமே பிடிபடுவார்கள்.. அழகர்கள் இல்லைதானே?..

    பெண்களை ,அவர்கள் படத்தை மட்டும் போட்டு இழிவுபடுத்துவதன் மூலம் நிரூபித்தீர்கள் உங்க ஆணாதிக்கத்தனத்தை..

    இது உங்க ஒருவர் மேலுள்ள தப்பு மட்டுமல்ல நண்பரே..

    ஒட்டு மொத்த சமூகத்தின் கற்பிதம் , பொதுபுத்தியும் இவ்வாறே பழக்கப்பட்டிருப்பதே சாபக்கேடு ..:(

    மாற்ற வேண்டியது இந்த எண்ணங்களைத்தான்..

    அதுவரை இந்த அவலங்கள் தொடரும்..:(

    ReplyDelete
  49. பாலியல் தொழிலாளி வேறு விபச்சாரி வேறு.

    ஆடம்பர வசதிக்காக உடலை வைத்து பிழைப்பது விபச்சாரமே.

    ReplyDelete
  50. யதார்த்த வாழ்வில் பெண்கள் இங்கு போகப் பொருள்.பணம் மட்டும் உலகமாக உள்ளபடியால் இந்த வட்டத்திற்குள் மாட்டிக்கொண்டு வெளியில் செல்ல முடியாமல் உள்ளனர்.பதிவர் ஆண் விபச்சாரம் பற்றி தவறாக சொல்லவில்லை இதன் காரணம் ஆணுக்கான சுததிரம் பெண்ணுக்கு இல்லை.50%-50% விகிததில் இரு பாலரும் பெண்ணை அடிமை படுத்தும் விளைவு இது.ஆக தொழிலை மட்டும் வைத்து அனைத்து பாலியல் தொழிலளர்களையும் இழிவு படுத்துவது தவறு.நல்ல ஒரு தீர்வை பதிவர் அணைவருக்கும் பொருந்துமாரு சொன்னால் பதிவர் கருத்தை அணைவரும் எற்றுக்கொள்வர்.அதுவரை இழிவு படுத்துவதை நிறுத்த வேண்டும்.

    ReplyDelete
  51. முதலில் விபச்சாரி என்ற பதமே மிகவும் தவறானதாகவும், பெண்கள் மட்டும் தான் விபச்சாரத்தில் ஈடுபடுவதாக ஆணாதிக்கக் கும்பல் வைத்தப் பெயர் விபச்சாரி.

    இரண்டு விபச்சாரத்தை ஒழிக்க முடியுமா என்ற கேள்வி ?

    மூன்று விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்கள் அனைவருமே விரும்பித் தான் அதில் ஈடுபடுவதாக பதிவர் நிறுவும் வாதம் தவறானதாகும். விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களை எத்தனைப் பேர் செங்கோவி நேரில் கண்டிருப்பார் என்றுத் தெரியவில்லை ....

    நான்கு விபச்சாரத்தில் இருந்து விடுபட நினைக்கும் ஒருப் பிரிவு பாலியல் தொழிலாளிக்கு நாம் என்ன மாற்று ஏற்பாடு செய்துக் கொடுத்துள்ளோம் --- நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள் ...... !!!

    ReplyDelete
  52. ஐந்து பாலியல் தொழிலை அங்கீகரிப்பதுக் குறித்து - பாலியல் தொழில் பாவமானது, அசுத்தமானது அதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை. ஆனால் பாலியல் தொழில் இருப்பவர்களுக்கு என்ன விமோசனம் சொல்லுங்கள் ....

    பாலியல் தொழிலை அங்கீகரிக்கலாமா ? வேண்டாமா? அங்கீகரித்தால் என்னப் பயன் ? அங்கீகரிக்காததால் என்ன நட்டம் ?

    பாலியல் தொழிலை தடை செய்த தமிழகத்திற்கும், பாலியல் தொழிலை அங்கீகரித்த மராத்ததிற்கும் என்னப் பெரிய வித்தியாசம் கண்டுவிட்டீர்கள்.

    இரண்டிலும் பெண்கள், திருநன்கைகள், ஆண்கள் விபச்சாரப் பொருளாக்கப்பட்டுள்ளனர்.

    இரு இடத்திலும் விபச்சாரம் நடந்துக் கொண்டே இருக்கின்றன ---

    ஒரே ஒரு வித்தியாசம் அங்கு மாமூல் வாங்கப்படுவது குறைவு, இங்கு பாதிப் பணம் மாமூலாகப் போகின்றது.

    அங்கு ரெய்ட் நடத்தப் படுவதில்லை - அதனால் பலருக்கு ஓசியாக படுத்து தாஜப் பண்ணத் தேவை இல்லை. இங்கு பல வேளைகளில் ஓசி சர்வீஸ் கொடுக்க வேண்டும்.

    அங்கு பாலியல் தொழிலாளிகளுக்கு மருந்து, மாத்திரை, பாதுகாப்பு உபகரணங்கள், ஏன் இன்சுரன்ஸ் கூட இருக்கு. இங்கு அது எதுவும் இல்லை ???? விளைவுகளை அங்குப் போய் வருபவர்களும் சேர்ந்து அனுபவிக்கின்றார்கள் ..... !!!

    ReplyDelete
  53. எல்லாவற்றுக்கும் மேல் ! ஒரு பாலியல் தொழிலாளி பாலியல் தொழில் செய்கின்றார் என்பதால் அவரை மரியாதை இல்லாமல் நாம் பார்ப்பது எவ்வகையில் நியாயம் ... நாம் மட்டும் என்ன பெரிய ஒழுங்கா ??

    அடுத்த வீட்டுப் பெண்ணை அசிங்கமாகப் பார்ப்பது, பஸ்ஸில் போகும் பெண்களை உரசுவது, ஆசிரியரே ஆனாலும் அசிங்கமாக கற்பனைக் கொள்வது, ஆபிசில் வேலைப் பார்க்கும் குடும்ப பெண்களையே கவர நினைப்பது, ஏன் பள்ளியில் படிக்கும் மாணவியரையே அசிங்கமாக நினைக்கும் ஆசிரியர், எல்லாவற்றுக்கும் மேலாக சினிமாவில் வரும் நடிகையரை பெண் என்றும் பாராமல் தொப்புள் அழகு, மடிப்பு அழகு என்று வருணித்து விமர்சனம் எழுதுவது, ஏன் பாலியல் தொழிலாளியோடு படுக்கும் ஆண்கள் தானே -- இப்படி அசுத்தங்களை மனதில் சுமந்துக் கொண்டு அவர்களை மட்டும் மரியாதைக் கொடுக்க மாட்டோம் என்று சொல்வது எவ்வகை நியாயமாகும் சகோ........... !!!

    irrespective of their profession, character, colour, creed, race, religion, language - we should learn to look them as humans.

    அவர்கள் மீது உண்மையில் அக்கறை இருந்தால் அதற்குறிய செயல்பாடுகளில் இறங்குங்கள் வன்பகடிகள் மூலம் மற்றவரின் இதயத்தைப் புண்படுத்தாதீர்கள் ...........

    ReplyDelete
  54. எப்பவும் நியாபகம் கொள்ள வேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம்..


    நம் பிறப்பை நம்மால் தேர்வு செய்ய முடிந்ததா?..


    ஏன் , ஒருவேளை நாம் பாலியல் தொழிலாளிக்கு மகனாக/மகளாக பிறந்திருந்தால் நம் எண்ணம் எப்படி இருக்கும்..

    அதைவிட நம் வாரிசுகளோ சொந்தங்களோ நாளை அப்ப்டி ஒரு நிலைமைக்கு தள்ளப்பட மாட்டார்கள் என எப்படி உறுதியாகக்கூற முடியும் இந்த நம்பிக்கையற்ற வாழ்வில்..?

    Lets try to put ourselves in their shoes before analyzing their problems...

    இப்படித்தான் ஒவ்வொரு பிரச்னையும் அவரவர் இடத்தில் இருந்து பார்க்கப்படணும்.. அது மட்டும்தான் மனித நேயத்தோடான முடிவுகள் தரும்..


    தவறு செய்யாத பெர்ஃபெக்ட் மனிதன் னு எவருமே இல்லை..

    ReplyDelete
  55. பாலியல் தொழிலில் ஈடுபட்டிருக்கும் பெண்டிரை விபச்சாரிகள் என்ற பெயரில் அழைத்தால், உடன் சென்றுவரும் அனைத்து ஆண்களையும் விபச்சாரன் என்று அழைக்க வேண்டும்..!

    ReplyDelete
  56. @எண்ணங்கள் 13189034291840215795//இதைவிட வேறு தொழில் நாகரீகமாக இருக்குமானால் போக மாட்டார்களா என்ன?..// அதைத் தான் பதிவுல சொல்லி இருக்கேனே..விவசாயத்துக்கு ஆளில்லை, தீப்பெட்டி/பட்டாசுத் தொழிலுக்கு ஆளில்லைன்னு ஒரு பக்கம் புலம்பல்கள் வரும் தேசத்தில், விபச்சாரத்திற்கான அவசியம் என்ன?.........................இது தான் என் கேள்வி. அதை விட்டுட்டு, ஆணாதிக்கம், ஆணாதிக்கம்னு சொல்லிக்கிட்டே இருந்தா என்ன பண்றது..

    ReplyDelete
  57. @சிங்கக்குட்டி//பாலியல் தொழிலாளி வேறு விபச்சாரி வேறு.// அதாவது ஆடம்பரத்திற்காகச் செய்வது விபச்சாரம், பசிக்காகச் செய்வது பாலியல் தொழில்...அப்ப்டியா?

    ReplyDelete
  58. @giruba//நல்ல ஒரு தீர்வை பதிவர் அணைவருக்கும் பொருந்துமாரு சொன்னால் பதிவர் கருத்தை அணைவரும் எற்றுக்கொள்வர்.அதுவரை இழிவு படுத்துவதை நிறுத்த வேண்டும். // விபச்சாரத்தில் இறங்குனப்புறம் உள்ள விஷயத்தை நீங்க பேசுறீங்க..ஏன் இறங்கணும்னு அடிப்படையைப் பத்தி நான் பேசுறேன்.

    ReplyDelete
  59. @இக்பால் செல்வன்//பெண்கள் மட்டும் தான் விபச்சாரத்தில் ஈடுபடுவதாக ஆணாதிக்கக் கும்பல் வைத்தப் பெயர் விபச்சாரி.// விபச்சாரப் புரோக்கருக்கு ‘மாமா’ன்னு பேர் வச்சது பெண்ணாதிக்கக் கும்பலா?..பல பெண்கள் கஷ்டப்பட்டு உழைத்து கௌரவமாக வாழும் தேசத்தில், சில பெண்கள் இப்படிப் போவதேன்னு பேசுறேன்..நீங்க தொடர்ந்து ‘ஆணாதிக்க சதி’ன்னு திரும்பத் திரும்ப சொல்றீங்க..’எப்படி இருக்குது’ன்னு நான் சொல்றேன்..நீங்க ‘எப்படி இருக்கணும்’ங்கிறதைப் பத்தி மட்டுமே பேசுறீங்க..நல்லது.

    ReplyDelete
  60. @இக்பால் செல்வன்//மூன்று விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்கள் அனைவருமே விரும்பித் தான் அதில் ஈடுபடுவதாக பதிவர் நிறுவும் வாதம் தவறானதாகும்//...நண்பரே, /சிலபேர் ரவுடிக் கும்பலால் கடத்தப்பட்டு, கட்டாயமாக இந்தத் தொழில்ல ஈடுபடுத்தப் படுறதாச் சொல்றாங்க. அவங்களை மீட்டு, நல்ல வாழ்க்கைக்கு அவங்க திரும்ப உதவலாம். / இப்படி ஒன்னும் நான் எழுதி இருக்கேன்..நீங்க வாதம் செய்வதை வரவேற்கிறேன்.அதே நேரத்தில் நான் சொன்னதைத் திரிக்காதீர்கள்..நீங்க ஆரோக்கியமான வாதம் செய்பவராயிற்றே..இன்று ஏன் மொத்தப் பழியையும் எழுதின பதிவர் மேல போடுறதுல குறியா இருக்கீங்க..’அனைவருமே’ன்னு எப்படிச் சொல்றீங்க..

    ReplyDelete
  61. @இக்பால் செல்வன்//அவர்கள் மீது உண்மையில் அக்கறை இருந்தால் அதற்குறிய செயல்பாடுகளில் இறங்குங்கள் வன்பகடிகள் மூலம் மற்றவரின் இதயத்தைப் புண்படுத்தாதீர்கள் //
    பிடிக்காத விஷயத்தை எழுதுபவனைக் கார்னர் செய்யும் அதே ஆயுத்தத்தை நீங்களும் எடுக்கிறீங்களே..’ஊழலை ஒழிக்க உங்களால் முடிந்த செயல்பாடுகளில் இறங்குங்கள்..இல்லையேல் வன்பகடி செய்யாதீர், மதத்தின் குறைகளைத் தீர்க்க செயலில் இறங்குங்கள்..அதைவிடுத்து வெறுமனே எழுதாதீர், சினிமா விமர்சனம் செய்வதை விட, நல்ல சினிமாவை எடுத்துக்காட்டுங்கள், அதை விடுத்து வெறுமனே புலம்பாதீர்.’..........இப்படியே சொல்லிக்கிட்டே போகலாம்..அப்புறம் நானும் ஒன்னும் எழுத முடியாது..நீங்களும் ஒன்னும் எழுத முடியாது..சமூகத்தில் விவாதததை உருவாக்குவதும் ஒரு செயல்பாடே, அதில் என் நிலைப்பாடு எந்தப் பக்கம் இருப்பினும்..இங்கு நடந்து கொண்டிருப்பதும் அதுவே...உங்கள் ஆக்கப்போர்வமான கருத்துக்களுக்கு நன்றி.

    ReplyDelete
  62. @செங்கோவி

    இதுல எங்க ஆணாதிக்கம், பெண்ணாடிமை வந்தது?? அப்டி ஏதும் நீங்க எழுதி இருந்து அது என் கண்ணுக்கு தெரியலையா?

    என்ன கொடுமை செங்கோவி இது??


    நல்ல பகிர்வு,நம்ம ஊர் பக்கம் நானும் நிறைய பாத்து இருக்கேன் பாஸ்..

    ReplyDelete
  63. பாலியல் தொழிலாளி என்பதே சரியான
    சொல்லாகும் விபச்சாரம் என்ற பதம் நாகரிகமற்ற வார்த்தை சமூகத்தில் இதை தடுக்க முடியுமா!யாருடைய தவறு என்று ஆராய முடியாது! சமுகத்தில் இவர்களுக்கும் மரியாதை கிடைக்க வேண்டும்.

    ReplyDelete
  64. @கே.ஆர்.பி.செந்தில்

    அண்ணே அடுத்த தொடரா போற்றுங்க...

    ReplyDelete
  65. தமிழ் மனம் - 11 , இண்ட்லி 29

    ReplyDelete
  66. @RK நண்பன்..அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் நண்பா...இன்னும் கொஞ்சநாள்ல கனிமொழி, ஜெ. பத்தி எழுதுனாக்கூட ஆணாதிக்கம்னு சொல்வாங்க போலிருக்கே..நன்றி ஆர்கே.

    ReplyDelete
  67. @Nesan//பாலியல் தொழிலாளி என்பதே சரியான
    சொல்லாகும் விபச்சாரம் என்ற பதம் நாகரிகமற்ற வார்த்தை // நன்றி நண்பரே..இனிமேல் அப்படியே சொல்கிறேன்.

    ReplyDelete
  68. வலுக்கட்டாயமாக கடத்தப்பட்டு விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டவர்கள், ஏமாற்றி விற்கப்பட்டவர்கள், விரும்பாமலே கட்டாயப்படுத்தி ஈடுபட வைக்கப்பட்டவர்கள் என்று இரக்கப்படவேண்டியவர்கள் எத்தனையோ பேர்! அவர்களை விபச்சாரி என்று அழைக்காமல் பாலியல் தொழிலாளர் என்று அழைக்கலாம்! (அப்படி அழைத்தவுடன் அவர்களுக்கு நியாயம் செய்துவிட்டோம் என்ற திருப்தியுடன்!) - இப்படி அழைத்தல் போகிறவர்களும் நங்கள் பாலியல் வாடிக்கையாளர் என்று பெருமையாகக் கூறிக் கொள்ளலாம் இல்லையா?

    ஆனால் எத்தனையோ பெண்கள் கஷ்டப்பட்டு, சொல்லமுடியாத சிரமங்களுக்கு முகங்கொடுத்து, உழைத்த் கௌரவமாக வாழும் பொழுது, குறுக்கு வழியில் தன்னை முன்னேற்றிக் கொள்ள கேவலமாக களமிறங்குபவர்கள் பற்றி மட்டுமே பதிவர் கூறியுள்ளார். நடிகைகள் படம் போட்டதில் என்ன தவறு? அவர்களை விடச் சிறந்த உதாரணம் வேறு யார்? குறுக்குவழியில், பணம், புகழ், படவாய்ப்பு என்று...இதை இவர்களை எவ்வாறு அழைப்பது? உயர் ரக பாலியல் சேவையாளர்கள்?

    எல்லா மனிதர்களும் மதிக்கப்பட வேண்டியவர்களே! அதற்காக பாலியல் தொழிலாளி என்றால் அதற்கு ஸ்பெஷல் மரியாதை கொடுக்க வேண்டுமா என்பதுதான் இங்கே கேள்வி! பாலியல் தொழிலாளி என்று அழைப்பதால் மட்டுமே அவர்களுக்கு மரியாதை கொடுத்துவிட்டோம், அவர்களுக்கு நன்மை செய்து விட்டோம், நாங்க ஆணாதிக்கவாதி இல்லை என்று அர்த்தமா?

    இங்கு பதிவில் குறிப்பிட்டது குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க தொழிலுக்கு வந்த இரண்டு பேர் பற்றி மட்டுமே! உலகத்தில் உள்ள ஒட்டுமொத்த பாலியல் தொழிலாளிகள் பற்றி கூறவில்லை!

    பதிவின் சாரம் பாலியல் தொழிலாளி என்று அழைத்தால் மட்டுமே எல்லாம் சரியாகிவிடும் என்பது போல சிலர்/பலர் பேசுவது சரியா என்பது மட்டுமே!

    பின்னூட்டங்களிலிருந்து தெரிகிறது - பாலியல் தொழிலாளி என்று சொன்னால் சமூகத்தில், மரியாதை, சம உரிமை, அந்தஸ்து எல்லாவற்றையும் அவர்களுக்கு கொடுத்ததாகி விடும்! அத்துடன் ஆணாதிக்க போக்கும் ஒழிக்கப்பட்டு அழிந்து விடுமென்று!

    ReplyDelete
  69. @ஜீ...//அவிங்க எல்லாம் பாலியல் சமூக சேவை தொடர்பான விவாத அரங்கு ஒன்றில் பங்கேற்றபோது எடுத்த படம் அது!
    உங்களுக்குத் தெரியாதா சத்யராஜ், சூர்யா எல்லோரும் பத்திரிகையாளர்களைப் பாராட்டிக் கூட நிறையப் பேசினாங்களே! // தம்பி ஜீ, இப்போ தான் உங்க கமெண்ட்டைப் பார்த்தேன்..செம நக்கலு..அவங்க உண்மையிலேயே தெரியாமத் தான் கேட்டாங்களா.....என்னையை வேற நிறையப் படின்னு சொல்றாங்க,,,அவ்வ்!

    ReplyDelete
  70. செங்கோவி இந்த பதிவில் கூறிய கருத்துக்கள் முழுமையாக ஏற்றுக்கொள்ளக்கூடியவையே. தண்டனைகள் கடுமையானால் தான் குற்றங்கள் குறையும் என்று நினைப்பவன் நான் அப்படி பார்க்கும்போது இந்த விபச்சாரக்குற்றத்துக்கும் "விபச்சாரம்", "விபச்சாரி" என்ற கடுமையான வார்த்தையை பயன்படுத்துவதே அவர்களை தண்டிப்பதுப்போன்றுதான் இதில் சலுகை எதற்கு? ஒரு வேலை இதில் ஈடுப்படும் பெரும்பாலானோர் பெண் என்பதால் இதற்கும் பரிவு, அங்கிகாரம் கேட்கிறார்கள் போல.

    செங்கோவி சொல்வதுப்போல் மாற்றுத்தொழில் இருந்தும் இதில் ஈடுப்படுபவர்களை மரியாதை கொடுத்து அழைக்கவேண்டிய அவசியம் என்ன?
    இதையெல்லாம் மீறி இக்பால் செல்வன், எண்ணங்கள் போன்றவர்கள் "பாலியல் தொழிலார்கள்" என்றுத்தான் அழைக்கவேண்டும் என்று கூறினால் திருடர்களை "இரவுத்தொழிலார்கள்" என்று அழைக்க நீங்கள் தயாரா? திருட்டை அங்கிகரிக்கச்செய்ய, முழக்கமிட நீங்கள் தயாரா? இவர்களும் பசிக்காகத்தான் இதை செய்கிறார்கள்.

    ReplyDelete
  71. @ஜீ...//பின்னூட்டங்களிலிருந்து தெரிகிறது - பாலியல் தொழிலாளி என்று சொன்னால் சமூகத்தில், மரியாதை, சம உரிமை, அந்தஸ்து எல்லாவற்றையும் அவர்களுக்கு கொடுத்ததாகி விடும்! அத்துடன் ஆணாதிக்க போக்கும் ஒழிக்கப்பட்டு அழிந்து விடுமென்று! // நச்...இதுக்குத் தான் இதுமாதிரி விஷயங்களை எழுதவே யோசிக்க வேண்டி இருக்கு.. போதும் ஜீ!

    ReplyDelete
  72. @THOPPITHOPPI//திருடர்களை "இரவுத்தொழிலார்கள்" என்று அழைக்க நீங்கள் தயாரா? திருட்டை அங்கிகரிக்கச்செய்ய, முழக்கமிட நீங்கள் தயாரா? இவர்களும் பசிக்காகத்தான் இதை செய்கிறார்கள்.// ச்சே..ச்சே..அதெப்படி முடியும்..வேணும்னா ‘திருடிகளை’ அப்படி அழைக்கலாம்..சமூகச் சீர்திருத்தம்னா சும்மாவா..லூஸ்ல விடுங்க தொப்பி.

    ReplyDelete
  73. I analaized the TOPIC and had a lot of confusion to comment !

    Sorry!

    ReplyDelete
  74. பெண்களுக்கான வாழ்நிலை சவால்கள் மிக கொடூரமானது.. அவர்களது உடலே அவர்களுக்கு மிக குரூரமான எதிரி.. பாலியல் தொழிலாளி என்று சொல்வதால் உங்களுக்கு பெரிய நட்டம் ஒன்றுமில்லை என்று என்பது எனது கருத்து. விபச்சாரி எனும் சொல் மிக தரம் தாழ்ந்த நிலவுடமைக்காரர்கள் பயன்படுத்திய சொல். நீங்கள் இலக்கிய ஆர்வம் மிக்கவர் என்று சொல்கிறீர்கள்.. பெண்களுக்கான வாழ்வியல் சிக்கல்கள் மிக நுட்பமாக எங்களை விட உங்களுக்குத்தானே தெரியும்.

    ReplyDelete
  75. @உண்மைத்தமிழன்//பாலியல் தொழிலில் ஈடுபட்டிருக்கும் பெண்டிரை விபச்சாரிகள் என்ற பெயரில் அழைத்தால், உடன் சென்றுவரும் அனைத்து ஆண்களையும் விபச்சாரன் என்று அழைக்க வேண்டும்..! //அப்படியே அழைப்போம்ணே..அதுல எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே.

    ReplyDelete
  76. @Sai Gokul - வேலைவாய்ப்பு தகவல்கள்//I analaized the TOPIC and had a lot of confusion to comment !// எழுதுன எனக்கே கன்ஃபியூஸ் ஆயிடுச்சு..உங்களுக்கு ஆகாதா..

    ReplyDelete
  77. @raja//பாலியல் தொழிலாளி என்று சொல்வதால் உங்களுக்கு பெரிய நட்டம் ஒன்றுமில்லை என்று என்பது எனது கருத்து.// நான் விபச்சாரின்னு தான் சொல்வேன்னு அடம்பிடிக்கலை பாஸ்..இவங்களுக்காக ஓவரா சீர்திருத்தம்ங்கிற பேர்ல, பெண்ணியவாதின்னு காட்டுறதுக்காக சீன் போடறமோன்னு தோணுது..அவ்வளவு தான்.வருகைக்கு நன்றி சகோ.

    ReplyDelete
  78. ஒரு விதவைப் பெண், நல்ல வழில தன் குடும்பத்தைக் கரையேத்த முடியாத சூழ்நிலையா இங்க இருக்கு?

    நம்மோட சில தலைவர்களும், நடிகர்களும் விதவைத் தாயால் வளர்க்கப்பட்டவங்க தானே? அந்தத் தாய்களும் ‘சீக்கிரம் செட்டில் ஆகணும்’னு அந்தத் தொழில்ல இறங்கலையே..கஷ்டப்பட்டு உழைச்சுத் தானே தன் பிள்ளைகளை அவங்க பெரிய ஆளாக்குனாங்க?

    கொத்து வேலை பாக்குற பெண்கள், பட்டாசுத் தொழிற்சாலைல வேலை பார்க்குற பெண்கள், டெய்லர்கள்னு எத்தனை எத்தனை உழைப்பாளிங்க நமக்கு மத்தியில இருக்காங்க..

    I would like to know from you, why you consider the kinds of work like working in factories, farms and tailoring done by women respectful, and using her body as capital to earn money from the needy men, disrespectful ?

    ReplyDelete
  79. சரிண்ணே....அதுக்கு எதுக்கு நடிகைகள் படம் போட்டிருக்கீங்க

    ReplyDelete
  80. அண்ணன் நல்ல பதிவு தான் போட்டிருக்கார். ஆனா மைனஸ் ஓட்டு ஹூம்..

    ReplyDelete
  81. பாலியல் தொழிலாளிகள் என்று மரியாதையாக அழைக்க வேண்டுமாம் . என்னத்த சொல்றது இவிங்களை ?
    விபச்சாரி / விபச்சாரன் என்று யாராக இருந்தாலும் அவர்கள் இழி நிலை மனிதர்களே . அவர்களுக்கு மதிப்பு / மரியாதை என்ற எந்த எழவும் கொடுக்க வேண்டாம் .

    ஒரு குற்றத்தை ஒழிக்க முடியாது என்றால் , உடனே அதை சட்டமாக்கி விட வேண்டுமாம் . என்ன கூத்து இது ? அப்போ , கொலை , திருட்டு எல்லாத்தையும் லைசன்ஸ் கொடுத்து சட்டமாக்கிட வேண்டியதுதான் .

    விபச்ரத்தில் ஈடுப்பட்ட ஒருவர் திருந்த மட்டுமே , நாம் முன்னுரிமை , சட்டம் எல்லாம் இயற்ற வேண்டும் . அதை ஒரு தொழிலாக மாற்ற வேண்டாம் . விபச்சாரத்தை தடுப்பதற்கு கடுமையான சட்டம் இருந்தால் ,அதில் யார் ஈடுபடுவார்கள் ? சும்மா 2 வருஷம் தண்டனை , 500 ருபாய் அபராதம் என்று இருந்தால் என்ன பயம் வரும் ?

    விபச்சாரம் ஒரு கீழ் நிலை , இழி நிலை என்று நினைப்பு / பயம் / மனசாட்சி தான் பலபேரின் கற்பு என்று சொல்ல படுவதை காப்பற்றி வருகிறது .

    ReplyDelete
  82. @simmakkal//why you consider the kinds of work like working in factories, farms and tailoring done by women respectful, and using her body as capital to earn money from the needy men, disrespectful ?// இதுக்கு நான் என்ன சொல்றது..நம்ம சொந்தக்காரப் பெண்கள் திடீர்னு நம்மகிட்ட வந்து ‘நான் டெய்லர் வேலைக்குப் போறேன்’ன்னு சொல்லும்போது நாம எப்படி ரியாக்ட் பண்ணுவோம், ‘அந்த லாட்ஜ்ல இருக்குற பிராத்தல் கேஸ்க கூட சேர்ந்து நானும் பிராத்தல் பண்ணப்போறேன்’ன்னு சொன்னா எப்படி ரியாக்ட் பண்ணுவோம்-இதை யோசிச்சா, பதில் உங்களுக்கே தெரியும்ணே..

    ReplyDelete
  83. @சிராஜ்//அதுக்கு எதுக்கு நடிகைகள் படம் போட்டிருக்கீங்க// தயவு செய்து பின்னூட்டங்களைப் படிக்கவும்.

    ReplyDelete
  84. @ரஹீம் கஸாலிஇப்படியே எஸ்கேப் ஆகிடுங்க..

    ReplyDelete
  85. @மந்திரன்//விபச்சாரம் ஒரு கீழ் நிலை , இழி நிலை என்று நினைப்பு / பயம் / மனசாட்சி தான் பலபேரின் கற்பு என்று சொல்ல படுவதை காப்பற்றி வருகிறது .// தூள்..கலக்கலான பின்னூட்டம் அன்பரே..நன்றி.

    ReplyDelete
  86. "செங்கோவி"//விபச்சாரத்தில் இறங்குனப்புறம் உள்ள விஷயத்தை நீங்க பேசுறீங்க..ஏன் இறங்கணும்னு அடிப்படையைப் பத்தி நான் பேசுறேன்// நான் இரண்டிற்கும் தீர்வு."ஆணின் காமம் இங்கு பெண்களை 90% பாலியல் தொழிலில் தள்ளுகிறது" 10% பெண்களிண் தவறை நான் ஏற்றுக்கொள்கிறேன்.""90% பிரச்சனைகளை ஏற்படுத்தும் ஆண்களை திருத்த தீர்வு என்ன?"" சொல்லவும்.10% பெண்களை கடுமையான சட்டம் மூலம் திருத்த முடியும்.

    ReplyDelete
  87. @ giruba

    நீங்கள் ஆணா இல்லை ஆண் பெயரில் பெண்ணா என்று தெரியவில்லை.

    நீங்கள் ஆண் என்றால் எனது ஆழ்ந்த வருத்தங்கள். அப்பட்டமாக பெண்களாலும், போலி பெண் காவலர்களாலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பது உங்கள் பின்னூட்டத்திலேயே தெரிகிறது. நீங்கள் சதவிகிதம் எல்லாம் பிரிச்சி ஏதோ பலநாட்களா கருத்துக்கணிப்பு எடுத்தது போன்று பதில் சொல்லி இருக்கீங்க(என்ன கணக்கோ!).

    //ஆணின் காமம் இங்கு பெண்களை 90% பாலியல் தொழிலில் தள்ளுகிறது//

    நீங்கள் சொல்வதை பார்த்தால் ஆண்கள் ரோட்டில் சுற்றும் பெண்களை எல்லாம் வலுக்கட்டாயம்மாக இழுத்துக்கொண்டுப்போய் கையில் பணம் கொடுத்து அனுப்புகிறார்கள்(90 %). அப்படித்தானே சொல்லவறீங்க? இன்னும் எத்தனை நாட்களுக்கு இப்படி ஆண்களே ஆண்களை கேவலமாகவும் கீழ்த்தரமாகவும் சித்தரிக்கப்போகிரீர்கள்? பெண்களுக்கு சலுகைகள் கிடைக்கவேண்டும், தனது தவறில் இருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காகவே அப்பட்டமாக ஆண்கள் மேல் பெண்களால் சுமத்தப்பட்ட இழிவுகள் தான் இந்த வார்த்தைகள். ஆண்கள் காம வேரிப்பிடித்தவர்கள், பேருந்தில் உரசுபவர்கள், அது இது என்று ஆண்கள் மேல் குற்றச்சாட்டு நீண்டுக்கொண்டே போகிறது.

    நீங்கள் மேலே(போலி) கூறியவாறு உண்மையான சதவிகிதப்படி ஆய்வுகளே தெரிவிக்கிறது ஆண்களை விட பெண்களுக்குத்தான் காமம் அதிகம் என்று. உங்களுக்கு சந்தேகம் இருந்தால் சமீபத்திய தமிழ் நாளேடுகளையே புரட்டிப்பாருங்கள் அதிகமான செய்திகள் கள்ளக்காதலனுடன் மனைவி/தாய் ஓட்டம், கள்ளக்காதலன் உதவியுடன் கணவன் கொலை போன்ற செய்திகளாகத்தான் இருக்கும். இனியாவது ஆண்களே இப்படி ஆண்களை தரம்தாழ்த்திக் கொள்வதை நிறுத்துங்கள்.நீங்களே இப்படி கூறிக்கொண்டு இருந்தால் 33% என்பதை 63% சதவிகிதமாக உயர்த்தி கேட்க ஆரம்பித்து விடுவார்கள்.

    ReplyDelete
  88. "இதுக்கு நான் என்ன சொல்றது..நம்ம சொந்தக்காரப் பெண்கள் திடீர்னு நம்மகிட்ட வந்து ‘நான் டெய்லர் வேலைக்குப் போறேன்’ன்னு சொல்லும்போது நாம எப்படி ரியாக்ட் பண்ணுவோம், ‘அந்த லாட்ஜ்ல இருக்குற பிராத்தல் கேஸ்க கூட சேர்ந்து நானும் பிராத்தல் பண்ணப்போறேன்’ன்னு சொன்னா எப்படி ரியாக்ட் பண்ணுவோம்-இதை யோசிச்சா, பதில் உங்களுக்கே தெரியும்ணே.."

    Excellent !

    This is what I had expected from you. That was y I raised the qn to u.

    Now, u can go into your own statement and ask the following qns:

    “Why do I think that being a tailor for a woman is honorable and being a sex worker dishonorable?”

    U dont ‘think’. U have been conditioned to swallow thoughts of some other people w/o blinking. The society in which u r born and brought up, has made u accept unconsciously which is to be treated as honorable and which dishonorable. As long as u have not used ur intellect to judge which is honorable and which dishonorable, can u dare accuse any person as unworthy of respect ?

    It is what Durkheim called 'collective consciousness'. Many philosophers agree to that namely, we don’t make our coices on social morals and we only accept what has been passed to us. Suppose the morals r ok, no prob. If not, prob arises. For e.g the honour killings in Haryana. All Haryanvis accept the honour killing as good moral for their society, but today, Supreme Court condemned it. But the residents insist the court can’t draw up the values of their society.

    U r accusing the sex workders as unworthy of respect. U r willing to condemn or praise anybody only on the basis of what you have been brainwashed to do. If the condemnation is not just and is morally bad, you are guilty. I accuse you: YOU R GUILTY in saying the sex workers the famales r unworthy of respect.

    I would suggest u get out of this rut and see women primarily as women worthy of basic human dignity regardless of what their calling is: whether a tailor, or a manager Every woman is worthy of respect. We don’t deserve respect or consideration only we do an act that is harmful to society. Prove here in your blog the sex worker females r harming the society. I will come back to u.

    When u treat them as just meat, not perons, u will se their bodies onlyand not their minds. U will impose on them ur borrowed concept of honour if the bodies are not used in exactly in the way u like. What is the difference between u and the man who abuse a woman, say, a sex worker on the bed? He does it so negatively, and you pretend to do positively. But both r abuses.

    It is wrong to think that a man who goes to a sex worker will always disrespect her. Even in Tamil cinemas it does not happen; for e.g Nayakan, Tappu thalangkal.

    The acid test that might change your attitude towards such woman could be this:

    Go to a sex worker. Spend some time with her. And come back. You will write another blog regretting your conduct.

    ReplyDelete
  89. //10% பெண்களை கடுமையான சட்டம் மூலம் திருத்த முடியும்//


    அப்படி என்ன கடுமையான சட்டம்? சொல்லுங்கள் நாங்களும் தெரிந்துக்கொள்கிறோம்.

    ReplyDelete
  90. @girubaஎதனாலோ நான் விபச்சாரம் செய்யும் ஆண்களுக்குச் சப்போர்ட் பண்ணுவதாக நினைத்துப் பேசுகிறீர்கள்..பதிவில் நான் சொல்ல முற்பட்டது ‘ஆண்கள் என்ன தான் பிடித்துத் தள்ள முற்பட்டாலும், இதில் இறங்காமல் வேறுதொழில் செய்ய நம் சமூகத்தில் வாய்ப்புகள் உள்ளன’ என்பதையே. நான் பதிவில் எடுத்துக்கொண்ட விஷயம் அது மட்டுமே..விபச்சாரம் சரியா, அதனால் ஏற்படும் சமூகப் பாதிப்புகள், அதில் ஆண்/பெண் விகிதாச்சாரப் பங்கு இது பற்றியெல்லாம் நான் எழுதவில்லை. ஒரு பதிவில் இவ்வளவையும் உள்ளடக்குவது சாத்தியம் என்று எனக்குத் தோன்றவில்லை.

    விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களை மட்டும் கைது செய்வதும், அவர்களை மட்டும் படம் எடுத்து அவமானப்படுத்துவதும் எனக்கும் உடன்பாடானசெயல் அல்ல. இந்தப் பதிவிலும் அத்தகைய படங்களைத் தவிர்த்தேன். அது புரியாமல் நடிகை படம் போட்டேன்னு திட்டுறாங்க..நடிகையும் விபச்சார வழக்கில் மாட்டியவரே.

    விபச்சாரக் குற்றம் இருதரப்பாலுமே செய்யப்படுகிறது. எனவே தண்டிக்கப்பட வேண்டியது இருதரப்புமே. விபச்சாரிகளை எவ்வளவு இழிவாக நான் நினைக்கின்றேனோ அதே அளவிற்கே விபச்சாரிகளிடம் போகும் ஆண்களையும்(விபச்சாரன்?) நினைக்கின்றேன். அதில் உங்களுக்குச் சந்தேகம் வேண்டாம். விபச்சாரத்தைத் தடுக்க கடுமையான சட்டங்களை, இருதரப்பையும் தண்டிக்கும் சட்டங்களை ஏற்படுத்துவதே தீர்வு. வேறு என்ன தீர்வு இருக்க முடியும்?

    ReplyDelete
  91. நண்பர் செங்கோவி , நான் சொல்லவேண்டியதையும் சேர்த்து இக்பால் செல்வன் சொல்லிட்டார்.. நீங்களும் ஆணுக்கு ஆதரவு இல்லை என்கிறீர்கள்.. நல்லது..

    ஆனால் பெண்கள் படம் மட்டுமே போட்டதால் பெண்களே குற்றவாளி என பட்டது.. ஆண் நடிகரையோ, ஆண்களையோ போட்டிருக்கலாம்... தலைப்பும் அவ்வாறே..

    சரி சொல்ல வேண்டியது சொல்லிட்டோம்னு நினைக்கிறேன்..

    இப்ப சிம்மக்கல் ஒரு புது பார்வை தந்துள்ளார்.. அது பற்றியும் யோசிக்கணும்னு நினைக்கிறேன்.. எனக்கும் இது புதிய பார்வையே..

    ReplyDelete
  92. அன்கான்ஷியஸ், கலெக்டிவ் கான்ஷியஸ்னு ஜல்லி அடிக்காதீங்க தலைவரே..நவநாகரீக உலகில் நாகரீகக் கோமானாகக் காட்ட, இப்படியெல்லாம் பேச வேண்டும் என்று நீங்கள் பயிற்றுவிக்கப் பட்டுள்ளீர்கள். நமது பண்பாடு இழிவானதென்றும் ப்ரெய்ன் வாஷ் செய்யப்பட்டுள்ளீர்கள். உங்களைப் பார்த்தால் பரிதாபமாக உள்ளது நண்பரே..

    //Go to a sex worker. Spend some time with her. And come back. You will write another blog regretting your conduct.// நான் ஒரு விபச்சாரி/தொழிலாளியின் வாழ்க்கையை முழுதாகப் பார்த்திருக்கிறேன், இங்கே எழுதியும் இருக்கிறேன். மேலும் ஒரு விபச்சாரியுடன் 3 மணி நேரம் அருகருகே அமர்ந்து பயணம் செய்திருக்கிறேன். அதைப் பற்றி பதிவில் நான் சொன்னது குறைவு. அவருக்கு ஆங்கிலம் தெரியவில்லை. அவருக்கு இமிக்ரேஷன் ஃபார்ம் ஃபில் பண்ணியது, சாப்பாடு/கூல்ட்ரிங்ஸ்/வாட்டர் ஃப்ளைட்டில் வாங்கிக்கொடுத்தது நானே. வேறு வழியில்லாமல் இந்தத் தொழிலுக்கு வந்தேன்’ என்று அவர் சொன்னதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதை அவரிடமே சொன்னேன். அவருக்குப் பதில் சொல்ல முடியவில்லை. அவரது குடும்ப ஃபோட்டோ, தொழிலுக்கு வந்த விதம் எல்லாவற்றையும் தெரியப்படுத்திவிட்டே போனார். உங்க உதவிக்கு நன்றி என்றும் சொல்லிவிட்டுத்தான் போனார். நான் ஏதோ அவரைப் பார்த்ததுமே அருவறுப்புடன் திரும்பிக்கொண்டதாக நினைக்க வேண்டாம். நான் ஒரு மனிதனாகவே நடந்து கொண்டேன். அதே நேரத்தில் அந்தத் தொழிலை மதிக்கவும் என்னால் முடியவில்லை.

    தனியாக நான் யாரையும் பார்க்க வேண்டிய தேவை இருப்பதாக எண்ணவில்லை. இந்த பதிவிற்கு உதவிய எனது நண்பர்களின் அனுபவங்கள் மிகவும் மோசம், பதிவில் எழுதி, அவர்களை வம்பில் மாட்ட நான் விரும்பவில்லை.நன்றி.

    ReplyDelete
  93. @எண்ணங்கள் 13189034291840215795சிம்மக்கல்லுக்கு பதில் போட்டிருக்கேன். போதுமான்னு பாருங்க..இல்லேன்னா தொடர்ந்து யோசிப்போம் நன்பரே.

    ReplyDelete
  94. சமீபத்திய தமிழ் நாளேடுகளையே புரட்டிப்பாருங்கள் அதிகமான செய்திகள் கள்ளக்காதலனுடன் மனைவி/தாய் ஓட்டம், கள்ளக்காதலன் உதவியுடன் கணவன் கொலை போன்ற செய்திகளாகத்தான் இருக்கும்.//

    இப்படியான செய்திகள் போட்டால்தான் பொதுபுத்தி சமூகத்தில் பத்திரிக்கை விற்குமே தவிர ஆணை பற்றி போட்டால் விற்குமா என்ன?..

    உங்களோட பயம் தெரிகிறது. எங்கே பெண்கள் ஆண்களை விட மேலே வந்துவிடுவார்களோன்னு..

    ஆண்கள் போல பெண்கள் போக ஆரம்பித்தால் நாடெங்கிலும் ஆண்கள் பாலியல் தொழில்தான் ஓங்கியிருக்கும்..

    ஒப்பீடு செய்யும்போது கொஞ்சம் நம்பும்படியா செய்வது படிப்பவருக்கும் விளங்கும்..


    //கள்ளக்காதலன் உதவியுடன் //

    ஆக இதை செய்வதும் ஒரு ஆண்தானே?..

    நிறைய படியுங்கள் ஆண் பெண் பற்றி முதலில் .விபரம் தெரிந்து பேசுங்கள்..

    ReplyDelete
  95. Men are frustrated with women because they never want sex.
    Women are frustrated with men because they always want sex.

    Women blame men they don’t know how to love.
    Men blame women that they only talk about love but don’t want to make it.


    The reason humans want sex is due to the hormone testosterone, which is predominantly male hormone. A normal male’s body produces 20 times more of this hormone than a female’s.

    In other words, a male feels the same way after one day without sex as a female after 20 days without sex. A male that has not had sex in 20 days feels the same way as a female after more than a year without sex.

    Knowing this simple difference, you can already understand the pain of the opposite gender. It’s NOT their fault: they are made this way! It’s in our genes! This is the reason why men are men and women are women.

    Men and women are DIFFERENT.
    Not better or worse, just different.

    A man can father a child every time he has sex, and a woman can only mother a child every two years or so. This means, a woman HAS TO be picky about who she allows to have sex with her.

    For generations women were paying too high a price for making a wrong choice. Women that have chosen men with bad genes had a weaker offspring and their children struggled to survive. Women that have chosen men with good genes had a stronger offspring and their children survived disproportionally. Those children were carrying their picky mother’s genes and this is why those female genes were passed to us.

    On the other hand, men never had adverse consequences of making a wrong choice. The more children they produced, the higher was their chance to pass their genes to future generations, as some of them would certainly survive. While men were determined to seek better genes too, they had to grab all chances to procreate coming their way to ensure their genes would be passed forward. The men that ONLY stuck with one woman (even a high quality woman) were losing genetically to the men that used all of their opportunities and had many more children that survived. Those children were carrying their father’s promiscuous genes, and this is why those male genes were passed to us.

    By Nature men are made to seek as much sex as they can get, so they can spread their seed wider.

    By Nature women are made to seek as many admirers as they can get, so they can make a better choice and get the best seed.

    Men seek quantity - women seek quality.

    This is why men seek sex and women seek love.

    Love is the proof that a woman needs to have some assurance that the man will stick around and help her with the upbringing of the offspring. For a woman, sex is the culmination of her emotional commitment to a man.

    For a man, sex is a physical act that eases the testosterone pressure he experiences constantly. Only after this tension has gone, can a man feel love towards a woman. This is why it often happens that men disappear after they got what they wanted: it wasn’t love; it was the testosterone pressure. Sex for men is the reality check of their passion.

    ReplyDelete
  96. This is why having sex early in the relationship is hazardous for women: the man has not had the time to develop any romantic feelings for her. He needs time to develop those feelings, and the only way to do it is through keeping the sexual tension going for as long as practicable. Sex must be attainable, nearly possible - but not quite. When the sexual tension is at its peak, its release is mind-blowing - and once is never enough, which lays a proper foundation for a future relationship – and love.

    Men fall in love through sex; women fall in sex through love.

    All of this happens on the unconscious level - we do NOT realize what’s going on.

    But the reason why you are here today and alive is because each and every of your ancestors, men and women, acted true to their instincts and managed to attract at least one sexual partner and produce an offspring.

    So, there is no need to be bitter about men wanting sex and women wanting love. Those two are the necessary pieces of the puzzle called Survival Of The Species.

    And you’ll be better off understanding what the other gender is going through and giving them exactly what they want: a mind-blowing sex or exhilarating love.

    http://www.soulmades.com.au/dating_tips/sex_love.htm

    --

    அதனால பெண்ணுக்கு காம எண்ணம் அதிகம் என்ற உங்க கதையெல்லாம் விபரம் புரியாதவர்கள் வேணுமானால் நம்பலாம்..

    இதுக்கு மேல சொல்ல ஒண்ணுமில்லை..

    ReplyDelete
  97. சிம்மக்கல்லுக்கு பதில் போட்டிருக்கேன். போதுமான்னு பாருங்க..இல்லேன்னா தொடர்ந்து யோசிப்போம் நன்பரே. //

    நீங்க மனிதாபிமானத்தோடு நடந்துகொண்டமைக்கு பாராட்டுகள் நண்பரே..

    சிம்மக்கல் சொன்னது எனக்குமே வியப்புதான்..

    என்ன இருந்தாலும் பாலியல் தொழில் ஒழிக்கப்படவே வேண்டும் என்பது என் கருத்து.. சமூக கேடு என்பதைவிட ஒரு பெண் போக பொருளாய் மட்டுமே உபயோகப்படுத்தப்படக்கூடாது என்பது என் கருத்து..

    மனம் விரும்பாமல் எந்த ஒரு உடலுறவும் நோய்தான்..

    இருப்பினும் வெளிநாடுகளில் அங்கீகரிக்கபடாவிட்டாலுமே மனித உரிமை அவர்களுக்கு கெளரவமான இடத்தையே தந்துள்ளது..

    மாற்று வேலைக்கு ஏற்பாடும் செய்கிறார்கள்..

    உலகம் முழுதும் செழித்து வளர்வதையும் , அதிகமான விவாரத்துகளையும் பார்க்கும்போது இதை ஒழிப்பதும் கடினமாகுது..

    திருமணம் தாண்டிய உறவு ( ஊடகப்படி கள்ளக்காதல் ) ஏன் என இன்னொரு தனிப்பதிவும் போடவேண்டிய கட்டாயம்..அதை எப்படி தடுக்கலாம். என எல்லோருமே அறியணும்..பெண்கள் முன்னேறி சொந்தக்காலில் நிற்க ஆரம்பித்துள்ளார்கள்.. இன்னும் முன்புபோல் அடிமைப்படுத்த முடியாது என்ற நிஜத்தை புரியணும்..

    பொதுபுத்தியில் தவறான பல புரிதல்களால் நாம் நம்மை மாற்றிக்கொள்ளவே அஞ்சுகிறோம்.. அது நமக்குத்தான் ஆபத்து..


    விவாகரத்து அதிகமாகும்போது, முதிர்காளைகள் உருவாகும்போது, துணை இழந்தபோதெல்லாம் என்ன செய்வார்கள் ஆண்கள்.. சிலர் வேணுமானல் காமம் இல்லாமல் இருக்கலாம். பலரால் முடியாது என்பதே நிஜம்..

    காமம் என்பது தவறல்ல.. அளவோடு சரியான துணையோடு இருப்பது மருந்தும்..

    இவற்றை பற்றி மனமுதிர்ச்சியோடு மட்டுமே பேசப்படவேண்டுமே தவிர குற்றமாய் பார்ப்பதல்ல..


    திருமணம் தாண்டிய உறவு , அடிமைத்தனம் இருக்குமிடத்திலும், சக மனிதருக்குண்டான மரியாதை இல்லாமல் அன்பில்லாத இடத்திலும் நிச்சயமா ஏற்படும் சந்தர்ப்பம் சூழல் அமைந்தால்..

    ஆக துணையை நட்போடு நடத்துபவருக்கு இந்த பிரச்னையில்லை..( விரிவா எழுதுறேன் பதிவா ).

    அனேக குடும்பங்கள் இப்படியான அடிமைத்தனத்தில் தான் அனுசரிச்சு போகுது என்பதே உண்மை..

    ReplyDelete
  98. @எண்ணங்கள் 13189034291840215795//சமூக கேடு என்பதைவிட ஒரு பெண் போக பொருளாய் மட்டுமே உபயோகப்படுத்தப்படக்கூடாது என்பது என் கருத்து..

    மனம் விரும்பாமல் எந்த ஒரு உடலுறவும் நோய்தான்..// இதையே பிணத்துடன் புணர்வது போன்றது என்று முந்தைய ஒரு பின்னூட்டத்தில் சொன்னேன்.

    //துணையை நட்போடு நடத்துபவருக்கு இந்த பிரச்னையில்லை..// 100% கரெக்ட்.

    //( விரிவா எழுதுறேன் பதிவா ).// கண்டிப்பா எழுதுங்க..நன்றி.

    ReplyDelete
  99. பெண்களைப் பதிவு இழிவுபடுத்திவிட்டதாக எண்ணிய நண்பர்கள், விபச்சாரிகளைப் பற்றிய குடும்பப் பெண்களின் கருத்தையும் கேட்டு இங்கு பதிவு செய்தால் மகிழ்வேன்.

    ReplyDelete
  100. @ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)//This post has been removed by the author.// ஆஹா..பாதுகாப்பு தர வேண்டிய போலீஸ்காரே ஓடிட்டாரே.

    ReplyDelete
  101. @ "THOPPITHOPPI"
    //நீங்கள் சொல்வதை பார்த்தால் ஆண்கள் ரோட்டில் சுற்றும் பெண்களை எல்லாம் வலுக்கட்டாயம்மாக இழுத்துக்கொண்டுப்போய் கையில் பணம் கொடுத்து அனுப்புகிறார்கள்(90 %). அப்படித்தானே சொல்லவறீங்க? இன்னும் எத்தனை நாட்களுக்கு இப்படி ஆண்களே ஆண்களை கேவலமாகவும் கீழ்த்தரமாகவும் சித்தரிக்கப்போகிரீர்கள்?//
    பணம் கொடுக்க வேண்டாம்,எடுக்கவும் வேண்டாம்.பெண்கள் இரவில் தனியாக வரும் நிலை இன்று வரை கேள்விக்குறியே இதன் காரணம் பெண்களா எனக்கு புரியவில்லை.
    //உங்களுக்கு சந்தேகம் இருந்தால் சமீபத்திய தமிழ் நாளேடுகளையே புரட்டிப்பாருங்கள் அதிகமான செய்திகள் கள்ளக்காதலனுடன் மனைவி/தாய் ஓட்டம், கள்ளக்காதலன் உதவியுடன் கணவன் கொலை போன்ற செய்திகளாகத்தான் இருக்கும். இனியாவது ஆண்களே இப்படி ஆண்களை தரம்தாழ்த்திக் கொள்வதை நிறுத்துங்கள்.நீங்களே இப்படி கூறிக்கொண்டு இருந்தால் 33% என்பதை 63% சதவிகிதமாக உயர்த்தி கேட்க ஆரம்பித்து விடுவார்கள்.//
    யாருக்கு காமம் அதிகம் அதனால் தவறு என்று நான் சொல்ல வில்லை.ஆண்கள் வைப்பாடிகள் வைத்து கொள்வதை சரி என்று சொல்வீர்கள் போல! இதை பற்றி எதுவும் சொல்லவில்லை ஏன்?

    பெண்கள் கலவி ஆசை என்பது அதில் தவறு என்பது கேவலமாகவும் சொல்வீர்கள் போல! இதற்கும் பாலியல் தொழிலுக்கும் என்ன தொடர்பு? "தாய்-மகன் பாலியல் உறவு இன்ன பிற உறவு வகைக்கும் பாலியல் தொழிலுக்கும் என்ன தொடர்பு? நான் ஆண்களை இழிவு படுத்தவில்லை பெண்கள் மீது சொல்லும் கலவி ஆசை,பாலியல் தொழில் ஆகியவற்றை ஒன்றாக பாவிப்பதை தவறு தொப்பி

    ReplyDelete
  102. @டக்கால்டி//naanum unga pakka paarvaiyil thaan irukken... // சாரி, இப்போ தான் பார்த்தேன்..நன்றி டகால்ட்டி.

    ReplyDelete
  103. @MANO நாஞ்சில் மனோஅண்ணே, வந்திருந்தீங்களா..தெரியவேயில்லை.

    ReplyDelete
  104. விபச்சாரனை பற்றி ஒரு பதிவு எழுதுங்க நண்பரே

    நண்பரே இந்த விட்ஜெட்டை தங்கள் தளத்தில் இணைத்து கொள்ளுங்கள்
    திருட்டை தடுக்க 95% உத்திரவாதம்...!

    ReplyDelete
  105. இங்கே எல்லாரும் பதிவின் நோக்கத்திலிருந்து விலகி செல்வதாக படுகிறது . பதிவின் நோக்கம் யார் குற்றம் செய்தார்கள் ஆண்களா இல்லை பெண்களா என்று கண்டு பிடிப்பது இல்லை .
    விபச்சாரம் ஒரு வியாதி . அதை செய்பவர்கள் நோயாளிகள் . அதற்க்கு மருந்து கொடுக்க வேண்டுமே தவிர அதை பரப்புவர்தற்க்கு ஏன் முயற்சி செய்கிறீகள் ?
    தவறு செய்தது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் தண்டனை சமமாக கடுமையாக இருந்தால் , தானாக இது குறைந்து ஒழிந்து விடும் .

    அதை விட்டு விட்டு , அதை ஒரு தொழிலாகவும் , அதை செய்பவர்கள் அனைவரும் பாவ பட்ட ஜென்மங்கள் போலவும் கூறுவது உங்களை நீங்களே பெரிய புத்தனாக நினைத்து கொண்டதாக அர்த்தம் .

    விபச்சாரமே இல்லை என்றால் பின் பெண்கள் ஏன் ஆண்களால் வஞ்சிக்க பட்டு தொழில் என்று நீங்கள் சொல்லும் அந்த விபச்சாரத்தை செய்ய வேண்டும் ? அவர்களும் வாழ்கையில் முன்னேறுவார்கள் தானே ..

    ReplyDelete
  106. //உங்களோட பயம் தெரிகிறது. எங்கே பெண்கள் ஆண்களை விட மேலே வந்துவிடுவார்களோன்னு.. //


    ஓ பெண்கள் ஆண்களை விட மேலே வரவேண்டும் என்பதற்க்காகத்தான் விபச்சாரத்தை அங்கீகரிக்கவேண்டும் என்று பின்னூட்டம் செய்கிறீர்களோ?

    //ஆண்கள் போல பெண்கள் போக ஆரம்பித்தால் நாடெங்கிலும் ஆண்கள் பாலியல் தொழில்தான் ஓங்கியிருக்கும்..//

    ஓங்கி இருக்கும் என்றால்? //Men are frustrated with women because they never want sex.
    Women are frustrated with men because they always want sex.// இந்த ஆங்கில வாக்கியத்துக்கு நீங்கள் அப்ப என்ன விளக்கம் கொடுப்பிங்க?. அப்போதும் ஆண்கள்தான் கட்டாயம்மாக பணம் வாங்கி ஈடுப்படுகிறார்கள் என்று வாக்குவாதம் செய்வீர்களோ?


    //ஒப்பீடு செய்யும்போது கொஞ்சம் நம்பும்படியா செய்வது படிப்பவருக்கும் விளங்கும்..
    //கள்ளக்காதலன் உதவியுடன் //
    ஆக இதை செய்வதும் ஒரு ஆண்தானே?..//

    சரியாக உங்களுக்கு புரியவில்லை போல.

    ஒரு ஆணை(கணவனை) கொலை செய்ய இன்னொரு ஆணை கொலைக்காரனாக மாற்றுகிறாள் "பெண்". இங்கே கொல்லப்படுவது கணவன் என்ற அப்பாவி ஆண்.

    ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப்பின் ஒரு பெண்/ பழமொழி

    ஒவ்வொரு ஆணின் குற்றத்திற்கு பின் ஒரு பெண் / புது மொழி



    //நிறைய படியுங்கள் ஆண் பெண் பற்றி முதலில் .விபரம் தெரிந்து பேசுங்கள்.. //

    ஓ நீங்கள் நிறைய படித்ததால் தான் "பாலியல் தொழிலார்கள்" என்று மாற்றசொல்கிரீர்களோ? எந்த புத்தகம் என்று சொல்லுங்கள் நானும் படித்துத் தெரிந்துக்கொள்கிறேன்.

    ReplyDelete
  107. அருமை,.. ப‌திவும் நாக‌ரிக‌மான‌ பின்னூட்ட‌ங்க‌ளும்,.. செங்கோவி ப‌திவில் குறை சொன்னால் நீங்க‌ள் ரொம்ப‌ கோப‌ப்ப‌டுவ‌து போல் தெரிகிற‌து. கூலா இருங்க‌,.. அனைத்து பின்னூட்ட‌ங்க‌ளும் ரொம்ப‌ நாக‌ரிக‌மான‌ பின்னூட்ட‌ங்க‌ளே,.. இதுவே இந்த‌ ப‌திவின் வெற்றி.

    ReplyDelete
  108. @இந்தியன்விபச்சாரனைப் பத்தி எழுதுனாத் தான் யோக்கியன்னு ஆகும் போலிருக்கே...

    ReplyDelete
  109. @மந்திரன்//அதை விட்டு விட்டு , அதை ஒரு தொழிலாகவும் , அதை செய்பவர்கள் அனைவரும் பாவ பட்ட ஜென்மங்கள் போலவும் கூறுவது உங்களை நீங்களே பெரிய புத்தனாக நினைத்து கொண்டதாக அர்த்தம் .

    விபச்சாரமே இல்லை என்றால் பின் பெண்கள் ஏன் ஆண்களால் வஞ்சிக்க பட்டு தொழில் என்று நீங்கள் சொல்லும் அந்த விபச்சாரத்தை செய்ய வேண்டும் ? // நல்லாக் கேளுங்க பாஸ்..பெண்ணியவாதின்னு பேர் எடுக்க வேறு எத்தனையோ நல்லவழிகள் உள்ளன..விபச்சாரத்தை ஆதரித்தா அதைச் செய்யவேண்டும்.

    ReplyDelete
  110. @jothi//செங்கோவி ப‌திவில் குறை சொன்னால் நீங்க‌ள் ரொம்ப‌ கோப‌ப்ப‌டுவ‌து போல் தெரிகிற‌து. கூலா இருங்க‌,// அப்படியா தெரிகிறது..சாரி..நான் தொடர்ந்து அவர்களுடன் விவாதித்துக் கொண்டு தானே இருக்கிறேன்..அவர்களைக் கோபப்படுத்தும்விதமாக ஏதும் சொல்லி விட்டேனா..தெரியலை..பதிவில் சொல்லாததைச் சொன்னதாகச் சொல்லும்போது கொஞ்சம் எரிச்சல் வந்த்து..அது சரியான விவாதம் பண்ணும் முறை அல்லவே..இருப்பினும், உங்கள் அறிவுரையைக் கவனத்தில் கொள்கிறேன் ஜோ!

    ReplyDelete
  111. @Sengovi- Anne..Muthalla juice saapidunga...bathil solli bathil solli tired aayiteenga pola...

    ReplyDelete
  112. @டக்கால்டிஉண்மை தான் டகால்ட்டி..ரொம்ப டயர்ட் ஆகிட்டேன்..அடுத்து மன்மதன் லீலையை இறக்குனாத்தான் ரிலாக்ஸ் ஆவேன்.

    ReplyDelete
  113. ஆகா எத்தனை விதமான பின்னூட்டங்கள் .......அதில் தான் எத்தனை விதமான கோணங்களில் அலசல்கள் .....ஆராய்ச்சிகள்.....அபிலாஷைகள்....வேறு எந்த ஒரு பதிவருக்கும்.....அல்லது இதே பதிவரின் வேறு பதிவுகளுக்கும் கிடைக்காத பின்னூட்டங்கள்.......ஒன்று மட்டும் உறுதி ......அனைவரின் அடி ஆழ மனதில் செக்ஸ் சம்பந்தப்பட்ட விஷயங்கள் நிச்சயமாக இருக்கவே இருக்கிறது ........அது என்றாவது ஒரு நாள் இந்த பின்னூட்டங்கள் போல் வெளி வந்தே தீரும் .......

    ReplyDelete
  114. பாலியல் தொழில் சமூகக்கேடல்ல. அது சமூகத்தின் தேவைகளுள் ஒன்றாகும்.

    வீட்டைவிட்டு வெகு நாள்கள் பிரிந்திருக்கும் (இராணுவ வீரர்கள்) ஆண்கள், வேலைநிமித்தம் குடும்பத்தை விட்டு பட்டணங்களில் வாழும் ஆண்கள் போன்றவர்களுக்காகவே இப்பாலியல் தொழில் நடாத்தப்படவேண்டும். மாறாக, மனைவி வீட்டில் இருக்க, காமத்திற்காக பெண் தேடுபவர்களுக்கு கிடைப்பவர்கள் சமூகக்கேட்டில் வருவார்கள்.

    ஒரு பெண் இத்தொழிலைத் தேர்ந்தெடுக்கும்போது:

    ஆங்கு பார்க்கப்படவேண்டியவை:

    அவள் விருப்பத்தின் பெயரா?
    அவள் பிறரால் (மாமாக்கள், போலீசு) சுரண்டப்படுகிறாளா ?
    அவளுக்கு இத்தொழிலில் பாதுகாப்புகல் அளிக்கப்படுகின்றனவா
    ? (மருத்துவ வசதிகள் போன்று)

    இன்ன பிறவே.

    இப்படிப்பட்ட பெண்களை மதிக்கமாட்டோம் என்பது தவறாகும்.

    வீட்டைவிட்டுப் பிரிந்து இருக்கும் பெண்கள், ஆண்டுகள் பலவாகியும் மணமுடிக்கப்படாமல் இருக்கும் பெண்களும் இப்படி நாட ஆண்விபச்ச்சாரிகள் தேவையே; அது சமூகக்கேடாகதே எனக் கேட் கலாம். கேட் க வேண்டும்.
    ஆனால் முடியவில்லை. காரணம். பெண் என்பவளை ஆண் படைத்த கலாச்சாரம் கட்டி வைத்துவிடுகிறது. மேலும் அதை அவள் மீறும்போது தண்டனை அளிப்பது ஆண்களே.

    பெண்களே தங்கள் வாழ்க்கையை தாமாகவே கட்டமைத்து வாழும்நிலை வரும்போது, அங்கு ஆண் பாலியல் தொழில் ஒரு சமூகக்கேடாது அது வேண்டப்படுவதால்.

    பெண் விருப்பத்தின் பெயரில்தான் புணர்ச்சி. இல்லாவிடில் பிணத்தைத் தழுவியதாகும் என்பது ஆணாதிக்க சிந்தனையாகும்.

    அப்படியே என்றால், தம்பதியர் வாழ்க்கையில் ஒரே ஒரு இரவுதான், அல்லது ஒரு சில இரவுகளே. மற்றெல்லாம். ஆங்கே ஒருவருக்கு விருப்பமில்லாமலே மற்றொருவர். மணவாழ்க்கை முழுவதும் ஒரு பிணத்தோடு வாழும் வாழ்வே என்பதை கொள்க.

    இத்தைகைய செயலுக்கு ஒப்பா கொள்கையை விடுக. In a married life, mutually desired copulation can be only for a few times. aasai arupathu waal. mookam muppathu waal.

    The reality is that, in all other times, only one party is desiring. The other partner should accept that and pleases whether it is the husband or wife. I mean in normal circumstances.

    So, b realistic and speak truth as u see in life. See within ur marriage; u will know.

    ஆண் விருப்பம் என்னவார்யிற்று? கணவன் பலவேளைகளில் விருப்பமில்லாமல் மனைவியைப் புணரவேண்டும் அஃது அவளின் விருப்பாமாயின். அவனே நல்ல கணவன். இல்லாவிட்டால், ஆணாதிக்கம் செய்யும் கபோதி. அவன் கணவனல்ல.

    மணவாழ்க்கையில் உடலறுவு என்று பேசப்படும்போது ஏன் பெண்ணைப்பற்றியே குறிப்பிடுகிறீர்கள் ? காரணம். ஆணாதிக்கசிந்தனையின் தாக்கமே.

    கற்புநிலை எனில் ஆணுக்கும் பெண்ணுக்கும் அது பொதுவில் வைப்போம் என்று பாடியவ்ர் ஒரு நாசூக்கான பேர்வழி.

    ஏனெனின். அவர் எழுத வெட் கப்பட்ட வரி கீழே:

    காமனிலை எனின் அஃது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவில் வைப்போம்

    னிற்க. இனி ஆங்கிலத்தில்.

    ReplyDelete
  115. விபச்சாரமே இல்லை என்றால் பின் பெண்கள் ஏன் ஆண்களால் வஞ்சிக்க பட்டு தொழில் என்று நீங்கள் சொல்லும் அந்த விபச்சாரத்தை செய்ய வேண்டும் ? // நல்லாக் கேளுங்க பாஸ்..பெண்ணியவாதின்னு பேர் எடுக்க வேறு எத்தனையோ நல்லவழிகள் உள்ளன..விபச்சாரத்தை ஆதரித்தா அதைச் செய்யவேண்டும். "

    U refuse to see the truth of life. Sexual profession is the oldest profession in the world.

    No one can abolish it.

    Ur statement that if there is no such sex workers, there wont be expolitation of women in flesh trade - is out and out false statement.

    Because there cant be a scene where there is no man w/o seeking a sex worker. Men will b men always and wherever.

    Sex is a biological urge and necessity for both sexes.

    It is regulated by our culture. But regulation nees some props. In other words, u need a wife, and she should hav enough sexual appetite to share it with u. If she is in prolonged illness and there is no way to go out of the marriage, sex outside marriage is the only option for which sex workers are necessary. If not, you will see the elopment with other man's wife. The wives of other men will be covetted. Marriages will b in danger.

    So, sex w/in marriage s regulated; but regulation s not always possible. Some sort of regulation is brought by visiting sex workers.

    I repeat, Men will have sexual urges as much as women. Both sexes need legitimate outlet for that. Sex does not always mean getting children: that is religious view out of debate here.

    When legitimate sexual outlet is blocked, we need other outlets and that is sex outside marriage.

    Sngovi writes; ask housewives and they will tell they dont like sex workers.

    I challenge him: Ask housewives and they will tell you that sex workers r necessary; but what they object to is the risk of disease.

    What the housewives fear is not the paid sex workers for an instant gratification; but concubines (vaippaattis). Such viappaattis wreck married lives; and covet all the earnings of the man, and also, get children out of sex with him, to whom the man ought to provide for; thus, he will hav to neglect the wife and her children. So, all housewives fear viappaattis.

    No sex worker wrecks any woman's life, provided the sex workers are medically healthy. She doesnt come to your home; she does not ask ur money on monthly basis, she does not want to share ur roof with ur wife and u; she does not want children out of u.

    Sex with her may not b voluntary on her part. But no force r no coercision s involved. The relations between u and she is that of commercial transaction: consumer and provider.

    What more to say but to ask you only this: RESPECT HER for she keeps ur domestic life in balance.

    ReplyDelete
  116. @ஸ்ரீகாந்த்உண்மையை நச்சுன்னு சொல்லிட்டீங்க பாஸ்.

    ReplyDelete
  117. @ செங்கோவி - தவறாக நினைத்துவிட்டீர்கள் எழுதிய பதிவர் மீதான கோபமோ தாபமோ இல்லீங்க.. உங்களை மட்டும் திருந்துங்கனு சொன்னால் அது யாருக்கும் சென்றடைவது போல் இல்லை. முதலில் விபச்சாரம் என்றால் என்ன? அதன் தோற்றம் என்ன ? இந்திய சமூகம் விபச்சாரத்தைப் எப்படி பழங்காலத்தில் பார்த்தது, இடைக் காலத்தில் பார்த்தது, இன்று எப்படிப் பார்க்கின்றது ? விபச்சாரி என்ற சொல் சரியா ? சரி என்றால் ஏன் சரி ? விபச்சாரத்தை தொழிலாக அங்கீகரிக்கலாமா ? வேண்டாமா ? ஏன் வேண்டாம் ? விபச்சாரத்தை ஒழிக்க என்ன நடைமுறை சிக்கல் உள்ளது ? விபச்சாரத்தை மனித சமூகங்களில் ஒழித்துவிட முடியுமா என்பதற்கு பதில்களைத் தேடினாலே பல சிக்கல்கள் அவிழும் சகோ.

    மற்றப்படி நீங்கள் சொல்வது போலவும், தம்பி தொப்பி தொப்பி சொல்வது போலவும், விபச்சாரி இழிவானவர்கள் என்பதை என்னால் ஏற்க முடியாது ? விபச்சாரம் இழிவாகலாம் ஆனால் விபச்சாரி இழிவாக முடியாது ? விபச்சாரி இழிவானவர் என்றால் அவர் திருந்திய போதும் இழிவானவர் என்றப் பெயரோடு தான் சமூகத்தில் நடமாடுவார் என்பதால் தான் அப்படி சொன்னேன்.

    அதுநிற்க. ஏன் விபச்சாரம் இழிவாக இருக்கின்றது என்பதையும் விளக்க வேண்டும் ? சிம்மக் கல் சொன்னது போல இன்றைய இந்திய சமூகம் ஒரு புதுவித போலிக் கலாச்சாரத்தை தம்மில் ஏற்றுக் கொண்டுள்ளது எனலாம்.............. விபச்சாரிகளின் தேவை பழங்காலம் தொட்டே சமூகத்துக்கு இருந்து வந்தன ... அதனால் தான் பழம்தமிழ் சமூகம் பரத்தையர் சேரிகளை ஆதரித்தன ......

    அதே போல பரத்தையர் தமது தொழிலை விடுத்து மணம் புரிந்தும் வாழ்ந்துள்ளதை சுந்தரரின் மனைவி ஒரு பரத்தையர் குலத்தில் பிறந்து இல்லற பெண்ணாக வந்தவர்.

    அதே சமயம் பரத்தையரை பழங்கால சமண பௌத்தம் எதிர்க்கின்றது .............. !!!

    ஆண்கள் மனது வைத்தால் மட்டுமே விபச்சாரத்தை இச்சமூகத்தில் இருந்து ஒழிக்க முடியும்.. அதற்கு என்ன வழி என்பதை ஆராய்வோம். அதுவரை பரத்தையரை விபச்சாரி என்ற இழி சொல்லால் விளிக்கத் தேவை இல்லை எனவே நினைக்கின்றேன் .............

    ReplyDelete
  118. @simmakkalஉங்கள் கமெண்ட்டில் உள்ள ஒரு விஷயத்துடன்கூட என்னால் உடன்பட முடியவில்லையே..//I challenge him: Ask housewives and they will tell you that sex workers r necessary;// அப்படியா......சரி தான்!..நல்லது..நடக்கட்டும்...நடக்கட்டும்..

    ReplyDelete
  119. @இக்பால் செல்வன்சகோ, என் பதிவு முன்வைத்தது இரு கேள்விகளையே..

    1. விபச்சாரியை விபச்சாரின்னு சொல்லலாமா?

    2. பல பெண்கள் கடின வேலை செய்து, கௌரவமாக வாழப் போராடும் உலகில், இவர்கள் மட்டும் ஏன் இந்த இழிதொழிலில் இறங்க வேண்டும்?

    எப்படியோ சுத்து சுத்தென்று சுத்தி, முதல் கேள்விக்குப் பதில் சொல்லிட்டீங்க..இரண்டாவது கேள்வி?..மாற்று என்ன இருக்குன்னு கேட்கீங்க..பதிவிலேயே சில தொழில்களைச் சொல்லி இருக்கேன்..ஏன் இறங்குறாங்கன்னு கேட்கிறேன்..நீங்க இறங்குனப்புறம் உள்ள மறுவாழ்வு பற்றிப் பேசுறீங்க..இறங்குவதற்கான அவசியம் என்ன? படித்ததை வைத்து மட்டும் பேசாமல், நம் சொந்த அனுபவத்தை வைத்து கொஞ்சம் யதார்த்ததுடன் யோசித்தால் பதில் கிடைக்கும்..

    ReplyDelete
  120. சிம்மக்கல் மிக தெளிவாக சொல்லிவிட்டார்.. முன்பு நேருவும் இதே போல் ஒரு கருத்தை சொன்னதாக நியாபகம். பறத்தையர் இருப்பதால் நாட்டில் கற்பழிப்பும், கொலையும் குறையும் என.. ( சரியா தெரியல சொன்னது யார்னு )

    அதேதான்.. நான் முன்பு சொன்னது போல் குடும்ப பெண்ணால் பல காரணத்துக்காக தினம் தாம்பத்யத்தில் ஈடுபட முடியா நிலைமை.. பறத்தையர் நோயில்லாமல் இருக்கும்பட்சத்தில் போகலாம் என்ற எண்ணமே வரும்.. ( நம்மளை தொந்தரவு செய்யாமல் இருந்தா சரி என )

    ஆனா அடிமனதில் எங்கே இன்னொரு குடும்பம் வந்தா நாம் விலக்கப்படுவோமோ என்ற கவலைதான் இருக்கும்..

    மதமும் சரி பாலியல் தொழிலும் சரி ஒருபோதும் மனித குலத்தில் இருந்து அளிக்கவே முடியாது..

    பெண்கள் முன்னேற முன்னேற , விவாகரத்துகள் அதிகரிக்க , ஆண் பரத்தையரை நாடும் நிலைமை அதிகரிக்கவே செய்யும்..

    இதில் பேசுபவர்கள் எத்தனை பேர் திருமணம் ஆனவர்கள் என தெரியவில்லை.. ஆனவர்க்கு ஓரளவு புரியும்..

    ( தொப்பி கருத்தாடல் என்றால் விபரம் தரவும், அல்லது புரியவுமாய் இருக்கணும்.. விதண்டாவாதமாக மட்டுமே இருக்குது உங்க பேச்சு என்பதால் பதிலளிப்பது வீண் என நினைக்கிறேன்.. நிறைய வாசிங்க.. நிறைய புரிந்துகொள்ள மனதை திறந்த புத்தகமா வைக்கணும்..இதையும் கிண்டல் செய்யணும்னா செய்து பதிவாகவே கூட போட்டு கும்மி அடித்துக்கொள்ளலாம்.. :) )

    ReplyDelete
  121. @எண்ணங்கள் 13189034291840215795 நீங்களும் இப்படிப் பேசுனா எப்படி...// நான் முன்பு சொன்னது போல் குடும்ப பெண்ணால் பல காரணத்துக்காக தினம் தாம்பத்யத்தில் ஈடுபட முடியா நிலைமை.. // அப்போ பரத்தையரால மட்டும் எப்படி தினம் தாம்பத்யத்துல ஈடுபட முடியும்? நான் பார்த்த லேடி, ஒருநாளைக்கு 8 பேர்கூட கண்டிப்பா படுக்கணும்னு சொன்னாங்க..அதுக்கெ மேல படுத்தா ஓவர் டைம் காசு கிடைக்குமாம்..குடும்பப் பெண்களால் வாய் திறந்து வேண்டாம்னு சொல்ல முடியும்..ஆனா அங்க? நீங்க எல்லாரும் இதுவரைக்கும் பரத்தையும் பெண்ணே, மனித நேயத்தோட யோசி-ன்னு அட்வைஸ் பண்ணீங்க..இப்போ இப்படிச் சொல்றீங்களே..இது எந்த விதத்தில் சரி?

    அப்போ உங்க அக்கறை பாலியல் தொழிலாளி மேல இல்லை, பாலியல் தொழில் மேலயும் காம வறுமையில இருக்குறவங்க மேல மட்டும் தானா?

    அதனால தான் ஆரம்பித்துல இருந்தே சொல்றேன்..கண்ட புத்தகத்தையும் படிச்சிட்டு, அறிவிஜீவித்தனமா யோசிச்சு தத்துவத்தைக் கொட்டுறதை விட, சிம்பிளா யதார்த்தம் என்னன்னு யோசிங்க..விபச்சாரம் தேவையான்னு 100 பக்கத்துக்கு ஆராய்ச்சி பண்றதை விட்டுட்டு, அங்க என்ன நடக்குன்னு கண் திறந்து பாருங்க..போதும்.

    விபச்சாரம் வேணும்னா அந்தத் தொழிலுக்கு யார் போகணும்னு சொல்றீங்க? வறுமையில இருக்கிறயா, அப்போ போய் கண்டவன்கிட்டயும் படுன்னு சொல்றீங்களா? அப்போ கௌரவமா உழைக்கும் பெண்களுக்கு என்ன மரியாதை..எவ்வளவு தான் வறுமை வந்தாலும் நம்ம சொந்தக்காரப் பெண்களை அனுப்புவோமா?..அப்போ நம்ம பெண்கள் பத்திரமா இருக்கணும்..மத்த ஏழைப்பெண்கள்லாம் போங்கன்னு அர்த்தமா?

    நண்பர் ஜீ சொன்னமாதிரி, பாலியல் தொழிலாளின்னு அழைச்சுட்டாப் போதும், நம்ம கடமை முடிஞ்சது, அவங்களுக்கு நல்லது பண்ணியாச்சுன்னு நினைச்சுக்கிறீங்களா..

    இது பெண்களைப் பற்றிய விவாதம். இங்கு பொதுவில் பெண்களால் விவாதத்திற்கு வர முடியாது. உங்களுக்குத் தெரிந்த பெண்களிடம் கேளுங்கள்..இதில் உள்ள கஷ்டங்களை அவர்கள் புரிய வைப்பார்கள்.

    ReplyDelete
  122. @செங்கோவிபாலியல் தொழில் அவசியம் தேவை என்பதால் வீட்டுக்கு ஒரு பரத்தையைக் கொடுக்கணும்னு கவர்ன்மெண்ட் சொன்னா, நாம என்ன செய்வோம்னு கொஞ்சம் யோசிப்போமே..

    ReplyDelete
  123. நண்பர் செங்கோவி , தவறாக நினைக்கவேண்டாம் .

    முதலில் இங்கே புவனேஸ்வரியின் படம் எதற்கு?..அதுவும் மார்பகத்தோடான படம் எதற்கு?..

    அடுத்து வரிசையாக நிற்கும் நடிகைகள் படம்?..

    நீங்கல்லாம் இத்தகைய படம் மூலம் பாலியல் தொழிலாளி பற்றி பரிதாபப்படுறீங்களா , இல்லை மார்க்கெட்டிங் பண்றீங்களான்னு தெரில..

    தயவுசெய்து பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்ட எண்ணவேண்டாமே..

    ஒண்ணு படத்தை நீக்கிவிட்டு பேசுங்கள்.. இல்லை உங்க கருத்து உங்களுக்கே முரணாக அமையுது...

    ReplyDelete
  124. அப்போ கௌரவமா உழைக்கும் பெண்களுக்கு என்ன மரியாதை..//
    தங்க தட்டில் வைத்து தாங்குங்களேன் அப்படியான பெண்களி . அதை செய்யாமல்தானே பாலியல் தொழிலுக்கு தள்ளப்படுகிண்றனர் பலர்..
    ---------

    எவ்வளவு தான் வறுமை வந்தாலும் நம்ம சொந்தக்காரப் பெண்களை அனுப்புவோமா?..அப்போ நம்ம பெண்கள் பத்திரமா இருக்கணும்..மத்த ஏழைப்பெண்கள்லாம் போங்கன்னு அர்த்தமா?//

    அதே. நம் வீட்டு பெண்களை அனுப்ப மாட்டோம்தானே?..ஆனா அந்த அருவருப்பையும் கூட செய்கிறார்கள்.. சிம்மக்கல் சொல்வதிலிருந்து சில உண்மைகள் புரிந்தேன்..

    இது தொன்றுதொட்டு வரும் தொழில். முடிவே கிடையாது என்பது எனக்கும் வருத்தமே.. சரி முடிவே கிடையாது என்றானபின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என யோசிப்பதுதான் பயனளிக்கும்..

    விரும்புபவர்கள் செய்யட்டும், ஆனால் அதை ஒழுங்குபடுத்தட்டும் சில நாடுகளைப்போல்..

    சிம்மக்கல் சொன்னதில் நியாயம் இருக்கிறது.. ஆணுக்கான தேவை இருக்கிறது..

    பாருங்களேன் , பதிவுலகிலேயே காமம் ஆபாசம் னா கூட்டம் கூடுவதை..தடுக்க முடியுதா?..

    இந்த மெய்நிகர் உலகம் ஒரு சாம்பிள்தான் நிஜ உலகுக்கு,..

    ஆக பாதுகாப்பான பாலியல் தொழில் பற்றித்தான் அடுத்த கட்டம் நகரவேண்டிய துர்பாக்கிய ( ஆம் ஏற்காவிட்டாலும் துர்பாக்கியமே ) சூழல்..அது பற்றி யோசிக்கலாம்.

    ReplyDelete
  125. @செங்கோவிபாலியல் தொழில் அவசியம் தேவை என்பதால் வீட்டுக்கு ஒரு பரத்தையைக் கொடுக்கணும்னு கவர்ன்மெண்ட் சொன்னா, நாம என்ன செய்வோம்னு கொஞ்சம் யோசிப்போமே.. //

    இப்ப மட்டும் என்ன ஒழுங்காம்..?.. அதையே கொஞ்சம் வித்யாசமா நடக்குது அவ்வளவே..

    பாலியல் தொழில் நடக்குன்னு பிடிச்சுட்டு போறது பெண்களைத்தானே?..

    நடிகைகளை வைத்து முழுக்க ஆபாசமா காட்டும் திரைப்படங்களை எதிர்த்து நம்மில் எத்தனை பேர் கொடி பிடித்தோம்.?

    நித்யா பற்றி குடும்பத்துக்குள்ளேயே கொண்டு வந்து காட்டுவது.?

    ஆக இந்த பிரச்னையெல்லாம் ஒழித்துவிட்டு காலங்காலமாய் நடக்கும் பாலியல் தொழில் பற்றி குரல் கொடுக்கலாம்னு நினைக்கிறேன்..

    ஏன்னா இதுதான் வேர்.. காம எழுத்தும் , படமும், ஆபாச உணர்ச்சியை தூண்டிவிட அவன் என்ன செய்வான்?.. பாலியல் தொழிலாளியிடம் போகணும், அல்லது கோவையில் வன்புணர்ச்சி செய்து குழந்தையை கொன்னது போல் கொல்லணும்..

    ஆக , அந்த உணர்ச்சிகளை தூண்டுபவர்களி முதலில் கேல்வி கேட்டு நிறுத்த முயலுவோம்..

    கலாச்சாரம் என்ற பேரில் ஆணுக்கு 30 வயதுக்கு மேல்தான் திருமணமாகி பெண் பற்றி முதல் அறிதலே..

    வெளிநாட்டில் 13-17 வயதுக்குள் காமம் பற்றி முழு புரிதல் இருக்கு.,.

    அதன்பின் காமத்தை பற்றி கனவு காணாமல் அவனால்/அவளால் முழு கவனத்தையும் வாழ்க்கை குறித்து செலுத்த முடிகிறது..திட்டமிட்டு குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள்.

    பள்ளியிலேயே காண்டம் பற்றி சொல்லித்தரப்படுகிறது.

    ஏன் பள்ளியிலேயே காண்டமும் வழங்கப்படுகிறது..

    பாலியல் கல்வி பற்றி விழிப்புணர்ச்சி தரணும்.. காமம் பெரிய விஷயமே இல்லை என புரிய வைக்கணும்..

    ReplyDelete
  126. அப்போ பரத்தையரால மட்டும் எப்படி தினம் தாம்பத்யத்துல ஈடுபட முடியும்? நான் பார்த்த லேடி, ஒருநாளைக்கு 8 பேர்கூட கண்டிப்பா படுக்கணும்னு சொன்னாங்க..அதுக்கெ மேல படுத்தா ஓவர் டைம் காசு கிடைக்குமாம்.//

    குடும்ப பெண்ணால் முடியாதுன்னா பல காரணம் இருக்கும்..

    பாலியல் தொழிலாளிக்கு அது தொழில்..வருமானம்.. அவள் விருப்பப்பட்டே செய்கிறாள்..

    கட்டாயப்படுத்தப்படக்கூடாது..அவர்களைத்தான் உள்ளே தள்ளணும் என சட்டமும் சொல்லுது..

    நான் இணைய குழுமம் ஒன்றில் சந்தித்த பாலியல் தொழிலாளி வைத்து எழுதிய கதைதான் "ஒதுக்கப்பட்ட கல்" ( என் பிளாகில் இருக்கும் http://punnagaithesam.blogspot.com/2009/08/15.html )

    கிட்டத்தட்ட அதே கதை..படியுங்கள் பல விபரம் புரியும்..


    அவர் சொன்னதும் அதே தான். பாலியலை ஒருபோதும் ஒழிக்க முடியாது.. சில ஆண்கள் காமத்துக்காக மட்டுமல்ல அனுசரணைக்காக கூட வருவதுண்டாம்..இத்தனைக்கும் குடும்பம் இருந்தும்.

    ஆக எங்கே தவறு.?

    அதன் வேர்கள் ./

    இப்படி இதற்கடியில் நிறைய காரணங்கள் இருக்கு,.. மேம்போக்காக மட்டும் பார்க்க முடியாது..

    ReplyDelete
  127. இது பெண்களைப் பற்றிய விவாதம். இங்கு பொதுவில் பெண்களால் விவாதத்திற்கு வர முடியாது. உங்களுக்குத் தெரிந்த பெண்களிடம் கேளுங்கள்..இதில் உள்ள கஷ்டங்களை அவர்கள் புரிய வைப்பார்கள். //

    :)

    நான் யார்னு நினைத்தீர்கள்..?..

    ReplyDelete
  128. பாலியல் தொழில் அவசியம் தேவை என்பதால் வீட்டுக்கு ஒரு பரத்தையைக் கொடுக்கணும்னு கவர்ன்மெண்ட் சொன்னா, நாம என்ன செய்வோம்னு கொஞ்சம் யோசிப்போமே.. //

    நல்ல கேள்வி..

    அப்படி மட்டும் சட்டம் வந்ததுன்னு வையுங்க.. நாட்டில் பாலியல் தொழில் முற்றிலும் ஒளிஞ்சிடுங்க..

    ஏன்னா தன் வீட்டு பெண்ணை அனுப்பும்போது உணர்வானே??????..அப்ப வலிக்குமே..

    இதேதாங்க சினிமாவுக்கும் சொல்றேன், பதிவுலகுக்கும் சொன்னேன்..

    ஆபாச படம் போடுறவன் நடிகையை ஆபாசமா காண்பிப்பவர் முதலில் தன் குடும்பத்து பெண்களை போடட்டுமே..

    ReplyDelete
  129. @எண்ணங்கள் 13189034291840215795

    உண்மையை நச்சுன்னு சொல்லிட்டீங்க பாஸ்!

    ReplyDelete
  130. @செங்கோவி
    //சகோ, என் பதிவு முன்வைத்தது இரு கேள்விகளையே..

    1. விபச்சாரியை விபச்சாரின்னு சொல்லலாமா?

    2. பல பெண்கள் கடின வேலை செய்து, கௌரவமாக வாழப் போராடும் உலகில், இவர்கள் மட்டும் ஏன் இந்த இழிதொழிலில் இறங்க வேண்டும்?//

    முதல் கேள்வி பதில்: இங்கு தொழிலில் இருக்கும் அனைவரும் மொத்தமாக விபச்சாரி என்று சொல்லமுடியாது என்பதுதான்
    2 வது கேள்வி பதில்: நாம் முயர்ச்சி (அ)பங்களிப்பை கொண்டு அவர்கள் வாழ்வில் உயர
    ஆவன செய்ய வேண்டும்.குறை சொலவது உரிமை என்றால் தீர்வு காண்பது நம் கடமை சரிதானே! நன்பறே!

    ReplyDelete
  131. சகோ. ஒரு பெண் ஏன் விபச்சாரத்தில் ஈடுபடுகின்றாள் என நீங்கள் கேள்வி கேட்டீர்கள் ?

    உங்கள் பார்வையில் விபச்சாரம் என்றால் என்ன என்பதை நீங்கள் விளக்கினால் சுபமாக இருக்கும் .........

    பிறகு எனது பதிலை நான் வைக்கின்றேன் சகோ.

    ReplyDelete
  132. // அப்படி மட்டும் சட்டம் வந்ததுன்னு வையுங்க.. நாட்டில் பாலியல் தொழில் முற்றிலும் ஒளிஞ்சிடுங்க..

    ஏன்னா தன் வீட்டு பெண்ணை அனுப்பும்போது உணர்வானே??????..அப்ப வலிக்குமே //

    சபாஷ் சரியான பதில் சகோ.

    தொழில் ரீதியான விபச்சாரத்துக்கு முழுக் காரணமும் ஆண்கள் தான் என்பதில் இருவேறுக் கருத்தே இல்லை. சகோ.............. !!!

    ReplyDelete
  133. செங்கோவி, அந்த தப்பாய் போன உங்க ஊர் பெண் என்னென்ன வாங்கினாள், யாரிடமெல்லாம் சுகம் கண்டாள் என்று போட்ட நீங்கள், அவளிடம் சுகம் கண்ட ஒழுக்க சீலர்களைப் பற்றி எதுவுமே போடவில்லை. ஏன் அவர்கள் மனைவியிடம் கிடைக்கும் சுகத்தோடு திருப்தி அடைந்திருக்கக் கூடாது? அல்லது, திருமணமாகதவர்கள் என்றால், ஒழுக்கத்தோடு தவிர்த்திருக்கக் கூடாது? அவளிடம் சுகம் கண்டவர்களின் மேல் நீங்கள் காரித் துப்ப வேண்டியாதுதானே? ஆக, அவனுங்கள் எல்லாம் நல்லவனுங்கலாயிட்டானுங்க, இந்தப் பெண் மட்டும் விபச்சாரி என்ற போர்டை கழுத்தில் தொங்கப் போட்டுக் கொண்டு நடமாட வேண்டுமா? என்ன நியாயம் இது?

    ReplyDelete
  134. சமீபத்தில் ஒரு ஆப்பிரிக்க நாட்டின் கதையைப் பற்றி படித்தேன். [கென்யா, உகாண்டா, சோமாலியா ஏதோ ஒன்று...ஞாபகமில்லை]. அங்கே, பெண்கள் ஒருத்தரைக் கூட அங்குள்ள ஆண்மகன்கள் விட்டு வைப்பதில்லையாம், எல்லோரையும் சகட்டு மணிக்கு கர்ப்பழித்துத் தள்ளுகிறார்களாம். அழகான பெண் என்றால், முடிந்தது கதை, டேமேஜ் அதிகமாக இருக்கும். யாரும் ஒன்னும் பண்ண முடியாது. பிறந்த பெண் குழந்தைகளின் முகத்தில்அவர்கள் தாயார்களே காயம் அது இது என பண்ணி கோரமாக்குகிரார்கலாம், ஏனென்றால் அவள் கற்ப்பு நிலைக்காது என்று. ஏண்டி அழகாய் பிறந்தாய் என்று அடித்து உதைத்து அழுவதுண்டாம். அதே நிலை நம் நாட்டில் இல்லை. நீங்கள் சொல்வது மாதிரி "அந்த" தொழிலை யாருமே செய்ய வில்லை என வைத்துக் கொள்ளுங்கள், இங்கும் அதே தான் நடக்கும். யாரையும் நமாட்கள் விட்டு வைக்க மாட்டார்கள். ஆணின் வெறித்தனம், அதற்கு வடிகால் வேண்டும், இல்லையென்றால் அது கண்ட மேனிக்கு பாயும், எல்லோரையும் நாசப் படுத்திவிடும். உங்களால் ஒன்றும் செய்ய முடியாது. இது உங்களுக்கு நம்ப முடியாததாக இருக்கலாம், ஆனால் உண்மை. இது ஏதோ இன்றோ நேற்றோ நடப்பதல்ல, சங்க இலக்கியங்களிலேயே பொது மகளிர் என்ற வார்த்தை உள்ளது, கோவலன் கண்ணகியை விட்டு மாதவியிடம் சென்றதாகவும் இருக்கிறது. நீங்கள் ஒழுக்கமாக இருக்கிறீர்கள் என்பதற்காக எல்லோரும் அப்படி இருக்க முடியும் என்று நினைத்து விட்டீர்கள், ஆனால் ஒவ்வொருத்தனும் ஒரு மாதிரி என்பதை கவனிக்க வில்லை. அந்த தொழிலில் ஈடுபடுபவர்கள், வேறு வழியின்றி பிழைப்புக்காகவோ, சுகத்துக்காகவோ அல்லது வர்ப்புருத்தலின் பேரிலோ ஈடுபட்டிருக்கலாம், இருந்த போதும் அவர்களால் தான் நமது வீடுகளில் உள்ள சகோதரிகள் கற்புடன் வாழ முடிகிறது என்பது உண்மை. அவர்கள் இகழத் தக்கவர்கள் அல்ல. தனியாக [அதுவும் அழகாக இருக்கும் பெண்] வாழவே முடியாது, விட்டு வைக்க மாட்டார்கள் நமது ஆண் மகன்கள். ஆக, நீங்கள் பெண்களிடம் சுகம் காணச் செல்லும் ஆண் மகன்களை விட்டு விட்டு பெண்களை மட்டும் தாக்கியிருக்கிறீர்கள், அது தவறான Approach.

    ReplyDelete
  135. பல பெண்கள் கடின வேலை செய்து, கௌரவமாக வாழப் போராடும் உலகில், இவர்கள் மட்டும் ஏன் இந்த இழிதொழிலில் இறங்க வேண்டும்?


    Sengovi !

    பாலிய‌ல் தொழிலை எப்ப‌டி இழிதொழில் என்கிறீர்க‌ள் ? பாலிய‌ல் தொழிலை இல‌குவான‌ தொழில் என்று எப்ப‌டி சொல்கிறீர்க‌ள் ? பாலிய‌ல் தொழிலாள‌ர்க‌ள் எல்லாரும் ஐந்து ந‌ட்ச‌த்திர‌ ஓட்ட‌ல்க‌ளில் வாடிக்கையாள‌ர்க‌ளைச் ச‌ந்திப்ப‌தில்லை. என் ப‌திவுக‌ளில் சொல்ல‌ப்ப‌டும் பாலிய‌ல் தொழிலாள‌ர்க‌ள் அவ‌ர்க‌ளல்ல‌. க‌மாதிபுராவிலும் (நாய‌க‌னில் வ‌ரும்) ஜி பி ரோடிலும் (டில்லி) புத்வார் பேத்திலும் (பூனா) ச‌ங்க‌னாச்சியிலும் (ம‌காந‌தியில் வ‌ரும்) சாங்கிலி (ம‌காராட்டிரா) போன்று ஒரு குடித்த‌னமாக‌ வாழ்ப‌வ‌ர்க‌ளையே சொல்கிறேன். இவ‌ர்க‌ள் இல‌குவாக‌ தொழில் ப‌ண்ணுகிறார்க‌ளா ? இப்பெண்க‌ளெல்லாம் அத்தொழிலின் உட‌லின்ப‌த்திற்காக‌ இருக்கிறார்க‌ள் என்றா க‌ற்ப‌னை ப‌ண்ணுகிறீர்க‌ள் ? இவ‌ர்க‌ள் வாழ்க்கையைத்தான் பார்க்க‌வேண்டும். இவ‌ர்க‌ள் எல்லா ஊர்க‌ளிலும் உண்டு. விமான‌த்தில் ப‌ய‌ணிக்கும் பெண் அல்ல‌.

    இழிதொழில் என்ப‌து நுங்க‌ள் க‌ற்ப‌னை அல்ல‌து பார்வை. எப்ப‌டி அலுவ‌ல‌க‌த்தில் செய்வ‌து ந‌ல்ல‌ தொழில்? இஃது இழிதொழில் ?

    ஒரு சினிமா ந‌டிகையிட‌ம் சொல்லிப்பாருங்க‌ள்: நுங்க‌ள் தொழில் இழிதொழில். வேறுவேலை இழிதொழில‌ல்ல‌. அவ‌ர் மான‌ந‌ட்ட‌ வ‌ழ‌க்குப்போட்டு விடுவார். ஆனால் பாலிய‌ல் தொழிலாள‌ர்க‌ளுக்கென்று எவ‌ரும் இல்லை நுங்க‌ளைத்த‌ட்டிக்கேட்க‌ !

    சாக்க‌டையைக் க‌ழுவு ஊர் ந‌ன்றாக‌ இருக்க‌ட்டும் என்று செய்யும் தொழில் இழிதொழில் என்றார்க‌ள். அவ‌னை தீண்ட‌த்த‌காத‌வ‌ன் என்றார்க‌ள். ஏனென்றால், அஃது அழுக்கான‌ தொழில். மிக‌வும் குறைந்த‌ ச‌ம்ப‌ள‌ம். என‌வே இழிதொழில் ஆகிவிட்ட‌து.

    அதே போலவே இங்கேயும், க‌டின‌மான‌ தொழில். ஆனால் குறைவான‌ ஊதிய‌ம். அதுவும் எவ்வ‌ள‌வு என்று சொல்ல‌முடியாது. ஏனென்றால் ப‌ல‌ருக்குப் ப‌கிர்ந்த‌ளிக்க‌ப்ப‌டும். உயிருக்கு உத்த‌ர‌வாத‌மில்லை. வியாதி ம‌ட்டுமல்ல‌. வ‌ருப‌வ‌ன் குடித்து வ‌ந்து அடிப்பான். கொலையும் செய்ய‌லாம். அழுக்கான‌ இருப்பிட‌ம். அழுக்கான‌ உடைக‌ள். தொழிலில் பாதுகாப்பு இல்லை. போலிசால் என்னேர‌ம் இழுத்துச்செல்ல‌ப்ப‌ட‌லாம் இப்ப‌டிப்ப‌ட்ட‌ தொழில் இழிதொழில் ஆகிற‌து.

    சில‌ உண்மைக‌ளை நாம் ஒத்துக்கொண்டால் ம‌ட்டுமே என்னை நீங்க‌ள் ஏற்றுக்கொள்ள‌முடியும். இல்லையென்றால் காதுகேளாதார் வாத‌ம் ப‌ண்ணிய‌து போலாகும்.

    பாலிய‌ல் தொழில் வேண்ட‌ப்ப‌ட்ட‌தொன்று. அத‌னால் ச‌மூக‌த்துக்கு ந‌ன்மையே த‌விர‌ கேடில்லை முறையாக‌ வ‌கைப்ப‌டுத்த‌ப்ப‌ட்டால்.

    ஆட‌வ‌னை இய‌ற்கைக்கு மாறாக‌ மாற்ற‌ முடியாது. முடிய‌வே முடியாது. த‌யவு செய்து இந்த‌ வேலைய‌த்த‌ வேலையைச் செய்ய‌லாகாது !

    பெண் விரும்பி இத்தொழிலைச் செய்யுங்கால் அங்கு எந்த‌வித‌ பெண்ண‌டித்த‌னம், பெண் சுர‌ண்ட‌ப்ப‌டுகிறாள் என்றெல்லாம் வ‌ரா. ஆனால் அத்தொழில் வ‌கைப்ப‌டுத்தாவிடின் அவ‌ள் பாதிக்க‌ப்ப‌டுவாள். சிற்றூர்க‌ள் அவ‌ர்க‌ள் \'பிராத்த‌ல் கேசுக‌ள்\' என்று பேச‌ப்ப‌டுகிறார்க‌ள். என‌வே ஆங்கு அவ‌ர்க‌ள் வ‌சிப்ப‌தில்லை. ம‌துரைக்குத்தான் ஆட‌வ‌ர்க‌ள் வ‌ர‌வேண்டும்.

    நீங்க‌ள் த‌லைகீழாக‌ ஆயிர‌ங்குட்டிக்க‌ர‌ண‌ம் போட்டாலும் இத்தொழிலை அழிக்க‌முடியாது. ஆதிமுத‌ல் அந்த‌ம் வ‌ரை தொட‌ரும்

    இதை வ‌கைப்ப‌டுத்தி வாழ்த‌ல் எல்லாருக்குமே சிற‌ப்பாகும். மேலை நாடுக‌ள் ‍ அவுஸ்திரேலியா, ஜெரும‌னி, நெத‌ர்லாண்டு நாடுக‌ளில் வ‌கைப்ப‌டுத்த‌ப்ப‌ட்டுவிட்ட‌து. அங்கே ம‌க்க‌ள் ந‌ன்றாக‌த்தான் வாழ்கிறார்க‌ள். பெண்க‌ளுக்கெதிரான‌ கொடுமைக‌ள் இல்லை. இங்கேதான் எல்லாம்.

    ReplyDelete
  136. Organise this profession. Give them medical care and attention. Teach them about the use of condoms. Engage doctors and set up clinics for them. Regulate working hours. Rehabilitate them if they want to quit. If not, ensure that they are well protected. Give education and shelter to their children. At a fixed place, fixed hours, ensure that the malefactors who come in and beat them, or defraud them w/o giving the money asked for, are arrested and brought before Judge and sentenced. Draft a Law with suitable provisions so as to bring them under labour laws. Give them some political representation as an MLA or MP or a Councillor so that their grievances will be made known and redressed.

    It is not necessary that they need to live in all villages. Select a town or city in the district to set up such red light area well regulated and protected by law. For e.g make a place of quarters for them in Madurai city so that the men from around the surrounding villages can visit them so that the sex workers will have regular work.

    In Chennai city, instead of having a secret palces like Kodambaakam etc. Or anywhere regardless of place and time, earmark a particular place for the sex workdersl.
    Indeed for a city like Chennai, more places are required esp, where the migrant labourers live, for e.g the dockyard and around Madras Central. Make a red light area there. In every city, the roads near the station such sex workers live, but ther are unorgainsed and made to feel shame.

    We need such bold thinking. As long as such things are not allowed to happen, we will continue to feel 'superior' and continue to live in an imaginary world where men 'behave decently' always and wherever.
    Don’t worry about social morals. The morals are never permanent. We can rewrite the morals if that is necessary and will bring greater good to greater people.

    ReplyDelete
  137. There are already many NGOs serving the women and their families in red light areas of Mumbai and Delhi and, in our TN, at Madurai city with which I am somewhat associated off and on.

    There are clinics where doctors come at a fixed time on a day and render their services free, out of compassion for these women. They dispense medicines.

    Volunteers from the NGOs, which surprisingly include, so far as Madurai city is concerned, western girls and boys, our own young college medical students and some more groups who are on project for MS Social Work. They distribute condoms and take classes to these women on the importance of safe sex.

    In Thiruvanathapuram, we have our own building and got our association regd. There r more than 2000 sex workers registered.

    In Delhi, at GB Road, the government was pressurised to open a primary school exclusively for the children of the sex workers.

    In Madurai, it is difficult because who the children are will be made known and it is too much for these young kids to bear the stigma. So, the proposal was given up. And yet, the neighbourhood schools will admit them knowing who they are. But there is stiff resistance for fear of HIV virus which the kids may carry. Remember the tragic incident in Kerala where a bro and sister duo were denied admission to any school as they were carrying the virus. They were children of not sex workers but a decent couple. The man got the virus when he worked at Mumbai.

    But it is long struggle against the entrenched values of society which are dead against these people.

    It is these values which need to be attacked and destroyed first.

    ReplyDelete
  138. சிம்மக்கல் உங்க வாதம் எக்ஸிஸ்டென்ஷியலிஸ்ட் அல்லது லிபரலிஸ்ட் போல இருக்கு..

    ஒரு நாட்டில் பெண்களுக்கு நல்ல வேலை பார்க்க முடியாத சூழலில் பாலியல் தொழிலாளி ஆவதை நான் மறுக்கிறேன்.

    நீங்க சொல்றது புகழ் பெறும் சினிமா நடிகைக்கு வேணுமானால் சரியாகும்.. ஏன்னா அவர்களுக்கு என்னதான் கவர்ச்சியா நடித்தாலும் மரியாதை இருக்கிறது...

    ஆனா ஏழைக்கு ஒருபோதும் அந்த மரியாதை கிடைக்காது.. என்னதான் சட்டம் போட்டாலும்..

    ஆக வயிற்றுபசிக்காக இத்தொழிலுக்கு போவது தடுக்கப்படவேண்டும்.. இல்லையென்றால் அது அரசுக்குத்தான் இழுக்கு என்று மக்கள் போராடணும்..

    ஏழை ஆணுக்கு தேவை என்றாலுமே ஏழைப்பெண்தான் அத்தொழிலுக்கு போகணும்னு அல்ல.. அடிப்படையில் இதைவைத்துத்தான் பிழைக்கணும் என்பது வெட்கக்கேடு நம் அரசுக்கும் நமக்கும் என்ற நிலை வரணும்..

    மற்ற நாடுகளில் அலுவல் செல்வது போல போய்விட்டு வருகிறார்கள்.. ஓரளவு வசதியாக இருக்கிறார்கள்.. ஆக விபரம் தெரிந்து விருப்பத்தோடு ஈடுபடுகிறார்கள்..

    அதை வேணா ஏற்கலாம்..

    இருப்பினும் இத்தொழில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு ஆணாதிக்க செயல்தான்..அதிகமாகாமல் இருப்பதே சமூகத்துக்கு நல்லது..

    இல்லையென்றால் திருமண வாழ்வில் ஆர்வம் குறையும்.. பிரச்னைகள் அதிகமாகும்..

    வேறு வழியே இல்லை எனும் பட்சத்தில் மட்டுமே அனுமதிக்கப்படலாம்..அதுவும் குறைக்க எப்பவும் முயலணுமே தவிர விளம்பரப்படுத்தப்படக்கூடாது என்பதே என் கருத்து..

    ReplyDelete
  139. பாலியல் தொழில் ஏதோ டாஸ்மாக் மாதிரி வந்துவிட்டால்.?

    ஆண்கள் குடும்ப வாழ்க்கைக்கு ஏன் ஆசைப்படப்போகிறார்கள்..?

    அடுத்து பெண்களுமே..

    ஆக இது சந்தைப்படுத்தப்படக்கூடாது.. ஆனால் முறைப்படுத்தப்படணும்.

    இப்ப சின்னத்திரையில் நடிப்பது , குழந்தைகள் ஓடிவிளையாடு பாப்பா என நடனமாடுவது போல இனி தொலைக்காட்சியிலும் விளம்பரம் வந்திடக்கூடும்.. அப்படி வளரக்கூடாது இது..

    எப்படி பெத்தடின் மருந்து நோய்க்காக உபயோகிக்கப்படுதோ அதேபோல் மட்டுமே அளவோடு மருந்தாக இருக்கணுமே தவிர , எளிதாக கிடைக்கக்கூடியதாகவும் இருக்க கூடாது..

    முடிந்தவரை திருமணம் மூலமே பெறவேண்டும் என்ற கட்டாயாம் எப்போதும் இருக்கணும்..

    ReplyDelete
  140. @Jayadev Das//அவளிடம் சுகம் கண்டவர்களின் மேல் நீங்கள் காரித் துப்ப வேண்டியாதுதானே? ஆக, அவனுங்கள் எல்லாம் நல்லவனுங்கலாயிட்டானுங்க, இந்தப் பெண் மட்டும் விபச்சாரி என்ற போர்டை கழுத்தில் தொங்கப் போட்டுக் கொண்டு நடமாட வேண்டுமா?// விபச்சாரியிடம் போகும் ஆண்களைப் பற்றிய என் கருத்தை பின்னூட்டத்தில் சொல்லி உள்ளேன்..பதிவில் விடுபட்டது என் தவறு தான் என்றும் சொல்லி இருக்கிறேன் சார்..

    ReplyDelete
  141. @giruba//குறை சொலவது உரிமை என்றால் தீர்வு காண்பது நம் கடமை சரிதானே!// சரி தான் நன்பரே..பதிவு விபச்சாரத்தில் இறங்கும் ஆரம்ப நிலையைப் பற்றியது..அதைத் தவிர்ப்பதற்கான தீர்வு பதிவிலேயே உள்ளது.

    ReplyDelete
  142. @எண்ணங்கள் 13189034291840215795//நான் யார்னு நினைத்தீர்கள்..?..//

    சாரி, எனக்குத் இதுவரை தெரியாது சகோதரி..சொன்னபிறகே தெரிந்தது. நீங்கள் விவாதம் புரிந்ததில் மகிழ்ச்சியே.

    ReplyDelete
  143. @எண்ணங்கள் 13189034291840215795//குடும்பப்பெண்கள் என்றால் என்ன, பாலியல் தொழிலாளி என்றால் என்ன?.. முதலில் இருவரையும் மனிதர்களாக பார்க்க பழகுவோம்..//
    //ஏன்னா தன் வீட்டு பெண்ணை அனுப்பும்போது உணர்வானே??????..அப்ப வலிக்குமே..//

    //காதல் கணவருக்கே தினம் தாம்பத்யம் வழங்க முடியாமல் இருக்கக்கூடிய குடும்பப்பெண்கள் இருக்கையில் , கஸ்டமர் விரும்பும்போதெல்லாம் போகணும் என்றால் எத்தனை வேதனை அவள் மனதில் இருக்கும் னு எப்பவாவது எண்ணியிருப்போமா?..அடுத்தவனின் எச்சிலைக்கூட நாம் சகிக்க மாட்டோம்.. அப்படியிருக்க?//

    //பாலியல் தொழிலாளிக்கு அது தொழில்..வருமானம்.. அவள் விருப்பப்பட்டே செய்கிறாள்..//

    //அதற்காக நான் இந்த தொழில் வளரணும் னு சொல்லல்லை.. கண்டிப்பாக ஒழிக்கப்படணும்.. //
    //சிம்மக்கல் மிக தெளிவாக சொல்லிவிட்டார்.. முன்பு நேருவும் இதே போல் ஒரு கருத்தை சொன்னதாக நியாபகம். பறத்தையர் இருப்பதால் நாட்டில் கற்பழிப்பும், கொலையும் குறையும் என..//

    //சிம்மக்கல் சொன்னதில் நியாயம் இருக்கிறது.. ஆணுக்கான தேவை இருக்கிறது.. //

    //இருப்பினும் இத்தொழில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு ஆணாதிக்க செயல்தான்.//


    -------------------- மேலே இருப்பது எல்லாமே இந்தப் பதிவிற்கு நீங்க போட்ட கமெண்ட் தான் சகோதரி..விபச்சாரம் ஒழியணும்ங்கிறீங்க..விடிஞ்சு பார்த்தால், அது தேவை தான்ங்கிறீங்க..விபச்சாரிக்கு எவ்வளவு வேதனைங்கிறீங்க..அப்புறம் நீங்களே ‘அவள் விருப்பப் பட்டே செய்கிறாள்’னு சொல்றீங்க...உஸ்ஸ்ஸ்...முடியலை!!!

    ஒருவேளை வாதம் செய்வது உங்களுக்குப் பொழுதுபோக்கோ? நாந்தான் சீரியஸா எடுத்துக்கிட்டனா? ஏதாவது ஒரு நிலைப்பாட்டில் நீங்கள் நிற்காதவரை, நாம் பேசுவதெல்லாம் நேர விரயமே..உங்கள் பொன்னான நேரத்தை என் வலைப்பக்கத்திற்கு ஒதுக்கியதற்கு நன்றி.

    ReplyDelete
  144. @இக்பால் செல்வன்//ஏன்னா தன் வீட்டு பெண்ணை அனுப்பும்போது உணர்வானே??????..அப்ப வலிக்குமே //

    சபாஷ் சரியான பதில் சகோ.

    தொழில் ரீதியான விபச்சாரத்துக்கு முழுக் காரணமும் ஆண்கள் தான் என்பதில் இருவேறுக் கருத்தே இல்லை. சகோ.............. !!!//

    என்னே ஒரு மனித நேயம்..இதைத் தான் கத்துக்கோ கத்துக்கோ-ன்னு நேத்துல இருந்து சொன்னீங்களா?

    விபச்சாரத்துக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள், தங்கள் வீட்டுப்பெண்ணை விபச்சாரத்திற்கு அனுப்பத்துணிவார்களா என்று கேட்டேன்..அதுக்கு நம்ம சகோதரி ‘அனுப்பட்டும், அப்பதான் வலிக்கும்..திருந்துவானுங்க’ன்னு சொல்லுது..நீங்களும் சபாஷ்ங்கிறீங்க..

    ஆண்களைத் திருத்த குடும்பப் பென்களை விபச்சாரியாக்குன்னு சொல்றீங்களே..முதலில் வலி அந்தப் பெண்களுக்குத் தானே?..நீங்கள் தண்டனை தருவது ஆணுக்கா, அந்தப் பெண்ணுக்கா?

    ‘விபச்சாரியும் மனுஷி தான்.’ன்னு நீட்டி முழக்கி அட்வைஸ் பண்றீங்க..அந்தக் குடும்பப் பெண்களும் மனுஷி தானே? விபச்சாரிகளுக்குக் காட்டுற ‘மனித நேயத்துல’ கொஞ்சம் அந்தக் குடும்பப் பெண்களுக்கும் காட்டணும்னு உங்களௌக்குத் தோணலையே ஏன்? அப்படிச் செய்தால் ‘புரட்சிவாதி’ பட்டம் கிடைக்காதோ?..

    வெறுமனே புத்தகத்தைப் படித்துவிட்டு, சீர்திருத்தம் பேசினால் இப்படி அபத்தமான விளைவுகளே நேரும்..

    பதிவில் இரண்டு கேள்விகளே கேட்டேன். உங்கலுக்குப் புரியலை..100 பக்கத்துக்கு கமெண்ட் போட்டீங்க..சரின்னு நானும் ரெண்டே பாயிண்ட் போட்டு அதே கேள்வியைக் கேட்டேன். இப்போ ‘விபச்சாரம்’னா என்னன்னு சொல்லுன்னு சொல்றீங்க..இது சும்மா சுத்தி விடற வேலை..என் பதிவையும் என் பின்னூட்டங்களையும் படிச்சும் உங்களுக்கு நான் என்ன சொல்றேன்னு புரியாதப்போ, இன்னும் 10 பக்கம் நான் விளக்கம் எழுதினால் மட்டும் உங்களுக்குப் புரிஞ்சிடுமா என்ன?

    நான் எதிர்பார்த்தது வாதத்தையே..வெறும் வார்த்தைக் குவியல்களை அல்ல. நன்றி.

    ReplyDelete
  145. மதிக்க வேண்டிய ஆண்-பெண்களை மதிப்பதும், மதிக்கக்கூடாத ஆண்-பெண்களை பழிப்பதும் ’புரட்சிவாதம் புரியாத மக்கு’ சாமானியர்களின் வழக்கம். அந்தச் சாமானியர்களில் ஒருவனாக இன்னும் நான் இருப்பதில் மகிழ்ச்சியே.

    நண்பர்கள் விரும்பினால், இங்கு தொடர்ந்து தங்களுக்குள் விவாதித்துக் கொள்ளலாம். கருத்துரையிட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  146. சிம்மக்கல் , இக்பால், கிருபா, ஜேய் கருத்துக்கு சிறப்பு நன்றி..


    என் கருத்து இத்தொழில் ஒழிக்கப்படணும், முடியாத துர்பாக்கிய பட்சத்தில் முறைப்படுத்தணும் அவ்வளவே..

    உங்க விருப்பத்துக்கு கருத்தை எடுப்பதால் எமக்கொன்றும் கவலையில்லை..:)

    நீங்க பதிவுக்கு பெண்கள் படம் போட்டு விளம்பரம் தேடுபவர் மட்டுமே.. நீங்கல்லாம் பரிதாபப்படுவது..?:))

    ReplyDelete
  147. கருத்துரையிட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.மீண்டும் சந்திப்போம் மற்ற பதிவுகளில்.

    ReplyDelete
  148. //‘விபச்சாரியும் மனுஷி தான்.’ன்னு நீட்டி முழக்கி அட்வைஸ் பண்றீங்க..அந்தக் குடும்பப் பெண்களும் மனுஷி தானே? விபச்சாரிகளுக்குக் காட்டுற ‘மனித நேயத்துல’ கொஞ்சம் அந்தக் குடும்பப் பெண்களுக்கும் காட்டணும்னு உங்களௌக்குத் தோணலையே ஏன்? அப்படிச் செய்தால் ‘புரட்சிவாதி’ பட்டம் கிடைக்காதோ?..
    // சரியாகச் சொன்னீர்கள்.
    முற்போக்கு அதிகமாகும்போது பிற்போக்காகி விபசாரிகளை ஆதரிக்கும் அளவிற்க்கு போய்விடுகிறது.

    ReplyDelete
  149. நல்ல கரு இதை வைத்து ஒரு படமே இப்ப எடுத்துருவாங்க, அந்த அளவுக்கு இதுல நல்ல மெசேஜ் இருக்குங்க ஐயா ....

    ReplyDelete
  150. அறிவுஜீவி உங்களுக்கே புரியலன எங்களுக்கு எப்டி புரியும்

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.