Monday, October 31, 2011

பிராமண நண்பர்களுக்கு...(வர்ணம், ஜாதி, இட ஒதுக்கீடு)_2

அன்புள்ள செங்கோவிக்கு,

.................................... கீழே உள்ள பதிவைப் பாருங்கள் :

பிராமணர்கள் யார்? (http://bharathipayilagam.blogspot.com/2011/09/blog-post.html )

இதைப் பற்றிய உங்கள் அபிப்ராயம் என்ன?

இங்கணம்
****
---------------------------------------------------------------------------------------------------------

அன்புச் சகோதரிக்கு,

தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.நீங்கள் அனுப்பிய கட்டுரையைப் படித்தேன். அந்தக் கட்டுரையின் சாராம்சம் பலவருடங்களாக பிராமணர்களுக்குள் விவாதிக்கப்பட்டு/போதிக்கப்பட்டு வருவது தான். இது மீண்டும் மீண்டும் இளைய தலைமுறைப் பிராமணர்களிடம் எடுத்துச் சொல்லப்பட்டு வருகிறது. அவ்வாறு செய்வதில் பெரிய தவறொன்றும் இல்லை தான். 

ஒவ்வொரு சமூகமும் தன்னைப் பற்றிப் பெருமிதம் கொள்ள இத்தகைய விளக்கவுரைகள் அவசியமே. ஆனால் பிரச்சினை இதை வெளியே உள்ளோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனும்போது வருகிறது. நீங்கள் அந்த நோக்கத்தில் எனக்கு அனுப்பவில்லையென்றும், பிராமணர் அல்லாத ஒருவனின் கருத்தை அறியும் ஆர்வத்துடனே எனக்கு அனுப்பினீர்கள் என்றும் அறிவேன். அந்தக் கட்டுரை பெரிதென்பதால், பதிலும் பெரிதாகலாம், பொறுத்தருள்க.

பிராமண சமூகத்தின் மனமயக்கங்களில் ஒன்று தன்னையும் ‘பிராமணன்’ என்றே உணர்வது. பிராமண சமூகத்தில் பிறந்ததனால் மட்டுமே அவ்வாறு ஆகிவிடமுடியும் என்று நம்பிக்கொள்கிறீர்கள். நமது முன்னோர்களான முனிவர்களையும், ரிஷிகளையும், துறவிகளையும் உங்களைப் போன்ற பிராமணர்களாக உரிமையுடன் நினைத்துக்கொள்கிறீர்கள். 

இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் வர்ணத்திற்கும் ஜாதிக்கும் உள்ள வித்தியாசம் புரியாமல் குழப்பிகொள்வது தான். வர்ணம் என்பது எப்போதும், இப்போதும் நான்கு வகையே. ஜாதி என்பது எப்போதும் நான்காக இருந்தது இல்லை.

இதை உங்களுக்கு விளக்க கிருஷ்ணரைத் தான் அழைக்கவேண்டும்.

‘நானே நான்கு வர்ணங்களையும் படைத்தேன் - இயல்பின் அடிப்படையில்’ என்கிறான் கண்ணன், பகவத் கீதையில்.

அதை பிறப்பின் அடிப்படையில் படைத்ததாக அவன் எப்போதும் சொல்லவில்லை. குணத்தின் அடிப்படையில், ஒருவரது இயல்பின் அடிப்படையில் படைத்ததாகவே சொல்கிறான்.

அத்தகைய பிராமணர்கள் அப்போதும் இப்போதும் வாழ்ந்துகொண்டே இருக்கிறார்கள். விஸ்வாமித்திரர் கதை சொல்வதும் அதைத் தான். ஷத்ரிய குலத்தில் பிறந்தாலும், அவர் ஷத்ரியர் அல்ல. 

இயல்பின் அடிப்படையில் பிராமணராய் ஆனார். அதை அப்போதைய சமூகமும் ஏற்றுக்கொண்டது. அதற்கான வாய்ப்பு அப்போது திறந்தே இருந்தது.

“எவனொருவன் அனுபவத்தால் இறுதிப்பொருளை, நேருக்கு நேராக தெரிந்து காமம்
,ரோகம் முதலிய குற்றங்களில்லாதவனாய்
பாபம்,மாற்சரியம்,விருப்பம்,ஆசை,மோகம் முதலியவை
நீங்கியவனாய்,இடம்பம்..அகங்காரம் முதலியவை பொருந்தாத நெஞ்சமுடையவனாய்
இருக்கின்றானோ,,இங்ஙனம் கூறப்பட்ட இலக்கணமுடையவனே பிராமணன் என்பது
சுருதி,ஸ்மிருதி,புராண இதிகாசமென்பவற்றின் அபிப்பிராயமாகும்” - 

---- பிராமணனுக்குரிய லட்சணங்களாக சொல்லப்படும் இந்த வரையறை, அனைத்து ஜாதி மக்களுக்குமான அழைப்பே ஆகும். அவர்களில் யாரெல்லாம் இத்தகைய இயல்பினை உடையவராய் பிறந்துள்ளாரோ, யாரெல்லாம் இத்தகைய இயல்பினைப் பெற ஆர்வத்துடன் போராடுகின்றாரோ, அவர்கள் எல்லாரும் பிராமணர்களே.

எனக்குத் தெரிந்த ஒரு பிற்படுத்தப்பட்ட குடும்பத்தில் மூன்று  ஆண்குழந்தைகள். கடைசிப் பிள்ளைக்கு ஆன்மீகத்தின் மேல் தீவிர நாட்டம். பெற்றோர் வற்புறுத்தலால் இஞ்சினியரிங் முடித்தார். ஆனாலும் தினமும் தியானத்தில் ஆழ்ந்தார். வேலைக்குப் போனார். நமது சாமியார்களின் ஆசிரமங்களில் ஒன்று விடாமல் சுற்றினார். 

ஒருகட்டத்தில் வேலை எல்லாவற்றையும் உதறிவிட்டு, தான் ஆன்மீகத்தில் தீவிரமாக இறங்கப்போவதாகச் சொல்லிவிட்டு, வீட்டைவிட்டே ஓடிவிட்டார். அவரால் ஒரு அலுவலகத்திற்குள் கட்டுண்டு இருக்க முடியவில்லை. அவரது குடும்பத்திற்கு பொருளாதாரச் சிரமங்கள் இருந்தன. ஆனாலும் அதுபற்றி அவர் கவலைப்படவேயில்லை. அவரது நாட்டம் எல்லாம் பிரம்மத்தின் மீதே.

அதே இயல்பை நீங்கள் பாரதியிடமும் பார்க்க முடியும். தேடல் நிறைந்த எல்லா மனிதர்களும் பிராமணர்களே. அலுவலக வேலையில் சுகம் கண்டுகொண்டு, அதனால் கிடைக்கும் வசதியில் சொகுசாக வாழ்ந்துகொண்டு, நம்மையும் பிராமணர் என்றோ, பிராமண வழித்தோன்றல் என்றோ நினைத்தால்.....சாரி!

ஆன்மீகத் தேடல் நிறைந்த அந்த நண்பரும், பாரதியும் தான் பிராமணர்கள், பிராமணர்களின் வாரிசுகள். அவர்களே அப்படி அழைத்துக்கொள்ள தகுதியானவர்கள். நிச்சயம் நாம் அல்ல. அப்படி அழைத்துக்கொள்வோரைப் பார்த்து பரிதாபப்படுவதைத் தவிர வேறொன்றும் நாம் செய்வதற்கில்லை.

ஜாதி என்பது பலகூறுகளால் ஆனது. ஒரு ஜாதியில் எப்போதும் சில பெரிய பிரிவுகள் இருக்கும். நாயக்கர் கம்பளத்து நாயக்கர், காட்டு நாயக்கர் என பல பிரிவாகப் பிரிவர். முக்குலத்தோர் மறவர்-கள்ளர்-அகமுடையார் என பிரிவர். அந்த பிரிவுகளில் நுழைந்தால் அவை கிளைகள் என்ற பெயரில் மேலும் பிரியும். அந்தக் கிளைகளும் உள்ளுக்குள் ‘கொத்து’க்களாக மேலும் பிரிபடும். 

உண்மையில் இவை என்ன? நாம் தலைகீழாகவே இவற்றைப் பார்க்கின்றோம்.

ஆதியில் கூடி வாழத்தொடங்கிய மனித இனம், பாதுகாப்புக் காரணங்களுகாகவும், சுமூக சூழ்நிலைக்காகவும் சிறுசிறு கூட்டமாக தன்னை தொகுத்துக்கொண்டது. வாழும் இடத்தைப் பொறுத்து 

அவை தன்னை பல்வேறு பெயர்களாக அழைத்துக்கொண்டது. அவையே அடிப்படைக் கொத்துகளாக அமைந்தன. வாழ்வியல் தேவைகளினாலும், நாகரீக வளர்ச்சியினாலும் அவை தன்னை ஒத்த பிற கொத்துக்களுடன் தொகுத்துக்கொண்டு கிளைகளாக வளர்ச்சியுற்றன.

அதையடுத்துவந்த நிலப்பிரபுத்துவ / மன்னராட்சிக் காலகட்டத்தில், ஆட்சிநலனுக்காக ஒத்த கிளைகள் ஜாதிகளாக திரட்டப்பட்டன. மன்னர்பிரான் பெரும்பாலும் எல்லா ஜாதிகளில் இருந்தும் பெண் எடுத்து, சுமூக உறவைப் பேணினார். அந்த மரியாதைக்குப் பிரதிபலனாக அந்த ஜாதிகளும்-கிளைகளும்-கொத்துக்களும் மன்னராட்சிக்கு விசுவாசமாய் நடந்துகொண்டன.

அந்த நேரத்திலேயே வர்ணமும் ஜாதியும் ஒன்றாகக் குழப்பப்பட்டன. பிராமண வர்ணம் எப்போதும் உயர்ந்தது. புத்தர் போன்ற ஷத்ரிய குலத்தில் பிறந்த பிராமணர்கள், அனைத்துத் தரப்பாலும் மதிப்புடன் போற்றப்பட்ட காலம் அது. நிர்வாக வசதிக்காக ஜாதிகளாக மக்கள் தொகுக்கப்பட்டபோது, ஆட்சியாளர்களின் வசதிக்காகவே ’பிறப்பின் அடிப்படையில் வர்ணம்’ என்பது 
நிலைநாட்டப்பட்டது.

வைசிய ஜாதியில் பிறந்த எல்லாருமே வணிகத்தில் சிறந்தவர்கள் அல்ல. காரணம் அவர்கள் இயல்புப்படி அதாவது வர்ணப்படி வைசியர்கள் அல்ல. ஆனாலும் ஆதிவாசிக் குழுக்களாக வாழ்ந்த நம் சமூகம் நாடு என்ற வரையறையின் கீழ் தொகுக்கப்பட, இந்த கட்டாய ’வர்ணச் சாயம் பூசுதல்’ அவசியம் ஆயிற்று.

இயல்பில் ஷத்ரியனாக இல்லாமல், ஷத்ரிய ஜாதியில் பிறந்த பலரின் வாழ்வும், இந்த வரையறையினால் பாதிக்கப்படவே செய்தது. மேலும், ஆதி திராவிட சாதிகள், இந்தத் திட்டத்தால் நசுக்கப்பட்டன.

ஆனாலும் பெருவாரியான அளவில் இந்த சிஸ்டம் வெற்றியடைந்தது.

ஆனால் கண்ணன் பகவத் கீதையில் எச்சரித்த வர்ணக் கலப்பு அப்போதே நடந்துவிட்டது. ‘வர்ணக்கலப்பு’ பல அபாயங்களைக் கொண்டுவரும் என்றே கண்ணன் சொல்கிறான். அவன் சொல்வது ஜாதிக்கலப்பு பற்றியல்ல. மல்டிபிள் பெர்சனாலிட்டி பற்றி.

அடிப்படையில் ஷத்ரிய குணமுள்ள ஒருவன், பிராமண குலத்தில் பிறந்தால், மூர்க்கன் என்றே அவர்களால் அழைக்கப்படுவான். அதன்பிறகு அவன் ஆன்மீக ஈடுபாடு உள்ளவனாக நடிக்க ஆரம்பிப்பான். முழுமையான ஷத்ரியனாகவும் இல்லாமல், பிராமணனாகவும் ஆகாமல் வர்ணக்கலப்பால் சீரழிவான். (அத்தகைய அரைவேக்காட்டுத் தனமான ஆட்களை திருச்செந்தூர் முருகன் 
கோவில் கருவறையிலேயே பார்த்திருக்கிறேன்.)

அந்த முறையின்மூலம் ஆட்சியாளர்களும், பிராமணர்களும் சமூகத்தின் மேல்மட்டத்தில் தங்கள் இருப்பை நிலைநிறுத்திக்கொண்டார்கள். அதற்கு பெரிய சதித் திட்டம் ஏதும் காரணம் என்று நான் நினைக்கவில்லை. இப்போது எப்படி பிற்படுத்தப்பட்ட சாதிகள், அதிகாரத்தில் தங்களை மட்டுமே நிலைநாட்டியுள்ளனவோ, அதே போன்று இயல்பாகவே அது நடந்தேறியது. சமூகக் கட்டுமானம் சாதிமுறை மூலம் நிலைநிறுத்தப்பட்டது.

நிலப்பிரபுத்துவக் காலம்வரை எல்லாம் சுமூகமாகவே நடந்தது. ஆங்கிலேயரின் வருகைக்குப் பின் அந்த அமைப்பு சிதறடிக்கப்பட்டது. அதற்குக் காரணம் அதைவிட வலுவான அமைப்பான ஜனநாயகம் அவர்களுக்கு ஏற்கனவே பரிச்சயம் ஆகியிருந்தது. எனவே நிலப்பிரபுத்துவ அமைப்பு கொஞ்சம் கொஞ்சமாக உடைக்கப்பட்டு, சுதந்திர இந்தியா ஜனநாயக இந்தியாவாக மலர்ந்தது.

காந்தியும் ஆரம்பக் கட்டங்களில் வர்ணம், ஜாதி இரண்டையும் குழப்பிக்கொண்டிருந்தார். நம் முன்னோர்களைப் போலவே அவரும் ஜாதி அமைப்பே நம் சமூகக்கட்டுமானத்திற்கு அடிப்படை, அதுவே நம்மை ஒன்றிணைத்துக் காக்கும் என்று நம்பினார். 

ஆனால் இந்தியா முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொண்ட பின்னர், ஜாதி மேல்கீழாக மக்களை பிரித்து வைத்திருப்பதையும், அதனால் விளைகின்ற அதர்மங்களையும் கண்டார். அதன்பின், தன் நிலைப்பாட்டை தலைகீழாக மாற்றிக்கொண்டார். அதன்பிறகு அவர் சொன்னது தான் இன்றளவும் உண்மை :

நவீனக் காலகட்டத்தில் எந்த வேலை செய்தாலும் ஒருவர் உடலால் உழைப்பது அவசியம், தவிர்க்க முடியாதது. எனவே இனி உடலால் உழைக்கும் நாம் அனைவரும் சூத்திரர்களே. 

அதுவே இன்றைய யதார்த்தம். கீழ்மட்டத் தொழில்களாக கருதப்பட்ட கழிவறையை சுத்தம் செய்வது, சவரம் செய்வது போன்ற வேலைகளை இன்று எல்லா சாதியினரும் தன் வீட்டில் செய்துகொண்டிருக்கிறார்கள்.

அன்புடன்
செங்கோவி

டிஸ்கி: சென்ற பகுதிக்கு குறிப்பிடத்தக்க பின்னூட்டங்கள் அளித்த ஸ்பீடு மாஸ்டர், டாக்டர்.வடிவுக்கரசி, கிருஷ்ணன் ஐயாவிற்கு நன்றி.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

215 comments:

  1. வெளியில் கிளம்புகிறேன்..முடிந்தால் இரவில் சந்திப்போம்.

    ReplyDelete
  2. தெளிவான பார்வை.

    ReplyDelete
  3. என்ன ஒரு விளக்கம்? விளக்கம் அருமை... அவருக்கு புரியாது என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.. மூன்றாம் பாகத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்..

    ReplyDelete
  4. //ஒவ்வொரு சமூகமும் தன்னைப் பற்றிப் பெருமிதம் கொள்ள இத்தகைய விளக்கவுரைகள் அவசியமே. ஆனால் பிரச்சினை இதை வெளியே உள்ளோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனும்போது வருகிறது//சத்தியமான வார்த்தைகள்! ஜாதி கலவரங்களுக்கு காரணம் இது தான்

    ReplyDelete
  5. // கீழ்மட்டத் தொழில்களாக கருதப்பட்ட கழிவறையை சுத்தம் செய்வது, சவரம் செய்வது போன்ற வேலைகளை இன்று எல்லா சாதியினரும் தன் வீட்டில் செய்துகொண்டிருக்கிறார்கள்.//
    சந்தேகமென்ன! சரியான விளக்கங்களுடன் பகிர்வு.

    ReplyDelete
  6. போன பதிவும் படித்தேன்.. நல்ல வெளிப்படையான விவாதம், ஜாதியை பற்றியோ இட ஒதுக்கீடு பற்றியோ பேசவே தயக்கம் உள்ள காலம் இது... அதைப்பற்றிய விவாதம் ஒரு நல்ல முயற்சி... :))

    ReplyDelete
  7. ஆரோக்கியமான விவாதம். நடத்துங்க...

    ReplyDelete
  8. விவாதம் தொடரட்டும்....

    ReplyDelete
  9. சூப்பர்ணே! பாராட்டுக்கள்!

    ReplyDelete
  10. அற்புதமான பதிவு.

    மிகுந்த ஒரு sensitive issue வை மிகக் கவனமாக முதிர்ச்சியுடன் கையாண்டிருக்கிறீர்கள்.

    வர்ணம், சாதி , மற்ற பிற கட்டமைப்புகள் எல்லாமே survival குறித்துத்தான். ஒருவருக்கு இது பிழைக்கும் வழி மற்றவருக்கு இது சூழ்ச்சி. இவைகள் மாறிக்கொண்டே யிருக்கும். வென்றவைகள் நின்றாளும். தோற்றவைகள் செத்து மாளும். இதைத் தெரிந்துதான் தற்போது பிராமணர்களே தங்களது stand அய் மாற்றிக் கொண்டு வருகின்றனர். பழமை விரும்பிகளான மூத்தோர் இந்த ஆட்டத்தில் தங்களின் பங்கு முடிந்து விட்டதால் இனி survival பற்றி கவலைப்படாமல் பழமை பேசி வருகின்றனர்.

    எல்லாமே முன்னோக்கி நகர்வது குறித்தும் வெற்றி பெற்று பிழைத்தல் குறித்துமானதுதான்.

    அருமையான பதிவு.தீர்க்கமான நடை.

    வாழ்த்துக்கள்.

    God Bless You.

    ReplyDelete
  11. பதிலில் நல்ல மெட்சுரிட்டி பாஸ்...ஆனா லேசுல ஒப்புக்கொள்ள மாட்டாங்க நாம எவளவு நியாயமா பேசினாலும்...
    இன்னும் ஒரு இரு நூறு வருசமாவது ஆகணும் அதுக்கு...

    தைரியம் இருந்தா கை வச்சிப் பாருடா!

    ReplyDelete
  12. //சவரம் செய்வது போன்ற வேலைகளை இன்று எல்லா சாதியினரும் தன் வீட்டில் செய்துகொண்டிருக்கிறார்கள்.//

    அலகாபாதில் நான் முடி வெட்டிக் கொள்ளச் சென்றபோது எனக்கு முடி வெட்டியவர் தான் ஒரு தாகுர்(உயர் வகுப்பு) என்று கூறினார்.இப்போது எந்தத்தொழிலும் சாதி அடிப்படையில் நடப்பது மாறித்தான் இருக்கிறது.இது காலத்தின் கட்டாயம்.

    ReplyDelete
  13. //15 comments://

    என்னது செங்கோவி ப்ளாக்ல 15 comment மட்டும் தானா நம்ப முடியலையே.. யாராவது டெலிட் பண்ணிட்டாங்களா...

    ReplyDelete
  14. நவீனக் காலகட்டத்தில் எந்த வேலை செய்தாலும் ஒருவர் உடலால் உழைப்பது அவசியம், தவிர்க்க முடியாதது. எனவே இனி உடலால் உழைக்கும் நாம் அனைவரும் சூத்திரர்களே. // ரொம்ப உண்மை மாப்ள..

    ReplyDelete
  15. நல்ல பதிவு. வெளிப்படையாக எடுத்துவைக்கப்பட்ட வாதங்கள்.இதுதான் மிகச் சில பேருக்காவது தெளிவைக் கொடுக்கும்.

    பிராமண சமூகத்தில் ஆதிகாலம் தொட்டே வைதீகர்கள் என்றும், லெள‌கீகர்கள் என்றும் ஓர் இடைவெளி உண்டு. வைதீகர்களை ஆன்மீகவாதிகள் என்று வேண்டுமானால் ஒரு புரிதலுக்காகச் சொல்லிக் கொள்ளலாம்.லெள‌கீகர்கள் என்றால் உலகாயதத்தில் உழல்பவர்கள்.

    வேதம் ஓதிக்கொண்டே லெள‌கீகனாகவும் இருப்பவன் உண்டு. (திருச்செந்தூர் கோவில் முக்காணியரைப்போல, போத்தியரைப்போல) இறைச் சன்னிதியில் இருந்தும் இறைவுணர்வு இல்லாமல் உலக இன்பத்திற்கு ஆதாரமான பொருள் தேடும் ஆசை உள்ள‌வனாக இருப்பவனும் உண்டு.'கோவில் வாசலிலே குடியிருந்தும் கெட்டேனே' என்று பின்னால் பிலாக்கணம் பாட வேண்டியதுதான்.

    லெளகீகனாக இருந்தும் இறை உணர்வும் சக மனிதர்களிடம் மனித நேயமும் சேவை மனப்பானமை உள்ளவனும் உண்டு.

    சில அப்பாவிப் பிராமணர்களின் குடுமி அறுப்பு போன்றவைகள் செய்யப்பட்ட போது,தந்தைப் பெரியார் அதனை நிறுத்தத் தனது படைக்குச் சொன்னதாகச் சொல்வார்கள்:"நமது போராட்டம் வைதீகப் பிராமணனுக்கு எதிரானது அல்ல. லெள‌கீகப் பிராமண‌னுக்கு எதிரானது.குடுமி வைத்தவனுடன் அல்ல. கிராப் வைத்தவனுடன் தான்". (என்னிடம் ஆதாரம் இல்லை. அது கிடைப்பவர்கள் பகிர்ந்து கொள்க)

    நான் சொல்லும் செய்தியை எத்தனை பேர் உள் வாங்கி கொள்ள முடியும் என்று தெரியவில்லை.

    காஞ்சி மகாப்பெரியவரும், அலுவலக வேலை, வியாபாரம் என்று உலகாயதத்தில் ஈடுபடும் பிராமணனை 'பிராமணன்' என்று சொல்லாமல்
    'பிராமண பந்து' என்றே கூறினார்.அதாவது உண்மையான ஆன்மீக வாதிகளான சில பிராமணர்களுக்கு இவன் உறவினன்.அம்மட்டே!இவனே பிராமணன் அல்லன்.

    கீதையில் நான்கு வர்ணங்கள் குணத்தையும் அதனால் விளையும் செயல்பாடுகளையும் வைத்தே வகுக்கப்பட்டதாகவே காண்கிறது.


    //அத்தகைய பிராமணர்கள் அப்போதும் இப்போதும் வாழ்ந்துகொண்டே இருக்கிறார்கள்.//

    ஆம் மிகச் சிலர் உள்ளனர். அப்படி ஒரு சிலர் ஆவதற்கு ஒரு வகுப்பார் முழுவதும் முயற்சி செய்தால் ஓரிருவர் தேருவர். சில பழக்க வழக்கங்கள், நடைமுறைகள்,பல்லாண்டு அனுபவத்தால் நிலை நாட்டப்பட்ட மரபுகளைப் பேணித்தான் ஒரு சில நல்ல ஆன்மாக்களை உருவாக்க முடிகிறது.
    அந்த மரபுகளின் உட் பொருள் அறியாதவர்கள் வகுப்புக்கு உள்ளேயும் வெளியேயும் இருப்பார். அதனால் (தவிர்க்கக் கூடியவையான) புரிதலில் குழப்பங்கள் மன வேற்றுமைகள் ஒற்றுமைக் குறைவு எல்லாம் பொது சமூகத்தில் ஏற்பட்டு விடுகிறது.


    //ஆதி திராவிட சாதிகள், இந்தத் திட்டத்தால் நசுக்கப்பட்டன.//

    இக்கருத்து ஆய்வுக்கு உரியது.

    தர‌ம்பால் என்ற காந்தீய ஆய்வாளரைப் படித்துப்பாருங்கள்.
    காந்தி இன்று தளத்திலும், தமிழ்பேப்பரிலும் அவருடைய பழைய நேர்காணல்
    பிரசுரம் ஆகி உள்ளது.

    அதிலிருந்து சில கீழே கொடுக்கிறேன்.
    "
    கே:இந்திய நிலப்பிரபுத்துவத்தால் புதிதாகப் பிறந்திருந்த மேற்கத்திய முதலாளித்துவ சமூக அமைப்பை எதிர்க்க முடியாமல் போய்விட்டது என்று சொல்லலாமா?"

    ப‌:நம்மிடம் நிலபிரபுத்துவம் இருந்தாதா என்பதே எனக்கு சந்தேகமாக இருக்கிறது. நான் ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால் இது போன்ற முத்திரை குத்தல்களுக்குப் பின்னால் பல்வேறு அர்த்தங்கள், அனுமானங்கள் மறைந்து காணப்படுகின்றன.

    .....
    தஞ்சாவூரில் 1805-ல் மிராசுதார்களின் (நில உடமையாளர்களின்) எண்ணிக்கை 62,000. அதில் 42,000 பேர் சூத்ரர்கள் மற்றும் அவர்களுக்கு அடுத்த நிலையில் இருக்கும் ஜாதியினராக இருந்திருக்கிறார்கள். சேலம் மாவட்டத்தில், நில உடமையாளர்களாக இருந்த பறையர்களின் எண்ணிக்கை 32,474 ஆக இருந்திருக்கிறது. 1799-ல் செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்த மொத்த மிராசுதார்களின் எண்ணிக்கை 8300 என்று கலெக்டர் பட்டியலிட்டிருக்கிறார். ஆனால், உண்மையில் அவர்களுடைய எண்ணிக்கை பல மடங்கு அதிகமாக இருக்கும் என்றும் தெரிவித்திருக்கிறார். 18-ம் நூற்றாண்டின் பிந்தைய காலகட்டத்து பிரிட்டிஷாரின் ஆவணங்களை இன்னும் ஆழமாக ஒருவர் ஆராய்ந்து பார்த்தால் இந்திய சமூகம் பற்றிய விரிவான முற்றிலும் மாறுபட்ட சித்திரம் நமக்குக் கிடைக்கும்.

    உதாரணமாக, மதராஸ் வருவாய் திட்டத்தை உருவாக்கிய அலெக்சாண்டர் ரீட் சொல்கிறார்: 1780 வாக்கில் ஹைதராபாத்தில் இருந்த பிரபுக்களுக்கும் பணியாளர்களுக்கும் இடையில் இருந்த வேறுபாடு என்று பார்த்தால் முன்னவருடைய ஆடை கொஞ்சம் கூடுதல் தூய்மையாக இருந்தது… அவ்வளவுதான்...."

    ReplyDelete
  16. காலை வணக்கம்.குட் மோர்னிங்.மன்னிக்கவும்,கடல் தாண்டி வந்து விட்டதால் இணையப்பக்கம் உலாவ முடியவில்லை.பதிவுகள் எதுவும்(வேலா.......தவிர)படிக்கவில்லை.எனது கூகிள் கணக்கு இங்கு வேலை செய்யுமா தெரியவில்லை,அத்தோடு இதுவும்.......////என்ன இது..பெரிய மனுஷங்க நடமாட்டம் நம்ம பக்கம் இன்னும் இருக்கு...முருகா..///ஹி,ஹி,ஹி.

    ReplyDelete
  17. @Yoga.S.FRபொன் ஜூர் ஐயா.

    ரெண்டு மூணு நாளா தலை சுத்தலா இருக்குன்னு சொல்லிட்டு, திடீர்னு காணாமப் போனா, எங்களுக்கு தலை சுத்துது இல்லையா?..இப்படியா செய்றது?..

    கடல் கடந்த பயணத்தை எஞ்சாய் பண்ணுங்க ஐயா..நேரமும் இணையமும் இருக்கும்போது வாங்க.

    ReplyDelete
  18. //ஆனா லேசுல ஒப்புக்கொள்ள மாட்டாங்க நாம எவளவு நியாயமா பேசினாலும்...
    இன்னும் ஒரு இரு நூறு வருசமாவது ஆகணும் அதுக்கு...

    தைரியம் இருந்தா கை வச்சிப் பாருடா!//

    இந்தப் பின்னூட்டத்தினை இட்ட‌ அனபர் இன்னும் கொஞ்சம் ஆழமாகப் பதிவினைப் படிக்க வேண்டும் என்று கோருகிறேன். எல்லாவற்றையும் மேம்போக்காகப் பார்ப்பதால்தான் இந்தக் குழப்பம்.மெனெக்கிட்டு எழுதிய பதிவிலேயே ஏதோ பிராமண‌ர்களுக்கு சவால் போலத் தோற்ற‌ம் எல்லாம் கொடுத்துக் கொண்டு.... என்னமோ போங்கள். அவர் சொன்ன "தைரியம் இருந்தா கை வச்சிப் பாருடா"வை என்னமோ ஏதோ என்று போய் பார்த்தால்
    புஸ்வாணம்.

    ReplyDelete
  19. //kmr.krishnan said...
    //ஆனா லேசுல ஒப்புக்கொள்ள மாட்டாங்க நாம எவளவு நியாயமா பேசினாலும்...
    இன்னும் ஒரு இரு நூறு வருசமாவது ஆகணும் அதுக்கு...

    தைரியம் இருந்தா கை வச்சிப் பாருடா!//

    இந்தப் பின்னூட்டத்தினை இட்ட‌ அனபர் இன்னும் கொஞ்சம் ஆழமாகப் பதிவினைப் படிக்க வேண்டும் என்று கோருகிறேன். எல்லாவற்றையும் மேம்போக்காகப் பார்ப்பதால்தான் இந்தக் குழப்பம்.மெனெக்கிட்டு எழுதிய பதிவிலேயே ஏதோ பிராமண‌ர்களுக்கு சவால் போலத் தோற்ற‌ம் எல்லாம் கொடுத்துக் கொண்டு.... என்னமோ போங்கள். அவர் சொன்ன "தைரியம் இருந்தா கை வச்சிப் பாருடா"வை என்னமோ ஏதோ என்று போய் பார்த்தால்
    புஸ்வாணம்.//

    ஐயா, வழக்கமாக அவர் தன் பதிவின் லின்க்கை கீழே கொடுப்பார்..எனவே “தைரியம் இருந்தா கை வச்சிப் பாருடா!”-க்கும் இந்தப் பதிவிற்கும், அவர் கமெண்ட்டிற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

    ReplyDelete
  20. //வர்ணம், சாதி , மற்ற பிற கட்டமைப்புகள் எல்லாமே survival குறித்துத்தான். ஒருவருக்கு இது பிழைக்கும் வழி மற்றவருக்கு இது சூழ்ச்சி. இவைகள் மாறிக்கொண்டே யிருக்கும். வென்றவைகள் நின்றாளும். தோற்றவைகள் செத்து மாளும். இதைத் தெரிந்துதான் தற்போது பிராமணர்களே தங்களது stand அய் மாற்றிக் கொண்டு வருகின்றனர். பழமை விரும்பிகளான மூத்தோர் இந்த ஆட்டத்தில் தங்களின் பங்கு முடிந்து விட்டதால் இனி survival பற்றி கவலைப்படாமல் பழமை பேசி வருகின்றனர்.//

    வெட்டிப்பேச்சு எப்போதும் வெட்டிப் பேச்சாக இல்லாமல் நல்ல கருத்துக்களைக் கூறுகிறார்.

    அவர் கூறும் மூத்தோரில் நான் இல்லை என்று கூறிக் கொள்கிறேன். போன பதிவில் என் பின்னூட்டங்களைப் படிப்ப்போர்களுக்கு இது புரியும்.

    ReplyDelete
  21. @kmr.krishnan

    /அவர் கூறும் மூத்தோரில் நான் இல்லை என்று கூறிக் கொள்கிறேன். போன பதிவில் என் பின்னூட்டங்களைப் படிப்ப்போர்களுக்கு இது புரியும்.//

    அய்யா, இது ஒரு அலசலே தவிர வேறேதுமல்ல.

    மனிதன் குரங்கிலிருந்துதான் வந்தான் என அறிவியல் சொல்கிறது.

    பரமாத்மாவிலிருந்து பிரிந்துவந்து மீண்டும் பரமாத்மாவை சேரத்துடிக்கும் ஆன்மாவைக் பூத உடலில் கொண்டுள்ளோம் என்கிறது ஆண்மீகம்..

    இவை இரண்டிலும் பிரிவினைகளைக் காணாதபோது கற்பிக்கப் பட்டவைகள் நம்மை கட்டுகளாய் கட்டிவைத்து முடக்க நாம் அனுமதிக்கலாமோ..

    ReplyDelete
  22. @kmr.krishnan

    /அவர் கூறும் மூத்தோரில் நான் இல்லை என்று கூறிக் கொள்கிறேன். போன பதிவில் என் பின்னூட்டங்களைப் படிப்ப்போர்களுக்கு இது புரியும்.//

    அய்யா, இது ஒரு அலசலே தவிர வேறேதுமல்ல.

    மனிதன் குரங்கிலிருந்துதான் வந்தான் என அறிவியல் சொல்கிறது.

    பரமாத்மாவிலிருந்து பிரிந்துவந்து மீண்டும் பரமாத்மாவை சேரத்துடிக்கும் ஆன்மாவைக் பூத உடலில் கொண்டுள்ளோம் என்கிறது ஆண்மீகம்..

    இவை இரண்டிலும் பிரிவினைகளைக் காணாதபோது கற்பிக்கப் பட்டவைகள் நம்மை கட்டுகளாய் கட்டிவைத்து முடக்க நாம் அனுமதிக்கலாமோ..

    ReplyDelete
  23. @kmr.krishnan

    /அவர் கூறும் மூத்தோரில் நான் இல்லை என்று கூறிக் கொள்கிறேன். போன பதிவில் என் பின்னூட்டங்களைப் படிப்ப்போர்களுக்கு இது புரியும்.//

    அய்யா, இது ஒரு அலசலே தவிர வேறேதுமல்ல.

    மனிதன் குரங்கிலிருந்துதான் வந்தான் என அறிவியல் சொல்கிறது.

    பரமாத்மாவிலிருந்து பிரிந்துவந்து மீண்டும் பரமாத்மாவை சேரத்துடிக்கும் ஆன்மாவைக் பூத உடலில் கொண்டுள்ளோம் என்கிறது ஆண்மீகம்..

    இவை இரண்டிலும் பிரிவினைகளைக் காணாதபோது கற்பிக்கப் பட்டவைகள் நம்மை கட்டுகளாய் கட்டிவைத்து முடக்க நாம் அனுமதிக்கலாமோ..

    ReplyDelete
  24. அப்புடீல்லாம் பட்டுன்னு போயிட மாட்டேன்.திடீருன்னு இங்க (லண்டன்)வர வேண்டியதாப் போச்சு.இங்க பசங்க படிக்க கம்பியூட்டர் யூஸ் பண்ணிட்டிருப்பாங்க.லீவு விட்டு நேத்து ஸ்கூல் ஆரம்பம்.இப்பதான் காலையில ஒக்காந்தேன். நானே பதறிட்டேன்,என்னடா இது புள்ளைங்க ஏங்கிப் போயிட்டாங்களேன்னு.நைட்டு பாக்கலாம்.

    ReplyDelete
  25. அப்பாடா ஐயா வந்துட்டார்...... வணக்கம்....!

    ReplyDelete
  26. @kmr.krishnan
    oops..my bad...it is my usual style..I am planning to add ./-

    ReplyDelete
  27. நல்ல முயற்சி அண்ணே, நமக்கும் இப்பதான் பல விஷயம் விளங்க ஆரம்பிக்குது, கோடி நன்றிகள்.

    ReplyDelete
  28. அப்புறம் மீண்டும் ஐயாவை கண்டது மகிழ்ச்சி. கடல் தாண்டிய பயணத்தை இணைய குறுக்கீடு இன்றி என்ஜாய் பண்ணுங்க ஐயா.

    ReplyDelete
  29. BTW, title was not intentional :-) ...I made it up according to my post even before seeing Sengovi's post. Please continue.

    ReplyDelete
  30. \\‘நானே நான்கு வர்ணங்களையும் படைத்தேன் - இயல்பின் அடிப்படையில்’ என்கிறான் கண்ணன், பகவத் கீதையில்.
    அதை பிறப்பின் அடிப்படையில் படைத்ததாக அவன் எப்போதும் சொல்லவில்லை. குணத்தின் அடிப்படையில், ஒருவரது இயல்பின் அடிப்படையில் படைத்ததாகவே சொல்கிறான்.\\ இதுதான் பாயின்ட்.ஒரு இன்ஜினீயருக்கு மகனைப் பிறந்த ஒரே காரணத்தாலேயே ஒருத்தன் இன்ஜினீயராகிவிட முடியாது, அதற்க்கான தகுதிகளையும் அடைய வேண்டும். பிராமண குலத்தில் பிறப்பதாலேயே ஒருத்தன் பிராமணன் ஆக முடியாது, அதற்க்கான தகுதிகளைப் பெறுவதோடு, செயல் பாட்டிலும் பிராமணனாக இருக்க வேண்டும். பிராமண குலத்தில் பிறந்திருந்தாலும் அதற்க்கான தகுதிகள் அவனிடத்தில் இல்லையென்றால் அவனை பிரம்ம பந்து என்று அழைப்பார்கள்.

    “Brahmanas, ksatriyas, vaisyas and sudras are distinguished by the qualities born of their own natures in accordance with the material modes, O chastiser of the enemy.

    “Peacefulness, self-control, austerity, purity, tolerance, honesty, knowledge, wisdom and religiousness–these are the natural qualities by which the brahmanas work.

    “Heroism, power, determination, resourcefulness, courage in battle, generosity and leadership are the natural qualities of work for the ksatriyas.

    “Farming, cow protection and business are the natural work for the vaisyas, and for the sudras there is labor and service to others.

    “By following his qualities of work, every man can become perfect. Now please hear from Me how this can be done.

    “By worship of the Lord, who is the source of all beings and who is all-pervading, a man can attain perfection through performing his own work.

    “It is better to engage in one’s own occupation, even though one may perform it imperfectly, than to accept another’s occupation and perform it perfectly. Duties prescribed according to one’s nature are never affected by sinful reactions.” (From Bhagavad-gita 18th chapter)

    So the Vedas recognize different people have different skills and qualifications, but it is no by birth, it is by guna [qualification] and karma [work]. So if someone born of a sudra [worker] father becomes qualified [guna] and works as [karma] a brahmana he should be accepted as a brahmana… In the same way if the son of a brahmana doesn’t have the qualifications of a brahmana or work as a brahmana then he is not a brahmana. There are so many examples of this in the Vedic scriptures.

    The current Indian system is something like accepting the sons of supreme court judges as supreme court judges… It’s nonsense. They have to be qualified, they have to attend the university and pass the course, then they have to work under a qualified judge and get the practical experience, then they may be able to become supreme court judges…

    So there is actually nothing stopping anyone from bettering his position in the Indian system in the scriptures… But also there is no need for everyone to strive to be supreme court judges. Anyone, from any social position can be liberated by performing his own work…

    ReplyDelete
  31. பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply]அப்பாடா ஐயா வந்துட்டார்...... வணக்கம்....!////வணக்கம்.வணக்கம்.ஒங்க வூட்டுலயும் வருகைப் பதிவு செஞ்சிருக்கேன்.

    ReplyDelete
  32. ஒரு பிராமணன் என்றால் அவனுகென்று சில தகுதிகள் கட்டாயம் இருக்க வேண்டும். அவற்றுள் சில:
    1. சம்பளத்திற்கு வேலை பார்க்கக் கூடாது. வாழ்க்கையில் எந்த ஒரு கட்டத்திலும் வறுமையிலேயே வாழ வேண்டும். காரணம், ஆன்மீக சிந்தனையில் ஈடுபட்டு இறை பக்தியில் நாட்டம் செலுத்துவதால் அதில் கிடைக்கும் மனநிறைவால் ஏழ்மை ஒரு பொருட்டாகப் படாது.
    2. வாத்தியார் வேலைதான் தொழிலே, அவரது மாணவர்கள் யாசகம் பெற வீடு வீடாகச் செல்ல வேண்டும், கிடைப்பதை வைத்து உணவு உண்ண வேண்டும், அப்புறம் தேவைக்கு அதிகமாக ஒரு நாளில் பொருள் கிடைத்தால் அதை உடனேயே பிறருக்கு தானமாகக் கொடுத்து விட வேண்டும். [நாளைக்கு வேணும்னு சொல்லி கையில பத்து பைசா கூட வச்சுக்கக் கூடாது, அன்றன்றைய தேவைகளை இறைவன் பூர்த்தி செய்வான் என்ற அசையாத நம்பிக்கை இருக்க வேண்டும்.]
    3. உண்மையையே எந்த சூழ்நிலையிலும் பேச வேண்டும், நம்மை பயக்கும் எனில் பொய்யும் வாய்மையே என்பதைக் கூட கடைபிடிக்க முடியாது, டேஞ்சர் வந்தாலும் உண்மையைத்தான் பேச வேண்டும்.
    4. எவ்வளவு பெரிய பணக்காரனாக இருந்தாலும், பெரிய பதவியில் இருப்பவனாக இருந்தாலும், அவர்களுக்கு ஸ்பெஷல் டிரீட்மென்ட் கொடுக்கக் கூடாது, பாகுபாடு இல்லாமல் எல்லோரையும் சமமாக மதிக்க வேண்டும்.
    5. பிற உயிருக்கு துன்பம் இழைக்கக் கூடாது என்பதால் மட்டன் சிக்கன் என்று வெட்ட முடியாது, he must remain strict vegetarian. [முட்டை சைவம் என்று சொல்லக் கூடாது, மீன் தண்ணீர் கத்தரிக்காய் என்று சொல்லக் கூடாது, பூணூலை கலட்டி வைத்து விட்டு எல்லா மாமிசத்தையும் ஒரு வெட்டு வெட்டி விட்டு மீண்டும் எடுத்து மாட்டிக் கொண்டால் ஒன்றுமில்லை என்று சொல்லக் கூடாது.]

    இப்படி எத்தையோ இன்னும் இருக்கின்றன. இவை எதையும் கடை பிடிக்காமல் நான் பிராமணன் என்று சொல்வதில் அர்த்தமென்ன இருக்கிறது?

    ReplyDelete
  33. Throughout history, many personalities who came from non-brahmana backgrounds became brahmanas and functioned as gurus. The following is a list of personalities who were born in non-brahmana families who became qualified brahmanas and acaryas due to their qualities.

    The famous sage Visvamitra was previously known as Maharaja Gadhi of the Candra-vamsa, but became a brahmana through the strength of his austerities. This is explained in Mahabharata, Adi-parva 174:

    ksatriyo'ham bhavan vipras tapah-svadhyayah-sadhanah
    sva-dharmam na prahasyami nesyami ca balena gam
    dhig balam ksatriya-balam brahma-tejo-balam balam
    balabalam viniscitya tapa eva param balam
    tatapa sarvan diptaujah brahmanatvam avaptavan

    "Visvamitra said to Vasistha: You are a brahmana, endowed with the qualities of austerity and Vedic knowledge. I am a ksatriya, so on the basis of my nature I will forcibly take this cow (Nandini).

    "Later, when Visvamitra was defeated, he declared that the strength of the ksatriya was inferior to that of the brahmanas. He thus decided that the performance of austerities was the only way to empower one with superior strength.

    "The greatly effulgent Visvamitra thus performed all kinds of austerities and attained the position of a brahmana."

    It is well known that Visvamitra was a brahmana by conversion, yet he was also a guru with many disciples. Amongst his most famous disciples who received mantra from him were Lord Sri Ramacandra and His brother Sri Laksmana, Sunasepha, and Galava. At present many brahmana families in India trace their gotra (lineage) to Visvamitra. Furthermore, Visvamitra is the rsi (seer) of many mantras of the Rg Veda including the brahma-gayatri which is chanted by all brahmanas thrice daily.

    ReplyDelete
  34. In Chapter 30 of the Anusasana-parva of Mahabharata, the story is given of Maharaja Vitahavya who was originally a ksatriya king who became a brahmana by the mercy of Bhrgu Muni. His son, Grtsamada became a brahmacari and a brahmana sage who was equal to Brhaspati. Suceta, the son of Grtsamada, also became a brahmana. In this dynasty was born the sage Pramiti and Saunaka Rsi. Saunaka wrote many works on the Rg Veda and also wrote the Brhad-devata. He was also the guru of Sage Asvalayana. Asvalayana's disciple was Katyayana, and his disciple was Patanjali Muni.

    The caste of Satyakama Jabala was unknown, yet his guru Gautama Rsi accepted him as a brahmana simply due to his truthful nature. Satyakama went on to initiate many disciples, out of which Upakosala was the most prominent.

    Agnivesya Muni was born as the son of the king Devadatta, and the brahminical dynasty known as the Agnivesyayana sakha appeared from him.

    Both Medhatithi and Kanva Muni were born in the ksatriya dynasty of Puru.

    The sage Citramukha was born a vaisya, yet he became a brahmarsi with many disciples.

    There were also other great personalities in Vedic history that were not born in brahmana families, but acted as gurus. In the Padma Purana, the original brahmana, Lord Brahma says:

    sac-chrotriya-kule jato akriyo naiva pujitah
    asat-kstrakule pujyo vyasa-vaibhandukay yatha
    ksatriyanam kule jato visvamitro'sti matsamah
    kesyaputro vasisthas ca anye siddha dvijatayah
    yasya tasya kule jato gunavaneva tairgunaih
    saksad brahmamayo viprah pujiyah prayatnatah

    "If one is born in a family of brahmanas who are absorbed in hearing divine sound, but has bad character and behavior, he is not worshipable as a brahmana. On the other hand, Vyasa and Vaibhandaka Muni were born in unclean circumstances, but they are worshipable. In the same way, Visvamitra Muni was born a ksatriya, but he became a brahmana by his qualities and activities. Vasistha was born of a prostitute. Many other great personalities who manifested the qualities of first-class brahmanas also took birth in similar humble circumstances, but they are also called perfect. The place where one takes birth is of no importance in determining whether one is a brahmana. Those who have the qualities of brahmanas are recognized everywhere as brahmanas, and those who have such qualities are worshipable by everyone." (Padma Purana, Srsthi-kanda 43.321,322, Gautamiya-samskarana)

    ReplyDelete
  35. A similar verse is found in the Vajrasucika Upanisad of the Sama Veda:

    tarhi jatir brahmana iti cet tan na tatra jatyantara-jantusu aneka-jati-sambhava maharsayo bahavah santi rsyasrngo mrgah kasuikah kusat jambuko jambukat valmiko valmikat vyasah kaivarta-kanyayam sasa-prsthat gautamah vasisthah urvasyam agastyah kalase jata iti srutatvat etesam jatya vinapyagre jnana-pratipadita rsayo bahavah santi tasman na jatih brahmana iti

    "Does birth make a brahmana? No, this is also not the case. Many great sages have been born of other living entities. Rsyasrnga was born from a deer, Kausika was born from kusa grass, Jambuka was born from a jackal, Valmiki was born from an ant-hill, Vyasadeva was born from a fisherman's daughter, Gautama was born from the back of a rabbit, Vasistha was born from Urvasi and Agastya was born from a pot. Apart from these personalities, there are many other wise persons born from other castes who became sages. Therefore birth does not make a brahmana."

    All the great historical personages mentioned above were not born brahmanas or had mixed parentage, yet they acted as spiritual masters to thousands of disciples.

    ReplyDelete
  36. ஜயதேவதாஸ் சென்ற முறையிட்ட பின்னூட்டத்திற்கும் இப்போது இட்டுள்ள பின்னூட்டங்களுக்கும் நிறைய மாற்றங்கள்.

    சென்ற முறை அவர் சாடியது 'சாதிப் பிராமணனை'!அல்லது பிராமண சாதியை!

    இப்போது அவர் கூறுவது வர்ண பிராமண‌னைப் பற்றி.

    வர்ணம் என்ற ஆதிக் கொள்கை எப்போதோ வழக் கொழிந்து போயிற்று.

    (செங்கோவி சுட்டியுள்ளதைப்போல கிருஷ்ணர் காலத்திலேயே வர்ணக் கலப்பு ஏற்படத் துவங்கிவிட்டது.)

    அதனைச் சொல்லி மீண்டும் ஒரு வர்ண பிராமணனை உருவாக்க முடியாது.அது தேவையும் இல்லை.

    இன்று பிராமண‌ சாதியில் பிறக்காத ஆன்மிக குருமார்கள் பலர் தோன்றியுள்ளனர்.

    விவேகானந்தர்(பிராமணர் அல்லதவர்) சென்னைக்கு வந்த போது முதல் ஆதரவு அவ‌ருக்குக் கிடைத்தது திருவல்லிக்கேணி ஆச்சாரமிக்க ஐயங்கார்களிடமிருந்தே.அவருடைய முக்கியமான கடிதங்கள் அமெரிக்காவில் இருந்து எழுதப்பட்டவை அளசிங்கப்பெருமாள் என்ற ஐயங்கார் சுவாமிக்கே!

    சத்ய சாயிபாபாவின்(பிரமணர் அல்லாதவர்) பக்தர் கூட்ட எண்ணிக்கை நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.அவருடைய பின்தொட‌ர்வோரில் பிராமணர் அதிகம் உள்ளனர்.

    பங்காரு அடிகளார்(பிராமணர் அல்லாத்வர்) பக்தர் கூட்டத்திலும் 9 கஜம் மடிசார் கட்டிய மாமிகளை (சிறு எண்ணிக்கையாக இருப்பினும்) காண முடிகிறது. என் பெரியப்பார் மகன், என் மைத்துனி குடும்பத்துடன் பங்காரு அடிகளாரின் அடிமைகள்.அவர்கள் மூலம் என் மனைவியும் பங்காரு அடிகளாருக்குக் காணிக்கை செலுத்துகிறாள்.சக்தி ஒளி படிக்கிறாள்.

    மாதா அமிர்தானந்த மயி(பிறப்பால் மீனவர்)அவருடைய பின் தொடர்வோரில் பிராமணர் அதிகம் உள்ளனர்.என் அண்ணன் அவருடைய பொன் மொழிகளை நிறைய வாசித்துள்ளார். அவருடைய கல்லூரியில் பணி புரிந்தார்.

    ஜக்கி வாசுதேவ்(பிராமணர் அல்லாதவர்) அவருக்கும் பிராமணர் அதிக சீடர்களாக உள்ளனர்.அனுராதா ரமணன் என்ற பிராமணப் பெண் எழுத்தாள‌ர் வெகுஜனப் பத்திரிகையில் ஜக்கியின் புகழ் பாடினார்.

    மறைந்த சின்மயனந்தா(பிராமண‌ர் அல்லாதவர்)அவருடைய ரசிகர்களில் பிராமணர் அதிகம்.

    ஆக,வர்ணாஸ்ரமம் இருந்த போது விஸ்வாமித்ரருக்கு அளித்த பதவியை இக்காலத்திலும் சாதிப் பிராமண‌னும் தன் சாதியல்லாத பல‌ குருமார்களுக்குக் கொடுத்துத்தான் உள்ளான்.

    வர்ண பிராமண‌ன் இப்போது இல்லை. சாதிப் பிராமண‌னே இருக்கிறான். அதே போல பல சாதிகளும் உள்ளன.சாதி ஒழிய வேண்டுமா? இருக்க வேண்டுமா?

    ஒழிய வேண்டும் என்றால் அதற்காக ஒவ்வொரு சாதியினரும் கொடுக்க வேண்டிய பங்களிப்பு என்ன?

    இப்படிப் பேசலாம்.

    ReplyDelete
  37. //மனிதன் குரங்கிலிருந்துதான் வந்தான் என அறிவியல் சொல்கிறது.

    பரமாத்மாவிலிருந்து பிரிந்துவந்து மீண்டும் பரமாத்மாவை சேரத்துடிக்கும் ஆன்மாவைக் பூத உடலில் கொண்டுள்ளோம் என்கிறது ஆண்மீகம்..

    இவை இரண்டிலும் பிரிவினைகளைக் காணாதபோது கற்பிக்கப் பட்டவைகள் நம்மை கட்டுகளாய் கட்டிவைத்து முடக்க நாம் அனுமதிக்கலாமோ..//

    ஆம். இந்தப் புரிதலுக்காகத்தான் இந்த சம்வாதமே! எப்படியோ சாதி சமூகத்தில் வந்து சம்மணம் போட்டு உட்கார்ந்துவிட்டது.அதற்கு பிராமண‌ன் சொன்ன(?)
    வர்ணப் பிரிவுதான் காரணம் என்பதெல்லாம் சரியா என்று யோசிக்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம்.

    கற்பிக்கப்பட்டவை எவை?அவற்றில் கொள்ள வேண்டியவை எவை;தள்ள வேண்டியவை எவை என்று மறு ஆய்வு செய்யவே இந்த சம்வாதம்.

    சமூக ஒற்றுமை ஏற்படுத்த என்ன செய்ய வெண்டும்; வேற்றுமையை ஏற்படுத்துவது யார் என்று பேசித்தெளிய வேண்டும்.

    ReplyDelete
  38. \\சென்ற முறை அவர் சாடியது 'சாதிப் பிராமணனை'!அல்லது பிராமண சாதியை!\\ சாதிப் பிராமணர்களின் அரசியலால் பாதிக்கப் பட்டதால் அவ்வாறு செய்ய வேண்டியதாயிற்று. மன்னிக்கவும்.

    ReplyDelete
  39. \\வர்ணம் என்ற ஆதிக் கொள்கை எப்போதோ வழக் கொழிந்து போயிற்று.\\ வர்ணம் என்பது பெயரளவில் வழக்கொழிந்து போயிருக்கலாம். ஆனால் நிஜத்தில் இல்லாமல் போகாது. பிராமணன், சத்ரியன், வைஷ்யன், சூத்திரன் என்ற நான்கு குணமுள்ளவர்களை என்றென்றும் இருப்பார்கள், ஏனெனில் இந்தப் பிரிவுகளை நானே உருவாக்குகிறேன் என்று பகவானே சொல்கிறார். அவர் உருவாக்கியது எப்படி இல்லாமல் போகும்? ஒரே ஒரு வித்தியாசம், பிராமணன், ஷத்ரியர்கள் எண்ணிக்கை காலம் போகப் போக குறைந்துகொண்டே வருவார்கள், பார்ப்பதே அரிதாக இருக்கும். இன்றைக்கும் இந்த வர்ணங்களின் சாயல்களை நீங்கள் சமூகத்தில் பார்க்கலாம். என்னதான் ஆனாலும் உண்மையையே பேச வேண்டும் என்ற மனநிலை, தனக்கு தெரிந்ததை பிறருக்கு பிரதிபலன் பாராமல் கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம், வைத்தியம் செய்வதில் திறமை, சோதிடம் பார்ப்பதில் கெட்டிக்காரராக இருத்தல் இவையெல்லாம் பிராமணனின் சாயல்கள். இவர்கள் இன்றைக்கு எந்த ஜாதியில் வேண்டுமானாலும் இருக்கலாம். ஏன் கிறிஸ்தவராகக் கூட இருக்கலாம். ராணுவத்தில் சேர விருப்பம், ஆட்சி செய்வதில் கெட்டிக் காரத்தனம் இருப்பவர்கள் ஷத்ரிய குணத்தின் வெளிப்பாடு. விவசாயம் செய்தல், வியாபாரம், மாடுகள் பாரமரிப்பு இவற்றில் ஆர்வம் மிக்கவர்கள் வைஷ்ய குணம் உள்ளவர்கள். இவை எவற்றிலும் ஈடுபடாமல், எங்காவது வேலை கிடைத்தால் செய்து வாழ்க்கையை ஓட்டலாம் என்று இருப்பவர்கள் சூத்திரர்கள். இன்றைய சூழலில் ஒருத்தரிடம் 100% இந்த குணங்களைப் பார்ப்பது கடினம் எனினும் ஒவ்வொருத்தரும் இவற்றில் ஏதோ ஒரு பிரிவில் ஓங்கி இருப்பதைக் காண முடிகிறது.

    ReplyDelete
  40. \\(செங்கோவி சுட்டியுள்ளதைப்போல கிருஷ்ணர் காலத்திலேயே வர்ணக் கலப்பு ஏற்படத் துவங்கிவிட்டது.)\\ அர்ஜுனன் தான் ஏன் போரிட விரும்பவில்லை என்னும்போது, போரில் பல்லாயிரம் வீர்கள் மடிவார்கள், அவர்களது மனைவியர் விதவையாவார்கள், கேட்பாரற்ற அவர்களை மற்றவர்கள் துஷ்பிரயோகம் செய்வார்கள், அதனால் வர்ணக் கலப்பு ஏற்ப்படும் என்று சொல்கிறான். அதனாலேயே வர்ணக் கலப்பு ஏற்ப்பட்டதாக அர்த்தமில்லை. தன்னுடைய தயக்கத்துக்கு இதை ஒரு காரணமாக்கப் பார்க்கிறான், அதற்க்கு பகவான் அறிவுரைகளைச் சொல்லி அவனை போரில் ஈடுபட வைக்கிறார். அப்படிப் பார்த்தால் சண்டை இல்லாத புராண காலமே இல்லை. பாரதப் போருக்கு முன்னரே இராமாயண காலத்திலும் போர் நடந்ததே, அப்போதே வர்ணக் கலப்பு எற்ப்பட்டதாகிவிடுமா?!!

    adharmābhibhavāt kṛṣṇa
    praduṣyanti kula-striyaḥ
    strīṣu duṣṭāsu vārṣṇeya
    jāyate varṇa-saṅkaraḥ
    [Bg. 1.40]

    "When irreligion is prominent in the family, O Kṛṣṇa, the women of the family become corrupt, and from the degradation of womanhood, O descendant of Vṛṣṇi, comes unwanted progeny."

    ReplyDelete
  41. \\இன்று பிராமண‌ சாதியில் பிறக்காத ஆன்மிக குருமார்கள் பலர் தோன்றியுள்ளனர்.\\ நீங்க சொன்ன லிஸ்டுல இன்னொருத்தரையும் சேர்த்திருப்பீங்க, நல்ல வேலையா ஒருத்தன் அந்தாள் ரூமுக்குள் கேமராவை வைத்தான் அதனால அவன் பேரை உங்களால் சேர்க்க முடியவில்லை. அதற்காக மற்றவர்களும் அதே ரகத்தை சேர்ந்தவர்கள் என்று சொல்ல வரவில்லை. ஏனெனில், பாலியல் ரீதியாக ஒழுக்கத்தைக் காப்பது என்பதை வைத்து மட்டுமே ஒருத்தரை நல்ல ஆன்மீக வாதி என்று சொல்லிவிடமுடியாது, அப்படிப் பார்த்தால் சமூகத்தில் எண்ணற்றோர் இன்றைய சாமியார்களை விட ஒழுக்கமாகவே இருக்கிறார்கள். அவர்கள் கொண்டிருக்க வேண்டிய தகுதிகளில் ஒன்று பாலியல் ரீதியான சுத்தம், ஆனால் ஒரு ஆன்மீக வாதிக்கு இன்னும் பல தகுதிகள் வேண்டும், நீங்கள் லிஸ்டு போட்டவர்களில் யாருக்குமே அந்தத் தகுதிகள் இல்லை என்பதுதான் வருத்தத்துக்குரிய விஷயம்.

    ReplyDelete
  42. நல்லதோர் விவாதப் பதிவு,
    வெளிப்படையாக விவாதிக்கும் நோக்கோடு பொது இடத்தில் பகிர்ந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

    ReplyDelete
  43. //சாதிப் பிராமணர்களின் அரசியலால் பாதிக்கப் பட்டதால் அவ்வாறு செய்ய வேண்டியதாயிற்று. மன்னிக்கவும்.//

    ஜெய தேவதாஸ்! இது பற்றி மேல் அதிகத் தகவல் தேவை.உங்கள் அலுவலகப் பாலிடிக்ஸாக இருந்தால் இங்கே பேச வேண்டாம். professional jealousy
    எல்லோருக்கும் பொதுவானது.

    வேறு எந்த அரசியல் பற்றிக் கூறுகிறீர்கள் என்று விவரிக்கவும்.

    ReplyDelete
  44. Jayadev Das said...
    ///\\வர்ணம் என்ற ஆதிக் கொள்கை எப்போதோ வழக் கொழிந்து போயிற்று.\\ வர்ணம் என்பது பெயரளவில் வழக்கொழிந்து போயிருக்கலாம். ஆனால் நிஜத்தில் இல்லாமல் போகாது. பிராமணன், சத்ரியன், வைஷ்யன், சூத்திரன் என்ற நான்கு குணமுள்ளவர்களை என்றென்றும் இருப்பார்கள், ஏனெனில் இந்தப் பிரிவுகளை நானே உருவாக்குகிறேன் என்று பகவானே சொல்கிறார். அவர் உருவாக்கியது எப்படி இல்லாமல் போகும்//

    சரி. உங்கள் புரிதல் உங்களுக்கு. என் புரிதல் எனக்கு.இப்படி வைத்துக் கொள்வோம்.யார் வேண்டுமானாலும் எந்தத் தொழில் வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலை இப்போது வந்துவிட்டது. சென்னைப்பித்த‌ன் இந்தப் பின்னூட்டத்திலேயே சொல்லிவிட்டார் அலகாபாத்தில் நாவிதர் தொழிலை அந்த ஊர் பிராமணர் பார்க்கிறார் என்று.எனக்குத்தெரிந்து வங்கத்தில் பீஹாரி பிராமண‌ர்கள் பலர் கை ரிக்ஷா இழுக்கிறார்கள்.வடக்கே எப்போதுமே பிராமணர்கள் வயலில் விவசாய வேலைகள் செய்தே வந்து இருக்கின்றனர்.

    தொழில் முறையிலான, வகுப்புப் பிரிப்பு என்பது போய்விட்டது. அதனைத்தான் நான் வர்ண முறை இல்லை இப்போது என்கிறேன்.

    ஆனால் இரத்த சம்பந்தமான ஜாதி முறை இப்போது உள்ளது.இந்த சாதி முறை இருக்க வேண்டுமா, அழிய வேண்டுமா?

    இருக்க வேண்டும் என்றால் அதற்கான வரையரை என்ன?அழிய வேண்டுமானால் எப்படி அழிப்பது?

    இந்த இரத்த ஜாதி முறையைத் தாங்கிப் பிடிப்பது யார்? பிராமணனா? ஏனையோரா? இதுதான் கேள்வி.

    ReplyDelete
  45. \\வேறு எந்த அரசியல் பற்றிக் கூறுகிறீர்கள் என்று விவரிக்கவும்.\\ இது நான் கல்லூரியில் படிக்கும் காலத்திலிருந்து நடை பெறுகிறது. என்னுடன் சில பிராமண மாணவர்கள் படித்தார்கள். படிப்பதில் அவர்களை விட நான் கொஞ்சம் சுட்டி. இது அவர்களுக்குப் பொறுக்காது. என்னை வெவ்வேறு விதத்தில் கிண்டல் கேலி செய்வார்கள், படிப்பு சம்பந்தமில்லாத மற்றவற்றை [என்னுடைய உடை, பேசும் விதம் போன்றவை] கேலி செய்து என்ன உளவியல் ரீதியாக பாதிக்குமாறு செய்வார்கள். அப்போதெல்லாம் நான் வெள்ளந்தியாகவே இருந்தேன். படித்த பின்னர், ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு சேருவதற்கு, Reference -ஆக ஒரு பிராமண ஆசிரியரிடம் கொடுத்தேன். என்னிடம் அவர் நன்றாகப் பேசுவார், இருப்பவர்களிலேயே நீதான் புத்திசாலி என்பார். ஆனால், என்னைப் பற்றி அவர் Below average என்றும் மற்ற எல்லா கேள்விகளுக்கும் என்னைப் பற்றி எவ்வளவு இறக்கிப் எழுத வேண்டுமோ அவ்வளவும் செய்து அனுப்பிவிட்டார். நான் தேர்வு செய்யப் படவில்லை. இதை நான் பின்னாளில் அவருடைய செயல்பாடுகளை வைத்து கண்டுபிடித்தேன். இதே போல பல்வேறு கட்டங்களில் பிராமணரல்லாதவர்கள் பிராமணர்களால் தொடர்ந்து பின்னுக்குத் தள்ளப் பட்டு வருகிறோம். அலுவலகத்தில் நடப்பதைப் பற்றி சொல்ல வேண்டாம் என்பதால் நான் இங்கே அது பற்றி எதுவும் சொல்லவில்லை.

    ReplyDelete
  46. \\யார் வேண்டுமானாலும் எந்தத் தொழில் வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலை இப்போது வந்துவிட்டது. சென்னைப்பித்த‌ன் இந்தப் பின்னூட்டத்திலேயே சொல்லிவிட்டார் அலகாபாத்தில் நாவிதர் தொழிலை அந்த ஊர் பிராமணர் பார்க்கிறார் என்று.எனக்குத்தெரிந்து வங்கத்தில் பீஹாரி பிராமண‌ர்கள் பலர் கை ரிக்ஷா இழுக்கிறார்கள்.வடக்கே எப்போதுமே பிராமணர்கள் வயலில் விவசாய வேலைகள் செய்தே வந்து இருக்கின்றனர்.\\ கீதையில் வர்ணம் குறித்து என்ன சொல்லப் பட்டிருக்கிறது என்று பாருங்கள், அதில் பகவான் ஒவ்வொரு வர்ணத்தினருக்கும் என்னென்ன தகுதிகள் என்று விலாவாரியாகச் சொல்லியிருக்கிறார். இன்றைக்கு யார் எந்த தொழில் செய்தாலும், எந்த நிலையில் இருந்தாலும், அவர்களுக்குள் இந்தத் தகுதிகள் ஒளிந்துகொண்டிருந்தால் அவர்கள் அந்த வர்ணத்தைச் சார்ந்தவர்கள், அவ்வளவுதான். வர்ணம் மட்டுமே உண்மை, சாதி என்பதே இல்லை சாதி என்பது மனிதனாக உருவாக்கியது, செயற்கையானது. It has no place in Vedic tradition, it doesn't exist at all.

    ReplyDelete
  47. \\இந்த இரத்த ஜாதி முறையைத் தாங்கிப் பிடிப்பது யார்? பிராமணனா? ஏனையோரா? இதுதான் கேள்வி.\\ எல்லோரும்தான், ஆனால், இந்த முறையில் பொருளாதார ரீதியாக வெற்றியடைந்திருப்பவர்கள், மற்றெல்லோரையும் விட ஜாதி பிராமணர்கள்தான்.

    ReplyDelete
  48. ///அதனாலேயே வர்ணக் கலப்பு ஏற்ப்பட்டதாக அர்த்தமில்லை. தன்னுடைய தயக்கத்துக்கு இதை ஒரு காரணமாக்கப் பார்க்கிறான், அதற்க்கு பகவான் அறிவுரைகளைச் சொல்லி அவனை போரில் ஈடுபட வைக்கிறார். அப்படிப் பார்த்தால் சண்டை இல்லாத புராண காலமே இல்லை. பாரதப் போருக்கு முன்னரே இராமாயண காலத்திலும் போர் நடந்ததே, அப்போதே வர்ணக் கலப்பு எற்ப்பட்டதாகிவிடுமா?!!///

    இது வெறும் டெக்னிகல் கேள்வி. இதற்குப் பதில் சொன்னால் விவாததின் போக்கு திசை மாறிப்போகும் அபாயம் உள்ளது.

    மீண்டும் சொல்லிக்கொள்கிறேன் புராணகாலத்தில் சொன்ன வர்ணம் என்ன என்று யாராலும் சரிவரப் புரிந்து கொள்ள முடியாது. அதனை இப்போது நடைமுறை படுத்த‌வும் முடியாது.

    இப்போது உள்ள இரத்த சம்பந்தமான சாதியைப் பற்றிப் பேசலாம். இப்போதுள்ள சாதிமுறையில் உள்ள குறை நிறைஎன்ன?

    இந்த முறை எப்படி வந்தது என்பதைவிட, யாரால் இப்போது பேணிப் பாதுகாகப்படுகிறது.இவைதான் நாம் ஆலோசிக்க வேண்டிய விஷயங்கள்.

    ReplyDelete
  49. //நீங்க சொன்ன லிஸ்டுல இன்னொருத்தரையும் சேர்த்திருப்பீங்க, நல்ல வேலையா ஒருத்தன் அந்தாள் ரூமுக்குள் கேமராவை வைத்தான் அதனால அவன் பேரை உங்களால் சேர்க்க முடியவில்லை. அதற்காக மற்றவர்களும் அதே ரகத்தை சேர்ந்தவர்கள் என்று சொல்ல வரவில்லை. ஏனெனில், பாலியல் ரீதியாக ஒழுக்கத்தைக் காப்பது என்பதை வைத்து மட்டுமே ஒருத்தரை நல்ல ஆன்மீக வாதி என்று சொல்லிவிடமுடியாது, அப்படிப் பார்த்தால் சமூகத்தில் எண்ணற்றோர் இன்றைய சாமியார்களை விட ஒழுக்கமாகவே இருக்கிறார்கள். அவர்கள் கொண்டிருக்க வேண்டிய தகுதிகளில் ஒன்று பாலியல் ரீதியான சுத்தம், ஆனால் ஒரு ஆன்மீக வாதிக்கு இன்னும் பல தகுதிகள் வேண்டும், நீங்கள் லிஸ்டு போட்டவர்களில் யாருக்குமே அந்தத் தகுதிகள் இல்லை என்பதுதான் வருத்தத்துக்குரிய விஷயம்.//

    இதுவும் சம்வாதம் திரும்பி விதண்டாவதம் ஆகிவிடும் நிலையே.

    விஸ்வாமித்திரர் க்ஷத்திரியரில் இருந்து பிராமணராக உயரவு பெற்றார் என்றதற்குப் பதிலாக, இன்றைய பிராமண ஜாதியனரும் ஜாதி பார்க்காமல் பல குருமார்களினை ஏற்றுள்ளனர் என்று கூறினேன்.

    சன்னியாசிகளின் தகுதியைப்பற்றிப்பேசினால் இந்த சம்வாதத்தின் போக்கு திரும்பிவிடும்.

    மீண்டும் கேட்கிறேன் இப்போதுள்ள ரத்த சம்பந்தமான சாதி முறை சரியா இல்லயா? இருக்க வேண்டுமா? அழிய வேன்டுமா?

    ReplyDelete
  50. //இருப்பவர்களிலேயே நீதான் புத்திசாலி என்பார். ஆனால், என்னைப் பற்றி அவர் Below average என்றும் மற்ற எல்லா கேள்விகளுக்கும் என்னைப் பற்றி எவ்வளவு இறக்கிப் எழுத வேண்டுமோ அவ்வளவும் செய்து அனுப்பிவிட்டார். நான் தேர்வு செய்யப் படவில்லை. இதை நான் பின்னாளில் அவருடைய செயல்பாடுகளை வைத்து கண்டுபிடித்தேன். இதே போல பல்வேறு கட்டங்களில் பிராமணரல்லாதவர்கள் பிராமணர்களால் தொடர்ந்து பின்னுக்குத் தள்ளப் பட்டு வருகிறோம்.//

    உங்க‌ளுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் வருத்ததிற்கு உரியதே.அந்த பிராமணன்/ பிராமணர்கள் கண்டிக்கப்பட வேண்டியவர்களே.

    இதே போன்ற அனுபவங்கள் சுய சாதிக்காரர்களிடமிருந்தும் உங்களுக்கு ஏற்படலாம்."என் சாதிகாரனே எனக்கு துரோகம் செய்கிறான் சார்" என்று
    புலமபலை நான் நிறையக் கேட்டிருக்கிறேன்.

    பொதுவாக பிராமணன் சுய சாதிக்கு ஒன்றும் செய்வதில்லை என்பது அவர்களுக்குள்ளேயே இருக்கும் பாலிடிக்ஸ்.

    நீங்கள் சொல்லியுள்ளது இந்தப் பொது விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளலாமா என்பதை யாராவது மாடரேட்டர்தான் சொல்ல வேண்டும்.

    சென்ற பதிவில் பின்னூடத்தில் இர‌ண்டு பேர்கள் பிராமணர்கள் தங்களுக்கு உதவி செததைக்கூறியுள்ளனர். அதில் ஒருவர் முஸ்லிம்.

    ReplyDelete
  51. //வர்ணம் மட்டுமே உண்மை, சாதி என்பதே இல்லை சாதி என்பது மனிதனாக உருவாக்கியது, செயற்கையானது. It has no place in Vedic tradition, it doesn't exist at அல்ல்.//

    மிகச் சரி. மனிதனால் உருவாக்கப்பட்ட சாதியால் எல்லோரும் சமூக ஒற்றுமை குலைந்து காணப் படுகிறோமே, இதை சரி செய்ய என்ன செய்வது என்பதுதான் கேள்வி.

    ReplyDelete
  52. \\மீண்டும் கேட்கிறேன் இப்போதுள்ள ரத்த சம்பந்தமான சாதி முறை சரியா இல்லயா? இருக்க வேண்டுமா? அழிய வேன்டுமா?\\ ஜாதி என்பது சனாதன தர்மத்தின் படி அங்கீகரிக்கப் பட்டதா இல்லையா என்பதற்கு, அங்கீகரிக்கப் படவில்லை என்ற உறுதியான பதிலை என்னால் சொல்ல முடியும். அது இருக்க வேண்டுமா, ஒழிக்கப் பட வேண்டுமா என்றால், முதலில் அது சாத்தியமா என்று பார்க்க வேண்டும், அடுத்து அதனால் ஏற்ப்படும் சமூகப் பிரச்சினைகளையும் பார்க்க வேண்டும். சாதிகளை ஒழிக்கப் போகிறேன் என்று போய், அது சமூகத்தில் பெரும் குழப்பத்தையும், கலகத்தையும் உண்டுபண்ணும் என்றால் சாதிகள் இருந்து விட்டுப் போவதே நலன், இல்லை ஒழிந்தால் நல்ல மற்றம் வரும் என்றால் இல்லாத சாதிகள் ஒழியத்தான் வேண்டும்.

    ReplyDelete
  53. // Jayadev Das said...
    \\இந்த இரத்த ஜாதி முறையைத் தாங்கிப் பிடிப்பது யார்? பிராமணனா? ஏனையோரா? இதுதான் கேள்வி.\\ எல்லோரும்தான், ஆனால், இந்த முறையில் பொருளாதார ரீதியாக வெற்றியடைந்திருப்பவர்கள், மற்றெல்லோரையும் விட ஜாதி பிராமணர்கள்தான்.//

    ஒரு நிலைப் பாட்டை ஒப்புக்கொண்டதற்கு நன்றி.

    இன்றைய சாதிமுறையைத் தாங்கிப்பிடிப்பது பிராமணன் மட்டும் இல்லை. எல்லோரும்தான்.

    இந்த ஜாதி முறையால் உண்டான நன்மை/தீமைக்கு பிராமணன் மட்டுமே இதுவரை பொறுப்பாக்கப் பட்டுள்ளான்.இப்போது தான் 'எல்லோரும்' என்ற வார்த்தை வருகிறது.

    பொருளாதாரப் பலன் பற்றித் தனியாகப் பேசலாம். அதற்குத் தங்களிடம் ஏதாவது ஆய்வுஅறிக்கையோ, ஆவணங்களோ இருக்கும் எனில் தெரிவியுங்கள்.

    இந்த விவாதத்தில் பொருளாதாரம் வருமா என்று மாடரேட்டர்தான் சொல்ல வேண்டும்.

    ReplyDelete
  54. Jayadev Das said...
    \\மீண்டும் கேட்கிறேன் இப்போதுள்ள ரத்த சம்பந்தமான சாதி முறை சரியா இல்லயா? இருக்க வேண்டுமா? அழிய வேன்டுமா?\\ ஜாதி என்பது சனாதன தர்மத்தின் படி அங்கீகரிக்கப் பட்டதா இல்லையா என்பதற்கு, அங்கீகரிக்கப் படவில்லை என்ற உறுதியான பதிலை என்னால் சொல்ல முடியும். அது இருக்க வேண்டுமா, ஒழிக்கப் பட வேண்டுமா என்றால், முதலில் அது சாத்தியமா என்று பார்க்க வேண்டும், அடுத்து அதனால் ஏற்ப்படும் சமூகப் பிரச்சினைகளையும் பார்க்க வேண்டும். சாதிகளை ஒழிக்கப் போகிறேன் என்று போய், அது சமூகத்தில் பெரும் குழப்பத்தையும், கலகத்தையும் உண்டுபண்ணும் என்றால் சாதிகள் இருந்து விட்டுப் போவதே நலன்,//

    நன்றி ஜெயதேவதாஸ் அவர்களே!


    after beating about the bush, we have come to specifics.

    இந்த விவாதத்தைப் பொதுவில் வைத்தவர் நண்பர் செங்கோவி அவர்கள் தான். அவர் எப்படி மேல் எடுத்துச்செல்கிறாரோ அதனை ஒட்டியோ வெட்டியோ விவாதிப்போம்.

    எனக்கு ஈடு கொடுத்து எதிர் நின்றதற்கு மீண்டும் நன்றி.

    மீண்டும் வருவேன்.

    ReplyDelete
  55. \\இதே போன்ற அனுபவங்கள் சுய சாதிக்காரர்களிடமிருந்தும் உங்களுக்கு ஏற்படலாம்."என் சாதிகாரனே எனக்கு துரோகம் செய்கிறான் சார்" என்று புலமபலை நான் நிறையக் கேட்டிருக்கிறேன்.\\ ஒவ்வொருத்தர் வாழ்க்கையிலும் யாராவது கெடுதல் செய்திருக்கலாம், நிச்சயம் அவர்கள் ஏதாவது ஒரு சாதியைச் சேர்ந்தவராகத்தான் இருப்பார். என்னுடைய அனுபவத்திலும் சில பிராமணர்கள் Gem -ஆக பார்த்திருக்கிறேன். ஆனால், பார்க்கிற எல்லோருமே சொல்வது, தாங்களும் சாதிப் பிராமணர்களின் அரசியலால் பாதிக்கப் பட்டிருக்கிறோம் என்பதே.

    ReplyDelete
  56. இன்றைய சமூகத்தில் ஒருவன் திருமண வயது வரும் வரை சாதி பற்றி யோசிக்காமலே கூட வாழ வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால் நிச்சயிக்கப்பட்ட சாதிமறுப்பு திருமணங்கள் என்பது இன்றும் கானல் நீர்தான். ஏற்கனவே பெண்கள் முன்னேற்றத்தால் வாலிபர்களுக்குத் திருமண வாய்ப்பு கடினமாகும் நிலையில் சாதியை வேறு பார்க்க வேண்டியிருக்கிறது. ஒரு செயற்கையான மனத்தடையை அது ஏற்படுத்துகிறது. இந்த வகையில் பார்க்கும்போது சாதி என்பது ஒரு தேவையில்லாத அமைப்பாகத் தோன்றுகிறது. குறைந்தபட்சம் ஒரே விதமான பழக்க வழக்கங்கள் (உணவு, கடவுள் வழிபாடு) உள்ள சாதிகள் திருமண உறவில் இணைந்து இருக்கும் சாதிகளின் எண்ணிக்கையைக் குறைக்க முயற்சி செய்யலாம். உதாரணம்: ஐயர், அய்யங்கார்,சில செட்டியார் பிரிவுகள், சில முதலியார் பிரிவுகள் ஆகிய சாதிகள் சில சடங்குகளைத் தவிர ஒரே மாதிரியான வாழ்க்கை முறையைக் கொண்டவர்கள்.

    காதல் திருமணம் சாதியை ஒழிக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை கிடையாது. காதலிக்கும் எவனும் சாதி ஒழிப்பை லட்சியமாகக் கொண்டு காதலிக்கவில்லை. அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் பெரும்பாலும் அப்பா சாதியில்தான் சேரும்.

    இந்தியாவில் சாதி நீடித்திருப்பதற்கு குடும்ப அமைப்புதான் காரணம். மேற்கத்திய நாடுகளில் பதினைந்து வயதில் பெரும்பாலும் பெற்றோரைப் பிரிந்து சொந்தமாக உழைத்துப் படிப்பு, வேலை என்று வாழ்க்கையை ஓட்டுவதால் அங்கு சாதி போன்ற அமைப்புகளுக்குப் பெரிய
    முக்கியத்துவம் இல்லை. இந்தியாவிலோ நாற்பது வயது வரை கூட அப்பா, அம்மா பேச்சைக் கேட்கும் மகன்கள்/மகள்கள் நிறைய உண்டு. குடும்ப பழக்க வழக்கங்கள்தான் சாதியின் ஆயுளை நீட்டித்திருக்கிறது.

    ஆகவே சாதியை ஒழிக்க வேண்டுமென்று நினைப்பவர்கள் குடும்ப அமைப்பை ஒழிக்க வேண்டும். இதைத்தான் தந்தை பெரியார் வலியுறுத்தினார்.

    குடும்ப அமைப்பை ஒழித்து சாதியை ஒழிப்பது சரியா என்பதைப் படிப்பவர்களின் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்.

    ReplyDelete
  57. @Jagannath

    அருமையாகச் சொன்னீர்கள். சாதி மாறி திருமணம் செய்வது ஒரு பெரிய விஷயமே இல்லை, அவர்களுக்கு பிறக்கும் குழந்தை பெண்ணாக இருந்தால், அவளுக்குத் திருமணம் செய்யும்போது தான் பிரச்சினை. [இதை நான் சில இடங்களில் பார்த்திருக்கிறேன். ]

    //குடும்ப அமைப்பை ஒழித்து சாதியை ஒழிப்பது சரியா// மிருகங்களுக்கும் மனுஷனுக்கும் வித்தியாசமே இல்லாமப் போயிடும்.

    ReplyDelete
  58. /
    kmr.krishnan said...

    இந்த விவாதத்தில் பொருளாதாரம் வருமா என்று மாடரேட்டர்தான் சொல்ல வேண்டும்.//

    பொருளாதாரம் பற்றி பின்வரும் பகுதிகளில் பேசியுள்ளோம். தாங்களும் அப்போது அதுபற்றி விவாதிக்கலாம். இன்றைய பகுதி வர்ணம்-வர்ணக்கலப்பு-ஜாதிக்கும் வர்ணத்திற்குமான வித்தியாசத்தைப் பற்றி மட்டும் பேசுகிறது..

    தொடர்ந்து ஆக்கப்பூர்வமாய் விவாதிக்கும் அனைவருக்கும் நன்றி.

    ReplyDelete
  59. //என்னுடைய அனுபவத்திலும் சில பிராமணர்கள் Gem -ஆக பார்த்திருக்கிறேன். ஆனால், பார்க்கிற எல்லோருமே சொல்வது, தாங்களும் சாதிப் பிராமணர்களின் அரசியலால் பாதிக்கப் பட்டிருக்கிறோம் என்பதே.///

    சரி'ஜெம்' மை எடுத்துக் கொள்ளுங்கள்.குப்பைகளை ஒதுக்குங்கள்.

    'பார்க்கிற எல்லோருமே சொல்வது' என்பதில் vague generalaisation
    உள்ளது.

    நான் வேலை செய்த நிறுவனம் பற்றி ஒரு சமயத்தில் அதிக விமர்சனம் இருந்தது. சரி என்னதான் உண்மையான புகார் என்று கண்டுபிடிக்க ஒரு ஆய்வு செய்தோம்.இரண்டே கேள்விதான்.
    1.எங்கள் நிறுவனம் பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன?
    2.உங்களுக்கு ஏதாவது சொந்த முறையில் நிறுவனத்தின் மீது புகார் உள்ளதா?

    இப்படி திட்டவட்டமாகக் கேட்டபோது ஆச்சரியப்படும்படி பலரும் பெரிய அளவில் புகார் கூறவில்லை.

    உங்களுடைய 'எல்லோருமே' என்பது 200 பேர் இருக்கலாம். கேட்டோம் என்று சொன்னால் அவர் சொன்னார் இவர் சொன்னார் என்பார்கள்.

    குழு மன நிலையில் பலவிதமான மாச்சரியங்கள் மனதில் பதிந்துவிடும்.
    சமூகத்தின் எல்லா பிரச்சனகளுக்கும் பிராமணந்தான் காரணம் என்று 18ம் நூற்றான்டில் இருந்து பரப்பப்பட்டு வருகிறது.

    'நீ கலக்காட்டா, உன் அப்பா கலக்கிருப்பார்' என்ற கதைதான்.

    சிங்கம் ஒரு நீர் நிலைக்கு வந்தது. அங்கே ஏற்கனவே ஒரு ஆடு நீர் குடிக்க வந்திருந்தது.

    சிங்கம் ஆட்டை அடிக்க விரும்பியது. ஆனால் சட்டப்படி செய்ய வேண்டுமே.
    அதனால்,"ஏண்டா தண்ணீரைக் கலக்கினே?"என்று கேட்டது.
    "நான் கலக்கலயே ராஜாவே" என்றது ஆடு.
    "நீகலக் காட்டா, உங்க அப்பா கலக்கியிருக்கலாம்"என்று சொல்லி ஆட்டை அடித்தது.

    இது போன்ற prejudices பெரும்பாலும் யூகத்தின் அடிப்படியலேயே வருகின்றன.

    பிராமணரால் அலட்சியப் படுத்தப்பட்ட பலர் அதையே தங்களுக்கான challenge
    ஆக எடுத்துக்கொண்டு எதை அபிராமணனால் சாதிக்க முடியாது என்று
    சொன்னார்களோ அதையே சாதித்துக் காட்டினார்கள்.

    அதில் முதல் ஆள் விஸ்வாமித்ரர் என்றால் அவர் வழியில் அம்பேத்கர்.ஆங்கிலமும் சம்ஸ்கிருதமும், சட்டமும் பிராமண‌ர்களின்
    தனி ஸ்பெஷாலிடி ஆக இருந்த கால கட்டத்தில் மூன்றையுமே கசடறக் கற்றார்.தன்னுடைய திறமையால் சாதித்தார். தன்னம்பிக்கையால் சாதித்தார்.

    ReplyDelete
  60. \\உங்களுடைய 'எல்லோருமே' என்பது 200 பேர் இருக்கலாம். கேட்டோம் என்று சொன்னால் அவர் சொன்னார் இவர் சொன்னார் என்பார்கள்.\\ நான் சொன்னவற்றிற்கு பெயர் முகவரி, தேதியோடு யார், யாருக்கு என்னென்ன செய்தார்கள் என்ற விவரங்கள் உள்ளன. சில வருடங்களுக்கு முன்பு வரை 98% அரசுப் பணிகள் எப்படி 2% மக்கள் தொகையினரால் ஆக்கிரமிக்கப் பட்டிருந்தது என்பதற்கு நீங்கள் அறிவியல் பூர்வமாக யோசியுங்களேன். இங்கே நான் சொன்ன விஷயங்களை நான் வெறும் பேச்சுக்காக சொல்லவில்லை, அனுபவப் பூர்வமாகச் சொல்லியுள்ளேன். மேலும், இந்த விஷயங்கள் எல்லோருக்கும் தெரிந்ததுதான் ரகசியம் ஒன்றுமில்லை.

    ReplyDelete
  61. \\அம்பேத்கர்.ஆங்கிலமும் சம்ஸ்கிருதமும், சட்டமும் பிராமண‌ர்களின்
    தனி ஸ்பெஷாலிடி ஆக இருந்த கால கட்டத்தில் மூன்றையுமே கசடறக் கற்றார்.தன்னுடைய திறமையால் சாதித்தார். தன்னம்பிக்கையால் சாதித்தார்.\\ அதெப்படி சார் ஆங்கிலமும் சம்ஸ்கிருதமும், சட்டமும் பிராமண‌ர்களின் தனி ஸ்பெஷாலிடி ஆச்சு? மற்றவர்கள் முட்டாள்களா?

    ReplyDelete
  62. அம்பேத்காராகவும் அப்துல் கலாமாகவும், ஆக எல்லோராலும் முடியாது சார்.

    ReplyDelete
  63. //குறைந்தபட்சம் ஒரே விதமான பழக்க வழக்கங்கள் (உணவு, கடவுள் வழிபாடு) உள்ள சாதிகள் திருமண உறவில் இணைந்து இருக்கும் சாதிகளின் எண்ணிக்கையைக் குறைக்க முயற்சி செய்யலாம். உதாரணம்: ஐயர், அய்யங்கார்,சில செட்டியார் பிரிவுகள், சில முதலியார் பிரிவுகள் ஆகிய சாதிகள் சில சடங்குகளைத் தவிர ஒரே மாதிரியான வாழ்க்கை முறையைக் கொண்டவர்கள்.//

    மிக்க நன்றி ஜெகன்னாத்.இது ஒரு 'கான்க்ரிட் ஒபீனியன்'

    இந்தப் பரிசோதனையில் ஏற்கனவே பிராமண‌ சமுதாயம் இறங்கி விட்டது.
    'இந்து' போன்ற நாள் இதழ்களில் திருமண மணமகன்,மணமகள் விளம்பரங்களைப் பாருங்கள்.subsect no bar, any brahmin, caste no bar,
    any hindu, any vegetarian போன்ற சொற்கள் இடம் பிடிக்க ஆரம்பித்து பல‌ ஆண்டுகள் ஆகிவிட்டன.

    ReplyDelete
  64. சில வருடங்களுக்கு முன்பு வரை 98% அரசுப் பணிகள் எப்படி 2% மக்கள் தொகையினரால் ஆக்கிரமிக்கப் பட்டிருந்தது என்பதற்கு நீங்கள் அறிவியல் பூர்வமாக யோசியுங்களேன். //

    இப்படி யோசிப்போம். ஒவ்வொரு சாதியினரும் தங்கள் குடும்பத் தொழிலை செய்து வந்த காலத்தில் படிப்பு சம்பந்தப்பட்ட விடயங்களில் நெடுங்காலமாகக் கவனம் செலுத்தி வந்த பிராமண சாதியினர் அதிக பதவிகளில் இருந்ததில் ஏதாவது அதிசயம் இருக்கிறதா? இந்நிலையை மாற்ற வேண்டுமென்று அரசாங்கம் இட ஒதுக்கீடு போன்ற விடயங்களைக் கொண்டு வந்தது நல்ல விடயம்தான். ஆனால் இதைக் கொண்டு வந்தபோது பிராமண சாதியினருக்கு ஏன் அதற்கான இழப்பீடு வழங்கப்படவில்லை? உதாரணமாக விவசாயம் செய்து கொண்டிருந்த சாதியினர் படிக்க வந்தார்கள். ஆனால் பிராமணர்களுக்கு அதற்கு ஈடாக விவசாயம் சொல்லித் தரப்பட்டதா? இட ஒதுக்கீட்டை சமத்துவத்தை ஏற்படுத்துவதற்கான கருவியாக இப்படிப் பயன்படுத்தியிருக்கலாம். ஆனால் பிராமணர்களுக்கு மாற்று வழி எதையும் காட்டாமல் ஒரு பழி வாங்கும் நடவடிக்கை போலத்தானே அது செயல்படுத்தப்பட்டது. இது மேலும் பிராமண சாதியினரும், இட ஒதுக்கீடு இல்லாத மற்ற சாதியினரும் இட ஒதுக்கீடு உள்ளவன் மேல் மேலும் கசப்புணர்வை வளர்த்துக் கொள்ளக் காரணம் ஆனது.

    ReplyDelete
  65. //காதல் திருமணம் சாதியை ஒழிக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை கிடையாது. காதலிக்கும் எவனும் சாதி ஒழிப்பை லட்சியமாகக் கொண்டு காதலிக்கவில்லை. அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் பெரும்பாலும் அப்பா சாதியில்தான் சேரும்.//

    ஆம்!ஜெகன்னாத்! காதல்(+காமம்) கண்ணை மறைக்கும் போது ஜாதியாவது புடலங்காயவது.குழந்தை பெரிதாகி திருமணத்திற்கு வரும் போது தந்தையின் சாதியில்தான் சேர்க்கப் படுகிற்து.நமது நம்பிக்கையின் படி தந்தையின் ஜீன் தான் வம்சத்தைத் தீர்மானிக்கிறது.

    சில இடங்களில் கலப்புத் திருமணம் செய்த பிராமண ஸ்திரி தன் பிள்ளைக்கு பிராமணப் பெண் தேடி, ஏழைப் பிராம்ம‌ண‌ப் பெண்களைக் கட்டியிருக்கிறார்கள்.

    ReplyDelete
  66. //ஆகவே சாதியை ஒழிக்க வேண்டுமென்று நினைப்பவர்கள் குடும்ப அமைப்பை ஒழிக்க வேண்டும். இதைத்தான் தந்தை பெரியார் வலியுறுத்தினார்.

    குடும்ப அமைப்பை ஒழித்து சாதியை ஒழிப்பது சரியா என்பதைப் படிப்பவர்களின் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்//

    குடும்ப அமைப்பு வலுப்பெற வேண்டுமென்று மேலை நாடுகளில் பல 'ப்ரொகிராம்ஸ்' நடத்துகிறார்கள்.பிரச்சாரங்கள் செய்கிறார்கள். ஒற்றைப் பெற்றோர் குடும்பங்களின் எண்ணிக்கையைக் குறைக்க எதேதோ செய்கிறார்கள்.ஒன்றும் பலன் இல்லை.

    நாமும் குடும்ப அமைப்பை அழித்துவிட்டு, மீண்டும் கொண்டு வர பிரசாரங்கள் செய்ய வேண்டி வரலாம்.

    பெரியார் குடும்ப அமைப்புக்கு எதிராகப் பேசியிருந்தால் அதற்கான ஆதாரம் தேவை.பெண் விடுதலை பேசியிருக்கலாம். குடும்பம் வேண்டாம் என்றா சொல்லியிருக்கிறார்? குழந்தை பெற்றுக் கொள்வதா வேண்டாமா என்பதை பெண்கள் தீர்மானிக்கட்டும் என்றார். குடும்பத்தைப்பற்றி? ஆதாரம் வேண்டும்.
    யாரையும் நாம் தவறாக 'கோட்' பண்ணக்கூடாது.

    ReplyDelete
  67. பெரியார் குடும்ப அமைப்புக்கு எதிராகப் பேசியிருந்தால் அதற்கான ஆதாரம் தேவை.//

    திருமணம் கிரிமினல் குற்றமாக்-கப்பட வேண்டும் என்று தந்தை பெரி-யார் கூறியது உண்மைதான். அதற்குக் காரணம் கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்ற கொடுமை நிலவுவதும் ஆண் பெண் சுயசிந்தனைகளுக்குத் தடையாக இருப்பதும்தான். குடும்ப வாழ்வில் சிக்கிய மனிதன் சுயநலப் பிராணியாக வாழ்ந்து தொலைக்கிறான் என்ப-தால்தான்.

    இதுபற்றி தந்தை பெரியார் கூறுகிறார்.

    சொத்துரிமை இல்லாத ருசியா போன்ற நாடுகளில் ஆண்களும், பெண்களும் கணவன் -_ மனைவி என்று இல்லாமல் நண்பர்கள், காதலர்களாக இருந்துவருகின்றனர்; திருமணம் என்ற அமைப்பு முறையில் அமைப்பும் ஏற்பாடும் இல்லாமலே வாழ்கிறார்கள். இதற்குக் கட்டுப்பாடற்ற காதல் என்று பெயர். சுதந்திரமான ஆண் -_ பெண் உறவு வாழ்க்கை அங்கே இருக்கிறது. சொத்து, வாரிசு உரிமை இருக்கிற காரணத்தால்தான் நம்முடைய நாட்டில் கட்டுப்பாடுள்ள குடும்ப முறை ஏற்படுத்த வேண்டியதாயிற்று.

    ருசியா போன்ற சொத்துரிமையற்ற நாடுகளில் இது போன்ற கட்டுப்பாடு-கள் தேவை இல்லாமல் போய் விட்டது. ஏதோ இயற்கை உணர்ச்சிக்காக ஓய்வு நேரங்களில் சாந்தி ஏற்படுவதற்காக ஒரு வாழ்க்கைத் துணை இருக்க வேண்டும்; அவர்கள் சினேகிதர்கள் மாதிரி என்-றைக்கும் இருப்பார்களே தவிர, அங்குக் கல்யாண முறையே கிடையாது. இது-தான் அங்குள்ள ஆண் பெண் உறவுத்-தன்மை

    (நூல்: சுயமரியாதைத் திருமணம் ஏன்?) என்று தந்தை பெரியார் கூறியுள்ளார்.

    திருமணம் குடும்ப அமைப்பு முறை என்பது சுயநல அமைப்புத் தன்மை கொண்டது என்பதும், தான் உண்டு, தன் குடும்பம் உண்டு என்ற கடுகு உள்ளம் அவர்களை ஆட்டிப் படைத்-திருக்கிறது என்பதும்தான் தந்தை பெரியார் அவர்களின் கருத்தியலாக இருக்கிறது.

    பிறருக்குத் தொண்டாற்ற வேண்டும் என்று விரிந்த இதயத்தை இந்தத் திருமண வழிப்பட்ட குடும்ப அமைப்பு முறை அளிப்பதில்லை.

    அன்னை நாகம்மையார் மறைவுற்ற-போது தந்தை பெரியார் எழுதிய இரங்கல் இலக்கியத்தில்கூட தனக்-கிருந்த ஒரே கட்டும்கூட இப்பொழுது இல்லை. முழுமையாகப் பொதுத் தொண்டில் மூழ்குவேன் என்றாரே!

    http://paraneetharan-myweb.blogspot.com/2010/04/blog-post_9784.html
    மின்சாரம் எழுதிய கட்டுரை , விடுதலை (17.04.2010)

    ReplyDelete
  68. // சில வருடங்களுக்கு முன்பு வரை 98% அரசுப் பணிகள் எப்படி 2% மக்கள் தொகையினரால் ஆக்கிரமிக்கப் பட்டிருந்தது என்பதற்கு நீங்கள் அறிவியல் பூர்வமாக யோசியுங்களேன்//

    சோழர் காலத்தில்கூட பிரமராயர்கள் என்று அந்தணர்களை அரசு வேலைக்குப் பயன் படுத்தியது தெரிய வருகிறது

    நாயக்க மன்னர்கள் காலத்தில் இருந்தே கிராம நிர்வாகத்தில் தெலுங்கு பேசும் பிராமணர்களை வரி வசூல் செய்பவர்களாகவும், அரசாங்கத் தொடர்பு அதிகாரிகளாகவும் நியமிக்கும் வழக்கம் இருந்துள்ளது.ஏன் அந்த அரசர்கள் பிராமண‌ர்களை தேர்ந்தெடுத்தார்கள் என்று அவர்களுக்குத்தான் தெரியும்.

    அதன்பின்னர் வந்த ஆங்கிலேயர்களுக்கு எப்படியோ தங்களுக்கு வரி வந்தால் போதும்.மக்கள் நலன் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை.எனவே அரசு நிர்வாக அமைப்பை அவர்கள் ஒன்றும் செய்யவில்லை.பிராமணர்கள் பதவியில் தொடர்ந்தார்கள்.

    வெள்ளையனின் கொள்ளையை அருகில் இருந்து பார்த்த‌ பிராமண‌ர்களில் சிலர் ஆங்கில அரசு செய்யும் சுரண்டல்களைப் பற்றி முணு முணுக்க ஆரம்பித்தார்கள்.

    ஆங்கிலேயன் கிராமத்தில் இருந்து தன்னுடைய வசதிக்காக
    நிர்வாகத்தை நகரத்திற்கு மாற்றிக் கொண்டான்.அரசுப் பணிக்காக பிராமணனும் நகர வாசியானான். அவனுடைய கிராமத் தொடர்பு அறுக ஆரம்பித்தது.

    கிராமத்தில் இருந்த வரை அரசு உத்யோகஸ்தன் ஆனாலும், பிராமணன் அங்குள்ள நில் உடைமையாளர்களுக்குக் கட்டுப்பட்டே இருந்தான்.தங்க‌ளுக்கு இருந்த நில புலன் காரணமாக அரசு வேலையை பற்றி மற்ற வகுப்பார் அக்கறைப் படவில்லை.அதனை அடைய வேண்டிய தயாரிப்பினை நாடவும் இல்லை.

    நகரத்தில் இருந்து பிராமணன் வந்து, ஆங்கில அரசின் பிரதிநிதியாக‌ நின்று,
    தாசில் செய்த போதுதான் மற்ற சாதியினர் விழித்துக் கொண்டனர்.

    தங்க‌ளுக்கு என்று நிலம் இல்லாத பிராமணன் அன்றைய தேதியில் கிடைத்த அரசு வேலையைத்தான் வயிற்றுப் பாட்டுக்கு நம்பியிருந்தான்.மற்றவர்களூக்கு
    அப்படியல்ல.நிலம் பிழைப்புக்கு இருந்தது. ரியல் எஸ்டேட் இல்லாத பிராமண‌ன் கிடைத்த அரசுப்பணியில் சேர்ந்து ஒட்டிக் கொண்டான்.அன்றைய தேதியில் வேறு விதமான‌ வேலையும் கிடையாது.அரசு இல்லாவிட்டால் ஆசிரியப்பணி.கோவிலில் கிடந்து உழன்ற‌ பிராமணன் பற்றிப் பேச வேண்டாம்.

    இப்படித்தான் அரசுப்பணி அவர்களுக்குப் பாரம்பரியமாகவே கிடைத்து இருந்தது அதன் மீதான கவர்ச்சி மற்றவர்களுக்கு ஆங்கிலேயர் காலத்தில்தான் அதிகம் ஆனது.

    அர‌சுப்பணிதான் அதிகாரம் த‌ருகிறது என்று அறிநத மற்ற வகுப்பார் தாமதித்தே
    அரசுப்பணியில் வரத் துவங்கினர்.அவர்கள் தமதித்ததால் பிராமணர் எண்ணிக்கை அரசுப் பணியில் கூடியிருக்கலாம்.

    ஆங்கில அரசுக்கு எதிராக பிராமண வகுப்பில் இருந்தே சுதந்திரப் போராடத்தில்
    ஈடுபடுவோர் அதிகரிக்க ஆரம்பித்தபோது, மற்ற வகுப்பாரை பிராம்மண‌ருக்கு எதிராகத் தூண்டிவிட்டது ஆங்கிலேயன்தான்.

    மீண்டும், 'நீ கலக்காட்டா உங்க‌ அப்பா கலக்கியிருப்பாரு' என்ற விவாதம் தான் செய்கிறீர்கள்.இன்று தமிழக அரசுப்பணியில் பிரமணர்களின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணிவிடலாம். ஆசிரியப் பணியில் சுத்தமாகவே பிராமண சமுதாயம் இல்லை.

    மத்திய அரசுப் பணிகளில் விரல் விட்டு எண்ணக் கூடிய பிராம்மண‌ர்கள் இருக்கலாம்.வடக்கே இன்றும் அரசுப்பணியை விரும்பாத பிற வகுப்பார் உள்ளனர். எனவே விரும்பக் கூடிய பிராமண‌னை வைத்துத்தான் நிர்வாகத்தை நடத்த வேண்டும் என்பதால் சில மத்திய அர்சு பணிகள் அவர்களுக்குக் கிடைத்து இருக்கலாம்.

    பொதுவில் இன்றைய நிலையில்,பிராமண இளைஞன் அரசுப்பணியை விரும்பவில்லை. அதில் சேரவும் இல்லை.அவன் விண்ணப்பித்தாலும் அவனைக் கண்டு கொள்வார் யாரும் இல்லை.

    அருள்கூர்ந்து தற்கால நிலையை கவனத்தில் கொள்க.

    ReplyDelete
  69. @Jayadev
    கீழ்க்கண்டதைத்தான் நானும் சொன்னேன்.

    //தங்க‌ளுக்கு என்று நிலம் இல்லாத பிராமணன் அன்றைய தேதியில் கிடைத்த அரசு வேலையைத்தான் வயிற்றுப் பாட்டுக்கு நம்பியிருந்தான்.மற்றவர்களூக்கு
    அப்படியல்ல.நிலம் பிழைப்புக்கு இருந்தது. ரியல் எஸ்டேட் இல்லாத பிராமண‌ன் கிடைத்த அரசுப்பணியில் சேர்ந்து ஒட்டிக் கொண்டான்.அன்றைய தேதியில் வேறு விதமான‌ வேலையும் கிடையாது.அரசு இல்லாவிட்டால் ஆசிரியப்பணி.கோவிலில் கிடந்து உழன்ற‌ பிராமணன் பற்றிப் பேச வேண்டாம். //

    நிலம் இருந்தவனுக்கு கல்வி கொடுத்தீர்கள். கல்வி மட்டும் இருந்தவனுக்கு நிலம் கொடுத்தீர்களா? இது சமூக நீதிக்கு எதிரானதில்லையா?

    ReplyDelete
  70. //இந்நிலையை மாற்ற வேண்டுமென்று அரசாங்கம் இட ஒதுக்கீடு போன்ற விடயங்களைக் கொண்டு வந்தது நல்ல விடயம்தான்.//

    ஒரு செய்தி தெரியுமா? முதல் முதலாகக்கொண்டு வரப்பட்ட இட ஒதுக்கீட்டில்
    பிராமணனுக்கும் இட ஒதுக்கீடு இருந்தது.1921ல் கொண்டுவரப்பட்ட கம்யூனல் ஜி ஓ வில்

    பிராமணரல்லாதோருக்கு:44%; பிராமண‌ர்களுக்கு 16%; முஸ்லிம்களுக்கு 16%;
    கிறித்துவர்கள்/ ஆங்கிலோ இந்தியர்களுக்கு 16%;ஷெட்யூலெட் வகுப்பாருக்கு 8%

    இது மெட்ராஸ் பிரெசிடென்சி எனப்படும் தென்னக 4 மாநிலங்களுக்கும் பொதுவானது.

    ReplyDelete
  71. Jayadev Das said...
    \\அம்பேத்கர்.ஆங்கிலமும் சம்ஸ்கிருதமும், சட்டமும் பிராமண‌ர்களின்
    தனி ஸ்பெஷாலிடி ஆக இருந்த கால கட்டத்தில் மூன்றையுமே கசடறக் கற்றார்.தன்னுடைய திறமையால் சாதித்தார். தன்னம்பிக்கையால் சாதித்தார்.\\ அதெப்படி சார் ஆங்கிலமும் சம்ஸ்கிருதமும், சட்டமும் பிராமண‌ர்களின் தனி ஸ்பெஷாலிடி ஆச்சு? மற்றவர்கள் முட்டாள்களா?//

    'மற்றவர்கள் முட்டாள்களா' என்று கேட்டு உங்கள் கருத்தை என் வாயில் போடப் பார்கிறீர்கள்.அவ்வாறு நான் ஏதும் சொல்லவில்லை.ஒவ்வொருவரும்
    ஏதோ ஒரு துறையில் சிறப்பானவர்களே.ஏட்டுப்படிப்பு இல்லாதவனிடம் கூட அனுபவப் படிப்பு இருக்கும் ஆகவே இல்லிடெரேட் கூட முட்டாள் கிடையாது.

    இயற்கையாகவே அறிவு சார்ந்த துறையில் விருப்பம் உள்ள பிராமணன்
    அவ்வப்போது மாறிவரும் சூழலில் தன்னுடைய வாழ்வாதாரத்திற்கு எந்தப் படிப்பு சரியாக இருக்கும் என்று புதிது புதிதாக சிந்தித்து சப்ஜெச்டை தேர்ந்தெடுப்பான். அன்றைய கால கட்டத்தில் ஆங்கிலம், சமஸ்கிருதம், சட்டம் அவனுக்கு உதவும் என்று அவற்றில் சிறப்பாகப்படித்தான். மற்ற வகுப்பார் அவற்றினை நாடவில்லை.ஆங்கிலேயனே வெள்ளி நாக்கு சீனிவாச சாஸ்திரி என்று புகழும் அளவுக்கு ஆங்கிலத்தில் புகழ் பெற்றார். இத்துறைகளில் பிராமணனை 'சேலஞ்சு' பண்ண ஆள் இல்லாமல் இருந்தபோது அம்பேத்கர் சாதித்தார் என்று அவரை புகழ்ந்தே கூறினேன்.

    அம்பேத்கர் அறிந்த அளவுக்கு சமஸ்கிருதம் பிராமணர்களுக்கே தெரியாது.
    இந்தியாவின் ஆட்சி மொழியாக, தொடர்பு மொழியாக சமஸ்கிருதம் இருக்க‌ட்டும் என்று அம்பேதகர் கூறியுள்ளார். அதற்கான மசோதாவை அவர் நாடாளுமன்றத்தில் கொண்டுவந்தார்.

    ReplyDelete
  72. பெரியாரின் கருத்துக்கான ஆதாரத்தை முன் வைத்ததற்கு நன்றி ஜெகன்னாத்.

    இன்று ரஷியாவே சொத்து பற்றிய தன் கருத்துக்களில் பல மாற்றம் கொண்டு வந்துள்ள நிலையில், குடும்ப அமைப்பு பற்றி பெரியார் என்ன கூறுவார், இப்போது இருந்தால்? அனுமானிக்க முடியவில்லை.

    ReplyDelete
  73. //நிலம் இருந்தவனுக்கு கல்வி கொடுத்தீர்கள். கல்வி மட்டும் இருந்தவனுக்கு நிலம் கொடுத்தீர்களா? இது சமூக நீதிக்கு எதிரானதில்லையா?//

    நிலம் இருந்தவன் கல்வியே இல்லாமல் இருந்தான் என்பது சரியல்ல.அவர்களும் கல்வி கற்று இருந்தார்கள்.

    'The beutiful tree'

    என்ற தரம்பாலின் புத்தகத்தை வாசியுங்கள்.வலைதளத்தில் கிடைக்கிறது.
    நமது திண்ணைப் பள்ளிகளின் எண்ணிக்கை, அதில் வாசித்தவர்களின் எண்ணிக்கை அதில் ஜாதிவாரி எண்ணிக்கை என்று ஆங்கிலேயனின் ஆவணங்களில் இருந்தே எடுத்துக்கொடுத்துள்ளார்.. அதுவும் தமிழகப் புள்ளி விவரம் தான் அதில் அதிகம்.


    அதேபோல குறைந்த எண்ணிக்கையிலேனும் பிரம்ம தேயமாக அரசர்களிடமிருந்து பெற்ற நிலத்தின் உடைமை இருந்த வேத பண்டிதர்கள் இருந்தார்கள்.

    நமது திண்ணைப் பள்ளிக் கூட மாடல் தான் காப்பியடிக்கப்பட்டு இங்கிலாந்தில்
    ஏழை மக்களுக்கு கல்விக்கூடம் திறக்கப்பட்டது என்பது தெரியுமா?

    அதன் பெயர் The Madras monitorial system.

    ReplyDelete
  74. \\ஆங்கிலமும் சம்ஸ்கிருதமும், சட்டமும் பிராமண‌ர்களின் தனி ஸ்பெ ஷாலிடி\\ நாங்கள் தான் படிப்பதற்கு, மற்றவர்கள் எல்லோரும் எங்களுக்கு அடி பணிந்து நடக்க வேண்டும். மக்களை ஏய்ப்பதற்காக சாதிப் பிராமணர்கள் பயன்படுத்திய ஸ்பெ ஷல் அஸ்திரம் இது. அதாவது இவர்கள் மட்டும் கற்க வேண்டும், மற்றவர்கள் பின் தங்கியிருக்க வேண்டும், அதே சமயத்தில் மற்றவர்கள் உழைப்பும் இவர்களுக்கு நோகாமல் வந்து சேர வேண்டும். இதையெல்லாம் ஒரே மூச்சில் செய்து முடிக்க அடுத்த ஆயுதமாக அவர்கள் கையிலெடுத்தது இறை நம்பிக்கை. பிராமணனுக்கு தானம் கொடுத்தால் சொர்க்கம் இல்லாவிட்டால் தெய்வக் குற்றம் இப்படியெல்லாம் கப்சா விட ஆரம்பித்தனர். இத்தோடு நில்லாமல் மற்ற குல பெண்கள் திருமணத்திற்கு முன்னரே இவர்கள் ஆசை தீரும் வரை இவர்கள் இச்சையைப் பூர்த்தி செய்து விட்டு கணவன் வீடு செல்ல வேண்டும் என்றெல்லாம் வரலாற்றில் உள்ளது. அப்படிச் செய்தால் அவளுக்கும் அவள் கணவனுக்கும் சொர்க்கம், இல்லாவிட்டால் தீராத நரகம் என்றெல்லாம் துர்போதனை செய்தனர். அடுத்து அரசுப் பணிகள் என்றால் மேலிருந்து கீழே வரை இவர்கள் தானே, யார் வந்தாலும் தகுதியற்றவனாக ஆக்கப் படுவான், முட்டாளாக இருந்தாலும் இவர்களுக்கு பணி கிடைக்கும். அப்புறம் இட ஒதுக்கீடு வந்தது, ஆனாலும் நாங்கள் அறிவிப்பு செய்தோம் யாரும் வரவில்லை என்று சொல்லிவிட்டு இவனுங்க ஆட்களையே போட்டுக் கொண்டார்கள், அதற்கப்புறம்தான் இடம் நிரம்பாவிடில் காலியாக வைக்கச் சொல்லி சட்டம் வந்தது. பெரியார், அம்பேத்கர் வரவில்லை என்றால் இன்றும் அவர்கள் 98% மற்றவர்கள் 2% என்ற நிலையில் மாற்றம் இருந்திருக்காது. இவர்களுக்கு நிலம் கொடுத்தாலும், இத்தனை வருடமும் அடுத்தவன் உழைப்பிலேயே வாழ்ந்துவிட்ட கோவில் மாடுகளான இவர்களால் உழைக்க முடியுமா என்ன?

    ReplyDelete
  75. //Jayadev Das said...
    அம்பேத்காராகவும் அப்துல் கலாமாகவும், ஆக எல்லோராலும் முடியாது சார்.//

    முடியாது என்பதே இல்லை.முயன்றால் முடியும்.

    சேலம் அரசினர் கல்லூரியில்தான் நான் படித்தேன்.அங்கே பேராசிரியர் ராமசாமி கவுண்டரின் சிலை உள்ளது. அக் கல்லூரியின் முன்னாள் முதல்வர்
    உலகிலேயே ஒரே ஒரு முனிசிபல் கல்லூரி அக் கல்லூரிதான்.பின்னர்தான் அது அரசுக் கல்லூரி ஆனது.

    ராமசாமி கவுண்டர் இன்டெர்மீடியெட் சேர்ந்தபோது வகுப்பு மாறி சமஸ்கிருத வகுப்புக்குப் போய் அமர்ந்துவிட்டார்.இவர் தோற்றத்தைப் பார்த்த ச‌ம‌ஸ்கிருத ஆசிரியர் 'தமிழ் வகுப்புகுப் போ'என்றாராம்.அவர் கூறியதையே சாலெஞ்சாக எடுத்துப் பெரிய சமஸ்கிருதப் பேராசிரியர் ஆனார். இதுதான் பாசிடிவ் ஆட்டிட்யூட்.

    சுவாமி சித்பவானந்தரின் கீதை உரைதான் இன்று பல பிராமணர்களின் இல்லங்களில் உள்ளது.அவ‌ர் மேலே சொன்ன பேராசிரியரின் வகுப்புதான்.

    15 ஆண்டுகளுக்கு முன்னர் வன்னியர் இளைஞன் ஒருவன் சுயமாக சமஸ்கிருதம் படித்துத் தேர்வுகள் எழுதினான். 'நமது பிராமணப் பையன்க‌ள் சமஸ்கிருதம் படிக்க‌ வ‌ரமாட்டேன் என்கிறார்கள் . ஒரு வன்னியர் பையன் படிக்கிறான் பாருங்கள்' என்றார் ஆசிரியர். அந்தப் பையனைச் சந்தித்தேன். அவன் ஒரு லாரி ஒட்டுனரின் மகன். +2 வில் நல்ல மதிப்பெண். இஞ்சினியரிங் சேர முடியாத நிலை. அவனுக்கு அண்ணா யுனிவெர்சிடியில் இடம் கிடைத்துப் படித்து இன்று சாஃட்வாரில் பெரிய ஆள். என்னால் முடிந்த பொருள் உதவி செய்தேன்.அவனுடைய சமஸ்கிருத ஆர்வம் அவனுக்கு வாழ்க்கைக்கே வழி காட்டியது.

    இன்று ஓரியென்டல் பள்ளிகளில் பிராமணர்கள் சேர்வது குறைவு. அவை அரசு மானியம் பெரும் கல்வி நிலையங்கள் ஆதலால் இலவசக்கல்வி. எனவே பிராமணர்கள் பிரைவேட் பள்ளிகளுக்குச் சென்று விடுகின்றனர்.ஓரியென்டல் பள்ளிகளில் சமஸ்கிருதம் ஒரு பாடம். பெரும்பாலும் ஏழைப் பிள்ளைகளே ஓரியென்டல் பள்ளிகளில் சேர்கின்றனர்.சென்னை அகோபில மடம் ஓரியென்டல் பள்ளியில் படிப்பவர்களில் பலரும் அருகில் உள்ள சேரிகளில் இருந்து வருபவர்களே. அவர்கள் சமஸ்கிருதம் கற்கின்றனர்.

    சமஸ்கிருதக் கல்வி பற்றிய பார்வை பிராமணர், பிராமணர் அல்லாதோர் இருவரிடமும் மாறியுள்ளது.

    ReplyDelete
  76. Jayadev Das said...
    \\ஆங்கிலமும் சம்ஸ்கிருதமும், சட்டமும் பிராமண‌ர்களின் தனி ஸ்பெ ஷாலிடி\\ நாங்கள் தான் படிப்பதற்கு, மற்றவர்கள் எல்லோரும் எங்களுக்கு அடி பணிந்து நடக்க வேண்டும். மக்களை ஏய்ப்பதற்காக சாதிப் பிராமணர்கள் பயன்படுத்திய ஸ்பெ ஷல் அஸ்திரம் இது. அதாவது இவர்கள் மட்டும் கற்க வேண்டும், மற்றவர்கள் பின் தங்கியிருக்க வேண்டும், அதே சமயத்தில் மற்றவர்கள் உழைப்பும் இவர்களுக்கு நோகாமல் வந்து சேர வேண்டும். இதையெல்லாம் ஒரே மூச்சில் செய்து முடிக்க அடுத்த ஆயுதமாக அவர்கள் கையிலெடுத்தது இறை நம்பிக்கை. பிராமணனுக்கு தானம் கொடுத்தால் சொர்க்கம் இல்லாவிட்டால் தெய்வக் குற்றம் இப்படியெல்லாம் கப்சா விட ஆரம்பித்தனர். இத்தோடு நில்லாமல் மற்ற குல பெண்கள் திருமணத்திற்கு முன்னரே இவர்கள் ஆசை தீரும் வரை இவர்கள் இச்சையைப் பூர்த்தி செய்து விட்டு கணவன் வீடு செல்ல வேண்டும் என்றெல்லாம் வரலாற்றில் உள்ளது. அப்படிச் செய்தால் அவளுக்கும் அவள் கணவனுக்கும் சொர்க்கம், இல்லாவிட்டால் தீராத நரகம் என்றெல்லாம் துர்போதனை செய்தனர். அடுத்து அரசுப் பணிகள் என்றால் மேலிருந்து கீழே வரை இவர்கள் தானே, யார் வந்தாலும் தகுதியற்றவனாக ஆக்கப் படுவான், முட்டாளாக இருந்தாலும் இவர்களுக்கு பணி கிடைக்கும். அப்புறம் இட ஒதுக்கீடு வந்தது, ஆனாலும் நாங்கள் அறிவிப்பு செய்தோம் யாரும் வரவில்லை என்று சொல்லிவிட்டு இவனுங்க ஆட்களையே போட்டுக் கொண்டார்கள், அதற்கப்புறம்தான் இடம் நிரம்பாவிடில் காலியாக வைக்கச் சொல்லி சட்டம் வந்தது. பெரியார், அம்பேத்கர் வரவில்லை என்றால் இன்றும் அவர்கள் 98% மற்றவர்கள் 2% என்ற நிலையில் மாற்றம் இருந்திருக்காது. இவர்களுக்கு நிலம் கொடுத்தாலும், இத்தனை வருடமும் அடுத்தவன் உழைப்பிலேயே வாழ்ந்துவிட்ட கோவில் மாடுகளான இவர்களால் உழைக்க முடியுமா என்ன?//

    திடீரென பாதை மாறிப் பேச ஆரம்பித்து விட்டிர்கள்.கோபத்தில் சொல்லும் வார்த்தைகள். இவையெல்லாம் நீங்கள் முன்னர் கூறிய கருத்துக்கள் எல்லாவற்றையும் மறுப்பதாக உள்ளது.

    ஒரு வாதத்தில் எப்படியாவது வெற்றி பெறவேண்டும் என்ற ஆசை எப்போது வருகிறதோ அப்போது எந்த அளவுக்கும் நாம் கீழே இறங்கி விடுவோம்.

    எனக்கு இந்த வாதத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசையில்லை.
    உங்களுடைய கடைசிப் பின்னூட்டம் பதிலுக்குத் தகுதி இல்லாதது. எனவே பதில் அளிக்காமல் விலகுகிறேன்.

    நன்றி.

    ReplyDelete
  77. \\உங்களுடைய கடைசிப் பின்னூட்டம் பதிலுக்குத் தகுதி இல்லாதது\\ அது உங்கள் விருப்பம்.
    சாதிப் பிராமணர்கள் எந்த அளவுக்கு மற்ற இனத்தினரை தங்கள் சுய லாபத்துக்காக துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளார்கள், முன்னேற விடாமல் மதத்தின் பெயரால் அடக்கி வந்தார்கள் என்பது ஊரறிந்த விஷயம். [இது உங்கள் பின்னூட்டத்திலேயே இருக்கிறது.
    \\இவர் தோற்றத்தைப் பார்த்த ச‌ம‌ஸ்கிருத ஆசிரியர் 'தமிழ் வகுப்புகுப் போ'என்றாராம்.\\

    \\ஆங்கிலமும் சம்ஸ்கிருதமும், சட்டமும் பிராமண‌ர்களின் தனி ஸ்பெ ஷாலிடி\\பிராமணன் மட்டுமே சமஸ்க்ருதத்தை, ஆங்கிலத்தை, சட்டத்தைக் கற்கத் தகுந்தவன் என்ற ஆதிக்க வெறியின் வெளிப்பாடே இது.]

    அப்படி இல்லா விட்டால் பெரியார் அவர்களுக்கு எதிராக போராடியிருக்க மாட்டார். இவற்றில் ஓரளவுக்கு உண்மை இருக்கிறது என்று ஒப்புக் கொள்ளும் நேர்மை கூட உங்களிடத்தில் இல்லை, ஆனால் பிராமணர்கள் ஒன்றுமே அறியாத அப்பாவிகள் என்பது போல ஒரு சாயம் பூசிய சரக்கை கண்மூடி மற்றவர்கள் வாங்க வேண்டுமென்று நினைக்கிறீர்கள். ஆனால் அது உண்மை அல்ல என்பதால் ஏற்பதற்கில்லை. எனது பின்னூட்டத்தில் எதையாவது ஒரு விஷயத்தைக் காட்டி அது உண்மைக்குப் புறம்பானது என்று நிரூபியுங்கள், நான் மன்னிப்பு கேட்கத் தயார். வேதங்கள் புராணங்கள், இராமானுஜர் போன்ற ஆச்சாரியர்கள் எல்லாம் பின்பற்றத் தகுந்தவைகளே. ஆனால் தகுதியே இல்லாமல் தன்னை பிராமணன் , என் குலத்தில் பிறந்தவன் மட்டுமே பிராமணன் என்றும், என்று சொல்லிக் கொண்டு தன்னை அடையாளம் கடு கொள்ள உடலில் பட்டை, நாமம் என்றும் போட்டுக் கொண்டும் ஏமாற்றி ஏய்த்துப் பிழைக்கும் கயவர்களை மட்டுமே நமக்கு விருபத் தகாதவர்கள். வணக்கம்.

    ReplyDelete
  78. @kmr.krishnan ஐயா, விவாதத்தில் எதிர்தரப்பு கொஞ்சம் சூடாகப் பேசி விட்டது தான்..ஆனாலும் நீங்கள் தொடர்ந்து விவாதிக்க வேண்டும் என்பதே எமது விருப்பம். படிப்போரும் அதையே விரும்புவர் என்று நம்புகிறேன்..தொடர்ந்து கருத்திடுங்கள்.

    ReplyDelete
  79. திரு. செங்கோவியின் விருப்பப்படி விவாதத்தைத் தொடர்கிறேன்.


    \\ஆங்கிலமும் சம்ஸ்கிருதமும், சட்டமும் பிராமண‌ர்களின் தனி ஸ்பெ ஷாலிடி\\நாங்கள் தான் படிப்பதற்கு, மற்றவர்கள் எல்லோரும் எங்களுக்கு அடி பணிந்துநடக்க வேண்டும். மக்களை ஏய்ப்பதற்காக சாதிப் பிராமணர்கள் பயன்படுத்திய ஸ்பெஷல் அஸ்திரம் இது. அதாவது இவர்கள் மட்டும் கற்க வேண்டும், மற்றவர்கள் பின் தங்கியிருக்க வேண்டும்///

    1.ஆங்கிலம், சமஸ்கிருதம், சட்டம் இவற்றில் பிராமணர்கள் க‌வனம்
    எடுத்துகருத்தூன்றிப் படித்தார்கள். என்று நான் சொல்ல 'ஸ்பெஷாலிட்டி'
    என்ற சொல்லைப் பயன்படுத்தியதை திரித்துக் கூறுகிறார். சரி. அந்தச்சொல்லை திரும்ப வங்கிக்கொண்டு 'ஸ்பெஷலைஸ்' என்று வாசிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

    ஒரு சப்ஜெக்டை பிராமணன் 'ஸ்பெஷலைஸ்' செய்து படிக்கிறான்.தாங்களும் படிக்கமுன்வரும் மற்றவர்களை பிராமணன் தடுத்து இருந்தால் அம்பேத்கர் போன்றவர்கள் பிராமணன் படித்த அதே படிப்பில் எப்படி முன்னுக்கு வந்திருக்க முடியும்? வேண்டுமானால் சமஸ்கிருதக் கல்வியை பிறருக்குப் பிராமணன் தடுத்து இருக்க வாய்ப்பு உண்டு.அதையே விரும்பிக் கற்ற ஒரு தாழ்த்தப்பட்டவரான அம்பேதகருக்கு புனா பிராமணர்கள் அளித்துள்ளார்கள்.ஆங்கிலத்தையும்,சட்டத்தையும் ஏனையோர் படிக்க பிராமணன் தடை செய்ய‌ ஆங்கிலேயர் காலத்தில்
    முடியாது.அவனுக்கு அதற்கு எந்த அதிகாரமும் கிடையாது. மேலும் அந்தப்
    படிப்பு இந்தியர்கள் அனைவருக்கும் புதிதாக வந்த படிப்பு அப்போது.
    இப்போதைய சாஃப்ட்வேர் கல்வி போல அப்போது ஆங்கிலம், சட்டம்.அதனை தன் வாழ்வாதாரத்திற்கு எதிர்காலத்தில் உதவக்கூடியது என்பதைத் தொலை நோக்கோடு அறிந்து அதனைப் படிக்க முன்னோடியானான்.

    ஆங்கிலக் கல்வியை பிராமணன் தூக்கிப் பிடித்ததனால்
    எல்லோரும் அதில் கவனம் செலுத்தினார்கள். சுதந்திரத்திற்குப் பின்னரும்,
    ஆங்கில மொழியை வடவர் ஒழித்து விட்டு இந்தியைப் புகுத்த நினைத்தபோதும்
    ஆங்கிலத்திற்கு ஆதரவு காண்பித்தான் தமிழகப் பிராமணன்.

    இந்தியை தன்ஆட்சிக்காலத்தில் புகுத்திய ராஜாஜியே, இந்தியாவின் இணைப்பு மொழிஆங்கிலமே என்று தன் பழைய கருத்தை மாற்றிக் கூறினார்.'பிராந்திய மொழிகளை மேம்படுத்துங்கள். ஆங்கிலத்தைக் கைவிடுங்கள்.அதுதான் நாட்டுப்பற்று உள்ளவர்கள் செயல்' என்று பிராச்சம் செய்த வடவர்களுக்கு ராஜாஜிதான் 'ஆங்கிலத்தை ஏன் கைவிடக்கூடாது' என்று காரண காரியங்களுடன்விளக்கினார்.ஒரு வகையில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் கழகங்கள் நடத்தியதற்கு, ராஜாஜி உருவாக்கிய கருத்தாக்கம் ஒரு முக்கிய
    'இன்புட்'.இன்று தமிழ் வழிக்கல்வி மட்டும் என்று இருந்திருந்தால்,
    ஆங்கிலம்புறக்கணிக்கப்பட்டிருந்தால் நாம் சாஃட்வேரில் உலகளாவிய சாதனைகளைச்செய்துஇருக்க முடியுமா? இந்தியைப் புறக்கணித்ததால் வடக்கே இப்போதுதமிழர்களல் ஒன்றும் செய்ய முடியவில்லை. இந்தியைக் கற்ற தெலுங்க‌ர்களும்,மலையாளிகளும் வடக்கே சென்று நன்கு பிழைக்கிறார்கள்.

    ReplyDelete
  80. 2.//அதே சமயத்தில் மற்றவர்கள் உழைப்பும் இவர்களுக்கு நோகாமல் வந்து சேர
    வேண்டும். இதையெல்லாம் ஒரே மூச்சில் செய்து முடிக்க அடுத்த ஆயுதமாக
    அவர்கள் கையிலெடுத்தது இறை நம்பிக்கை. பிராமணனுக்கு தானம் கொடுத்தால்
    சொர்க்கம் இல்லாவிட்டால் தெய்வக் குற்றம் இப்படியெல்லாம் கப்சா விட
    ஆரம்பித்தனர்.//

    நீங்கள் சொல்வது சரி என்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொண்டால், இந்தக்
    கப்சாவைப் பற்றி பெரியாரும் மற்றவர்களும் தொடர்ந்து பல்லாண்டுகள்
    பிராசாரம் செய்தாலும், பெரியார் பேசுவதைக் கேட்டுக் கைதட்டிவிட்டு நேரெ
    கோவிலுக்கு ஏன் போகிறான் தமிழன்?

    'நீங்கள் இறை நம்பிக்கை வைத்துக்கொண்டுதான் ஆக வேண்டும்' என்று ஒரு
    தமிழனை அல்லது இந்துவை யார் கட்டுப் படுத்துகிறார்கள்?

    பிராமணனுக்கு தானம் கொடுக்காவிட்டல்,அதனை கொடுத்துதான் ஆக வேண்டும்,
    வரிதண்டல் போல, என்று ஏதாவது சட்டம் உள்ளதா? அதனை வசூலிக்க பிராமண‌னுக்கு
    என்ன அரசியல் அதிகாரம் உள்ளது?

    இன்றும் பிராமண‌னுக்கு தானம் செய்ய வேண்டும் என்ற தகவல் கூட
    தெரிவிக்கப்படாத ஏனையோர் குடும்பங்கள் அதிகம்.பலர் தங்கள் குல தெய்வ
    வழிபாடு செய்து கொண்டு, கிராம தேவதை வழிபாடு செய்து கொண்டு, பிராமணன்
    பக்கமே வராமல் இருக்கிறார்கள்.இவர்கள் தான் எண்ணிக்கையில் அதிகம்.

    வேதத்தை கசடறக்கற்ற பிராமாணர்கள் சடங்குகள் செய்ய வருவதில்லை.

    சடங்கு செய்வித்து தானத்திற்குக் கை நீட்டுபவன் வேதத்தை அந்த
    அளவுக்குத்தான் கற்றிருப்பான். அவனும் கூட தங்களுடைய‌ வகுப்பாருக்கு
    தெவசம் ,சாவு காரியங்கள், திருமணம், பூஜை போன்றாவற்றை செய்விக்கிறான்.பிற
    ஜாதியாருக்கு அவன் சடங்கு செய்ய போவதில்லை.

    பிற சாதியாருக்கு சடங்கு செய்விக்கும் பிராமணன் சுத்தமாக வேத பாட
    சாலைப்பக்கம் தலை வைத்துப் படுக்காதவன்.ஒரு சில ஸ்தோத்திர மந்திரங்களை
    மட்டும் சொல்லி ஏதோ செய்வான்.

    நான் ஏற்கனவே கூறியபடி எல்லா பிராமணர்களுமே வேதப் பிராமணர்கள் அல்ல.
    வேதப் பிராமண்ர்களின் உறவினர்கள் அவ்வளவுதான்.

    சடங்கு சம்பிராதயம் என்று நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று யாராலும்
    கட்டுப்படுத்த முடியாது.கடைப் பிடிப்பதும் கடைப்பிடிக்காமல் இருப்பதும்
    உங்கள் 'சாய்ஸ்'.

    அவன் கப்சா உட்டால் அத‌னை நீங்கள் நம்பவேண்டுமா? கப்சா விடுபவனிடம்
    இருந்து விலகுங்கள்.அப்படித்தான் பெருவாரியான தமிழர்கள் பெரியார்
    வருவதற்கு முன்பிருந்தே உள்ள‌னர்.

    ReplyDelete
  81. //இத்தோடு நில்லாமல் மற்ற குல பெண்கள் திருமணத்திற்கு முன்னரே இவர்கள்
    ஆசை தீரும் வரை இவர்கள் இச்சையைப் பூர்த்தி செய்து விட்டு கணவன் வீடு
    செல்ல வேண்டும் என்றெல்லாம் வரலாற்றில் உள்ளது.//

    வரலாறு என்பது அவ்வப் போது உள்ள அரசுகள் எழுதுவதுதான். நீங்கள் சொல்லும்
    வரலாறு உங்களுக்கு உண்மைதான் எனில் நீங்கள் அப்படியே நம்பலாம்.

    மற்ற குலமெல்லாம் அவ்வளவு வெள்ளந்தியாக இருந்தது என்கிறீர்களா? அதில் ஒரு
    பெண் கூடவா இந்தக்க் கொடுமையை நிறுத்தச் சொல்லி குரல் கொடுக்க வில்லை?
    வீரம் செறிந்த பாரம்பரியம் உள்ள பிற குல‌ ஆண்கள் தன் குலப் பெண்களை
    விட்டுக் கொடுத்து விட்டு சும்மா வேடிக்கையா பார்த்தார்கள்?

    சாதாரணமாகப் போர்களே பெண்கள் மானம் காக்க‌வே நடைபெறும்.ராமாயணம் சீதை
    மானத்துக்காக.பாரதம் திரெள‌பதி மானம் காக்க.அப்படியிருக்கும் போது கையில்
    எந்த அயுதமும் இல்லாத பிராமணனிட‌ம் தன் குலப்பெண்களை விட்டுக் கொடுத்த
    ஆண்களை என்ன செய்யலாம்?

    இப்படிப்பட்ட அக்கிரமம் செய்த பிராமணன் எப்படி இன்றுவரை பலரிடம் நல்ல
    பெயர் எடுத்து இருந்து வருகிறான்? நீங்கள் சொல்வது போல் செய்து இருந்தால்
    அவனுடைய செயலில் உள்ள எதிர்மறை எண்ணங்களே அவனை அழித்து இருக்கும்."தீதும்
    நன்றும் பிறர் தர வாரா"

    பல சொல்லத் தோன்றுகிறது.கெள‌ரவம் கருதி இதனை இத்துடன் விட்டுவிடுகிறேன்.

    //அப்படிச் செய்தால் அவளுக்கும் அவள் கணவனுக்கும் சொர்க்கம்,
    இல்லாவிட்டால் தீராத நரகம் என்றெல்லாம் துர்போதனை செய்தனர்.//

    மீண்டும் அதேதான்.நீங்கள் சொவதைப் பார்த்தால் பெரியார் பிறக்கும் வரை
    எல்லா ஜாதியனரும் முட்டாள்தனமாகத் தன் மனைவியரை பிராமணனின்வெறும்
    வார்த்தைக்கே பயந்து தன் குலப்பெண்களை கைவிட்டு
    விட்டனரா?வாளுக்கும்,வேலுக்கும், அம்புக்கும் அஞசாத வீரப் பாரம்பரியம்
    உடையவர்கள்
    வெறும் வாய்ச் சொல்லுக்கு அஞ்சிவிட்டனரா?என்ன கொடுமையடா இது?

    அப்போ இங்கே கற்பே இல்லையா?அதை நம் முன்னோர்கள் காற்றிலா பறக்க விட்டு விட்டார்கள்?

    நல்ல வரலாறுதான் போங்கள். உங்க‌ள் சுய மரியாதை கருதியாவது இதனை மாற்றி
    எழுதுங்கள். இல்லாவிட்டால் இந்த அயோக்கிய பிராமணர்களின் வாரிசு
    நாமெல்லாம் என்றாகிவிடும்.

    பிறர் மீது சேறு வாரி இறைத்தால் நமது கைகளிலும் ஆடையிலும் சேறு படுவது
    தவிர்க்க முடியாது.அப்படி சேறாகியிருக்கும் நீங்கள் சிகிக்கிரம் சுத்தம்
    செய்துகொள்ளுங்கள்.

    ReplyDelete
  82. //அப்புறம் இட ஒதுக்கீடு வந்தது, ஆனாலும் நாங்கள் அறிவிப்பு செய்தோம்
    யாரும் வரவில்லை என்று சொல்லிவிட்டு இவனுங்க ஆட்களையே போட்டுக்
    கொண்டார்கள், அதற்கப்புறம்தான் இடம் நிரம்பாவிடில் காலியாக வைக்கச்
    சொல்லி சட்டம் வந்தது.//

    1967ல் தி மு க வெற்றி பெற்றுத் தமிழகத்தில் ஆட்சி அமைத்தது.அப்போது
    சத்தியவாணி முத்து என்ற பெண், தலித் வகுப்பினைச் சேர்ந்தவர், அமைச்சராக‌
    இருந்தார்.அரசுப் பணிகளில் இடம் நிரப்ப வேண்டிய சூழல் வரும் போதெல்லாம்,
    ஆள் எடுக்கும் பணியில் அப்போது அரசுப் பணிகளிலிருந்த பிராமண அதிகாரிகளையே
    அந்தப் பணியைச் செய்ய நியமிக்க வேண்டும் என்று மந்திரிசபைக் கூட்டத்தில்
    வலியுறுத்தினார்.இதை பத்திரிகையாளர் கூட்டத்திலும் வந்து கூறினார்.காரணம்
    கேட்டபோது,"பிராமண அதிகாரிகள்தான் இட ஒதுக்கீட்டை சரியாக அமல்
    படுத்துவார்கள்;என் அனுபவத்தில் அவர்கள் தான் நியாய உணர்வுடன் நடந்து
    கொள்கிறார்கள்"
    என்று கூறினார்.

    மேலும் இதைப் பற்றிக் கூறுவேன். நீங்கள் எது சொன்னாலும் 'கன்வின்ஸ்'
    ஆகும் ம‌ன நிலையில் இல்லாததால் என் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.


    //இவர்களுக்கு நிலம் கொடுத்தாலும், இத்தனை வருடமும் அடுத்தவன்
    உழைப்பிலேயே வாழ்ந்துவிட்ட கோவில் மாடுகளான இவர்களால் உழைக்க முடியுமா
    என்ன?//

    சர்வமானியம் என்று அந்தணர்களுக்கு அரசர்கள் அளித்த நிலம் சொற்ப
    எண்ணிக்கையில் பிராமண நில உடைமையாளர்களை உருவாக்கியது.இன்றும் கூட தஞ்சை,
    நெல்லை மாவட்டங்களில் அந்த நிலங்களை தங்கள் வசம் வைத்துக் கொண்டு நேரடிப்
    பண்ணையம் செய்யும் பிராமண‌ர்கள் மிகச் சிலர் உள்ளனர்.அவர்கள் எல்லாம்
    விவசாய வேலை தெரிந்தவர்கள் மட்டும் இல்லை, தேவைப்பட்டால் நிலத்தில்
    இறங்கி வேலை செய்யும் திறன் உள்ளவர்களே.

    தஞ்சை மாவட்டத்தில் பெரு நில உடைமையாளர்கள் யாரும் தாங்கள் நிலத்தில்
    இறங்காதவர்களே.நிலத்தில் நேரடியாக உழைப்பவர்கள் தலித் மக்களே தவிர, மற்ற
    ஆதிக்க சாதியினர் கிடையாது.

    தலித் மக்களினைக் காட்டிலும் தங்களை உயர் சாதியினராக நினைக்கும் பி சி
    நிலமற்ற ஏழை விவசாயி கூடத் தான் குத்தகைக்கு எடுத்துள்ள நிலத்தில் வேலை
    செய்ய தலித் தொழிலாளியைத்தான் கூலிக்கு அழைப்பார்.தான் களத்துமேட்டில்
    நின்று மேற்பார்வை பார்ப்பார். இதுதான் நடைமுறை.

    ReplyDelete
  83. //அப்படி இல்லா விட்டால் பெரியார் அவர்களுக்கு எதிராக போராடியிருக்க மாட்டார்.//

    பெரியாருக்கு திருச்சி ,ஸ்ரீரங்கத்தில் நிறைய வீடுகள் சொந்தமாக
    இருந்தன‌.அவற்றை வாடகைக்குக் கொடுப்பார். நிறைய வீடுகளை
    பிராமணர்களுக்குத்தான் வாடகைக்குக் கொடுத்தார்.'அவர்கள் தான் வீட்டினை
    சுத்தமாக வைத்துக் கொள்வார்கள்.வாட‌கையை ஒழுங்காகச் சொன்ன தேதியில்
    கொடுப்பார்கள். சண்டை பிடிக்க மாட்டார்கள்.சட்டப் பிரச்சனையை உருவாக்க
    மாட்டார்கள்'என்று கூறியுள்ளார்.

    'நான் பிராமணனை எதிர்க்கவில்லை. பிராமணத்துவத்தைத்தான்
    எதிர்க்கிறேன்'என்றார் பெரியார். 'பிராமண‌த்துவம் எல்லா
    சாதியினரிடாமும்' உள்ளது என்றார்.


    //இவற்றில் ஓரளவுக்கு உண்மை இருக்கிறது என்று ஒப்புக் கொள்ளும் நேர்மை
    கூட உங்களிடத்தில் இல்லை//

    பெரியார்தான் ராஜாஜி துவங்கிய காந்தி ஆசிரமத்திற்கு முதல் கையெழுத்து
    இட்டவர்.அந்தக் காந்தி ஆசிரமத்தில் என் தந்தையார் 41 வருடங்கள்
    பணியாற்றியவர். சுதந்திரப்போராட்டத் தியாகி.சாதி வித்தியாசம் பார்க்காத
    பிராமணன் நான்.என் அப்பாவின் கொடை அது எனக்கு. உங்களைவிட பெரியாரைப்பற்றி
    நேரிலும், பெரியார் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த பெரியவர்களிடம்
    அவரைப்பற்றி கேட்டும் படித்தும் அறிந்தவன் நான்.நான் 1949ல்
    பிறந்தவன்.என் 24 வயதில்தான் பெரியார் மறைந்தார். அதனால் நானே அவருடைய
    செயல்பாடுகளை, பேச்சுக்களை, எழுத்துக்களை நன்கு அறிந்தவன். பெரியாரை
    எதில் ஒப்புக்கொள்ள வேண்டும், எதில் மறுக்க வேண்டும் என்று நன்கு
    அறிந்தவன்.

    என் நேர்மையைப் பற்றி என் எழுத்துக்கள் பேசும். நியாய உணர்வு உள்ளவர்கள்
    அதனைப் புரிந்து கொள்வார்கள்.புரிந்து கொள்ளும் குழுவில் நீங்கள் இல்லை.

    ReplyDelete
  84. //ஆனால் பிராமணர்கள் ஒன்றுமே அறியாத அப்பாவிகள் என்பது போல ஒரு சாயம்
    பூசிய சரக்கை கண்மூடி மற்றவர்கள் வாங்க வேண்டுமென்று நினைக்கிறீர்கள்.
    ஆனால் அது உண்மை அல்ல என்பதால் ஏற்பதற்கில்லை.//

    நீங்கள் ஏற்க வேண்டும் என்று நான் எப்படி கேட்க முடியும்? உங்களுக்குப்
    பதில் சொல்வதுடன் என் பணி முடிகிறது.

    என் பதில்களில் எந்தச் சாயமும் இல்லை எல்லாம் வெள்ளை நிறத்தில்தான்
    உள்ளன.நீங்கள் ஏதாவது கலர் கண்ணாடி அணிந்திருந்தால் அதனைக்
    கழட்டிவிட்டுப் பார்க்கவும். நான் எதுவும் விற்க வரவில்லை.செங்கோவி
    துவங்கிய ஒரு சமூகப் பிரச்சனையில் என் கருத்தை வைக்கிறேன்.விற்க அல்ல.
    இது ஒரு கோணம் என்பதைக் காட்ட.

    //எனது பின்னூட்டத்தில் எதையாவது ஒரு விஷயத்தைக் காட்டி அது உண்மைக்குப்
    புறம்பானது என்று நிரூபியுங்கள், நான் மன்னிப்பு கேட்கத் தயார்//

    நீங்கள் எழுப்பியுள்ள அனைத்திற்கும் பதில் சொல்லியிருக்கிறேன் என்றே
    நினைக்கிறேன்.நீங்கள் பிரச்சனையின் விளிம்பைக் கூடத் தொடவில்லை.ஒரு
    பக்கம் கிருஷ்ணர் சொன்ன வர்ணமுறை இன்னும் உள்ளது என்கிறீர்கள். 'எல்லா
    சாதியினரும் எந்த வேலையையும் செய்யலாம் என்று ஆகிவிட்ட பிறகு
    வர்ணப்படி நாம் அனைவரும் சூத்திரர்களே' என்ற செங்கோவியின் கருத்தை நான்
    தொடவே இல்லை.நீங்கள் தான் கிருஷ்ணர் சொன்ன வர்ணம் இன்னும் உள்ளது என்று
    வாதிட்டீர்கள்.

    இன்று உள்ள ரத்த சாதி முறை இருக்கட்டும் என்றீர்கள்;ஆக வர்ண பேதம், சாதி
    பேதம் இரண்டுமே உள்ள‌து.இருக்க வேண்டும்.ஆனால் பிராமணன் மட்டும்
    இருக்ககூடாது. ஏனென்றால் உங்கள் பிரோமோஷனில் யாரோ ஒரு பிராமணன் கை வைத்து
    விட்டதாக யாரோ உங்களிடம் போட்டுக் கொடுத்து விட்டதால்!நல்ல சமூகப்
    பிரக்ஞை உங்களுக்கு!

    /// வேதங்கள் புராணங்கள், இராமானுஜர் போன்ற ஆச்சாரியர்கள் எல்லாம்
    பின்பற்றத் தகுந்தவைகளே. ஆனால் தகுதியே இல்லாமல் தன்னை பிராமணன் , என்
    குலத்தில் பிறந்தவன் மட்டுமே பிராமணன் என்றும், என்று சொல்லிக் கொண்டு
    தன்னை அடையாளம் கடு கொள்ள உடலில் பட்டை, நாமம் என்றும் போட்டுக் கொண்டும்
    ஏமாற்றி ஏய்த்துப் பிழைக்கும் கயவர்களை மட்டுமே நமக்கு விருபத்
    தகாதவர்கள். வணக்கம்.///

    நல்ல குழப்பம். நீங்கள் சொல்வது உங்களுக்கே புரிந்தால் சரி.எனக்குப்
    புரியவில்லை.பட்டை, நாமம் போட்டுக் கொள்ளாத கயவர்களையே விரும்புங்கள்.
    எனக்கு ஆட்சேபணை கிடையாது.

    உங்கள் வணக்கத்திற்கு ஒரு நமஸ்காரம்!

    ReplyDelete
  85. மேலும் விவாதித்து என்னுடைய நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. உம்முடைய பின்னூட்டங்கள் இந்த பிளாக்குக்கு எதிர்காலத்திலும் தேவைப் படும் என்பதாலும், விவாதித்து உம்மை காயப் படுத்த விரும்பாததாலும் இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன். Bye.

    ReplyDelete
  86. இந்த பிளாகில் என் கருத்துக்கள் எதிர்காலத்தில் தேவைப்படும் என்ற கருத்து மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.யார் என் பின்னூட்டங்களைப் படிக்கிறார்களோ இல்லையோ, ஜெயதேவதாஸ் கட்டாயம் படிப்பார். அவர் படிக்கிறார் என்பதாலேயே கவனத்துடன் என் கருத்துக்களை முன் வைப்பேன்.

    இந்த விவாதத்தையே நாம் இன்னும் தொடரலாம். மனம் புண் படாவண்ணம்
    நல்ல கருத்துக்களைச் சொல்லலாம். ஒரு வேளை ஏதோ சொற்கள் தவறி விழுந்துவிட்டாலும், நான் புண்படாமல் இருந்து கொள்கிறேன்.நியாயமான கருத்துக்களை கட்டாயம் ஏற்றுக் கொள்வேன். என‌வே மேற்கொண்டு தொட்ருங்கள்.

    ReplyDelete
  87. நான் பிராமணர்களுக்காகப் பரிந்து பேசியதால் பிராமணர்கள் எது செய்தாலும் சரி என்று கண் மூடிதனமாக ஆதரிக்க மாட்டேன். அவர்களை அவர்களுடைய தளத்தில் தேவையானால் கண்டிப்பேன்.'இனத் துரோகி' என்று அங்கே பட்டம் வாங்குவேன்.இங்கே 'ஆஷாடபூதி' என்று பட்டம் வாங்குவேன்.சமூக‌மாற்றம், ஒற்றுமை கொண்டு வர நினைக்கும் எல்லோரும் இப்படிப் பட்ட பட்டங்களை வாங்கித்தான் ஆக வேண்டும்.

    நாம் எவ்வளவு தான் அறிவைப் பயன் படுத்திப் பேசினாலும், விவாதித்தாலும், எது உண்மையோ அதுதான் நாள் பட நிற்கும்.சாதியின் தேவை இங்கே இன்னும் இருக்கிறது போல.இன்னும் ஒரு நூற்றாண்டு அதன் வீச்சு இருக்கலாம். இருந்து விட்டுப் போகட்டும்.

    எதுவும் முழுவதும் அழிவதில்லை. ஒன்று மற்றொன்றாக உருமாற்றமே அடைகிறது.

    என் தந்தையார் மறைந்த காந்தி ஆசிரமம் கிருஷ்ணன் அவர்களின் முற்றுப்பெறாத (நாட்குறிப்பு)தன் வரலாறு இந்தப் பதிவில் காண்க.
    http://gandhiashramkrishnan.blogspot.com/

    ReplyDelete
  88. இந்த இரண்டாவது பகுதி ஆக்கம் கீழ்க்கண்ட கட்டுரையை சுட்டிய பெண்மணிக்குநீங்கள் அளித்த பதிலாக அமைந்துள்ளது.

    http://bharathipayilagam.blogspot.com/2011/09/blog-post.html

    அந்த பிளாக் நடத்துபவர் திரு தஞ்சாவூரான் 76 வ்யது இளைஞர்.அவர் பிராமணர் தான். அந்த நீ.............ண்ட கட்டுரையை எழுதிய அன்பர் தமிழ் விரும்பி பிராமண வகுப்பினர் அல்ல.பின்னூட்டம் இட்ட உமா என்ற பெண்மணி பிராமண வகுப்பினர்.

    மேலும் ஒரு பின்னூட்டம் இட்ட சூர்ய‌ஜீவா இந்த உங்கள் பதிவுக்கு "அவருக்குப் புரியாது என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது" என்று ஒற்றை வரியில் இங்கே பின்னூட்டம் இட்டுள்ளார்.'அவர்' என்பது உங்களுக்குக்
    கட்டுரையை சுட்டிய பெண்மணியைதான் என்று நினைக்கிறேன்.

    ஆனால் அங்கே சூர்யஜீவா கட்டுரையில் உள்ள முரணை எடுத்துக் கூறியுள்ளார்,சுமார் 15 வரிகளில்.

    இங்கே நடந்த வாதத்தினை சூர்யஜீவா கண்ணுற்றாரா? அங்கே போல இங்கேயும் வாதத்தில் கலந்து கொண்டு இருக்கலாமே?

    அவர் கருத்துக்களை வரவேற்கிறேன்.

    ReplyDelete
  89. @Jayadev
    செட்டியார்கள் கணக்கில் கெட்டி. நாடர்கள் சிறந்த வியாபாரிகள். இப்படிச் சொல்லும்போது
    உங்களுக்கு வராத கோபம் சாதி பிராமணர்கள் சட்டம், ஆங்கிலம் ஆகியவற்றில் சிறந்து விளங்கினர்
    என்று சொல்லும்போது வருவது ஏன்?

    ReplyDelete
  90. எந்த ஒரு ஜாதியினரும், தனது ஜாதி உயர வேண்டும் அதற்க்கு அடுத்த இனத்திரை காலை இழுத்துவிட்டாலும் பரவாயில்லை என்று செயல்படும் அனைவர் மீதும் கோபம் வருகிறது ஜகன்னாத். தற்போது சென்னையில் பெரும்பாலும் நாடார்கள் மளிகைக் கடை வைத்திருக்கிறார்கள், அந்தத் தொழிலில் மற்ற இனத்தினர் யாரும் நுழைய முடியாதபடி அவர்கள் பல தில்லு முல்லுகளைச் செய்து வருகிறார்கள். ஏனெனில் மளிகைக் கடைக்குத் தேவையான பொருட்களை வழங்கும் மொத்த வியாபாரத் தொழிலை அவர்கள் முழுமையாக ஆக்கிரமித்துள்ளார்கள். தமிழகம் முழுவதும் அவர்கள் நெட்வொர்க் இயங்குகிறது. திட்டமிட்டுச் செய்கிறார்கள். இதைப் பார்க்கும்போது கோபம் வருகிறது. நீங்கள் சொன்ன செட்டியார் சமூகமும் இதே கதைதான். எப்படி செயல்பட்டால் மக்களை ஏமாற்றலாம் என்ற சூட்சுமம் தெரிந்தவர்கள். அவர்களைப் பார்த்தாலும் மனதுக்குள் கோபம் வருகிறது. இப்போது பிராமணர்கள் என்று பார்த்தால், நாடு முழுவதும் ஒன்று சேர்ந்து மற்றவர்களை அடிக்கும் இனமாக உள்ளது. அங்கொன்று இங்கொன்று என்று இல்லை, எந்தப் பக்கம் திரும்பினாலும் யாரைச் சந்தித்தாலும் தாங்கள் எப்படி பிராமணர்களால் வஞ்சிக்கப் பட்டோம் என்ற கதையைச் சொல்லி அழுகிறார்கள். நானும் அவ்வாறு பாதிக்கப் பட்டவன் என்றாலும் ஏனோ அவர்கள் மீது துவேஷம் வரவில்லை. எனக்கு கோபம் எப்போது வருகிறது என்றால் எல்லாம் செய்துவிட்டு, நாங்கள் ஒண்ணுமே தெரியாத அப்பாவிகள், வெள்ளந்திகள்,யோக்கியர்கள் என்று பசப்பும் ஆட்களைப் பார்க்கும் போதுதான்.

    ReplyDelete
  91. பிராமணர்கள்தான் படிப்பதற்கு மற்றவர்கள் அவனுடைய கு...டி கழுவுவதற்கு என்ற பித்தலாட்டம் எப்படி சமூகத்தில் வந்தது? இன்றைக்கு மற்ற சமூகத்தினரும் படித்து எல்லா விதமான அரசு மற்றும் தனியார் துறை உயர் பதவிகளுக்கும் செல்கிறார்களே அதெப்படி சாத்தியம்? இட ஒதுக்கீடு முறையில் குறைந்த மதிப்பெண் பெற்று கல்லூரியில் சேரும் மாணவன், பின்னாளில் போட்டிகள் நிறைந்த தனியார் நிறுவனங்களில் பணியில் சேர்ந்து பிரகாசிக்க முடிகிறதே அதெப்படி? ஆங்கில தேசத்தில் இந்த சாதி மட்டும்தான் படிக்க வேண்டும், மற்றவர்கள் கு...டி கழுவ வேண்டும் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லோரும் அவரவர் தகுதிக்கேற்ப முன்னேறும் போது, இங்கு மட்டும் ஒரு குறிப்பிட்ட சாதிக்காரன் மட்டும் தான் புடுங்க முடியும் மற்றவர்களால் புடுங்க முடியாது என்ற நிலையை எந்த விஷமி தோற்றுவித்தான்? அப்படி அந்த சாதியில் உள்ளவன் எந்த விதத்தில் மற்றவர்களை விட மேம்பட்டவன்? அறிவிலா, ஒழுக்கத்திலா, பழக்க வழக்கங்களிலா, மனித நேயத்திலா, புலால் மருப்பதிலா என்று பார்த்தால் எதிலுமே இல்லையே. எல்லா விதத்திலும் மற்றவர்களைப் போலவே இவனும் இருக்கும்போது இவனுக்கு மட்டும் என்ன தனி அந்தஸ்து?

    ReplyDelete
  92. இதையொத்த ஒரு இடத்துக்கு எங்கள் பேச்சு சென்று கொண்டிருந்தபோது KMRK இங்கே செங்கோவி அதைப்பற்றி பதிவிட்டு விவாதம் நடந்து கொண்டிருக்கிறது என்று அறிமுகப்படுத்தி அழைத்தார்..வந்தேன்.இந்தப் பக்கம், பின்னூட்டங்களில் கொஞ்சம் வாசித்தேன்..சளைக்காமல் டைப்பிங் பண்ணிக்கொண்டிருக்கிற எனக்கே தலையைச் சுத்துகிறது..எக்கச்சக்க கருத்துமோதல்கள்..பின்னூட்டங்கள்..

    தொடர் வாதங்கள்..இதெல்லாம் எதுவும் செய்திடப் போகுதா என்று எனக்கு ஒன்றும் புரியவில்லை..எங்களிருவரின் கேள்வி பதிலை இங்கே கொடுத்திருக்கிறேன்..////kmr.krishnan said...
    அது முடிவுக்கு வந்து கொண்டிருப்பதாகவும், சூத்திரர் ஆட்சி(லேபர் கிளாஸ்),
    தொழிலாளிகளின் ஆட்சி விரைவில் வரப்போவதாகவும் அவர் கூறினார்.
    அது ஒரு தீர்க்க தரிசனமே.////////
    minorwall said... /இப்போ தமிழ்நாட்டுலே நடக்குறது இதிலே எந்த வகை ஆட்சி?//
    //////kmr.krishnan said... ஜெயெலலிதா பிறப்பால் பிராமண‌ர் என்பதால் அவரது ஆட்சி பிராமண ஆட்சி என்று சொல்வேன் என்று நினைக்க வேண்டாம்.//////
    //////////kmr.krishnan said...
    சுவாமிஜியின் அந்தக் கருத்தோட்டம் மிகப் பரந்த அளவில் பார்க்க வேண்டும் குளோபல் அல்லது யுனிவர்சல் லெவெல்./////
    minorwall said... 'கூரையேறிக் கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போகப் போறானாம்..'என்று ஒரு பழமொழி உண்டு..அதனால் நான் கூரையளவிலே நின்று கொள்கிறேன்..(தொடரும்)

    ReplyDelete
  93. minorwall said... பிறப்பால் என்றால் அதற்கப்புறம் வேறுபடுகிறாரா? வேறெதை எதை வைத்து வேறுபாடு அடைகிறார்கள்?..
    இது குறித்தான விளக்கங்கள் ஏதும் முந்தைய பழைய வேதகாலப் புத்தகங்களிலே விளக்கம் உண்டா?
    ஷத்திரியன் சூத்திரன் என்ற வகையில் இன்றைய அளவிலே BC யை ஷத்திரியனாக்கி SC /ST சூத்திரனாக்குவதா?(எப்படி இருந்தாலும் SC/ST க்கு விடிவுகாலம் சலுகையில் மட்டுமே..சமூக அங்கீகாரம் என்னவோ கேள்விக்குறிதான்?ஆனால் சலுகை கிடைக்குமென்றால் என்னையும் அதிலே சேர்..என்று ஊர்வலம் நடத்தும் பல சாதியர்களும் இங்கே உண்டு..அது வேறு ஒரு நகைப்புக்குரிய விஷயம்..இது 2011..)
    நடுவிலே இருக்கும் MBC எதிலே வைக்கலாம்?வைஷ்யன் பாதி BC..மீதி?
    ஷத்திரிய, சூத்திரனைத் துணைக்கோடாமல் (கூட்டணி) யாரும் இன்று ஆட்சியமைக்கமுடியுமா?இதெல்லாம் என்ன வறட்டு வேதாந்தம்?இப்படி ஒரு வர்க்க அமைப்பை இன்னும் கட்டிக்காக்கும் அமைப்பு எது?யார்?உலகம் நம்மைப் பார்த்து கேவலமாக சித்தரித்து கைகொட்டிச் சிரிக்கும் விஷயங்களில் இதுவும் ஒன்று..எத்தனையோ பேர் இங்கே ஜப்பானில் என்னை இதே கேள்வியைக் கேட்டிருக்கிறார்கள்..ஏனென்றால் பாடப் புத்தகத்திலேயே இந்தியாவைப் பற்றி இந்த விஷயங்களைக் குறிப்பிட்டிருக்கிறார்கள்..

    kmr.krishnan said... //இப்படி ஒரு வர்க்க அமைப்பை இன்னும் கட்டிக்காக்கும் அமைப்பு எது?யார்?//
    மைனர்வாள்! இது பற்றிய ஒரு ஆரோக்கியமான விவாதம் செங்கோவியால் துவக்கப்பட்டு இப்போது 3 வாரமாக நடந்து வருகிறது. மிகவும் சென்சிடிவான இந்த விஷயம் பற்றி நல்ல மெச்சுரிடியுடன் அவர் பதிவிட்டு வருகிறார். அக்டோபரில் இரண்டும் இன்று ஒன்றுமாக 3 பதிவுகள் வந்துள்ளன. அதில் 2வது பதிவில் நமது தஞ்சாவூராரின் பிளாகில் வெளியிடப்ப‌ட்ட பிராமணன் யார் என்ற கட்டுரை சுட்டப் ப‌ட்டு 2 வது பதிவில் பேசு பொருளாகியிருக்கிறது.
    என் வாதங்கள் வேண்டிப் பெற்று பின்னூட்டமாக எடிடிங் இல்லாமல் வெளியிடப்படுகின்றன. தாங்களும் தங்கள் பங்களிப்பை அளிக்கலாம்.அங்கே எழுத விருப்பமில்லை எனில் தனிப்பட்ட மின் அஞ்சல் நீங்கள் எனக்கு அனுப்பலாம்.
    அங்கே எல்லாமும் வெளிப்படையாகவே நடப்பதாக இதுவரை எனக்குத் தோன்றுகிறது. மிகவும் ரிஸ்க் எடுத்து என் வாதங்களைச்சொல்லி வருகிறேன்.என்று கல் வீட்டின் மேல் விழுமோ தெரியவில்லை.நான் என் இரத்த‌ சாதிப் பிராமண வகுப்பின் தரப்பையே அங்கே நிறுவுகிறேன்.ஏன் எனில் அதுதான் எனக்கு இயல்பாக அருகில் இருக்கிறது. இரத்தசாதி, வர்ண வகுப்பு இவை பற்றிய தெளிவு கடைசியில் படிப்பவருக்குக் கிடைக்கலாம்.ப்ரெஜுடிஸ் இல்லாதவர்களுக்கு அந்த வாதம் உவப்பாகவே இருக்கும் என்று நம்புகிறேன்.
    "பிராமண நண்பர்களுக்கு வர்ணம்,சாதி, இடஒதுக்கீடு 1, 2 part(october); 3 part நவம்பெர் 2011"..
    http://sengovi.blogspot.com//////////////////////////////////////////..(தொடரும்)

    ReplyDelete
  94. இங்க வந்து பார்த்தா மண்டை காயுது..ஏகப்பட்ட டைப்பிங் ஜாம்பவான்களெல்லாம் இருக்கீக..ஏதோ எனக்குத் தோணுறதை சொல்றேன்..

    பெரியார் காலத்துக்கப்புறம்...அது எப்பவோ போயே போயாச்சு..மக்கள் கிட்டத்தட்ட மறந்தும் போயாச்சு...

    இப்போ ரீசென்ட் பொலிடிகல் trend எனக்குத் தோணுறது சூத்திரன் பிளஸ் ஷத்த்ரியனா இல்லை பிராமணன் பிளஸ் ஷத்திரியனா என்கிற ரீதியில் அரசியலை காய் நகர்த்திக் கொண்டு செல்கிறார்கள் என்பதே..இதுதான் ரவுண்ட்ஸ்லே வருது..மக்கள் எதாவுது ஒருபக்கமா

    ஓட்டைப் போட்டுட்டு வேடிக்கை பார்க்கவேண்டியதுதான்..

    //இப்போ தமிழ்நாட்டுலே நடக்குறது இதிலே எந்த வகை ஆட்சி?//

    இந்தக் கேள்விக்கு யாராவுது ஒரு தெளிவான பதிலை சொல்லுங்க..(வர்ணம் சாதி அடிப்படையிலே..)
    எனக்கு இதுக்கு மேல டைப் அடிக்க மூடும் இல்லே..செங்கோவி ப்ளாகின் பக்கங்களிலே என்னைக் கவர்ந்த ஹன்சிகாவின் இடுப்பு வளைவை கொஞ்சம் டீப்பா ஆராய்ச்சி பண்ணவேண்டியிருக்கு..வாரேன்..

    ReplyDelete
  95. இன்னிக்கு செஞ்சுரியை நானே அடிச்சுரட்டுமா?

    ReplyDelete
  96. ///பிராமணர்கள் என்று பார்த்தால், நாடு முழுவதும் ஒன்று சேர்ந்து மற்றவர்களை அடிக்கும் இனமாக உள்ளது. அங்கொன்று இங்கொன்று என்று இல்லை, எந்தப் பக்கம் திரும்பினாலும் யாரைச் சந்தித்தாலும் தாங்கள் எப்படி பிராமணர்களால் வஞ்சிக்கப் பட்டோம் என்ற கதையைச் சொல்லி அழுகிறார்கள்//

    நீங்கள் சொல்வதைப்பார்த்தால் இது வேலையாக மட்டுமே எல்லோரையும் சந்தித்து பேட்டி எடுப்பவராகவோ, அல்லது கண்ணீரைத் துடைப்பவராகவோ தெரிகிறது.நீங்கள் அவற்றையெல்லாம் தொகுத்து ஒரு புகார் மனுவை அந்தந்த நிர்வாகங்களிடம் ஏன் கொடுக்ககூடாது?அல்லது அரசாங்கத்திடம் கொடுக்ககூடாது?

    இவ்வளவு கோவம் இருப்பவர் செயலில் இறங்காமல் வெறும் புலம்பலுடன் நிற்கலாமா?

    என் புரிதல் படி ஏதாவது பெரிய இயக்கத்தின் தலைவரிடம்தான் இவ்வளவு புகார்கள் வரும். நீங்கள் அப்படிப் ப‌ட்ட தலைமையில் இருந்தால், உங்களுடைய குறை களைய இருக்கும் நிர்வாக அமைப்புக்களிடம் புகார் செய்வதே முறை.அப்படி நீங்கள் தலைவர் இல்லை எனில் நிச்சயமாக ஏதாவது தொழிற்சங்கம் போன்ற, சாதிச் சங்கம் போன்ற அமைப்பில் உறுப்பினராக இருப்பீர்கள். அவர்கள் மூலம் ஏன் உங்கள் குறைகளை மேல் எடுத்துச் செல்லக் கூடாது?

    ReplyDelete
  97. //ஆங்கில தேசத்தில் இந்த சாதி மட்டும்தான் படிக்க வேண்டும், மற்றவர்கள் கு...டி கழுவ வேண்டும் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லோரும் அவரவர் தகுதிக்கேற்ப முன்னேறும் போது, இங்கு மட்டும் ஒரு குறிப்பிட்ட சாதிக்காரன் மட்டும் தான் புடுங்க முடியும் மற்றவர்களால் புடுங்க முடியாது என்ற நிலையை எந்த விஷமி தோற்றுவித்தான்?//


    ஆங்கில தேசத்தில் 150 ஆண்டுகளுக்கு முன் வரை அரிஸ்டோக்ராட் என்ற உயர் சாதியினர்(அங்கே கிளாஸ்) மட்டும்தான் படித்துவந்தனர். லேபர் கிளாஸுக்கு படிப்பு இல்லை.

    ந‌மது தமிழ் நாட்டில் சென்னை எக்மோரில் வந்து தங்கி நமது திண்ணைப் பள்ளிகள் நடக்கும் முறையைக் கண்டு, அதனை இங்கிலாந்துக்கு எடுத்துச்சென்று ஏழைகளுக்கு ஆரம்பக் கல்வியைத் துவங்கினார் பெல் என்ற பாதிரியார். அவருடைய கல்லறையில் "மெட்ராஸ் மானிடோரியல் சிஸ்டத்தை
    துவங்கி இங்கிலாந்தின் ஏழைகளுக்குக் கல்வி அளித்த பெல் இங்கே உறங்குகிறார்" என்று கல் பதிக்கப்பட்டுள்ளது.

    1822 லேயே ஆங்கிலேயன் சாதிவாரியாகப் பள்ளிகளில் எத்துணை பேர்
    படிக்கிறார்கள் என்று கணக்கெடுத்து இலண்டனுக்கு அறிக்கை
    சமர்பித்துள்ளான்.

    1857 சிப்பாய் புரட்சிக்குப் பின்னர்தான் ஆங்கில மஹாராணியின் நேரடி
    நிர்வாகம் வருகிறது.அதுவரை இந்தியாவிற்கான எந்த கல்விக் கொள்கையும்
    இல்லை.கிழக்கிந்தியக்கம்பெனி வரிவசூல் மட்டும் செய்து வந்தது, நலத்
    திட்டம் எதுவும் செயல் படுத்தவில்லை. எனவே பழைய கல்வி முறைகளே கடைப் பிடிக்கப்பட்டன.

    தென் இந்தியாவின் தற்போதைய 4 மாநிலங்களும் மெட்ராஸ் ப்ரெசிடென்சி என்றுஇருந்த காலம். அப்போது சர் தாமஸ் மன்ரோ கவர்னர். இந்த தென் மாநிலங்களில்சாதிவாரியாக பள்ளிகளில் படிக்கும் மாண‌வர்களின் எண்ணிக்கை
    மாவட்டக் கலெக்டர்கள் சேகரித்து அறிக்கை சமர்பிக்க வேண்டும் என்று
    உத்திரவு போட‌ப்பட்டது.ஜூன் 1822 முதல் இந்த சர்வே நடந்தது.

    கிடைத்த தகவல்கள் இன்றும் ஆவணக் காப்பகத்தில் காணலாம்.

    ஒரு சில மட்டும் காண்போம்.

    விசாகப்பட்டினத்தில் பிராமண‌ர்களும் வைஸ்யர்களுமாக மொத்த மாணவர்
    எண்ணிக்கையில் 47%. பிற்படுத்தப்பட்டோர்(அப்போது சூத்திரர்கள்) 21%
    தாழ்த்தப்பட்டவர்கள்(எஸ்சி) எண்ணிக்கை 20% முஸ்லிம்கள் 12%

    திருநெல்வேலியில் பிராமண மாண‌வர் எண்ணிக்கை 21.8%
    பிற்படுத்தப்ப்ட்டவர்கள் 31.2% தாழ்த்தப்படவர்கள் 38.4% மூஸ்லீம் 8.6%

    தென் ஆற்காட்டில் பிராமண மாண‌வர்கள் 16% ஏனையோர் 84%

    அன்றைய பாம்பே மாகாணத்தில் பிராமண மாண‌வர் எண்ணிக்கை 30%மட்டுமே. ஏனையோர் 70%. வங்க‌த்தில் இது 40=60%

    கொஞ்சம் கோவத்தை விட்டு நல்ல சொற்களாகப்பயன் படுத்த வேண்டுகிறேன்

    ReplyDelete
  98. This comment has been removed by the author.

    ReplyDelete
  99. ////இப்போ தமிழ்நாட்டுலே நடக்குறது இதிலே எந்த வகை ஆட்சி?//

    இந்தக் கேள்விக்கு யாராவுது ஒரு தெளிவான பதிலை சொல்லுங்க..(வர்ணம் சாதி அடிப்படையிலே..)///

    இது இந்த விவாதத்திற்கு உரிய தலைப்பா என்று தெரிய‌வில்லை.

    மே 2011 ல் முன்னர் இருந்த ஆட்சியில் இருந்த பெரும்பாலோர் நிலம் அதிகமாக உடையவர்களே. அவர்கள் ஆட்சி காலத்தில் அதிகமாக நிலம் வாங்கும் ஆசையுடனும் அலைந்தனர்.இப்போது நில அபகரிப்பு வழக்குகள் பலவற்றினை எதிர் கொள்கின்றனர்.

    சாதாரணமாக ஜாதி அடிப்படையிலேயே வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுதலால் சென்ற முறை இருந்தவர்களுடைய பங்காளிகளே தற்போது ஆட்சியில் இருப்பார்.இவர்களும் நில உடைமையாளர்கள் தான். அவர்களைப்போலவே வாய்ப்புக்கிடைத்தால் இவர்களும் நிலத்தில்தான்
    வசூலைப் போடுவார்கள்.

    எனவே இது நில உடைமையாளர்களின் ஆட்சி. லேண்ட் லார்ட் ஆட்சி.
    நிலம் எந்த சாதியிடம் அதிகம் உள்ளதோ அவர்களுடைய ஆட்சி.

    'குலக்' ஆட்சி என்று சொல்லலாம்.

    ReplyDelete
  100. \\நீங்கள் சொல்வதைப்பார்த்தால் இது வேலையாக மட்டுமே எல்லோரையும் சந்தித்து பேட்டி எடுப்பவராகவோ, அல்லது கண்ணீரைத் துடைப்பவராகவோ தெரிகிறது.\\ இவ்வளவு வரலாறு எல்லாம் படித்து தேதி வாரியாக விஜயகாந்தையே மிஞ்சும் அளவுக்கு புள்ளி விவரங்களை அள்ளி வீசும் நீங்கள், இப்படி ஒரு அடிப்படை வாதத்தை முன் வைப்பது அடுத்தவனை மட்டம் தட்ட எனபது தெளிவு. ஒரு இடத்தில் படிக்கும் போதும், பணிபுரியும் போதும் உடனிருப்போருடன் ஒருத்தன் பேசவே மாட்டானா? வருடக் கணக்கில் அவ்வாறு நண்பர்களாக இருக்கும் பட்சத்தில் வெவ்வேறு விஷயங்கள் விவாதிக்கப் படும் என்று கூடத் தெரியாத அப்பாவியா நீர்? நான் யாரையும் வலுக்கட்டாயமாய் போய் பிராமணனைப் பற்றி அவதூறாக கூறு என்று பேட்டி எடுத்ததில்லை அன்பரே, பேச்சு வாக்கில் அறிந்துகொண்ட விஷயங்களை வைத்து தான் கூறியுள்ளேன். அவர்கள் அத்தனை பெரும் விடுவது போய் புனை சுருட்டு, நீர் ஒருத்தரே உத்தமர் என்று நினைத்துக் கொண்டால், அதுவும் "நான் மட்டுமே படிக்கத் தகுந்தவன், மற்றவன் என் வீட்டு டாய்லெட் சுத்தம் செய்யத்தான் லாயக்கு" என்ற ஆதிக்க மனப்பான்மையின் வெளிப்பாடு அன்றி வேறென்ன இருக்க முடியும்?

    ReplyDelete
  101. \\நீங்கள் அவற்றையெல்லாம் தொகுத்து ஒரு புகார் மனுவை அந்தந்த நிர்வாகங்களிடம் ஏன் கொடுக்ககூடாது?அல்லது அரசாங்கத்திடம் கொடுக்ககூடாது?\\ ஐயா வாயில் கை வைத்தாலும் கடிக்கத் தெரியாத குழந்தையாய் இருக்கிறீரே!! நீர் வாழும் நாடு இந்தியா. ஜப்பான், அமரிக்கா, பிரிட்டன், சிங்கப்பூர் அல்ல. வெறும் கையும் காலோடும் அரசியலுக்கு வந்து ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் சொத்துக்கள் சேர்த்த அரசியல்வாதி ஆயிரக்கணக்கில் உள்ளார்கள். எங்கே, நீர் எல்லாம் அறிந்த நீதிமானாயிற்றே, உமது சட்டத்தைப் பயன்படுத்தி அவர்கைளை உள்ளே தள்ளி நீதியை நிலை நாட்டுமே, பார்ப்போம்.

    ReplyDelete
  102. \\இவ்வளவு கோவம் இருப்பவர் செயலில் இறங்காமல் வெறும் புலம்பலுடன் நிற்கலாமா?\\ என்னால் எதுவும் செய்ய முடியவில்லை என்பதற்காக என்னுடைய புலம்பல்கள் போய் என்றாகிவிடாது அன்பரே.

    ReplyDelete
  103. \\என் புரிதல் படி ஏதாவது பெரிய இயக்கத்தின் தலைவரிடம்தான் இவ்வளவு புகார்கள் வரும். \\ அப்படி புகார்களை வாங்கி அதை நிவர்த்தி செய்யும் பெரிய இயக்கத்தின் தலைவர் யாராச்சும் இருந்தா சொல்லுமே பார்ப்போம்.

    ReplyDelete
  104. \\சாதிச் சங்கம் போன்ற அமைப்பில் உறுப்பினராக இருப்பீர்கள். அவர்கள் மூலம் ஏன் உங்கள் குறைகளை மேல் எடுத்துச் செல்லக் கூடாது? \\ அது பிராமண சாதிச் சங்கமா இருக்கணும், வேலை நடக்கும். நான் அந்த சாதியைச் சேர்ந்தவன் இல்லையே?

    ReplyDelete
  105. 'கூரையேறிக் கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போகப் போறானாம்..'என்று ஒரு பழமொழி உண்டு. இது யாருக்குப் பொருந்துமோ இல்லையோ, உமக்கு நிச்சயமாய்ப் பொருந்தும். எந்த அடிப்படையில் ஒருத்தரை குரு என்றும், கடவுளின் அவதாரம் என்றும் எடுத்துக் கொள்வது என்ற அடிப்படை கூடத் தெரியாமல், கேமராவில் மாட்டிய ரஞ்சிதானந்தாவை விட்டுவிட்டு மற்ற எல்லா குப்பைகளையும் குரு லிஸ்டில் போட்டு உமது அறியாமையை வெளியிட்ட போதே உமது லெவல் புரிந்து விட்டது அன்பரே. நான் சொல்வதற்கெல்லாம், நீ என்ன நேரில் பார்த்தாயா என்று என்னைக் கேட்க்கும் நீர், கோழி குப்பையைக் கிளறுவது போல வரலாற்று புத்தககளில் இருந்து தகவல்களை அள்ளி வீசுகிறீரே அதை மட்டுமென்ன நீர் நேரில் பார்த்து விசாரித்து அறிந்த விஷயங்களா? இந்த வெட்டி வேலையைச் செய்வதை விடுத்து பகவத் கீதையில் முதல் ஆறு அத்தியாயத்தைவது உருப்படியாகப் படித்து அறிந்து கொண்டால், வருங்கலத்திலாவது மேஜிக் வித்தை பண்ணுபவர்களை ஆன்மீக வாதிகள் என்று சொல்வதைத் தவிர்ப்பீர்கள் அன்பரே.

    ReplyDelete
  106. ///நீர் ஒருத்தரே உத்தமர் என்று நினைத்துக் கொண்டால், அதுவும் "நான் மட்டுமே படிக்கத் தகுந்தவன், மற்றவன் என் வீட்டு டாய்லெட் சுத்தம் செய்யத்தான் லாயக்கு" என்ற ஆதிக்க மனப்பான்மையின் வெளிப்பாடு அன்றி வேறென்ன இருக்க முடியும்?///

    பிராமணப் பெண்களை மலக் கூடையைத் தலையில் தூக்கவைக்கும் வரை
    எங்க‌ள் சாதி ஒழிப்புப் போராட்டம் ஒயாது என்றெல்லாம் தி.க மேடைகளில் பேசப்பட்டது.

    பேசியவர்கள் வீட்டுப்பெண்கள் அப்போது மலக் கூடையைச் சுமாந்தார்களா என்று பார்த்தால்,இவர்களுமே ஆதிக்க‌ சாதிக்காரர்கள்தான்.இவர்களுமே மலக் கூடை சுமப்பவர்களிடம் தீண்டாமை பார்த்தவர்கள்தான்.அவர்கள் அப்படி மேடையில் முழங்கிய போது பிராமணர்களில் முக்கால் வாசிப்பேர் ப‌ம்பாய், கலகத்தா, டெல்லி என்று சென்று விட்டர்கள்.தமிழகத்தில் சாதி இந்துக்(இப்போது பி சி, எம் பி சி)களின் வீட்டு கழிவறையைத்தான் ஒட்டர்கள் கழுவி வந்தார்கள்.

    இதில் ஒரு கூத்து என்னவென்றால் ஒட்டர் ஜனங்களின் தாய் மொழி தெலுங்கு.
    எந்தத் தமிழ் பேசுபவனும் அந்த வேலையைச் செய்யவில்லை.இன்று நகர வாசிகளான எஸ்சி, எஸ்டி கூடத் தன் வீட்டு லெட்ரினுக்கு ஆசிட் பாலிஷ் போடவோ, அல்லது செப்டிக் டான்க் சுத்தம் செய்யவோ அழைப்பது ஒட்டர் மகாஜனத்தைத்தான்.எந்தத் தமிழனையும் அல்ல.

    இப்போது இந்த அன்பர் பேசும் ரிவெர்ஸ் லாஜிக்தான் அப்போதும் திக மேடையில் வைக்கப்பட்டது.

    முதல் முதலில் மலக்கூடை ஒட்டர்கள் தலையில் சுமக்கக் கூடாது என்ற எண்ணம் ராஜாஜிக்குத்தான் வந்தது.முதற்கண் அவர்களுக்கு இரும்பு வாளி அளிக்கப்பட வேண்டும் என்று ஊரக வளர்ச்சித்துறைக்கு உத்தரவு அளித்தார்.
    அவருக்கு முன் ஆட்சியில் இருந்த தி கவின் முன்னோடிகளுக்கு, ஜஸ்டிஸ்
    கட்சிக்கு இந்தப் பிரச்சனை பெரிதாகத் தெரியவில்லை.

    ஒரு பேச்சுக்காகக் கேட்கிறேன் நீங்கள் உங்கள் வீட்டு செப்டிக் டாங்கை நீங்களே சுத்தம் செய்து கொள்ளுங்களேன், ஒட்டர்களைக் கூப்பிடாமல்.முடியுமா?

    ReplyDelete
  107. ///இவ்வளவு வரலாறு எல்லாம் படித்து தேதி வாரியாக விஜயகாந்தையே மிஞ்சும் அளவுக்கு புள்ளி விவரங்களை அள்ளி வீசும் நீங்கள், இப்படி ஒரு அடிப்படை வாதத்தை முன் வைப்பது///

    விஜயகாந்த் எப்படிப் புள்ளி விவரம் தருகிறார் என்பது எனக்குத் தெரியாது.

    என் புள்ளி விவரங்களுக்கான ஆதாரம் தர்ம்பால் என்ற ஆய்வாளர்.அவர் ஒரு காந்தீய வாதி.

    காந்திஜி வட்டமேஜை மகாநாட்டுக்குச் சென்ற சமயம் 'இந்தியாவில் ஆங்கிலேயர் வருவதற்கு முன்னர் லிடரசி அதிகமாக இருந்தது.நீங்கள் வந்து கல்வி முறையை மாற்றியதால் லிடரசி குறைந்துவிட்டது' என்று பொதுவில் பத்திரிகைப் பேட்டி லண்டனில் அளித்தார்.

    அத‌னை ஆங்கில அரசாங்கத்தின் கல்விக்கான செயலாளர் மறுத்து ஆதாரமில்லாமல் காந்திஜி பேசுகிறார் என்று குற்றம் சாட்டி ஆதாரம் கொடுக்கவில்லை எனில் காந்திஜி தான் சொன்னதை திரும்பப்பெறவேண்டும்
    என்று வலியுறுத்தினார்.ஆதாரம் தருகிறேன் என்று காந்திஜி கூறி தன் சகாக்களில் படித்தவர்களை ஆய்வு செய்யச் சொன்னார். சிறிது சிறிதாக ஆவணக் காப்பகங்களில் தேடப்பட்டு ஆதாரங்களைத் திரட்டின்னார்கள்.அதன் நீட்சியாக தரம்பால் மேல் தகவல்களுடன் 5 நூலகள் எழுதியுள்ளார்.

    ஆய்வின் முடிவு இந்தியாவில் ஆரம்பக்கல்வியும் உயர் கல்வியும் ஆங்கிலேயர் காலத்திற்கு முன்பு, சாதி,ம‌த பாலின வேற்றுமையின்றி எல்லோருக்கும் கிடைத்தது என்பதே.

    அவருடைய ஆய்வு நூலகள் 5 புத்தகங்களாகக் கிடைக்கின்ற‌ன‌

    Vol 1: Indian Science and Technology in the Eighteenth Century
    Vol 2: Civil Disobedience in the Indian Tradition
    Vol 3: The Beautiful Tree Indigenous Indian Education in the Eighteenth Century
    Vol 4: Panchayat Raj and India's polity
    Vol 5: Essays on Tradition, Recovery and Freedom (which included the
    Bharatiya Chit, Manas and Kaal)

    இதில் 3வது புத்தகம் "பேர‌ழகான‌ மரம்=இந்தியக் கல்வி=18ஆம் நூற்றாண்டில்"
    என்பது நமது மக்களுடைய கல்வி முறையைப்பற்றி,பாள்ளிகளில் மாணவர் வருகை பற்றி விரிவாகப் பேசுகிறது.

    கீழ்க்காணும் வலதளத்தில் இருந்து தரவிரக்கம் இலவசமாகச் செய்து கொண்டு அனைவரும் படிக்க வேண்டுகிறேன்,

    http://www.samanvaya.com/dharampal/

    ReplyDelete
  108. //நானும் அவ்வாறு பாதிக்கப் பட்டவன் என்றாலும் ஏனோ அவர்கள் மீது துவேஷம் வரவில்லை. எனக்கு கோபம் எப்போது வருகிறது என்றால் எல்லாம் செய்துவிட்டு, நாங்கள் ஒண்ணுமே தெரியாத அப்பாவிகள், வெள்ளந்திகள்,யோக்கியர்கள் என்று பசப்பும் ஆட்களைப் பார்க்கும் போதுதான்.//

    துவேஷத்திற்கும் கோபத்திற்கும் உங்களுடைய சொற்களைப் பொறுத்தவரை பெரிய வேற்றுமை இல்லை.

    இது ஒரு வாதம். என‌க்குத் தெரிந்ததை நான் கூறுகிறேன். உங்களுக்குத் தெரிந்ததை நீங்கள் கூறுகிறீர்கள். இதில் யாருடையது பசப்பு என்பதை வாசகர்கள் தீர்மானிக்கட்டும்.

    ReplyDelete
  109. //அது பிராமண சாதிச் சங்கமா இருக்கணும், வேலை நடக்கும். நான் அந்த சாதியைச் சேர்ந்தவன் இல்லையே?//

    பிராமணர்களுக்குள்ளே இருக்கும் ஒற்றுமைக் குறைவு உலகப்பிரசித்தம்.
    அவர்களுக்கு சாதிச் சங்கம் எல்லாம் நடத்தத் தெரியாது.சும்மா பெயருக்கு பிராமண‌ர் சங்கம் என்று, மற்றவர்கள் வைத்துள்ளார்களே என்று, தானும் வைத்துள்ளார்கள்.

    இவர்க‌ளுடைய ஓட்டு வங்கி மிகவும் குறைவு என்பதால் எந்த அரசியல் கட்சியும் பிராமணர் சங்கத்தை அணுகாது.

    அலுவலகங்களில் இப்போது தொழிற்சங்கங்கள் அல்லாது எஸ் சி எஸ்டி நலச்சங்கங்கள், பிசி, எம் பிசி நலச்சங்கங்கள் எல்லாமும் ஓங்கிக் குரல் கொடுத்து வருகின்றன. ஒரு மேல் அதிகாரியை இட மாற்றம் செய்து விரட்டும் அளவு இவை வலிமை வாய்ந்தவை.உங்களுக்கு இடர் செய்யும் பிராமண அதிகாரியை உங்கள் அமைப்புக்களின் மூலம் செக் கில் வைக்கலாம்.

    சாதாரணமாக எவ்வளவுதான் சாதிக்குள் சண்டை இருந்தாலும் தன் சாதிக்காரன் இறந்துவிட்டால் கூட்டமாககூடி, இடுகாடு,மயானம் வரை செல்வார்கள்.

    சாவில் மற்ற சாதிக்காரர்கள் காட்டும் ஒற்றுமை கூட பிராமண ஜாதியில் கிடையாது.

    'அய்யர் பிணம் அனாதையாப் போகும்' என்பது சொல் வழக்கு.

    எல்லொருமே எழுதப் படிக்கத்தெரிந்தவர் என்பதால் பிராமண‌னுக்கு சுய சிந்தனை உண்டு. பிறர் சொல்லை விமர்சிப்பானே தவிர, எந்தத் தலைமையையும் ஏற்க மாட்டான்.

    பிராமணன் சங்கத்தால் முன்னுக்கு வருவதில்லை.பெரும்பாலும் self made.

    ReplyDelete
  110. //வெறும் கையும் காலோடும் அரசியலுக்கு வந்து ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் சொத்துக்கள் சேர்த்த அரசியல்வாதி ஆயிரக்கணக்கில் உள்ளார்கள். எங்கே, நீர் எல்லாம் அறிந்த நீதிமானாயிற்றே, உமது சட்டத்தைப் பயன்படுத்தி அவர்கைளை உள்ளே தள்ளி நீதியை நிலை நாட்டுமே, பார்ப்போம்.//

    அந்த முயற்சிகளிலும் பிராமண‌ன் ஈடுபடாமல் இல்லை.

    சுப்ரமனியம் சுவாமியால் கேஸ் போடப்படாத அரசியல் வாதியே இன்று கிடையாது.ஸ்பெக்ட்ரத்திலும் அவர் வழக்கில் வாதடுகிறார்.ஒரு மாநிலத்தின் முதல்வரின் மகள் ,நாடாளுமன்ற உறுப்பினர் ஜாமீன் இல்லாத குற்றச்சாட்டில் திகாரில்.

    இன்று சட்டத்திற்குப் புர‌ம்பாக சென்னையில் கட்டப்பட்ட கட்டிடங்கள் இடிபடு நிலையில் இருப்பதற்கு ட்ராஃபிக் ராமசாமிதான் காரணம்.அவர் தொலைக்காட்சிப் பெட்டியில் பேசும் மொழி வழக்கை வைத்துப் பார்த்தால்
    அவர் பிராமனர் என்று தோன்றுகிறது.

    பல பொது நல வழக்குகள் பிராமணர்களாலேயே போடப்படுகின்றன.

    ReplyDelete
  111. //அப்படி புகார்களை வாங்கி அதை நிவர்த்தி செய்யும் பெரிய இயக்கத்தின் தலைவர் யாராச்சும் இருந்தா சொல்லுமே பார்ப்போம்.//

    தொழிற்சங்க அமைப்பு நன்றாகத்தான் செயல்பட்டு வருகிறது என்பது எனது எண்ணம்.உங்கள் நிறுவனத்தில் அப்படி இல்லையெனில் அதனைக் கட்டி எழுப்புங்கள்.

    ReplyDelete
  112. //எந்த அடிப்படையில் ஒருத்தரை குரு என்றும், கடவுளின் அவதாரம் என்றும் எடுத்துக் கொள்வது என்ற அடிப்படை கூடத் தெரியாமல், கேமராவில் மாட்டிய ரஞ்சிதானந்தாவை விட்டுவிட்டு மற்ற எல்லா குப்பைகளையும் குரு லிஸ்டில் போட்டு உமது அறியாமையை வெளியிட்ட போதே உமது லெவல் புரிந்து விட்டது அன்பரே.//

    விஸ்வாமித்ரரை வர்ண தர்மம் பிராமணனாக உயர்த்தியது அல்லது வர்ணம் புழங்கிய காலத்து, வசிஷ்டன், வர்ண பிராமணன் ஏற்றுக்கொண்டான் என்று நீங்கள் வைத்த வாததிற்குப் பிரதிவாத‌மாக தற்கால இரத்தப் பிராமண‌னும் பிராமண‌ர் அல்லாதவரை குருவாக ஏற்று இருக்கிறான் என்பதற்கு உதாரணமாகச் சில பெயர்களைக் கூறினேன்.அவர்கள் எல்லோரையும் நான் குருவாக ஏற்றுக்கொண்டு இருக்கிறேன் என்பது உங்க‌ள் அநுமானம்.

    அதில் சுவாமி விவேகானந்தரும், சின்மயானந்தரும் இருக்கிறார்கள்.அவர்களும் உங்கள் பார்வையில் குப்பைதானோ?

    கேமராவில் மாட்டிய ரஞ்சிதாவை நான் விட்டது சரிதானே. அவருமா குரு?
    நித்யானந்தா என்று நீங்கள் சொல்லவில்லை. ரஞ்சிதானந்தா என்றுதான் சொல்லியிருக்கிறீர்கள். ரஞ்சிதாவை குருவாக ஏற்றுக்கொள்ள வேண்டுமா?
    தமாஷ் பண்ணவும் ஒரு அளவு இல்லையா?

    செங்கோவி! என்னை என்ன பண்ணச் சொல்கிறீர்கள்? உனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேண்டும் என்று ஏன் மெள‌னமாக இருக்கிறீர்கள்?

    ReplyDelete
  113. // நான் சொல்வதற்கெல்லாம், நீ என்ன நேரில் பார்த்தாயா என்று என்னைக் கேட்க்கும் நீர், கோழி குப்பையைக் கிளறுவது போல வரலாற்று புத்தககளில் இருந்து தகவல்களை அள்ளி வீசுகிறீரே அதை மட்டுமென்ன நீர் நேரில் பார்த்து விசாரித்து அறிந்த விஷயங்களா?//

    நீ என்ன நேரில் பார்த்தாயா என்று உங்களிடம் நான் கேட்கவில்லை. உங்களுடைய வாதங்களை முறையாக எதிர்கொண்டு நிதானத்துட்ன் பொறுமையாக என் தரப்பை வைக்கிறேன்.

    வரலாற்றுத் தகவல்களில் என்னுடைய மூலத்தைச் சொல்லிவிட்டேன்.அந்த ஆய்வைப் படித்துப் பார்த்து விட்டு பின்னர் இந்தக் கேள்வியை என்னிடம் கேட்டால் அது நியாயம்.

    ReplyDelete
  114. //இந்த வெட்டி வேலையைச் செய்வதை விடுத்து பகவத் கீதையில் முதல் ஆறு அத்தியாயத்தைவது உருப்படியாகப் படித்து அறிந்து கொண்டால், வருங்கலத்திலாவது மேஜிக் வித்தை பண்ணுபவர்களை ஆன்மீக வாதிகள் என்று சொல்வதைத் தவிர்ப்பீர்கள் அன்பரே.//

    நான் 62 வயதுக்காரன். என் தந்தையாரால் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்துக்கு அறிமுகம் கிடைத்தவன்.

    சுவாமி விவேகானந்தரின் விருப்பபடி கீதை, உபனிடதம் ஆகியவற்றை எல்லோரும், எல்லா வகுப்பாரும், படிக்கும் வண்ணம் மற்ற மடாலயங்களுக்கு முன்னோடியாக ஸ்ரீ ராமகிருஷ்ண மடமே வெளியிட்டது.

    நான் எந்தப் புத்தகம் படிக்க வேண்டும், எதைப் படிக்கக் கூடாது என்பதை நான்தான் தீர்மானிக்க வேண்டும்.நான் கீதை படிக்கவில்லை இனிமேல்தான் படிக்க வேண்டும் என்று உங்களிடம் சொன்னது யார்?

    மாஜிக் செய்கிறார்களோ, லாஜிக் செய்கிறார்களோ ஜன ஆகர்ஷனம் உள்ளவர்கள் எல்லோரிடமும் ஏதோ ஒன்று இருக்கிறது. இலட்சக்கணக்கான பக்தர்கள் மேல்மருவத்தூருக்குப் போகிறார்கள் என்றால் அவர்களுடைய நம்பிக்கயைக் கேள்வி கேட்க நாம் யார்?

    இது வெட்டி வேலை நான் நிறுத்த வேண்டும் என்றால் அதற்கு நீங்களும் ஒத்துழைத்து இதனை முடிக்க வேண்டும்.

    நான் முன்பே சொன்னபடி வாததில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டால் நாம் கொச்சையாகப்பேச ஆரம்பித்துவிடுவோம். சொந்த முறையில் தாக்குவோம்.நான் அவ்வாறு எதையும் செய்யவில்லை.

    எனக்கு இந்த விவாதம் வெற்றியா, தோல்வியா என்பதைப் பற்றி அக்கறை இல்லை. என் வாதங்களில் உள்ள உண்மை சிலருக்குப் புரிந்தலும் போதும்.

    ReplyDelete
  115. //செங்கோவி! என்னை என்ன பண்ணச் சொல்கிறீர்கள்? உனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேண்டும் என்று ஏன் மெள‌னமாக இருக்கிறீர்கள்?//

    விவாதத்தில் நானும் இறங்கினால், ஏதேனும் ஒரு நிலைப்பாட்டை எடுத்துப் பேச வேண்டியிருக்கும்.

    மேலும், தனிமனிதத் தாக்குதல் அத்துமீறினால் அந்தப் பின்னூட்டத்தை மட்டுறுத்துவேன்.

    ReplyDelete
  116. \\நான் 62 வயதுக்காரன்.\\ சான்றோன் என்பது ஒருத்தருடைய வயதை வைத்து வருவதல்ல, செயலால். வயதாகி விட்டது என்ற ஒரே காரணத்துக்காக ஒருத்தரை வணங்கத் தக்கவராகக் கருதுவது மூன்றாம் தரமான வகையில் சார்ந்தது. 31 வருடங்கள் மட்டுமே வாழ்ந்த ஆதி சங்கரர் வணங்கத் தக்கவறல்ல என்றாகி விடுமா? அல்லது எழுபது வயதாகியும் எதிரே வரும் பெண்ணை வேண்டுமென்றே இருக்கும் கிழடுகளை மரியாதைக்குரியவராக கருத முடியுமா? வயதை வைத்து மதிக்க வேண்டுமென்றால் அமெரிக்காவில் பல ஆயிரம் ஆண்டுகாளாக வளரும் மரங்கள் உள்ளன, அவற்றுக்குத்தான் இந்த உலகமே மரியாதை செலுத்த வேண்டியிருக்கும்.

    ReplyDelete
  117. \\நான் எந்தப் புத்தகம் படிக்க வேண்டும், எதைப் படிக்கக் கூடாது என்பதை நான்தான் தீர்மானிக்க வேண்டும்.நான் கீதை படிக்கவில்லை இனிமேல்தான் படிக்க வேண்டும் என்று உங்களிடம் சொன்னது யார்?\\ உம்மைப் பற்றி இந்த பின்னூட்டங்களிலேயே ஓரளவு ஊகிக்க முடிந்ததால், இந்த மாதிரி என்னை கொக்கி போட்டு பிடிப்பீர் என்று முன்னரே எதிர் பார்த்தேன் அன்பரே. ஒரு கோர்டில் இரண்டு வக்கீல்கள் வாதாடுகிறார்கள் என்றால் தங்கள் மனதுக்குப் பட்டதையோ அல்லது பக்கத்து வீட்டுக்காரன் எவனாச்சும் சொன்னதை ஆதராமாக வைத்தோ வாதாட முடியுமா? அந்நாட்டு சட்டத்தை வைத்துத்தானே? இங்கே செங்கோவி வர்ணம் என்ற ஒரு தலைப்பில் பதிவிட்டுள்ளார். இதன் அடிப்படை பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையில் சொன்னதை வைத்துத் தானே? இந்தியாவின் நான்கு வேதங்களை வைத்துத் தானே? நீர் இங்கே வந்து உமது வாதத்தை பிளக்கும் போது, இதே அடிப்படையில் தானே பேச வேண்டும்?
    அதிவிடுத்து உமது புத்திக்கு சரியென்று பட்டதையெல்லாம் நீர் சொல்வீர் அதையெல்லாம் மற்றவர்கள் ஏற்க வேண்டுமென்று நீர் எதிர் பார்க்கிறீரா? அதற்காகத்தான் சொன்னேன் கீதையைப் படித்துவிட்டு உமது வாதத்தை பிளக்கலாம் என்று. நீர் எவனோ பொழிப்புரை எழுதிய கீதையைப் படித்திருக்கலாம், ஆனால் கீதையை எவ்வாறு படிக்கவேண்டுமென்று கீதையிலே சொல்லப் பட்டுலாது, அவ்வாறு நீர் படிக்கவில்லை என்பது நீர் சிலரை ஆன்மீக குரு என்று லிஸ்டு போட்டதிலிருந்தே தெளிவாகத் தெரிகிறது. கூட்டம் சேர்ப்பவன் எல்லாம் ஆன்மீக வாதி என்று நீர் சொல்வதிலிருந்தே, உமக்கு ஆன்மீகத்தைப் பற்றிய அரிச்சுவடி கூடத் தெரியவில்லை என்று தெரிகிறது. உமக்கு அரிச்சுவடி போதித்து, விளங்க வைத்து, நீர் சொன்னது அத்தைனையும் டுபாக்கூர் என்று நிரூபிக்க வேண்டும், எனக்கு நேரமில்லை அன்பரே.

    ReplyDelete
  118. //கூட்டம் சேர்ப்பவன் எல்லாம் ஆன்மீக வாதி என்று நீர் சொல்வதிலிருந்தே, உமக்கு ஆன்மீகத்தைப் பற்றிய அரிச்சுவடி கூடத் தெரியவில்லை என்று தெரிகிறது.//

    என்னுடைய சில வாக்கியங்களை மட்டும் பிடித்துக்கொண்டு எதையோ சொல்கிறீர்கள்

    விவாதம் யார் குரு என்பது அல்ல.சாதி, வர்ணம், இட ஒதுக்கீடு.

    சரி. எனக்கு ஆன்மீக அரிச்சுவடி தெரியவில்லை. ஒப்புக் கொள்கிறேன்.

    இந்த வாதத்தில் நான் தோற்றுவிட்டென் . நீங்கள் ஜெயித்துவிட்டீர்கள்.

    இந்த ஒரு வாக்கியத்தை மட்டும் எடுத்து வைத்துக் கொண்டு கொண்டாடுங்கள்
    உங்கள் வெற்றியை.

    ஒரு ஆன்மீக வாதி பேசும் 'புனிதமான' வார்த்தைகளைச் சொல்லி கோபமில்லாமல் சாந்தமாக எல்லா மக்களிடமும் அன்பு காட்டி, யாரிடமும் பொறாமை, காழ்ப்பு உணர்ச்சியில்லாத ஆன்மிக வாதிபோல மிகவும் நாகரிகமாகப் பேசி நீங்கள் வெற்றி பெற்றதை வாழ்த்தி விடை பெறுகிறேன்..

    ReplyDelete
  119. \\என்னுடைய சில வாக்கியங்களை மட்டும் பிடித்துக்கொண்டு எதையோ சொல்கிறீர்கள் விவாதம் யார் குரு என்பது அல்ல.சாதி, வர்ணம், இட ஒதுக்கீடு. \\ இதில் வர்ணம் என்ற வார்த்தை வருகிறது, அதன் அடிப்படை பகவத் கீதையிலிருந்தே. பிராமணன், பகவான் கீதையில் சொன்ன வண்ணம் பிராமனுக்குரிய தகுதிகளுடன் வாழ்ந்த காலம் உண்டு. இன்றைக்கு பிராமணன் என்று சொல்லிக் கொண்டு இருப்பவனுக்கு அந்தத் தகுதிகள் எல்லாம் ஒன்றுகூட இல்லை, ஆனால் அதற்குரிய சவுகரியங்களை அனுபவிக்கிறான், ஆன்மீகத்தை தன்னுடைய சாதி நலனுக்காக துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளான், இதை பெரியார் வாழ்நாள் முழுவதும் எதிர்த்தார், இது வரலாறு. இதற்க்கு, பிராமண சாதியினர் எந்த ஒரு காலகட்டத்திலும் யாருக்கும் எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்ப்படும் வகையில் நடந்துகொள்ளாத அப்பிராணிகள், வெள்ளந்திகள் [அப்படியே இருந்தாலும், மற்றவர்களைப் போலத்தான் சில குறைபாடுகள் இவர்களிடமும் இருந்தது], பெரியார் பிராமனின் நண்பன் என்பது உமது எதிர்க்கருத்து. இதில் எது உண்மை, பொய் என்பதை படிப்பவர்கள் முடிவு செய்யட்டும்.
    \\ஒரு ஆன்மீக வாதி பேசும் 'புனிதமான' வார்த்தைகளைச் சொல்லி கோபமில்லாமல் சாந்தமாக எல்லா மக்களிடமும் அன்பு காட்டி, யாரிடமும் பொறாமை, காழ்ப்பு உணர்ச்சியில்லாத ஆன்மிக வாதிபோல மிகவும் நாகரிகமாகப் பேசி நீங்கள் வெற்றி பெற்றதை வாழ்த்தி விடை பெறுகிறேன்.\\ உம்முடைய ஒவ்வொரு பேச்சிலும் உமது அறியாமை வெளிப்படுகிறது அன்பரே. காந்தி மாதிரி, மகளையே ஒருத்தன் கற்பழிக்க வந்தாலும் அஹிம்சையைக் கடைப்பிடித்து அவனை ஒன்றுமே செய்ய மாட்டேன் என்று சொல்பவன் ஆன்மீக வாதி என்று நினைக்கும் ஆள் நான் இல்லை. நீதியை நிலை நாட்ட, சகோதரர்கள், பாட்டனார், தனக்கு போதித்த குரு என்று பாரபட்சம் பார்க்காமல் கொன்று குவித்த அர்ஜுனனை விட சிறந்த ஆன்மீக வாதி ஒருத்தன் உண்டா என்று யோசியுங்கள் அன்பரே. இவை உமது சிற்றறிவுக்கு எட்டாது அன்பரே. வயது உயர்ந்த அளவுக்கு, உமது உள்ளம் வளரவில்லை, அது பிராமண சாதியின் நலம் என்ற குறுகிய வட்டத்திற்குள் சிக்கித் தவிக்கிறது. இறைவன் உமக்கு நல்ல சிந்தனையைத் தரட்டும் என்று வேண்டுவதைத் தவிர சொல்ல வேறொன்றுமில்லை.

    ReplyDelete
  120. @Jayadev Das சார், விவாதிக்கும்போது விவாத்ப்பொருளைப் பற்றி கடுமையான வார்த்தைகளைப் பிரயோகிக்கலாம். ஆனால் எதிரே விவாதிப்பவர் பற்றியும், அவர் வயது பற்றியும் இவ்வளவு கடுமையாகப் பேசுவது வேண்டாம்..அந்தக் குறிப்பிட்ட பின்னூட்டத்தை நீக்குகிறேன்..

    ReplyDelete
  121. இது பொது வாசகர்களுக்காக.யாருக்கும் பதில‌ல்ல.

    வர்ணம் என்பது பற்றி.

    கீதையில் சொல்லப்படும் வர்ணம் என்னவாக இருந்தாலும் பொதுவாக தொழில்முறை வகுப்புப் பிரிப்புதான் வர்ணாஸ்ரமம் என்று நடைமுறையில் சொல்லப்பட்டு வந்துள்ளது.

    காந்திஜி பனியா சாதி(இங்கே செட்டியார்) இது அவருடைய இரத்த சாதி.
    அவரை வர்ணத்தில் வைஸ்யத்தில் சேர்க்கலாம். அவருடைய பண்பாலும், நன்னடததையாலும்,தியாக புத்தியாலும் வர்ண‌ பிராமண‌னைப் போல் வாழ்ந்தார். வர்ணாஸ்ரமப்படி அவர் பிராமணன் ஆகிவிடுகிறர்.அதை அங்கீகரிக்க அப்போது விஸ்வாமித்ரருக்கு ஒரு வசிஷ்டன் இருந்ததுபோல் இப்போது யாரும் இல்லை. அவர் வர்ணப்படி பிராமணன் என்பதனால் அவருடைய இப்போதுள்ள பனியா சாதி அவரைவிட்டுப் போகவில்லை. அவருடனேயேதான் இருக்கிறது.

    தியரிடிக‌லா அவர் பிராமணர் . ப்ரேக்டிகலா அவர் பனியா.தியரியான வர்ணம் கண்ணால் பார்க்க முடியாத‌து. இரத்த சாதிதான் நடைமுறையில் பார்க்க முடியும்.இந்த சாதி முறை இருக்க வேண்டுமா? அழிய வேண்டுமா?

    ReplyDelete
  122. @ செங்கோவி
    வர்ணம், ஜாதி, இட ஒதுக்கீடு என்று தலைப்பை வைக்கலாம் என்று முடிவு செய்தபோது, வர்ணம்என்ற வார்த்தையின் பொருள் என்ன என்பதை எதன் மூலம் அறிந்து கொண்டுள்ளீர்கள் என்று எனக்குத் தெரியாது. இன்றைக்கு சமூகத்தில் நிலவி வரும் சாதிகளைக் குறிக்கும் என்ற தவறான கருத்தே நிலவி வருகிறது. இதிலுள்ள பெரிய குறைபாடு, பிறப்பின் அடிப்படையிலேயே ஒருத்தரின் வர்ணம் நிர்ணயிக்கப் படும். கீதையின் கூற்றுப் படி அது உண்மையல்ல. மருத்துவர் ஒருத்தரின் மகனாகப் பிறந்ததாலேயே ஒருத்தர் மருத்தவராகிவிட மாட்டார். இந்த வர்ணம் பற்றி பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர் பதம் 4.13 -ல் கூறுகிறார்.

    cātur-varṇyaḿ mayā sṛṣṭaḿ

    guṇa-karma-vibhāgaśaḥ

    tasya kartāram api māḿ

    viddhy akartāram avyayam

    According to the three modes of material nature and the work associated with them, the four divisions of human society are created by Me. And although I am the creator of this system, you should know that I am yet the nondoer, being unchangeable.

    இங்கே guṇa-karma என்ற வார்த்தைக்கு அவனுடைய தகுதி, [கவனிக்க தகுதி மட்டுமேயல்ல], மற்றும் செயல்பாடு இவை இரண்டும் வைத்தே ஒருத்தரின் வர்ணம் முடிவாகிறது. வெறும் பிறப்பால் என்றால் janma-karma என்றல்லவா சொல்லியிருப்பார்? மேலும், ஒருவர் மருத்துவம் படித்த தகுதி மட்டுமே போதாது, அவர் அதை practice செய்யவும் வேண்டும். அதே போல ஒருத்தன் குறிப்பிட்ட வர்ணத்தின் குணங்கள் பெற்றிருத்தலோடு , அந்த குணங்களுக்கேற்ப செயல்படவும் வேண்டும். இதுவே காலப்போக்கில் மாறி, ஒருத்தன் பிராமணப் பெற்றோர்களுக்குப் பிறந்தாலே போதும் அல்லது பிராமணன் குடும்பத்தில் பிறந்தால் மட்டுமே பிராமணன் என்றாகி விட்டது, பல சாதிகளும் உண்டாகிப் போனது. இது மற்ற வர்ணங்களுக்கும், பொருந்தும்.

    ReplyDelete
  123. uவர்ணம் என்பது வெறும் பிறப்பின் அடிப்படையில் அல்ல என்பதற்கு புராணங்களில் எண்ணற்ற உதாரணங்கள் உள்ளன எனினும், சத்யகாமா என்பவரின் உதாரணம் இங்கே குறிப்பிடத் தக்கது. அவர் குருகுலத்தில் சேரும் போது, அவருடைய பெற்றோர் யார் என்ன வர்ணத்தைச் சார்ந்தவர்கள் என்று கௌதம ரிஷி கேட்கிறார். அவர் தனக்குத் தெரியாது என்று கூற, வீட்டிற்குப் போய்க் கேட்டு வா என்று அனுப்புகிறார். அவர் வீட்டில் தாயிடம் சென்று கேட்க, அவரோ தனக்கு பல ஆடவரோடு தொடர்பு இருந்த படியால், யார் தகப்பன் என்று தெரியவில்லை என்று கூறுகிறார். அதை அப்படியே கௌதம ரிஷிஇடம் சென்று கூறுகிறார் சத்யகாமா. உண்மையை மறைக்காமல் பேசும் நீ பிராமணன் என்று கௌதம ரிஷி அவரைச் சொல்கிறார். இங்கே பிறப்பை வைத்து அவர் வர்ணம் என்ன என்று முடிவு செய்யவில்லை, அவரின் செயல் பாட்டை வைத்தே.

    ReplyDelete
  124. The degraded condition in the age of Kali is also described in Padma Purana —

    brahmanah ksatriya vaisah
    sudrah papa-parayanah
    nijacara-vihinas ca
    bhavisyanti kalau yuge

    vipra veda-vihinas ca
    pratigraha-parayanah
    atyanta-kaminah krur
    bhavisyanti kalau yuge

    veda-nindakaras caiva
    dyutacaurya karas tatha
    vidhva-sanga-lubdhas ca
    bhavisyanti kalau dvijah

    vrttyartham brahmanah kecit
    mahakapata-dharminah
    raktambara bhavisyanti
    jatilah smasrudharinah
    kalau yuge bhavisyanti
    brahmanah sudra-dharmina

    "In Kali-yuga, all fourvarnas are devoid of character and proper behavior and are addicted to sin. The
    brahmanas are devoid of Vedic knowledge and sacrifice. Giving up the five sacrifices mentioned in the
    Vedas and all brahminical behavior and consciousness, they engage in inferior activities. They collect charity to satisfy their unlimited appetite for sense enjoyment. Thebrahmanas of Kali-yuga are characterized by the qualities of lust and cruelty. Unholy in deed and thought, they take pleasure in malice and envy. These professional thieves blaspheme theVedas, drink liquor and exploit women for sex, taking great pleasure in adultery and fornication. They accept extremely sinful means of
    maintaining their lives and, posing assadhus, dress in red cloth and wear long hair and beards. In this
    way the wretched so-called brahmanas of Kali-yuga accept the dharma ifsudras."

    ReplyDelete
  125. இந்த வர்ணங்கள் காலப் போக்கில் சீரழியும் என்று ஸ்ரீமத் பாகவதத்திலும், பத்ம புராணத்திலும் சொல்லப் பட்டுள்ளது. [கீழே எழுத்துப் பிழைகளைத் திருத்தி].

    "In Kali-yuga, all four varnas are devoid of character and proper behavior and are addicted to sin. The brahmanas are devoid of Vedic knowledge and sacrifice. Giving up the five sacrifices mentioned in the Vedas and all brahminical behavior and consciousness, they engage in inferior activities. They collect charity to satisfy their unlimited appetite for sense enjoyment. The brahmanas of Kali-yuga are characterized by the qualities of lust and cruelty. Unholy in deed and thought, they take pleasure in malice and envy. These professional thieves blaspheme the Vedas, drink liquor and exploit women for sex, taking great pleasure in adultery and fornication. They accept extremely sinful means of maintaining their lives and, posing as sadhus, dress in red cloth and wear long hair and beards. In this
    way the wretched so-called brahmanas of Kali-yuga accept the dharma of sudras."

    ReplyDelete
  126. This comment has been removed by the author.

    ReplyDelete
  127. வர்ணம் என்ற ஒன்றைப் பற்றி சொல்லும் அதே சாத்திரம், நாளைடைவில் அது கெட்டு குட்டிச் சுவராகும் என்றும் கூறுகிறது, அதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. இதை வைத்து அரசியல் நடத்தி சாதிச் சங்கத் தலைவர்களும், ஓட்டுப் பொருக்கி அரசியல் வாதிகளும் கொள்ளை லாபம் பார்த்து வருகிறார்கள். சில சாதிகள் மற்ற சாதிகளை அடக்கியாண்டு அடித்துத் தின்று வந்துள்ளன. எது இருக்க வேண்டுமோ இல்லையோ, எல்லோருக்கும் அவரவர் தகுதிக் கேற்ப வாழ்வில் முன்னேற சம வாய்ப்பு வழங்கப் படல் வேண்டும், ஒரு மிருகத்தை மற்று மிருகம் அடித்துத் தின்னுவதைப் போல ஜாதி என்ற வட்டத்தை போட்டுக் கொண்டு ஒருத்தர் இன்னொருத்தரை ஏய்த்துப் பிழைக்கும் நிலை மாற வேண்டும் என்பது எனது விருப்பம்.

    ReplyDelete
  128. வர்ணம் கழுதை தேய்ந்து கட்டெரும்பானதைப் போல கலியுகத்தில் இரத்த சாதியாக மாறிப் போயிருக்கலாம்.

    நான் பிராமண சாதியில் இருப்பதால் அவ‌ர்களுடைய மனக்குறைகள், கஷ்டங்கள், நஷ்டங்கள்,எதிர்பார்ப்புக்கள்,எதிர் கொள்ளும் பிரச்சனைகள் அவைபற்றித்தான்பேச முடியும்.அப்போதுதான் இந்த விவாதம் துவங்க‌ப்பட்டதன் நோக்கம் நிறைவேறும்.நான் அப்படிப் பேசுவதாலேயே 'பிராமண சாதியின் நலம்'என்ற குறுகிய புத்தி உடையவன் என்று முத்திரை குத்தப் படலாமா?

    இன்று நாடார்கள், செட்டியார்கள் செய்யும் தன்னலச் செயல்கள் இங்கே கடும் கோபத்துடன் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    அப்பன் தொழிலை பிள்ளைக்கு என்பது, அதாவது தொழில் மூலம் இருக்கும்
    வாரிசு சாதி அமைப்பு இன்று செங்கோல் ஓச்சுவது அரசியலில் தான். தன் பிள்ளையை அரசியல் வாதி ஆக்காத அரசியல் வாதியே இல்லை.

    நிலஉடமையாளர்கள் தங்கள் நிலத்தையும் இழக்காமல் அரசியல், அரசாங்க வேலை எல்லாவற்றிலும் பிற்படுத்தப்பட்டவன்/தாழ்த்தப்பட்டவன் என்ற சலுகையுடன் முன் இருக்கையைப் பெறமுடிகிறது.பிராமண‌னுக்கு அப்படிப்பட்ட வாய்ப்பு இல்லை. என்ன காரணம் என்று பிராமண வாலிபன் கேட்டால் எப்போதோ யுகங்களுக்கு முன்னர் அவனுடைய முன்னோர்கள் வர்ண/சாதி முறைகளைக்கொண்டு வந்து எல்லோரயும் அடக்கி ஆண்டுவிட்டனராம்.
    அடக்கி வைக்கப்பட்டவர்கள் கும்பகர்ணனைபோல் தூங்கிவிட்டு விழித்து எழுந்துள்ளனராம். அதனால் அவர்களுடைய கடைசி ஆள் முன்னுக்குவரும் வ்ரை பிராமண இளைஞன் எந்த உதவியும் இன்றி நடுத்தெருவில் நிற்க வேண்டுமாம்.

    அதற்குத் துணையாக கீதை விளக்கங்கள் என்ன, புராண விளக்கங்கள் என்ன?!
    பிராமணன் எங்ளை டாய்லெட் கழுவச்சொன்னானே என்ற மாய்மாலம் என்ன?!
    கற்பழித்தானே என்ற ஒப்பாரி என்ன!

    பிராமண சாதியில், கிராமக் கோவில்களையும் அதில் உள்ள கலைச் செல்வங்களையும்,வரலாற்றுப் பொக்கிஷங்களையும், பொதுச் சொத்தான அதை 'அபேன்டன்' பண்ணினால் பிற மதத்தவர் ஆக்கரமிப்புச் செய்ய வாய்ப்புள்ளதால், அதனை கட்டிக் காத்துக் கொண்டு, பூஜை போன்ற மரபான விஷயங்களை விடாமல் செய்து கொண்டு (சமபளம் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும்) இன்றளவும் இருக்கின்ற ஏழை குருக்கள் சமூகத்தால் உயர்ந்தவராம். அதனால் அவருக்கு இட ஒதுக்கீடோ, வேறு எந்த சமூக நலன்களோ கொடுக்க மாட்டார்களாம்.

    இதை நான் எடுத்துச்சொன்னால் பிராமண நலன் என்ற குறுகிய எண்ணம் உடையவன்.

    செங்கோவி நாமெல்லோரும் சூத்திரரகளே என்கிறார்.நான் நாம் எல்லோரும் பிராமணர்கள் ஆக வேண்டும் என்கிறேன்.வர்ண தர்மத்தில் சொல்லப்பட்டுள்ளபடி எல்லோரும் பிராமண குணங்களைப் பெற்றால்
    ஒருவருக்கு ஒருவர் சமூக மோதல் வராது.நான் சொல்லுவது நடைமுறை சாத்தியமில்லாது என்று தோன்றலாம்.அதற்கு ஒரு மாடலாக இருக்க முயற்சி செய்யும் ஒரு சில பிராமணர்களையும் குறுகிய் மனம் கொண்டவன், சாதி வெறியன் என்று முத்திரை குத்தி நாட்டைவிட்டு வெளியேற்றி விடுங்கள்.

    பிராமண‌ இளைஞர்கள் வெளி நாட்டுக்கு ஓடுவது மற்ற‌ சாதியினர் தங்களுடைய inferiority complஎக்ஷ் ஆல் 'எங்களுடைய
    மன அமைதியைக் கெடுக்கிறார்கள். பொதுச்செய்தி, அலுவலக நிர்வாகம் எல்லாவற்றிலும் எந்த நடவடிக்கை எடுத்தாலும் 'சாதி புத்திய காமிச்சிட்டியே'
    என்கிறார்கள். ஆகவே இவர்களை விட்டு விலகி ஓடுகிறோம். அங்கே இந்தப் பிரச்சனை இல்லை; வாழ்க்கை வசதிகளும் அதிக சம்பளம், திறமைக்குப் பாராட்டு எல்லாம் கிடைக்கிறது'என்கிறர்கள்.

    ReplyDelete
  129. Description of Age of Kali

    “In the fourteenth chapter of the last canto of the "Paramahamsa Samhita" portion of the Vayu Purana, named "Sri Gauranga Candra Udaya", Lord Brahma prays to the Supreme Lord Sri Hari thus:

    "In the age of Kali, people are spontaneously attracted to sinful activities and are devoid of the regulations of the scriptures. The so-called "twice-born" are degraded by their low-class activities and those who are born in low-class families are alway s hostile to brahminical culture. The twice-born are low-class by quality and do business by selling mantras. These so-called learned men are absorbed in their intestines and genitals and their only identification is the thread they wear. Indulging in overeating, absorbed in bodily consciousness, lazy, intellectually dull and greedy for others properties, they are consistantly against God-consciousness. Due to being overly inclined towards false paths without essence, they manufacture their own processes for self-realisation. Neglecting their actual duties they are expert in blaspheming You (the Supreme Personality of Godhead) and the saintly persons; hence again Mother Earth is in tears due to this burden. Therefore, Oh Lord of the Universe, destroyer of the miseries of the destitute, please mercifully do what is befitting for the protection of the Earth and the living entities."

    ReplyDelete
  130. ஒருத்தன் டிராமாவில் டாக்டராக நடிக்கும் போது கழுத்தில் ஸ்டெதஸ்கோப் போட்டிருப்பான், அவனிடம் போய் வைத்தியமெல்லாம் பார்த்துக் கொள்ள முடியுமா? முடியாது, அதே மாதிரி கலி யுக பிராமணன் எப்படி இருப்பான்? பத்து பைசா பூணூலை போட்டுக் கொள்வதைத் தவிர வேறெந்த தகுதியும் கலி யுகத்தில் பிராமணன் என்று தன்னைத் தானே சொல்லிக் கொல்பவனிடம் இருக்காது என்று புராணங்கள் கூறுகின்றன. அவனை எந்த விதத்திலும் பிராமணனாக எடுத்துக் கொள்ள முடியாது. அதற்கு மேலும் மேலும் நிரூபணங்கள் வந்த வண்ணமே உள்ளன. மனிதனின் உடலை எடுத்துக் கொண்டால் தலை இருக்கிறது, கைகள் உள்ளன, வயிறு உள்ளது, கால்கள் உள்ளன. மனித உடல் இயக்கத்திற்கு இவை அத்தனை உறுப்புகளும் தேவை. வெறும் தலை மட்டும் போது மற்றவை எதற்கு என்று மனநிலை சரியுள்ள எந்த மனிதனாவது சொல்வானா? வெறும் தலையை வைத்துகொண்டால், ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்க்குச் செல்வதெப்படி, தலைக்கு தேவையான போஷாக்கு வயிறு இல்லாமல் எங்கிருந்து வரும்? மனித இனத்தில் நான்கு வர்ணங்களை படைக்கிறவன் நான், சமூகம் சரிவர இயங்க அது தேவை என்று பகவான் சொல்லும் போது, அதை மாற்றி எல்லோரையும் பிராமணன் ஆக்குகிறேன் என்ற அறிவாளியைப் பற்றி என்ன கூறுவது? ஒரு வங்கியில் எல்லோரும் மேனஜராக்கி விட்டால் அதுதான் நாட்டிலேயே சிறந்த வங்கியாகுமா? அடிப்படை அறிவு கொஞ்சமாவது இருக்க வேண்டும், கலி யுக பிராமணனுக்கு அது எங்கே இருக்கும்?

    ReplyDelete
  131. பிராமணன், சத்ரியன், வைஷ்யன், சூத்திரன் என்ற நான்கு வர்ணங்கள் சமூகத்துக்குத் தேவை என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. இந்தப் பிரிவுகள் வெளிப்படையாக ஏற்படுத்தப் படாவிட்டாலும், உள்ளுக்குள் அவரவர் இயல்புக்கேற்ப இருந்தே தீரும். கடவுளே இல்லை என்ற சொல்லும் கம்யூனிச நாடுகளிலும் கூட அவரவர் தகுதிக்கேற்ப வெவ்வேறு வேலையும் ஊதியமும் தருவதை தவிர்க்க முடியவில்லை. ஆனால், என் அப்பன் ஆத்தா உயர்ந்த சாதிக்காரங்க, அதனால நானும் உயர்ந்த சாதிக்காரன், வணங்கத் தக்கவன், உன்கிட்ட இருப்பதை பிடிங்கித் தின்னும் தகுதியைப் பெற்றவன் என்று வரும் போது தான் அது ஏற்கத் தகாததாகிறது. முதுகில் அரிப்பெடுத்தால் சொரிந்து கொள்ள வசதியாக பூணுலைப் பயன்படுத்தும் போது தான் நமக்கு அது ஏற்கத் தகாததாகிறது.

    ReplyDelete
  132. பிராமணர்களால் நான் பாதிக்கப் பட்டேன் என்று சொன்னால், அதற்க்கு நான் ஏன் வழக்கு தொடுக்க வில்லை, சாதி சங்கங்களிடம் போய் முறையிட்டு நீதி கேட்க வில்லை என்றெல்லாம் கேள்விகள் கேட்கப் பட்டது. இங்கே பிராமண சமுதாயம் மற்றவர்களாலோ, சட்டத்தாலோ வஞ்சிக்கப் பட்டது என்றால் ஏன் அவர்கள் கோர்ட்டில் கேசு போட்டு நீதி பெறக்கூடாது? ஊரில் நடக்கும் ஊழலுக்கேல்லாம் கேசு போட்டு நீதியை நிலை நாட்டி வெற்றி கண்ட பிராமண சமுதாயத்துக்கு தனக்கு நடந்த அநீதிக்கு கேசு போட்டு நீதி பெற முடியாதா? "எனக்கு வந்தால் அது ரத்தம், உனக்கு வந்தால் அது தக்காளி சட்டினி". நல்ல நியாயமய்யா இது. இதே பித்தலாட்டத்தை வைத்து எங்களை எத்தனை நாட்களுக்குத்தான் ஏய்ப்பீர்கள் அன்பர்களே?

    ReplyDelete
  133. வர்ணம் இருக்கிறது என்றால் அதனை தற்போது உள்ள சாதி முறை, வர்ண முறை இரண்டில், சாதி முறையை இரத்தம் மூலம் இதோ இருக்கிறது என்று சுட்டிக் காட்ட முடிகிறது. வர்ண முறையை அப்படி எவ்வாறு காட்டுவது? இதோ என் மனதுக்குள் இருக்கிறது பாருங்கள் என்றால் சரியா?

    நான் பாடம் படிக்கும் போது, கடவுள் வழிபடும் போது பிராமணன்,எங்கள் குடியிருப்புப் பகுதியில் இரவு ரோந்து போகும் போது க்ஷத்ரியன், வங்கியில் பணம் போடும் போது அல்லது எடுக்கும் போது அல்லது என் செலவு கணக்கைப் பார்க்கும் போது வைஸ்யன்,என் தோட்டத்தில் வேலை செய்யும் போது நானே சூத்திரன், என் லெட்ரினைக் கழுவும் போது நானே பஞ்சமன் என்று ஒரே மனைதன் 4+1 ஆக இருப்பதாக எல்லாம் பலரும் விளக்கம் கூறியுள்ளனர்.கேட்க நன்றாக இருக்கிறது.நடை முறையில் கவைக்கு உதவுமா?
    ஏட்டுச்சுரைக்காய் கரிக்கு உதவுமா?

    வர்ணத்தை ஒரு கண்ணுக்குத்தெரியாத குண இயல்பு என்று பல முறை சொல்லியாகிவிட்டது.

    'நான் வர்ணத்தால் சூத்திரன் என்று நினைக்கிறேன் என்று எனக்கு பி சி சலுகை கொடு' என்று கேட்டால் தருவார்களா?

    வர்ணம் என்பதற்கான விளக்கம், பிராமணன் யார் என்ற கேள்விக்கு பதில் சொல்வது எல்லாம் ஒரு அகெடமிக் மேட்டர்.யதார்த்தைப் பேச வேண்டும்.

    ReplyDelete
  134. செங்கோவி 'எல்லோரும் சூத்திரரகளே' என்று எழுதியுள்ளரே!இதே கேள்வியை அவரிடம் ஏன் நீங்கள் வைக்கவில்லை? நான்கு வர்ணங்கள் உள்ளன.அவை தலை,தோள், வயிறு, பாதம் எனப்படும். அதில் சூத்திரன் பாதம். பாதம் மட்டும் இருந்தால் போதுமா என்று அவரிடம் ஏன் கேட்கவில்லை?

    செங்கோவி அனைவரும் கீழே தான் போக வேண்டும் என்கிறார் என்று அநுமானித்தால், ஏன் மேலேயும் போகலாமே என்கிறேன் நான். நீங்களோ இருந்த இடத்திலேயே இருக்கலாமே என்கிறீர்கள்.

    நிறைய காபி பேஸ்ட் செய்துள்ளீர்கள்.உங்கள் சொந்தக் கருத்தை மட்டும் எழுதுங்கள். நான் ஜெயமோக‌ன் ஒன்றைத் தவிர எதையும் காபி பேஸ்ட் செய்ய வில்லை. அது போலவே உங்களுடைய தனிப்பட்ட தாக்குதலும் தொடருகிறது.இது வளமையான விவாத முறை அல்ல‌.

    ReplyDelete
  135. என் அப்பன் ஆத்தா பிரமணன், நான் உயர்ந்தவன் வணங்கத்தவன் என்றெல்லாம் இப்போது யாரும் கூறுவது இல்லை.அது போலவே என்னை வணங்கு என்று அப்போதும் யாரும் கேட்டு வாங்கியிருக்க முடியாது. பிராமணனுக்கு மரியாதை அவனுடைய நடத்தை மூலம் அப்போது கிடைத்து இருக்கலாம். அதிலும் வேதம், புராணம் படித்து அதன் வழி நின்ற பிராமணனுக்கு கிடைத்து இருக்கலாம்.

    முன்பே கூறியபடி இருவகை பிராமண‌ர்கள் இருந்துள்ளனர். ஆன்மீகத்தில் மட்டும் இருப்பவர்கள்,உலகாயதத்தில் இருப்பவர்கள் என்று இரு வகை.
    உலகாயதப் பிராமணனுக்கு எப்போதுமே மரியாதை கொடுத்ததில்லை பிற சமூகத்தார்.

    மரியாதை என்பது கேட்டுப் பெருவதில்லை என்பது பிராமணர்களுக்கும் தெரியும்.டிமாண்ட், கமாண்ட் இரண்டுக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் அல்ல நாங்கள்.நான் பிராமணன் அதனால் என்னை மதிக்க வேண்டும் என்று யாரும் கேட்பதில்லை. இந்தக் காலம், நீங்கள் சொல்லுவது போல கலி முத்தி விட்டதால் படிப்பு,நன்னடத்தை, குணம்,வயது எதற்குமே மதிப்புக் கொடுக்காது.அரசியல் அதிகாரம், பணம் இரண்டுக்குத்தான் இக்காலத்தில் மதிப்பு.

    கோவில் குருக்கள், சடங்குகள் செய்விக்கும் பிராமணன் ஆகியவர்கள் கூட என்னை வணங்கு என்று கேட்பதிலை.சொல்லப்போனால் கோவில் குருக்களை எல்லாம் மிகவும் மோசமாக நடத்தும் பலரைக் கண்டு இருக்கிறேன்.

    மீண்டும் சொந்த முறைத் தாக்குதல் செய்கிறீர்கள் அதனைத் தவிர்க்கவும்.

    ReplyDelete
  136. எல்லா அலுவலகங்களிலும், தொழிற் கூடங்களிலும் தொழிற்சங்க‌ம் என்று இருந்தால் அதன் பழைய வரலாற்றைப் பார்த்தால் அதில் பிராமணர்களுடைய பங்கு எத்த‌கையது என்பது தெரிய வரும். தொழிற்சங்க வேலைகளாலேயே
    வாழ்வை இழந்த பிராமணர்கள் கணக்கில் அடங்கா.

    எங்கள் சாதிக்கு அரசு வேலைகள் இல்லாமல் போய்ப் பல்லாண்டுகள் ஆயின.
    எங்கள் இளைஞர்களுக்கு கால மாற்றத்தால் அர‌சு வேலையின் மீது நாட்டம் குறைந்து போய் விட்டது.புகார் செய்யாமல் விலகி வேறு பாதைகளைத் தேர்ந்து எடுக்கிறார்கள்.

    கோவில் அர்ச்சகர், கோவில் பரிசார‌கர்,தீவட்டி ஏந்துபவர், சவுண்டி பிராமணன்,பிணம் தூக்குபவன் போன்ற‌வர்களுக்க்காக முயன்ற அளவு அரசிடம்
    சலுகைகள் கேட்டு மனு கொடுத்து வருகிறோம்.

    நீங்கள் கூறியது உங்கள் தனிப்பட்ட பிரச்சனை. அதற்கு சங்கம் மூலம் நிவாரணம் காணலாமே என்றேன்.

    தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்ட பிராமணன் சட்ட நடவடிக்கை எடுத்து பல கேஸ் லா உண்டாக்கியிருப்ப்தை பலரும் அறிவார்கள்.

    எனக்குத் தக்காளிச் சட்னி பிடிக்காது.

    ReplyDelete
  137. வாதம் செய்யும் போது, கொஞ்சமாவது அடிப்படைகளைத் தெரிந்து கொண்டு வாதமிட்டால் உண்மையைச் சொல்லி விளங்க வைப்பது எளிதாக இருக்கும். அடிப்படை கொஞ்சம் கூட இல்லாமல், வெறுமனே சாதி மீதி பற்று மட்டும் வைத்துக் கொண்டு, மற்றதை பற்றி அரைகுறை ஞானம், கேள்வி ஞானம், குருட்டு நம்பிக்கை அல்லது அசட்டுத் தனமாக உளறுவது இப்படிப்பட்ட ஒருத்தரை நான் என்ன சோப்பு போட்டு வெளுப்பது? வர்ணம் என்பது வெறும் கற்பனையா? இன்றைக்கு இல்லாததா? இப்படியெல்லாம் அடித்து விடுபவரை வைத்துக் கொண்டு நான் எங்கே போய் முட்டிக் கொள்வது? இந்த மாதிரி நபர்களுக்கு அரிச்சுவடி சொல்லிக் கொடுத்தே நான் ஆண்டியாகிவிடுவேன் போலிருக்கிறதே?

    ReplyDelete
  138. இந்த பிரமாண்டத்தையே படைத்து உன்னையும் என்னையும் படைத்த ஒருத்தன் சொன்ன பகவத் கீதை உமக்கு எட்டுச் சுரைக்கயாகி விட்டதா? இந்த மாதிரி நினைப்பை வைத்துக் கொண்டு நீர் கோவிலில் மணியாட்டி அங்கே வருபவன் எங்கே பக்தனாவது? சத்வம், ரஜோ, தமோ என்று மூன்று குணங்கள் ஜட இயற்க்கைக்கு [Three modes of material nature] உண்டு. பிராமணன் சத்வ குணத்திலும், சத்திரியன் ரஜோ குணத்திலும், ரஜோ+தமோ குணத்தில் வைஷ்யனும், தமோ குணத்தில் சூத்திரனும் ஆட்கொள்ளப் பட்டு செயல் படுவார்கள். இதில் யாரும் இந்தக் குணங்களில் எந்நேரமும் இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. பிராமணன் சில சமயம் தமோ குணத்தில் இருக்கலாம், சத்திரியன் சத்துவ குணத்தில் சில சமயம் இருக்கலாம். ஆனால், predominantly அவர்கள் எந்த குணத்தில் கட்டுப் படுத்தப் படுகிறார்களோ அது அவர்களது வர்ணம். செங்கோவி, எல்லோரும் சூத்திரர்கள் என்று சொன்னதும் உண்மையே. Kalo sutra sambhavah [கலி யுகத்தில் எல்லோரும் சூத்திரர்கள்] என்றும் சொல்லப் பட்டுள்ளது. கலி ஆரம்பித்து 5000 வருடங்களாகிறது, ஆனால் அதன் மொத்தம் காலம் 4,32,௦௦௦ வருடங்கள். தற்போதைய நிலவரத்தில் பிராமணன், சத்ரியன் எண்ணிக்கை சமூகத்தில் மிகக் குறைவு, சில வைஷ்யர்களும் மிச்சம் எல்லாம் சூத்திரர்கலுமே உள்ளனர். கலி முத்தும் சமயத்தில் கிட்டத் தட்ட எல்லோரும் சூத்திரர்களாகி விடக் கூடும். இது இறைவனின் படைப்பு. இதில் இல்லை என்று நீர் சொன்னால் அது உமது அறியாமை. ஆனால், இதை வைத்து வேலைவாய்ப்பு கிடைக்குமா, பள்ளியில் சீட்டு கிடைக்குமா, காசு பண்ண முடியுமா என்றெல்லாம் நீர் தேர்ந்தெடுத்த அரசிடம் போய்க் கேட்க வேண்டிய கேள்வி. நீதிமன்றத்திடம் போய்க் கேட்க வேண்டிய கேள்வி. என்னிடமல்ல.

    ReplyDelete
  139. \\கோவில் குருக்கள், சடங்குகள் செய்விக்கும் பிராமணன் ஆகியவர்கள் கூட என்னை வணங்கு என்று கேட்பதிலை.சொல்லப்போனால் கோவில் குருக்களை எல்லாம் மிகவும் மோசமாக நடத்தும் பலரைக் கண்டு இருக்கிறேன்.\\ ஏன் அப்படியே காஞ்சிபுரம் பூசாரி தேவநாதனைப் பத்தியும் சொல்லலாமே.

    ReplyDelete
  140. \\
    செங்கோவி அனைவரும் கீழே தான் போக வேண்டும் என்கிறார் என்று அநுமானித்தால், ஏன் மேலேயும் போகலாமே என்கிறேன் நான். நீங்களோ இருந்த இடத்திலேயே இருக்கலாமே என்கிறீர்கள்.\\ இது உம்மாலோ, என்னாரோ தீர்மானிக்கப் படுவதல்ல, இறைவனின் தீர்மானம், யாரும் மாற்ற முடியாது.

    ReplyDelete
  141. \\நிறைய காபி பேஸ்ட் செய்துள்ளீர்கள்.உங்கள் சொந்தக் கருத்தை மட்டும் எழுதுங்கள். நான் ஜெயமோக‌ன் ஒன்றைத் தவிர எதையும் காபி பேஸ்ட் செய்ய வில்லை. அது போலவே உங்களுடைய தனிப்பட்ட தாக்குதலும் தொடருகிறது.இது வளமையான விவாத முறை அல்ல‌.\\ என் சொந்தக் கருத்தை சொல்லுமளவுக்கு நான் அறிவாளியுமல்ல, தகுதி வாய்ந்தவனும் அல்ல. நான் காபி பேஸ்ட் செய்ததை விட அதிகமாக எழுதியும் இருக்கிறேன். நான் எழுதியதற்கு ஆதாரம் என்ன என்பதற்கு புராணங்களில் இருந்து கோடிட்டு காண்பித்திருக்கிறேன், அவற்றை நான் எழுதவில்லை, வியாசதேவர் எழுதியிருக்கிறார், அதை நான் காபி பேஸ்ட் தான் செய்ய முடியும். மேலும், முன் சொன்னது போல வழக்காடு மன்றத்தில் நாட்டின் சட்ட புத்தகங்களை வைத்துதான் வாதாட வேண்டும், வக்கீல் என்ன நினைக்கிறார் என்பதை வைத்து அல்ல. எனக்கு ஆதாரம் வேதங்கள், புராணங்கள், இதிகாசங்களே. மற்றபடி தனிப்பட்ட மனிதன் சொந்தமாக நினைப்பது என்பது குப்பைக்குச் சமம். அதற்க்கு நான் மதிப்பளிப்பதில்லை.

    ReplyDelete
  142. ஊருக்கு உபதேசம்.
    இவர்களில் ஊரிலுள்ள ஊழலை ஒழித்துக் கட்டி இந்தியாவை ஊழலற்ற நாடாக மாற்ற வல்லமை படைத்த சுப்ரமனியம் சுவாமி, ட்ராஃபிக் ராமசாமி என்று சட்ட வல்லுனர்களும் இருக்கிறார்கள். இருந்தாலும் இவர்கள் கஷ்டத்துக்கு அதே கோர்ட்டையும், நிர்வாகங்களையும், அரசாங்கத்தையும் நாடி தீர்த்திருக்கலாமே? அது முடிய வில்லையாம், அதனால் நாட்டை விட்டே ஓடி விட்டார்களாம், தொழிலை மாற்றி விட்டார்களாம். என்னெனில் இவர்கள் ஒண்ணுமே தெரியாத அப்பாவிகளாம், வெள்ளந்திகளாம். ஆனால் மற்றவர்கள் மட்டும் அரசாங்கத்தையும் சட்டத்தையும் நாடி வெற்றி பெரும் சாமர்த்திய சாலிகலாம். அதனால் இவர்கள் \\நீங்கள் அவற்றையெல்லாம் தொகுத்து ஒரு புகார் மனுவை அந்தந்த நிர்வாகங்களிடம் ஏன் கொடுக்ககூடாது?அல்லது அரசாங்கத்திடம் கொடுக்ககூடாது?\\ என்று ஐடியா மாத்திரம் கொடுப்பார்களாம். என்ன கொடுமை சார் இது?

    ReplyDelete
  143. கிட்டத்தட்ட இந்த விவாதம் இந்த நிலைக்கு கொண்டுசெல்லும் சக்தியுடையது என்பது புரிந்தே ஹன்சிகாவின் இடுப்பை ஆராய்ச்சி செய்யவேண்டிய முக்கிய வேலை இருக்கிறது என்று எஸ்கேப் ஆனேன்..

    என் ஊரிலே என் தாத்தா திராவிடர் கழகத்துத் தலைவராக இருந்தார்..பெரியாரை முதன்முதலில் ஊருக்கு அழைத்துவந்து என் பெற்றோரின் திருமணத்தை தந்தைபெரியாரின் தலைமையில் நடத்திவைத்தார்..நான் பிறந்த காலத்தில் இருந்து இந்த விவாதங்களை நிறைய கேட்டிருக்கிறேன்..பண்ணியும் இருக்கிறேன்..


    அதன் பின்னும் நடைமுறையிலும் நிறைய அனுபவித்திருக்கிறேன்..சுய அனுபவத்தில்..கிட்டத்தட்ட நாற்பதை நெருங்கிக்கொண்டிருக்கிறேன்..தீராத பிரச்சினை இது..survaival of the fittest என்கிற அளவிலே மாற்றமென்பதைத் தவிர மற்றெதுவும் மாறும் என்று சுழற்சியில்தான் இந்த வர்க்க ஆளுமையின் வரலாறு பயணிக்கும்...

    தீராதவிவாதம் தீவிரவாதம்..

    இதற்கு எல்லையில்லை..பாகிஸ்தான் இந்தியா என்கிற அளவில்தான் சென்று முடியும்..

    விவாதத்தில் ஈடுபட்ட முக்கியஸ்தர்கள் இருவருமே தங்கள் தரப்புக்கு பல விஷயங்களை எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள்..அனுபவத்தில் பாதிக்கப்பட்டோரின் வலியும் வேதனைகளும் இரு தரப்பிலும் சொல்லப்பட்டு ஆங்காங்கே பல ஆதாரச் செய்திகள் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது என்பது இந்தப் பதிவை எதிர்காலத்து சமுதாயம் படிக்கும்போது அவர்களுக்கு இந்த விஷயம் குறித்தான பெரிய தேடலின் சுமையைக் குறைக்கும்..

    அந்த பெரும் சகாயத்தை செய்திருக்கிறீர்கள் என்ற பெருமையுடன் நிறைவுடன் இந்த அளவிலே இந்த விவாதத்தை முடித்துக்கொண்டு மன அமைதிக்கு வழிகோள்வது பெரியவர் இருவருக்குமே நல்லது என்பதே இந்த சிறியவனின் கருத்து..

    ReplyDelete
  144. பிளாகர் மைனர்வாளின் கருத்தை ஏற்கிறேன் நன்றி!

    ReplyDelete
  145. உண்மை கசக்கும் என்பார்கள். கசந்தாலும், அதைச் சொல்லாமலும் இருக்க முடியாது. இந்த இக்கட்டான நிலையைத் தவிர்க்கவே முன்னரே நான் நிறுத்திக் கொள்கிறேன் என்று சொன்னேன். நண்பர் ஒருத்தரின் பின்னூட்டம் எண்ணம் மேலும் பேச வைத்துவிட்டது. ஒரு நடிகையின் கண்ட கண்ட இடங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்கிறேன் என்று கூறுவதாலேயே வயது நாற்பதிலிருந்து பதினாறுக்கு குறைந்து இளமையாகி விடாது. அதே மாதிரி பகவத் கீதையைப் பற்றி பேசுவதாலேயே 'பெரியவர்' என்று ஆகிவிடாது. பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கீதையை போதிக்க பீஷ்மர், துரோணர் போன்ற வயதான கிழங்கட்டைகளில் ஒருத்தரை தெரிவு செய்ய வில்லை, இளம் வயதில், இல்லறத்தில் இருக்கும் அர்ஜுனனைத்தான் தேர்ந்தெடுத்தார். இளமையில் கல் என்ற அழகிய தமிழ்ப் பழமொழி ஒன்று உண்டு. நல்லதை இளமையில் கற்றதான் அதன் படி சீரிய வாழ்க்கையை நடத்தி பயனுடையதாக ஆக்க முடியும். எல்லாம் முடிந்த பின்னர் அறிந்து இது முன்னரே தெரியாமல் போய் விட்டதே என வருந்தி உபயோகமில்லை. கல்வியில் சிறந்த கல்வி, கற்க கசடற கற்பவை என்ற வள்ளுவரின் வாக்குக்கு ஏற்ற கல்வி பகவத் கீதையே. அதை ஏட்டுச் சுரைக்காய் என்றும், பயனற்றது, உணர முடியாதது, கற்பனையானது என்றும் சமூகத்திற்கு வழிகாட்டிகளாய் இருக்கவேண்டியவர்கள் என்று வேதங்களால் சொல்லப் பட்ட ஒருத்தரின் வாயிலிருந்து வருவது வேதனைக்குரியது. அப்படியானால் இறைவன் விஷயம் தெரியாதவனா? நமக்கு எதை போதிக்க வேண்டும் என்று தெரியாமல் கீதையை சொல்லியிருக்கிறானா? நாத்திக அரசியல்வாதிகள் இப்படிப் பேசலாம், இறைவனுக்கு சேவை செய்ய அர்ப்பணித்தவர்கள் நாங்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் இப்படிப் பேசலாமா? நான் இனி நேரடி கருத்து மோதலில் ஈடுபடப் போவதில்லை, ஆனபோதிலும் செங்கோவியின் வலைப்பூவிற்கு உங்களது பின்னூட்டங்கள் தேவை, ஆகையால் இந்தத் தொடரின் மற்ற பதிவுகளுக்கும் விருப்பப் பட்டால் தொடர்ந்து பின்னூட்டமிடுங்கள் என்று கூறி நிறுத்திக் கொள்கிறேன்.

    ReplyDelete
  146. வாதங்களில் தனிப்பட்ட தாக்குதலைத் தவிர்ப்பதுதான் வாதத்தினை மேல் எடுத்துசெல்லும்.வாதம் புரிவது நமது பாரதத்தில் தொன்று தொட்டு இருந்து வருகிறது.தர்க்கம், தர்க்க சாஸ்திரம்,ஞாயம் என்றெல்லாம் இதற்கு ஒரு மரபு
    உள்ளது விதி முறைகள் உள்ளன.அதன் நீட்சியே பட்டி மன்றம்.

    எதிர்வாதம் செய்பவர்கள் தான் படித்த புத்த‌கங்களைப் படித்திருக்க மாட்டார்கள் என்று ஒரு வாதம் செய்பவர் நினைக்ககூடாது. எதிர்வாதி தன்னை விட இந்த வாதத்தில் நிறைய தயாரிப்பில் இருப்பார்;நாம் வாதத்தினை ஜாக்கிரதையாகக் கையாள வேண்டும் என்ற புரிதல் அவசியம்

    கோபம் இல்லாமல் வாதம் செய்ய வேண்டும்.கோபம் பட‌படப்பில் தேவையற்ற‌ சொற்களைக் கொட்ட வைத்துவிடும்.எடுத்துக்காடாக 'புடுங்குதல்' குண்டி' போன்ற கொச்சைச் சொற்கள் இங்கே கோபத்தால் கொட்டப்பட்டன.

    அதைப் போல ஒரு நடுநிலமையில் பேசுபவர்களை நாம் அங்கீகரிக்க வேண்டும். அவர்களையும் நாம் 'கோதாவில் இறங்குடா' என்று சவால் விடக்கூடாது.

    இந்த பிளாகிலும் சரி,மற்ற ஆயிரக்கணக்கான பிளாகிலும் சரி ஜாலியாகப் பொழுதைக் கழிக்க வருபவர்களையே அதிகம் காணலாம்.அவர்களை ஆட்டுக்குக் குழை போல சினிமா நடிகைகள் படம் போன்ற கவர்ச்சி செய்து
    கூட்டம் கூட்டி அவர்களுக்கு ஊறுகாய் போல சமூகப்பிரச்சனைகளை வைக்கிறார் செங்கோவி.

    மைனர் நல்ல பிளாகர். எப்பவுமே அவர் பின்னூட்டம் ஜாலியாக இருக்கும்.
    ஆனால் அந்த ஜாலிக்குள் கொஞ்சம் 'பொடி' இருக்கும்.அவரை நான் ஜாலியாகவும் சந்தித்து உள்ளேன்.சீரியசாகவும் சந்தித்து உள்ளேன்.நேரில் அல்ல.நெட்டில் தான்.

    இங்கே வந்து சொன்ன பிறகுதான் புரிந்து கொண்டேன் அவர் தி.க குடும்பம் என்று.இதுவரை எங்கள் நட்பு நாளொரு வண்ணமும் பொழுதொரு ஜாலியாக
    வளர்ந்து வருகிறது.நானோ சாதி அய்யர்.கடவுள் நம்பிக்கையாளன்.திராவிடக் கட்சிகளைப் பற்றி விமர்சனம் உள்ளவன். எதிர் எதிர் துருவங்கள். மனித நேயத்தால் இன்னும் நேரில் சந்திக்காமல் நாங்கள் நட்புப் பாராட்டுகிறோம்.

    எதிர் வாதம் செய்பவர்கள் எதிர் தரப்புத்தான். எதிரி அல்ல. வாதம் செய்வது வெற்றி தோல்விக்காக அல்ல.செய்தியை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கத்தான்.

    இங்கே தேவையில்லாமல் மைனர்வாள் முதுகில் குத்து விழுந்து இருக்கிறது.

    //'ஒரு நடிகையின் கண்ட கண்ட இடங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்கிறேன் என்று கூறுவதாலேயே வயது நாற்பதிலிருந்து பதினாறுக்கு குறைந்து இளமையாகி விடாது.'//

    மைனர்வாள் தன் வாலிபத் தனத்தை நிரூபீக்க இந்தக் கேள்வி கேட்டவர் ஒரு ஏற்பாடு செய்து தரட்டும்.அல்லது தான் கொட்டிய சொற்களைத் திரும்பப் பெறட்டும்.

    எந்த ஆட்டத்திலும் அம்பையரையோ, ரெஃபரியையோ, மாடெரேட்டரையோ
    நல்ல ஆட்டக்காரன் உதைப்பதில்லை.

    இங்கே ஒரு அம்பையர் உதை பட்டிருக்கிறார்.முதுகில் குத்தப்பட்டிருக்கிறார்.

    இதற்கு என்ன தீர்வு?

    ReplyDelete
  147. \\வாதங்களில் தனிப்பட்ட தாக்குதலைத் தவிர்ப்பதுதான் வாதத்தினை மேல் எடுத்துசெல்லும்.\\ நான் தனிப்பட்ட முறையில் உம்மைப் பற்றி எந்த தாக்குதலும் செய்யவில்லை அன்பரே. ஆனபோதிலும் சில தவறான கருத்துக்களை வைக்கும் போது அவற்றைப் பற்றி நீர் அறிந்திருக்க வில்லை என்று மட்டும் சொல்லவேண்டி வந்தது. அது எவ்வாறு தவறு என்றும் ஆதாரத்துடன் கூறியிருக்கிறேன். இது தவிர்க்க முடியாதது.

    ReplyDelete
  148. \\வாதம் புரிவது நமது பாரதத்தில் தொன்று தொட்டு இருந்து வருகிறது.தர்க்கம், தர்க்க சாஸ்திரம்,ஞாயம் என்றெல்லாம் இதற்கு ஒரு மரபு உள்ளது விதி முறைகள் உள்ளன.அதன் நீட்சியே பட்டி மன்றம்.\\ அந்த கால கட்டத்தில் வாதம் புரிந்தாலும், விதிமுறைகளின் படிதான் வாதம் செய்வார்கள், இரண்டு தரப்புமே விஷயம் அறிந்தவர்களாக இருப்பார்கள். பேசும்போது பொய்யை அள்ளி வீச மாட்டார்கள், தர்க்க ரீதியாக தாங்கள் சொன்னது தவறு என்று உணர்ந்த உடன் தயங்காமல் தோல்வியைப் ஒப்புக் கொள்ளவும் செய்வார்கள். வாதத்தில் மட்டுமல்ல இரண்டு ஷத்ரியர்கள் சண்டை போடும்போதும், எதிராளி தனக்கு நிகரான பலத்துடன் இருக்கிறானா என்று பார்த்துவிட்டுத்தான் சண்டையிலே இறங்குவான். அவன் நோஞ்சான் என்று தெரிந்தாலோ, அல்லது பலமற்றவன் என்று சரணடைந்துவிட்டாலோ அவனுடன் ஒரு சத்ரியன் சண்டையிடவே மாட்டான். இங்கே அப்படியா நடந்தது? பல ஆண்டு காலமாக பிராமன் சமுதாயத்தால் மற்றவர்கள் வஞ்சிக்கப் பட்டுள்ளார்கள் என்ற உண்மையை அல்லவா மூடி மறைக்கப் பார்க்கிறீர்? பெரியார் கூட பிராமணர்களுக்கு எதிராக எந்தப் போராட்டமும் செய்யவில்லை என்று வாய் கூசாமல் பொய்யை அல்லவா அள்ளி வீசியுள்ளீர்? இது கூடப் பரவாயில்லை, வேதம், புராணம் என்று அறிந்திருக்காவிடாலும் குறைந்த பட்சம் பகவத் கீதையையாவது ஒரு பிராமணன் என்று சொல்லிக் கொள்பவர் அறிந்திருக்க வேண்டாமா? அதிலும் அடிப்படை கூட தெரியவில்லை. லாஜிக் படி சிறு பிள்ளைக்கு கூறுவது போல எடுத்துச் சொன்னாலும், மீண்டும் மீண்டும் அடுத்து உமது அறியாமையை வெளிப்படுத்தும் வண்ணம் கேள்விகளைக் கேட்கிறீர். விவாதம் என்றால் இரு தரப்புக்கும் விஷயம் தெரிந்திருக்க வேண்டும். இங்கே அவ்வாறு இருக்க வில்லை. மனசாட்சிக்குத் தெரிந்தே பொய்யை இஷ்டத்துக்கும் அள்ளி விட்டு விட்டு விவாதம் புரிந்தேன் ஜெயித்தேன், தோற்றேன் என்று சொல்வதில் அர்த்தமேயில்லை.

    ReplyDelete
  149. \\எதிர்வாதம் செய்பவர்கள் தான் படித்த புத்த‌கங்களைப் படித்திருக்க மாட்டார்கள் என்று ஒரு வாதம் செய்பவர் நினைக்ககூடாது. \\ ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். இங்கே ஒரு பானை சொற்றையுமே பதம் பார்த்தாயிற்று. ஒன்னும் சரக்கு இல்லை. ஒருவர் வாயைத் திறக்காத வரை அவரது அறியாமை வெளிப்படாது, தோற்றத்தை வைத்து எது அறிஞர் என்று மற்றவர்கள் நினைக்கக் கூடும். வாயைத் திறந்து விட்டால் முடிந்தது, அவரது சுயரூபம் வெளிப்பட்டு விடும். ஆன்மீக குருவை எவ்வாறு அடையாளம் காண்பது, ஜட இயற்கையின் முக்குணங்கள் [Three modes of material nature சத்வ, ரஜஸ், தமஸ்] இவையெல்லாம் அடிப்படை விஷயங்கள். இதைப் பற்றியெல்லாம் உமது ஞானம் எந்த அளவுக்கு உள்ளது? கேமராவை வைக்கவில்லை என்றால் ரஞ்சிதாவிடம் ருசி பார்த்தவன் கூட உமது கணக்குப் படி வணங்கத் தக்கவனாக ஆகியிருப்பான். கூட்டம் கூட்டுபவன் எல்லாம் ஆன்மீக குரு என்கிறீர். கீதையை ஏட்டுச் சுரைக்காய் என்கிறீர்? இதுதான் நீர் கற்ற லட்சணமா? கேட்டால் இது தலைப்பில் வரவில்லை என்கிறீர், தலைப்பில் வராவிட்டாலும் உமக்கு அடிப்படையே தெரியவில்லை என்பது பொய்யாகிவிடுமா?

    ReplyDelete
  150. \\எதிர்வாதி தன்னை விட இந்த வாதத்தில் நிறைய தயாரிப்பில் இருப்பார்;நாம் வாதத்தினை ஜாக்கிரதையாகக் கையாள வேண்டும் என்ற புரிதல் அவசியம்.\\ இந்தப் புரிதல் உமக்கு இருந்திருக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக இல்லாமல் போய் விட்டது.

    ReplyDelete
  151. \\கோபம் இல்லாமல் வாதம் செய்ய வேண்டும்.கோபம் பட‌படப்பில் தேவையற்ற‌ சொற்களைக் கொட்ட வைத்துவிடும்.எடுத்துக்காடாக 'புடுங்குதல்' குண்டி' போன்ற கொச்சைச் சொற்கள் இங்கே கோபத்தால் கொட்டப்பட்டன.\\ வேதங்களில் சொன்னவை எவையும் பொய்யாகாது என்ற அசைக்க முடியாத நம்பிக்கை ஒரு பிராமணனுக்கு இருக்க வேண்டும். ஆனால் நீரோ பகவான் சொன்ன கீதையை ஏட்டுச் சுரைக்காய் என்றும், அது கண்ணில் காணமுடியாத ஒன்று என்றும், கற்பனையானது என்றும் கூறியுள்ளீர். இது வெட்கக் கேடு. நான் கோபத்தில் சொன்னாலும் மறைமுகமாக அதனுள் ஊசி வைத்து வீசவில்லை. நீர் நயமான வார்த்தைகளில் நஞ்சை கலந்து நீர் கொட்டியுள்ளீர்.

    ReplyDelete
  152. \\அதைப் போல ஒரு நடுநிலமையில் பேசுபவர்களை நாம் அங்கீகரிக்க வேண்டும். அவர்களையும் நாம் 'கோதாவில் இறங்குடா' என்று சவால் விடக்கூடாது.\\ நான் அவ்வாறு அழைக்கவில்லை.

    ReplyDelete
  153. \\மைனர் நல்ல பிளாகர். எப்பவுமே அவர் பின்னூட்டம் ஜாலியாக இருக்கும்.
    ஆனால் அந்த ஜாலிக்குள் கொஞ்சம் 'பொடி' இருக்கும்.அவரை நான் ஜாலியாகவும் சந்தித்து உள்ளேன்.சீரியசாகவும் சந்தித்து உள்ளேன்.நேரில் அல்ல.நெட்டில் தான்.\\ அது உமது விருப்பம்.

    ReplyDelete
  154. \\இங்கே தேவையில்லாமல் மைனர்வாள் முதுகில் குத்து விழுந்து இருக்கிறது.\\ இது குறுக்கு புத்தி, தன்னால் சமாளிக்க முடியாத பட்சத்தில் அப்பாவியாக வேறு யாரையாவது நடுவில் இழுத்துவிட்டு அவர்கள் இருவரும் அடித்துக் கொள்ளட்டும், நாம் கொஞ்சம் நிம்மதியாக வேடிக்கை பார்க்கலாம் என்ற அற்ப புத்தி. இங்கே செல்லாது.

    ReplyDelete
  155. \\மைனர்வாள் தன் வாலிபத் தனத்தை நிரூபீக்க இந்தக் கேள்வி கேட்டவர் ஒரு ஏற்பாடு செய்து தரட்டும்.அல்லது தான் கொட்டிய சொற்களைத் திரும்பப் பெறட்டும்.\\ ரொம்ப கீழ்த்தரமான சிந்தனை. இவ்வாறெல்லாம் நீர் பேசி விட்டு நான் கீழ்த்தரமான வார்த்தைகளை பயன் படுத்துவதாகக் கூறுகிறீர். உமது வயதுக்கு ஏற்றவாறு நாகரீகமாக நடந்து கொள்ளும் அன்பரே.

    ReplyDelete
  156. \\எந்த ஆட்டத்திலும் அம்பையரையோ, ரெஃபரியையோ, மாடெரேட்டரையோ
    நல்ல ஆட்டக்காரன் உதைப்பதில்லை.
    இங்கே ஒரு அம்பையர் உதை பட்டிருக்கிறார்.முதுகில் குத்தப்பட்டிருக்கிறார்.
    இதற்கு என்ன தீர்வு?\\ உம்மால் இயலாது என்பதால் வேறு யாரையோ இழுத்துவிடும் செயல். வெட்கக் கேடு.

    ReplyDelete
  157. யார் ஒருவர் பொறுமையிழந்து கத்தத் துவங்கிறாரோ அவர் பக்கம் ஞாயம் இல்லை என்பதை குழந்தை கூடப் புரிந்து கொள்ளும்.

    நமது பக்கம் 'வீக்' ஆகும் போது தான் நாம் கத்தத் துவங்குவோம்.அமைதி இழப்போம். நான் இந்த விவாததில் எங்கும் கோபமாகப் பேசவில்லை.
    நீங்கள் ஆவேசமாக கோபத்தில் என்ன பேசுகிறோம் என்று புரியாமல் பேசி வருகிறீர்கள்.

    அனைத்து பிராமண‌ர் அல்லாதவர்களையெல்லாம், அந்தக் குலத்து பெண்களையும் உங்கள் சொற்களால் மிகவும் கேவலப்படுத்தினீர்கள். அடுத்து நாடார்கள் செட்டியார்களைக் காயப்படுதினீர்கள்.இப்போது ஒரு நடுநிலை வாதியை அவருடைய நகைசுவையைப் புரிந்து கொள்ளாமல் காயப்படுத்தினீர்கள்.அவர் ஒரு நாத்திகர். நீங்கள் ஒரு ஆத்திகர். ஆத்திக வாதியின் லட்சணத்தைப் பார் என்று அவர் பின்னூட்டம் இட்டால் என்ன செய்வீர்கள்?

    நான் மிகவும் நாசுக்காக 'ஏற்பாடு'என்று கூறினேன்.நீங்கள் சொல்லி இருக்கும் சொற்களை நான் சொல்லியிருந்தால் உங்க‌ளுக்கு இருக்கும் கோபத்தில் என் தாய், தாரம், சகோதரியை கேட்டு இருபீர்கள். அவ்வளவு ஆத்திர புத்தி உங்களுக்கு.

    இரண்டு பாயிண்டில்தான் பிடித்துத் தொங்கிக் கொண்டு இருக்கிறிர்கள்.

    ஒன்று நான் குரு என்று பொது மக்கள் மற்றும் பல பிராமணர்கள் ஏற்றுக் கொண்டுள்ள அப்பிராமணர் குருமார்கள் உங்கள் கருத்துப்படி குருமார்கள் அல்ல. நான் அவர்களை இக்கால சாதிப் பிராமணன் அக்கால விஸ்வாமித்ரருக்கு வர்ண்ப் பிராமணன் கொடுத்த ஏற்றத்தை இப்போது கொடுத்துள்ளான் என்று கூறிய காரணத்தை ஒதுக்கிவிட்டு, குருவிற்கான இலக்கணத்தை போதிக்கிறீர்கள்.இங்கேயும் பங்காரு அடிகளார், சத்ய சாயி பாபா, மாதா அமிர்தானந்தமயி,விவேகானந்தர்,சின்மயானந்தர் ஆகியோரின் பகதர்களை புண்படுத்துகிறீர்கள்.மேலும் அந்த குருமார்கள் தோன்றிய சாதி, குலம், இனத்தையும் கேவலப் படுத்துகிறீர்கள்.

    அப்படியானால் நீங்கள் குரு என்று இலக்கணப்படி யாரை நினைக்கிறீர்களோ அவரை இங்கே சொல்ல வேண்டும்.இப்படிப்பட்ட சீடரை உருவாக்கிய அந்த குருபீடத்தினையும் நாங்கள் அறிந்து கொள்கிறோம்.

    (தொட்ரும்)

    ReplyDelete
  158. \\யார் ஒருவர் பொறுமையிழந்து கத்தத் துவங்கிறாரோ அவர் பக்கம் ஞாயம் இல்லை என்பதை குழந்தை கூடப் புரிந்து கொள்ளும். நமது பக்கம் 'வீக்' ஆகும் போது தான் நாம் கத்தத் துவங்குவோம்.அமைதி இழப்போம். \\ தனியாகப் போகும்போது ஒரு திருடனிடம் மாட்டிக் கொள்வதாக வைத்துக் கொள்வோம். திருடன் சப்தன் போட மாட்டாம், நம்மையும் சப்தம் போடாதே என்பான். ஆனால், நோகாமல் பிளேடை வைத்து நமது பாக்கெட்டை அறுப்பான். அப்போது நாம் என்ன செய்வோம்? கத்தத்தான் செய்வோம். அப்போது ஞாயம் திருடன் பக்கம் இருக்கிறது என்று அர்த்தமா? ஆண்டாண்டு காலமாக பிராமண சாதியினர் மற்ற சாதிகளை முன்னேற விடாமல் அடக்கியாண்டு வந்தது வரலாறு. இதை இல்லை என்று நிரூபிக்க முடியுமா? அப்படி நடந்திருக்க முடியுமா இப்படி நடந்திருக்க முடியுமா - என்று பதில் கேள்வி கேட்பதோ, இல்லை உண்மைக்குப் புறம்பான பொய்யை அள்ளி வீசுவதாலோ, வரலாறு பொய்யாகி விடாது. வாழ்நாள் முழுவதும் பெரியார் போராடியது யாரை எதிர்த்து? இல்லாத வெற்றிடத்தை நோக்கியா? கதை விடுவதற்கும் ஒரு அளவு வேண்டாமா?

    ReplyDelete
  159. \\நான் இந்த விவாததில் எங்கும் கோபமாகப் பேசவில்லை.
    நீங்கள் ஆவேசமாக கோபத்தில் என்ன பேசுகிறோம் என்று புரியாமல் பேசி வருகிறீர்கள். \\ வாலிபத்தை ஏற்ப்படுத்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடு என்று பேசும் நீர், நாகரீகமானவரா? எதிராளி நாகரீகமற்றவன் என்றே வைத்துக் கொள்வோம், நீர் உத்தமராயிற்றே, உமது நாகரீகத்தின் லட்சனமென்ன? நான் பேசியதில் ஒன்றிரண்டு வார்த்தைகள் தரமற்றவை என்று நீர் சொல்கிறீர், ஆனால் அது யாரையும் இந்த அளவுக்கு இழிவு படுத்துவதாக இருந்ததா?

    ReplyDelete
  160. \\அனைத்து பிராமண‌ர் அல்லாதவர்களையெல்லாம், அந்தக் குலத்து பெண்களையும் உங்கள் சொற்களால் மிகவும் கேவலப்படுத்தினீர்கள். அடுத்து நாடார்கள் செட்டியார்களைக் காயப்படுதினீர்கள்.\\ அவை வரலாற்றில் உள்ள செய்திகள். முடிந்தால் பொய் என்று நிரூபிக்கவும். மற்றவை இன்றைக்கு நடப்பவை, முடிந்தால் ஒரு சென்னை வாசியிடம் பேசிப் பார்க்கவும்.

    ReplyDelete
  161. \\ஆத்திக வாதியின் லட்சணத்தைப் பார் என்று அவர் பின்னூட்டம் இட்டால் என்ன செய்வீர்கள்?\\ இது உம்மைப் பார்த்து மற்றவர்கள் கேட்க வேண்டிய கேள்வி.

    ReplyDelete
  162. \\நான் மிகவும் நாசுக்காக 'ஏற்பாடு'என்று கூறினேன்.நீங்கள் சொல்லி இருக்கும் சொற்களை நான் சொல்லியிருந்தால் உங்க‌ளுக்கு இருக்கும் கோபத்தில் என் தாய், தாரம், சகோதரியை கேட்டு இருபீர்கள். அவ்வளவு ஆத்திர புத்தி உங்களுக்கு.\\ உம்மைப் போல வாலிபத்தை நிரூபிக்க ஏற்ப்பாடு செய் என்று பேசும் தரங் கெட்டவன் நானில்லை. அவ்வாறு செய்யமாட்டேன்.

    ReplyDelete
  163. \\இரண்டு பாயிண்டில்தான் பிடித்துத் தொங்கிக் கொண்டு இருக்கிறிர்கள். \\ ஒருத்தனுக்கு கூரை மேலேறி கோழி பிடிக்கவே தெரியவில்லை என்ற ஒரு பாயிண்டே போதும் அவன் வானத்தைக் கிழித்து வைகுண்டத்தைக் காட்டுகிறான் என்று சொன்னால் நம்பத் தேவையில்லை என்பதற்கு. நீர் விடுவது கப்சா என்பதற்கு நிரூப்னங்களே இவை, ஆகையால் நீர் பேசுவதற்கு அர்த்தம் இருக்கப் போவதில்லை என்பதே தெளிவு.

    ReplyDelete
  164. \\நான் அவர்களை இக்கால சாதிப் பிராமணன் அக்கால விஸ்வாமித்ரருக்கு வர்ண்ப் பிராமணன் கொடுத்த ஏற்றத்தை இப்போது கொடுத்துள்ளான் \\ குரு ஸ்தானம் என்பது பிராமணச் சாதி வீட்டுச் சொத்தா? பூட்டி வைத்துக் கொண்டு போனால் போகிறது என்று மற்றவர்களுக்கு கொடுப்பதற்கு? ஒருத்தர் குரு ஆவது என்றாலும், எண்கள் சாதியினர் அனுமதியுடன் தான் ஆக முடியும் என்ற ஆதிக்க புத்தியின் வெளிப்பாடு இது.

    ReplyDelete
  165. இரண்டவதாக கீதையில் சொன்ன வர்ண வகுப்பு இப்போதும் இருக்கிறது என்கிறீர்கள்.அந்த வர்ண வகுப்பு ,பிராமண‌னை வேண்டாம் , வேறு வர்ணத்தான் யாரையாவது காட்டுங்கள். அவனை இந்தக் காரணத்தால் நான் இன்ன வர்ணம் என்று சொல்லுகிறேன் என்று சொல்லுங்கள்.

    உடனே பக்கம் பக்கமாக காபி பேஸ்ட் பண்ணாமல் 'நச்'என்று சொல்லணும்.

    நம் இருவரைத் தவிர எல்லோருமே சலிப்படைந்து வில‌கி விட்டனர். எனவே நீங்கள் பக்கம் பக்கமாக காபி பேஸ்ட் செய்தால் நான் மட்டும்தான் பொறுமையாகப் படிக்கணும். நீங்கள் எந்த 'சைட்'டில் இருந்து காபி பேஸ்ட் செய்கிறீர்கள் என்றும் சொல்லி விட்டால், அவர்களுடைய இயல்பை நான் 'சட்'டென்று புரிந்து கொண்டுவிடுவேன்.

    உங்கள் கிருஷ்ண பக்தியைப் பார்க்கும் போது 'இஸ்கான்' செய்திகளைச் சொல்கிறீர்கள் என்று தோன்றுகிறது. அவர்களை நான் அறிவேன். அதில் பலர் பொறுமையாகவும் நாகரீகமாகவும் நடந்து கொள்வார்கள்.

    பெரியார் பலமுறை 'எனக்கு என்ன பிராமணர்கள் மீது தனிப்பட்ட பகையா?
    நான் பிராமணர்களை எதிர்க்கவில்லை.பிராமணத்துவத்தைத்தான் எதிர்க்கிறேன்' என்று சொல்லியுள்ளார். அந்த பிராமண‌த்துவம் எல்லா சாதியிலும் உள்ளது"என்கிறார்.

    அந்தப் பிராமண‌த்துவம் என்ன என்றால் நீங்கள் இப்போது செட்டியார், நாடார்களைக் காட்டிலும் நீங்கள் யோக்கியர், அவர்கள் அயோக்கியர்கள் என்று சொல்லியுள்ளீர்கள் அல்லவா அதுதான்.அதாவ்து சுய சாதி மேட்டிமைத்தனம்.

    நீங்கள் ஆதாரம் என்று சொல்வது எல்லாம் ஏதோ நெட்டில் கிடைக்க கூடிய சில வியாக்கியானங்கள்.இன்னும் பல வியாக்கியான‌ங்கள் நெட்டில் இல்லாதது இருக்கிறது. கீதையைப் பற்றி நீங்கள் சொல்லும் வியாக்கியானம் தான் முடிந்த முடிவல்ல.

    கிருஷ்ணர் நான் அவர் சொன்னதை மறுத்து விட்டென் என்று உங்களைப்போல் கோபப்படமாட்டார்.அவர் தீராத விளையட்டுப்பிள்ளை. அவரை என்னிட்ம் அனுப்புங்கள் அவரிடம் கேட்கிறேன் இப்போது உள்ள‌ வர்ண வகுப்பைக் காண்பி கிருஷ்ணா என்று!

    ReplyDelete
  166. \\இங்கேயும் பங்காரு அடிகளார், சத்ய சாயி பாபா, மாதா அமிர்தானந்தமயி,விவேகானந்தர், சின்மயானந்தர் ஆகியோரின் பகதர்களை புண்படுத்துகிறீர்கள்.மேலும் அந்த குருமார்கள் தோன்றிய சாதி, குலம், இனத்தையும் கேவலப் படுத்துகிறீர்கள். அப்படியானால் நீங்கள் குரு என்று இலக்கணப்படி யாரை நினைக்கிறீர்களோ அவரை இங்கே சொல்ல வேண்டும். இப்படிப்பட்ட சீடரை உருவாக்கிய அந்த குருபீடத்தினையும் நாங்கள் அறிந்து கொள்கிறோம்.\\ அதுக்குத்தான் சொன்னேன் பகவத் கீதையை நீர் ஒழுங்காப் படிக்கணும்னு. படிச்சிருந்தா இப்படி மக்கு மாதிரி என்னைக் கேள்வி கேட்டுக் கொண்டிருக்க மாட்டீர். கீதையின் நான்காம் அத்தியாத்தில் ஆன்மீக குருவைப் பற்றி தகவல் உள்ளது. [வெட்கக் கேடு உமக்கு இதையும் நானே சொல்ல வேண்டியிருக்கிறது.] மேலே நீர் சொன்னவர்களெல்லாம் குரு தகுதியுடையவர்கள் என்றுஅந்த அத்தியாயத்தின் படி நிரூபீயும், நான் ஒப்புக் கொள்கிறேன்.

    ReplyDelete
  167. நான் பிராமணன் மட்டுமல்லாமல் எல்லா ஃபார்வார்ட் கிளாசுக்கும் ஆகப் பேசுகிறேன் இப்போது. அதில் பிராமண‌ர்களும் அடக்கம்.அதாவது இட ஒதுக்கீடு இல்லாத எல்லா சாதிக்காரர்களுக்காகவும் பேசுகிறேன்.

    தமிழ்நாட்டில் உள்ள அனைத்து முன்னேறிய வகுப்பினரில் மருத்துவக் கல்லுரியில் இடம் கிடைத்தது 2004ல் 1.9%; 2005ல் 2.68% மொத்த முன்னேறிய‌
    வகுப்பினர் 13% உள்ள ஜனத்தொகையில் அவர்களுடைய சதவிகிதத்திற்கு அளவு 2.68 தாண்டவில்லை.

    இதில் என்ன மற்றவர்களைச் சுரண்டி விட்டார்கள்?

    ச‌லுகைகள்கிடைக்க ஆரம்பித்து பல்லாண்டுகள் ஆகிவிட்டன. தற்சமயம் கடந்த 15 ஆண்டுகளாக்கும் மேலாக பிராமணர்கள் தங்களுக்கு வேண்டாம் என்று அரசு வேலை, மருத்துவம் எல்லாவற்றையும் விட்டு விலகிவிட்டார்கள். இன்னமும் பொறாமை, பொச்சரிப்பு என்றால் உங்களை அந்த கிருஷ்ணரே காப்பாற்றட்டும்.!

    ReplyDelete
  168. உங்கள் குரு பீடதைச் சொன்னால் அவர்களுக்கு நீர் சொல்லும் இலக்கணம் உள்ளதா என்று சொல்லலாம்.அதற்கு பதில் வெண்டும்.

    நீர் காப்பி பேஸ்ட் பண்ணும் கீதையை வெளியிட்டவர்களைச் சொல்லுங்கள்.

    சும்மா ஜாங்கிரி சுத்தக் கூடாது. உங்க‌ள் பிராமணர் அல்லாதார் அனைவரையும் ஏதோஒரு வகையில் நீங்கள் புண்படுத்தி ஆயிற்று.

    நான் மேலும் மேலும் வாதம் செய்தால் நீங்கள் மேலும் மேலும் விதண்டாவாதம் செய்து அபிராமணர்களின் பக்கத்தை வலு இழக்கச் செய்வீர்கள்.அவர்களுக்கான நல்ல வாதி அல்ல தாங்கள்.

    நல்ல வலுவான வாதங்களுடன் உள்ள பிராமண‌ர் அல்லதோரை அழைக்கிறேன்.வாதத்திற்கு மருந்துண்டு. பிடி வாதத்திற்கு மருந்து இல்லை.

    ReplyDelete
  169. \\இரண்டவதாக கீதையில் சொன்ன வர்ண வகுப்பு இப்போதும் இருக்கிறது என்கிறீர்கள்.அந்த வர்ண வகுப்பு ,பிராமண‌னை வேண்டாம் , வேறு வர்ணத்தான் யாரையாவது காட்டுங்கள். அவனை இந்தக் காரணத்தால் நான் இன்ன வர்ணம் என்று சொல்லுகிறேன் என்று சொல்லுங்கள்.\\
    ஒவ்வொரு வர்ணத்தாருக்கும் என்னென்ன குனகல் இருக்கும் என்று கீதையில் சொல்லப் பட்டுள்ளதை முன்னரே காபி பேஸ்ட் செய்துவிட்டேன், அதை மீண்டும் படிக்கவும். நடை முறை வாழ்க்கையில் இந்த கலி யுகத்தில் இந்தக் குணங்களை நூறு சதவிகிதம் கொண்டிருப்போரை காண்பது அரிதிலும் அரிது. ஆனாலும் அந்தச் சாயலை காண முடியும்.

    பிராமணன்: சிலர் முடிந்த அளவுக்கு உண்மையையே பேசுவார்கள். பொய் சொல்லப் பிடிக்காது. புத்திசாலித் தனம் நிறைய இருக்கும், ஆனால் பணத்தாசை இருக்காது. இவர்களது அறிவுக்கு பெரிய அளவில் பணம் சேர்க்க முடியும் என்றாலும், வாழ மட்டும் பணம் போதும் என்று திருப்தியோடு இருப்பார்கள். வாழ்வின் நோக்கமென்ன என்ற தேடல் இவர்களிடம் இருக்கும். மருத்துவம், ஜோதிடம் போன்ற தொழில்களில் இவர்களுக்கு இயல்பிலேயே திறனிருக்கும். ஆசிரியர் தொழிலை விரும்பி ஏற்பார்கள். தங்களுக்குக் தெரிந்ததை மற்றவர்களுக்கு பணம் பெறாமலேயே கற்றுக் கொடுக்கவும் செய்வார்கள். எனது ஆசிரியர் ஒருவர், கிருஸ்துவர், அவரிடத்தில் இந்தக் குணங்கள் இருந்தன. ஒரு சித்த மருத்துவர் [அவருக்கு ஜோதிடமும் அத்துபடி], அப்புறம் இன்போசிஸ்-ல் கிடைத்த வேலையை உதறித் தள்ளி விட்டு, ஆராய்ச்சிப் படிப்பில் சேர்ந்து படித்த சில மாணவர்கள் என்று என் வாழ்வில் சிலரைச் சந்தித்திருக்கிறேன். உயர் கல்வி நிறுவனங்களில் உள்ள பெரும்பாலான கல்லூரி அஆசிரியர்களுக்கு இந்தக் குணங்கள் உள்ளன.

    சத்திரியன்: நாட்டைக் காக்க துணிந்து ராணுவத்தில் சேரவும், போரில் உயிரை விடத் தயங்காதவர்கள். ஆட்சி செய்யும் திறனுடையவர்கள்.

    வைஷ்யர்கள்: விவசாயத்தின் மேல் நாட்டமுள்ளவர்கள், பசுக்களை வளர்த்து பால் உற்பத்தியில் பிரியமுள்ளவர்கள். பேச்சுத் திறமையால் வியாபாரம் செய்வதில் வல்லவர்கள், வித்தகர்கள். இவர்களை ஏதாவது வேலைக்குச் சேர்த்தாலும் உதறித் தள்ளிவிட்டு சொந்தமாக ஏதாவது தொழிலைச் செய்வார்கள். காய்கறிகளைச் மொத்தச் சந்தையில் வாங்கி ரோட்டோரம் விர்ப்பவர்களிடமும் இந்த குணங்கள் உண்டு.

    சூத்திரர்கள்: இவர்களால் படிப்பில் வெற்றியடைய முடியாது, ஆட்களை கட்டுப் படுத்தும் திறன் இருக்காது, தொழில் செய்வதில் நாட்டமிருக்காது. தினசரி எங்காவது வேலை பார்த்து அதன் மூலம் வாழ்க்கையை ஒட்டுபவர்களாக இருப்பார்கள்.

    இன்றைக்கு வாழ்வில், பலர் பல்வேறு பணிகளைச் செய்தாலும், உள்ளுக்குள் மேற்கண்ட குணங்கள் இருப்பதைக் காண முடியும். தங்களது இயல்பான வர்ணத்திற்கு மாற்றான பணிகளிலே பெரும்பாலானோர் ஈடுபட்டுள்ளார். இருந்தாலும் நான்கு வர்ணம் இறைவனின் படைப்பு இருந்து கொண்டுதான் இருக்கிறது.

    ReplyDelete
  170. \\நம் இருவரைத் தவிர எல்லோருமே சலிப்படைந்து வில‌கி விட்டனர். எனவே நீங்கள் பக்கம் பக்கமாக காபி பேஸ்ட் செய்தால் நான் மட்டும்தான் பொறுமையாகப் படிக்கணும். நீங்கள் எந்த 'சைட்'டில் இருந்து காபி பேஸ்ட் செய்கிறீர்கள் என்றும் சொல்லி விட்டால், அவர்களுடைய இயல்பை நான் 'சட்'டென்று புரிந்து கொண்டுவிடுவேன்.\\ மேயப் போகும் மாடு கொம்பில் புல்லைக் கட்டிக் கொண்டா போகுது? நான் தேடும் விஷயம் எங்கே இருக்கிறதோ அங்கேயிருந்து காபி பேஸ்ட் செய்கிறேன், அதில் ஒரு வரியை எடுத்து Google கூகுலாரிடம் போடவும், அவர் அந்த வலைத் தளத்திற்கு அழைத்துச் செல்வார்.

    ReplyDelete
  171. \\உங்கள் கிருஷ்ண பக்தியைப் பார்க்கும் போது 'இஸ்கான்' செய்திகளைச் சொல்கிறீர்கள் என்று தோன்றுகிறது. அவர்களை நான் அறிவேன். அதில் பலர் பொறுமையாகவும் நாகரீகமாகவும் நடந்து கொள்வார்கள்.\\ இப்போ இங்கே போடும் கேள்விகளை அங்கேயும் போடுங்களேன், சரியான பொறுமையான பதிலும் கிடைக்குமல்லவா? அப்படியே அவர்களிடம் உள்ள பகவத் கீதையை வாங்கி வந்து வீட்டில் உட்கார்ந்து கொண்டு படியுங்களேன், பல கேள்விகளுக்கு உங்களுக்கே விடை கிடைக்குமே?

    ReplyDelete
  172. \\பெரியார் பலமுறை 'எனக்கு என்ன பிராமணர்கள் மீது தனிப்பட்ட பகையா?
    நான் பிராமணர்களை எதிர்க்கவில்லை.பிராமணத்துவத்தைத்தான் எதிர்க்கிறேன்' என்று சொல்லியுள்ளார். அந்த பிராமண‌த்துவம் எல்லா சாதியிலும் உள்ளது"என்கிறார்.\\ ஆனால், அப்போது பிராமணத்துவம் பிராமணர்களுக்கு சொந்தாமாக இருந்தது எனபதுதான் வேதனை.

    ReplyDelete
  173. \\அந்தப் பிராமண‌த்துவம் என்ன என்றால் நீங்கள் இப்போது செட்டியார், நாடார்களைக் காட்டிலும் நீங்கள் யோக்கியர், அவர்கள் அயோக்கியர்கள் என்று சொல்லியுள்ளீர்கள் அல்லவா அதுதான்.அதாவ்து சுய சாதி மேட்டிமைத்தனம்.\\ சாதியின் அடிப்படையில் தனது சாதி மட்டும் முன்னேற வேண்டும், மற்றவர்கள் அடைக்கியாளப் படவேண்டும் என்று செயல் படும் எல்லோரும் அயோக்கியர்களே.

    ReplyDelete
  174. \\நீங்கள் ஆதாரம் என்று சொல்வது எல்லாம் ஏதோ நெட்டில் கிடைக்க கூடிய சில வியாக்கியானங்கள்.இன்னும் பல வியாக்கியான‌ங்கள் நெட்டில் இல்லாதது இருக்கிறது. கீதையைப் பற்றி நீங்கள் சொல்லும் வியாக்கியானம் தான் முடிந்த முடிவல்ல.\\ அத்தனை இருந்து என்ன பயன்? அவற்றில் ஒழுங்கான வியாக்கியானம் ஒன்றையாச்சும் கண்டுபிடிச்சு படியுங்களேன்? வெறும் குப்பை கூளங்களைப் படித்து என்ன பயன்?

    ReplyDelete
  175. \\கிருஷ்ணர் நான் அவர் சொன்னதை மறுத்து விட்டென் என்று உங்களைப்போல் கோபப்படமாட்டார்.அவர் தீராத விளையட்டுப்பிள்ளை. அவரை என்னிட்ம் அனுப்புங்கள் அவரிடம் கேட்கிறேன் இப்போது உள்ள‌ வர்ண வகுப்பைக் காண்பி கிருஷ்ணா என்று!\\ அவரு என்ன நீங்க போற இடத்தில் இருக்கும் ஓட்டலில் வேலை செய்யும் சர்வர் பையனா? டேய், ஒரு டீ கொண்டு வா என்று சொன்னதும் ஓடி வந்து கொடுப்பதற்கு? இந்த நாத்திக அரசியல் வாதிகள் மாதிரியே பேசிக் கொண்டிருக்கிறீரே?

    ReplyDelete
  176. நான் பிராமணன் அல்லாதவன் மட்டுமல்ல, எல்லா பிராமணன் அல்லாத சாதியினருக்கும் சேர்த்து பேசுகிறேன், ஒவ்வொரு ஊருக்கும் போங்க, அங்கே சேரிக்குப் போங்க, அதில் உள்ளவர்களில் எத்தனை பேர் முன்னேறியிருக்கிறார்கள் என்று பாருங்க, அப்புறம் சொல்லுங்க உங்க இட ஒதுக்கீடு எந்த அளவுக்கு வேலை செய்திருக்கிறது என்று.

    ReplyDelete
  177. நிலம் வைத்திருப்பவர்களே இந்தநாட்டின் உண்மையான சொந்தக்காரரகள்.

    நிலம் இருப்பவர்களே ஆதிக்க சக்திகள்.

    நிலம் இல்லாதவர்களே அடிமைகள்.

    இந்தியா முழுமைக்குமாக கணக்குப் பார்த்தால் பிராமண நில உடைமயாளர்கள்
    கிட்டத்தட்ட இல்லை என்று சொல்லும் அளவுக்கு இருக்கிறது.
    மிகச்சிலரே உள்ள்னர்.

    நில உடைமையாளர்களுக்குள் எஸ்சி, எஸ் டி ஓபிசி ஆகியவர் களுடன் இந்த மூன்றிலும் வராதவர்களை அதர்ஸ் ஒப்பிட்டால் ஓபிசியும் அதர்ஸும் கிட்டத்தட்ட சமமாக வருகிறார்கள். அதர்ஸ் சிறிது குறைவாகவே உள்ளனர்.

    எஸ் சி எஸ்டி நில உடைமையாளர்கள் ஏனையோரைவிட அதிக‌ம்.

    பிராமணர் சுரண்டல் எங்கிருந்து வந்தது?

    ReplyDelete
  178. //இன்றைக்கு வாழ்வில், பலர் பல்வேறு பணிகளைச் செய்தாலும், உள்ளுக்குள் மேற்கண்ட குணங்கள் இருப்பதைக் காண முடியும். தங்களது இயல்பான வர்ணத்திற்கு மாற்றான பணிகளிலே பெரும்பாலானோர் ஈடுபட்டுள்ளார். இருந்தாலும் நான்கு வர்ணம் இறைவனின் படைப்பு இருந்து கொண்டுதான் இருக்கிறது.///


    இதற்குப்பலமுறை பதில் சொல்லியாகிவிட்டது.

    காந்தி வர்ணப்படி பிராமண குண‌ங்களோடு இருந்திருக்கலாம். அவருடைய பனியா என்ற தற்கால சாதியாலேயே அறியப்படுவார். அவ்ர் பிராமனர் என்று வசிஷ்டர் வந்து சொன்னாலும் நடைமுறைக்கு அது ஆகாது இப்போது.
    அதனால் தான் மீண்டும் மீண்டூம் சொல்கிறேன் வர்ண வகுப்பை நடைமுறையில் காண முடியாது. மனதுக்குள் வேண்டுமானல் உயர்வாகவோ தாழ்வாகவோ நினைத்துக்கொள்ளலாம்..

    ReplyDelete
  179. தலித்துக்களுடன் பழகிய குடும்பத்தினர்தான் நாங்கள். பகுதி ஒன்றில் சாப்பாடு,
    இலை எடுப்பு பற்றி வாதம் உள்ளது. அதில் போய் பார்க்கவும் எங்கள் வீட்டில் தலித் மக்கள் புழங்கியது தெரியும்.

    //சில நாட்களுக்குப் பின்னர்தான் முனுசாமி அரிசன வகுப்பைச் சேர்ந்தவர் என்றும் குடியானவர்கள் - கொங்கு வேளாள கவுண்டர்கள் - புழங்கும் கிணறுகளில் அரிசனங்கள் இறங்கக் கூடாதென்றும், அது காரணமாகத்தான் அவர் என்னுடன் அக்கிணற்றில் இறங்கவில்லை யென்றும், தெரிந்து கொண்டேன்.//

    மேற்கண்ட வாசகம் என் தகப்பனாரின் தன் வரலாறில் இருந்து கொடுத்து இருக்கிறேன்.

    நான் பல எஸ் சி எஸ் டி ஊழியர்களுக்கு உற்ற நண்பன் அவர்களுடைய புகார் மனுக்களை எழுதிக்கொடுக்கும் ரைட்டர்.

    நீங்கள் சொல்லியபடி என் தகப்பனார் சேரி சேரியாகப் போனவர்.ஜெயிலில் பெரியார், ராஜாஜி சேர்ந்து இருந்த சமயத்தில் தானும் இருந்தவர்.

    மீண்டும் அவருடைய தன் வரலாற்றில் இருந்து:


    //ஆனால், ராஜாஜியின் விருப்பத்தை ஏற்று சிறை அதிகாரிகள் வக்கீல் கே. வி.சுப்பராவ் அவர்களை ராஜாஜியுடன் தங்க அனுமதித்தார்கள். ஆர் வேங்கடராமன், ஆர் அங்கமுத்து, என்.சின்னசாமி, அப்துல் கஃபார் ஆகிய நால்வரும் கடலூர் சிறைக்கு மாற்றலாகிச் சென்று விட்டனர். ஏ.கே.ஸ்ரீனிவாஸனும், அடியேனும், கோவை மத்திய சிறையின் ஜெயில் அன்னெக்ஸிலேயே எங்கள் ஆறு மாத சிறைவாசத்தை அனுபவித்தோம். இதே காலத்தில் தந்தை பெரியார், ஏதோ ஒரு காரணத்திற்காக கோவை சிறையில், வேறொரு பகுதியில் இருந்து வந்தார். இதையறிந்த ராஜாஜி, இவரையும் தன்னுடன் இருக்க அனுமதிக்கும்படி சிறை அதிகாரிகளிடம் கேட்டு அவரையும் தன்னுடன் இருக்கச் செய்து கொண்டார். ஆக ராஜாஜி, கே.வி. சுப்பராவ், தந்தை பெரியார் மூவரும் மத்திய சிறையின் உட்பகுதியில், தனியாக முளவேலி போடப்பட்ட ஒரு சிறிய வட்டத்தில் இருந்தனர். நாங்கள் - 'சி' வகுப்பு அரசியல் கைதிகளுக்கும் அவர்களுக்கும் தொடர்பே இல்லை. கே.வி.சுப்ப ராவ், சம்ஸ்கிருதத்தில் நல்ல தேர்ச்சி பெற்றவர். ராஜாஜி தன் சம்ஸ்கிருத அறிவை இவருடைய உதவியுடன் விருத்தி செய்து கொண்டார். மகாபாரதம், வால்மீகி ராமாயணம் போன்ற அழியாக் காவியங்களை, மூல சம்ஸ்கிருதத்தி லேயே படித்துத் தௌ¤வு பெற்றுக் கொண்டார். பின்னர், வெளியே வந்து, அரசியலிலிருந்து விலகியிருந்த கால இடைவெளிகளில், தமிழில் வியாசர் விருந்து, சக்கரவர்த்தித் திருமகன் ஆகிய நூல்களையும், ஆங்கிலத்தில், Mahabharatha, Ramayana ஆகிய நூல்களையும், எழுதி வெளியிட்டார். இந்த நூல்கள் லட்சக்கணக்கான பிரதிகள் விற்பனையாகின. இன்றும், விற்பனையாகி வருகின்றன//

    மேலே சொல்லப்பட்டுள்ள பெயர்களில் ஆர் அங்முத்து தலித். ஒரு செய்தியை கவனிக்கவும். ராஜாஜி பெரியார் இருவரும் சுப்பராவிடம் இருந்து இதிஹாசங்களை ஜெயிலில் கற்றனர்.ராஜாஜியுடன் பெரியார் இருந்தார். கவனிக்க. ராஜாஜி அந்த அறிவை ஒரு வகையில் பயன்படுத்தினார்.பெரியார் வேறு வகையில் பயன் படுத்தினார்.

    நான் சேரிக்குப் போயுள்ளேன். தாங்கள்?

    ReplyDelete
  180. //ராஜாஜி திட்டமிட்டபடி ஆசிரமத்திலிருந்து 07 08 1933 அதிகாலை
    04 30க்கு அனைவரும் குளித்து, மாற்றுடையணிந்து, அவரவர்கள் தயாராக இருந்தோம். ஏற்பாடு செய்தபடி பஸ்ஸில் எல்லோரும், தெற்கு வீதியிலுள்ள ஓட்டலில் காலை உணவு எடுத்துக்கொண்டு நாலு கால் மண்டபத்தில் சேர்ந்து இரண்டிரண்டு பேர்களாக அணிவகுத்து, ராஜாஜி முன்செல்ல, அடுத்த இருவரகளில் ஒருவர் மாற்றி ஒருவர் கொடியை ஏந்திச் செல்ல வேண்டுமென்றும், கைதானால் மட்டுமே கொடியை போலீசில் ஒப்படைக்கலாம் என்றும் அதற்கு முன் எந்தவித பலாத்காரம் செய்யப்பட்டாலும் கொடியை விடக்கூடாதென்றும், தீர்மானித்து, முதலிருவர்: ஸ்ரீ.ஜி.ராமச்சந்திரன் ; ஸ்ரீ. எம். எஸ். கிருஷ்ணசாமி. ஜோடியென்றும் நியமிக்கப் பட்டனர். திருச்செங்கோடு நகரத்தை காலையில் பஜனை பாடிக் கொண்டு ஊர்வலமாகச் சென்று சித்தளந்தூர், கந்தம் பாளையம், பரமத்தி, வேலூர், பாலப்பட்டி, மோகனூர், நாமக்கல், ராசிபுரம் வழியாக கடைசி நபர் கைதாகும் வரை சேலம் சென்று அடைவதென்றும் இதற்கு பதினைந்து தினங்கள் வரை பிடிக்குமென்றும், கணக்கிடப்பட்டது. இந்த வழித் தடம் பற்றியும், பாத யாத்திரையில் பங்கேற்கும் சத்தியாக்கிரகிகளின் பெயர் முதலியனவும் மாநில கவர்னருக்கும், சேலம் மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பரிண்டெண்ட் ஆகிய மூவருக்கும், ராஜாஜி, ஆகஸ்டு முதல் தேதியே கடிதம் மூலம் எழுதித் தெரிவித்திருந்தார். சேலத்தில், ராஜாஜிக்கு மிக நெருங்கிய நண்பர்களில் ஒருவர் வக்கீல் கே.வி. சுப்பராவ்; - இவர் தன் குடும்பத்தார், சமூகத்தார், பழித்தலைப் பொருட்படுத்தாமல், ஹரிஜனத் தொண்டில் மிக ஈடுபட்டிருந்தார். இவரை 'பற சுப்பராவ்' என்றே சேலம் மாவட்ட மக்கள் அழைக்க ஆரம்பித்து விட்டனர். அப்படிப்பட்ட ஒருவருக்கு, - 'ஞானஸ்நானம்' செய்விக்க - சிறை சென்ற தேச பக்தராக்கத் தீர்மனித்தார், ராஜாஜி. உடனே சுப்பராவுக்கு, 'உடன் புறப்பட்டு வரவும்!' என்று 04 08 1933 அன்று ஒரு தந்தி அனுப்பினார். அவரும், 'ஏதோ, என்னவோ?' என்று அன்று மாலையே ஆசிரமம் வந்து சேர்ந்தார். அவரிடம் ராஜாஜி, விவரம் சொன்னார். அவர் சேலம் சென்று, மனைவி மக்களிடம் சொல்லி, மாற்றுடை எடுத்து வருவதாகக் கூறினார். - போனால் அவர்கள் விட மாட்டார்கள். ஆத லால், இங்கிருந்தே வீட்டுக்கு ஒரு கடிதம் எழுதிப் போட்டு விடுங்கள் - என்று சொல்லி அவருக்கு ஆசிரமம் கதர் நிலையத்திலிருந்து இரண்டு செட்டு புதிய உடைகள் வாங்கித் தந்து விட்டார். கவர்னருக்கும், கலெக்டருக்கும் "Delete N.Chinnaswamy and insert K.V.Subbarao in the Sathyagrahis Names" என்று தந்தி கொடுத்தார். என்.சின்னசாமி, மிக மிக மன்றாடியதின் பேரில், 'Include Chinnasamy's name also - total seventeen" என்று இன்னொரு தந்தியும் கொடுக்கப்பட்டது.//


    ராஜாஜிக்கு சமஸ்கிருத மூலத்தில் இருந்து ராமாயணம் பாரதம் சொன்ன சுப்பராவ் தலித்துக்களுக்கு சேவை செய்து "பற சுப்பராவ் என்று பெயர் எடுத்தவர். அவருடன் அப்பா ஜெயிலுக்குப்போனார். அந்தப் பதினேழு பேரில்
    3 பேர் தலித்.

    எங்கள் வீட்டில் தலித் வந்து போவதால் சிறிது காலம் நாங்களும் ஜாதி பிரஷ்டம் ஆனவர்கள்.நாட்பட காலம் மாறி சகஜ மாயிற்று.

    ReplyDelete
  181. ஏற்கனவே உங்கள் வீட்டு செப்டிக் டாங்கை நீங்களே சுத்தம் செய்யத் தயாரா என்று கேட்டிருந்தேன்.பதில் இல்லை.

    இப்போது இன்னொரு சவால் விடுகிறேன். நான் வந்து சுத்தம் செய்கிறேன் நீங்கள்

    மூக்கைப் பிடிக்காமல் நாள் முழுதும் தொட்டியின் கரையில் நிற்கத் தயாரா?

    ReplyDelete
  182. //இப்ப‌டித் தயாரிக்கப்பட்ட மனுவில் அரசு அலுவலக ஊழியர்கள், கம்பெனி ரயிவே இல்லம், தலைமை அலுவலகம்,ஆகியவற்றில் பணியாற்றும் தாழ்த்தப்பட்ட இன ஊழியர்கள்,மற்றும் இவ்வினத்தில் உள்ள கனதன வியாபாரிகள், கான்ட்ராக்டெர்கள்,,பட்டதாரர்கள்,அரண்மனை அலுவலர்கள்,
    என பணிபுரிந்த 2173 தலித்துக்களிடம் கையொப்பம் பெற்று அந்த மனுவை
    சாதி பேதமற்ற திராவிட மகாஜன சபையின் மூலம் சென்னை மாகாண கவர்னரிடம் கொடுத்தார்கள்.//

    1908ல் இந்த மனு கவர்னரிடம் கொடுக்கப்பட்டது. கொடுத்தவர்கள் தலித் சமூகம் இது சென்னையில் இருந்த தலித் மட்டுமே.மற்ற நகரக் கணக்கு அல்ல. அவர்களில் என்னென்ன பணி புரிந்தவர்கள் இருந்தார்கள் என்பது படித்தால் தெரியும் . காண்ட்ராக்டர், வியாபரிக்ள்‍ அதிலும் வட்டித்தொழில் செய்த தன வியாபாரி,அரசு ஊழியர்....!பட்டதாரிகள் வேறு உண்டு.!

    இந்தப் புத்தகத்தை ஜூலை 2007 சங்கம் பதிப்பகம் சென்னை வெளியிட்டுள்ளது.

    வெளியிட உதவி செய்தது இண்சூரன்சு கன்பனிகளில் இப்போது வேலை செய்யும் தலித் சங்கத்தினர்.

    இந்த மகஜர் கொடுக்கத் தூண்டியது, மகஜரை எழுதியது யார் என்று தெரியுமா?
    பெயர் தெரியுமா? தெரிந்தால் சொல்லுங்கள்.
    யார் யாரை சுரண்டினார்கள்.?

    ReplyDelete
  183. இட ஒதுக்கீட்டை வாங்கிக் கொடுத்தது பெரியார் , அம்பேத்கார் என்கிறீர்கள். அவர்களுக்கு முன்னரே இட ஒதுக்கீடு கேட்டுப் போராடியவர்கள் உள்ளார்கள் அவர்கள் பெயர் தெரியுமா உமக்கு? அவர்கள் செய்த வேலையினை மறைத்து 1916 ல் ஜஸ்டிஸ் கட்சி வந்த பிறகுதான் இந்த இட ஒதுகீட்டுக் கொள்கையே
    வந்தது போல வரலாற்றை திரிபு செய்தது யார்?

    1921ல் வந்த இட ஒதுக்கீட்டில் பிராமண‌னுக்கு 16% ஆங்கிலேயன் கொடுத்தானே?! ஏன் கொடுத்தான் என்று தெரியுமா?

    கீதையைப் படி என்பவரே, இந்த வரலாறு தெரியுமா உமக்கு? வழக்கம் போல எனக்கு விஜயகாந்த் பட்டம் கொடுப்பீரா?

    ReplyDelete
  184. \\எஸ் சி எஸ்டி நில உடைமையாளர்கள் ஏனையோரைவிட அதிக‌ம்.பிராமணர் சுரண்டல் எங்கிருந்து வந்தது?\\ நிலத்தை யார் வேண்டுமானாலும் வைத்திருக்கட்டும். அதில் யார் வேண்டுமானாலும் உழைக்கட்டும். ஆனால் அவன் அறுவடை செய்வதை நோகாமல் நொங்கு சாப்பிடும் டெக்னிக்கை தெரிந்தவன் சாதி பிராமணன். மன்னர்கள் காலத்திலிருந்து, ஆங்கிலேயன், அப்புறம் மக்களாட்சி வரைக்கும் யார் ஆட்சிக்கு வந்தாலும், அதிகாரத்தில்/ பணபலத்தில் யார் பெரிய அளவில் வந்தாலும், அவர்களை அணுகி நோகாமல் நொங்கு சாப்பிடும் டெக்னிக்கை கைதேரக் கற்றவன் சாதிப் பிராமணன்.

    ReplyDelete
  185. நான் ஒரு கேள்வி கேட்டேன், அதற்க்கு உப்பு இருக்கிறதா என்றால் பருப்பு இருக்கிறது என்பானாம் எவனோ ஒருத்தன் அந்த மாதிரி பதில் போட்டுள்ளீர். இட ஒதுக்கீடு மூலம் தலித் இனம் முன்னேறி விட்டதா, என்பதே கேள்வி. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில பிராமணர்கள் செய்த நல்ல காரியங்களை சொல்லியுள்ளீர்கள். பிராமண குணமுள்ளவன் எங்கு வேண்டுமானாலும் தோன்றலாம் என்று தான் சொன்னேனே ஒழிய அவன் சாதிப் பிராமணன் வீட்டில் தோன்ற மாட்டான் என்று சொல்லவில்லை. சாதிப் பிரமனர்களிலும் மனிதருள் மாணிக்கமாக எனற்றோர் இருக்கிறார்கள். இங்கு அது அல்ல பிரச்சினை. பிராமணன் என்றொரு சாதியினர், மற்றவர்களை ஏய்த்துப் பிழைத்து வந்தார்களா? மற்ற சமூகத்தினரை மதத்தின் பெயரால் அடக்கியாண்டார்களா? நாங்கள் மட்டுமே படிப்பாளிகள் என்ற விஷக் கருத்தை போதித்தார்களா? தங்கள் சமூக முன்னேற்றத்திற்க்காக பிற சமூகத்தின் முன்னேற்றத்தைக் காவு கொடுத்தார்களா? அரசுப் பணிகளில் வேறு யாரும் நுழையாதபடி தில்லாலங்கடி வேலைகளைச் செய்தார்களா? இன்றைக்கும் பிராமண சாதியினர் அதே நய வஞ்சனையோடு அரசு அலுவலகங்கள், மற்ற இடங்களில் சாதி வெறியோடு மற்ற சமூகத்தை அடக்குவதை விடாமல் தான் இருக்கிறார்களா? இவை அத்தைனைக்குமே பதில் ஆமாம் என்பதே.

    ReplyDelete
  186. \\ஏற்கனவே உங்கள் வீட்டு செப்டிக் டாங்கை நீங்களே சுத்தம் செய்யத் தயாரா என்று கேட்டிருந்தேன்.பதில் இல்லை.இப்போது இன்னொரு சவால் விடுகிறேன். நான் வந்து சுத்தம் செய்கிறேன் நீங்கள் மூக்கைப் பிடிக்காமல் நாள் முழுதும் தொட்டியின் கரையில் நிற்கத் தயாரா?\\ அதுக்கு ஏன் மூக்கையும் நாக்கையும் பிடிக்கணும் ? நீர் என்ன மனிதன் சக்கரம் கண்டுபிடித்த நாளிலா வாழ்ந்து கொண்டிருக்கிறீர்? அதற்க்கு தானியங்கி இயந்திரத்தை வைக்கும் படி பெரியாரின் தோன்றல்கள் என்று சொல்லிக் கொள்ளும் கட்சித் தலைவர்கள் செய்யலாமே?

    ReplyDelete
  187. //உங்கள் குரு பீடத்தைச் சொன்னால் தான் உஙளுடைய‌ இலக்கணப்படி உள்ளவரா என்று பார்க்க முடியும்.எனவே உங்கள் குரு யார்? குருபீடம் எது? //

    ReplyDelete
  188. \\1921ல் வந்த இட ஒதுக்கீட்டில் பிராமண‌னுக்கு 16% ஆங்கிலேயன் கொடுத்தானே?! ஏன் கொடுத்தான் என்று தெரியுமா?\\ எவன் எக்கேடு கெட்டா எனக்கென்னன்னு தனக்கு மட்டும் இட ஒதுக்கீடு பண்ணிகிட்டானா?

    ReplyDelete
  189. //உங்கள் குரு பீடத்தைச் சொன்னால் தான் உஙளுடைய‌ இலக்கணப்படி உள்ளவரா என்று பார்க்க முடியும்.எனவே உங்கள் குரு யார்? குருபீடம் எது? // அயோக்கியப் பயல்கலையே உம்மால் அடையாளங் காண முடியவில்லை, அடிப்படையும் தெரியவில்லை. நான் எந்த மடத்தின் பெயரைச் சொன்னாலும் உம்மால் அது பற்றி என்ன சொல்ல முடியும்? உமக்கு கழுதை குதிரை எல்லாமே ஒன்றுதான். ஆனால், உமது அகராதியைப் பார்த்தால் ஒரு குதிரை கூட இல்லை எல்லாமே கழுதையாகவே இருக்கிறதே!!

    ReplyDelete
  190. குருவும் வேண்டாம், பீடமும் வேண்டாம், நேரிடையாக பகவத் கீதைப் படியே பேசுங்களேன், நான் சொன்னதில் ஏதாவது தவறு உள்ளதா என்று. [அது தெரிஞ்சிருந்தா தான் இங்க வாதமே வந்திருக்காதே].

    ReplyDelete
  191. //உங்கள் குரு பீடத்தைச் சொன்னால் தான் உஙளுடைய‌ இலக்கணப்படி உள்ளவரா என்று பார்க்க முடியும்.எனவே உங்கள் குரு யார்? குருபீடம் எது? // அது சரி என்னோட இலக்கணம் [எனக்குன்னு தனி இலக்கணம் இல்லை என்பது வேறு விஷயம்] என்று எதைச் சொல்கிறீர் ஐயா?

    ReplyDelete
  192. //பிராமணன் என்றொரு சாதியினர், மற்றவர்களை ஏய்த்துப் பிழைத்து வந்தார்களா? மற்ற சமூகத்தினரை மதத்தின் பெயரால் அடக்கியாண்டார்களா? நாங்கள் மட்டுமே படிப்பாளிகள் என்ற விஷக் கருத்தை போதித்தார்களா? தங்கள் சமூக முன்னேற்றத்திற்க்காக பிற சமூகத்தின் முன்னேற்றத்தைக் காவு கொடுத்தார்களா? அரசுப் பணிகளில் வேறு யாரும் நுழையாதபடி தில்லாலங்கடி வேலைகளைச் செய்தார்களா? இன்றைக்கும் பிராமண சாதியினர் அதே நய வஞ்சனையோடு அரசு அலுவலகங்கள், மற்ற இடங்களில் சாதி வெறியோடு மற்ற சமூகத்தை அடக்குவதை விடாமல் தான் இருக்கிறார்களா? இவை அத்தைனைக்குமே பதில் ஆமாம் என்பதே.//

    படிபில் பிராமணன் யாரையும் ஏய்க்கவில்லை என்பதற்குத் தகுந்த ஆதாரம் கொடுத்துள்ளேன்.இங்கிருந்த உயர்கல்வி, தொழிற்கல்வி அந்தந்த சாதியினர் குருகுல முறையில் அவர்களுகுள்ளேயே கற்றுக்கொண்ட்னர்.

    அதுபோல வேதம் பிராமணனிடமே இருந்தது.அதுவும் 1900க்குப்பின்னர் புத்தகங்களாக எல்லோருக்கும் வந்து விட்டது.

    அரசு உத்யோகத்தில் உலகாயதப் பிராமணர்கள் பல நூற்றாண்டுகளாக இருந்து வந்துள்ளனர். அது தொடர்ந்தது.100 சதவிகிதம் அவர்களே இருந்தர்கள் என்பதே இல்லை.மற்ற சாதியினரும் இருந்தனர். அதன் முக்கியத்துவததை அறிந்து கொண்ட பிற சாதியினர் அதில் போட்டி போட்டனர். இடஒதுக்கீடு 1900 போலவே கேட்கப்பட்டு 1921ல் வந்தாயிற்று.அப்போதிலிருந்தெ பிராமனனுக்கு அரசு வேலை குறைய ஆரம்பித்துவிட்டது.

    சென்ற பின்னூட்டதில் 2173 தலித்துக்கள் சென்னையில் மட்டும் அரசு மற்ற வேலைகளில் 1908ல் இருந்துள்ளனர். தலித்துக்களே இந்த அள‌வு என்றால் மற்ற சாதியினர் இதுபோல இர்ண்டு மடங்காவது இருந்து இருக்கணும்.அதற்கும் ஆதாரம் தேடித் தருகிறேன்.தலித்துக்களிலேயே பட்டதாரிகள் இருந்துள்ளனர்.
    பிராம‌ணன் அந்த அனைத்தையும் தட்டிபறித்துவிட்டானா?

    நான் எல்லாவற்றையும் ஆதாரத்துடன் சொல்கிறேன். நீங்கள் பிரஜுடிஸ் வைத்துக் கொண்டு பேசுகிறீர்கள்.

    நான் இத்தனை ஆதாரங்கள் கொடுத்துள்ளேன் 13% ஒசி யில்(எல்லா முன்னேறிய சாதியும்) மருத்துவக்கல்லூரியில் 2.68 தான் சேர முடிகிறது.

    ஓபென் கோட்டாவிலும், ஒதுக்கீடு கோட்டாவிலும் ஒதுக்கீடுக்காரர்களே. பிராமண‌ன் கவலைப்படாமல் போட்டிக்கே வருவதில்லை.பிராமணர் அல்லாத
    முன்னேறிய சாதிகள்தான் கஷ்டப்படுகிறர்கள்.

    சமூகத்தை அடக்கியாள்வதற்கு பிராமணர்களிடம் சக்தி கிடையாது,முன்னரும் தன் அன்பினாலேயே எல்லரிடமும் நற்பெயர் எடுத்து இருந்தான்.

    ReplyDelete
  193. //ஆனால் அவன் அறுவடை செய்வதை நோகாமல் நொங்கு சாப்பிடும் டெக்னிக்கை தெரிந்தவன் சாதி பிராமணன். மன்னர்கள் காலத்திலிருந்து, ஆங்கிலேயன், அப்புறம் மக்களாட்சி வரைக்கும் யார் ஆட்சிக்கு வந்தாலும், அதிகாரத்தில்/ பணபலத்தில் யார் பெரிய அளவில் வந்தாலும், அவர்களை அணுகி நோகாமல் நொங்கு சாப்பிடும் டெக்னிக்கை கைதேரக் கற்றவன் சாதிப் பிராமணன்.//

    இதெல்லாம் பொத்தாம் பொதுவான பேச்சு.அறிவுசார் வேலை என்பது இன்றும் அன்றும் உண்டு, வெள்ளைக்காலர் உத்தியோகம், நீலசட்டை உத்தியோகம் என்று இருவகை. பிராமண‌னுக்கு வெள்ளைக்காலர் உத்தியோக்கம் நன்றாக வருகிறது என்று அரசர்கள் அவர்களை அர்சுப்பணிக்கு உபயோகித்தனர். இன்று அலுவலகத்தில் வேலை செய்யும் நீர் நோகாமல் நொங்கு சாப்பிடுகிறவரோ, நொந்து கொண்டே சாப்பிடுபவரா?

    இன்று வடக்கே கைரிக்ஷா இழுக்கும் பிராமணன் அதிகம்.

    இங்கே சமையல் காரர்களாகவும், செர்வராகவும் கோவில் பணியாளர்களாகவும் பணிசெய்து ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை செய்யும் ஏழைப்பிராமண‌னையும் நோகாமல் நொங்கு எடுக்கிறான் என்பீரா?

    இவ்வளவு பிரெஜுடிஸ் ஏன்?

    நிலத்தில் பாடுபட்டு உற்பத்தி செய்தவுடன் பிராமணன் போய் எல்லாவற்றயும் அள்ளி வந்து விடுகிறானா? மற்றவர்கள் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கிறார்களா?

    எப்பவும் பிராமனன் எங்க‌ளை ஏச்சுப் பிழைக்கிறான் என்று ஓலம்.அவ்வளவு வெள்ளந்தி?

    கோவில் நிலங்களெல்லாம் எங்கே என்றால் காக்கா தூக்கிக்கொண்டு போய் விட்டது என்று சொல்லி யார் யாரை ஏய்ப்பது?

    நீங்கள் பேசுவ்து உங்கள் உங்களுக்கே சரி என்று பட்டால் சரி.

    ReplyDelete
  194. //எவன் எக்கேடு கெட்டா எனக்கென்னன்னு தனக்கு மட்டும் இட ஒதுக்கீடு பண்ணிகிட்டானா?//

    அப்போது ஓபிசி எம் பீ சிக்கு 44% முஸ்லிம் 16% கிரித்துவர் 16% பிராமண‌ர் 16% தலித் 8%

    இன்று ஒப்பென் கோட்டா 33% சதவிதத்திலும் வரலாம். தங்க‌ளுடைய ஒதுக்கீட்டிலும் வரலாம் என்று ஆகிவிட்டதே, யார் யாரை ஏய்க்கிறர்கள்?

    உங்கள் அரசு வேலையே வேண்டாம் என்று 15 ஆண்டுகளுக்கு மேலாக பிராமண இளைஞன் ஒதுங்கிப்பொய்ய்விட்டான். அப்புஅரம் ஏன் காழ்ப்பு?

    ReplyDelete
  195. //அயோக்கியப் பயல்கலையே உம்மால் அடையாளங் காண முடியவில்லை, அடிப்படையும் தெரியவில்லை. நான் எந்த மடத்தின் பெயரைச் சொன்னாலும் உம்மால் அது பற்றி என்ன சொல்ல முடியும்? உமக்கு கழுதை குதிரை எல்லாமே ஒன்றுதான். ஆனால், உமது அகராதியைப் பார்த்தால் ஒரு குதிரை கூட இல்லை எல்லாமே கழுதையாகவே இருக்கிறதே!!//

    இதெல்லம் சப்வெர்ஷன்.

    ஒரு சில குருமார்களை குரு இல்லை என்றீர். அப்போ உமது குருவினை சொல்லுங்கள் என்றால் எனக்கு அடிப்படை தெரியவில்லை என்கிறீர்.

    ReplyDelete
  196. பகவத் கீதைக்கு உரிய பாஷ்யகாரர்களின் பெயரை மட்டுமாவது சொல்லுமேன் கேட்ப்போம்.உமது பகவத் கீதை அறிவை டெஸ்ட் பண்ணலாம்.

    உமது சமஸ்கிருத அறிவு எவ்வளவு? எத்த‌னை ப‌ரீட்சை சமஸ்கிருதத்தில் தேர்ச்சி?

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.